Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

Featured Replies

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசிய நலன் சார்ந்து இயங்கும் தமிழ் அமைப்புகளிற்கு பல்வேறு பட்ட கடமைகள் உண்டு. இற்றைவரை இந்த தமிழர் அமைப்புகள் நம்மவர்கள் நோக்கிய கலை கலாச்சார நிகழ்வுகள், பிரச்சார கூட்டங்கள் கண்டன கூட்டங்கள், நிதிதிரட்டல், கவனயீர்ப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களோடு மாத்திரம் நின்றுவிடுகின்றன. தாயகத்தின் அவல நிலையையும், எந்தவித வெளி உதவிகள் இன்றி விடுதலை வேண்டி 30 ஆண்டுகளிற்கு மேலாக பலத்த இழப்புக்களோடு போராடும் இனமாக மட்டுப்படுத்தப்பட்ட நேர மற்றும் மனித வளரீதியில் இவைதான் முக்கியத்துவம் பெறுபவைகளாக இருக்கின்றன. இருந்த போதும் புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நல்லெண்ண தூதுவர்களாக நடந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய தேவை எம் எல்லோரிடமும் உள்ளது. அதனால் இந்த தமிழ் அமைப்புகள் புலம்பெயர்ந்த தமிழர்களை அந்தந்த நாட்டின் நல்ல குடிமக்களாக, வாசிகளாக வாழுவதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய கடமை இருக்கிறது.

2001 இல் அமெரிக்க உலக வர்த்தக மய்ய இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்கு பின்னர் உலகம் என்பது மேற்குலகம் இஸ்லாமிய உலகம் என்று இரண்டாக பிளவுபடும் நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தினம் தினம் நடந்தேறும் மனித அவலங்கள் இந்தப் பிளவை மேலும் ஆழமாக்கி விரிவுபடுத்தும் நிலையைத்தான் துர்ரதிஸ்டவசமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது மனித அவலங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கையீனம், கோபம், வெறுப்பு, பழிவாங்கல் போன்ற உணர்ச்சிகள் சமூகத்தின் சற்றும் எதிர்பார்க்காத வைத்தியத்துறை சார்ந்த நிபுணர்களையே ஆட்கொள்ளும் நிலைக்கு விபரீதமாகிவிட்டது. இது மேற்குலகத்தின் சாதாரண குடிமக்கள், கல்விமான்கள் முதல் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் வரை பல்வேறு பட்ட தரப்பினரிற்கு பாரிய அதிர்ச்சியாகவுள்ளது. இதனால் பொதுவாக குடிபெயர்ந்து வருபவர்கள் பற்றிய அவர்களது பார்வையை மீளாய்வு செய்யத்தூண்டியுள்ளதுடன். மேற்குலகத்தவரின் பார்வையில் குடிபெயர்ந்து வருபவர்கள் பற்றி அவர்களிடம் உள்ள கேள்விகளாக சந்தேகங்களாக இருப்பவை:

-1- குடிவந்த மேற்குலக வாழ்வு முறைக்குள்ள உள்வாங்கப்பட்டு நற்குடிமக்களாக மாறுவார்களா?

-2- குடிவந்த நாட்டி தேசிய நலன்களிற்கு எந்தெந்த வகையில் பங்களிப்பவர்களாக இருக்கிறார்கள்?

-3- தத்தமது கலாச்சார பண்பாடுகளை குடிவந்த நாட்டின் சமூகச் சூழ்நிலைகளிற்கு ஏற்ப யதார்த்தபூர்வமாக ஏனையவர்களிற்கு இடையுhறு இல்லாத முறையில் பின்பற்றுவார்களா?

-4- குடிவந்த நாட்டின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை மாற்றி அமைக்கும் முறையில் தமது வாழ்வுமுறையை விரிவுபடுத்த முயற்சிக்கிறார்களா?

-5- வேற்றுமமையில் ஒற்றுமை காணும் மனோபாவத்தோடு ஏனைய மதங்கள் கலாச்சாரங்கள் பண்பாடுகளை நோக்குவார்களா?

-6- குடிவந்த நாட்டின் தேசிய நலன்களிற்கு பாதகமாக என்ன வகையில் இருக்கிறார்கள்?

