Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38777
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/09/21 in all areas

  1. #வணக்கத்துடன் #ஒரு_மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்.... #மூத்த மகனிடம் : மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை பார்த்துக்கனும். #மகளிடம்: மகளே நீ .T-நகர்ல இருக்குற 18 கடையும் பார்த்துக்கனும். #இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா கிண்டில இருக்குற 26 கம்பெனியும் பார்த்துக்கனும். மனைவியிடம் : கண்ணே உன்னைவிட்டு பிரியபோகிறேன்... மயிலபூர்ல இருக்குற 16 அப்பார்ட்மெட்டையும் பார்த்துக்கனும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்.... #இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த நர்ஸ் அவரின் மனைவியை பார்த்து நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க உங்க கணவர் அவரோட எல்லா சொத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு போயிட்டார்னு சொன்னாங்க.... #அதற்கு_அவர் மனைவி சொன்னார்.... #சொத்தா.....? எங்க கீது... பால் ஊத்துற பேமானிமா இது... கஸ்மாலம் பால் ஊத்துற ஏரியாவ பிரிச்சிக்குடுத்துட்டு பூடுச்சி.... fb
  2. கேள்வி : நீங்கள் 2002 இற்குப் பின் புலிகளிடமிருந்து விலகியிருந்த காலத்தில் அவர்கள் நக்ஸலைட் பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கலாம் என்று கூறுகிறீர்களா? கே : அதன் பிறகு எனக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பு இருக்கவில்லை. 2009 இல் தாங்களாகவே வந்து எனது உதவியினைக் கோரும்வரை நான் விலகியே இருந்தேன். ஆனால் நான் விலகியிருந்த 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் பெருமளவு தவறுகளைப் புலிகள் புரிந்திருந்தார்கள். அக்காலத்தில்த்தான் மாவோயிஸ்ட்டுக்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஆயுத ரீதியிலான தொடர்புகள் ஏற்பட்டதாக எனது நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். புலிகளின் போராட்டம் தோற்றுப்போனதற்கு மாவோயிஸ்ட்டுக்களின் தொடர்பும் காரணம் என்றால் அது மிகையில்லை. கேள்வி : நீங்கள் கூறுவது உண்மைதானா? ஏனென்றால், மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய ராணூவத்தினரின் மீது நடத்தும் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கான பயிற்சியையும், பொருட்களையும் புலிகளே வழங்கினார்கள் என்று இந்திய புலநாய்வுத்துறை அதிகாரிகள் கூறியிருந்தார்கள் ? கே பி : நானும் அதனைக் கேள்விப்பட்டேன். இது உண்மையாகக் கூட இருக்கலாம், உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய அதிகாரிகளிடம் இருந்தும், புலிகள் இயக்கத்தில் இன்னமும் இருந்த எனது முன்னாள் நண்பர்கள் மூலமும் இதனை நான் அறிந்துகொண்டேன். கேள்வி : வன்முறையினைப் பாவித்துப் போராடிய பயங்கரவாதிகளிடமிருந்து விலகி இன்று உங்களுக்கென்று ஒரு ஜனநாயகப் பாதையினைத் தெரிவுசெய்திருக்கிறீர்கள். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கும் உதவப்போவதாகக் கூறிவருகிறீர்கள். வன்முறை நடவடிக்கைகளிலிருந்து விலகி, சமாதானத்துடன், சமரசமாக வாழ முயற்சிப்பதாகக் கூறுகிறீர்கள். எந்த வகையில் நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கு உதவுவதாக எண்ணியிருக்கிறீர்கள்? கே பி : மே மாதம் 2009 ற்குப் பின்னர் நான் வீட்டுக் காவலில் இருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. நான் தை 2009 இலிருந்தே போரினைத் தடுத்து நிறுத்தி பெருமளவு மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முனைந்தேன். என்னால் முடிந்தவரை இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். ஆனால் துரதிஷ்ட்டவசமாக புலிகள் பிடிவாதமாக மறுத்து மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமானார்கள். