Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88006
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    7
    Points
    35675
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/20/21 in Posts

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்தோர்: ~27,000 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.) எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும். (இதை நான் செய்வதற்கான முக்கிய காரணம், வயிற்றுப் பிழைப்பிற்காக மாவீரர் எண்ணிக்கையினை நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் எனக் கூவித் திரிவோர் கொஞ்சமேனும் திருந்தட்டும் என்பதற்காகவே ஆகும். ) 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38) 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது' 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:- "2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்" 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.) 'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' (மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்) இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள் சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள் ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள் --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள் 1989 நவம்பர் 20 வரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் - 640 போராளிகள் | ஆதாரம்: தலைவரின் 1989 ஆம் ஆண்டு தேசிய மாவீரர் நாள் உரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் மொத்தம் - 651 போராளிகள் | ஆதாரம்: மாவீரர் பட்டியல் மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம். இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அலுவல்சார் வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே. நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம். 2009 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:- சரி இனி நாம் கணக்கெடுப்போம். சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால், (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு) - (புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை) 5953-2,239 = 3,714 2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714 22,390+3,7149 = 26,104 சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக, 26,104+358 = 26,462 ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்.. (சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.) இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம். அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம். இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி: இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும். இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும். இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம். மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது, முன்னிருந்து பின்னாக... முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160 (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை) இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276 மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது. ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கின் அடிப்படையில் கணக்கப்போட்டுப் பார்த்தால், மார்ச் 8 இலிருந்து ஏப்ரல் 20 வரை இதே அளவானோர் வீரச்சாவடைந்திருப்பராயின் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இதே அளவில் போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் - நவம்பர் 20 முதல் மார்ச் 8 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 2,009- 2,260 ஆகும். இதே அளவில் ஏப்ரல் 20 இலிருந்து மே 16 வரை வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் 484 - 544 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். இந்த ஐந்து தோராய மதிப்பீட்டினை கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 3,293 - 3704 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர், நவம்பர் 20 முதல் மே 16 வரை. எனது இந்தத் தோராயக் கணக்கிற்கு வலுச்சேர்க்கும் விதமாக 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி ஆகுதியான வான்கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் வன்னிவாழ் மக்களிற்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருந்த ஒரு வரியினை ஆதாரமாக எடுத்தாள்கிறேன். வரி பின்வருமாறு: ".................. அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். ......" எனது தோராயகக் கணக்கான 43 நாட்களில் வீரச்சாவடைந்தோர் 800- 900 பேர் என்பதைக் கொண்டு நவம்பர் 20 முதல் பெப்ரவரி 18 வரையான 92 நாட்களில் வீரச்சாவடைந்தோர் தொகை 1712. கிட்டத்தட்ட இதே அளவான தொகையையே இவ்வான்கரும்புலியும் (22,390- 24,000 = 1610) குறித்துள்ளார். நவம்பர் 20 முதல் இவர் இக்கடிதத்தை எழுதிய திகதியாக நான் கருதும் பெப் 18ம் திகதிக்கு முன்னர் வரைக்கும் ஏறக்குறைய 24,000 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் எனக் கருதும் பட்சத்தில், எனது