Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    20
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87997
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/08/22 in all areas

  1. பார்வை ஒன்றே போதுமே..........(14). அப்போது நிர்மலாவும் தனது கைப்கையில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்து நீங்கள் குறை நினைக்கக் கூடாது உங்களுக்கு தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஒரு வெற்றுக் காசோலையை ஒப்பமிட்டுக் குடுக்க உடனே முத்து அதை மறுத்து வேண்டாம் தங்கச்சி அது உங்களிடமே இருக்கட்டும். அப்பாவே எங்களுக்கு எவ்வளவோ செய்து விட்டார். சித்ராவும் ஓம் நிர்மலா நான் அவர் மானம் காக்க ஒரு தாவணித்துண்டுதான் குடுத்தேன், நிர்மலா இடைமறித்து அண்ணா இவளின் தாவணியைக் கட்டிக்கொண்டு அப்பா எப்படி இருந்திருப்பார் என்று நினைத்துப் பார் செமையாய் இருக்குதில்ல அவனுக்கும் சிரிப்பு வருது அதை மறைத்து கொண்டு உனக்கு நேரங்காலம் தெரியாமல் எப்போதும் குறும்புதான் என்று சொல்லி அவள் தலையில் குட்டுகிறான். போ அண்ணா வலிக்குது என்று சினுங்க, சித்ராவும் தொடர்ந்து அப்பா எங்களுக்கு கல்வி மட்டுமல்ல நிரந்தர வருமானத்துக்குரிய வழிகளும் செய்து, கடைத்தெருவில் பெரிய கடை ஒன்றை வாங்கவும் ஆலோசனைகள், வங்கியில் கடன் வாங்க என்று எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்.இவை யாவும் அவர் செய்திரா விட்டால் எங்களால் முடிந்திராது. இதுவே எங்கள் ஆயுளுக்கும் போதும். இந்த அயலில் எங்கள் குடும்பத்தை ஒரு கௌரவமான நிலைக்கு உயர்த்தி விட்டுள்ளார். அதைவிட எந்நிலையிலும் தாழாத தன்னம்பிக்கையை எங்களுக்கு ஊட்டி இருக்கிறார். இதைவிட எங்களுக்கு வேறென்ன வேண்டும். ரவிதாசும் உடனே நீங்கள் இருவரும் இன்றிலிருந்து எங்களுடைய சகோதரர்கள், இது வெறும் வார்த்தையல்ல என் இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று சொல்ல, நிர்மலா இடைமறித்து வேண்டாம் சித்ரா இவனுக்கு தங்கையாய் இருந்தால் குட்டி குட்டியே உன் மூளையை கூழாக்கி விடுவான். நீ விரும்பினால் எனக்கு அண்ணியாக வாயேன் நான் அப்பாவிடமும் அம்மாவிடமும் கதைக்கிறேன் என்று சொல்ல சித்ராவின் முகம் மலர்ந்தாலும் உடனே சிறிது வாட்டமடைகிறது. ஏன் சித்ரா நான் சொல்வது உனக்குப் பிடிக்கவில்லையா அல்லது அண்ணாவைப் பிடிக்கவில்லையா வேறு யாரையாவது விரும்புகிறாயா எதுவானாலும் தைரியமாகச் சொல்லு என்கிறாள். முத்துவும் கொஞ்சம் யோசிக்க, அப்படியல்ல நிர்மலா உங்கள் குடும்பத்தில் வாழ்க்கைப் படுவதென்றால் அது எங்களுக்கு மிகப்பெரும் பாக்கியமாகத்தான் இருக்கும். ஆனால் என்று இழுக்க, ஆனால் என்ன சொல்லு நிர்மலாவும் முத்துவும் கேட்க, ரவிதாசுக்கு மனம் நிம்மதியாய் இருக்கு, அவன் இப்பொழுதுதான் வெளியூர் பயணமாக லண்டன் போகும் போதெல்லாம் அங்கு ஒரு தமிழ் யுவதியை காதலிக்க ஆரம்பித்திருந்தான். அது இன்னும் நிர்மலாவுக்கு தெரியாது. சித்ராவும் ஆனால் நீங்கள் யாரும் குறை நினைக்க வேண்டாம். சில நாளாக நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன், இவ்வளவு காலமும் இல்லாமல் எங்கள் அம்மா மனம் சலனமடைகின்றா போல் இருக்கிறது. அப்பாவிடமும் அது தெரிந்தாலும் எதுவோ தடுப்பதுபோல் அம்மாவைத் தவிர்த்து அவர் விட்டேற்றியாக செல்வதையும் பார்க்கிறேன். ஆனால் இப்போதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கும் அம்மாவின் விருப்பத்தை ஏற்கத் தயங்குவதுமாக "இருதலைக் கொள்ளி எறும்பு போல்" தவிப்பதையும் உணரமுடிகிறது. நாங்கள் அறிய எனது அம்மாவையும் சிறுவயதிலேயே அப்பாவுக்கு கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். உடனேயே அடுத்தடுத்து பிள்ளைகள் என்றும் குடிக்கும் அப்பாவோடு எப்போதும் சண்டை என்றும் ......