Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ உடையில் மூன்று பிள்ளைகளின் தாய்மீது பாலியல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Featured Replies

315e8673d6202407633d531d97071542-150x150கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வினாசியோடை எனும் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் இலங்கை இராணுவம் என்று சந்தேகிக்கபடுபவர்களால்  பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் 38 வயதுடைய தாய் வாய்களை பச்சைத் துணிகளால் கட்டிய பச்சை உடை தரித்த இருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது குடும்ப வருமானத்திற்காக பனை ஓலையில் பொருட்கள் செய்து விற்கும் இப் பெண்  நேற்று மாலை 4.30க்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமை போன்று பனை ஓலை எடுப்பதற்கு சென்ற வேளை இராணுவ உடையில், பச்சைத் துணிகலால் வாய்களை கட்டிய இருவர் அப் பெண்னை பலாத்காரம் செய்த விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டும் இரத்தப் போக்கு கட்டுப்படாததனால் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் நிலை நீடிப்பதுடன் பெண்களின் நிலை யுத்தகாலத்தை விட ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது

பூநகரி பிரதேச செயலக பிரிவில் 6000 குடும்பத்திற்கு 30 000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் மீது அதீத அழுத்தங்களும் இராணுவ அடாவடிகளும் அதிகரித்த நிலையில் இன்றைய இச் சம்பவம் இவ்வாறு ஒரு பெண்ணை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது என்பது வேதனைக்குரியதே என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இப்படியான சம்பவம் ஆங்காங்கே இராணுவத்தாலும் கைக்கூலிகளாலும் நடந்துகொண்டே இருக்கின்றது. இதை தடுக்க யாரும் இல்லையா? என மக்கள் மிகவும் விரக்தியும் வேதனையும் உற்றநிலையில் வாழ்கின்றனர்.http://goldtamil.com/?p=6648

  • கருத்துக்கள உறவுகள்

பலமான பாலியல் குற்றச்சாட்டுக்கள் நிறைந்த.. ஒழுக்கக் குற்றச்சாட்டுக்கள்.. இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கள் நிறைந்த.. சிறீலங்கா இராணுவத்தை ஊர் மேய விட்டு விடுப்புப் பார்க்கும் சர்வதேச சமூகமே இவற்றிற்குப் பொறுப்பு. தலைவர்களுக்கு என்ன... அவர்கள் மாநாடு போட்டு தண்ணி அடிச்சுக் கொண்டிருப்பார்கள். பத்தாக்குறைக்கு வந்ததும் வராததுமா நோபல் பரிசும் கொடுப்பார்கள்.. ஆனால் இவர்களை தலைவர்களாக்கும் வாக்குப்போடும் மக்களோ இப்படி வலி சுமந்து வாழ வேண்டியது தான்.

 

இது ஜனநாயகம்.. பயங்கரவாதம்.. என்று ஊரை ஏய்ப்பவர்கள் எமக்கு அழித்த சாபக்கேடு..! :(:o

 

அந்தத் தாய்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். விரைந்து உடல் குணமடைந்தாலும்.. உளக் குணமடைவாரா..???! சிங்கள தேசத்தை பூண்டோடு அழிக்கனும் என்ற உணர்வே இச்செய்திகளை படிக்கும் போது ஏற்படுகிறது. :icon_idea:

சிங்கள ராணுவ மிருகங்களை சிதறடிக்க வேண்டும்!


:wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதுகும்... மூன்று பிள்ளைகளின் ஏழைத் தாய்க்கு நடந்த கொடுமை இது.
தமிழ்ப் பகுதிகளில்... இருந்து இராணுவத்தை, முற்றாக அகற்றாவிட்டால்... இப்படியான காட்டுமிராண்டிச் செயல்கள், நடந்து கொண்டே இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.