Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88006
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    23926
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/08/20 in Posts

  1. பசுமையை அழிக்கும் நவீனம் மனிதன் செய்ய மனிதனை அழிக்கும் வதம் பின் தொடருகிறது.... இயற்கை எனும் கடவுள்.
  2. தன்இனம் மொழி கடந்து தப்பு செய்த கணவனை தட்டிகேட்கும் மனைவியர்.விவாதம் அருமையாய் இருக்கு.....அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் வேற .....இவர்களுக்குள் இப்படி ஒரு அறிவா....! 😂 நேரமின்மையால் அவர்களின் வாக்குவாதத்தை மொழி பெயர்த்து போட முடியவில்லை.வேறு யாராவது முடிந்தால் செய்யவும்.....!
  3. கடற்கரும்புலி கப்டன் மாலிகா டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து நெஞ்சில் பூத்த மலர்கள் கடற்கரும்புலி கப்டன் மாலிகா. கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு மிகுந்த கவலை. ‘நீ முன்னால் போ. நான் வருகிறேன்’ என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாளோ! அதன்பிறகு அவளிடம் நீண்ட எதிர்பார்ப்பு. தனக்கு இலக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அவளிடம் இருந்த துடிப்பு, அதுவே அவளது கனவும் நினைவுமாக இருந்தது. மாலிகா, சிறந்த நீச்சற்காரியாக ஆரம்ப நீச்சற் பயிற்சியின்போதே இனங்காணப்பட்டவள். ஆரம்பப் பயிற்சியின் பின் சிறிதுகாலம் தொலைத்தொடர்பு வேலையில் நின்றபோது, தான் ஒரு கரும்புலியாக வேண்டும் என்ற நீண்ட கனவு அவளிடம் இருந்தது. சுலோஜன் நீரடிநீச்சற் பிரிவுக்குச் சென்றவள், அங்கு தனது திறமைகளாலும் பண்புகளாலும் எல்லோரையும் கவர்ந்தாள். வேகமாக நீந்துவாள். அதிகவலுவுள்ள எந்தப் படகையும் ஒட்டக்கூடிய திறமையை அவள் பெற்றிருந்தாள். மைல் கணக்காக நீந்தி, திறமையாகச் சுழியோடி, தன் குழுவிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் நீச்சல் பழக்கி, படகு ஓட்டக் கற்றுக்கொடுத்து அவள் செய்தவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயரக்கிளம்பும் இராட்சத அலைகளுக்குக் கீழால் நீந்துவது கடினம்தான். அந்த அலைகளை ஊடுருவி நீந்துவதற்குச் சிரமப்படும் பிள்ளைகளையும் நீந்திக்கொண்டே இழுத்து நீந்தப் பழக்கி………… அலைகள் அவளிடம் பணிந்துவிடும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அவளது குழு எல்லாவற்றுக்கும் முன் நிற்கும். எந்தக் கடுமையான பயிற்சியையும் இலகுவாக்கி சிரித்தபடி செய்து முடிப்பதில் மாலிகா கெட்டிக்காரி. பெரிய பழுவுள்ள இயந்திரங்களையும், வலுவுள்ள பொருட்களையும், தூக்கி தோளில் அடித்து, அவளது உடல் வலுவானதில் வியப்பில்லை. தசைகள் இறுகித் தெரியும். அவளது கம்பீரத் தோற்றத்தால் தோழிகள் அவளைச் செல்லமாகக் ‘கட்ஸ்’ என்று அழைப்பதுண்டு. அந்தச் சம்பவம் அவளது உறுதியை நினைக்கத் தோன்றும். அவள் பயிற்சி முடித்தவுடன் இருபது கடல்மைல் நீந்துவதற்காக அவளின் குழு கடலில் இறக்கியது. இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்த பயிற்சி காலை எட்டு மணிக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. மாலிகாவின் வாயிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவளை கரையேறுமாறு பணிக்கப்பட்டது. மாலிகாதான் நீந்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். முழுவதும் நீந்தி முடித்த பின்னரே அவள் கரை ஏறினாள். எந்த நோய்வந்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்த பின்னரே ஓய்வாள். அவளது கடற்சண்டைக் களங்களைக் கூறிக்கொண்டே போகலாம். கிளாலியில் மக்கள் பாதுகாப்புப் பணியிலும், இன்னும் பூநகரி மீதான தவளைத் தாக்குதலிலும் அவளது படகு கடலில் இறங்கியது. கரும்புலியாய் இருளில் அவள் இலக்குத்தேடி அலைந்த நாட்கள் மெய்சிலிர்க்க வைப்பாள். இறுதியாக அங்கையற்கண்ணி நீராடி நீச்சற் பிரிவிலிருந்துதான் திருமலைத் துறைமுகத்துக்குப் போனாள். அவள் தனது