நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
ஈழத் தமிழர்களும் தமிழக அரசியல் சூழலும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கட்ச்சிகளுக்கும் நன்றிகூறி அவர்களது ஆதரவு நமக்கு தொடர்ந்தும் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டிய தருணமிது. அதே சமயம் ஈழத் தமிழர்களை உங்கள் தேர்தல் அரசியல் பிழவுகளுக்குள் இழுத்து விடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. சரி பிழைகளுக்கு வெளியில் ஈழ விடுதலைத் தலைவர்களையும் ஈழத் தமிழர்களையும் தமிழக தேர்தல் அரசியலிலும் மோதல்களிலும் ‘ பிராண்ட்’ போல கீழ்ப்படுத்திப் பயன்படுத்துவதை தமிழக அரசியல் கட்ச்சிகள் நிறுத்த வேண்டும் என்று கேட்க்க வேண்டிய கடைசித் தருணங்கள் இவை. . ஈழதமிழர்களையும் போராளிகளையும் 1970 பதுகளில் இருந்து ஆதரித்தவர்களுள் நிதியும் இடமும் தந்து பாத…
-
- 1 reply
- 718 views
-
-
கலைஞர் முதல் வலைஞர் வரை - சி. சரவண கார்த்திகேயன்கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் தொடங்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் ஆங்கிலத்தில் இருந்தது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியது அது. ஆதரவாளர்களிடம் இருந்து வாழ்த்துகளும் வரவேற்புகளும் பெருகத் தொடங்க, சிறிது நேரத்தில், திமுக மாநில மாநாடு நடைபெரும் நகரின் சாலைபோல் மாறிவிட்டது ட்விட்டர் டைம்லைன். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களை எந்தவொரு பிரபலத்தாலும் புறக்கணித்துவிடமுடியாது என்பதற்கு கலைஞர் ஓர் உதாரணம். சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் எனப்படும் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வின் அத்தியாவசியமாகி ரொம்ப காலம் ஆ…
-
- 0 replies
- 931 views
-
-
கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப்பட்டதா?- வெளியானது தகவல்! கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை எனவும் பலரும் சொல்வதுபோல் இது மனிதன் உருவாக்கியது அல்ல என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு குழப்பமான கருத்துகள் உலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை எட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேரை இந்நோய் தாக்கியுள்ளது. இந்த சூழலில் சமீப நாட்களாக இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வு நிறுவனத்திலிருந்து உருவானதாகவும் அது வேண்டுமென்றே பரப்பப்பட்டதாகவும்கூட கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் இதனை மற…
-
- 7 replies
- 1.2k views
-
-
தொங்கவிடப்படும் கோப்பி மற்றும் உணவுவகைகள் .. (Suspended coffee & food ) அண்மையில் அறிந்தது .. நீங்கள் உணவகத்திற்கு செல்லும் நேரங்களில் , சில இடங்களில் உணவு வகைகட்கு நீங்கள் பணம் செலுத்தி தொங்க விடலாம் ( suspend ), தேவையுள்ள வேறு எவராவது அந்த உணவகத்திற்கு வந்து அதனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பல வகைகளில் நன்மை .. தேவையுள்ளவர் பொது இடங்களில் இரந்து கொள்வதை தவிர்க்கலாம் , உதவியவருக்கு முகம் தெரியாமலேயே உதவி செய்யும் திருப்தி , பணப் புழக்கம் அதிகரிப்பு என ... எவருக்காவது அனுபவம் இருக்கின்றதா , இலங்கையிலோ அவுஸ்திரேலியாவிலோ நான் செல்லும் இடங்களில் இது வரை சந்தித்ததில்லை …
-
- 5 replies
- 721 views
-
-
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இனஅழிப்பு அரசின் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ் வன்முறைக் குழுக்கள் தொடர்பான கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியை பலர் புரிந்திருந்தாலும் அது இன்னும் ஆழமாக சென்று அலசப்பட வேண்டிய விடயமாகும். நேரடியான இனஅழிப்பு நடந்து முடிந்த தேசங்களில் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள நேரடி உத்திகளை கையாள முடியாத சூழலில் நுட்பமான உத்திகளை இனஅழிப்பு அரசுகள் கவனமாகக் கையாளும். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பலதரப்பட்டவை. அவை இனஅழிப்பு வடிவங்கள்தான் என்பதே சம்பந்தப்பட்ட இனக்குழுமத்திற்கு புரியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்படும். அதை விட கொடுமையானது, ச…
