நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட தினமான அன்று, இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை மையமாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த முறையான விசாரணையை துவங்குவ…
-
- 0 replies
- 551 views
-
-
தற்கொலைதாரிகள் பயன்படுத்திய இரசாயன குண்டுகள் குறித்து விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரி அதிர்ச்சி தகவல் இலங்கையில் நடைபெற்ற தொடர் தற்கொலை குண்டுதாக்குதலில் அல்கொய்தா பயன்படுத்தும் ரி.ஏ.ரி.பி எனப்படும் இரசாயன வெடிகுண்டே பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஓய்வு நிலை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரும், வெடிபொருட்கள் தொடர்பான துறைசார் நிபுணரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகருமான நிமல் லியூகே வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளின் பின்னர் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்திய தீவிர…
-
- 2 replies
- 906 views
-
-
அவர்களை வடக்கிலிருந்து எவ்வித உயிர் சேதமும் இல்லாமல் வெளியேற்றியது நியாயமான விடயமா
-
- 6 replies
- 986 views
-
-
இலங்கையில் 253 உயிர்களை பலிவங்கிய பயங்கரவாத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வார காலம் ஆகின்றது. கடந்த 21ஆம் தேதி பயங்கரவாத இயக்கத்தினால் 8 இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.45க்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. படத்தின் காப்புரிமை Anadolu Agency …
-
- 0 replies
- 315 views
-
-
April 28, 2019 சிறு தொழில் செய்வதற்காக கடன் பெற்றேன் ஆனால் தொழில் முயற்சியில் தோல்வி கடனை கட்ட முடியவில்லை.இதனால் நான் பெரும்பாலும் வீட்டில் இருப்பது கிடையாது கடனை அறவிடும் வருகின்றவர்கள் வீட்டில் இருக்கின்ற எனது மகளுடன் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதோடு, தவறாகவும் நடக்கவும் முற்படுகின்றனர். என்றால் நெடுங்கேணியை சேர்ந்த பெண்னெருவர். சம்பவம் இரண்டு – இறுதி யுத்தத்தில் கணவர் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள். எனக்கு வீட்டுத்திட்டம் கிடைத்தது ஐந்…
-
- 0 replies
- 534 views
-
-
தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் கேர்ணல் ஹரிகரன் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும் என்பதாலேயே பொறுமையாக இருந்தது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, …
-
- 1 reply
- 412 views
-
-
““தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று வாய்மூலக்கதைகள் சென்று கொண்டிருக்கின்றன” என்ற தந்தையின் கருத்தை வைத்து குழப்ப விரும்பவில்லை ” “தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று வாய்மூலக்கதைகள் சென்று கொண்டிருக்கின்றன” என்ற தந்தையின் கருத்தினை வைத்து முழு நாட்டையும் குழப்புவதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்த தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, எனது மனச்சாட்சிக்கும் ஆண்டவருக்கும் உண்மை தெரியும் என்று கருதுகின்றேன். யாருக்கும் பதில் கூறாது விட்டாலும் ஆண்டவருக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம…
-
- 0 replies
- 247 views
-
-
