Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம்

“நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்கள் 2500பேருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். இம்மாணவர்கள் யாவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து பங்குபற்றியிருந்தனர். குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு குறித்த மாணவர்கள் சார்பாக நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பரிசளிப்பு வழங்குவதற்காக எமது கல்விக்குழுவினர் முடிவு செய்து அதற்கான திட்ட வரைபினையும் வழங்கியுள்ளனர். 92மாணவர்களுக்கு பரிசில் புத்தங்களும் மற்றும் ஒரு மாணவருக்கு தலா 500ரூபா வங்கியில் வைப்பிலிட்டு சேமிப்புக் கணக்கும் திறந்து கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம். மற்றும் இம்மாணவர்களுக்கான கற்பித்தலில் பங்கேற்ற ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்களுக்கும் சிறு ஞாபகப் பரிசினையும் வழங்கி கௌரவிக்க விரும்புகிறோம். இத்திட்டத்திற்கு 155000,00 ரூபா (அண்ணளாவக – 1000,00€ ஆயிரம் யூரோ) (ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ரூபா) தேவைப்படுகிறது.

பரிசில்களை வழங்குவதற்கான பொருளாதார உதவிகளை எமது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஆதரவு வழங்குகிற அனைவரையும் வேண்டி நிற்கிறோம். சின்ன சின்ன ஊக்குவிப்புகள் எங்கள் எதிர்கால சந்ததியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும். உங்கள் சிறு சிறு உதவிகளே மாபெரும் அறிஞர்களையும் ஆற்றல் மிக்கவர்களையும் உருவாக்கும்.

சித்திபெற்ற மாணவர்களின் பெயர் , பாடசாலை , புள்ளி விபரங்கள் :-

DSCF3243-734x1024.png

பரிசளிப்பு வழங்குவதற்கான செலவுத் திட்ட வரைபு :-

DSCF3242-734x1024.png

சிறந்த சித்தி பெற்ற எங்கள் சிறார்களின் மகிழ்வுக்காக உங்கள் உதவிகளை வழங்கி ஊக்குவியுங்கள்.

உதவ விரும்புவோர் கீழ் வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்:-

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany :–

தொலைபேசி – 0049 6781 70723

கைபேசி – 0049 162 8037418

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

தொடர்புபட்ட செய்திகள் இணைப்புக்கள் :-

நேசக்கரம் ஆதரவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்

கிழக்குமாகாணத்தில் நேசக்கரம் கல்வித்திட்டத்தில் 2500மாணவர்கள் பயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசம், இந்த இலங்கங்கள் இன்னும் கொஞ்சம் கூட வேண்டும்..

சின்ன கதை, எனது சகோதரியின் மகளும் எடுத்தவா, அவவினுடைய வகுப்பில் இருந்த எல்லாரும் பாஸ், ஆனால் ஒருவரை தவிர, அந்த பிள்ளையின் தகப்பன் வன்னில காணமல் போன ஒருவராம்- அவ சொல்லி - எனது சகோதரி- சொல்லி கவலைப்பட்ட..தனது மகளுக்கு பாஸ் பண்ணுவதால் ஏதும் வராதாம், ஆனால் அந்த பிள்ளை பாஸ் பண்ணியிருந்தால் காசு குடுப்பார்கள் என்று ( எனது சகோதரி ஒரு அரச உந்தியோகத்தர்)

அது போல இந்த சித்திகள் தேவையான பலருக்கு உதவ வேண்டும்..

நேsaகரத்துக்கு வாழ்த்துக்கள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 92மாணவர்களுக்கு உதவ முன்வந்தவர்களுக்கு நன்றி

5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வோர மாணவருக்கும் 500ரூபா சேமிப்பிலிட்டு சேமிப்புக் கணக்கும் மற்றும் சிறு பரிசுப்பொருட்களும் வழங்க எமது கல்விக்குழுவினர் முடிவுசெய்தனர். இம்முயற்சிக்கான ஆதரவினை வேண்டிய தரவறிக்கையை நேசக்கரம் பங்களிப்பாளர்களுக்கு அனுப்பியிருந்தோம்.

