Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87994
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34974
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    4043
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/29/23 in all areas

  1. என்ன எந்தன் நெஞ்சுக்குள்ளே......! 😍 ரவிசந்திரன் & கல்பனா.......! 💞
  2. மொசாம்பிக் நாட்டில் காணப்படும், Taraco என்னும் பறவை.
  3. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
  4. சுற்றம் சூழ வளர்க்க படுவதே ஒரு சிறப்பு. மணல் வீடு கடடலாம் வா
  5. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் ஆண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் ஆண் : முல்லைப் பூவை மோதும் வெண் சங்கு போல ஊதும் பெண் : காதல் வண்டின் பாட்டு காலம் தோறும் கேட்டு ஆண் : வீணை போல உன்னை கை மீட்டும் இந்த வேளை பெண் : நூறு ராகம் கேட்கும் நோயைக் கூட தீர்க்கும் ஆண் : பாதிப் பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது மீதம் இன்றித் தந்தாள் எனை ஏற்றுக் கொண்ட மாது பெண் : தேவியே மேவிய ஜீவனே நீதான் நீ தரும் காதலில் வாழ்பவள் நான்தான் ஆண் : நீ இல்லாமல் நானும் இல்லையே…. பெண் : மாலை ஒன்று சூடும் பொன் மேனி ஆரம் சூடும் ஆண் : மாதம் தேதி பார்த்து மனது சொல்லிக் கேட்டு பெண் : வேளை வந்து சேரும் நம் விரகம் அன்று தீரும் ஆண் : நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும் பெண் : காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும் ஆசை நெஞ்சம் இங்கே தினம் அனலில் வெந்து வாடும் ஆண் : வாடலும் கூடலும் மன்மதன் வேலை வாழ்வது காதல்தான் பார்க்கலாம் நாளை பெண் : பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ......! --- அதிகாலை நேரம்---
  6. யாரையும்... சும்மா விடாதே. 😂
  7. பொலீஸார் புலிகளைத் தேடிக்கொண்டிருக்கையில், தங்கத்துரையின் அமைப்பு மீண்டும் செயலில் இறங்கியது. சித்திரை முதலாம் திகதி தாடி தங்கராஜா எனும் பொலீஸ் உளவாளியை அவர்கள் கொன்றனர். இவர் முன்னாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சி. அருளம்பலத்தின் நெருங்கிய ஆதரவாளர். தங்கத்துரை, அருளம்பலத்தையும் கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் கொழும்பிலேயே தங்கிவிட்டதனால் அது சாத்தியமாகவில்லை. அருளம்பலம் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பிற்கு ஆதரவளித்திருந்தார். காங்கிரஸ் கட்சியூடாக அரசியலில் பிரவேசித்த அருளம்பலம் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் சமஷ்ட்டிக் கட்சியின் வேட்பாளரான நாகதனை 13,116 வாக்குகளுக்கு 12,508 வாக்குகள் என்ற அடிப்படையில் தோற்கடித்திருந்தார். ஆனால் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட அருளம்பலம் மிக்கடுமையான சரிவைச் சந்தித்து வெறும் 1042 வாக்குகளையே பெற்று மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதே தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்பாளர் சிவசிதம்பரம் 29858 வாக்குகளைப் பெற்று, 28137 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார். கொக்குவில் பகுதியில் அமைந்திருந்த தங்கராஜாவின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் ஜெகனும் அவரை பெயர் சொல்லி வெளியே அழைத்தபின்னர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆனால் தன்னைத் தாக்கவந்தவர்கள் மீது தங்கராஜா திருப்பிச் சுட்டபோது அவர்களுக்குக் கால்களில் காயம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தங்கராஜாவின் நாய்களைக் கொன்றுவிட்டு தங்கத்துரையும் ஜெகனும் தப்பிச் சென்றனர்.
  8. வெளியே வந்த புலிகள் பொலீஸ் வலையமப்பை அழித்தல் அல்பிர்டெ துரையப்பாவின் கொலை தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக சிறிமாவின் அரசாங்கம் கருதியது. துரையப்பாவின் மரணச் சடங்கிற்கு முன்னதாக கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் என்று சிறிமாவின் அரசு பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தப் பொறுப்பு பொலீஸ் அதிகாரிகளான பஸ்டியாம்பிள்ளை - பதமநாதன் தலைமையிலான பொலீஸ் குழுவினரிடம் வழங்கப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் இந்த இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளும் அவர்களது திறமைக்காகவும், குரூரத்திற்காகவும் பேர்பெற்றிருந்தார்கள். துரையப்பா கொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வரில் இருவரை அவர்கள் கைதுசெய்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் கலபதியும் கிருபைராஜாவும் ஆகும். கொலை நடந்து மூன்று மாதங்களின் பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். மீதி இருவரான பிரபாகரனையும், பற்குணராஜாவையும் பொலீஸாரால் கைதுசெய்ய முடிந்திருக்கவில்லை. ஆனால், பொலீஸார் இவர்கள் இருவரையும் தொடர்ச்சியாகத் தேடியே வந்தனர். இவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொலீஸ் குழுவில் கொன்ஸ்டபிள் ஏ. கருநாநிதியும் இருந்தார். இவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு, மாசி 14 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கருநாநிதியே தமிழ் ஆயுத அமைப்புக்களால் முதன் முதல் சுட்டுக்கொள்ளப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் ஆவார். அவரது கொலை பொலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய்ருந்தது. மேலும் தேடுதல்களில் பங்கெடுத்த இரு கொன்ஸ்டபிள்களான ஒரே பெயரைக் கொண்ட சண்முகநாதன், சண்முகநாதன் ஆகியோர் 1977 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் ஒருவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தையும், மற்றையவர் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்தையும் சேர்ந்தவர்கள். தமக்கு