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் எமது மக்கள் படும் அவலங்களைக் கேட்டிருக்கிறேன். அதனாலேயே, அவர்களுக்கு சமாதானமான முறையில் வாழ்க்கையினை மீளமைக்க நான் விரும்புகிறேன். புலிப் பயங்கரவாதிகளில் ஒருவனாக இருந்து, அம்மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அவலங்களுக்கும் நானும் ஒரு காரணம் எனும் வேதனையும், கழிவிரக்கமும் எனக்கு இன்றுவரை இருக்கிறது. ஆனால், போர் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் புதிய சகாப்த்தம் ஒன்றிற்குள் வந்திருக்கிறோம். இன்னொரு 100 வருடங்களுக்கு நாம் "ஈழம்" என்கிற கனவுபற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம், பயங்கரவாதச் சிந்தனைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை ஒரு சிலர் இதுபற்றிப் பேசுவதில்லையா? அதுபோலத்தான் புலிகளின் "ஈழம்" எனும் வெற்றுக் கனவும். அவர்களோடு சேர்த்து அக்கனவும் அழிக்கப்பட்டபின்னரும் இன்னமும் சிலர் அதுபற்றிப் பேசிவருகிறார்கள். புலம்பெயர் நாடுகளின் தெருக்களில் காப்பியை அருந்திக்கொண்டு போராட்டம் , வன்முறை பற்றிப் பேசும் பிரிவினைவாதிகள் இன்னமும் இருக்கிறார்கள். அழிக்கப்பட்டுப்போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கும் பேச்சுக்களை சில புலம்பெயர் தமிழர்கள் பேசிவருகிறார்கள். இந்த சிறிய பிரிவினைவாதக் குழு ஆதரவாளர்களுக்கு வேறு எதுவுமே செய்யமுடியாது, இப்படிப் பேசிப்பேசியே தமது காலத்தைக் கடத்திவிடுவார்கள். இவர்களுக்கு போராட்டமும், அவலமும் பணம்பார்க்கு வழி, ஆகவே அவர்கள் தொடர்ந்து இதுபற்றிப் பேசுவார்கள். நான் வைக்கோவிடமும் நெடுமாறனிடமும் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப்பேசுவதை நிறுத்துமாறு பலமுறை கேட்டுவிட்டேன், அவர்களோ கேட்பதாக இல்லை. அழிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசினால்த்தானே அவர்களுக்கு புலம்பெயர் பிரிவினைவாதிகளின் மாதச் சம்பளம் கிடைக்கும்? இதுதான் அவர்களின் பிரச்சினை. கேள்வி : தமிழ் மக்களின் அவலங்கள் பணம் பார்க்கும் ஒரு தொழில் என்று கூறுகிறீர்களா? கே பி : ஆம். அதனைபலமுறை நான் பார்த்திருக்கிறேன். 2005 அல்லது 2006 ஆம் ஆண்டுகளில் இயக்கத்திற்கு பணம் சேர்த்தவர்களின் ஆண்டு வருமானம் 300,000 டாலர்கள்வரை இருந்ததாகக் கூறப்பட்டது. கேள்வி : இதற்கான பணம் எங்கிருந்து வந்தது ? கே பி : வேறு எங்கிருந்து? எல்லாம் புலம்பெயர் தமிழர் கொடுக்கும் பணத்தில் இருந்துதான். ஆகவே, நான் இதனை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர்கள் வருமானத்திற்கு எங்கே போவார்கள்? நேற்றுக்கூட லண்டனில் ஒரு வீட்டிற்குச் சென்ற புலம்பெயர் பயங்கரவாதிகள் தாம் வன்னி தலைமைக் காரியாலயத்தில் இருந்து வந்ததாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், புலிகளின் வன்னித் தலைமைக் காரியாலயம் இரண்டு வருடத்திற்கு முன்னரே அழித்து இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இன்றும் வன்னித் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருவதாகக் கூறி புலம்பெயர் தமிழரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு இது சிறிது சிறிதாகப் புரிந்துவிட்டது. அதனால் இவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கேள்வி : நீங்கள் உங்கள் கடந்தகால செயற்பாடுகளுக்குப் பிராயச்சித்தமாக சமாதான வழியில் சமரசம் செய்ய நினைக்கிறீர்கள். உங்களின் எதிர்காலக் கனவு என்ன? கே பி : நான் கடந்த 35 வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவன். கடந்த இரு வருடங்களாக வீட்டுக் காவலில் இருப்பவன். சிலவேளை இன்னும் 10 வருடங்கள் வரை வீட்டுக் காவலில் நான் இருக்கலாம். எனது வாழ்க்கையில் இன்னும் அதிக வருடங்கள் வாழ எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை. எனது மீதி வாழ்க்கையினையுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவர்களுடன் கழிப்பதையே நான் விரும்புகிறேன். இவர்களுக்குப் பெற்றோரோ, அன்போ, கல்வி வசதியோ, அல்லது எதிர்காலமோ எதுவுமே இல்லை. ஆகவேதான் இச்சிறார்களுடன் எனது இறுதிவாழ்க்கையினைக் கழிக்க விரும்புகிறேன். வன்னியில் இருக்கும் இச்சிறுவர்களோடு எனது எதிர்காலத்தை கழிக்க அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சினைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அத்துடன், போரில் தமது பிள்ளைகளை இழந்து, ஆதரிப்பார் எவருமின்றி இருக்கும் வயதானோரையும் பராமரிக்க விரும்புகிறேன். அதேபோல, அங்கவீனமுற்றிருக்கும் பெண்பிள்ளைகளையும் பராமரிக்கும் நோக்கமும் இருக்கிறது.அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியினைப் பார்ப்பதே எனது கனவாகும்.
  3. கேள்வி : தி மு க பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன ? கே பி : வைக்கோ முன்னர் தி மு க வின் முக்கிய பொறுப்பில் இருந்தார். தி மு க வின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், எம் எல் ஏக்களும் எம்முடன் நெருக்கமாக இருந்தனர். உங்களுக்குக் கருனாநிதிபற்றித் தெரியாதது இல்லை, அவர்கூட புலிகள் எனும் துரும்புச் சீட்டை அவ்வப்போது தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்துக்கொண்டார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னைக் காட்டிக்கொள்வதன் மூலம் வாக்குகளை அள்ளலாம் என்று வைக்கோ நம்பினார். தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களில் பெரும்பாலானோ இந்த "புலிகள்" துரும்புச்சீட்டை தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்தார்கள். கேள்வி : அப்படியானால் ஜெயலலிதா ஏன்ன செய்தார்? கே பி : அவர் ஒரு மிகவும் சாதுரியமான அரசியல்வாதி. நன்றாகப் படித்தவர். இவ்வாறான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பதுபற்றி அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். அவர் இப்போது முதலமைச்சராக வந்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் என்கிற வகையில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கேள்வி : புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் இருந்தாரா? கே பி : அவர் அப்படித்தான் எப்போதுமே நம்பிவந்தார். புலிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்தும் பேசிவந்ததால், அவரையும் கொல்லவே புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று நான் நம்புகிறேன். புலிகளின் உண்மையான முகத்தையும், அவர்களின் பயங்கரவாத வழிமுறைகளையும் அறிந்தவர்களுக்கு ஜெயலலிதாவைக்கொல்ல புலிகள் தருணம் பார்த்திருந்தார்கள் என்பதை நம்புவது கடிணமாக இருக்காது என்று எண்ணுகிறேன். தமக்கெதிராக ஜெயலலிதா தொடர்ச்சியாகப் பேசியும், செயற்பட்டும் வந்ததினால் அவரைக் கொல்ல பலமுறை புலிகள் முயன்றார்கள், ஆனால், இறுதிவரை