Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4,500 கோடி அமெ. டாலர்களை வழங்க உதவி வழங்கும் நாடுகள் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 22:50 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் அடுத்த இரண்டு வருட அபிவிருத்திக்கான நிதியாக 4500 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்துள்ளது. காலியில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற 2007 ஆம் ஆண்டிற்கான சிறிலங்காவுக்கான அபிவிருத்திச் சபை மாநாட்டில் கலந்துகொண்ட உதவி வழங்கும் கொடையாளி நாடுகளும், நிதி அமைப்புக்களும் அடுத்துவரும் மூன்று வருட காலத்துக்காக இந்த உதவியை வழங்க இணங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் மாநாட்டின் இறுதியில் இன்றுமாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கூட்டம் தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த மாநாட்டின் போது மகிந்த சிந்தனையின் அடிப்படையிலான அரசின் பத்தாண்டுகால அபிவிருத்தித் திட்டங்களை கொடையாளி நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அரசு விளக்கமாக எடுத்துக் கூறியதாகவும், அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் அவர்கள் வரவேற்றுப் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கொடையாளி நாடுகள் இந்த இரண்டு நாட்கள் கலந்துரையாடல்களின் போது, இனப்பிரச்சனைக்கு நிரந்தர சமாதானத் தீர்வு அமைதிப் பேச்சுக்களின் ஊடாகவே அடையப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு சமாதானம் அவசியம் என்பதையும் உதவி வழங்கும் நாடுகள் இம்மாநாட்டில் வலியுறுத்தியிருக்கின்றன.

அதேவேளை, பயங்கரவாதமானது இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சி என்பதிலிருந்து வேறுபடுத்தப்படவேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்டதாகவும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அத்துடன் அரசும் கொடையாளி நாடுகளின் பிரதிநிதிகளும், தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்வங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு விரைந்து முகம் கொடுக்கவேண்டியதன் அவசியத்தையும், அவர்களின் நலன்கள் பேணப்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியதாக அரசு தனதறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கிறது.

4,500 கோடி அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதனை சமாதான முயற்சிகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்துடன் இணைத்தே வழங்குவதாக உதவி வழங்கும் நாடுகள் தெரிவித்திருப்பதாக சில செய்திகள் வெளியாகியிருக்கின்ற போதிலும், இதனை உத்தியோகபூர்வமாக ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.

இதேவேளையில், சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதை உதவிக்கான ஒரு நிபந்தனையாக முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கத் தரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றார்கள். அபிவிருத்தித் திட்டங்களை சமாதானம் ஏற்படும் வரையில் ஒத்துவைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கும் அவர்கள் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பது அவசியம் எனவும் தெரிவித்திருக்கின்றார்கள்.

eelampage.com

இதுதான் நடக்கப்போகிறதொன்பது வெளிப்படையாகத்

விளங்கிக் கொள்ளப்கட்டதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்தின் அவசரமும் அசிரத்தையும்

நேற்றும் முன்தினமும் காலியில் நடந்து முடிந்த இலங்கை அபிவிருத்தி மாநாட்டின் பெறுபேறு எப்படியாக அமைந்தாலும் ஒரு விடயம் தெளிவாகப் புலப்பட்டது. சர்வதேச சமூகத்தின் ஒரே கருத்தாக அது அங்கு ஒலித்தது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமே இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்வதென்றால் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதென்றால் எப்படியும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியேயாகவேண்டும். அதற்கு அமைதி வழித் தீர்வே ஒரே மார்க்கம். எனவே, இனப்பிரச்சினைக்கு முடிவுகட்ட அரசுத் தலைமை விரைந்து செயற்பட வேண்டும். இதுவே சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கருத்தாகக் காலியில் எதிரொலித்தது.

ஆனால், அதனை உள்வாங்கி செவிமடுத்து கவனத்தில் கொள்ளும் சிரத்தை இராணுவ நடவடிக்கை முனைப்பில் தீவிரமாக இருக்கும் அரசுத் தலைமைக்கு உள்ளதாகத் தென்படவில்லை.