-
- 0 replies
- 347 views
-
-
தாமதப்படும் நீதியும் - மறுக்கப்படும் நீதியும்.! - நா.யோகேந்திரநாதன் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனம் வழங்கி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றும்போது தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமனாகும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணமெனவும் அதன் பொருட்டே நீதிபதிகளின் தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்ற தொனியிலேயே அவரின் கருத்துகள் அமைந்திருந்தன. அதே நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சர் உரையாற்றும்போது, தற்சமயம் நிலுவையில் 2,50,560 வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளதாகவும் அவற்றில் பல 25 வருடங்கள், 15 வருடங்கள், 10 வருடங்கள் காலத்தைக் கடந…
-
- 0 replies
- 337 views
-
-
ஆழ்கடலில, படகுப் பயணம். நடுநிசியில் பெருவிபத்து. இருளில் கடலில் வீசப்படுகின்றோம். ஏதொ ஒன்று தட்டுப்பட அதையே பிடித்து அலைகளின் நடுவே நீந்துகின்றோம். அடித்துத் தூக்கும் அலைகளின் மேலாய் தூரத்தே ஒரு சிறு வெளிச்சம். யாரோ எவரோ ? ஏதோ ஓர் இடம் இருக்கிறதென்னும் நம்பிக்கையில் அலைகளை எதிர்த்து நீத்துகின்றோம் அந்த வெளிச்சம் இருக்கும் திசையில். இப்படித்தான் இன்று புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் இயல்புநிலைப் போராட்டம். ஆனால் நீந்திச் செல்லச் செல்ல தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சம் மெல்ல மெல்ல பெரிதாகின்றது. சோர்ந்து போன மக்களுக்கு நம்பிக்கை தருகின்றது. இன்னும் சில தினங்களில், மணித்தியாலங்களில், இலங்கையில் பயங்கரவாதம் முடிந்துவிடும் என அறிக்கை மேல் அறிக்கையாக வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
வீரவணக்க நிகழ்வு இருபுறங்களும் மலைகளால் சூழப்பட்ட வலே மாநிலத்தில் 11.09.2013 மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமானதுஈகைப்பேரொளியின் திருவுடல் அவரின் உறவினர்களால் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் குடும்பத்தினரால் சமயக்கிரிகைகள் நடாத்தப்பட்டது. பிற்பகல் 2.30 மணியளவில் தேசியத்தின் புதல்வனின் வித்துடலை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கையேற்று தமிழீழ தேசியக்கொடிகளின் மத்தியில் வித்துடல் வைக்கப்பட்டு இறுதி வணக்கநிகழ்வு நடைபெற்றது. ஈகைப்பேரொளியின் திருவுருவப்படத்திற்கு அவரது துணைவி மாலை அணிவிக்க வணக்கநிகழ்வு ஆரம்பமானது. ஈகைப்பேரொளியின் தாயார் பொதுச்சுடரினை ஏற்ற, ஈகைச்சுடரினை அவரின் சகோதரன் ஏற்றினார். …
-
- 0 replies
- 669 views
-
-
இப்படியும் ஒரு தலைவன் இருந்தான்... கப்டன். தாமஸ் சங்கரா ஆபிரிக்காவின் சே குவாரா (டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987) ஆகஸ்ட் 4 , 1983 ஒரு இராணுவ புரட்சியின் மூலம் தனது 33 வது வயதில் மேற்கு ஆப்ரிக்க நாடான அப்பர் வோல்டாவின் ஆட்சியை கைபற்றினார். பதவிக்காக, எதிர்காலத்தில் தேசத்தை காட்டிக்கொடுக்கபோகும் தன நண்பர்களினாலேயே சுட்டுகொல்லபடும் வரை (அக்டோபர் 15 , 1987 ) 4 ஆண்டுகள் 2 மாதம் 12 நாட்கள் ஆட்சிபொறுப்பில் இருந்தார். இந்த குறுகிய காலத்தில் அவர் செய்தவை ################################## * அப்பர் வோல்டா என்று அழைக்க பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரெஞ்சு காலனியான தங்கள் தேசத்துக்கு புர்கினபாசோ என்று பெயர் மாற்றினார் - பொருள்: தலை நிமிர்ந்து வாழ்பவர…
-
- 0 replies
- 643 views
-
-