அவ வாழ்க்கையில் எந்த ஒரு சுகமும் கண்டதில்லை. இப்ப சமீபகாலமாகத்தான் அம்மா முகத்தில் ஒரு மலர்ச்சியையும் மந்தகாசத்தையும் பார்க்கிறேன். அதுதான் நான் யோசிக்கிறேன். இது ஒன்றும் எனக்குத் தெரியாதே அக்கா என்று முத்து சொல்ல உனக்கு என்னதான் தெரியும் முன்பெல்லாம் அம்மா என்கூட அறையில்தான் படுப்பது வழக்கம்.இப்போ உள்ளே குசினிக்குள்தான் படுக்கிறா. அதன் வரிச்சு மட்டைகளினூடாக அப்பாவைப் பார்ப்பதுபோல், பழைய காதல் பாட்டுக்களை ரேடியோவில் ரசித்துக் கேட்கிறா, என்னுடைய பவுடர் கியூடெக்ஸ் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாவிக்கிறா. இதெல்லாம் நான் பார்க்காத புது அம்மாவாக இருக்கு. சொல்லும்போதே அவள் குரல் கரகரக்கிறது, கண்களில் நீர் கோர்க்கிறது. ஓம்...சித்ரா சொல்வது சரிதான், இன்று நானும் அதைப் பார்த்தேன் என்கிறான் ரவிதாஸ் . எது வேலியால் எட்டி எட்டி பார்த்தீங்களே அப்போதா. என்கிறான் முத்து. தனக்குள் மாட்டைத்தவிர மற்றதெல்லாத்தையும் பார்த்திருக்கிறார் அண்ணர். ஆமாம் அப்போது அப்பாவின் முதுகுதான் தெரிந்தது அம்மாவ நன்றாகவே பார்த்தேன் ரொமான்ஸ் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர்கள் உங்களின் பெற்றோர் என்றுதான் நினைத்தேன். நினைத்துப் பார்த்தால் அப்பாவின் வாழ்க்கையும் அப்படித்தான் போய் இருக்கிறது எந்நேரமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்........! பார்ப்போம் இனி ...........! ✍️
  2. நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும் எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்.. நீ வேண்டுமே இந்த பிறவியை கடந்திட நீ போதுமே கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள..
  3. இனி பாக்க ஏலாது! நேரடியாக இரண்டாம் திருமணம் தான்.
  4. வணக்கம் ஐயா! கதையை எப்படி அருவி போல் எழுதுகின்றீர்கள்? எனக்கு ஒருவருக்கு பதில் எழுதவே உள்ள மூலை முடுக்கெல்லாம் யோசித்து மண்டையை சுவரில் இடிக்க வேண்டியுள்ளது.😁 உங்கள் உடம்பில் கலைமகள் குடியிருக்கின்றாள் என நினைக்கின்றேன்.🛕 வாழ்த்துக்கள்...தொடருங்கள் வாசிக்கின்றோம்.👏
  5. வணக்கம் வாத்தியார்........! ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு ஆண் : ஏய்..வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு பெண் : ஹோய் ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு பெண் : ஹான் வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு ஆண் : ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம் யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது பெண் : வா வா வா வாத்தியாரே வா.......! ---வா வா வாத்தியாரே---
  6. நீங்கள் இன்னுமா கொரனோ வுடன் இருக்கிறியள் நாங்க உக்கிரேன் ரஸ்யா சண்டைக்குள் பதுங்கு குழியில் இருக்கிறம் இங்கு லண்டனில் கொரனோ சாதரண காய்ச்சல் ஐந்து நாளைக்கு இருந்தது இப்ப அதையும் காணோம் .