இலக்கை அண்மிப்பதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பாதை முழுவதும் சேறு. காலடிகளை ஒழுங்காக எடுத்து வைக்க முடியாதபடி முழங்காலளவு சேறு இருந்தது. அட்டைக் கடிக்குள்ளால் சிலிண்டரையும் தோளில் சுமந்தபடி செல்வது சாதரணமாக நினைத்துப்பார்க்க முடியாதது. கரும்புலிக்கேயுரிய அசத்திய துணிவும், தன்னம்பிக்கையும்தான் எல்லாவற்றையும் செய்யக்கூடிய வலுவை நிறையவே தந்தன. கூட வழியனுப்பச் சென்ற தோழிகள் அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்கள். “கடைசியா எங்களுக்கெல்லாம் சாப்பாடு குழைச்சுத் தந்தாள். அடிபட்டுச் சந்தோசமாய்ச் சாப்பிட்டம்.” இறுதியாக வழியனுப்பிய அந்தத்தோழியின் கன்னத்தில் தட்டி, “நான் போய் வெடிக்கிறபோதுதான் இந்த நோ மாறும்” என்று கூறிவிட்டுச் சென்றாள். கூடவே வந்த வேவு எடுத்துக்கொடுத்த கடற்புலித் தோழர்களிடம் இருநூறு மீற்றரிலேயே விடைபெற்றுப் போனாள். இலக்குப் பெரியது. சாதனையும் பெரியதுதான். நகர்ந்து கொண்டிருந்த கடற்படையினரின் டோறா அவளது இலக்கானது. 1996.12.08 அன்று அந்த இலக்கினோடு, துறைமுகத்தினுள் புகுந்து மாலிகாவும் இல்லாமற்போனாள். அவளுக்குப் பணிந்த அந்த அசுர அலைகள் அவளை அள்ளிச் சென்றிருக்கக் கூடும். நாங்கள் இக்கரையில் நின்றிருந்தோம். அலைகள் மட்டும் திரும்பி வந்தன. நன்றி: களத்தில் இதழ் (04.06.1997). https://thesakkatru.com/black-sea-tiger-captain-maliga/
  4. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே
  5. வெயிலில் காய வைத்து "சொர்ஜ் " ஏத்தின நினைவு ஊஞ்சல் ஆடுகிறது தோழர்..👌
  6. கடல்ல இறங்கி கப்பலை தள்ளுர வேலைய விட பெருசா இருக்கும் போலயே தோழர்..👍
  7. ஆருக்கும் ஞாபகமிருக்கோ....? 😁
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆடி 2004 கருணாவுக்கு வெளிப்படையாகவே இலங்கை அரசு ஆதரவு வழங்குகிறது - புலிகள் நடைபெற்றுவரும் சமாதான பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் முகமாகவும், மக்களைக் குழப்பத்தில் வைத்திருக்கும் விதத்திலும் கருணாவுக்கு அரச ஊடகங்களிலும், செய்திச்சேவைகளிலும் அரசு முன்னுரிமையளித்து வருகிறது என்று மட்டக்களப்பு அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெள்சல்யன் தெரிவித்தார். அரச வானொலியில் கருணாவின் பேட்டியினை ஒலிபரப்பியதுபற்றி கண்டனம் தெரிவித்த கெளசல்யன், "கருணாவுக்கு அரச வளங்களை வழங்கியிருப்பதன் மூலம், புலிகளுக்கெதிரான பொய்ப்பிரச்சாரத்தையும், பினாமி யுத்தம் ஒன்றையும் இலங்கையரசு செய்துவருகின்றது என்பது இப்போது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாவைப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் புலநாய்வுப்பிரிவு புலிகளுக்கெதிராகவும், தமிழ் மக்களுக்கெதிராகவும் நாசகார தாக்குதல்களை மேற்கொண்டுவருவதுடன், சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பவேண்டும் என்ற நோக்கிலும் செயற்பட்டு வருகிறது" என்றும் அவர் கூறினார். "இலங்கையரசின் உண்மையான நோக்கம் பற்றிய மிகத் தெளிவான பார்வை எமக்கு இருக்கிறது. அது கருணாவைப் பாவித்து எம்மைப் பலவீனப்படுத்துவதில் குறியாக இருக்கிறது. இதன்மூலம் தமிழ்மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்னவெனில், இலங்கையரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் நாட்டம் காட்டவில்லையென்பதும், ஆனால் சமாதான காலத்தைப் பாவித்து எம்மை அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தோற்கடித்து முற்றான அழிவு யுத்தம் ஒன்றினை எம்மீது கட்டவிழ்த்து விடவே முயல்கிறது என்பதுதான்" என்றும் அவர் மேலும் கூறினார். "இலங்கையரசு எம்மைப் பலவீனப்படுத்தி அழித்துவிடலாம் எனும் நோக்கில் போரில் ஈடுபட்டால், நாமும் அதற்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதைத்தவிர வேறு வழிகள் இல்லை" என்று அவர் கூறினார்.