இஸ்லாமியர்களின் மிதவாதப் பிரிவினரால் இன்று குடிபெயர்ந்து வருபவர்கள் மீது உருவாக்கியுள்ள இந்த விசேட கவனம் என்பது புலம்பெயர்ந்த தமிழர்களாகிய எம்மை ஒரு பொறுப்புள்ள சர்வதேச குடிமக்களாக தமிழ்த் தேசியத்தின் சிறந்த பிரதிநிதிகளாக தூதுவர்களாக காட்டுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் தமிழ் இன உணர்வாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்கு முறைகளிற்கான உத்தரவுகள் உயர்மட்டங்களில் இருந்து வருவபை. அவற்றிற்கான நியாயப்பாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பூச்சாண்டியால் மேற்குலகின் மனித உரிமை விழுமியங்களிற்கும் ஜனநாயகத்திற்கும் நியாயமான நீதி நிர்வாக கட்டமைப்புகளிற்கு அவமானகரமான முறையில் பூசிமெழுகப்படுகிறது. புலிகள் மீது ஒருவகை அழுத்தத்தை பிரயோகிக்கவும் சிறீலங்கா அரசை திருப்த்திப்படுத்தி தமது சுயநலன் சார்ந்த சலுகைகளை பெறும் முயற்ச்சியின் தொடர்ச்சியே இந்த சர்வதேச அரசியல் நாடகம். இலங்கை தீவு என்ற வீட்டில் இனப்பிரச்சனை என்ற தீ எரிந்து கொண்டிருக்கும் வரை தமது நலன் சார்ந்த சலுகைகளை பேரம் பேசி இவர்கள் இவ்வாறு பிடுங்கிக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள 2 தரப்புகளில் இவ்வாறான பேரம் பேசலில் ஏமாரக் கூடிய ஒரே ஒரு தரப்பாக இருப்பது சிறீலங்கா என்றால் அதற்கு பலியாகாது இருக்கும் நாம் நெருக்கடிகளையும் சில இழப்புகளையும் தற்காலிகமாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. பொதுவாக சதிவலைகளில் குறுகிய கால நோக்கில் திருப்த்திப்படுபவர்கள் தான் நீண்டகால நோக்கில் ஏமாற்றப்படுபவர்களும் பாரிய இழப்புகளை சந்திப்பவர்களுமாகும்.

புலம் பெயர்ந்தவர்களாகிய எமது எண்ணங்களும் நடத்தைகளும் உறுதியாக தமிழீழம் என்ற தனியரசு நிறுவப்படுவது பற்றியும் அதன் பின்னர் எமது தேசத்தை சர்வதேச அரங்கில் ஒரு முன்னுதாரணமான நாடாக தூக்கி நிறுத்துவதற்கு தேவையான பாரிய புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி வேலைகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். உயர்மட்ட பேரம்பேசல்களில் விட்டுக் கொடுக்காது எமது உரிமைகளையும் வளங்களையும் பாதுகாக்கும் பொழுது எதிர்கொள்ள வேண்டிய பல்வேறுபட்ட அரசியல் இராஜதந்திர பொருளாதார அழுத்தங்களை சமாளிக்க உலகளாவியரீதியில் எமது தேசியத்தின் அடிமட்ட உறவு நிலை பலப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச சதுரங்கத்தின் உயர்நிலை பேரம்பேசல்களினால் இன்று எம்மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் எம்மை மேற்குலம் சார்பாக ஒரு வெறுப்பலையை உருவாக்குமானால் அது எமது தலமைப்பீடத்திற்கு உயர்மட்ட நிலை அழுத்தங்களை எதிர்கொள்ள இன்றோ எதிர்காலத்திலோ உதவாது. மாறாக தமிழ்த் தேசியத்திற்கு நீண்டகால நோக்கில் இழப்பாகவும் பலவீனமாகவும் மாறும். எமது வெறுப்புணர்வுகள் சில பெறுப்பற்ற நடத்தையை கூட தூண்டும் அளவிற்கு நிலமை மோசமானால் அதனால் பயன் பெறப்போவது எமது எதிரிகளே.

அதாவது சாதாரண மக்கள் எம்மை இஸ்லாமிய மிதவாதிகளோடு சேர்த்து ஒன்றாக பார்க்கவில்லை. ஆனால் மேற்குலகின் ஆதிக்கவர்க்கம் எமது தேசிய தலமையை அதன் ஆதரவாளர்களையும் அவ்வாறு சித்தரித்து தமது சுயநல பேரம் பேசலை முன்னெடுக்க முயற்சிக்கிறது. நிஜ வாழ்வில் இஸ்லாமிய மிதவாதம் நடந்து கொள்ளும் முறையானது எம்மை ஒப்பீட்டளவில் குடிவந்தவர்களிற்கு ஒரு நல்ல உதாரணமாக காட்ட உதவும். இந்த சந்தர்ப்பத்தை சரியாக உணராதவர்களாக இருக்கிறோம். தமிழ்த்தேசியத்தின் பிரதிநிதித்துவம் என்பது எமது நிகழ்வுகளிற்காக கொடி பிடித்தல் ஊர்வலம் போகுதல் என்பவற்றோடு மட்டுப்படுத்தப்படுகிறது. சுவிஸ் தமிழர் பேரவை, இளையோர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், பிரிட்டிஸ் தமிழர் பேரவை, கனடிய தமிழர் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் என்பன தமது நடவடிக்கைகளை பிரதிநிதித்துவத்தை அந்தந்த நாட்டின் முக்கிய தேசிய நிகழ்வுகளில் (உதாரணத்திற்கு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், veteran's day - போர்வீரர் நினைவு கூரல்கள், சிறுவர் அமைப்புகளின் நிகழ்வுகள்) காத்திரமாக மேற்கொள்ள வேண்டும். வெண்புறா, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகள் அந்தந்த நாட்டின் தொண்டர் நிறுவனங்களின் உள்@ர் நடவடிக்கைகளிற்கு தன்னாவலர்களாக பங்களித்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சக்த்தி சேமிப்பு, recycling பற்றிய நிகழ்வுகளில் பங்குபற்றல். உதாரணத்திற்கு பொதுவாகவே குடிவந்த நாட்டவர்கள் மத்தியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சக்த்தி சேமிப்பு, recycling போன்றவற்றில் அதிக கவனம் இருப்பது இல்லை. நம்மவர்களும் இதில் விதிவிலக்கல்ல. நமது அமைப்புகள் இவற்றில் கவனம் எடுத்து முன்மாதிரியாக நடந்து மாற்றங்களை உருவாக்குவது எம்மை ஒரு முன்மாதிரியான சமூகமாக காட்டும். இன்னெரு சிறப்பான உதாரணமாக கனடாவில் இரத்த தானம், அவயங்களிற்கான தானத்திற்கான உடன்பாடு, உள்@ர் வைத்தியசாலைக்கான நிதி சேகரிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய நாடுகளில் முன்னெடுக்கலாம்.