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-1) இந்த கடிதக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு மார்ச் 2001. தேசிய இனப் பிரச்சனை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மட்டுமல்ல அதைப் புரிந்துகொள்ள வேண்டியது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். அதனால் வாசிக்கின்ற நீங்கள் பயனுள்ள வகையில் பின்னூட்டமளித்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். A reply to an LTTE supporter Marxism and the national question in Sri Lanka ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும் பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 By Peter Symonds 10 March 2001 பின்வருவது தமிழீழ விடுதலைப் புலி (LTTE) ஆதரவாளரான SKக்கு வழங்கி…
-
- 0 replies
- 655 views
-
-
2021 ஒரு பார்வை தேதி January 03, 2022 சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கிறது. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆ…
-
- 0 replies
- 272 views
-
-
இலங்கையில்... என்று தீரும், இந்த நெருக்கடிகள்? இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தமுடியாது திணறிக்கொண்டிருக்கின்றார்கள். உணவுப்பொருட்களின் விலைகள் வானளவை தொட்டு விட்டன. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிர்ணய விலையில் வழங்க முடியாது அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தனது கை மீறி நிலைமைகள் சென்றுவிட்டதை ஏற்றுக்கொண்டுள்ளதோடு வணிகர்களின் ஏதேச்சதிகாரப் போக்கினை கட்டுப்படுத்த முடியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. தற்போது வரையில் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக நீண்ட வரிசைகளில் நாள் தோறும் காத்திருப்பவர்களில் மூவர் உய…
-
- 0 replies
- 190 views
-
-
வெலிக்கடை சிறைக்குள் நடந்தது என்ன? சிறைக்கைதிகளும் மனிதர்களே. அதனால்தான் அவர்களுக்கான தண்டனைகளும் சித்திரவதைகளாக இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு சலுகைகள் சிறைக்கூடங்களில் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், இலங்கையில் நடந்த மிகக் கொடுமையான சிறைச்சாலைக் கொலைச்சம்பவம் நம் அனைவரையும் பதற வைத்திருந்தது. சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குற்றவாளிகளெனினும் அவர்களும் மனிதர்கள் என்றவகையில் நோக்கப்பட்டிருக்கலாம். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி சிறைச்சாலை வளாகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 27 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. ஆட்சியாளர்களின் வெறியாட்டத்துக்குள் சிக்கி அப்பாவி உயி…
-
- 0 replies
- 206 views
-
-
வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா? எம்.எஸ்.எம். ஐயூப் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும். இந்த நிலைமையால், நாட்டில் பட்டினிச் சாவு அதிகரிக்கும் என்றும் உணவுக்காகக் கலவரங்கள் ஏற்படலாம் என்றும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கெனவே நாட்…
-
- 0 replies
- 174 views
-
-
கருணாநிதி சகாப்தம் சமஸ் உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு…
-
- 1 reply
- 337 views
-
-
அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.)என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாது இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும். இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க. இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து ம…
-
- 4 replies
- 962 views
-
-
-
- 0 replies
- 592 views
-
-
[size=3] [/size][size=3] இலங்கையில் விடுதலைப் புலிகள் பலமாகத் திகழ்ந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தயை இலகுபடுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டவர்களில் எரிக் சோல்கையின் முக்கியமானவர். நோர்வே அரசாங்கம் ஒவ்வொரு முறையும் சமாதான தூதராக அமரிகாவின் அடிமையாக உலக நாடுகளை நோக்கி அனுப்பப்படும் போது அந்த நாடுகளின் மக்களையும் விடுதலைப் போராட்டங்களையும் அழிப்பதற்காகவே அனுப்பப்படுகின்றது.[/size][size=3] இந்த நாடுகளின் அழிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர், அவர்களாலேயே தயார்படுத்தப்பட்ட நபர்கள், ஐக்கிய நாடுகள் சபை, தன்னார்வ நிறுவனங்கள் போன்றன தங்கள் பங்கிற்கு களத்தில் இறங்கும். அவை மனிதாபிமான நடவடிக்கைகள், அபிவிருத்தி குறித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