தோராயக் கணக்கும் இதே அளவான போராளிகள் இறந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மே 17 காலை ரட்ணம் மாஸ்டர் அவர்களுடன் சென்ற 250 வரையான போராளிகளில் "தோராயமாக" 80- 100 வரையானோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் என்றும் அச்சமரில் பங்குபற்றிய போராளிகளின் வாக்குமூலம் அறிகிறேன். அத்துடன் கட்டாங்கடைசியில் (18 அதிகாலை - 19 காலை) 700 வரையான போராளிகள் தாம் கொண்ட கொள்கையின் உறுதிப்பாட்டால் இறுதிவரை நின்று களமாடி வீரச்சாவடைந்தனர் என்று சிங்களத் தகவல்கள் மூலம் அறிகிறேன். தமிழர் தரப்பு மூலம் அறியப்பட்ட உச்ச எண்ணிக்கையினைக் கொண்டு மொத்த மாவீரர் தொகையினை கணக்கிட்டால், 22,390 + 3,704 + 700 + 100 = 26,894 இதை நாம் முழு எண்ணாக எடுக்கும் போது வருவது 27,000. இவ்வெண்ணிக்கையானது சிங்களவரின் கணக்கின் முழு எண்ணோடு பொருந்தி வருவதைக் காண்க. இதையே தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இது என்னுடைய துணிபு மட்டுமே. இதனுள் ஆயுதங்கள் மௌனித்து சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். "எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி - தமிழ் ஈழம் மீட்பது உறுதி 😢" - மாவீரர் நாள் பாடல்களில் ஒன்று உசாத்துணை: Tamilnet.com https://anyflip.com/zmfgt/pzff https://www.deseret.com/2000/6/6/19560902/censors-stifling-reports-on-war-in-sri-lanka https://www.defence.lk/index.php/Article/view_article/862 https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf https://tamilnation.org/ ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  2. தமிழரின் மீது வன்முறைகளை நடத்துவதன் மூலம், அவர்களின் தாயகத்தை கபளீகரம் செய்யவோ அல்லது தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கவோ முடியுமானால், சாதாரண சிங்களவர்கள் அதனைச் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் இயல்பாகவே செய்யக்கூடியவர்கள் என்று பொதுப்படையாகக் கூறுவது கடிணமானது. மேலும், தமிழர் மீதான வன்முறைகளை நினைத்த மாத்திரத்தில் அவர்களால் செய்யமுடியாது. இதுவரை வரலாற்றில் செய்யப்பட்ட தமிழர்மீதான வன்முறைகள் நன்கு திட்டமிட்டே, அரச ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே, தமிழர் மீதான இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகள் என்று அரசு தற்போது கூறுவது தனது அரசியல் ஆதாயத்திற்காகவே அன்றி வேறில்லை. அத்துடன் இன்றுள்ள நிலையில், தமிழர் மீது 83' பாணியிலான ஒருங்கமைக்கப்பட்ட பாரிய வன்முறைகளைத் தெற்கில் உள்ளவர்கள் செய்வதென்பது சற்றுக்கடிணமானது, மேலும் இந்த வன்முறைகள் சர்வதேச அளவில் சாதகமாகப் பார்க்கப்படப் போவதில்லையென்பதும் தெளிவு. ஆகவே இவ்வாறான இனரீதியிலான வன்முறைகளை நாம் நடக்க அனுமதிக்கமாட்டோம், நாம் சமாதானத்தில் அக்கறைகொண்டவர்கள் என்று காண்பிப்பதற்காகவே மகிந்தவின் அரசு தொடர்ச்சியாக இந்த "பழிவாங்கும் வன்முறைகள்" பற்றிப் பூச்சாண்டி காட்டி வருகிறது. சரி, தமிழர்கள் மீதான சிங்களவரின் இனரீதியிலான் பழிவாங்கும் வன்முறைகளால் புலிகளுக்கு என்ன லாபமிருக்கிறது? முதலில், இப்படியான வன்முறைகளைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சர்வதேசத்திலோ, உள்ளூரிலோ எந்த அனுதாபமும் கிடைக்கப்போவதில்லை. கொல்லப்படும் அல்லது பாதிக்கப்படும் மக்களுக்கான அனுதாபம் கிடைக்குமேயன்றி, வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்கள் மீதான கண்டனங்களும், வெறுப்பும் மட்டுமே அதிகரிக்கும். 1983 ஆம் ஆண்டின் வன்முறைகள் இத்தாக்குதலிலிருந்து முற்றாக வேறுபட்டவை. அன்று புலிகள் தாக்குதல் நடத்தியது இலங்கை அரச படைகள் மீதேயன்றி, சாதாரண சிங்களப் பொதுமக்கள் மீது அல்ல. ஆகவே, அன்று தமிழர்கள் மீது உடனடியாக நடத்தப்பட்ட அரச ஆதரவிலான வன்முறைகளையடுத்து தமிழ்மக்கள் மீது சர்வதேச அனுதாபமும் கவனமும் திரும்பியதுடன், புலிகள் தமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பையும், அரச அடக்குமுறையினையும் எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராளிகள் எனும் சர்வதேச தகுதியினையும் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே, 1983 ஆம் ஆண்டு இன வன்முறைகள் தமிழர்கள் மீது மட்டுமல்லாமல், புலிகள் மீதும் அனுதாபத்தினைப் பெற்றுக்கொடுத்திருந்தது. ஆனால், பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் வேறானது. சாதாரண பொதுமக்களும் சிறுவர்களும் வேண்டுமென்றே இலக்குவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, இதனைச் செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களது குறிக்கோள்கள் எதுவாக இருப்பினும் அவர்கள் மீது எவரும் அனுதாபம் கொள்ளப்போவதில்லை. ஆகவே, இத்தாக்குதலைப் புலிகள் நடத்தியிருந்தால், இதன்மூலம் அவர்கள் எதையுமே அடையப்போவதில்லை, சர்வதேச கண்டனங்களையும், வெறுப்பையும் அன்றி. மேலும், சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்படுதலும், வெறுப்பும், தூற்றுதல்களையுமே புலிகள் பெற்றுக்கொள்ளவேண்டியிருந்திருக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கை தமிழர்களுக்கான விடுதலையாகவும் அவர்களுக்கான தனிநாடாகவும் இருந்தாலும் கூட.
  3. தங்கள் கருத்திற்கு நன்றி ஐயனே. நான் இதை எழுதியதன் காரணங்களில் ஒன்று இந்த 50,000 என்ற கருத்தினை அகற்ற வேண்டும் என்பதுதான். ஏனெனில் அது மிகவும் பிழையான ஒன்றாகும்.