கிடைக்கப்பற்ற நம்பகமான தகவல் ஒன்றினையடுத்து இவர்கள் இருவரும் இனுவில் நோக்கி சிவில் உடையில் பஸ்ஸில் பயணித்திருக்கிறார்கள். உந்துருளியொன்றில் இவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு வந்த இரு இளைஞர்களில் ஒருவரான பாலா, காங்கேசந்துறை வீதி, இணுவில் சந்தியின் அருகில் இவர்களை சுட்டுக் கொன்றார். பிரபாகரன் எதிர்பார்த்திருந்த தாக்கத்தினை இந்த இரு பொலீஸாரின் கொலையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கொலைகளின் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணிக்கவும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழ்ப் பொலீஸ் அதிகாரிகளை அமர்த்துவதென்பது அரசிற்குக் கடிணமாகிப் போனது. அப்படி அமர்த்தப்பட்ட தமிழ் அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியிடங்களுக்கு மாற்றல்களை கேட்டுச் சென்றனர். பிரபாகரனின் போராளிகள் பொலீஸாரைக் கொன்றதன் மூலம் ஏற்பட்ட தைரியம் மற்றும் மக்களிடையே அக்கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்பினையடுத்து தங்கத்துரையின் அமைப்பும் செயற்பாட்டில் இறங்கியது. அவ்வருடம் ஆவணியில் தெற்கில் தமிழர் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து இவ்விரு குழுக்களும் செயலில் இறங்கின. ஆவணி 31 ஆம் திகதி, நீலநிற மொறிஸ் மைனர் காரில் மானிப்பாயில் இயங்கிவந்த மக்கள் வங்கிக்குச் சென்ற நான்கு இளைஞர் அணியொன்று அங்கிருந்த ஊழியர்களை பயமுறுத்தி 26,000 ரூபாய்களை கொள்ளையிட்டுச் சென்றது. அதே நாள் வேறு இளைஞர் அணியொன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த சுங்கத்திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று 8 ரைபிள்களை எடுத்துச் சென்றது. பல பாடசாலைகளிலிருந்து இரசாயணங்கள் களவாடப்பட்ட சம்பவங்களும் இக்காலப்பகுதியில் நடந்தேறின. தொழிற்சாலைகளில் சேமித்து வைக்கப்பட்ட டைனமைட் குச்சிகளும் காணாமற்போயின. திருநாவுக்கரசர் தங்கத்துறை மிகுந்த இறைபக்தி கொண்டவர். தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் பேசு முன் திருநாவுக்கரசரின் "நாம் யார்க்கும் குடியல்லோம்" என்கிற மந்திரத்தை ஓதியபின் பேச ஆரம்பித்தார். நாம் சுமார் பத்து வருடங்களாக ஒழுங்கான கட்டமைப்பின்றி இயங்கி வருகிறோம். ஆனால், அதனை உருவாக்கவேண்டிய தேவை இப்போது வந்துவிட்டது. அவருக்கு ஆதரவாக சிறி சபாரட்ணம், சின்ன சோதி, பெரிய சோதி ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர். அரசியல் விடயங்களைக் கவனிப்பதற்கு அரசியல்ப் பிரிவும், இராணுவ விடயங்களைப் பார்த்துக்கொள்வதற்கு ராணுவப் பிரிவுமாக ஐரிஸ் விடுதலை இராணுவத்தை ஒத்த கட்டமைப்பொன்றினை உருவாக்கவேண்டும் என்று தங்கத்துரை விரும்பியிருந்தார். அதன்படி தனது இராணுவப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இராணுவம் ( டெலா) என்றும், அரசியல்ப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( டெலோ) என்று பெயரிடலாம் என்று யோசனையினை அவர் முன்வைத்தார். சிறி சபாரட்ணம் அதனை வழிமொழிந்தார் சிறி சபாரட்ணம் டெலோ அமைப்பின் சில உறுப்பினர்கள் தமது அமைப்பே முதலில் உருவாக்கப்பட்ட அமைப்பென்று உரிமை கோருகிறார்கள். டெலோ அமைப்பின் பாடல்களில் ஒன்றும் இதனையே சொல்கிறது. ஆனால், இது உண்மையல்ல. 1973 இல் தமிழ் இளைஞர் பேரவையினை விட்டு வெளியேறிய முத்துக்குமாரசாமி ஈழம் விடுதலை இயக்கம் (எலோ) எனும் அமைப்பினை உருவாக்கினார் என்றும், அவ்வமைப்பே காலப்போக்கில் டெலோவாக மாற்றம்பெற்றதென்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், 1976 ஆம் ஆண்டு புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கொள்ளையின் பின்னர் எலோ அமைப்பு முற்றாக அழிந்து போய்விட்டது. ஆகவே, அதன் தொடர்ச்சியாக டெலோ இருக்கிறதென்பது உண்மையில் தவறான கருத்தாகும். கனகரட்ணம் மீதான கொலைமுயற்சி 1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்களின் அதிகரித்த ராணுவச் செயற்பாட்டினக் கண்ட ஆண்டாகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் (அப்போதுவரை பிரபாகரன் அமைப்பு என்றே அறியப்பட்டு வந்தது) டெலோ அமைப்பும் செயற்படத் தொடங்கியிருந்த காலம் அது. அவ்வருடம் சித்திரை மாதத்தில் கனகரட்ணம் மீதான கொலை முயற்சி மற்றும் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை கொலை ஆகியவற்றின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புப் பற்றிய செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கின. பின்னர், எயர் சிலோன் என்றழைக்கப்பட்ட விமானச் சேவையின் அவ்ரோ 748 விமானத்தைத் தகர்த்தெறிந்தது மற்றும் திருநெல்வேலி மக்கள் வங்கிக் கொள்ளை ஆகிய நடவடிக்கைகளையும் புலிகள் செய்திருந்தனர். டெலோ அமைப்பும் தன் பங்கிற்கு பொலீஸ் பரிசோதகர் பத்மநாதனையும், பொலீஸ் உளவாளி "தடி" தங்கராஜாவையும் கொன்றிருந்தனர். அரசாங்கம் உடனடியாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அவர்களையொத்த ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்வதாக அறிவித்தது. 1978 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி சனநெரிசல் மிக்க இரவு தொடரூந்தொன்றில் பிரபாகரன் கொழும்பிற்குச் சென்றார். அவரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் உமாமகேஸ்வரன் வரவேற்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், இராணுவத் தளபதியும் புகையிரத நிலையத்திற்கு முன்னாலிருந்த ஆனந்த பவன் எனும் விடுதிக்குச் சென்றனர். பிரபாகரன் அங்கு குளித்தவுடன் அவ்விடுதியிலேயே காலையுணவையும் உட்கொண்டனர். அங்கிருந்து பொத்துவில் தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான எம்.கனகரட்ணம் வசித்துவந்த கொல்லுப்பிட்டி நோக்கி பேரூந்தில் பயணமானார்கள். 