இணைத்தலமை நாடுகளின் இன்றய உயர்மட்ட அரசியல் சித்து விளையாட்டுகளின் பின்னணியை புரிந்தவர்களாக அதற்கு பலியாகாது எமது கடமையான தமிழ்த் தேசியத்தின் பலமாக அதன் சிறந்த பிரதிநிதிகளாக தூதுவர்களாக சர்வதேச அரங்கில் இருப்பதை இரட்டிப்பு உறுதியுடன் செய்ய வேண்டும். சர்வதேச அரங்கில் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் என்பது அடிமட்ட நிலையில் (grass root level) உறுதியாக நிதானமாக வழர்த்தெடுக்கப்பட வேண்டும். எமது நாட்டின் இயற்கை வளங்களும் உரிமைகளும் சுரண்டப்படாது பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் மனித வளங்களாகிய நாம் சர்வதேச அளவில் பல் பரிமாண (அரசியல், ஊடகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி) பலமாக வழர வேண்டும். அந்த ஒன்றுபட்ட உயர்தர தமிழ்த் தேசிய பலத்திற்கான அர்த்தத்தை நேரமும் தேவையும் வரும் பொழுது முழுமைப்படுத்தவும் உச்சப் பயனைப் பெற்றுக் கொள்ள திறமையான தமிழ்த் தேசிய தலமையும் அர்பணிப்புடன் ஆயிரம் ஆயிரம் போராளிகளும் தாயகத்தில் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது கடமையை சலனம் இன்றி தொடருவோம்.

Edited by kurukaalapoovan

எதனோடான மீதான முன்னெடுப்புகள் ஒரு முகப்படுத்த பட்டு ஒரே ஆணி வேரில் இருந்து வர வேணும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்...! ஆனால் மேலே குறுக்ஸ் சொன்னவற்றை செய்பவர்களே எல்லாவற்றையும் செய்ய வேணும் அதாவது முன்னின்று செயற்படுத்த வேணும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...!!

இப்போ இருக்கும் கேள்வியே உங்களில் எத்தினை பேர் தேசியத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஒண்றை முன்னின்று செயற்படுத்த தயாராக இருக்கிறீர்கள் என்பதுதான்...! ( இதுக்கு புலிகளின் முத்திரைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..)

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகள் தங்களின் பொருளாதார/பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க தாங்கள் விரும்பும் உலக ஒழுங்கையே ஆதரிக்கின்றன.. இதன் அடிப்படையில் தமிழீழம் என்ற நாடு அமைவது அவர்களின் நலன்களைப் பாதிக்காது என்று பலத்த பிரச்சாரம் செய்தும், வன்முறைப் போராட்டத்தின் மூலம் தனிநாடு உருவாவதை வேறும் பல நாடுகளில் முன்மாதிரியாகக் கொள்ளச் சந்தர்ப்பம் உள்ளதால் உலகின் போக்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் போகக்கூடும் என்ற அச்சவுணர்வே தமிழீழப் போராட்டத்தையும் பயங்கரவாதப் போரட்டமாக மேற்குலக நாடுகளால் சித்தரிக்கப்படுகின்றது. தமிழர்கள் புலம்பெயர் நாடுகளின் சட்டதிட்டங்களுக்குப் பணிந்து வாழ்ந்தாலும், புலம் பெயர்ந்த நாட்டின் குடிமக்களாக இருப்பதற்கான உரிமையைப் பெற்றாலும், பெரும்பாலும் தனிக் குழுமமாகவே வாழ்கின்றனர்.. உள்ளூர் அரசியலில் பெரும் அக்கறையும் காட்டுவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் ரீதியாக தமிழ்ச்சமுகத்தை ஒன்றிணைத்து, அதன் மூலம் உள்ளூர் அரசியலிலும், தமிழ்த் தேசியத்திற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபாடு கொண்டவர்களாக நம்மவர்களை மாற்ற முனைவது பெரிய சவாலாகும்.

