நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது தமது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்ப்பெண்களிடமிருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து மேற்படி திணைக்களத்திடம் கேட்கப்பட்ட போதே அதன் ஊடகப்பேச்சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாம் குறித்த சர்வதேச நியமங்…
-
- 6 replies
- 1.2k views
-
-
புனிதம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? இலங்கை தமிழரின் இரத்தத்தை என்னுள் இறங்கிக் கழுவவோ? கூடா நட்பின் கேடாய் நானும் பாவ நதியாய் மாழவோ? கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்? .
-
- 0 replies
- 394 views
-
-
நாட்டை ஆள்வதற்கு தகுதியுடையவர் என்பதால் கோத்தாபயவிற்கு ஆதரவளிக்கிறேன் - ஆளுநர் பதவி வதந்தி-- முரளீதரன் பேட்டி எங்கள் நாட்டை ஆட்சி புரிவதற்கு தகுதியானவர் என்பதால் நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் பேட்டி தமிழில் - வீரகேசரி இணையம் கேள்வி இலங்கையின் வடமாகாணத்தின் ஆளுநராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உங்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன இதனை உறுதி செய்ய முடியுமா? பதில் இல்லை இ…
-
- 0 replies
- 194 views
-
-
சீனாவுக்கு 99 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியது தவறானது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா. முன்னைய அரசே இந்த தவறை செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்த தவறவில்லை, ஆனால் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சா அரசே துறைமுக அபிவிருத்தியை சீனாவுக்கு வழங்கியது. ஆனால் சிறீலங்கா அரசால் நிதியை கட்டமுடியாது என்று உணர்ந்த ரணில் அரசு கடன் தொகையின் மீள்செலுத்தும் காலத்தை 99 ஆண்டுகளாக அதிகரித்தது. அதனுடன் நின்றுவிடாது இந்தியாவை சமானதப்படுத்தி அதன் ஊடாக மேற்குலகத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கும் முயற்சியையும் கோத்தபாய மேற்கொண்டுள்ளார். அதாவது 2009 ஆம் ஆண்டு போரின் போது இந்தியாவை முன்நிறுத்தி அனைத்துலகத்தின் பார்வையில் இருந்து…
-
- 1 reply
- 240 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் திடீரென தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் என்றும் கூட்டமைப்புடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் யாழில் வைத்து அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனினால் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் ஒருங்கிணைக்கப்பட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது சிறு பிள்ளையும் அறியும். அவ்வாறு அமைக்கப்பட்டிருந்த கூட்டமைப்பினை ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம் பூ சார்க்கரையாக கட்சிக்குள் நுழைந்த சுமந்திரன் 'தமிழரசுக் கட்சியை பலமுள்ளதாக்குகின்றேன்' என்று அக் கட்சியின் தலைமைக்கு கூறி வந்தார். ஆனால், தமிழரசு பலமடை…
-
- 0 replies
- 492 views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற கையோடு இலங் கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியைச் சந்தித் துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும் என்றும் பிரதமர் மோடி எடுத்துரைத்திருந்தார். இதன்போது அமைதிகாத்த ஜனாதிபதி கோட்டாபய; இந்துப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்றும் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங…
-
- 13 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
2019-12-01@ 15:22:26 *10 லட்சம் மீனவர்களை பாதுகாக்குமா அரசுகள்? *5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் ராமேஸ்வரம்: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளனர். இதனால், தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலில் எத்தகைய மாற்றங்கள், விளைவுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும், 10 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை அரசுகள் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இந்தியா - இலங்கை நாடுகளின் 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு…
-
- 2 replies
- 537 views
-
-
டி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு வாய்ப்பு, விஜய்பட அனுபவம் ” - நெகிழ வைக்கும் உரையாடல் 40 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2000வது ஆண்டிலிருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக மேலேறிவரும் க்ராஃப் இசையமைப்பாளர் டி. இமானுடையது. விஸ்வாசம் படத்தில் இமானின் பின்னணி இசையும் பாடல்களும் தற்போதும் பேசப்பட்டுவரும் நிலை…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
https://youtu.be/ir9DV_YyVlI