  7. கொத்தார் குசும்பர். விவரமறியா பிள்ளையை போட்டு சித்திரவதை பண்ணுறார் 😎
  8. அரபிக்குத்து பாடலால் விஜய்க்கு காத்திருக்கும் பதவி.......! 😂
  9. பார்வை ஒன்றே போதுமே.......... (13). என்ன தம்பி நீங்கள் இப்படிப் பேசுறீங்கள்.நான் மாடு வாங்கத்தான் வந்தனான். தற்செயலாகத்தான் உங்களின் கைக் கடிகாரத்தைப் பார்த்தேன் அவ்வளவுதான். இல்லை அண்ணை , நீங்கள் பொய் சொல்லுறீங்கள். நீங்கள் அணிந்திருப்பது சாதாரண ஆடைகள்தான் ஆனால் உங்களின் மோட்டார் சைக்கிலே லட்சத்துக்கு மேல் இருக்கும். அதைவிட உங்களின் தோற்றமும் வீதிகளில் திரிந்து மாட்டு வியாபாரம் செய்ப்பவர் போல் இல்ல. ஒன்று நீங்கள் வசதியானவராய் இருக்க வேண்டும், அல்லது எங்காவது சைக்கிள் திருடுபவராய் இருக்க வேண்டும் என்கிறான் முத்து. இவர்கள் இப்படி வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க உள்ளே இருந்து என்ன அண்ணா பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே வந்த சித்ரா ரவிதாசைப் பார்த்ததும் திகைத்துப் போய் சார் நீங்களா, இது என்ன கோலம். எதுக்கு சார் இப்படி என்று கேட்கிறாள். உடனே முத்து அக்கா இவரை உனக்கு முன்பே தெரியுமா, உன்னைப் பார்க்கத்தான் வந்து வேலியால எட்டிப் பார்த்துக் கொண்டு நிக்கிறாரோ. ஓம் அண்ணா, இவர்தான் நான் வேலை பார்க்கும் வணிக வளாகத்தின் சொந்தக்காரர். பின்பு யோசித்து நேற்று அப்பா பரிசளித்த செயினைப் பார்த்து அதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்றவர். ஒருவேளை அதுக்காக வந்திருக்கலாம். ஆனால் ஏன் இப்படி மாறுவேடத்தில் வரவேணும் அதுதான் எனக்குப் புரியவில்லை என்று செல்கிறாள். அப்படியா என்னுடைய கடிகாரத்தையும் பார்த்து விலை எல்லாம் விசாரித்தாரே என்று சொல்லி விட்டு ரவிதாசைப் பார்த்து என்ன சார் உங்கட பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறம் என்கிறான். அப்போது ஒரு வெண்ணிற ஆடிக்கார் ஒன்று அன்னம்போல் அசைந்துவந்து அவர்கள் அருகில் நிக்கிறது. அதில் இருந்து தமையனைத் தேடி வந்த நிர்மலா இறங்கி வருகிறாள். அவளை பார்த்த சித்ராவும் அண்ணா இவர் நிர்மலா இவரின் தங்கை என்று முத்துவுக்கு அறிமுகம் செய்கிறாள். அந்நேரம் தங்கள் வீட்டின் முன்னால் கார் வந்து நிக்கும் சத்தம் கேட்டு திண்ணையில் இருந்து எழும்பிய சாமிநாதன் திரும்பி இவர்களைப் பார்க்க ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து தகப்பனைக் கண்ட நிர்மலா அண்ணா எங்கட அப்பா அண்ணா என்று சொல்லி விட்டு அப்பா அப்பா என்று கத்திக் கொண்டு உள்ளே சாமிநாதனை பார்த்து ஓடுகிறாள். பின்னாலேயே ரவிதாசும் அப்பா என்று அழுதுகொண்டு ஓட முத்துவும் சித்ராவும் ஒன்றும் புரியாமல் பின்னால் போகிறார்கள். ஓடிப்போய் தகப்பனின் காலைக் கட்டிப் பிடித்த நிர்மலா ஏனப்பா எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போனனீங்கள். உங்களை