நல்லெண்ண தூதுவர்களை உருவாக்குவதில் குறிப்பிட்ட தமிழ் அமைப்புக்கள் உதவமுடியுமா என்பது சிக்கலான விடயம். நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக உணர்ந்து நல்லெண்ண தூதுவர்களாக மாறுவதே சிறந்ததாக இருக்குமோ என நினைக்கின்றேன். தமிழ் அமைப்புக்கள் நல்லெண்ண தூதுவர்களை உருவாக்குவதை சில விசமிகள் புலிப் பயங்கரவாதிகளை உருவாக்குகின்றார்கள் என கூறி மேற்குறிப்பிட்ட அமைப்புக்களை தடைசெய்ய கோரவும் கூடும். :huh: மேலும், இங்கு குறிப்பிடபடும் தமிழ் அமைப்புக்கள் எவை என சில உதாரணங்கள் கூறமுடியுமா? இன்னொரு விதமாக கூறுவதானால் இவை புலத்தில் இருந்து இயங்கும் NGO's ஆ? வெண்புறா அமைப்பை மேற்குறிப்பிட்ட ஒரு தமிழ் அமைப்பாக கூறமுடியுமா? இதேபோல் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புக்கள் மேற்குறிப்பிட்ட தமிழ் அமைப்புக்களில் அடக்கமா?

குறிப்பிட்ட ஏதாவது தமிழ் அமைப்புக்கள் என்று இனங்காட்டப்படாது, இவ்வாறான நல்லெண்ண தூதுவர்களை யாழ் இணையம், தமிழ்நாதம், மற்றும் புலத்தில் உள்ள வானொலிகள், தொலைக்காட்சிகள் மூலம் உருவாக்குவது சிறந்தது என தோன்றுகின்றது.

மேற்குலகம் எம்மையும், இஸ்லாமிய கடும்போக்காளர்களையும் ஒரேமாதிரி நோக்குகின்றது அல்லது அணுகுகின்றது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எம்மீது நடாத்தப்படும் ஒருதலைப்பட்சமான ஓரங்கட்டலின் பின்னணியில் சிறீ லங்கா அரசும் அதன் கைக்கூலிகளுமே செயற்பட்டு வருகின்றன. அவற்றின் தொடர்ச்சியான அழுத்தங்களே தமிழின உணர்வாளர்களை மேற்குலகம் தண்டிப்பதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், தமிழர்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் மேற்குலகத்தில் உள்ள சில மேல்தர வர்க்கம் அல்லது இனவாதிகள் கொண்ட பொறாமையே/வெறுப்பே இவ்வாறு தமிழர்களின் ஒவ்வொரு அசைவும் நுணுக்குக்காட்டியூடாக அவதானிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். மேற்குலகத்தினருக்கு ஈடாக போட்டிபோட்டு வணிகம் செய்யும் தமிழ் வியாபாரிகளை (நான் கூறுவது இடியப்ப கடைகளை அல்ல...) கேட்டால் இவற்றை இன்னும் தெளிவாக விளங்கப்படுத்துவார்கள்.

அடிமட்ட நிலையில் (grass root level) இருந்துதான் எவ்விதமான கரடுமுரடான பாதையில் செல்லும் விடுதலைப் பயணங்களும் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட முடியும். இதற்கு தமிழீழ விடுதலைக்கான பயணமும் விதிவிலக்கல்ல.

தயா, கட்டுரையாளர் சொன்னவற்றில் எவற்றை, ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?

கிருபன் சொன்னதுபோல் உள்ளூர் அரசியலில் நம்மவர்கள் ஈடுபடுவது, மற்றும் அங்கிருந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காய் குரல்கொடுப்பது என்பன புலத்தில் வாழும்ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய சவால்களாகவும், சிக்கல்களாகவும் இருக்கின்றன. எந்த நேரமும் கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டு இருக்க வேண்டிய நிலமை. இல்லாவிட்டால் தமிழின ஆதரவாளர்களிற்கு விசமிகளால் புலி பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு விடும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசிய நலன் சார்ந்து இயங்கும் தமிழ் அமைப்புகளிற்கு பல்வேறு பட்ட கடமைகள் உண்டு. இற்றைவரை இந்த தமிழர் அமைப்புகள் நம்மவர்கள் நோக்கிய கலை கலாச்சார நிகழ்வுகள், பிரச்சார கூட்டங்கள் கண்டன கூட்டங்கள், நிதிதிரட்டல், கவனயீர்ப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களோடு மாத்திரம் நின்றுவிடுகின்றன.

இது கட்டுரையாளர் தமிழர் அமைப்புக்கள் பற்றியும் நடாவடிக்கை குறைகள் பற்றியும் சொன்ன குற்றச்சாட்டுகள்... மிகுதி உலக அரங்கில் இருக்கும் அரசியல் நிகழ்ச்சிகள்... இங்கு முக்கியமான கேள்வி இந்த நிறுவன அமைப்புக்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா...? என்பதுதான்...!!

