Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15755
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/10/22 in all areas

  1. கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக் கொன்ற மங்களம் மாஸ்ட்டரும் தூயசீலனும் வாகனத்தில் பயணம் செய்தவர்களான கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக்கொன்றது மங்களம் மாஸ்ட்டர் எனப்படும் கருணா குழு முக்கியஸ்த்தரும், தூயசீலன் எனப்படும் அவரது உதவியாளரும் தான் என்று அறியமுடிந்தது. தூயசீலன் புலிகளின் காலத்தில் களுவங்கேணிப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்ததோடு, 2004 சித்திரையில் வாகரையில் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வினோதன் படையணியின் தளபதியும் கருணாவின் நெருங்கிய சகாவுமான பாரதிதாசனின் முகாம் உதவியாளராக மங்களம் மாஸ்ட்டர் என்பவர் பணியாற்றியதாகவும் அறிய முடிகிறது. இத்தாக்குதலில் ஒரு ஏ கே 47 ரகத் துப்பாக்கியும், எஹ் கே 33 ரக தானியங்கித் துப்பாக்கியும் இவர்களால் பாவிக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலைகள் எதுவாக இருந்தபோதிலும், கருணாவினாலும், பரந்தன் ராஜனினாலும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளுக்கு பாரிய இழப்பாகவே கருதப்பட்டது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் போராளிகளுக்கு லெப்டினன்ட் கேணல் கெளசல்யன், மேஜர் புகழவன், மேஜர் செந்தமிழன், இரண்டாம் லெப்டினன்ட் நிதிமாறன் ஆகிய பதவியுயர்வுகளை புலிகள் வழங்கியிருந்தனர். இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவுக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை புலிகளுக்கு பாரிய இழப்பாகவே அன்று கணிக்கப்பட்டது. கெளசல்யன் அமைதியான சுபாவம் கொண்ட மென்மையாகப் பேசும் கெளசல்யன் ஒரு சிறந்த சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர். வெளிப்படையாகப் பேசாத, தன்னடக்கம் கொண்ட அவர் இயல்பில் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர் என்று பரவலாக அறியப்பட்டவர். அவ்வாறே, இலட்சியத்திலிருந்து விலகாத, எதற்காகவும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காத, இலட்சியத்தில் இருந்து பின்வாங்காத உறுதியுள்ள மனிதராக புலிகளால் அறியப்பட்டவர். கூச்சசுபாவமுள்ளவராக இருந்தாலும், மக்களுடன் மிக அதிகமாக நெருங்கிப்பழகியவர் அவர். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவருக்கிருந்த வல்லமை புலிகளிடத்தில் பெரும் பேசுபொருளாகவே இருந்துவந்தது. 2005 இல் அவரது படுகொலையின் மூலம் ஒரு சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தவரை, புலிகளின் இரண்டாவதுநிலை தலைவராக எதிர்காலத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவரை அவ்வியக்கம் இழந்தது. இளையதம்பி நாகேந்திரன் லிங்கராசா எனும் இயற்பெயருடைய கெளசல்யன் 1972 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பாண்டாரியாவெளியில் பிறந்தவர். மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பகுதியில் இவ்வூர் அமைந்திருக்கிறது. ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தாலும்கூட, மிகச்சிறந்த போராளியாக அவர் பரிணமித்தார்.