எங்கெல்லாம் தேடி அலைந்தோம் கிடைக்கவில்லையே என்று கதறுகிறாள். பின்னால் வந்த ரவிதாசும் தந்தையின் தோளில் முகம் புதைத்து அழுகின்றான். இதற்குள் மகேஸ்வரியும் சித்ராவும் முத்துவும் நிலைமையை ஓரளவு புரிந்து கொள்கிறார்கள். மகேஸ்வரி முன்னால் வந்து மெதுவாக நிர்மலாவின் தலையை வருடி தன்னுடன் அணைத்துத் தூக்குகிறாள். சாமிநாதன் கண்களில் இருந்தும் கண்ணீர் நிரம்பி கன்னங்களில் வழிந்தோடுகின்றது. அவரும் ரவிதாசை அணைத்துக் கொண்டு தேம்பி அழுகின்றார். ரவிதாசும் நீங்கள் எங்களை விட்டுட்டுப் போன சில மாதங்களிலேயே அம்மாவும் எங்களை அனாதையாக விட்டுட்டுப் போய் விட்டா அப்பா. உங்களை நாங்கள் தேடாத இடமில்லை. ஏனப்பா இப்படி என்று அழுகிறான். ஒருவாறு எல்லோரும் ஒருவரையொருவராக தேற்றிக் கொண்டபின் மகேஸ்வரி எல்லோருக்கும் தேநீர் போட உள்ளே போகிறாள்.முத்துவும் ரவிதாசும் சிநேகபூர்வமாய் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்திருந்த நிர்மலாவிடம் சித்ரா அவரை முதன் முதல் சந்தித்ததில் இருந்து எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்கிறாள்.அதை எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தேநீர் குடித்தபின் அந்த இடங்களை பார்ப்பதற்கு ரவிதாசும் நிர்மலாவும் செல்கின்றனர். அப்போது பின்னால் வந்த முத்து சித்ராவிடம் கண் ஜாடை செய்து தனது கையில் இருந்த கடிகாரத்தைக் கழட்டி ரவிதாசிடம் தர சித்ராவும் கழுத்தில் இருந்து சங்கிலியைக் கழட்டுகிறாள். உடனே அவர்களைத் தடுத்த ரவிதாசும் கொஞ்சம் பொறுங்கோ, என்ன இது இவை உங்களுக்கு அன்போடு அப்பா தந்த பரிசுகள்.அவை உங்களிடமே இருக்கட்டும்.நாங்கள் இவற்றுக்காக இங்கு வரவேயில்லை முத்து, எங்கள் அப்பாவைப் பற்றி ஏதாவது விபரம் அறியலாம் என்றுதான் வந்தோம் வந்ததுக்கு அப்பாவே கிடைத்து விட்டார். இவ்வளவு நாளும் ஒரு விரக்த்தியில் வாழ்ந்திருந்தோம் இப்போதான் உயிர் வந்ததுபோல் இருக்கிறது. நீங்கள் எங்கள் அப்பாவை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கு நாங்கள் உங்களுக்கு எவ்வளவு செய்தாலும் ஈடாகாது என்கிறான்.........! பார்ப்போம் இனி.......! ✍️
  10. பார்வை ஒன்றே போதுமே......... (12). அன்று வக்கீல் தவராசாவின் அலுவலகத்துக்கு கையில் பைலுடன் நிர்மலா வருகிறாள். அங்கு சித்ரா போன் பேசிக் கொண்டு இருக்கிறாள். பேசி முடித்ததும் போனை மேசையில் வைத்து விட்டு நிர்மலாவிடம் நலம் விசாரித்து விட்டு என்ன விடயம் நிர்மலா, ஒரு போன் செய்திருந்தால் நானே அங்கு வந்திருப்பன் என்கிறாள். நிர்மலாவும் பரவாயில்லை சித்ரா, இந்த ஒரு கேசில் உங்களின் ஆலோசனை தேவை என்று சொல்லி பைலை எடுத்து நீட்ட அதனுள் இருந்த பேப்பர்கள் சில கீழே விழுகின்றன. அடடா என்று நிர்மலாவுடன் சித்ராவும் குனிந்து அவற்றைப் பொறுக்குகின்றாள். அப்பொழுது சித்ராவின் ப்ளவுசுக்குள் இருந்து சங்கிலி டாலருடன் நழுவி கீழே தொங்குகிறது. அதைக் கவனித்த நிர்மலாவுக்கு அது தனது தந்தையின் செயின் போல் தோன்ற என்ன சித்ரா உங்களின் செயினும் டாலரும் அழகாய் இருக்கிறது, ஆனால் ஆண்களுடையது போல் இருக்கிறது என்ன. ஆமாம் நிர்மலா இது என் அப்பா நான் பட்டம் பெற்றபோது பரிசளித்தவர். ஓ ....