அவர்களால் அவரைக் கொல்ல முடியவில்லை. கேள்வி : நீங்கள் இன்று வீட்டுக் காவலில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் கூட நீங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டுத்தான் வருகிறீர்கள். புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் மாறுபட்ட சிந்தனைகளை வளர்க்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களவர்களுடன் சமரசமாக, ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும், அவர்களுடன் இணையவேண்டும், எதிர்காலத்தினை ஒற்றுமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படியிருக்க, ஐ நா அறிக்கையில் இலங்கையின் அரசியல், ராணுவத் தலைவர்கள் போர்க்குற்ரங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதுபற்றி ஜெயலலிதா அண்மையில் வெளியிட்டிருக்கும் கடுமையான கருத்துக்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ? கே பி : அவர் ஒரு சாதுரியமான அரசியல்த் தலைவர் என்று முன்னரே கூறியிருந்தேன். அவருக்கு நிறைந்த அனுபவம் இருக்கிறது. அவர் பந்தினை இப்போது மத்தியை நோக்கி அடித்திருக்கிறார். சிலருக்கு அவர் என்ன செய்யர் விழைகிறார் என்பதுபற்றி நன்றாகத் தெரியும். ஆனால், எப்போதுமே உணர்ச்சிவயப்படும் அப்பாவித் தமிழ்நாட்டு மக்கள் "எமது அம்மா ஏதோ செய்யப்போகிறார்" என்று நம்புகிறார்கள். தமது "அம்மா", மகிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கு இழுத்துச் செல்லப்போகிறார் என்றும் நம்புகிறார்கள். ஆனால், ஜெயலலிதா இதனை ஏன் கூறுகிறார் என்பது தெரியவேண்டியவர்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். இந்திய மத்திய அரசு இலங்கையின் அரச, ராணுவ தலைமைக்கு மிகவும் நெருக்கமானது என்பது உலகறிந்த விடயம், இது ஒன்றும் ரகசியமல்ல. அரசியல், ராணுவ, ராஜதந்திர ரீதியில் இரு நாடுகளும் தற்போது மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றன. இவ்விரு நாடுகளும் 1000 வருடங்களுக்கும் மேலான மத, கலாசாரத் தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. இந்த நெருங்கிய பிணைப்பினை எவராலும் உடைப்பதென்பது சாத்தியமா? காங்கிரஸ் கட்சியினால்க் கூட இந்த நெருங்கிய பிணைப்பை உடைப்பது சாத்தியமாகவில்லையே? கேள்வி : தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா எவ்வாறான பாத்திரத்தினை வகிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? கே பி : அவர் தமிழகத்தின் முதலமைச்சர். திறமையானவர், புத்திசாலி, நிறைந்த அனுபவம் உள்ளவர். தமிழர்கள் தொடர்பாக சாதகமான முடிவுகளை அவரால் எடுக்க முடியும். எமது மக்கள் இன்று அல்லற்பட்டுக்கொன்டிருக்கிறார்கள், உணவு, உறையுள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிரது. ஜெயலலிதா இதுதொடர்பாக நிச்சயமாக ஏதாவது செய்யமுடியும், தமிழர்களுக்கு உதவப்போவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், இது சாத்தியமானது என்றே எனக்குப் படுகிறது. நான் சொல்ல விரும்புவது இதைத்தான். கஷ்ட்டப்படும் எமது மக்களுக்கு உதவவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அவருக்கு உதவும் நோக்கமிருந்தால், அவர் இங்கு வந்து அதனைத் தாராளமாகச் செய்ய முடியும். அல்லது வேறு வழிகளில்க் கூட அதனைச் செய்யமுடியும். முதலுதவி, மருத்துவ வசதிகள் என்பவற்றிலிருந்து இதனை அவர் ஆரம்பிக்கலாம். சாகும் நிலையில் இருப்பவனுக்கு முதலுதவி கொடுப்பீர்களா அல்லது அவனுக்கு அரசியல் தீர்வு குறித்து பாடம் எடுக்கப்போகிறீர்களா என்பதுபற்றி நீங்கள் இப்போது முடிவுசெய்ய வேண்டும். எமது