கிழக்கு மாகாண பள்ளிவாசல்களுக்கும் கோவில்களுக்கும் கிறுஸ்துவ தேவாலயங்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் - தீவிரவாதிகளின் உடல்களை பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்க மாட்டோம் - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல். . இது தர்மமில்லை. தீவிரவாதி இறந்தபின் அவனது உடல் மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டிய ஒரு சக மனிதனுடைய உடல்தான். ஒரு சக முஸ்லிமுடைய உடல்தான். இறந்த உடல்களை அடக்கம்செய்வது ஒரு சமூகத்தின் கலாசாரக் கடமையாகும். வெறுப்பினாலோ அச்சத்தினாலோ ஒரு மத நிறுவனம் இறந்த சக மனிதனின் உடலை அடக்கம் செய்ய மறுப்பது அவமதிப்பது ஒரு கலாச்சாரத்தின் தோல்வியாகும். அவர்கள் பத்தியில் ஒருபாவமும் அறியாத பச்சிளம் பாலகர்…
-
- 4 replies
- 649 views
-
-
குரான் வன்முறையை தூண்டுகிறதா? உண்மையுல் முஸ்லீம் மத்ததிற்கும் பயங்கரவாதிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது. இஸ்லாம் ஒரு அமைதி மார்ககம். இனிய மார்ககம் என்றெல்லாம் மத முட்டாள்த்தனங்களை பரப்பவிழையும் மதவாதிகள் தம்மால் இயன்ற அளவுக்கு பரப்பிவருகிறார்கள். அதனால் முகநூலில் வந்த குரான் மொழி பெயர்பை இங்கு இணைக்கின்றேன். அரபு மொழிபெயர்ப்பை என்னால் சரிபார்கக முடியாவிட்டாலும் உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன். அப்படி மொழி பெயர்ப்பில் தவறுகள் இருந்தால் யாராவது அரபு தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டலாம். (அரேபிய அடிமைகளே இதை பலவீனமான ஹதீஸ் என்று சொல்லி தப்பிக்க முடியாது, இது அனைத்தும் குர்ஹான் வசனங்கள்...). …
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கையில் ஐ.எஸ். தாக்குதலும் உலகநாடுகளின் அனுதாபங்களும் ! இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஐ.எஸ் ஐ.எ.ஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு உலக நாடுகள் பலவற்றில் அஞ்சலிகள் மற்றும் கட்டணங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தற்கொலை தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் என்பன குறிவைக்கப்பட்டு இத்தாக்குல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இத்தாக்குதல்களை கண்டித்து உலக நாடுகளின் தலைவர்கள் ம…
-
- 0 replies
- 497 views
-
-
புகைப்படங்களில் குளறுபடி. இலங்கை அரச, பாதுகாப்பு துறையினர் அவர்களுக்கு வந்த புலனாய்வு தகவல்களை சீரியஸ் ஆக எடுக்காமல் கோட்டை விட்டார்கள் என்று பார்த்தால், தேடப்படும் நபர்கள் குறித்த புகைப்படங்களில் பெரும் தவறினை விட்டு உள்ளனர். அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் படம் எவ்வாறு, (அவரது சரியான பெயருடன்) இந்த தேடப்படுவோர் பட்டியலுக்கு இடையே வந்தது என்று புரியவில்லை. எழுத்தாளரான இந்த பெண், முகநூலில் காட்டமாக மறுப்பு தெரிவிக்க, இலங்கை பாதுகாப்பு துறை மன்னிப்பு தெரிவித்துள்ளது. இது இன்னுமொரு குழப்பத்துக்கு வித்துட்டுள்ளது. இந்த கொலையாளிகளின் தலைவன், முகம் மறைக்காமல் படங்களில் தோன்றுகிறான் . வன்மமாக வீடியோவில் பேசுகிறான். இவன் உயிருட…
-
- 2 replies
- 871 views
-
-
அண்மைய கிறித்தவ ஆலயத் தாக்குதல்களும், ஒரு கவிதையும்! வ.ந.கிரிதரன் அண்மையில் இலங்கையில் 'இஸ்லாமிய அரசின்' (ஐஎஸ் அல்லது இஸ்) அனுசரணையுடன், வஹாபிஸத்தை நம்பும் தீவிரவாத முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு கிறிஸ்தவ ஆலயங்களில், நட்சத்திர ஹொட்டல்களில் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் 9-11 தாக்குதலையொத்தது. மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட தாக்குதல்கள். வசதியான, படித்த இளைஞர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இந்த இஸ்லாமிய அமைப்பினை நடாத்தி வந்தவர் ஜஹ்ரான் ஹாசிம். ஒரு நாட்டில் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கிளர்ந்தெழுவார்கள். தற்கொலைத்தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீத…