அப்படியா நல்லாயிருக்கு என்று சொல்கிறாள். அப்படியே தற்செயலாக மேசைமேல் இருந்த போனைப் பார்த்ததும் அதுவும் தனது தந்தையுடையது போல் இருக்கவும் அங்கு அவளால் நிக்க முடியவில்லை. நீங்கள் இவற்றைப் பாருங்கள் நான் மாலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கிளம்ப, சித்ராவும் பரவாயில்லை நிர்மலா நானே கொண்டுவந்து தருகிறேன் என்றதும் சரி என்று சொல்லி உடனே கிளம்பி அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து நேராக தமையனின் அறைக்கு சென்று நடந்ததை சொல்கிறாள். உடனே ரவிதாசும் வா போய் விசாரிப்பம் என்று வெளிக்கிட அவனை நிர்மலா தடுத்து அவள் மாலை இங்கு வருகிறாள் அப்பொழுது பக்குவமாய் விசாரிக்கலாம் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று தோன்றுகின்றது. அன்று மாலை சித்ரா பைலுடன் அங்கு வரும்போது நிர்மலாவோடு ரவிதாசும் வரவேற்பறையில் அங்கிருந்தான். இருவரும் கோப்பி குடித்துக் கொண்டிருந்தனர். சித்ராவிடம் நீங்களும் ஒரு கோப்பி குடிக்கலாமே என்று சொல்ல சித்ராவும் வேண்டாம் நன்றி என்கிறாள். அப்போது நிர்மலா தமையனிடம் அண்ணா சித்ராவின் செயினைப் பாரேன் வித்தியாசமாக அழகாக இருக்கிறது என்கிறாள். ரவிதாசும் எங்கே பாப்போம் என்று அவன் ஜாடையாய் கேட்டு அவள் மார்பை நோக்க, ம்....இருங்கள் கழட்டித் தருகிறேன் என்று சித்ராவும் செயினைக் கழட்டி அவனிடம் தருகிறாள்.அதை கையில் வாங்கி நன்றாகப் பார்த்த ரவிதாஸ் நானும் இதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அதை அவளிடம் தந்து விட்டு உங்களின் போன் நம்பரைத் தர முடியுமா எனக் கேட்கிறான். அவளும் அதுக்கென்ன என்று சொல்லி தனது போனால் அவனது நம்பரைக் கேட்டு அதுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைக்கிறாள். அப்போது அவர்கள் இருவரும் அந்தக் கைபேசியை நன்றாக உற்றுப் பார்க்கின்றனர். பின்பு பொதுவாக அவன் அவளை விசாரிப்பதுபோல் விசாரித்து அவளது இருப்பிடத்தையும் அறிந்து கொள்கிறான். அதன்பின் சித்ரா கிளம்பி செல்கிறாள். அப்போது நிர்மலா என்ன அண்ணா ஒன்றும் விசாரிக்காமல் அவளை அனுப்பி விட்டாய் என்று சொல்ல அதற்கு ரவிதாசும் இந்தப் பெண்ணைப் பார்த்தால் பொய்யானவள் போல் தெரியவில்லை, ஒருவேளை நமது அப்பா இவைகளை இவளது தந்தைக்கு விற்றிருக்கலாம். இவளின் தந்தையை சந்தித்தால் அப்பாவின் விபரம் தெரியவரும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல நிர்மலாவும் ஓம்...அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்கிறாள். நாளைக்கு நானே நேரில் சென்று இவர்களை நோட்டம் விடப்போகிறேன் என்கிறான். அடுத்தநாள் ரவிதாஸ் மிகவும் சாதாரண உடுப்பு அணிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சித்ராவினது வீட்டருகே சென்று நிறுத்தி விட்டு வேலியால் எட்டி எட்டி இவர்களது வீட்டை நோட்டம் விடுகிறான். அங்கே பட்டியில் மாடுகள் நிக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் முற்றத்தில் செல்லமாக முட்டி முட்டி விளையாடுகின்றன. அங்காலே வீட்டு விறாந்தையில் ஒருவர் இருக்கிறார்.மறுபுறம் திரும்பி அவர் இருப்பதாலும் தாடி மீசையுடன் இருப்பதாலும் அவனால் அந்த ஆளை மட்டுக்கட்ட முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து அவருக்கு தேனீர் குடுத்து விட்டு அவர் அதை அருந்தும் அழகை ரசிப்பதுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டு அருகில் நிக்கிறாள். அவன் தனக்குள் நினைக்கிறான் இவர்கள் சித்ராவின் பெற்றோராய் இருக்க வேண்டும் என்று. ரவிதாசுக்கு அந்தப் பெண்மணியின் வசீகரமான சாந்தமான முகம்தான் தெரிகிறது. இன்னும் அவரைத் தெரிய வில்லை. அதனால் அங்கும் இங்குமாக நடந்து வேலியால் எட்டி எட்டி அவர் முகத்தைப் பார்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது பேப்பர், பால் எல்லாம் வீடுகளுக்குப் போட்டு விட்டு சையிக்கிளில் வீட்டுக்கு வந்த முத்து தனது வீட்டருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ரவிதாசைக் கண்டு மறித்து அண்ணே நீங்கள் யார் வேலியால எட்டி எட்டி பார்க்கிறீங்கள். இதற்குமுன் உங்களை நான் இங்கு பார்த்ததில்லையே என்று கேட்க ரவிதாசும் அவசரத்துக்கு என்ன சொல்வதென்று யோசித்து சட்டென்று தம்பி நான் மாடு வாங்க வந்தனான். முத்தத்தில் மாடுகளைக் கண்டதும் நின்று பார்க்கிறன். வீட்டுக்காரர் விப்பினமோ தெரியேல்ல என்று சொல்கிறான். ஓ....அப்படியா இது எங்களுடைய வீடுதான். ஆனால் நாங்கள் மாடுகள் விக்கிறதில்லை என்று சொல்லிவிட்டு சைக்கிள் ஹாண்டிலில் கை வைத்து திருப்ப முயல அவன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த ரவிதாசும் உங்களின் கடிகாரம் அழகாய் இருக்கு, என்ன விலையிருக்கும் என்று இயல்பாகக் கேட்கிறான். தெரியவில்லை இது அப்பா எனக்கு பரிசாகத் தந்தது என்று சொல்லிவிட்டு, என்ன நீங்கள் மாடு வாங்க வந்ததாக சொல்லுறீங்கள். பின் கடிகாரம் பற்றி விசாரிக்கிறீங்கள், உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் என்று கொஞ்சம் கடுமையாக கேட்கிறான். முத்துவின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது........! பார்ப்போம் இனி ...................! ✍️
  11. நினைத்து நினைத்து சிரிக்க 🤣
  12. முள்ளிவாய்க்காலில் மானாட மயிலாட.....😡

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.