  4. கருத்து என்று எழுத எதுவுமில்லை நன்னி. உங்கள் கணக்கு சரியாகவே படுகிறது. நானும் முன்பு 50,000 வரை இருக்கும் என்றே எண்ணி இருந்தேன். அப்படி இல்லை என்பது ஒரு சிறு ஆறுதல்🙏🏾.
  5. படம் ; கார்த்திகை தீபம்(1965) இசை: சுதர்சனம் வரிகள் : ஆலங்குடி சோமு பாடியவர் : P சுசீலா
  6. ஸ்ரீ தேவி & பிரபுதேவா ..........! 👌
  7. ஆனால், புலிகளே பேரூந்துமீது தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டு, இது ஒரு வலிந்து போருக்கு இழுக்கும் புலிகளின் உத்தியென்றும் கூறிக்கொண்டு, இந்த வம்பிற்கிழுக்கும் புலிகளின் செயலுக்குப் பதிலடியாக வன்னிமீது கடுமையான வான் தாக்குதலக்களை நடத்தத் தொடங்கியிருப்பதோடு, இது ஒரு போர் நடவடிக்கை இல்லையென்றும், புலிகளின் உசுப்பேற்றலுக்கான பதிலடியே இதுவென்றும், இந்த வான் தாக்குதல்களால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கோ, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கோ எவ்வித தடங்கலும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கிறது. சிலவேளை, வானிலிருந்து குண்டுகளை வீசுவதன் மூலம் சமாதானத்தை அடைந்துவிடலாம் என்று அரசு கருதுவதுபோலத் தெரிகிறது. அல்லது, வானிலிருந்து மலர் தூவுவதற்காகக் எடுத்துச் சென்ற பொதிகளில் எவரோ விசமத்தனத்திற்கு குண்டுகளை மாற்றி வைத்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. புலிகளின் பகுதிகள் மீது உயரப் பறந்து குண்டு வீச்சில் ஈடுபடுவதன் மூலம் தமிழர் தாயகத்திற்கு வெளியே, தொலைவில் புலிகளால் நடத்தப்படுவதாக அரசு கூறும் கண்ணிவெடித் தாக்குதல்களை நிருத்துவது சாத்தியமா? யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை அப்பட்டமாக மீறிக்கொண்டு, வன்னிமீது வான் தாக்குதல்களை தொடுத்து , தமது நடவடிக்கை யுத்த நிறுத்தத்தைப் பாதிக்காதென்றும், சமாதான முயற்சிகளில் தமது அரசாங்கம் தொடர்ந்தும் இதயசுத்தியுடன் செயற்பட்டுவருவதாகவும் கூறும் மகிந்த, வன்னி மீதான தாக்குதல்கள் வெறும் பதிலடி நடவடிக்கைகள் மட்டுமே என்றும் கூறியிருக்கிறார். மகிந்தவின் கூற்றினை வழிமொழிந்த பாதுகாப்புச் சபைப் பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல , " யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மிகவும் உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறோம், தேவைப்பட்டால் அதனை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடத் தயாராக இருக்கிறது" என்று தனது அரசாங்கத்தின் சமாதானத்தின் மீதான பற்றுதலை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். நடைமுறையிலிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மேம்படுத்தப்போவதாக ரம்புக்வல்ல கூறுவது உண்மையென்றால், இனிவரும் காலங்களில் "புலிகளின் தாக்குதல்கள்" என்று அரசால் குற்றஞ்சாட்டப்படும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் பதிலடியாக தமிழர் தாயகம் மீது அரசு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திக்கொண்டு அவை புலிகளுக்கான வெறும் "பதிலடிகள்" மாத்திரமே என்றும், இதனால் சமாதான ஒப்பந்தம் பாதிப்படையாது என்றும் கூறப்போகிறது. எது எவ்வாறு இருந்தாலும், கெப்பிட்டிக்கொல்லாவைப் பேரூந்து மீதான தாக்குதலை புலிகள் மீதான வான் தாக்குதல்களை ஆரம்பிக்கவும், தொடரவும் ஒரு சந்தர்ப்பமாக பாவித்திருக்கும் அரசாங்கம், சர்வதேசத்தின் சில நாடுகளின் அனுமதியுடன் தமிழர் தாயகம் மீது "பதிலடி" எனும் பெயரில் தனது முற்றான யுத்தத்தினை ஏவிவிடும் நோக்கத்திலும் வெற்றிகண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
  8. புலிகளால் சிங்களவர்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்படுகிறார்கள் எனும் மாயை அரசு இங்கே குறிப்பிடும் சிங்களவர்கள் மீதான புலிகளின் இனச்சுத்திகரிப்புச் சம்பவம் இடம்பெற்ற கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியென்பது தமிழரின் தாயகம் என்று அவர்கள் கோரும் பகுதிக்கு வெளியிலேயே அமைந்துள்ளது. ஆகவே, பேரூந்து மீதான தாக்குதல் சம்பவம் இனச்சுத்திகரிப்பின் அடிப்படையிலானது எனும் புனைவு அர்த்தமற்றதாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், புலிகள் தமது போராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல என்று தொடர்ச்சியாகக் கூறிவருவதுடன் தமிழர் தாயகத்தின் எல்லைகளுக்குள் அவர்களுக்கான சுயநிர்ணயத்திற்கான போராட்டமே அதுவென்றும் கூறிவருகிறார்கள். இத்தாக்குதல் மூலம் அரசை புலிகள் பணியவைக்க முனைகிறார்கள் எனும் புனைவு இத்தாக்குதலின்பின்னர் பல நடுநிலையாளர்கள் வெளியிட்ட கருத்துக்களில் புலிகள் இத்தாக்குதலினைச் செய்திருக்க வாய்ப்பில்லையென்பது தெரிகிறது. அதாவது, இவ்வகையான அப்பாவிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலின் மூலம் தமக்கு ஏற்படப்போகும் களங்கம் தொடர்பாக புலிகள் நன்கு தெரிந்தே வைத்திருப்பதால், இவ்வாறான தாக்குதல் ஒன்றினை அவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லையென்று இவர்கள் கூறுகிறார்கள். புலிகள் இத்தாக்குதலினை நடத்தியிருந்தால், அவர்கள் மீது சர்வதேசத்தின் முழுக் கண்டனங்களும் வந்து குவிவதோடு, இத்தனை காலமும் அவர்கள் சம்பாதித்து வைத்த நற்பெயரையும் அது வெகுவாகப் பாதித்துவிடும் என்பதும் அவர்கள் அறியாதது அல்ல. அரசை நிர்ப்பந்திகவே புலிகள் சிங்கள அப்பாவிகளைக் கொன்றார்கள் என்றால், சர்வதேசமோ அல்லது சிங்கள மக்களோ தொடுக்கும் விமர்சனங்களை விட, தமிழர்களே புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் சாத்தியமும் இருக்கின்றது. அரசை நிர்ப்பந்தித்து பணியவைக்கவே புலிகள் இத்தாக்குதலை நடத்தியிருந்தால், இதனால் அவர்கள் எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதோடு, இருக்கும் அனைத்து நன்முயற்சிகளையும் இழப்பார்கள் என்பது உண்மை. ஆகவே இந்த பணியவைக்கும் நிர்ப்பந்த புனைவும் பொய்யென்றாகிவிடுகிறது. அப்படியானால், சமாதானப் பணியகத்தின் ஜெஹான் பெரேராவோ அல்லது அவர்போன்ற சிங்கள இனவாதிகளோ செய்வது இச்சந்தர்ப்பத்தையும் புலிகளை கொடூரமான பயங்கரவாதிகள் என்று பிரச்சாரப்படுத்தத்தான் என்பது தெளிவு. அத்துடன், இத்தாக்குதலுக்குப் பின் வன்னிமீது தொடர்ச்சியாக வாந்தாக்குதலை நடத்திவரும் அரசு, புலிகளின் நிர்ப்பந்தத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை என்று தெளிவாகக் கூறியபின்னர் "அரசை நிர்ப்பந்திக்கவே புலிகள் தாக்குதலை நடத்தினார்கள்" என்பது பொருளற்றுப் போய்விடுகிறது. ஆகவே, எதற்கும் பிரியோசனப்படாத, கடுமையான சர்வதேச கண்டனங்களை மட்டுமே கொண்டுவரக்கூடிய இத்தாக்குதலை புலிகள் செய்யவேண்டிய தேவை என்ன? ஆனால், இத்தாக்குதல் மூலம் அரசு தனக்குத் தேவையான அனைத்தையுமே சாதித்துக் கொண்டது. அதாவது தாக்குதல் நடந்தவுடனேயே அது புலிகளால்த்தான் நடத்தப்பட்டதாக அடித்துக் கூறிய அரசு, தனது பிரச்சார வண்டியில் சர்வதேசத்தின் சில நாடுகளையும், புலியெதிர்ப்பாளர்களையும் ஏற்றிக்கொண்டது. முடிவாக, இத்தாக்குதல் மூலம் நண்மை அடைந்த ஒரு தரப்பு இருக்குமென்றால் அது நிச்சயமாக இலங்கை அரசே ஒழிய வேறு எவரும் இல்லை என்பது தெளிவு. அரசை வலிந்து போருக்குள் இழுக்கும் உத்தியே இத்தாக்குதல் எனும் புனைவு இத்தாக்குதல் அரசை போர் ஒன்றிற்குள் வலிந்து இழுக்கும் ஒரு முயற்சியே என்று கூறிவரும் அரசதரப்பு முக்கியஸ்த்தர்கள் அல்லது சிங்கள இனவாதிகளின் கூற்றின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். அதாவது போரை ஆரம்பித்தலுக்கும், போரிற்குள் உள்வாங்கப்படுவதற்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கிறது. போரினை ஆரம்பிக்கும் ஒரு தரப்பினை சர்வதேச சமூகமும், அமைப்புக்களும் குற்றவாளிகளாகப் பார்க்கும்போது, தம்மை போர் ஒன்றிற்குள் வலிந்து இழுத்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டு, பழிவாங்கும் நடவடிக்கைகளாக எதிரிகளின் பகுதி மீது கொடூரமான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதை சர்வதேசம் நியாயமாகப் பார்ப்பதுமட்டுமல்லாமல், அது ஒரு போர்நடவடிக்கை என்று கருதப்போவதில்லை. சிங்கள அரசு செய்வது இதைத்தான். அதாவது இத்தாக்குதல் மூலம், புலிகள் தம்மைப் போருக்கு அழைத்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டே புலிகள் மீதான நேரடியான தாக்குதல்களை அது இன்று நடத்தத் தொடங்கியிருக்கிறது. அரசைப் பொறுத்தவரை இந்த வான் தாக்குதல்களோ அல்லது புலிகள் மீதான வேறு எந்தத் தாக்குதல்களோ வேறு வழிகள் இல்லாமையினால் நடத்தப்படுகின்றனவே அன்றி, தாம் போரினை