வெளிப்படையாக எந்த அளவுக்கு செயற்படலாம் என்னும் அளவோடு தமிழர் அமைப்புகள் நிண்று விடுகின்றன.. அதையும் தாண்டி மக்களுக்குள் முன்னிண்று செயற்பாடுத்த ஆள் பற்றாக்குறை..!

அப்படியும் ஒருவர் முன்னின்று செயற்பட துணிந்தால் அவர்மீதான நம்பிக்கை கேள்விக்கு உள்ளாகி, காலம் கடந்து அவருடன் செயற்பட துணியும் நிலையை உருவாக்க பட்டு உள்ளது... அதில் துரோக கூட்டம் வெண்றதாயே கொள்ளலாம்... எது சரி எது பிழை எண்று ஆராய்ந்து கண்டு பிடிக்கும் திறன் புலம்பெயர் வாழ் மக்களிடம் நிரம்பி கிடக்கிறது ஆனால் எவர் சரியானவர்.. எவர் பிழையானவர் என்பதில் சரியான தெளிவு உடனடியாக ஏற்பட்டு விடுவதில்லை.... காரணம் விமர்சனம் செய்பவர்களின் என்ணிக்கை எங்களவர்களுக்குள் கொஞ்சம் அதிகம்.... தீர யோசிப்பவர்கள் குறைவு...!

Edited by தயா

  • தொடங்கியவர்

The simple point being made here is...

If our community organizations restrict their activities among us & us only, organize/participate-in events that have significance only to us then those community organizations and their members cannot have a public profile.

When they actively participate in the host nation’s nationally significant events, engage with the wider community then those organizations and the involved individuals public profile will raise to a meaningful level. This raised public profile could act as a deterrent when people higher up want to harass them with arbitrary arrests and politically motivated accusations. We could reasonably expect some public voices casting doubts and challenging the validity of such moves if these individuals and their organizations are know to the wider community as good citizens and Samaritans.

Our ghetto life style and our self impose solitary confined community activities are certainly a plus to those who want to harass, intimidate and silence us.

As usual buffoons missing the point whine about lack of time, lack of volunteers etc...

தமிழிலை தட்டச்சு செய்ய கஸ்ரப்படுகிறார் ஒருவர்... எண்டாலும் என்னால் தமிழில் எழுத முடியும் என்பதால் தமிழிலேயே பதில் அளிக்கிறேன்...!

The simple point being made here is...

If our community organizations restrict their activities among us & us only, organize/participate-in events that have significance only to us then those community organizations and their members cannot have a public profile.

இது ஆதீதமான கற்பனை... எதையும் சரியான முறையில் விளங்கிக்கொள்ளும் தன்மை அற்று போனமையை காட்டுகிறது..! இங்கே பிரச்சினையே தொண்டு நிறுவனங்களின் பிரதி நிதியாக இருப்பவரே. போராட்டங்களையும் ஒழுங்கு செய்யும், அரசியல் நடவடிக்கைகளை செய்பவராக இருக்கிறார்கள் ... அவரின் சுமையை குறைக்கவேண்டும், அரவ்களின் வேலைச்சுமை காரணமான வழுக்கள்((பிழைகள்) ஏற்பட்டு போராட்டம் வேறுவிதத்தில் நோக்கப்படும் நிலையை ஊக்குவிக்கிறது...! அவர்களால் செய்ய முடிந்த ஒரு தொழிலும் பாதியில் நிக்கிறது...!

இந்த சுமையை நிவர்த்தி செய்ய உங்களால் முடியுமா...??? அப்படி முடியும் எண்றால் தனிப்பட்ட உங்களது profile அதாவது நம்பகத்தன்மை என்ன...?? உங்களை நம்பி பின்னால் வந்தால் காசுக்காக எங்களை அடகு வைக்க மாட்டீர்கள் என்பதுக்கு என்ன உறுதி.....!

When they actively participate in the host nation’s nationally significant events, engage with the wider community then those organizations and the involved individuals public profile will raise to a meaningful level. This raised public profile could act as a deterrent when people higher up want to harass them with arbitrary arrests and politically motivated accusations. We could reasonably expect some public voices casting doubts and challenging the validity of such moves if these individuals and their organizations are know to the wider community as good citizens and Samaritans.

Our ghetto life style and our self impose solitary confined community activities are certainly a plus to those who want to harass, intimidate and silence us..

இதை ஒரு யோசனையாக சொல்வதாக இருந்தால் அதனுள் இருக்கும் ஓட்டைகளை நான் சொல்ல ஆசைப்படுகிறேன்... அதற்கு முன்னம்....!! இதே களத்தில் தயா இடைக்காடார் அவர்களின் உண்ணாவிரத்தை போராட்டத்தை பற்றியும் சிலர் அது சம்பந்தமாக அவர் செய்யும் தனிப்பட்ட விளம்பரம் எண்ற வகையான கருத்துக்களை தூசு தட்டி எடுத்து ஒரு முறை படித்து விடுங்கள்...!