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல்களில், இரு ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் எம். கனகரட்ணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாகப் போட்டியிட்டிருந்தார். சுயேட்சை வேட்பாளரின் மரணத்தையடுத்து அத்தொகுதிக்கான தேர்தல் புரட்டாதி 12 ஆம் திகதியே நடைபெற்றிருந்தது. இத்தேர்தலில் கனகரட்ணம், ஐ.தே. க உறுப்பினர் ஜலால்தீனுக்கு அடுத்ததாக அடுத்ததாக தெரிவுசெய்யப்பட்டார். ஜலால்தீனின் 30,315 வாக்குகளுக்குப் பதிலாக கனகரட்ணம் 23,990 வாக்குகளைப் பெற்றிருந்தார். தனிநாட்டிற்கான ஆணையினை முன்வைத்தே கனகரட்ணம் தேர்தலில் வாக்குக் கேட்டிருந்ததால் பெரும்பான்மையான தமிழர்கள் அவருக்கு வாக்களித்திருந்தனர். கனகரட்ணம் நிலச்சுவாந்தராக இருந்ததுடன், நெடுங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். கிழக்கு மாகாணத் தமிழர்களும் தனிநாட்டிற்கே தமது விருப்பைத் தெரிவித்திருக்கிறார்கள் எனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கருத்தினை உடைத்து அதனைத் தவறென்று நிறுவ, கனகரட்ணத்தை எப்படியாவது தனது கட்சிக்குள் இழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார் ஜெயவர்த்தனா. கனகரட்ணத்தின் கட்சித் தாவல் செய்தி எனது காதுக்கு எட்டியபோது மார்கழி 18 ஆம் திகதி காலை அவரை பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் சந்தித்துப் பேசினேன். அதனை உறுதிப்படுத்திய கனகரட்ணம் தான் நாளையே கட்சி தாவப்போவதாகவும், அதற்கான காரணத்தை தான் விளக்கி அறிக்கையொன்றினை வெளியிடவிருப்பதாகவும் என்னிடம் கூறினார். "நீங்கள் என்ன விளக்கத்தைக் கொடுக்கப் போகிறீர்கள் ?" என்று அவரிடன் வினவினேன். "நான் பிரேமதாசவின் உதவியாளர் சண்முகலிங்கத்திடம் இதுபற்றிக் கூறிவிட்டேன், நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று கூறினார். சண்முகலிங்கத்தை எனக்குத் தெரிந்திருந்தது. அவர் அதிபரின் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிரேமதாசாவே அந்த அலுவலகத்திற்குப் பொறுப்பாகவிருந்தார். நான் அவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, தயாரிக்கப்பட்ட அறிக்கையின் நகல் ஒன்றினை எனக்குக் காட்டினார். மறுநாள் காலை, 19 ஆம் திகதி டெயிலிநியூஸ் பத்திரிக்கை இச்செய்தியைப் பிரசுரித்தது. கனகரட்ணம் தனது அறிக்கையில் தான் கட்சி தாவுவதற்கான இரு காரணங்களைத் தெரிவித்திருந்தார். முதலாவது காரணம், ஜெயவர்த்தனா தமிழர் பிரச்சினைக்கு முடிவொன்றினைத் தருவார் என்று தான் பூரணமாக நம்புவதாகத் தெரிவித்தார். இரண்டாவது, கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வக்களித்திருந்தாலும்கூட, தனிநாட்டினை உருவாக்க அவர்கள் ஆதரவு வழங்கவில்லை என்று அவர் கூறினார். பாராளுமன்றத்தில் கனகரட்ணம் சமூகமளித்தவேளை அவரைத் துரோகி என்று அமிர்தலிங்கமும் ஏனையோரும் எள்ளி நகையாடினர். மார்கழி 22 அன்று கூடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மத்தியகுழு கனகரட்ணம் ஒரு துரோகியென்று பிரகடனம் செய்ததுடன், துரோகிகளுக்குப் பாடம் கற்பிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. அதுவரையில் புலிகள் அமைப்பு பொலீஸ் உளவாளிகள், பொலீஸார் மற்றும் அரசியல்வாதிகளுக்கே மரண தண்டனையை நிறைவேற்றி இருந்தது. அதுவரையில் அல்பிரெட் துரையப்பாவே மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதியாகும். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கொல்லப்படும்போது யாழ்நகர மேயராகவே இருந்தார். தியாகராஜாவின் மீதான கொலைமுயற்சி தமிழ் மாணவர் பேரவையாலும், அருளம்பலம் மீதான கொலை முயற்சி தங்கத்துரை அமைப்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவர்கள் எல்லோருமே வடமாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள். கனகரட்ணமே புலிகளின் மத்திய குழுவினரால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். கிழக்கு மாகாணத்திலிருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முதலாமவரும் அவரே. கனகரட்ணத்தின் நடமாட்டங்களை உமா மகேஸ்வரன் இருவாரங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார். கனகரட்ணம் ஒவ்வொரு நாள் காலையும் 9 மணிக்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் செல்வது வழமை. ஒருகாலை, பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் கனகரட்ணத்தின் வீட்டிற்கு அருகில் இருந்த பற்றைக்குள் அவருக்காகக் காத்திருந்தனர். கனகரட்ணம் தனது காரை நோக்கி நடந்துவருகையில் அவர்களில் ஒருவர் கனகரட்ணம் மீது சுட்டார். குண்டுபட்டு கீழே விழுந்த கனகரட்ணத்தை உதவியாளர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அவர் தப்பிவிட்டார். அவருக்கு நெஞ்சிலும், கழுத்திலும், விலாப் பகுதியிலும் குண்டு பாய்ந்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இரு இளைஞர்கள் தன்னை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பியோடுவதைக் கண்டதாக கனகரட்ணம் பொலீஸாரிடம் கூறினார். அவர்களில் ஒருவர் உயரமானவர், மற்றையவர் சற்று உயரம் குறைந்தவர் என்றும் அவர் கூறினார். விசாரணகளின்போது அந்த உயரம் குறைந்தவர் பிரபாகரன் என்பதையும், உயரமானவர் உமாமகேஸ்வரன் என்பதையும் பொலீஸார் அறிந்துகொண்டனர். பிரபாகரன் அன்றே கோட்டை புகையிரத் நிலையத்தினூடாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட, உமாமகேஸ்வரன் கொழும்பிலேயே தங்கிவிட்டார். பிரபாகரனின் புகைப்படத்தினை பொலீஸார் அதுவரை கொண்டிருக்காமையால், அவர் கடுமையாகத் தேடப்பட்டு வந்தபோதும், அவரால் இயல்பாக கொழும்புவரை வந்து செல்ல முடிந்தது. தனது வீட்டை விட்டுப் புறப்படும்பொழுது, வீட்டிலிருந்த தனது அனைத்துப் புகைப்படங்களையும் அழித்துவிட்டே அவர் சென்றிருந்தார். குழுவாக எடுத்த புகைப்படங்களில் இருந்தும் தனது படத்தை அவர் வெட்டி அகற்றியிருந்தார். சிறுநீரக வியாதியால் அவதிப்பட்ட கனகரட்ணம் சுடப்பட்ட அன்று