  2. இந்தியாவின் ஒரிஸா மாநிலத்திலும், கர்நாடகாவின் பெங்களூரு பகுதியிலும் ஈ என் டி எல் எப் துணைராணுவக் குழு முகாம்களை அமைத்திருந்தது. இந்திய உளவுத்துறையின் செல்லப்பிள்ளையான இந்த துணைராணுவக் குழுவுக்கு ரோ மூலம் பாரிய உதவிகள் செய்யப்பட்டு வந்தன. புலிகளிடமிருந்து கருணா வெளியேறிய பின்னர் பரந்தன் ராஜன் அவருடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். புலிகளால் பாரிய அச்சுருத்தலினை எதிர்கொண்டிருந்த கருணாவுக்கு பரந்தன் ராஜனின் உதவி அந்நேரத்தில் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. ஆகவே, பரந்தன் ராஜனின் உதவியுடன் கருணா இந்தியாவுக்குச் சென்றார். கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவும், பரந்தன் ராஜனின் ஈ என் டி எல் எப்ப் உம் இணைந்து தமிழீழம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினர். இவ்வமைப்பின் ராணுவப்பிரிவாக தமிழ்த் தேசியப் படை எனும் துணைராணுவக் குழு இவர்களால் உருவாக்கப்பட்டது. கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டு மூன்று தினங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் இயங்கிவந்த கருணா துணைக்குழு உருப்பினரான சேரன் என்பவர் மூலம் இத்தாக்குதல் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் கெளசல்யனை தமது தமிழ்த் தேசியப் படை எனும் ராணுவப்பிரிவே கொன்றதாக அக்குழு வெளிப்படையாக உரிமை கோரியிருந்தது. இத்தருணத்தில் புலிகளின் அரசியல்த் துறைப் பொறுப்பாளரும் இன்னும் சில போராளிகளும் கொல்லப்பட்டது கருணா குழுவும் ஈ என் டி எல் எப்பு குழுவும் இணைந்து நடத்திய தாக்குதலில்த் தான் என்று கருணாவுக்கு ஆதரவானவர்கள் கிழக்கில் பெருமையாகப் பேசத் தொடங்கியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
  3. கெளசல்யனின் வாகனம் வரும்வரை காத்திருந்து ஏ 11 நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் ஏ 11 நெடுஞ்சாலையின் மக்கள் நடமாட்டமில்லாத 104 மற்றும் 105 ஆகிய மயில்க்கல்களுக்கிடையிலான பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தமிழர் பகுதிகளுக்குள் துணைராணுவக்குழுக்களின் ஆதரவோடு நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களில் ஒன்றான நாமல்கம எனப்படும் புத்தம்புதிய சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே இந்த நெடுஞ்சாலைப்பகுதி இருக்கிறது. நெடுஞ்சாலையில் வெலிக்கந்தப்பகுதியில் அமைந்திருக்கும் 23 ஆவது பிரிகேட் படைமுகாமிலிருந்தே கெளசல்யனின் வாகனத்தை கருணா குழுவினரின் வெண்ணிற ஹயேஸ் வாகனம் தொடர்ந்துவந்ததாக நம்பப்படுகிரது. கெளசல்யனின் வாகனத்தின் சாரதியும், இரு பொலீஸ்காரரும் பிள்ளையாரடிப் பகுதியில் வழிபாட்டிற்கு இறங்கியிருந்தவேளையில் இவர்களைக் கடந்து இந்த வாகனம் சென்றதை போராளிகள் அவதானித்திருக்கிறார்கள். மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்ட எல்லையிலேயே இந்தப் படுகொலை நடந்தேறியிருக்கிறது. சுமார் 14 கிலோமீட்டர்களுக்கப்பால் அமைந்திருந்த புணாணை மற்றும் வெலிக்கந்தை ராணுவ முகாம்களுக்கு இடையிலான மக்கள் நடமாட்டமில்லாத பகுதியினை கொலைகாரர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வெலிக்கந்தை முகாமிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் இத்தாக்குதலை கருணா குழு நடத்தியிருந்தாலும்கூட, எதுவித தடைகளுமின்றி இவ்விரு ராணுவ முகாம்களையும் கடந்து தப்பிச்செல்ல அவர்களால் முடிந்திருக்கிறது. தாக்குதல் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், இதனை நடத்தியது ராணுவத்தோடு சேர்ந்தியங்கும் கருணா குழுதான் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கருணா குழுவினர் இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பியிருந்த அவரின் பல ஆதரவாளர்களுக்குப் பேரிடியாக அமைந்தது, அத் தாக்குதலினைச் செய்தது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "தமிழீழம் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் தமது அமைப்புத்தான் என்று கருணாவின் தோழர்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தமது தாக்குதல் தொடர்பாக பெருமையாகப் பேசிக்கொண்டது. இதனைக் கருணா குழுவே செய்ததென்பதை