உலகமெங்கும் கொரோனா நோய்த் தொற்று ஒரு காட்டாற்று வெள்ளமாக தன் பாதை எங்கும் பெரும் அழிவுகளை ஏற்படுத்திச் சென்று கொண்டிருக்கின்றது. உயிர் வாழும் உரிமை என்பது பணம் படைத்தவனுக்குத்தான் என்று விதி செய்து வைத்திருக்கும் முதலாளித்துவம், இன்று தன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை நிர்க்கதியாய் அம்போவென விட்டிருக்கின்றது. தன்னை அழிவே இல்லாத கடவுள் என்று பிரகடனம் செய்த முதலாளித்துவம் தன் அரிதாரங்களை எல்லாம் களைந்து, அழுகி புழு பிடித்த அதன் உடலை துர்நாற்றத்தோடு உலகுக்கு காட்சிப்படுத்தி உள்ளது. இத்தனை நாளாக அதைக் கருவறையில் வைத்து பூசித்து வந்த அதன் துதிபாடிகள் கூட அதன் அருகில் செல்ல முடியாமல் அதை எப்படி கொன்று புதைப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். முதலாளித்துவ சமூகத்தில…
-
- 1 reply
- 441 views
-
-
சிலப்பதிகாரம் திருக்குறள் பாடத்திட்டம் நீக்கிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை
-
- 0 replies
- 286 views
-
-
https://m.facebook.com/watch/?v=2918382778289386&_rdr இது முக்கியமான செய்தி என்றபடியால் முகநூலில் வந்ததை பதிவு செய்கிறேன்.
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி.!! 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.. "சுதந்திரம் கேட்டு நீ போராடினாயா.? "நீதிபதி கேட்கிறார். இல்லை, நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு மட்டும் நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்.! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது.! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை.! கோபத்தின் உச்சத…
-
- 0 replies
- 429 views
-
-
உள்ளடக்கம்:- செய்தியாளர் மோசசை படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் - சீமான் செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூக விரோதக் கும்பலை கைதுசெய்க - சீமான் வலியுறுத்தல் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ”சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசஸ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஈடுசெய்ய இயலாப் …
-
- 1 reply
- 444 views
-
-
எம்மை நாம் உணர்ந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை மக்கள் கொலை செய்யப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டது என்று சில சந்தர்ப்பவாத இணையத்தளங்கள் மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய முயற்சித்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதி உச்சகட்ட மனித அவலத்துடன் நிறைவு பெற்றுள்ளது. இனவிடுதலைப் போரின் நியாயத்தை அழித்தொழிப்பதற்கான போரை முன்னெடுத்த இலங்கையரசு ஒரு தெihகையாக இரு நாட்களுக்குள் 20,000 தமிழ்மக்கள் உட்பட கணக்கிலடங்கா மக்கள் கொலை செய்யப்பட்டள்ளனர். பாதுகாப்பு வலயத்திற்குள் பாதுகாப்பிற்காக வந்த தமிழர்களில் 13,000 பேர வரை காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ன நடந்தி…
-
- 0 replies
- 467 views
-
-
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குலிருந்து பிச்சை வேண்டம் நாயை புடி வரை. சரி... விடுதலை போராட்டம் ஒரு நிச்சயமான முடிவை நோக்கி போய்கொண்டிறுக்கிரது. எக்கேடாவது கெட்டுபோகட்டும் என மனம் மாறிக்கொண்டொருக்கிரது... எனிவேய்... தெடங்கினா.. பந்தி பந்தியா அறுக்கலாம்.. அத்ற்க்காக இதை நான் தொடங்கவில்லை... சிறைவைக்கபட்டிரும் எமது கால் மில்லியனுக்கும் அதிகமான, தினமும் நூற்றுக்கனக்கில் செத்துப்போய்கொண்டிருக்கும் மக்களின் நிலமை என்னவாவது.. இதற்க்கு தனியார்களோ........ கண்ட கண்ட நாட்டு கொடியலொட அமைதி போராட்டம் நடத்துர கூட்டத்துகோ......... தமிழ்நாட்டு கட்சிகளுக்கோ.... தமிழ் நாட்டு அரசுக்கோ...... குறிப்பாக சொன்னால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது... அட்லீஸ்…
-
- 3 replies
- 1.6k views
-