உயிர் பிழைத்திருந்தாலும், அச்சம்பவத்தின் தாக்கத்தினால் மூன்று மாதங்களில் இறந்துவிட்டார். இச்சூட்டுச் சம்பவம் இரு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருந்ததுடன் இரு வேடிக்கையான பொலீஸாரின் தவறுகளையும் உருவாக்கியிருந்தது. முதலாவது சிக்கல், கனகரட்ணத்தைச் சுட்டது யாரென்பது. பிரபாகரன் குறிபார்த்துச் சுடுவதில் நிபுணர் என்பது பலரும் அறிந்த விடயம். ஆனால், கனகரட்ணம் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறியிருந்தது. ஆகவே, கனகரட்ணத்தைச் சுட்டது உமா மகேஸ்வரன் தான் என்று பேசப்பட்டது. இரண்டாவது வாதம், பிரபாகரனே தாக்குதலை மேற்கொண்டார், ஆனால் உமா மகேஸ்வரன் ஒத்துழைக்காததால் பிரபாவின் குறி தப்பி விட்டது என்பது. ஆனால், எவர் சுட்டிருந்தாலும், நடத்தப்பட்ட தாக்குதல் மிகக்கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்கள். இத்தாக்குதலையடுத்து கடும் கோபமுற்றிருந்த ஜெயவர்த்தனாவின் கேள்விகளுக்குப் பொலீஸாரால் பதிலளிக்க முடியவில்லை. இத்தாக்குதலையடுத்து சினமும், ஏமாற்றமும் ஒருங்கே ஜெயவர்த்தனாவை ஆட்கொள்ள, கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடத்துறையைப் பாவித்து தான் எதிரியென்று கருதியவர்கள் மீது விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டார். தனது ஊடகத்துறைப் பொறுப்பாளரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த நடவடிக்கைக்குப் பாவித்தார். அவரது நெருங்கிய ஆதரவாளரான வீரவன்னி சமரவீர எனும் பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்தில் கனகரட்ணம் மீதான கொலைமுயற்சிபற்றிப் பேசுமாறு அவர் ஏவிவிட்டார். வைகாசி 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய வீர்வன்னி அமிர்தலிங்கமே இக்கொலை முயற்சியின் பின்னாலிருப்பதாகவும், ஏனென்றால் கனகரட்ணத்தைத் துரோகி என்று அமிர்தலிங்கம் அழைத்து ஒரு மாத காலத்தின் பின் இது நடத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். அமிர்தலிங்கம் இந்த விஷமத்தனமான கருத்துப்பற்றி சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ் டி அல்விஸிடம் முறையிட, வீரவன்னியின் கூற்று பாராளுமன்றப் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. சபாநாயகரின் கட்டளைப் பணிந்த வீரவன்னி, கனகரட்ணம் மீதான கொலையினை அமிர்தலிங்கமும் கண்டிக்க வேண்டும் என்று சவால் விட்டார். எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளை கூறும்படி கேட்டதன் மூலம் வீரவன்னி பாராளுமன்றத்தில் சரித்திரம் ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளதாகக் கூறினார் அமிர்தலிங்கம். உடனேயே ஆளுந்தரப்பும் உறுப்பினர்கள் அமிரை நோக்கி கூக்குரலிடத் தொடங்கவே, "உங்கள் கூச்சல்களுக்கு நானோ எனது கட்சியோ அஞ்சப்போவதில்லை" என்று பதிலுக்குக் கூச்சலிட்டார். ஆனால், அடக்கத்துடன் வீரவன்னியின் கோரிக்கைக்குச் சம்மதித்த அமிர்தலிங்கம் கனகரட்ணம் மீதான தாக்குதலை தானும் தனது கட்சியும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார். இக்கொலையின் பின்னால் இருப்பவர்களைத் தேடிக் கைதுசெய்ய பொலீஸார் அதிகாரி பஸ்டியாம்பிள்ளை தலைமையில் பொலீஸ் குழுவொன்றினை உருவாக்கினார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயரமானவர் என்பதை வைத்துக்கொண்டு தமிழ் மாணவர் பேரவையின் உறுப்பினரான மாவை சேனாதிராஜாவே அது என்று எண்ணிக்கொண்டு அவரைக் கைதுசெய்யுமாறு பஸ்டியாம்பிள்ளை பொலீஸாருக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு தேடப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகளையும் ஒட்டினார் பஸ்டியாம்பிள்ளை . அந்த நால்வரும் உமா மகேஸ்வரன், நாகராஜா, வாமதேவன் மற்றும் கண்ணாடி ஆகியோராகும். ஆனால் 1973 இல் கண்ணாடி கொல்லப்பட்டது அப்போது பஸ்டியாம்பிள்ளைக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் சுவரொட்டிகளை ஒட்டிய பஸ்டியாம்பிள்ளை, இவர்களைக் காட்டித் தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
  9. வெளியே வந்த போராளிகள் 1977ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச காவல்த்துறையினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள், நாடு முழுவதும் தமிழர்மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அமிர்தலிங்கம் மீது ஜே ஆரினால் செய்யப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் ஆகியன மிதவாத தமிழர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்ததோடு, ஆயுத அமைப்புக்கள் முன்னுக்கு வரவும் காரணமாக அமைந்தன. தனது நடவடிக்கைகள் மூலம் தமிழ்மக்கள் அச்சமடைந்து அடங்கிவிடுவார்கள், போராட்டங்களைக் கைவிட்டு விடுவார்கள் என்று ஜே ஆர் நிணைத்தது மிதவாத தமிழ் அரசியல்வாதிகளான அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்களைப் பொறுத்தவரை உண்மையாகவே இருந்தது. 1977 ஆம் ஆண்டின் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் பற்றி அரசுடன் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கியமுன்னணி பலமுறை சென்றிருந்தது. இந்தக் கூட்டங்களின் மூலம் அரச பதவிகளில் பணிபுரிந்த தமிழ் உத்தியோகத்தர்கள் இக்கலவரங்களினால் பாதிப்படைந்தது பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தை த.ஐ.வி. மு பாவித்துக்கொண்டது. முன்னணியின் கரிசணைகளை ஜே ஆர் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார். 