அவர்களால் மறுக்கமுடியவில்லை. கருணா குழுவினரால் பெருமையோடு பேசப்பட்ட இந்த புதிய தாக்குதல் அணியென்பது கருணா குழுவின் உறுப்பினர்களையும் ஈ என் டி எல் எப் எனப்படும் பரந்தன் ராஜன் தலைமையிலான இந்திய ஆதரவு துணைராணுவக் குழுவும் இணைந்து உருவாக்கப்பட்ட துணைராணுவக் குழு என்பது குறிப்பிடத் தக்கது. பங்குனி 2004 இல் கருணா தனது தோழர்களோடு புலிகளிடமிருந்து பிரிந்து ராணுவத்துடன் இணைந்துகொண்டார். ஆனால், கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கையினை புலிகள் 2004 சித்திரையில் ஆரம்பித்திருந்தார்கள். இதனையடுத்து ராணுவத்தின் துணையுடன் கொழும்பிற்குத் தப்பியோடிய கருணாவும் அவரது தோழர்களும் தெற்கிலேயே மறைந்து வாழ்ந்துவந்தார்கள். கருணாவால் கிழக்கில் கைவிடப்பட்ட அவரின் எடுபிடிகள் கிழக்கிலிருந்து ராணுவ முகாம்களில் அடைக்கமாகியதுடன், பலர் மட்டக்களப்பு பொலொன்னறுவை எல்லையில் அமைந்திருந்த பாரிய காட்டுப்பகுதியில் ஒளிந்துகொண்டார்கள். மட்டக்களப்பு - பொலொன்னறுவை எல்லைக் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கருணா குழு - ஈ என் டி எல் எப் குழுவினரின் குடில்களை புலிகள் தாக்கியபின்னர் (எச்சரிக்கை : ஒட்டுக்குழுவினரின் சடலங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன) அதேநேரம், கருணா துணைராணுவக் குழுவினரை வேட்டையாட புலிகள் தெற்குநோக்கி தமது அணிகளை அனுப்பி வைத்திருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஒரு கட்டத்தில் பரந்தன் ராஜனின் உதவியுடன் கருணா நேபாளத்தினூடாக இந்தியாவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. 1987 இல் இருந்து 1990 வரையான காலப்பகுதியில் இந்திய ராணுவத்தின் துணையுடன் புலிகளுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வந்தவர்களே இந்த ஈ என் டி எல் எப் எனும் துணைராணுவக் குழுவினர். இத்துணைராணுவக் குழுவினரின் சில தலைவர்கள் இந்தியாவின் ஆசீருடன் அமைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையிலும் அங்கத்துவம் வகித்தவர்கள். இக்குழுவிலிருந்து மாகாணசபை அமைச்சராக தெரிவான ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து இன்னொருவரை இப்பதவிக்கு இக்குழு நியமித்தது. 1990 இல் இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, பரந்தன் ராஜனின் துணைராணுவக் குழுவும் அவர்களுடன் இந்தியாவிற்குக் கப்பலேறித் தப்பித்துக்கொண்டது.
  4. ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் .......! 🌹
  5. தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகளின் நினைவலைகள் | நெகிழும் விவசாயி | தமிழ் தேசியன்
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை 2005 ஆம் ஆண்டு மாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் கிழக்கு மாகாணத்தின் நாமல்கம எனும் பகுதியினை ஊடறுத்துச் செல்லும் ஏ 11 நெடுஞ்சாலையில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாசி மாதம் 7 ஆம் திகதி ஒரு திங்கட்கிழமையாகும். 57 - 1020 எனும் இலக்கத்தகட்டினையுடைய டொயோடா ஹயேஸ் ரக பயணிகள் வாகனம் மரதங்கடவல - திருக்கொண்டாட்சிமடு ஆகிய பகுதிகளை இணைக்கும் ஏ 11 நெடுஞ்சாலையூடாகப் பயணித்துக்கொண்டிருந்தது. வீதியில் இந்த வாகனத்திற்கு முன்னால், ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு வாகனத்தைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி வேகத்தைக் குறைக்கத் தொடங்கினார். ஆனால், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டு, அபாய விளக்குகள் எரிந்துகொன்டிருந்த அந்த வெண்ணிற வாகனத்திலிருந்தவர்கள் கெள்சல்யன் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்யவே, அவர்கள் வாகனத்தை ஓய்வுக்குக் கொண்டுவரத் தொடங்கினார்கள். அப்போது நேரம் இரவு 7 மணி 45 நிமிடம். கெளசல்யன் பயணித்த ஹயேஸ் வாகனத்தில் 9 பேர் இருந்தனர். முன்னிருக்கையில், சாரதி விநாயகமூர்த்தியும், அருகில் முன்னாள் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனும், அவருக்கு அருகில் திருக்கோயிலைச் சேர்ந்த பொலீஸ் காவலர் சந்திரசேகரனும் அமர்ந்திருந்தனர். நடுவரிசை இருக்கையில் புலிகளின் கிழக்கு மாவட்டங்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனும், இன்னொரு