ஆரம்பிக்கவில்லை என்று சர்வதேசத்திற்குக் காட்டிவருகிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், இத்தாக்குதல் மூலம் புலிகளே போரினை ஆரம்பித்திருப்பதாக அரசு கூறத்தொடங்கியிருக்கிறது. இங்கு அரசின் சமாதானச் செயலகத்தின் தலைவர் பாலித கொஹோண கூறியதையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம்." புலிகள் எம்மை யுத்தம் ஒன்றிற்குள் இழுத்துவிடுவதற்கான எவ்வாறான முயற்சிகளை எடுத்தாலும்கூட, போரினை முதலில் ஆரம்பிப்பது நாமாக இருக்கப்போவதில்லை". ஆக, இவர் சொல்வதுகூட, போரினை ஆரம்பிப்பதற்கும், போரிற்குள் இழுத்துவிடப்பட்டு பின்னர் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்துவதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அரசு இங்கே செய்வது இத்தாக்குதலினைப் பாவித்து போரினை ஆரம்பிப்பதுதான். ஆனால், தாமே ஆரம்பித்த போரினை, புலிகளின் தூண்டுதலினாலேயே அது ஆரம்பிக்கப்பட்டதென்றும், தாம் செய்வது போர் அல்ல , மாறாக புலிகளுக்கான தண்டனையே என்றும் காரணம் கூறுகிறது. இதில் வேடிக்க என்னவென்றால், போரினை ஆரம்பிக்கும் நோக்கம் புலிகளுக்கிருந்தால், அதனை நிச்சயம் அவர்கள் நேராக செய்திருப்பார்கள், 64 அப்பாவிகளைக் கொன்று சர்வதேச கண்டனங்களை சுமந்துகொண்டு ஆரம்பிக்கவேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அரச ராணுவம் மீது நேரடியாகவே தாக்குதல் நடத்தும் வல்லமை புலிகளுக்கு இருக்கிறது என்பது தெரியாத விடயமல்ல. ஆகவே, அரசின் இந்த "வலிந்த போருக்கு அழைத்தல்" எனும் புனைவும் அர்த்தமற்றதாகிவிடுகிறது.
  9. மிருகாபிமானம் உள்ள மனிதர்களால்தான் உலகம் அழகாகின்றது......! 🌹
  10. சர்வதேசத்திற்கும் அரசு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. அதாவது, சிங்கள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம், சிங்களவர்களைக் கோபப்படுத்தி, தமிழர்கள் மீது இனரீதியான பழிவாங்கல் தாக்குதல்களை நடத்தி, தமது தனிநாட்டிற்கான கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதே புலிகளின் நோக்கம். ஆனால், சிங்களவர்களைச் சாந்தப்படுத்தி, அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாவண்ணம் அவர்களை அமைதிப்படுத்தி, சமாதானத்தின் மகானான மகிந்தவும் அவரது அரசும் இப்பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று நிரந்தர சமாதானம் இந்நாட்டில் மலர அயராது உழைக்கிறார்கள் என்பதுதான். அதேவேளை அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தின் பேச்சாளரான ஷோன் மக்கோர்மக் இத்தாக்குதல் பற்றிப் பேசும்போது, "இது நிச்சயமாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்தான். புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல் உத்திகள் எல்லாமே இந்தத் தாக்குதலின்போது பாவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்று கூறிக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளைக் கடுமையாகப் பாதிக்கப்போகும் இத்தாக்குதல்கள் உடனடியாக அவர்களால் நிறுத்தப்பட்டு, உடனடியாக தமது வன்முறைகளை அவர்கள் கைவிட்டு, இலங்கை அரசுடன் நேரடியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் " என்று கூறியிருந்தார். அதுசரி, இத்தாக்குதலினைப் புலிகள்தான் நடத்தியதாக இவர் எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுகிறார்? இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தினார்கள் என்பதை இலங்கை அரசாங்கத்தைத் தவிர இவருக்கு வேறு யார் சொல்லியிருக்கக் கூடும்? ஆகவே, அரசின் அறிக்கையினை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மகிந்தவின் சமாதானத்திற்கான முயற்சிகளை முழு மனதோடு வரவேற்பதாகவும் கூறியிருக்கும் அமெரிக்கா, வன்னி மீதான அரச விமானப்படையின் கொடூரமான குண்டுவீச்சுக்கள் பேச்சுவார்த்தையினைப் பாதிக்காதெனும் நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய் செய்தி என்னவென்றால், இலங்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அக்கறைகள், தமது நலன் தொடர்பான செயற்பாடுகள், தமது திட்டங்கள் ஆகியனவும் மகிந்த தலைமையிலான சிங்களவர்களின் அக்கறைகளும், நலன்களும் ஒன்றில் ஒத்துப்போகலாம் அல்லது வேறுபடலாம், அல்லது தமிழர்களைப் பாவித்து தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அது முயலலாம். ஆனால், அண்மைக்காலமாக தமிழரின் பிரச்சினைகள், அவலங்கள் பற்றி அமெரிக்கா நடுநிலையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. அது மட்டுமல்லாமல், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையினைக் கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் ரிச்சார்ட் பெளச்சர் அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால், தனது நலன்கள் என்று வரும்போது அமெரிக்கா சந்தர்ப்பத்திற்கேற்றவாறு காய்நகர்த்தி வருகின்றது என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளக் கூடியது. இத்தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்ட கொழும்பு மாவட்ட முன்னாள் கத்தோலிக்க ஆயர் துலீப் டி சிகேராவும் மகிந்தவின் பிரச்சார வண்டிமீது தாவி ஏறி பின்வருமாறு கூறுகிறார், " அப்பாவிச் சிங்கள மக்கள் மீது கெப்பிட்டிக்கொல்லாவைப்பகுதியில் புலிகளால் வேண்டுமென்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினை அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து கண்டிக்க முன்வரவேண்டும். தமது நாளாந்த அலுவல்களைப் பார்க்கப் பயணித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட அப்பாவிப்பொதுமக்கள் 64 பேரின் படுகொலைகள் மனித நேயத்திற்கு எதிரான குற்றமாகும்" என்று கூறுகிறார். தனது இக்கூற்று இனங்களுக்கிடையே பகைமையினை உருவாக்கும் என்று தெரிந்தும், தமிழர்மீதான பகையுணர்வுடன் கருத்திட்ட அவர், "இத்தாக்குதலின்போது பாவிக்கப்பட்ட தொழிநுட்பமும், இத்தாக்குதலின் துல்லியமும் நிச்சயமாக இதனைப் புலிகள் தான் செய்திருப்பதாகத் தெரிகிறது" என்றும் அவர் கூறினார். இத்தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான விசாரணைகளையும் நடத்த விரும்பாத அரசு உடனடியாகவே புலிகள் மீது பழியைச் சுமத்தியதைப் போன்றே முன்னாள் ஆயரும் உடனடியாகவே இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தியதாகக் கூறியதுடன், போகிற போக்கில், "சிங்களவர்கள் எவரும் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றும் இறுதியாகக் கூறியிருந்தார். ஆகவே, மகிந்த, ரம்புக்வெல்ல, சிறிபால டி சில்வா, அமெரிக்க பேச்சாளர் ஆகியோர் வரிசையில் முன்னாள் ஆயரும் புலிகள் எதற்காக இத்தாக்குதலினை நடத்தினார்கள் என்பதனை மிகத் தெளிவாகவே தெரிந்திருந்ததாகத் தெரிகிறது. அதாவது, சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர்கள் மீது இனச்சுத்திகரிப்பொன்றினை நடத்தி, அதன்மூலம் புலிகளுக்கான தாயகத்தை அடைவதே புலிகளின் இத்தாக்குதலின் பின்னாலிருந்த நோக்கம் என்று அனைவருமே சொல்லிவைத்தாற்போல் புரிந்துகொண்டிருப்பது வியப்புத்தான். இதிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் யாதெனில், முன்னாள் ஆயரின் அறிக்கைக்குப் பின்னர் அவரை மேற்கோள்காட்டி பேசிய பலரும், அவரைப் போன்றே அரசை உறுதியாக ஆதரித்ததுடன், இத்தாக்குதலுக்குப் பழிவாங்கலாக சிங்களவர்கள் சார்பில் அவர்களின் அரசு வன்னிமீது கட்டவிழ்த்து விட்டிருந்த கொடூரமான வான்வழித் தாக்குதல்களைனை சரியான நடவடிக்கைதான் என்றும், சமாதானதிற்குப் புலிகளை இழுத்துவரும் ஒரு முயற்சியென்றும் கூறியிருந்தனர். இன்னொரு வகையில் சொல்லப்போனால், புலிகளால் கொல்லப்பட்டதாக அரசு கூறும் 64 சிங்களப் பொதுமக்களுக்கு மேலதிகமாக அரசின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இன்னும் பல நூற்றுக்கணக்கான தமிழர்களும் கொல்லப்படுவதை இவர்கள் சரியென்று ஏற்றுக்கொண்டிருப்பதும் தெளிவாகிறது. "ஆயரே சொல்லிவிட்டார், ஆகவே இத்தாக்குதலைச் செய்தது புலிகள்தான், ஆகவே வன்னிமீது விமானத் தாக்குதல் நடத்துவது நியாயமானதுதான்" என்று சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இலங்கையில் அரசியற்களம் ஒன்றி மிகவும் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வருவது கண்கூடு. ஆக, இதுஅவரை அரசினாலும் அதன் ஆதரவாளர்களாலும் இத்தாக்குதலினை புலிகள் ஏன் நடத்தினார்கள் என்பதற்கான காரணங்களாக பின்வருபவை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பலவிடங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. - பேரூந்தில் பயணிப்பது