காலியில் சர்வதேச சமூகம் வலியுறுத்திய மேற்படி கருத்து "புறக்குடத்து நீராக' , " எருமையில் பெய்த மழையாக' அவமே போகும் என்பதும் உறுதி.

யதார்த்தக் கள நிலைமையை சர்வதேச சமூகம் தெளிவாக எடுத்துரைத்துள்ள போதிலும் அதை ஒரு காதால் வேண்டி, மறுகாதால் வெளித்தள்ளிவிடும் உதாசீனப் போக்கிலேயே அரசுத் தலைமை உள்ளது என்பதும் திண்ணம்.

இலங்கைத்தீவில் காலத்திற்குக்காலம் ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசுகள் இனப்பிரச்சினை விவகாரத்தை சமரச நோக்கோடு அணுகாமல் பேரினவாதத் திமிரோடும், அதிகார ஆணவத்தோடும், ஆட்சிச் செருக்கோடும், மேலாண்மை மமதையோடுமே அணுகின. அதனால்தான் இப்பிரச்சினை தீர்க்கப்படமுடியாமல் இழுபடும் நிலைமை உருவானதோடு இச்சிக்கல் பெரும் இனப்போராகவும் வெடித்தது.

அந்த முன்னைய சிங்களத் தலைமைகளிலிருந்து வேறானதல்ல தற்போதைய தலைமை. அவற்றை விடவும் தமிழர் விரோதப் போக்கில் முனைப்பானதும் தீவிரமானதும் இத்தலைமை என்பதை அது நிரூபித்து வருகின்றது.

இந்நிலைமையில் இராணுவத் தீர்வு முனைப்பில் மும்முரமாக இருக்கும் தென்னிலங்கை அரசுத் தலைமையை சர்வதேச சமூகத்தின் வழமையான நல்லுபதேசங்களும், கண்டன அறிக்கைகளும், கவலை தெரிவிப்புகளும் நல்வழிப்படுத்தமாட்டா, அதற்கு அவை போதுமானவையல்ல என்பதை ஏற்கனவே இப்பத்தியில் தெளிவாகவும், விளக்கமாகவும் சுட்டிக்காட்டிவிட்டோம்.

அதைப் புரிந்துகொள்ளாமல் இலங்கை அரசின் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மென்போக்கைக் கடைப்பிடித்து, ஆக்கபூர்வமாக எதையும் சாதிக்காமல் தவறப் போகிறது என்பதும் தமிழர்களைப் பொறுத்தவரை மிகத் தெளிவான விடயம்.

சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு இன்னும் சில விடயங்களை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை ஒன்றுபட்டு இணக்கத்தோடு அணுகுவது என்று சம்மதித்து, தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அப்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் லியம் பொக்ஸ் முன்னிலையில் உடன்பாட்டில் ஒப்பமிட்டனர். அந்த "லியம் பொக்ஸ் உடன்பாட்டை' சர்வதேச சமூகம் ஆரவாரமாக வரவேற்றது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அது குப்பைக்கூடைக்குள் போனதுதான் மிச்சம்.

பின்னர் சமரச முயற்சியில் ஈடுபடும் அனுசரணைத் தரப்பாக நோர்வே முன்வந்தது. யுத்த நிறுத்த உடன்பாடு ஒப்பமிடப்பட்டது. ரணிலின் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆறு சுற்று அமைதிப் பேச்சுகள் நடந்தன. பல முடிவுகள் எட்டப்பட்டன.

