Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    13720
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    23926
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/21/21 in Posts

  1. எம்மவர்கள் இப்படியான கலைகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். நம்மூரிலும் பல நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிய மதிப்புக்கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. நல்ல இசைக்கான பரந்துபட்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு இல்லை என நினைக்கிறேன். ஒரு காரணம், நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்துவிடுகிறோம். கலைத்துறை சார்ந்தோர் பொதுவாகவே வேலைக்காகத் திண்டாடுபவர்கள் என்பது உண்மை தான். கர்நாடக இசை போன்ற பாரம்பரிய இசைக்கு மதிப்பு பெரிதாக இல்லை; மக்களின் ரசனையும் குறைந்துவிட்டது. இதனால் தான் கலைஞர்களுக்கான தேவை மற்றய துறைகளை விட மிக மிகக் குறைவு. இருந்தாலும், வேலைவாய்ப்புக்காக ஓடுவது என்பதை மட்டும் வாழ்வின் இலட்சியமாக் கொள்ளாது, இசை போன்ற நல்ல கலைகளையும் பயிலுதல், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலை நிகழ்வுகளில் பங்கு பெறுதல் இவை மூலம் நம்மவர்களும் தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். மிக முக்கியமான ஒன்று பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயதிலேயே இதற்காகத் தயார் பண்ணுவது; பல இந்தியர்கள் இதைச் செய்து தான் நல்ல பல இசைக் கலைஞர்களை உருவாக்குகிறார்கள். குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் அதை ஊக்குவித்து, நல்ல ஆசிரியர் ஒருவரிடம் முறையாகப் பயிற்றுவித்து, பிள்ளையும் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் இடைவிடாது பயின்று கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் அதுவும் வளர்ந்து பெரிய கலைஞனாகலாம். ஆனால் புலமைபரிசில் பரீட்சை, சா/த, உ/த பரீட்சை, பல்கலைக்கழகம், தொழில், திருமணம், குழந்தை பெறுதல் என முடிவில்லாத வாழ்க்கை ஓட்டத்தில் பலரின் கலையார்வம் குன்றுகுறது/ முடக்கப்படுகிறது/ முற்றிலும் மறக்கடிக்கப்படுகிறது. இந்தியர்களுக்குள்ள இன்னொரு அனுகூலம், இசைப்பரம்பரையில் காலம்காலமாக ஊறி வந்த குழந்தைக்கு சங்கீதஞானம் இயற்கையாகவே வந்துவிடுகிறது. எனவே இசைக்கல்வி மூலம் அதனை வளர்த்து மெருகூட்டுவது எளிது. கூடவே அவர்களின் வாழ்க்கை முறையோடு கலந்தது இசை; திருமண விழாக்களில் இசைக்கச்சேரி முக்கிய அம்சமாக இருக்கும்போதும், சுப தினங்களில் இசை மூலம் இறைவனை வழிபடும்போதும், மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இசை பெரிதாகக் கொண்டாடப்படும்போதும் அச்சூழலில் வாழும் குழந்தையும் இசையை நோக்கி இயல்பாக ஈர்க்கப்படுகிறது. அது இசையைப் பயில சமூகம் ஊக்குவிக்கிறது; அது இசை நிகழ்ச்சி வைக்கும்போது சமூகம் கொண்டாடுகிறது. இதனால் இசைக்கலைஞர்கள் பலர் இந்தியாவில் உருவாவதும், கொண்டாடப்படுவதும் அதிசயமல்ல. அத்துடன் இன்று வளர்ந்துவரும் / புதிய கலைஞர்கள் கைவசம் வேறு தொழிலையும் வைத்திருக்கின்றனர். பலர் பகுதி நேரகமாக இசை நிகழ்வுகளை வழங்குகின்றனர். எனவே நம்மவர்கள் இசை போன்ற கலைகளை மதித்துப், பரந்த அளவில் கொண்டாடினால், அவற்றைப் பயில்வது ஊக்குவிக்கப்பட்டால், கலைஞர்களுக்கான வாய்ப்புக்களும் பெருமளவில் பல்வேறு நிகழ்வுகளில் வழங்கப்பட்டால் நம்மிலும் நல்ல பல கலைஞர்கள் உலக அரங்கில் பிரகாசிக்கமுடியும். இன்றைய இயந்திர வாழ்வில் மனிதத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தக் கலைகள் மிகவும் உதவும் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே கலைகளை இயன்றால் பயில்க, ஆற்றுகை செய்க! இல்லாவிட்டால் ரசித்தலுடன், ஊக்கமும் தருக!