  9. மரங்கொத்திக்கு பைத்தியம் பிடித்தால் அது இப்படித்தான் கொத்திக்கொண்டு திரியும்.....! 🤔
  10. அவ்வளவு தான்... இந்திய அரசியல்..!
  11. இலங்கையில்... சீன எழுத்துகள்.
  12. ஹரிஹர புத்திரனாம் -
  13. கர்த்தார் தாமே என்னை மறவாதவரே
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 பாசி பட்டினம் சிமானே வலியோரின் கோமான்னே
  15. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 21, ஆணி 2004 கருணாவின் மறைவிடம் பற்றிய உண்மைகள் வெளிவந்தன கருணாவை விட்டு வெளியேறி புலிகளுடன் மீண்டும் இணைந்துகொண்ட நான்கு பெண் போராளித் தலைவர்களின் வாக்குமூலத்தின்படி கருணா கொழும்பில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது வெளிப்படையாகியிருக்கிறது. இதுவரை காலமும் கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், அவருக்குக் கீழிருந்த போராளிகளே அவரதும் ராணுவத்தினதும் சிநேகம்பற்றிக் கூறியிருப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் சமாதானம் இல்லையென்பது தெளிவாவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர். மட்டக்களப்பு பெண்கள் பிரிவின் தளபதி நிலவினி, மட்டக்களப்பு பெண்போராளிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் ப்ரேமினி, ஆட்டிலெறிப் படையணியின் மூத்த தளபதி லாவண்யா மற்றும் தீந்தமிழ் ஆகியோர் கருணாவுக்கெதிரான புலிகளின் நடவடிக்கையின்போது அவருடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்று, பின்னர் அவரைவிட்டு விலகி புலிகளுடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால், தாம் கருணாவிடமிருந்து எப்படித் தப்பிவந்தார்கள் என்பதுபற்றி அவர்கள் பேசவில்லை. பி பி சி தமிழ்ச்சேவைக்குப் பேட்டியளித்த நிலவினி, "ஆரம்பத்தில் நாம் எல்லோரும் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருந்தோம். பின்னர், கருணா தனியாக இன்னொரு இடத்திற்கு போய்விட்டார். கருணாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நாங்கள், எங்களை எமது பொற்றோருடன் இணைய அனுமதிக்குமாறு அவரைத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தோம். அதற்கு அவர் எம்மை எமது பெற்றோருடன் சேர்க்கும் வேலைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இதுபற்றி எம்மிடம் கூறுவதாகவும் சொல்லிவந்தார். ஆனால், அவர் உடனடியாக பதில் ஏதும் தராததால், நாம் கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்து மீண்டும் புலிகளுடன் இணைந்துகொண்டோம்" என்று கூறினார். அரசாங்கம் தொடர்ச்சியாக கருணாவுக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கூறுவதுபற்றிக் கேட்டபோது, " அவர்களால் அதனை இனிமேல் மறுக்கமுடியாது, ஏனென்றால் எங்களை கொழும்பில் மறைவிடத்தில் வைத்திருந்தது இலங்கையின் ராணுவம்தான், இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார். இதேவேளை, இப்பெண்போராளிகளின் வாக்குமூலம்பற்றி சிங்கள சேவையான சந்தேஷயவுக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சிரில் ஹேரத் அதனை முற்றாக மறுப்பதாகக் கூறினார். முடிந்தால் ஆதாரங்களை முன்வைக்கட்டும், நாம் விசாரிக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார். கருணாவைப் பயன்படுத்தி சமாதான நிலையினைக் குழப்பி, மோதல்ப்போக்கினை அரசு நாடுகிறது எனும் தளபதி ரமேஷின் கூற்றுப்பற்றிக் கேட்டபோது, " எமது அரசாங்கம் சமாதானத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கின்றது" என்று மட்டும் கூறினார். மேலும் ஊடகவியலாளர் தொப்பிகலக் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களில் இலங்கை ராணுவத்திற்கு பலத்த இழப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, "அது மிகைப்படுத்தப்பட்ட தகவல், ஏழு அல்லது 8 ராணுவத்தினரே கொல்லப்பட்டிருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
  16. சிறிய ஆனால் அழகிய நடனம் ஒன்று.....! 👍
  17. ஐயப்பமாரே எம் தெய்வங்களே
  18. உங்களின் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன். மறுப்பில்லை. இத்தொடரினை நான் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதனால், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவே விரும்புகிறேன். நன்றி.