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை கைவிடுமா? ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள், கருத்து முரண்பாடுகள் மிக மோசமான அளவில் தலைதூக்கியுள்ளன. இது அசாதாரண நிலைமையொன்றல்ல; தேர்தல்களில் தோல்வியடைந்த கட்சிகளுக்குள், இது போன்ற கருத்து முரண்பாடுகள் பல தோன்றுவது சகஜமே! ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆரம்பத்தில் சஜித்தை வேட்பாளராக நியமிக்க விரும்பாமல் இருந்தது போலவே, அவருக்குப் போதிய ஆதரவை வழங்கவில்லை என்றும் கட்சித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காகப் போதியளவில் பணம் வழங்கவில்லை என்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேவேளை, சஜித்தைக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்க வேண்டு…
-
- 0 replies
- 301 views
-
-
STRAIT FORWARD PRESIDENT - V.I.S.JAYAPALAN POET ஓளிவு மறைவற்ற ஜனாதிபதி - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .. .. CONGRATULATION MR. PRESIDENT FOR YOUR OPEN STAND ON THE ETHNIC QUESTION. YOU HAVE ESTABLISHED THE FIRST SINHALESE ONLY GOVERNMENT IN SRI LANKA.இனப்பிரச்சினையில் உங்கள் ஒழிவு மறைவற்ற நிலைபாட்டுக்கு வாழ்த்துக்கள் திரு ஜனாதிபதி அவர்களே. நீங்கள் இலங்கையின் சிங்களம் மட்டும் அரசை நிறுவியுள்ளீர்கள்.. King Dutugemun . IN SRI LANKA ALMOST ALL THE ACUTE PROBLEMS ARE ONE WAY OR ANOTHER CONNECTED TO THE ETHNIC A…
-
- 4 replies
- 981 views
-
-
நம் காலத்து நாயக நாயகியரே வாழிய - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன். * திரு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூழலின் அச்சத்தை புறந்தள்ளி தடைகளைத் தாண்டி ஈழத் தாய் மண்ணில் மாவீரர் தின வீர வணக்க நிகழ்வை மக்கள் அனுஷ்டித்துள்ளார்கள். உயிர் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இடம்பெற்றபோதும் மாவீரர் வணக்க நிகழ்வு சற்றும் நமது தேசிய இனத்துவ தன்மை குறையாமல் வீரமுடன் நிகழ்த்தபட்டமை மெய்சிலிர்க்க வைக்கிறது.இளைய ஈழத்துக்கு வீர வணக்கம். நாம் சிறுபாண்மை இனமல்ல தேசிய இனம் என்கிற சேதியை மக்கள் தங்கள் தன்எழுச்சி செயற்பாடுகளால் சர்வதேச சமூகங்களுக்கும் உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முன்னோடிப் பட…
-
- 1 reply
- 546 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகத் தொண்டமான் என தமிழர் இருவர் - அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். …
-
- 0 replies
- 956 views
-
-
காலம் கனிந்துள்ளது; கதவுகள் திறந்துள்ளன காரை துர்க்கா / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:05 அனைத்துத் தரப்பினராலும், ஆவலோடு எதிர்பார்த்த நாட்டின் ஐனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைப் போல் அல்லாது, மிகக் குறைந்த அளவிலான முறைப்பாடுகளோடும் வன்முறைகளோடும், அமைதியாகத் தேர்தல் முற்றுப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின் பிரகாரம், மீண்டும் ஒருமுறை இலங்கை நாடு, இனத்தாலும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பயத்தாலும் இரண்டாகப் பிளவுபட்டு போய்க் கிடக்கின்றது என்ற செய்தியும் தெளிவாக உலகத்துக்கு உரைக்கப்பட்டு உள்ளது. வளங்கள் நிறைந்த அழகிய நம்நாடு, ஆண்டாண்டு காலமாக, இனவாதத்துக்குள் ஆழமாகச் சிக்குண்டு, அதிலிருந்து மீள மு…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், பிராந்திய அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே மாறியிருக்கின்றன. பூகோள அரசியல் போட்டிக்கு அப்பால், பிராந்திய அரசியல் போட்டியின் மையமாகவும், இலங்கை மாறி விடக்கூடிய ஆபத்தை இந்த தேர்தல் முடிவு கோடிட்டுக் காட்டியிருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது உரையில், சர்வதேச நாடுகளின் விவகாரங்களில் இருந்து இலங்கை ஒதுங்கியே இருக்கும், நடுநிலை வகிக்கும் என்றே குறிப்பிட்டிருந்தாலும், அவ்வாறு ஒதுங்கி, இருந்து விடக்கூடிய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் முடிவு வெளியாகும் வரை, இந்த தேர்தல் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் கரிசனைக்குரிய ஒன்றாகத் தான் பார்க…
-
- 1 reply
- 865 views
-
-
- ஜனகன் முத்துக்குமார் மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதி அன்று சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்படுகிறது. இது 1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. மனித உரிமைகள் தினத்தின் முறையான ஆரம்பம் 1950 முதல், பொதுச் சபை 423 (V ) தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், அனைத்து நாடுகளையும் ஆர்வமுள்ள அமைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதியை மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தது. பொதுச் சபை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டபோது, 48 நாடுகள் ஆதரவாகவும், எட்டு வாக்களிப்புகளில் பங்குபற்றாமலும், குறித்த தினம் "அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் மனித உரிமை மேம்பாட்டுக…
-
- 1 reply