1977 ஆம் ஆண்டு, மார்கழி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் செயகலத்தில் வர்த்தக அமைச்சரான லலித் அத்துலத்முதலி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் குழுக் கூட்டத்தில் முன்னணியும் கலந்துகொண்டது. முன்னர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்கிற தமது முடிவை மாற்றிக்கொண்டு அமைச்சர் நடத்திய இக்கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கலந்துகொண்டது இளைஞர்களுக்குக் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னணியின் இந்தத் திடீர் முடிவினை எதிர்த்து யாழ்ப்பாணம் முழுவதும் கண்டனச் சுவரொட்டிகள் இளைஞர்களால் ஒட்டப்பட்டிருந்தன. யாழ்ப்பாணச் செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆகவே, மிதவாதிகளான முன்னணியின் தலைவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உலாவுவதற்கு பொலீஸ் பாதுகாப்பு அரசால் வழங்கப்பட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணச் சமூகத்திலிருந்து மெதுமெதுவாக அந்நியப்பட்டுப் போகத் தொடங்கினார்கள். அதுலத் முதலியின் யாழ்ப்பாணப் பயணத்தை பதிவிடுவதற்காக நான் அப்பொழுது யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அமிர்தலிங்கத்தின் திறமையான பேச்சினை நான் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தேன். ஏ. அமிர்தலிங்கம் அவர் இப்படிக் கூறினார், "தமிழ்ச் சமூகத்தால் எதிர்நோக்கப்படுகின்ற பல பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துவைக்க பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா எடுத்துவரும் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் தமது முழு ஆதரவினையும் வழங்கவேண்டியது அவர்களின் கடமையாகும். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நீதியுடனும் நேர்மையாகவும் தீர்த்துவைக்கப்போவதாக பிரதமர் எம்மிடம் உறுதியளித்திருக்கிறார். அவருக்கு நாம் தேவையான கால அவகாசத்தினையும் சந்தர்ப்பத்தினையும் வழங்கவேண்டும். பரஸ்பர நல்லெண்ணமே இன்று தேவையானது. எமது சார்பில் முழு ஆதரவினையும் நல்லெண்ணத்தையும் நாம் அரசுக்கு வழங்கியிருக்கிறோம். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் செயல்வடிவில் நிகழ்த்தும் என்று நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று பேசியிருந்தார். பாராளுமன்றத்திலும் த.ஐ.வி. மு அரசுக்கான தனது ஆதரவினை வழங்கி வந்தது. 1977 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "எதிர்க்கட்சியின் வேலை அரசு செய்யும் எல்லா விடயங்களையும் எதிர்ப்பது என்பது அல்ல. மாறாக தாம் நியாயம் என்று நினைக்கும் விடயங்களை ஆதரிப்பது, தவறென்று நினைப்பதை சுட்டிக்காட்டி, ஆட்சி சிறந்தவகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதுமே ஆகும்". மார்கழி 26 இல் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவரது அரச ஆதரவு நிலை பற்றி வினவியபோது, "இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே? எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்க் கூட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எமது கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கும் என்று கூறியிருந்தோமே?" என்று பதிலளித்தார். தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் அமிர்தலிங்கம் விளக்க முனைந்தமை ஜே ஆருக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. ஜே ஆர் ஜெயவர்த்தனா தமிழர்களை நீதியாகவும், சமமாகவும் நடத்தும் ஒரு தலைவர் எனும் பெயரினை சர்வதேசத்தில் பெற்றுக்கொள்ளவே ஜே ஆர் முயன்று வந்தார். ஆகவே அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செயற்படவேண்டும் என்று ஜே ஆர் விரும்பினார். அவர் நினைத்தவாறே அமிரும் அவரது மிதவாத அரசியல் சகாக்களும் அப்போது செயற்பட்டு வந்தனர். விளைவுகள் எப்படியாக இருப்பினும் தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் தான் நிச்சயம் தீர்த்துவைப்பேன் என்று ஜே ஆர் 1978 ஆம் ஆண்டு கூறியிருந்தார். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை படிப்படியாகத் தளர்த்தி வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜே ஆரின் இந்தப் பேச்சோடு முழுவதுமாக தனது எதிர்ப்பினைக் கைவிடும் நிலமைக்கு வந்திருந்தது. ஒவ்வொரு சுதந்திர தின நிகழ்வையும் கறுப்புக்கொடி காட்டிப் புறக்கணிப்புச் செய்துவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் 1978 ஆம் நடைபெற்ற 30 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பதில்லை என்கிற முடிவை எடுத்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே ஆர் பதவியேற்கும் நாளன்று பேசிய அமிர், ஜே ஆர் மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் அவருக்கெதிரான எந்தவித புறக்கணிப்புப் போராட்டங்களையும் கைக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பினை மாற்றியமைத்தே ஜே ஆர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு, சித்திரை 22 ஆம் திகதி, அனைத்துப் பாராளுமன்ற செயற்குழுக்களிலும் அங்கம் வகிப்பதன் மூலம் அரசுக்கு ஆதரவாக நெருங்கிச் செயற்படும் முடிவினை அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் எடுத்திருந்தார்கள். அமிர் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடன் அவதானித்துக்கொண்டிருந்தனர்.
  10. 50 களில் இந்தியாவுக்கு விஜயம் செய்த தலாய்லாமா காமாராஜருடன் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த உத்தம புத்திரன் படப்பிடிப்பு தளத்துக்கு விஜயம் செய்த பொழுது எடுத்த புகைப்படம் இது. இந்த உத்தம புத்திரன் படத்தில் சிவாஜி யாரடி என் மோகனி என்ற பாடலுக்கு நடனமாடிய ஸ்டைலை பார்த்து வியந்து கமலஹாசனே நேரடியாக ஒரு பேட்டியில் கேட்டிருந்தார் சிவாஜியிடம் எப்படி அந்த காலமே இப்படி ஆட முடிந்தது என்று. அதற்கு திரு சிவாஜி அந்த பாராட்டு நடன இயக்குனர் திரு ஹீராலாலுக்கு உரியது என்று பதிலளித்திருக்கிறார். இடது புறத்தில் இருப்பவர் நடிகை பத்மனி சகோதரி ராகினி
  11. அமுதை பொழியும் நிலவு நாயகி ஜமுனா அவர்கள் 27/01/2023 அன்று காலமானார்........! அன்புள்ள மான்விழி ஜமுனா அவர்களின் வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு......! ஆழ்ந்த இரங்கல்கள் ......!