முக்கியமாக என்னால் நீங்கள் சொல்வது போல கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் வரமுடியும்... என்னை தேசிய ஆதரவாளனாய் காட்டிக்கொள்ளவும் முடியும்... முன்னின்று செயற்படவும் முடியும்...! எனக்கான துணையாக சிலரை கைக்குள் போட்டுக்கொள்ளவும் முடியும்.. புலிகளுக்கு எண்று பொய் சொல்லி மக்களை பயமுறுத்தியும் கதை சொல்லியும் பணம் சேர்க்கவும் முடியும்...! பின்னர் சிலரை வைத்து தொலைக்காட்சிகளுக்கு(ex: BBC)புலிகள் கட்டளை இட்டதால் தான் நான் அப்படி எல்லாம் செய்தேன் எண்றும் முன்னர் எடுத்துக் கொண்ட படங்களை எல்லால் தொலைக்காட்ச்சிகளுக்கு காட்டி நான் திருந்தி விட்டேன் எண்று சொல்லி அடித்த பணத்தோடும், அதுக்கான கூலியாக வாங்கிய பணத்தோடும், நான் நல்லவனாக நாள் ஆகாது...!!

இப்படி மக்களுக்கு புலனாய்வு விளிப்புனர்வு கொடுக்க முனைந்த செய்தி இணையங்களை பழித்தவர்கள் இங்கை யாழுக்கையே இருக்கிறார்கள்...!! இன்னும் செய்கிறார்கள்... அதை தடுக்க சாதாரனமான நடவடிக்கை யாக எதை செய்து விட்டீர்கள்..??? அது இருக்கட்டும்...

புலிகளுக்கு தொழில் நுட்ப அவசியதை போதித்த மேதைகளும் இங்கே இருக்கிறார்கள்...! பலவீனமான புலிகள் மக்களிடம் பணம் வாங்கி ஆயுதம் வாங்க வேணும் எண்று சொன்னவர்களால்த்தான், தொண்டுக்காகவும், புணர் நிர்மானங்களுக்காகவும் பணம் வாங்கும் நிறுவனங்கள் புலிகளின் ஆயுத முகவர்களாக்க படுகிறார்கள்....! தொண்டு நிறுவனங்கள் தொடங்கிய தமிழன் என்பதால் உண்மையில் மக்களுக்கு சேவை செய்வோர் எல்லாம், ஒன்று கைது செய்ய படுகிறார்கள் அல்லது விசாரிக்க படுகிறார்கள்... இந்த நிலையை தோற்ருவித்த போராட்ட வல்லுனர்கள் பலரில் யாழ்களத்தில் சிலருக்கும் பொருந்தும்...

பணம் சேர்த்து மக்களுக்காகன சேவைகள் எதுக்காகவும் பணம் போனாலும் அது ஆயுதம் வாங்கத்தான்... அதோடு புலிகள் வேண்டிய ஆயுதங்களை சேர்க்க வில்லை எண்று பிரச்சாரப்படுத்தியவர்களுக்

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சுமையை நிவர்த்தி செய்ய உங்களால் முடியுமா...??? அப்படி முடியும் எண்றால் தனிப்பட்ட உங்களது profile அதாவது நம்பகத்தன்மை என்ன...?? உங்களை நம்பி பின்னால் வந்தால் காசுக்காக எங்களை அடகு வைக்க மாட்டீர்கள் என்பதுக்கு என்ன உறுதி.....!

இந்தக் கருத்தை ஏற்க முடியல்ல

பாருங்கோ. அண்டைக்குத் தலைவர் போராட்ட்ம தொடங்கே்கக் அவரின் நம்பகததன்மை என்னவென்று கொண்டு சனம் சிந்திச்சிருந்தா, இண்டைக்கு நடுரோட்டில் தான் நிண்டிருப்பியள். அது போலத் தான் குறுக்காலபோவன் அறிமுகப்படுத்துற திட்டத்தில் உள்ள உறைபாட்டை கேட்கலாமே. அதை விட்டு விட்டு தனிப்பட அவரைப் பற்றி எழுதுறது சரியில்லை.

உங்களைப் போல அவரும் களத்தில் இருக்கின்றார். அவரின் செயற்திட்டங்கள் போராட்டத்துக்கு ஆதரவாகத் தான் இருக்குது. நம்பகத் தன்மை பார்க்கப் போனால், ஒருத்தனுக்குமுள்ள ஒற்றுமை வராது. எதிரிக்கு வாய்ப்பாகப் போடும்.

அவர் கொண்டு வாற திட்டம் நல்லதெண்டால் ஏற்றுக் கொள்ளுங்கோ, இல்லையெண்டால் விடுங்கோ. சுயமாகச் சிந்திக்கின்ற அளவுக்கு அறிவு இருக்குது தானே B) :lol:

இந்தக் கருத்தை ஏற்க முடியல்ல

பாருங்கோ. அண்டைக்குத் தலைவர் போராட்ட்ம தொடங்கே்கக் அவரின் நம்பகததன்மை என்னவென்று கொண்டு சனம் சிந்திச்சிருந்தா, இண்டைக்கு நடுரோட்டில் தான் நிண்டிருப்பியள். அது போலத் தான் குறுக்காலபோவன் அறிமுகப்படுத்துற திட்டத்தில் உள்ள உறைபாட்டை கேட்கலாமே. அதை விட்டு விட்டு தனிப்பட அவரைப் பற்றி எழுதுறது சரியில்லை.