100_1395-1024x768.jpg

நேசக்கரத்தின் பயனாளிகள் பலருக்கான உதவிகளை கடந்த ஒரு வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகிற பிரித்தானியாவில் வசிக்கும் திரு.தெய்வேந்திரன் (குட்டிஅண்ணா)அவர்கள் மேற்படி 92 மாணவர்களுக்கும் சேமிப்பு வைப்பிலிட 46ஆயிரம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளார். நேசக்கரத்தோடு கைகோர்த்து நின்று தன்னாலான பங்களிப்பை வழங்கிவரும் திரு.இளையதம்பி தெய்வேந்திரனும் (குட்டிஅண்ணா)அவரின் மனைவி திருமதி.வதனி அவர்களும் இணைந்து 2010ம்ஆண்டு யூலைமாதத்தில் பூரணம் முதியோர் உதவிதிட்டம் எனுமொரு உதவித் திட்டத்தினை ஆரம்பித்தனர். இவ்வுதவித் திட்டத்தினை தனது ஊரான வல்வெட்டித்துறையில் வாழ்கிற வருமானமற்ற முதியோர்கள் 19பேருக்கான உதவியாக அரம்பித்த மேற்படி திட்டமானது தற்போது 30வயோதிபர்களுக்கான உதவியாக விரிவாக்கம் பெற்றுள்ளது.

100_1402-1024x768.jpg

எம்மோடு தொடர்ந்து உதவித்திட்டங்களில் பங்கேற்று தனது உதவிகளை வழங்கி வருபவர் பிரித்தானியா கந்தையா ஜெபநேசன் அவர்கள். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திரு.கந்தையா ஜெபநேசன் அவர்கள் சிறைகளில் வாடுகிற கைதிகளில் சிலரது விடுதலைக்கான உதவியினையும் வழக்குகளுக்கான உதவிகளையும் வழங்கி வருகிறார். அத்தோடு புலமைப்பரிசிலில் சித்தியடைந்த 92 மாணவர்களின் உதவியிலும் தனது பங்களிப்பாக(49,05€) வழங்கியிருக்கிறார்.

Scholorship-1024x256.jpg

தங்கள் பெயர்களை வெளிப்படுத்தாமல் தங்கள் உதவிகளை வழங்கி வருகிற பலருள் இவ்விருவரும் தங்கள் ஆதரவுகளைத் தந்து கொண்டிருக்கின்றனர். வலது கை செய்வதனை இடது கை அறியாமல் செய்தலே உதவியென்று தங்கள் தன்னடக்கத்தை எப்போதும் காக்கிற இவர்களது உதவியை காலத்தின் தேவையை அறிந்து இவர்கள் செய்கிற பணிகளை நேசக்கரம் உறவுகளுக்கு தெரிவிக்கிறோம்.

நன்மைய செய்வோரை மற்றோரை நேசிக்கிற மனிதாபிமானிகளை கருணையாளர்களை என்றும் கௌரவிப்போம்.

வாழ்த்துக்கள்!

முளைக்கும் பயிர்களுக்கு சரியான கவனிப்பு இருந்தாலே அவை நல்ல விளைச்சலைத் தரும் . புலத்து தேசியங்களின் ஆரவாரங்கள் நிறந்த இன்றைய நிலையில் , பலதூரம் கல்வி இடைவெளியைக் கொண்ட பரம்பரையை நிமிர்த்தி எடுக்கும் பணியை தனியொருவராக பல கல்லெறிகள் , சொல்லெறிகள் மத்தியில் நடாத்திவரும் நேசக்கரம் அமைப்பும் , அதன் அடி வேர்களும் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்களே . அத்துடன் அவர்களது கைகளை பலப்படுத்துவதும் எமது கடமைகளில் ஒன்றாகும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.