-
- 0 replies
- 679 views
-
-
ரிஷாட் பதியுதீன் மீது படியும் நிழல் சங்கரிலா, கிங்ஸ்புரி ஹோட்டலின் தாக்குதலில் இரு சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் ஒருவரின் மூன்று மாத கர்ப்பிணியான மனைவியே 9வது குண்டுதாரியாவார். போலீசார் வந்தபோது, வீட்டில் தயாராக வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்து ஒரு குழந்தை, இரு போலீசாருடன் மரணித்தார். பி. ராஜேந்திரன் என்னும் ஒரு ஏழை தமிழ் பெண்ணையும் காதலித்து, மதம் மாற்றி , மூளை சலவை செய்துள்ளனர் போல தெரிகிறது. இவரது முழு விபரம் இன்னும் தெரியவில்லை. இவர் தானா அந்த ஒன்பதாவது குண்டுதாரி என்று தெரியவில்லை. இந்த இரு குண்டுதாரிகளின் தந்தையார் ஒரு வியாபாரி, அவர் ரிஸாடின் வலது கரமாக செயல்பட்டுள்ளார். இரு குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் அவிசாவளையில் ஒரு பித…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஈஸ்டர் கொலைகள் April 22, 2019 ஷோபாசக்தி இந்த தேவாலயத்தை நிர்மூலமாக்கினாலும், மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவேன் -இயேசுக் கிறிஸ்து நேற்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்த புகை அடங்க முதலே, இஸ்லாமியர்கள் மீதான பழிப்பும், வன்மம் மிக்க நினைவுகூறல்களும் சமூக வலைத்தளங்களில் புகையத் தொடங்கிவிட்டன. இலங்கையில் அமைதியே இருக்கக்கூடாது, இரத்தமும் குண்டும் கொலையும் பழிவாங்கல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற இரத்த வேட்கை, புலம் பெயர்ந்த எளிய தமிழ்ப் பிள்ளைகளின் முகப்புத்தகங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது. இதுவரை கிடைத்த ஊடகச் செய்திகளின்படி, இந்தக் குண்டுவெடிப்புகளை சர்வதேச வலைப்பின்னலிலுள்ள இலங்கையர்களான இஸ்லாமிய அடிப்படைவாத, பயங்கரவாதி…
-
- 1 reply
- 825 views
- 1 follower
-
-
கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததுதான் தாமதம்.. இதற்காகவே காத்திருந்தது போலவே 'சர்வதேச' சந்தேக சக்திகள் பொங்கி பேசுவதும் உடனடியாக இலங்கைக்கு ஓடி வந்து 'களமாடுவதும்' 'ஏதோ' நடந்திருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகவே அம்பலப்படுத்தி நிற்கின்றன. உலகை அதிரவைக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் தொடர் கதையாகவே இருந்து வருகின்றன. இந்த பட்டியலில்தான் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களும் அதனை அடுத்து நடந்து வரும் எதிர்விளைவுகளும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாம் நடத்தும் தாக்குதல்களுக்கு உடனடியாக பொறுப்பேற்றுவிடுவது வழக்கம். ஆனால் இலங்கை விவகாரத்தில் 'சில நாட்கள்' கழித்து அந்த அமைப்பின் பேரில் தாக்குதலுக்கு உரிமை கோ…
-
- 1 reply
- 960 views
-
-
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்? (ஸ்டான்லி ஜொனி) கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் க்ரைஸ்ட் சர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களில் வெள்ளை இனப் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான சம்பவத்திற்குப் பதிலடியாகவே ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று 350 இற்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. சர்வதேச இயக்கத் தொடர்புகளிடமிருந்து கிடைத்திருக்கூடிய உதவியுடன் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற உள்நாட்டு இஸ்லாமிய இயக்கமே தாக்குதல்களை மேற்கொண்டதாக விசாரணையாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்குத் தாங்களே பொறுப்ப…