- 325 views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் அச்சமான சூழலுக்குள் இருக்க வேண்டியதில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் மக்களை பழிவாங்கும் போக்கிற்குச் செல்வார் என்று கூறமுடியாது. அதற்கு காலம் உள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவினதும், ஏனைய சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களை அவர் மீது பிரயோகிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களும், பெரு…
-
- 1 reply
- 322 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியைத் தொடர்ந்து, எழுப்பப்படுகின்ற முக்கியமான கேள்வியாக இருப்பது, எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமையப் போகிறது என்பது தான். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்திய ஊடகங்கள், சீன சார்பு கோத்தாபய ராஜபக் ஷ முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாகவே செய்திகளை வெளியிட்டிருந்தன. அவர், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும், கோத்தாபய ராஜபக் ஷவை சீன சார்பாளராகவே அந்த ஊடகங்கள் அடையாளப்படுத்தின. மஹிந்த ராஜபக் ஷவைப் பிரதமராக நியமித்த போதும், சீன சார்பாளரான தனது, அண்ணனை பிரத…
-
- 1 reply
- 501 views
-
-
இலங்கை ஆதிக்குடிகள்: 200 ஆண்டுகள் பழமையான வேடர்களின் மண்டை ஓடுகள் ஒப்படைப்பு.! தங்களது வசமிருந்த இலங்கையை சேர்ந்த பழங்குடிகளின் ஒன்பது மண்டை ஓடுகளை அவர்களது வழித்தோன்றல்களிடம் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது. இலங்கையிலுள்ள வேடர் இனத்தைச் சேர்ந்த இந்த மண்டை ஓடுகள் 200 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் சேகரிப்பின் அங்கமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இந்நிலையில், இந்த ஒன்பது மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த விழாவில் வேடர் இனத்தின் தலைவர் வன்னியா உருவாரிகேவிடம் ஒப்படைக்கப்பட்டது. "எங்களது இனத்தில் இறந்தவர்களு…
-
- 0 replies
- 305 views
-
-
இன்னுமொரு இனக்கொலைக்கு தூண்டுதலா - வ.ஐ.ச.ஜெயபாலன். இந்திய நாடாளுமன்றத்தில் திரு டி ஆர் பாலு “விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்துள்ளது” என்று ஒரு பாதகமான அபாண்டத்தை தெரிவித்தது மீண்டும் ஒரு இனக்கொலையை தூண்டும் முயற்சியா? இந்தியாவையும் ஈழத் தமிழரையும் பிழவு படுத்தும் முயற்ச்சியா? விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குகிறதா? அது குறித்த தலைவரை இலக்கு வைக்கிறதா? இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது தீமுக வின் சம்மதத்துடன் தெரிவிக்கப்பட்டதா? திரு.ஸ்டாலின் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?” இது அரசின் முந்தைய தகவல் என்றால் இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென்ற அரசின் நிலைபாட்டை ஏன் தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவரின் பாதுகாப்பை வ…
-
- 4 replies
- 748 views
-
-
சிசிர பின்னவல (DAILY NEWS) இந்து சமுத்திர பிராந்தியத்தில் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட வேண்டும். நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் இல்லை. எனினும் எந்தவிதமான அச்சுறுத்தலையும் முறியடிக்க அரசு தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் சுமார் பத்தாண்டு காலத்துக்கு தேசிய பாதுகாப்புக்கு இலங்கையில் முன்னுரிமை தரப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு முதலில் அச்சுறுத்தல் ஏற்பட்டது 1962 இல் ஆகும். அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க பாதுகாப்புப் படையினரைக் கொண்ட ஒரு குழு முயற்சி செய்த போதே முதலாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்…
-
- 0 replies
- 249 views
-
-
-
- 6 replies
- 619 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவாரென ஜனாதிபதித் தேர்தலின் போது ஆரம்பத்திலேயே தெரியவந்தது. சூழலைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி தனது தேர்தல் பிரசாரங்களுக்கு போஸ்டர், பொலித்தீன் என்பவற்றை அவர் பாவிக்கவில்லை. இதனை ஏனைய வேட்பாளர்களும் பின்பற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் தனது அரசியல் மேடையை ஏனைய வேட்பாளர்கள் மீது சேறு பூசுவதற்காக பாவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தனது எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையே மக்களுக்குத் தெரிவித்தார். தேர்தல் போட்டிக்கு முகம்கொடுத்து எதிராளியைத் தோற்படிப்பது அரசியலில் இடம்பெறும் சிறப்பு விடயமாகும். அதற்குப் பதிலாக அதிகாரத்திலிருந்த கட்சி பலவிதமான தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்தது. அது கோட்டாபயவை தேர்தலில…
-
- 0 replies
- 603 views
-
-
கோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா? அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்க…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-