மக்களுக்கு இப்போது தேவையானது உணவும், மருத்துவ வசதிகளும், வேலை வாய்ப்பும் மாத்திரமே. அரசியல்த் தீர்வுகுறித்தோ அல்லது உரிமைகள் குறித்தோ எமது மக்கள் எதனையும் கேட்கவில்லையே ? எமது மக்களுக்குச் சார்பாகக் கதைப்பதாகப் பாசாங்கு செய்யும் புலம்பெயர் தமிழர்களோ அல்லது தமிழக அரசியல்வாதிகளோ, முதலில் எம்மக்களுக்கான உணவையும், மருத்துவ வசதிகளையும், வேலை வாய்ப்பையும் கொடுக்கட்டும். அரசியல் உரிமைகள் பற்றியோ அல்லது தீர்வுபற்றியோ இப்போது பேசத்தேவையில்லை. கேள்வி : தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து இலங்கையில் மனிதாபிமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நீங்கள் கூறுகிறீர்களா? கே பி : நிச்சயமாக. வன்னியில் பல தொழிற்சாலைகளை அவர் நிறுவ முடியும். தமிழகத்தில் இருக்கும் தொழிலதிபர்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச அனுப்புவதன் மூலம், இங்கு அபிவிருத்திகளை அவர் ஆரம்பிக்க முடியும். இங்கே தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பினை அவரால் உருவாக்கித் தரமுடியும். கேள்வி : நீங்கள் புலிகளியக்கத்தின் பிரதான ஆயுதக் கொள்வனவாளராக பல காலம் கடமையாற்றியவர். இந்தியாவின் மாவோயிஸ்ட்டு கெரில்லாக்களான நக்ஸலைட் போராளிகளுக்குப் புலிகள் பயிற்சியளித்ததாக பல செய்திகள் வெளிவந்தனவே? இதுபற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா? கே பி : 2002 வரைக்கும் எந்தவொரு வெளிநாட்டுக் கிளர்ச்சியமைப்புடனும் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை என்று என்னால் கூறமுடியும். அரசியல் ரீதியிலான தொடர்புகள் இருந்தாலும்கூட, ஆயுத ரீதியில் தொடர்புகளிருக்கவில்லை. 2002 வரை நான் பொறுப்பில் இருந்த காலத்தில் இவ்வாறான எந்த ஆயுதத் தொடர்பும் இருக்காதவாறு நான் பார்த்துக்கொண்டேன். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நான் முற்றாக நிராகரித்தே வந்தேன். ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு கிளர்ச்சியமைப்பும் தனித்துவமானவை, ஆகவே இவற்றில் தலையிட நாம் விரும்பியிருக்கவில்லை. ஆகவே, மாவோயிஸ்ட்டுக்களுடன் நாம் எதுவித தொடர்பையும் பேணவில்லை. 1984 முதல் 2002 வரையான காலப்பகுதியில் நான் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தபொழுது , போராட்டம் இலட்சியம் நோக்கிச் செல்வதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு நாம் இயங்கினோம்.
  4. கேள்வி : தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்கள் பழையனவற்றை மறக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படிப் பழையனவற்றை மறப்பதென்றால், பழையனபற்றிய உண்மைகளும் வெளிக்கொணரப்படுதல் அவசியம் இல்லையா? நீங்கள் புலிகளியக்கத்தில் மூத்த உறுப்பினராக இருந்தவர். உங்களுக்கு அனைத்துமே தெரிந்திருக்கும். பல தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்கள் தமிழ்ப் பயங்கரவாதத்தினை ஊக்குவித்து தமிழர்களை வன்முறை நோக்கித் தள்ளினார்கள் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்களின் பெயர்களை கூறுங்கள் ? கே பி : போராட்டம் நடைபெற்ற காலத்தில் நாம் சில சமயம் தமிழ்நாட்டில் தங்கியிருக்கவேண்டிய நிலைமை இருந்தது. நாம் போராட ஆரம்பிக்கும்போது எமது இலட்சியம் குறிந்த்த மிகுந்த தெளிவுடனும் பற்றுறுதியுடனும்தான் ஆரம்பித்தோம். இந்திய அரசியல்வாதிகளுடன் தொடர்புகள் இல்லாமல் தனித்தே இயங்க விரும்பினோம். இந்தியாவுக்குச் சென்று எமக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் தாயகம் திரும்புவதுடன் இந்தியாவுடனான