Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87997
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/20/22 in all areas

  1. பட்டினத்தார் சொன்னது உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா? இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா? பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள். உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள். நான்... நான்... நான்... நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் வீடு கட்டினேன். நான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன். நான்.. நான்.. நான்.. என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!! நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ? இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும். உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்.
  2. மகன் வடகரோலினாவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறான்.அந்த வீட்டில் இந்த காய் காய்க்கும் மரங்கள் கூட நிற்கின்றன.ஏதோ பைன் மரம் என்கிறான்.தென்னை பனை மாதிரி வளர்ந்து நிற்கிறது.மேலே கொஞ்ச தும்பு மாதிரி இலைகள்.அத்துடன் இதே காய்களும். இதிலென்ன கொடுமை என்றால் இதன் இலை விழும் இடங்களில் எதுவுமே முழைக்காதாம். நீட்டு தும்பு மாதிரி விழும்.அதன் அடியில் உள்ள ஒரு பால் எல்லாவற்றையும் அழித்துவிடுமாம். நானும் வந்து ஒரு மாதமாகுது.இலை விழாத இடமா பார்த்து தோட்டம் சின்னதா போட்டிருக்கு.அப்பவும் கொஞ்ச இலை அதற்குள் கொட்டுது. காலையில் எழும்பி போய் அதைப் பொறுக்கிறதே வேலையா போச்சு. பொறுத்த நேரத்தில் படமெடுத்டுத்துள்ளனர். இணைப்புக்கு நன்றி அன்புத்தம்பி. இதை இனம்கண்டு படத்தைப் போட்ட சிறிக்கும் பாராட்டுக்கள்.
  3. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் நனையாத நிழலை போலே….ஏ… நனையாத நிழலை போலே ஏங்கும் ஏங்கும் காதல்.. ஆண் : முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே உன் இதழும் என் இதழும் போர்த்தி விடும் உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும் நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும் ஆண் : தீராமல் தூறுதே பெண் : தீராமல் தூறுதே ஆண் : காமத்தின் மேகங்கள் பெண் : காமத்தின் மேகங்கள் ஆண் : மழைக்காடு பூக்குமே நம்மோடு இனி இனி… குழு : புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே.......! ---புலராத காலைதனிலே---
  4. மாட்டுக்கு…. வளர்ப்பு சரியில்லை. 😂🤣
  5. மாடு விழுந்தே விட்டது. எதிர்பார்க்கலை.
  6. 👉 https://www.facebook.com/100003569738514/videos/3588920298001219 👈 ச்சீய்... ஒரு பெரிய மனுசன், இப்பிடி பயப்படலாமா.... 🤣
  7. மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா.......! 😍
  8. ஐயோ எதுக்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கத்தோட திரியுறானுவள். 😂
  9. 👉 https://www.facebook.com/100075227957359/videos/1104737890472155 👈 நட்புக் கரம் நீட்டியவருக்கு... நடந்த கதி. 😂
  10. வணக்கம் வாத்தியார்........! ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி…… ஆண் : பஞ்சு மிட்டாய போல இருக்குறியே கைபட்டாலே வெடியா வெடிக்குறியே குழு : லவ் இல்லாமல் உலகேதடி கிஸ் பண்ணாமல் லைப் வீணடி ஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன......! ---அடி அனார்களி---
  11. கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா........! 💞
  12. நீராடும் கண்கள் இங்கே.........! 👍
  13. இது இருந்தா அது இல்லே ........! 😍
  14. கோயில் என்ன கோயில். ஆர் நடத்துற கோயில்? அர்ச்சனை ஏதும் செய்தியளோ? அன்னதானம் போட்டினமோ? சும்மா மொட்டையாய் கோயிலுக்கு போய் கும்பிட்டன் எண்டால் என்ன மாதிரி? 😎
  15. என்ன தல பொசுக்கெண்டு இப்பிடி சொல்லிப்போட்டியள் ?!?!?!?!?!?!?!?!?!?!?!😵 படங்களோடை கனக்க எதிர்பார்த்தனே 🤔
  16. உந்தாள் எல்லாருக்கும் பதில் எழுதியே இரண்டு பக்கத்தை கொண்டு போகும் போல கிடக்கு...😎
  17. ஈழப்பிரியன்…. இந்தியன் என்றால், நம்ம அயல்நாட்டு, ஹிந்தி பேசும் இந்தியன் என நினைக்கப் போகிறார்கள். 😜 செவ் இந்தியன் என்று… குறிப்பிடுங்கள். 🤣
  18. ஏன்.? என்ன காரணம் . இப்போது முகம் எப்படி இருக்கிறது? காரில் வேகமாக போகலாமா இது எனக்கு நடந்ததல்ல.எனது அண்ணனின் மகனுக்கு நடந்தது.கோடைகாலம் மிகவும் வெப்பமாக இருக்கும் போது காரின் மூடியை திறந்துவிட்டு ஓட நன்றாக இருந்திருக்கும்.அனல்காற்று அடித்ததே தெரிந்திருக்காது. பெருமாள் அமைதி பிளீஸ்.
  19. அட எங்கடை பெரிசும் தொடங்கீட்டார்......ஆளை இனி கையிலை பிடிக்கேலாது. 😁 உங்கள் கார் ஓட்டத்தை தொடருங்கள்......நாங்களும் சேர்ந்து பயணிக்கின்றோம் 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.