நல்ல கருத்து...

ஆனால் போராட்டம் ஆரம்பித்த உடனேயே எல்லாரும் தலைவர் பின் அணி திரண்டார்கள் என்கிரீர்களா..?? அதுக்கு எவ்வளவு காலம் எடுத்தது என்பதையும் நீங்களே சொல்லி விடுங்கள்...!

அவர் என்னை usual buffoons(வழமையான கோமாளியாம்) என்று சொல்லி இருக்கிறார் அதுக்கு நான் மரியாதை வழங்க வேண்டி கடமை பட்டு இருக்கிரேன்...! ஆதரவாக கருத்து சொல்பவர் எல்லாம் ஆதரவாக இருக்க வேணும் எண்டு இல்லை... அப்பிடி இல்லாதவர்கள் நிறையப்பேரை சொல்ல முடியும் (உதாரனமாய் கருணா)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் என்னை usual buffoons(வழமையான கோமாளியாம்) என்று சொல்லி இருக்கிறார் அதுக்கு நான் மரியாதை வழங்க வேண்டி கடமை பட்டு இருக்கிரேன்...!

நியாயம் தான்.

குறுக்காலபோவன் ஒரு சிறந்த சிந்தனையாளர் எண்டிருந்தால் இப்படியான வார்த்தைப் பிரயோகம் அவர் கொண்டிருக்கின்ற மரியாதையையும், செயற்திட்டத்தையும் குலைக்கும்.

தல

உங்கட வருத்தம் நியாயம் தான். அதற்கு நானும வருந்துறன்.

அனைவரும் அன்பாகச் செய்றபடுவம். ஏனென்றா இது எங்கட நாட்டுப் பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குள் உள்ள பெரிய பிரச்சினையே பத்து பேர் கூடிக்கதைக்கும்போது பதினைந்து அபிப்பிராயங்களை தெரிவித்து, குற்றம் குறை கண்டுபிடித்து, மட்டம் தட்டி கடைசியில் எதுவுமே செய்யாமல் விடுவதுதான்.

பிரித்தானியாவில் 2 இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், கனடாவில் 3 இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், மற்றைய நாடுகளிலும் ஓரளவு சனத்தொகை இருக்கின்றது.. எனினும் எங்கும் தமிழர்கள் ஒன்றுபட்ட ஒர் அரசியல் சக்தியாக இல்லை. நம்முள்ளே உள்ள ஒற்றுமையற்ற குணமே இதற்குக் காரணம்.. மேற்கு நாடுகளில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களை அவ்வவ் நாடுகள் எதுவித சிக்கலுமின்றி ஒடுக்க வெளிக்கிட்டதற்கு நம்மிடையே உள்ள அரசியல் பலவீனம்தான் காரணம்.

தமிழர்களுக்குள் உள்ள பெரிய பிரச்சினையே பத்து பேர் கூடிக்கதைக்கும்போது பதினைந்து அபிப்பிராயங்களை தெரிவித்து, குற்றம் குறை கண்டுபிடித்து, மட்டம் தட்டி கடைசியில் எதுவுமே செய்யாமல் விடுவதுதான்.

பிரித்தானியாவில் 2 இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், கனடாவில் 3 இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், மற்றைய நாடுகளிலும் ஓரளவு சனத்தொகை இருக்கின்றது.. எனினும் எங்கும் தமிழர்கள் ஒன்றுபட்ட ஒர் அரசியல் சக்தியாக இல்லை. நம்முள்ளே உள்ள ஒற்றுமையற்ற குணமே இதற்குக் காரணம்.. மேற்கு நாடுகளில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களை அவ்வவ் நாடுகள் எதுவித சிக்கலுமின்றி ஒடுக்க வெளிக்கிட்டதற்கு நம்மிடையே உள்ள அரசியல் பலவீனம்தான் காரணம்.

கிருபண்ணா இந்த கருத்துக்களை பத்திரிகை பற்றிய கருத்தாடல்களின் போதும் வைத்து இருந்து இருப்பீர்கள் எண்றால் வரவேற்று இருக்கலாம்...

பிரச்சார படுத்தலுக்கு பயன் படும் தொலைக்காட்ச்சிகள், பத்திரிகைகள் எப்படி செயற்ற்பட வேணும் எண்று வகுப்பு எடுத்தார்கள் ....! அப்போது குறை பிடிப்பது போல உங்களுக்கு தோண்றவில்லையா..??? ஆனாலும் இணைய கட்டுரைகளும் பத்திரிகைகளும் மாறவில்லை அதேபோண்றுதான் செயற்படுகின்ரன...!