எமது தொடர்புகளை மட்டுப்படுத்திக்கொண்டோம். ஆரம்பத்தில் இப்படித்தான் எமது போராட்டம் இருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், நாம் தமிழ்நாட்டில் எமது அலுவல்களை பார்க்கும்போது தவிர்க்கமுடியாமல் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினது உதவியினை நாடவேண்டிய தேவையேற்பட்டது. உதாரணத்திற்கு பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான சண்டை முற்றி சென்னைத் தெருக்களில் அவர்கள் சுடுபட்டுக்கொண்டு பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டபோது நாம் சில உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் அவர்களை பிணையில் எடுக்கவேண்டியதாகியது. இப்படியான சந்தர்ப்பங்கள் புலிகள் இயக்கத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செல்வாக்குச் செலுத்தும் நிலையினை உருவாக்கிவிட்டன. ஆனால், எமக்கு உண்மையான பிரச்சினை என்னவென்று நன்கு தெரியும். ராமசாமிப் பெரியார் திராவிட நாடு வேண்டுமென்று கேட்டார். வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டையும், ஆந்திராவையும், கேரளத்தையும் தனியே பிரித்து தனிநாடாக ஆக்க அவர் விரும்பினார். இந்தப் பிரிவினைவாதத் திராவிட வழியில் தோன்றியவர்கள்தான் அண்ணாத்துரையும் கருனாநிதியும். இந்தப் பிரிவினைவாத அரசியல் தமிழ்நாட்டிலேயே படுதோல்வியடைந்தது. ஆனால், இந்த திராவிட நாட்டுப் பிரிவினைவாதிகள் அரசியலில் தொடர்ச்சியாக வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியான அடிப்படைவாத பிரிவினைவாதக் கொள்கைகளைக் கொண்ட பலர் இன்னும் அங்கே அரசியலில் இருக்கிறார்கள். தம்மைச் சுற்றி உலகம் மாறிவருவதை அவர்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. சிலவேளைகளில் நாம் கனவுகள் காண்பதுண்டு. ஆனால், காணூம் கனவெல்லாம் உண்மையில் நடக்குமா என்று நாம் சிந்திப்பதில்லை, அவை நடப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்று சிந்திப்பதில்லை. நாம் திராவிடக் கொள்கைபற்றிய காலத்தை கணிப்பிட்டால், அது 100 வருடம் பழமை வாய்ந்த சாத்தியமற்ற தோற்றுப்போன கொள்கை. பெரியார் இறந்தபோது அவரது திராவிட நாட்டுக் கனவும் சேர்ந்தே செத்து விட்டது. ஆனால், பெரியாரின் வழிவந்த இன்றைய அரசியல்வாதிகள் இன்றும் இந்த செத்துப்போன கனவு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே பிரபாகரனுக்கும் இந்த பிரிவினைவாதத் தனிநாட்டுக் கோரிக்கை எனும் கனவினை ஊட்டியவர்கள். பிராமண எதிர்ப்புக் கொள்கையினையும், திராவிடச் சிந்தனைகளையும் பிரபாகரனுக்கு ஊட்டியவர்கள் இந்த திராவிடம் பேசும் அரசியல்வாதிகள்தான். இலங்கைத் தமிழர்களது போராட்டம் திராவிட சிந்தனையின் அடிப்படையில் பிராமணர்களுக்கு எதிரான போராட்டம் என்று பிரபாகரனை அவர்கள் நம்பவைத்தார்கள். இந்தத் தமிழ்நாட்டு அரைஇயல்வாதிகளே பிரபாகரனை மாபெரும் வெற்றிவீரனாக விம்பப்படுத்தினார்கள். பிரபாகரனை புராதன தமிழ் மன்னர்களுடன் ஒப்பிட்டுப் பேசிவந்தார்கள். போராட்டத்தின் உண்மையான இலட்சியத்திலிருந்து பிரபாகரனை பிழையாக வழிநடத்திச் சென்றவர்களும் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான். பிரபாகரன் விட்ட அனைத்துத் தவறுகளுக்கும் இவர்களே காரணமாக இருந்தார்கள். இவர்களின் வழிகாட்டுதல்களின் பேரிலேயே பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்றார். பிரபாகரனைத் தவறாக வழிநடத்திக் கொன்றுவிட்டு, இன்று பிரபாகரனின் பெயரை வைத்து தமது அரசியலை நடத்துகிறார்கள். கேள்வி : ராஜீவ் காந்தியைக் கொல்லும் திட்டத்தினை