-
- 0 replies
- 504 views
-
-
https://tamil.thehindu.com/opinion/columns/article26940022.ece https://tamil.thehindu.com/opinion/columns/article26937721.ece நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன். இடதுசாரி மற்றும் திராவிட இயக்க சிந்தனைகளின் கலவை என்று என்னை நான் வரித்து வைத்துள்ளேன். இருப்பினும் நான் சார்ந்த இவ்விரு இயக்கத்தாரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் இரண்டு : 1. மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை RSSம் சங் பரிவார் அமைப்புகளும் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று குரல் எழுப்புகிறோம். ஆனால் உல்மாக்களும் வஹாபிகளும் இஸ்லாமியப் பெண்கள் என்ன உடையணிய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்பதில்லையே ? எல்லாம் சிறுபான்மை இன உரிமையா ? 2. இந்துத்துவா தீவிரவாத்தை எதிர்த்து…
-
- 1 reply
- 817 views
- 1 follower
-
-
இலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களில் இரண்டு பேர் இலங்கையின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பெரிய அரசியல் பின்புலம் உள்ள குடும்பம் ஒன்றை சேர்ந்த இரண்டு பேர் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த ஈஸ்டர் அன்று இலங்கையில் 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல்தான் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் ஆகும். 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளின் அடையாளங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. எப்படி ஞாயிற்றுக்கிழமை காலை வரை முகமது யூசுப…
-
- 3 replies
- 982 views
-
-
நம்மட மௌலவி ஒரு ஆள் இப்ப கொஞ்ச நேத்திக்கு முன்னே தானே வீடியோல சென்னாரு இது நம்மட கருணா + ராஜபக்சே கேம் ஒன்னுன்னு செல்லி. இவன் ஸ்கோமோ பயல் செல்லிறான் bomb வெச்சி மவுத்தாப் பேயினவன் ஓஸ்சிலேயே மாஸ்டர்ஸ் செய்தீக்க பயல் ஒன்னுன்னு செல்லி. நம்மட கருணா அம்மான் அப்பவே தப்பீக்கிறதிக்கி இந்த மௌலவியோட சைட் ஆளு ஒன்னு தானே ஹெல்ப் எல்லாம் செஞ்சு ஈந்திச்சு. நாம தான் நேச்சிட்டு ஈக்கம் நம்மட ஆளு தண்ணியும் போட்டிட்டு கண்ட கண்ட பலாயோட சுத்தீட்டு ஈக்குதி எண்டு செல்லி. ஆளு மாஸ்டர்ஸ் செஞ்சவனை எல்லாம் பிரைன் வாஷ் பண்ணீட்டேல்லா ஈந்தீக்காரு போல . செல்லி வேலை இல்லப்பா https://www.msn.com/…
-
- 0 replies
- 560 views
-
-
தீவிரவாதம், பயங்கரவாதம் முழுமையாக நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.மஹிந்த ராஜபக்ஷ புலி பயங்கரவாதத்தை ஒழித்தார். ஆனாலும் முஸ்லிம்களுக்கெதிராக பேசும் தமிழ் தீவிரவாதம் இன்னமும் உள்ளது.கருணா, கோடீஸ்வரன், வியாழேந்திரன், சுமந்திரன், மனோ கணேசன் உட்பட தமிழ் கூட்டமைப்பினர் இன்னமும் முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாதமாக பேசுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.அதே போல் புலிகளை ஒழித்த மஹிந்தவால் சில சிங்கள அரசியல் மற்றும் சமயத்தலைவர்களின் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் உருவாகுவதை தடுத்திருக்கலாம்.தம்புள்ள போன்ற பள…
-
- 0 replies
- 820 views
-
-