அப்பாவிச் சிறார்களும், பொதுமக்களும்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தினார்கள் - இத்தாக்குதலின்மூலம் சிங்களவர்களைக் கோபப்பட வைத்து தமிழர் மீது இனரீதியான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் நடத்த ஊக்குவிப்பது. - இலங்கையரசை வலிந்து ஒரு போருக்குள் இழுப்பது - அப்பாவிகளைக் கொல்வதன்மூலம், தமது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்வது. - சிங்களவர் மீது இனச்சுத்திகரிப்பொன்றை நடத்துவது. ஆனால், எழுந்தமானமாக, எதுவித விசாரணைகளோ அல்லது சாட்சியங்களோ இல்லாமல் அரசாலும், பரந்த சிங்களச் சமூகத்தின் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுவரும் ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஏதுநிலைகள் இலங்கையில் இன்று காணப்படுகின்றனவா?
  11. உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேசுங்கள்...... ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?” அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை” வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?” “தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா” திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான். இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா? எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
  12. செந்தில் சோலோ பகிடிகள்.😊 கல்லூரி வாசல்(1996)
  13. கொலைகாரப் புலிகளா அல்லது துணைராணுவக் குழுக்களை இயக்கும் அரசா? கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் 2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் சிவிலியன்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னாலிருக்கும் உண்மையான சூத்திரதாரிகள் யாராக இருக்கலாம் என்பதுபற்றி ஆய்வாளர் நிமால், இலங்கைத் தமிழ்ச் சங்கம் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு, தமிழ்ப் பகுதிகள் மீது வானிலிருந்து கடுமையான குண்டுவீச்சினை ஆரம்பித்திருக்கும் அரசு, தனது தாக்குதல்களை ஒரு யுத்த நிறுத்த மீறலாகவோ அல்லது வலிந்து போரிற்குள் புலிகளை இழுத்துவிடும் கைங்கரியமாகவோ பார்க்காமல், கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் சிவிலியன் பேரூந்து மீது இனம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று நிறுவியவாறு, இத்தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கும் தாக்குதலே தனது வான்வழிக் குண்டுவிச்சு என்று கூறத் தொடங்கியிருக்கிறது. சமாதானத்திற்கு தாம் எப்போதும் முன்னுரிமை கொடுத்துவருவதாகக் கூறிக்கொள்ளும் அதேநேரம், பேரூந்து மீதான தாக்குதலினை காரணமாக வைத்து, தமிழர் மீது பழிவாங்கும் தாக்குதலாக வான்குண்டுவீச்சினை மேற்கொண்டுவரும் அரசு, உண்மையிலேயே செய்துவருவது யாதெனில் தன்னிச்சையாக யுத்தத்தினை ஆரம்பித்திருப்பதுதான். கெப்பிட்டிக்கொல்லாவைப் பேரூந்து மீது இலக்குவைத்து வேண்டுமென்றே நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெருமளவு சிறுவர்கள் உட்பட குறைந்தது 60 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே இத்தாக்குதல் கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொண்டதுடன், மிகவும் ஈவு இரக்கமற்ற மிருகத்தனாமன தாக்குதல் என்றும் விமர்சிக்கப்பட்டது. பல நாடுகள் இத்தாக்குதலினைக் கண்டித்ததுடன், இதுதொடர்பான அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொண்ட போதும், அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் இன்னொரு படி மேலே சென்று உடனடியாகவே இத்தாக்குதல்களுக்கான பொறுப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தின. அதுமட்டுமல்லாமல் பல இணையவழி பத்திரிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஒன்றில் இத்தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது புலிகள் என்றோ அல்லது, அல்லது அவர்களே பிரதான சந்தேகநபர்களாக இருக்கவேண்டும் என்றோ கட்டியம் கூறியிருந்தன. இத்தாக்குதல் தொடர்பான அரசின் நிலைப்பாடு அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே அரசும், அதன் ஆதரவாளர்களும் தாக்குதல் பற்றிய செய்திகள் வந்தவுடனேயே இதற்குப் புலிகள்தான் பொறுப்பு என்று உடனடியாகவே