  12. தமிழ் மிதவாதிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியது. பொலீஸ் அராஜகத்தினை ஜே ஆர் நியாயப்படுத்தியிருந்ததும், தமிழர்களுடான போருக்கான அவரின் அறைகூவலும் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்திருந்தன. ஆகவே, ஆயுத அமைப்புக்கள் தாமும் மோதலுக்கு ஆயத்தம் என்கிற ரீதியில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர். ஜே ஆருக்கு யுத்தமே வேண்டுமென்றால், நாமும் அதனைத் தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருந்தனர். தமிழருக்கெதிரான வன்முறைகளின்போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் அத்தாக்குதல்களுக்காகப் பதிலடி வழங்கியே தீரவேண்டும் என்கிற மனநிலையில் இருந்தனர். தாம் தமிழர் என்பதற்காகவே சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களில் சிலர் தங்கத்துரையின் அமைப்பிலும், பிரபாகரனின் அமைப்பிலும் இணைந்துகொண்டனர். கொழும்பில் இயங்கிவந்த குற்றச்செயல் விசாரணைப் பிரிவு அரசுக்கு அனுப்பிய உளவுக் குறிப்பில் இவ்விரு அமைப்புக்களிலும் இணைந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 இலிருந்து 50 வரை இருக்கலாம் என்றும், அனுதாபிகளின் எண்ணிக்கை 100 இலிருந்து 200 வரை இருக்கலாம் என்று கூறியிருந்தது. இதேவேளை மக்களின் அனுதாபம் இளைஞர்களின் பக்கம் திரும்பியிருந்தது. ஆயுத அமைப்புக்கள் உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்ன்ணையினர் மீது, குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். அரசுக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டினை எடுக்குமாறு அவர் கோரப்பட்டார். இளைஞர்களின் அழுத்தத்திற்குப் பணிந்துபோவதைத்தவிர த.ஐ.வி.மு தலைமைத்துவத்திற்கு வேறு வழி இருக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை புரட்டாதி முதலாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்றவேளை, அதற்குத் திருத்தம் ஒன்றினை முன்வைத்த த.ஐ.வி.மு தலைமைப்பீடம், தமிழ் மக்களுக்கான தனிநாட்டினை அரச கொள்கை உரையில் இணைத்துக்கொள்ளாமைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் கொதிப்படைந்த அரசுதரப்பு அமிர்தலிங்கம் இனங்களுக்கிடையே பகைமையுணர்வினை உருவாக்கும் பேச்சுக்களில் ஈடுபடுகிறார் என்று குற்றஞ்சாட்டியது. மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்க அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், அமிர் முற்கரண்டி நாக்குக் கொண்டவர் என்றும், இருமுகம் கொண்டவர் என்றும் சாடினார். தெற்கில் சிங்களவருக்கு ஒரு முகத்தினையும், வடக்கே சென்றவுடன் தமிழருக்கு இன்னொரு முகத்தினையு காட்டுபவர் என்றும் கூறினார். அமிர்தலிங்கத்தின் இனவாதப் பேச்சே சிங்கள மக்களை கலவரங்களில் ஈடுபடத் தூண்டியதாகவும் அவர் நியாயப்படுதினார். புரட்டாதி 22 ஆம் திகதி சபாநாயகரின் அதிகாரத்தைப் பலப்படுத்தி குடியரசு யாப்பில் திருத்தங்களைச் செய்யக்கூடியவகையில் தீர்மானம் ஒன்றைப் பாராளுமன்றத்தி ஜே ஆர் சமர்ப்பித்தார். இதன்மூலம் யாப்பு, அதனோடிணைந்த ஏனைய சட்டங்களையும் சீர்செய்யும் குழுவினரையும், அதன் தலைவரையும் உருவாக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படும். இத்தீர்மானம் மறுநாளே பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளைஞர்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தினச் சந்தித்துவந்த அமிர்தலிங்கமும் அவரது கட்சியும், அரசியலமைப்பை மாற்றும் குழுவின் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவிற்கு வந்தனர். அனால், 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 4 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைநாட்ட கடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை உலகிற்கு "அரசுக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சி" என்று காட்டியும் தன்னைப் பலப்படுத்த நினைத்திருந்த ஜே ஆருக்கு அமிர்தலிங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வருவதன் மூலம் சிறிமாவின் அரசியல் பலத்தை முற்றாக முடக்கிவிடலாம் என்று அவர் எண்ணியிருந்தார். செளமியமூர்த்தி தொண்டைமான் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் தெரிவுக்குழுவின் அங்கத்தவர்களின் விபரம் கார்த்திகை 3 ஆம் திகதி வெளியானது. த.ஐ.வி.மு இனரின் பிரதிநிதி எவரையும் இத்தெரிவுக்குழு கொண்டிராதபோதும், தொண்டைமான் இக்குழுவில் பங்கேற்றிருந்தார். இத்தெரிவுக்குழுவின் அங்கத்தவர் விபரங்கள், ஜே ஆர் ஜெயவர்த்தனா - தலைவர், ஆர் பிரேமதாசா, லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்கா, ரொனி டி மெல், கே. டபிள்யூ தேவநாயகம், எம் எச் எம் நைனா மரிக்கார், சிறிமாவோ பண்டாரநாயக்கா, மைத்திரிபால சேனநாயக்கா மற்றும் தொண்டைமான். அமிர்தலிங்கத்தை மையப்படுத்தி, மொத்த த.ஐ.வி. மு இனர் மீது மிகக்கடுமையான பிரச்சாரத்தை ஜே ஆர் கட்டவிழ்த்து விட்டிருந்தார். லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், ரூபவாகினி எனப்படும் தேசியத் தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைக் கைவசம் வைத்துக்கொண்டு ஜே ஆர் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருந்தார். ஊடகத்துறையின் சுயாதீனமான செயற்பாட்டிற்காக முன்னர் குரல்கொடுத்த ஜே ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் அரச ஊடகத்துறையினை தனது சொந்த கருத்து வெளியிடும் சாதனங்களாக மாற்றினார். தனது முன்னாள் காரியதரிசி ரனபால பொடினாகொடவை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக அமர்த்தியதுடன், அவரூடாகவே பத்திரிக்கைத் துறையினைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பொடினாகொட ஒவ்வொரு காலையிலும் ஜே ஆரின் வாசஸ்த்தலத்திற்குச் சென்று, ரூபவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர்களுடன் ஜே ஆரைச் சந்தித்து, அங்கு ஜே ஆர் கூறும் செய்திகளை அப்படியே தத்தமது ஊடகங்களில் பிரச்சாரப்படுத்தி வருவது வழமையானது. ஆரம்பத்திலிருந்தே அமிர்தலிங்கமும், சிறிமாவோவுமே ஜே ஆரின் முக்கிய இலக்குகளாக இருந்து வந்தனர். அமிர்தலிங்கத்தை தட்டி, அடக்கிவைப்பது, சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைச் சிதைப்பது ஆகிய இரண்டுமே ஜே ஆரின் குறிக்கோளாக அன்று இருந்தன. அமிர்தலிங்கத்திற்கெதிரான பிரச்சாரம் அவரை ஒரு பூதமாக சிங்களவர் மத்தியில் காட்டியதோடு, தமிழ் ஆயுதக்குழுக்களை பின்னாலிருந்து தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை வளர்த்தெடுக்கும் ஒரு