சமூகமாக வாழுதல் என்னும் சவால் Editorial / 2019 ஏப்ரல் 25 வியாழக்கிழமை, மு.ப. 01:32 Comments - 0 பல மொழி பேசுபவர்களையும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோரையும், வேறுபட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தோரையும் கொண்ட பன்மைச் சமூகமே இலங்கைச் சமூகம். ‘சேர்ந்து வாழுதல்’ என்பதே இலங்கை மக்களின் தாரகமந்திரமாக இருக்கிறது. இச்சமூகம் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ள போதும், சமூகமாகச் சேர்ந்து வாழுதல் என்பது, நடைபெற்று வந்துள்ளது. மூன்று தசாப்தகாலப் போர், இனக்குழுக்களிடையே அச்சத்தையும் ஐயத்தையும் உருவாக்கிய போதும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். இலங்கையையே ஆட்டம் காணச் செய்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், மக்கள் இணைந்து ஒன்றாக வாழ்தலில் புதிய சவால…
-
- 0 replies
- 305 views
-
-
தற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் ? மிகவும் இரகசியமான அந்த ஆவணம் அனைத்து விடயங்களையும் தெளிவாகக்குறிப்பிட்டிருந்தது: பெயர்கள்,முகவரிகள்,தொலைபேசி இலக்கங்கள் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் உள்ளடக்கியிருந்தது. சந்தேக நபர் ஒருவர் நள்ளிரவில் தனது மனைவியைச் சந்திப்பது குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 359 பேர் கொல்லப்படுவதற்கு முந்தைய நாட்களில் இலங்கையின் பாதுகாப்புப் படையினர் அதிகம் அறியப்படாத தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பின் சிறிய குழுவை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். இந்தக் குழுவினரே சர்வதேச உதவி…
-
- 0 replies
- 560 views
-
-
பொறுப்பு கூறப்போவது யார்? நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஐ தாண்டியுள்ளது. காயமடைந்தோரில் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் உறைந்துபோய் உள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவமானது நாட்டின் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அமைந்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தணிப்பதற்கும் மேலும் வன்முறைகள் வெடிக்காது தடுப்பதற்கும் அரசாங்கமானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த செயற்பாடானது பாராட்டத்தக்கதாகவே அமைந்திருக்கிறது. குண…
-
- 0 replies
- 575 views
-
-
மட்டக்கிளப்பில் இறைச்செயலால் தப்பிய செயின்ட் மேரிஸ் தேவாலயம் 1000 பேர்வரை கலந்து கொண்ட இந்த தேவாலயத்தில், 7.30 மணிக்கு பதிலாக 7 மணிக்கு ஆரம்பித்து 8.30க்கு முன்னமே பூசை முடிந்திருந்தது. முதல் நாளே வந்து நோட்டம் பார்த்து, 7.30க்கு தான் ஆரம்பிக்கின்றது என 8.30க்கு தயாராக வந்த ஓட்டமாவடி குண்டுதாரி உமர் பூஜை முடிந்து மக்கள் சென்று விட்டனர் என அறிந்து, 50 மீட்டர் தொலைவில் இருந்த சிறிய தேவாலயத்தினுள், இனிப்பு, கேக் தின்று கொண்டிருந்த சிறுவர்கள் உட்படோர் மீது தாக்குதல் நடத்தி 29 பேரை அல்லாவின் பெயரில் கொன்றான். அவர்களில் 14 பேர் சிறுவர்கள். 'அல்லாவின் பேரருளால்', (??) ஜோசப் பொன்னையா என்ற பாதிரியார் கடைசி நேரத்தில் 7.30 மணியில் இருந்து 7 மணிக்கு மாத்தியதை அறி…
-
- 1 reply
- 774 views
-
-
16 ஜனவரி 2019 இல் 100 kg அதி சக்தி வாய்ந்த வெடிமருந்தையும், 160 பயங்கரவாதிகளின் விபரங்களையும் கண்டுபிடித்தார்களாம். உயர் மட்ட உத்தரவு இல்லாததால் ஒருவரையும் கைது செய்யவில்லையாம்; தலையைப் பிச்சுக் கொண்டு ஓடலாம் போல இருக்கு🤬 http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=203107 A list of 160 terrorists found, but no arrests made April 24, 2019, 6:53 am By Hemantha Randunu The State intelligence agencies had gathered information about 160 National Thowheed Jamath members who had been trained by terrorists, but it had not been possible to arrest them as there had been no orders…
-
- 2 replies
- 666 views
-