இங்கே பிரச்சினையே செயற்பட வேண்டியவர்களால் அதை பற்றி விவாதிப்பது மட்டும்தான் செய்ய படுகிற்றது என்பதுதான்... மக்களுக்கு அறிவுரையை இனாமாக வழங்கி கொண்டு நேரத்தை களிக்கிறார்கள்... செயற்படுவோர் சத்தம் இல்லாமல் செயற்படுகிறார்கள்...!

சரி மக்கள் ஒற்றுமை பற்றி சொல்லி இருந்தீர்கள் அது எந்த அடிப்படையில் எண்று விளக்க முடியுமா...?? மக்கள் செயற்பட வில்லை என்பதும் ஒற்றுமை இல்லை என்பது பொய்...! இதை தேசியத்துக்கு தலைமை தாங்குபவர்களால் சொல்ல வைக்க முடியுமா உங்களால்...??

வெளிநாடுகள் தேசிய செயற்பாட்டாளர்களை ஒடுக்க புறப்பட்டதுக்கு காரணம் நீங்களும் கூடவே...! அதை மறக்க வேண்டாம்... புலிகள் பலமாக இருக்கிறார்கள், ஆயுதங்கள் போதுமானவை இருக்கிறது எனும் கோசம் எழுந்த போது.. தொழில் நுட்பம் போதாது ஆயுதங்கள் வேணும்.. புலம்பெயர் மக்கள் உதவ வேணும் எண்று, ஆயுதம்வாங்க எண்று, புலிகளுக்காக பணம் வெளிநாடுகளில் இருந்து பணம் ((இனித்தான் போகப்)) போகிறது என்பதை உறுதி படுத்திய கருத்துகளை திணித்த புண்ணியவான்கள் இதுக்கு காரணம் இல்லையா...??

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரச்சினையே செயற்பட வேண்டியவர்களால் அதை பற்றி விவாதிப்பது மட்டும்தான் செய்ய படுகிற்றது என்பதுதான்... மக்களுக்கு அறிவுரையை இனாமாக வழங்கி கொண்டு நேரத்தை களிக்கிறார்கள்... செயற்படுவோர் சத்தம் இல்லாமல் செயற்படுகிறார்கள்...!

சரி மக்கள் ஒற்றுமை பற்றி சொல்லி இருந்தீர்கள் அது எந்த அடிப்படையில் எண்று விளக்க முடியுமா...?? மக்கள் செயற்பட வில்லை என்பதும் ஒற்றுமை இல்லை என்பது பொய்...! இதை தேசியத்துக்கு தலைமை தாங்குபவர்களால் சொல்ல வைக்க முடியுமா உங்களால்...??

சிவாஜி படத்தை இங்கிலாந்தில் 60 000 பேர் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன்.. அதே போல் இன்று நடைபெறவுள்ள ஒன்றுகூடலுக்கும் மக்கள் அணி திரள்வார்கள் என்பது சந்தேகமே. ஈராக் போரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது லட்சக் கணக்கில் மக்கள் பங்குபற்றுவார்கள். ஆனால் தமிழர்களால் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் எம்மவர்களில் ஒருபகுதியினரே பங்குபற்றுகின்றனர். இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் தமிழ் மக்கள் பலமுள்ள அரசியல் சக்தியாக புலம்பெயர் நாடுகளில் இல்லாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.

சிவாஜி படத்தை இங்கிலாந்தில் 60 000 பேர் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன்.. அதே போல் இன்று நடைபெறவுள்ள ஒன்றுகூடலுக்கும் மக்கள் அணி திரள்வார்கள் என்பது சந்தேகமே. ஈராக் போரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது லட்சக் கணக்கில் மக்கள் பங்குபற்றுவார்கள். ஆனால் தமிழர்களால் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் எம்மவர்களில் ஒருபகுதியினரே பங்குபற்றுகின்றனர். இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் தமிழ் மக்கள் பலமுள்ள அரசியல் சக்தியாக புலம்பெயர் நாடுகளில் இல்லாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.

முதல் நாள் சோ பார்த்தவர்கள்.... 2000 பேர்... ஒரு படத்தை இருதடவைகள் கூட குடும்பத்தோடை பார்த்து இருக்கிறார்கள்.... அதுவும் தங்களுக்கு உகந்த சூழ் நிலையில் நேரத்தில்...

போன தடவைகள் போராட்டங்களில் கரணம் சொல்லி தப்பித்தவர்கள் இந்த தடவை வருவோம் எண்று சொல்வதை கேட்க்க கூடியதாக இருக்கிறது...

  • 1 month later...
  • தொடங்கியவர்

சமகால அரசியல் மற்றும் புலம்பெயர் வாழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி கடந்த செவ்வாய்க்கிழமை (28.08.07) வழங்கிய நேர்காணலின்

பாகம் - 2

http://www.tamilnaatham.com/audio/2007/sep...gi20070907.smil

பாகம் - 1

http://www.tamilnaatham.com/audio/2007/aug...gi20070829.smil

  • 2 weeks later...

********

Edited by harikalan

*********

Edited by harikalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.