தமிழ் இனவாதியாகவும் சித்தரித்திருந்தார். அமிர்தலிங்கத்திற்கு இருபுறத்திலும் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. அவரது அன்றைய நிலையினை முன்னிறுத்தி அவரை 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி பேட்டி கண்டேன். பாராளுமன்றத் தெரிவுக்குழுவைப் புறக்கணித்ததன் காரணம் ஜே ஆர் இன் ஜனாதி அதிகாரத்தை புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தவில்லையென்றும், ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தாலென்ன, தமிழர்கள் அதுபற்றிக் கவலைப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். "உங்கள் முழு வீடுமே தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது யன்னல்களின் திரச்சீலைக்கு என்ன வர்ணம் பூசுவது என்று உங்களால் கவலைப்பட முடியுமா? " என்று அவர் கேட்டார். மத்தளத்திற்கு இருபக்கமும் அடிபோல தனது நிலை இருப்பதாக இச்செவ்வியில் அவர் கூறினார். "நான் ஜே ஆரின் பக்கம் நிற்பதாக இளைஞர்கள் எண்ணி என்மீது விமர்சனம் செய்கிறார்கள். ஜே ஆரோ நான் இளைஞர்களின் பக்கம் நிற்பதாக நினைத்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்" என்று அவர் கூறினார். என்னிடம் தனிப்பட்ட ரீதியில் கூறும்போது, "இவர்கள் இருவரில், ஜே ஆரே மிகவும் ஆபத்தானவர், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர். நாம் அவரை பிழையான வழியில் அணுகினோம் என்றால், தமிழர்களை முற்றாக அழித்துவிடுவார்" என்றும் அவர் கூறினார். ஜே ஆரின் பழிவாங்கும் குணத்தைப்பற்றி நான் கேள்விப்படுவது இதுவே முதற்தடவையல்ல. 1950 களில் ஜோன் கொத்தலாவலை ஜே ஆரைப் பற்றிக் கூறும்போது, "புல்லுக்குள் மறைந்திருக்கும் பாம்பு" என்று விளித்திருந்தார். சிறிமா பலமுறை ஜே ஆர் ஐப் பழிதீர்க்கும் மனிதர் என்று அழைத்திருந்ததுடன், அவர் கையால் பலமுறை துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறார். தமிழர்களைப்பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டின் கலவரங்களைத் தூண்டிவிட்டது ஜே ஆரே என்று உறுதியாக நம்புகின்றனர். யாழ்ப்பாண மக்களால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக ஜே ஆர் கருதியதாலேயே தமிழினத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் அவர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் உறுதியாக நம்பினர். ஜே ஆர் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கும் சம்பவம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் இடம்பெற்றிருந்தது. ஐ தே க வை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜே ஆர் யாழ்ப்பாண பிரச்சாக் கூட்டம் ஒன்றிற்கு போயிருந்தார். யாழ் முற்றவெளியில், துரையப்பா அரங்கிற்கு அருகில் தற்காலிக மேடையொன்று அமைக்கப்பட்டிருந்தது. ஜே ஆர் மேடையில் ஏறியபொழுது மேடை சரிந்து வீழுந்து குழப்பகரமான நிலையொன்றினை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஜே ஆரும், மேடையில் அவருடன் இருந்தோரும் கீழே விழுந்தனர். அதன்பின்னர் கூட்டம் நிறுத்தப்பட்டது. இது தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக ஜே ஆர் கருதினார். மேடையினை பலவீனமாக்கிய செயலின் பின்னால் இருந்தவர்கள் தமிழ் ஈழ மாணவர் அமைப்பான ஈரோஸ் அமைப்பின் அன்றைய உறுப்பினர்களும், இன்று கொழும்பில் ஈ பி டி பி அமைப்பில் செயல்ப்பட்டு வருகிறார்களுமான சிலரே. என்னிடம் அவர்கள் இதுகுறித்து ஒருமுறை பேசியபோது, மேடையைச் சுற்றி நிலையாக நடப்படும் குற்றிகளை, அவை வீழ்ந்துவிடாமலிருக்கக் கட்டும் கயிற்றை தாம் அறுத்துவிட்டதனாலேயே மேடை சரிந்து வீழ்ந்ததாகக் கூறினர்.
  13. கொழும்பு திரும்பிய அமிர் ஆவணி 19 அன்று கொழும்பு திரும்பிய அமிர் பாராளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் பேசும்போது யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திவரும் அராஜக வன்முறைகளைப் பற்றி முறையிட்டார். இந்த விவாதத்தில் பேசிய அமிர், "என்னை நோக்கிச் சுடுவதற்காக பொலீஸார் துப்பாக்கியை நீட்டினர். இன்று நான் உயிருடன் இருப்பதே எனது அதிஷ்ட்டம் தான். அவர்கள் எல்லோருமே பொலீஸ் சீருடையில்த்தான் இருந்தார்கள், தம்மை அடையாளம் காண்பதைத் தவிர்த்துக்கொள்ள அவர்களது இலக்கங்கங்கள் சீருடையிலிருந்து அகற்றப்பட்டிருந்தன. எதற்காக அப்பாவிகளைக் கொல்கிறீர்கள் என்று நான் அவர்களை வினவியபோது என்னை தூஷண வார்த்தைகளால் வைததோடு, துப்பாக்கியின் பின்புறத்தாலும் அடித்தார்கள்" என்று கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், "எங்கே, அந்த தூஷண வார்த்தைகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்" என்று ஏளமாக அமிரைப் பார்த்துக் கேட்டார்கள். "இல்லை சபாநாயகர் அவர்களே, இந்த கெளரவமான அவையில் அந்த அருவருக்கத்தக்க, இனவாதத் தூஷணச் சொற்களைக் கூறப்போவதில்லை. பாராளுமன்றத்தில் பேசப்பட முடியாத கீழ்த்தரமான சொற்கள் அவை" என்று அமிர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றினை அமிர் பாராளுமன்றத்தில் வழங்கியதோடு, இவற்றுக்கெல்லாம் காரணம் பொலீஸாரே என்பதையும் உறுதிப்படுத்தினார். பின்னர் பிரதமரைச் சுட்டிக்காட்டி, "இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடும் பொலீஸாரைக் கொண்டு ஒரு நாட்டினை எப்படி நடத்துவீர்கள்?" என்று அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தனா, "மிக அண்மைக்கலம் வரை போலீஸார் தமிழர்களிடமிருந்து தாக்குதலை எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள், ஆகவேதான் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார். ஒத்திவைப்புப் பிரேரணையில் இறுதியாகப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தின் குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்ததுடன், சினமேலீட்டுடன் பதிலளித்தார். புத்தூர் சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட ஜே ஆர், "என்ன துணிவிருந்தால் உங்கள் பையன்கள் எமது பொலீஸாரை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவார்கள்?" என்று கேட்டார். இலங்கையில் பிரிவினையினை உருவாக்க அமிர்தலிங்கம் முயல்கிறார் என்று ஜே ஆர் கூறியபோது பாராளுமன்றமே அதிரும்வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆரவாரமிட்டனர். "இலங்கையில் தனியான நாடொன்றினை உருவாக்கப்போகிறார்கள், திருகோணமலையினையே அதற்குத் தலைநகராக்கப் போகிறார்கள் என்று கூறும்போது மக்கள் அமைதியிழக்கிறார்கள். திருக்கோணமலையினைக் கைப்பற்றினால் ஆசியாவுக்கான வாயில் திறக்குமென்று நெப்போலியன் கூறியதாகவும், அந்தத் திருகோணமலையினையே