எல்லாவற்றையும் சர்வதேச சமூகம் ஒரே குரலில் வரவேற்றது. ஆனால், பேச்சுகளில் எட்டப்பட்ட முடிவுகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவையும் குப்பைக் கூடைக்குள் போயின. சர்வதேச சமூகம் வெகுவாகப் பாராட்டிய யுத்தநிறுத்த உடன்பாடும் வெறும் உக்கிய காகிதத் தாளாக மாறிக்கொண்டிருக்கின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆழிப்பேரலை தாக்கியது. அந்தப் பேரவல அனர்த்தத்திலிருந்து மக்களை மீள் வாழ்க்கைக்கு வழிப்படுத்துவதற்காக அவசர மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்காக சர்வதேச பங்களிப்போடு ஒரு பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதையும் சர்வதேச சமூகம் பெரிதாக வரவேற்றது. ஆனால் சட்ட வழியில் அதற்குத் தடுக்குப்போட, பொதுக்கட்டமைப்பும் தகர்ந்து போனது.

இந்த அரசுடன் ஜெனிவாவில் புலிகள் நடத்திய இரண்டு சுற்றுப் பேச்சுகளைக்கூட சர்வதேச சமூகம் வரவேற்றது. ஆனால், அந்தப் பேச்சுகளும் பலனின்றி முடிந்தன.

பின்னர், இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இணைந்து ஒன்றுபட்டு ஈடுபடுவதற்கு இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளான ஸ்ரீல.சு.கவும் ஐ.தே.கவும் முன்வந்தன. புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்தானது. சர்வதேச சமூகம் அதையும் பெரும் திருப்பமாகக் கொண்டாடி வரவேற்றது.

குறுகிய அரசியல் லாபத்துக்காக அந்த உடன்படிக்கையையும் குறுகிய காலத்துக்குள் செல்லாக்காசாக்கி, கிழித்தெறிய வைத்திருக்கின்றார் ஜனாதிபதி ராஜபக்ஷ.

இப்போது குத்துக்கரண அரசியலை குதிரையோட்ட பேரத்தை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, வழிப்படுத்தி அதன்மூலம் தமது அரசின் நாடாளுமன்றப் பலத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கின்றா

காலி மாநாட்டில் 4.5 பில்லியன் டொலர் உதவிவழங்கப்படுமா என்பதில் முரண்பாடான தகவல்கள்

காலில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சிறீலங்காவிற்கு 2007-2009 ஆண்டுகால அபிவிருத்தி பணிகளுக்கு 4.5 பில்லின் அமெரிக்க டொலர் உதவி பெறப்படவுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ் உதவித்தொகையானது வீதி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகளின் உருவாக்கம், துறைமுக மேம்பாடு, அனல்மின் நிலையம் உருவாக்கம் ஆகிய பணிகளுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதனை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளின் பெறுபேறாக எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 9 பில்லியன் டொலர் பணம் உதவித்தொகையாக சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் சரத் அமுனுகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ரொட்ரர் செய்தி நிறுவனத்துக்கு செவ்வியளித்த பெயர் குறிப்பிடவிரும்பாத வெளிநாட்டு அபிவிருத்திப் பங்காளி ஒருவர் இது உதவிவழங்கும் மாநாடு அல்ல எனவும் ஒருவரும் உதவியளிப்பதற்கான எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆயிரத்து 500 கோடி டொலர்

இலங்கைக்குக் கிடைக்குமாம்!

கொழும்பு, ஜன. 31

காலியில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற 2007ஆம் ஆண்டுக்கான இலங்கையின் அபிவிருத்தி மாநாட்டில் கலந்துகொண்ட கொடையாளி நாடுகளும் நிதி அமைப்புகளும் 4 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாக வழங்க முன்வந்திருக்கின்றன என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு வரையான இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென இந்த நிதியை வழங்க உதவும் நாடுகள் சம்மதித்திருக்கின்றன என்று காலி மாநாடு முடிந்த பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அமுனுகம மேலும் கூறினார்.

இதேவேளை இந்த நிதியானது இலங்கை சமாதான முயற்சிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே வழங்கப்படும் என்று உதவும் நாடுகள் கோடி காட்டியிருக்கின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

- சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.