Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம் என்கிறார் பவித்ரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2014ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொலன்ன பிரதேசத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது 24 மணித்தியாலமும் மின்சாரம் வழங்கும் நாடாக இலங்கை உள்ளது.

இலங்கையில் நூற்றுக்கு 94 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நல்நிலைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=660112101312700549

ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை அல்ல.  அது அம்பாந்தோட்டை.  இலங்கையில் மின்சார வினியோகம். இவைதான் உண்மையான ஆச்சரியங்கள்.

 

வடக்கில் நடப்பதை மூடி மறைத்து பவித்திரா இந்த பொய்யை சொல்கிறா. வன்னியில் மக்களின் நிலை என்ன என்பது சிங்களவருக்கு தெரியாதா அல்லது தெரிந்துகொள்ள விரும்பவில்லையா தெரியாது. இந்தியா தனது 50,000 வீடுகளில் 5,000 தன்னும் கட்டி முடிக்கவில்லை. இது வெல்லாம் வடக்குக்கு போவதல்ல. ஆனால் வடக்கில் தேவைப்படும் புது வீடுகள் 120,000. இது போரினால் சிதைந்தவற்றை திருத்துவதல்ல. அந்த நிலையில் நாடு முழுக்க பவித்திரா மின் வழங்க முன்வருகிறார். இதே ஆள்தான், ஒருமாதத்திற்கு முன்னர், மினார விலையை 87% த்தால் உயர்த்திவிட்டு UNP தான் இலங்கையின் மின்சார விலை உயர்வுக்கு, தட்டுப்பாட்டுக்குக் காரணமென்றவர். இவர் பதவிக்கு வந்ததே சில மாதங்களுக்கு முன்னர் சம்பிக்க பதவி இழந்த பின்னர்தான்.இன்று ஒரு வருடத்திற்குள் இலங்கை முழுவதற்கும் தான் மினசாரம் தரப்போவதாக கூறுகிறார்.   இந்த மாதிரி ஆசியாவின் ஆச்சரியமாக பொய் சொல்கிறார். இந்த மாதிரி ஒரு சாதனையை யப்பான், சிங்கபூர் தன்னும் எப்பவாது செய்ததா தெரியாது.

 

அருகில் இருக்கும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனியாமல், அந்த நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று அழைத்த அரசியல்வாதிகள் தாம் இன்று ஆட்சியில் இருக்கும் சிங்கள ஆட்சியாளர்கள். அந்த சிங்களவர் வடக்கில் மட்டும் அல்ல,  தெற்கில் இருக்கும் அம்பாந்தோட்டையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் வாழ்கிறார்கள். 

 

இலங்கையின் மின்சார வினியோகம் என்பது இலங்கை முழுவதின் பொருளாதாரத்தையும் அதீத விலைவாசிச் சுழல்வுக்குள் தள்ளிவிடப்போகிறது.  இது இலங்கையில் உருவாகிகொண்டிருக்கும் இரத்தப்புற்று நோய் என்றால் அம்பாந்தோட்டை  சரும புற்று நோயாக வளர்ந்துகொண்டு வருகிறது. இந்த இரண்டும் ஆசியாவில் காணாத ஆச்சரிய நோய்களாக மாறி வருகின்றன.  இரண்டும், மருந்து காணப்பட்டாவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு சாவு மணியடிக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன.

 

பலூனை ஊதி விளையாடும் சிறுவன் பலூனை வாயில் இருந்து எடுத்து மேலே எறிந்தவுடன் அது காற்றுபோய் கீழே விழுவது போல சீனா என்ற  சிறுவன் கையை விடும் நாளைக்காத்துக்கொண்டிருக்கிறது இந்த இரண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பவித்திராவிடம்...சம்சாரத்தை விற்றுத்தான்...இலங்கையில் உள்ளவர்கள்...மின்சாரம் பாவிக்க வேண்டிய நிலை வரும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.