தமிழர்கள் தலைநகராக்கப்பார்க்கிறார்கள் என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வரும்போது சிங்களவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. அடுத்ததாக, நெப்போலியன் அப்படியொன்றைச் சொன்னார் என்பதைக்கூட நாம் நம்பவில்லை". "நீங்கள் வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்று கூறிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபடும்போது நாட்டிலுள்ள ஏனைய மக்கள் இதற்கு எந்தவிதத்தில் பதிலளிப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்களுக்குச் சண்டைதான் வேண்டுமென்றால், வாருங்கள், தாராளமாகச் சண்டை செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்யலாம். தமிழர்களுக்கு நான் கூறவிரும்புவது இதைத்தான், சிங்கள மக்களும் இதைத்தான் சொல்கிறார்கள்" என்று ஜே ஆர் ஆவேசமாகக் கூறினார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயரவும், அவர்களின் சொத்துக்கள் நாசமக்கப்படவும் காரணமாக இருந்த பொலீஸாரின் வன்முறைகள் பற்றி ஜே ஆர் சிறிதும் வருத்தமடையவில்லை. வேண்டுமென்றால், ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கலாம், அதைவிட வேறு எதுவும் என்னால் செய்யமுடியாது என்று அவர் கையை விரித்து விட்டார். பாராளுமன்றத்தில் ஜே ஆரின் ஆக்ரோஷமான பேச்சினையடுத்து கொழும்பில் வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தன. கொழும்பு, பாணதுறை, களுத்துறை ஆகிய பகுதிகளில் ஆவணி 19 அன்றிரவு வன்முறைகள் ஆரம்பித்திருந்தன. வீதிகளின் முக்கிய சந்திகளில் கூடிய சிங்கள மக்கள் கூட்டம் பொலீஸார் பார்த்திருக்க தமிழர்களின் வீடுகள் கடைகள் என்று ஒவ்வொன்றாகத் தேடித் தேடித் தாக்கத் தொடங்கியது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தைப் போலல்லாமல், இம்முறை தமிழர்களின் வீடுகளுக்குச் சென்ற சிங்களவர்கள் அங்கிருந்தவர்களை அடித்துத் துன்புறுத்தியதுடன், பலரைக் கொன்றதோடு, அவர்களின் வீடுகளைக் கொள்ளையடித்தபின் எரியுமூட்டினர். இந்தத் தாக்குதல்களின்போது சிங்களவர்கள் பல சைவக் கோவில்களையும் எரியூட்டியபடியே சென்றனர். கலகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மறுநாளான ஆவணி 20 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அரசாங்கம் 35 மணிநேர ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்ததுடன் இராணுவத்தினரையும், கடற்படையினரையும் நகரங்களில் நிறுத்தியது. ஆவணி 22 ஆம் திகதியன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படத் தொடங்கியதுடன் 30 ஆம் திகதி முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆவணி 29 அன்று வெளியான டெயிலி நியூஸ் பத்திரிக்கை இத்தாக்குதல்களில் 112 தமிழர்களே கொல்லப்பட்டதாகக் கூறியதோடு சுமார் 25,000 தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், சுயாதீன தரப்புக்கள், வைத்தியசாலைகளின் விபரங்களின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 300 ஆவது இருக்கும் என்று கணிக்கப்பட்டதுடன் 30,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாகவும், 300 சைவக் கோவில்கள் எரியூட்டப்பட்டதாகவும் தெரியவந்தது. தெற்கின் பல இடங்களிலும் தமிழ் அகதி முகாம்களைத் திறந்த அரசாங்கம் அங்கிருந்த தமிழர்களை படிப்படியாக கப்பல்கள் மூலம் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் கொல்லப்பட்டும் அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டும் உள்ளதை அறிந்தபோது தமிழ் மக்களும் இளைஞர்களும் கொதித்துப்போனார்கள். மேலும் வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் மீது பதில்த்தாக்குதல்கள் நடைபெறலாம் என்கிற வதந்தியும் அப்போது உலாவி வந்தது. ஆனால், வடக்கில் வாழ்ந்துவந்த எந்தச் சிங்களவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படாத போதிலும், பல வருடங்களாக வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமக்கு அருகிலிருந்து பொலீஸ் நிலையங்களில் அடைக்கலம் புகுந்தார்கள். சிங்கள மக்களுக்கான அகதி முகாம்களை பொலீஸார் சிங்கள மகா வித்தியாலயத்திலும், நாகவிகாரையிலும் திறந்திருந்தனர். இலங்கையில் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழ்நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர்களைக் கோபங்கொள்ளவும் செய்திருந்தது. தாக்குதல்களுக்கான தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்த தமிழ் நாடு பாராளுமன்றம், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் உடனடியாக ஒரு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வன்முறைகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், ஜே ஆருடன் மிகவும் நெருக்கமான மொரார்ஜியோ, தனது வெளிவிவகார அமைச்சரின் மூலம் இந்தியாவின் கரிசணையினை தில்லியிலிருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரிடம் கூறச் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். சென்னையில் ஆளும் தி மு க அரசு தமிழர்களுக்கு ஆதரவு தேடி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சென்னையில் அமைந்திருந்த இலங்கை பிரதி உயர்ஸ்த்தானிகரலாயத்தில் மனுவொன்றும் பேரணியில் கலந்துகொண்டவர்களால் கொடுக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டின் தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் இவ்விரு இனங்களுக்கிடையிலான உறவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. தமிழர் மீதான வன்முறைகள் பல்வேறு வழிகளில் நடத்தப்பட்டதுடன், கடுமையான பின்விளைவுகளையும் ஏற்படுத்தியிருந்தன. இந்த வன்முறைகளின் விளைவுகளை பின்வருமாறு சாராம்சப்படுத்தலாம், தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் ஜே ஆரின் மீது வைத்திருந்த நம்பிக்கையினை முற்றாக இழந்தனர் தமிழர்கள் இலங்கைப் பொலீஸார் வைத்திருந்த நம்பிக்கையினை இழந்ததுடன் அவர்களை சிங்களப் பொலீஸார் என்று அழைக்கவும் ஆரம்பித்தனர் தனிநாட்டிற்கான தேவை மேலும் மேலும் உறுதியடைந்தது மிதவாதத் தலைவர்கள் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த செல்வாக்கு பாரிய வீழ்ச்சியைக் காண, ஆயுத அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங்கின பிரபாகரனின் சுலோகமான திருப்பியடி எனும் கொள்கை மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கியது தமிழர்களின் பிரச்சினையில் தமிழ்நாடும், இந்தியாவும் உள்வாங்கப்பட்டன மிதவாதிகள் இலக்குவைக்கப்பட்டார்கள்
  14. செந்தாமரையே செந்தேன் இதழே..........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.