தி மு க வின் வழிநடத்துதலின்பேரிலேயே பிரபாகரன் செய்தார் என்று நீங்கள் கூறுகிறீர்களா? கே பி : இதற்கு என்னால் "ஆம் " என்று வெளிப்படையாகப் பதிலளிக்க முடியாது. ஆனால், பிராமணர்களுக்கெதிரான சிந்தனையினையும், காழ்ப்புணர்வையும் பிரபாகரனுக்கு ஊட்டி வளர்த்தவர்கள் தி மு க வினர்தான் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. பிராமணரான ராஜீவைக் கொல்ல பிரபாகரன் திட்டம் தீட்டியதற்கு தி மு க வினரின் தாக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ராஜீவ் ஒரு பிராமணர் என்பதற்காகவே பிரபாகரன் அவரை கடுமையாக வெறுத்தார். ராஜீவ் ஒரு செயல் வீரர். தமிழருக்கான தீர்வினை உடனடியாக எடுக்க அவர் விரும்பினார், ஆனால் பிராமண எதிர்ப்பால் உந்தப்பட்ட பிரபாகரன் அவரைக் கொன்றார். கேள்வி : பிரபாகரனும் வைக்கோவும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் பரவலாக வெளிவந்திருந்தன. வன்னிக்கு வைக்கோவினால் எப்படி வரமுடிந்தது? கே பி : வைக்கோ அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும், தி மு க வில் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். அவருக்கு கட்சிக்குள் சில பிரச்சினைகள் அப்போது தோன்றியிருந்தன. கருனாநிதிக்குப் பின்னர் தானே தி மு க வின் தலைமைப் பொறுப்பை எடுக்க அவர் விரும்பினார். ஆனால், கட்சிக்குள் இருந்த சில பலம்பொறுந்தியவர்களுக்கு வைக்கோ தலைவராக வருவதில் விருப்பம் இருக்கவில்லை. அவர்கள் கருனாநிதியின் மகன் ஸ்டலின் அடுத்த தலைவராக வருவதையே விரும்பினார்கள். இதனைத் தடுக்க தன்னைப் பிரபலமாக்கவேண்டிய தேவை வைக்கோவுக்கு ஏற்பட்டது. தன்னைப் பிரபலமாக்குவதற்கான ஒரே வழி புலிகளுக்குச் சார்பானவராகத் தன்னை காட்டிக்கொள்வதுதான் என்று அவர் எண்ணினார். தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்கள் புலிகளுக்குத் தார்மீக ஆதரவினை வழங்கிவந்தார்கள். அதனாலேயே அந்த உணர்வினைத் தனது அரசியல் ஆதாயத்திற்காக வைக்கோ பயன்படுத்த நினைத்தார். மக்களின் வாக்குகளைக்கவரவேண்டும் என்றால், அவர்களின் உணர்வுகளுடன் விளையாடவேண்டும் என்று அவர் விரும்பினார், அதனாலேயே பிரபாகரனைச் சந்திக்க வன்னிக்குச் சென்றார். வைக்கோ பிரபாகரனைச் சந்திக்கும் தருணம் வரைக்கும் அவர் தனியாகவே, கருனாநிதிக்குத் தெரியாமல் வந்திருக்கிறார் என்பதை பிரபாகரன் அறிந்திருக்கவில்லை. கருனாநிதியின் அனுமதியில்லாமல் வன்னிக்குக் வைக்கோவினால் எப்படி வரமுடிந்தது என்று பிரபாகரனே ஆச்சரியப்பட்டார். இதில் நாம் பார்க்கவேண்டிய ஒரே விடயம் என்னவெனில், வைக்கோவின் வன்னி விஜயம் அவரின் சொந்த அரசியல் லாபத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டது. புலிகளுக்காகவோ தமிழரின் நலன்களுக்காகவோ அல்லவென்று எனக்கு அன்றே தெரிந்திருந்தது.
  5. கமலா லக்ஸ்மன் .........! 👍
  6. முதல் முறை இலங்கைக்குப் போன ஒரு வெளிநாட்டவர் தேநீர் குடிப்பதற்காக கடைக்கு போனவர் நீண்ட நேரமாக தேநீர் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம். இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டுள்ளார். எனக்கு ஒரு யார் தேநீர் வேணும் என்றாராம். தேநீரை யார் கணக்கில் கொடுப்பதில்லையே! இல்லை நானும் நீண்ட நேரமாக பார்க்கிறேன் ஒரு யார் இழுத்து ஊத்தினால் ஒரு கிளாஸ் முட்ட வருகிறது.அரை யார் இழுத்து ஊற்றும் போது அரை கிளாஸ் தான் வருகிறது.அதனால் நீண்ட நேரமாக பார்த்து தேநீர் போடும் அளவைக் கண்டுபிடித்துவிட்டேன் என சந்தோசமாக சொன்னாராம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.