  2. அசத்தலான கணவாய் பிரட்டல் கறி. சைட்டிஷ்சுக்கு அந்தமாதிரி .......! 🐙
  3. இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா? அல்லது... ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?
  4. கணவாய் கறியை, பார்க்க ஆசையாய்த்தான் இருக்கு.... ஆனால், கணவாய் துப்பரவாக்கி வெட்ட... இரண்டு மணித்தியாலத்துக்கு மேலை எடுக்குது. 😁
  5. கண்ணாடி கன்னம் காண்பவர் உள்ளம் சிங்கார வெறி கொள்ளும்.....! 😁
  6. கொக்கட்டிச் சோலை வந்தவனே தேவா! நீ அமர்ந்து அருள் மழை பொழியும்..
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எஜமானே என்றழைத்தால் அருள்வீர் . ஆலமெல்லாம் படைத்த அல்லாஹு அல்லாஹ்..
  8. கழுகு மலைப் பத்து இது கருத்துடைய சொத்து தொழுவதுக்கு முத்து இது கந்தனின் சித்து.. கதிர்காம் யாத்திரிகர்கள் இதை கைத்தடியாய் பிடித்து கந்தனருள் பெற்றதுதான் ஆயிரம்... இது -------த்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் இதனை பெருமையுடன் அளிக்கை செய்கின்றனர். பாசிக்குடா மாரி அம்மன் காவியப்பாடல்
  9. கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் உள்ளத்தாகம் உந்தன் மீது கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் - மான்கள்... 1. காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2 உயிரைத் தந்திடும் கருவினிலே அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2 குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும் கதையின் நாயகன் நான் இன்று 2. பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2 காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2 சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால் அழகிய மணிமாலை நானாவேன் உன் திருயாழில்
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை 2008 "பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, மார்கழி 2007 பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி அரசுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொள்ளச் செய்த கொலைப்படைக் கூலி பிள்ளையான் தமிழினக் கொலையாளியும், அவனது வேட்டை நாயும் இலங்கை ராணுவத்தின் கொலைப்படையாகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் கதிரவெளி மற்றும் வாகரைப் பகுதிகளில் இருந்து ராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த மக்களை ஆயுதமுனையில் மிரட்டி மட்டக்களப்பு நகருக்கு இழுத்துவந்து அரசுக்கும் ராணுவத்திற்கும் ஆதரவான பேரணியில் கலந்துகொள்ளச் செய்ததாக அம்மக்கள் தெரிவித்திருக்கின்றனர். கிழக்கின் கொலைக்குழு - பிள்ளையான் - கருணா - ஜெயம் பொலொன்னறுவை, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்குச் சொந்தமான பஸ்களில் பலவந்தமாக ஏற்றி அடைக்கப்பட்ட நூற்றுகணக்கான மக்கள் பிள்ளையான் கொலைப்படையினருடன் செயற்பட்ட விசேட அதிரடிப்படை மற்றும் பொலீஸாரினால் மட்டக்களப்பு நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதேவேளை மட்டக்களப்பு மக்கள் அமைப்புக்களின் சம்மேளனத்தைத் தொடர்புகொண்ட பிள்ளையான், மனிதாபிமான தேவைகளை அரசு வழங்கவேண்டும் என்று கோரும் போராட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கிறோம், ஆகவே உங்கள் அமைப்புக்கள அனைவரையும் மட்டக்களப்பு நிகழ்விற்கு வரச் சொல்லுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. வாகரை மற்றும் கதிரவெளி ஆகிய பகுதிகளில் அரச ராணுவ நடவடிக்கயினால் இடம்பெயர்ந்துவாழும் மக்களுக்கு போதிய நிவாரணங்களை அரசு வழங்கமறுத்துவருவதனால், இதுபற்றியே பிள்ளையான் போராடக் கூப்பிடுவதாக எண்ணிய பல தமிழ் அமைப்புக்களும் இப்பேரணியில் கலதுகொள்வதற்காக வருகை தந்த நிலையில், இறுதிநேரத்தில் அம்மக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கு சார்பான பதாதைகள், சுலோகங்களால் அப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் குழம்பிப் போய் நின்றதாகவும் தெரிகிறது. இப்பேரணியில் கட்டாயப்படுத்திப் பங்குகொள்ள வற்புறுத்தப்பட்ட அரசசாற்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் தம்மை அரசுக்கெதிரான போராட்டம் ஒன்றிற்கு வரச்சொல்லியே