கூறத் தொடங்கிவிட்டன. தேசிய சமாதானப் பேரவையின் பிரதான திட்டமிடல் அதிகாரியான ஜெகான் பெரேரா இதுபற்றிக் கூறுகையில் "இத்தாக்குதல் மூலம் புலிகள் கூறும் செய்தி என்னவென்றால், தாம் ஒருபோதுமே தமது வன்முறைகளை நிறுத்தப்போவதில்லை என்பதைத்தான். தமது நிபந்தனைகள் ஏற்கப்படாதவிடத்து தாம் அப்பாவிப் பொதுமக்களைக் கூடக் கொல்லத் தயங்கப்போவதில்லை என்பதைத்தான் இதன்மூலம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலவேளை அரசாங்கத்தினை வலிந்து போர் ஒன்றிற்குள் இழுக்கவே அவர்கள் இத்தாக்குதல் மூலம் முயன்றிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். அவ்வாறே இத்தாக்குதல் பற்றி மிகவும் ஆக்ரோஷமாக, எதிர்பார்த்தபடியே வெளியே வந்து பேசிய இலங்கை ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பின்வருமாறு முழங்குகிறார், "இந்தக் கொடூரமான தாக்குதல் நடந்த இடத்திற்கு நான் சென்று பார்வையிட்டேன். என்னைப் பொறுத்தவரை புலிகள் அமைப்பு அண்மைக்காலங்களில் மேற்கொண்ட மிகக்கொடூரமான படுகொலைகளில் இது மிகவும் கொடூமையானது". "கெப்பிட்டிக்கொல்லாவை, கனுகஹ மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்த இப்பேரூந்து மீது புலிகள் கிளேமோர் தாக்குதலினை நடத்தியதாக நான் கேள்விப்பட்டபோது மிகுந்த வேதனையடைந்தேன்". "தமது குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், உயர்கல்விப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், புலிகளின் முன்னைய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட ஊர்காவல்ப் படைவீரர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றவர்களும் புலிகளினால் இலக்குவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொடுமையான தாக்குதலினை நானும், இந்நாட்டு மக்களும், சர்வதேசமும் மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்". "தனது சொந்த மக்களுக்கான விடுதலையினை நோக்கிப் போராடுவதாகக் கூறிவரும் புலிகளின் கடந்த 20 வருடகால சரித்திரத்தினைப் பார்க்கும்போது, கண்மூடித்தனமான படுகொலைகளையும், வன்முறைகளையும் மட்டுமே அது கொண்டிருப்பதையும், அதன்மூலம் லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதையும் தவிர வேறு எதனையுமே அவர்களின் போராட்டம் கொண்டுவரவில்லை என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்". "மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் இவ்வாறான வன்முறைகளில் ஒருபோதுமே ஈடுபடப்போவதில்லை". "இந்நாட்டில் வாழும் அனைவரும் கெளரவத்துடனும், தன்மானத்துடனும் வாழும் வகையில் நிரந்தரமான அமைதியினை சமூக - பொருளாதார - ஜனநாயக வழியில் கொண்டுவரப்படும் நடைமுறையின்மூலம் ஒரு நிரந்தரமான சமாதானத் தீர்வொன்றினைக் கொண்டுவர நாம் முழுமனதுடன் முயற்சியெடுத்து வருகிறோம்". "புலிகள் எவ்வளவுதான் காட்டுமிராண்டித்தனமான , மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டாலும் கூட, நாம் எமது சமாதானத்தை அடையும் முயற்சிகளிலிருந்து ஒருபோதுமே விலகிடப்போவதில்லை. மக்கள் அனைவரும் சமாதானமாக, அச்சமின்றியும், ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு வாழும் நிலையினையும் உருவாக்குவோம்". என்று கூறுகிறார் ஆகவே, மகிந்தவைப் பொறுத்தவரை விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகளே நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரனமானவர்கள் என்பதுடன், சமாதானத்துக்கான மகான் ஆன தானும், தனது அரசாங்கமும் தொடர்ந்தும் சமாதானத்திற்காகப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். உண்மைதான். சமாதானத்திற்கான மகானோ அல்லது அவரது அரசோ நிச்சயமாக அப்பாவிகள் மீது வானிலிருந்து குண்டுகளைப் பொழிவது எங்கணம்? அல்லது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகுவது எங்கணம்? சமாதானத்திற்கான மகானான மகிந்த புலிகளை வரலாற்று ரீதியான வன்முறையாளர்கள் என்று கூறினாலும், அவர் அரியணை ஏறியதன் பின்னரே வடக்கிலும் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றது என்பதையோ அல்லது அப்பாவிகள் வேண்டுமென்றே இலக்குவைத்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதோ சாத்தியமானதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.