  19. மரங்களை, எல்லாம் வெட்டி விட்டால்...நாங்கள் என்ன செய்ய?
  20. "தின்று கொழுத்தவனும் தின்னக் கொடுத்தவனும்"
  21. லோன் ஆச்சே.... எப்படி intrest டோட கொடுப்பது? 🤣
  22. ஓவியர் புகழேந்தியின் மகன்கள் சித்திரன், இலக்கியன்.
  23. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, சித்திரை 2004 தப்பியோடும் கருணாவால் கொல்லப்பட்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திய புலிகள் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் லெப் கேணல் நீலன் (சின்னத்தம்பி) தப்பியோடிய கருணாவால் 12 ஆம் திகதி கொல்லப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அறிவித்தனர். லெப் கேணல் எனும் தரம் பொதுவாக அனுபவமுள்ள போராளிகளுக்கே வழங்கப்பட்டு வரும் நிலையில், நீலன் புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார் என்று புலிகள் தெரிவித்திருக்கின்றனர். புலிகளின் அரசியற்துறையின் அறிக்கைப்படி மரணித்த நீலனின் திருவுடல் மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தாண்டியடி மாவீரர் மயானத்தில் விதைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. புலிகளின் அறிக்கைப்படி மார்ச் மாதம் முதலாம் திகதி கருணாவால் சிறைவைக்கப்பட்ட நீலன், சித்திரை 12 ஆம் திகதி மருதம் முகாமிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தான் தப்பியோடும் தறுவாயில் கருணா அவரைச் சுட்டுக் கொன்றதாக அறிவித்திருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் புலநாய்வுத்துறை போராளிகள் அனைவரையும் கலந்துரையாடல் ஒன்றிற்காக மீனகம் முகாமிற்கு வருமாறு கருணா அழைத்திருந்தார். இதன்படி, நீலனும் ஏனைய புலநாய்வுப் போராளிகளும் அங்கு சென்றிருந்தனர். அங்கு மற்றையவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட நீலன் கருணாவால் தனியாக விசாரிக்கப்பட்டதுடன், சிறையடைக்கப்பட்டார். சித்திரை 12 ஆம் திகதி தனது அடியாட்களைக் கொண்டு நீலனை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு இழுத்துவந்த கருணா அங்கு அவரைச் சுட்டுக் கொன்றார். கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நீலனின் உடல் போராளிகளால் கண்டெடுக்கப்பட்டது. நீலனுடன் சேர்த்துக் கருணா கொன்றுபோட்ட போராளிகள் மற்றும் அனுதாபியொருவரது பெயர் விபரங்கள் புலிகளால் வெளியிடப்பட்டது. அவை வருமாறு, 1. மேஜர் தமிழீழன் (தமிழ்) மரணித்த நாள் சித்திரை 4 2. கப்டன் மாவேந்தன் - மரணித்த நாள் சித்திரை 10, களுவங்கேணி 3. கப்டன் நம்பி - மரணித்த நாள் சித்திரை 10, வாகரை 4. லெப். வர்ணகீதன் (சபா) மரணித்த நாள் சித்திரை 10, களுவங்கேணி 5. புலிகளின் அனுதாபி மோகன் - கொல்லப்பட்ட நாள் சித்திரை 10, களுவங்கேணி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.