அழைத்துவந்ததாகவும், பின்னர் இறுதிநேரத்தில் பிள்ளையான கொலைக்குழு தம்மை அரசுக்கும் ராணுவத்திற்கும் சார்பான சுலோகங்களை எழுப்புமாறு கட்டாயப்படுத்தியதாகவும், மறுத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர். மட்டக்களப்பு நகரில் இருந்து மாவட்ட செயலகம் நோக்கி இழுத்துச்செல்லப்பட்ட பேரணியில் இருந்த மக்களிடம் "பொதுமக்கள்" எனுன் பெயரில் பிள்ளையானினால் தயாரிக்கப்பட்ட "தொப்பிகல பகுதியினை புலிகளிடம் இருந்து மீட்டதற்காக வீரம் மிக்க ராணுவத்திற்கும், எமது ஜனாதிபதிக்கும் எமது உளமார்ந்த நன்றியையும், பாராட்டுதலினையும் தெரிவிக்கிறோம்" என்கிற தலைப்பில் மகஜர் ஒன்று வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு செயலாளரிடம் வழங்கப்பட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், அரசினால் வாகரை யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணத்தை கூட்டமைப்பு உறுப்பினர்களே தடுத்துவருவதாகவும் இம்மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. பிள்ளையான் கொலைக்கும்பலின் பிரதான கொலைஞர்களான ஜெயம் மற்றும் வைரவன் ஆகிய இருவரின் தலைமையில் இழுத்துச் செல்லப்பட்ட இப்பேரணியில் கலந்துகொண்ட மக்களிடம் புலிகளுக்கெதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கெதிராகவும் சுலோகங்களை உரக்கக் கூவுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மக்களும், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முறையிட்டிருக்கின்றனர். பல பகுதிகளிலிருந்து பஸ்களில் இழுத்துவரப்பட்ட பொதுமக்களை கொழும்பு வீதி, திருகோணமலை வீதி, கல்லடியூடாக கல்முனை வீதி ஆகிய வழிகளில் இழுத்துவந்த இக்கொலைக் கும்பல் இறுதியாக மட்டக்களப்பு நகர் நோக்கி பல கிலோமீட்டர்கள் நடத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  12. நீங்கள் காலால் அடித்தாலும் திருப்பி கரண்டியால் அடிக்காது.....! 😂
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13 கார்த்திகை 2006 கருணா துணைப்படையினருக்காக சிறுவர்களை ராணுவம் கடத்துகிறது - ஐ நா. கருணா துணைப்படை எனப்படும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கூலிப்படைக்கு சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாய பயிற்சியளிப்பதற்கு இலங்கை ராணுவம் உதவிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிருவர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களைக் கண்காணிக்கும் அமைப்பின் சிறப்பு ஆலோசகரான அலன் ரொக் எனப்படும் அதிகாரியே இந்த தகவலை அண்மையில் தான் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின்பொழுது ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். "இலங்கை ராணுவம் கருணா துணைப்படைக்கு சிறுவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்பதற்கான நேரடியானதும், மறைமுகமானதுமான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். கிராமம் கிராமமாக சிறுவர்களைச் சுற்றிவளைத்து இழுத்துச் செல்லும் ராணுவம் அவர்களைக் கருணா குழுவிடம் ஒப்படைக்கிறது. கருணா துணைப்படைக்கும் ராணுவத்துக்குமான தொடர்பினை எனது 10 நாள் ஆய்வுகளின்போது என்னால் காணமுடிந்தது. கருணா துணைப்படையில் இணைப்பதற்காக கிழக்கின் பல கிராமங்களில் இருந்து 13 முதல் 14 வயது சிறுவர்களை இலங்கை ராணுவம் சுற்றிவளைத்துப் பிடித்து கருணா குழுவினரிடம் ஒப்படைக்கிறது. இதற்கான நேரடியான, கண்ணால் கண்ட சாட்சியசங்களை நாம் சேகரித்து வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார். இலங்கை அரசாங்கத்தின்மேல் ஐ நா அதிகாரியொருவர் இவ்வாறான வெளிப்படையான குற்றச்சாட்டினை முன்வைப்பது இதுவே முதன்முறையாகும். புலிகள் மீது சிறுவர்களை இணைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டினை இதே அதிகாரிகள் முன்வைத்து வந்தபோதிலும், கடந்த மாதத்திலிருந்து 17 வயதிற்குக் குறைந்தவர்களை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்கிற புலிகளின் நிலைப்பாட்டினை இவ்வதிகாரி வரவேற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21 கார்த்திகை 2006 திங்கட்கிழமைக்கு முன்னர் உங்கள் பாராளுமன்ற பதவிகளை