அரசியல்த்துறைப் போராளி புகழனும், அவர்களுக்கருகில் இன்னொரு பொலீஸ் காவலர் நாகராஜாவும் அமர்ந்திருந்தனர். பின்னிருக்கையில் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகளான செந்தமிழன், நிதிமாறன், விநோதன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். இவர்களின் வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளைநிற ஹயேஸ் வாகனத்தைக் கடந்து செல்லும் தறுவாயில், அவ்வாகனத்தின் முன்னால் வீதியில் சீருடை தரித்த மூவர் நின்றுகொண்டிருப்பதை வாகனத்திலிருந்தவர்கள் அவதானித்திருக்கின்றனர். அவ்விடத்தில் நின்றவர்களின் ஒருவர் இவர்களின் வாகனத்தை நோக்கி கையசைக்கவே, மெதுவான கதியில் சென்றுகொன்டிருந்த இவர்களின் வாகனம், தனது வேகத்தை இன்னும் வெகுவாகக் குறைத்துக்கொண்டது. கெலசல்யன் பயணித்த வாகனம் ஓய்வுக்கு வரவும் அதனை நோக்கி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்தும், வீதியில் நின்றவர்களும் சேர்ந்து சரமாரியான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தார்கள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த விநோதன், கெளசல்யனும், சாரதியும் குண்டடிபட்டு முன்னோக்கிச் சாய்வதை அவதானிக்கிறார். கெளசல்யனின் வாகனத்தில் பயணித்த இரு பொலீஸ்காரரும் சந்திரநேருவின் காவலுக்கு வந்தவர்கள். அவர்கள் இருவரிடமும் டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகள் இருந்தன. இதை விடவும் சந்திரநேருவிடம் அவரின் பாவனைக்கென்று 9 மி மீ கைத்துப்பாக்கியொன்றும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்மீது தாக்குதலை நடத்தும் கொலைகாரர்கள் மீது திருப்பித் தாக்கவோ, மறைவாக ஒளிந்துகொள்ளவோ அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காது தொடர்ச்சியாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனத்தில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடந்தபோது, ஒரு பொலீஸ்காரர் வாகனத்திலிருந்து வெளியே குத்தித்து தப்பிக்க முயன்றார். வாகனத்தில் பயணித்த ஐந்து புலிகளின் செயற்பாட்டாளர்கள் எவரிடமும் எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை. இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த படுகொலையினைச் செய்துவிட்டு அந்த வெள்லைவான் கொலைகாரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்ரார்கள். வாகனத்தில் பயணம் செய்த 9 பேரில் கெளசல்யன், புகழன், நிதிமாறன், செந்தமிழன் ஆகிய விடுதலைப் புலிகளும், வாகனச் சாரதியான விநாயகமூர்த்தியும் அவ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்கள், சந்திரநேரு மற்றும் வினோதன் ஆகியோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த துப்பாக்கித் தாக்குதல் நடந்து பத்து நிமிடங்களின் பின்னர் அருகிலிருந்த வெலிக்கந்தை முகாமிலிருந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு ராணுவத்தினர் வந்து சேர்ந்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் முதலில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும், பின்னர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கும் கொன்டு சென்றனர். பின்னர் காயப்பட்டவர்கள் உலங்கு வானூர்திமூலம் கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவசர சத்திரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேருவின் உடல்நிலை ஆரம்பத்தில் தேறினாலும், இறுதியில் அதிகப்படியான இரத்தப் பெருக்கினால் மரணமடைந்தார். தாக்குதலில் உயிர் தப்பிய விநோதன் எனும் போராளியும், இன்னொரு பொலீஸ்காரரும் நடந்த படுகொலைபற்றிய விபரங்களை வெளிக்கொணர்ந்தனர்.
  7. நாளைப்பொழுது உந்தன் நல்லபொழுதாகும் என்று ........! 👍 ஒருமுறை இந்தப் பாடலைக் கேளுங்கள்.......நேர்மறை எண்ணங்கள் கொண்ட அற்புதமான பாடல்.......மனச்சோர்வுகளை அகற்றிவிடும்.......கண்ணதாசனின் வரிகளில்......! 👏
  8. பர்வதமலை - திருவண்ணாமலை மாவட்டம் 👌
  9. இது ஒரு சுவையான சைட் டிஷ் .......! 👍
  10. படம் : பட்டினத்தார்(1962) இசை : G .ராமநாதன் வரிகள் : பட்டினத்தார் பாடியவர் : TMS =======(தத்துவ பாடல்)======

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.