ராஜினாமாச் செய்யுங்கள், இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் - கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா பகிரங்க கொலை எச்சரிக்கை கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தர் குணானன் எனபவர் கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள நேரடி கொலை அச்சுருத்தலில், திங்கட்கிழமைக்கு முன்னதாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம் என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு நகரில் ராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படும் இவர் வெளிப்படையாகவே அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள், செயற்பாட்டாளர்களுக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டிவருவதுடன் வெளிப்படையான அச்சுருத்தல்களையும் விடுத்து வருகிறார். இவரது அச்சுருத்தலினையடுத்து இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ள கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதுபற்றி மேலதிகத் தகவல்களை வழங்கியிருக்கிறார்கள். திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில் தமக்கு கருணாவினால் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க கொலை அச்சுருத்தல்பற்றி தெரிவிக்கும்போது, கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால், இதுவரை கொல்லப்பட்ட குறைந்தது 7 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போல் நீங்கள் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அச்சுருத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். கடிதத்தின் தமிழாக்கம் கீழே, கெளரவ சபாநாயகர் அவர்களுக்கு, கிழக்கின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணாவால் விடுக்கப்பட்டிருக்கும் கொலைப்பயமுருத்தல் கடந்த ஞாயிறு, கார்த்திகை 19 அன்று மட்டக்களப்பு அம்பாறை, திருமலை மாவட்டங்களின் தமிழரசுக் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தரான குனானன் என்பவரிடமிருந்து தொலைபேசிமூலமான கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் நாம் எமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால் நிச்சயம் கொல்லப்படுவீர்கள் என்று அவர் எமக்கு தெரிவித்திருக்கிறார். தன்னை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் மட்டக்களப்பு அரசியல்த்துறைப் பணியகத்திலிருந்து பேசும் குணானன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலகவில்லையென்றால், இறந்துபோன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் "மாமனிதர்" விருதிற்கு உரித்துடையவர்கள் ஆவீர்கள் என்று மிரட்டினார். எமது தலைவரான கருணா அம்மாணின் கட்டளையின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் எம்மிடம் கூறினார். இதுவரை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளை அடிப்படியாகக் கொண்டு, எம்மீது தற்போது விடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கொலை எச்சரிக்கையினை நீங்கள் மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசேப் பராரசிங்கமும், நடராஜா ரவிராஜும் இதே குழுவினரால் எம்மைப்போன்றே கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நாட்களில் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவருகிறோம். எம்மீதான இந்த கொலை எச்சரிக்கைகள் எமது மக்களுக்கான சேவையினை நாம் திறம்படச் செய்வதைத் தடுத்துக்கும் நோக்கிலேயே விடுக்கப்படுகின்றன என்பதனை தாங்கள் அறிவீர்கள். ஆகவே இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் நலனில் அக்கறையும், பொறுப்பும் கொண்ட நீங்கள் எம்மீது விடுக்கப்பட்டிருக்கும் இக்கொலை எச்சரிக்கையினை கடந்து எமது மக்களுக்கு நாம் சேவை செய்வதற்கு ஏதுவாக உங்கள் அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொள்கிறோம். நன்றி. த. கனகசபை (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிரமன் (மட்டக்களப்பு), ச. ஜெயநந்தமூர்த்தி (மட்டக்களப்பு), ப. அரியநேந்திரன் (மட்டக்களப்பு), க. பத்மநாதன் (அம்பாறை), ச. சந்திரநேரு (தேசியப்பட்டியல்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.