Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    7595
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87984
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    4036
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    11530
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/02/23 in all areas

  1. சர்வதேச மன்னிப்புச் சபையுடன் முரண்பட்ட ஜெயார், ஜனாதிபதியாகத் துடித்த லலித் ஜெயவர்த்தன தனது இரண்டாவது தவணைக்காலத்தை 1988 ஆம் ஆண்டு நிறைவுசெய்யும்போது ஜனாதிபதிப் பதவிக்கு வரும் தனது விருப்பத்தை லலித் அதுலத் முதலி வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். ஆனால், ஜெயாருடன் காமிணி திசாநாயக்க கொண்டிருந்த நெருக்கம் அவருக்கு கவலையைக் கொடுத்திருந்தது. அத்துடன் காமிணியின் கட்டுப்பாட்டிலிருந்த பல அமைச்சுக்களும், குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டமும் அதனுடன் இணைந்த பாரியளவிலான காணிகள் மீதான அதிகாரமும் லலித்திற்கு சங்கடத்தைக் கொடுத்திருந்தன. லலித்தின் கவலைகளை அவருடன் நெருங்கிப் பழகிய செய்தியாளன் என்கிற வகையில் நான் நன்கு அறிந்தே இருந்தேன். அவரின் கீழிருந்த வணிகம் மற்றும் கப்பற்றுரை அமைச்சுக்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த அதே காலத்தில் காமிணியின் கீழான அமைச்சுகக்கள் பற்றிய செய்திகளையும் சேகரித்து வந்திருந்தேன். ஜெயாரினதும், மக்களினதும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல நிதியுதவித் திட்டத்தினை லலித் பரிந்துரை செய்திருந்தார். ஜெயவர்த்தனவின் அரசியலின் அடிநாதமே "வடக்குப் பயங்கரவாதத்தை அழித்தல்" என்றாகியபோது, லலித்தும் அதனை இறுகப் பற்றிக்கொண்டார். ஆகவேதான் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரேரித்ததுடன் நின்றுவிடாமல், அதனைச் சட்டமாக்கவும், நிறைவேற்றவும் கடுமையாக உழைத்து ஜெயாரின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான "தீர்வினை" சிரம் மேல் ஏற்று முன்னின்று உழைத்தார். மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஜெயார் கொண்டிருந்த நிலைப்பாட்டினை நாட்டினுள்ளும், வெளியிலும் நியாயப்படுத்தி, முன்கொண்டு செல்வதிலும் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வந்தார். லலித்தின் செயற்பாடுகள் பற்றி நான் தொடர்ந்து இங்கு பதிவிடுவேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அடக்குவது குறித்து கிரகம் வோர்ட்டிடம் பேசிய ஜெயார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தான் கூட்ட விரும்புவதாகவும் கூறியிருந்தார். இக்கூட்டத்திற்கு முன்னாள் பிரதமரான சிறிமா உட்பட பல அரசியல்த் தலைவர்களையும் அழைக்கப்போவதாகக் கூறிய ஜெயார், தனது திட்டத்தினை எவர் ஏற்றுக்கொண்டால் என்ன, இல்லாதுவிட்டால் என்ன தான் நிச்சயமாக பயங்கரவாதத்திற்கெதிரான தனது நடவடிக்கைகளை எடுத்தே தீருவேன் என்று தீர்க்கமாகக் கூறினார். இச்செவ்வியின்போது சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கிரகம் வோர்ட் வினவியபோது, அது இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டு வரும் பிரச்சாரம் என்று எள்ளி நகையாடினார் ஜெயார். இலங்கையின் கம்மியூனிசக் கட்சியின் ஸ்த்தாபகரான கலாநிதி விக்கிரமசிங்கவின் மகனான டெஸ்மண்ட் பெர்ணான்டோவே சர்வதேச மன்னிப்புச் சபையின் கொழும்புக் கிளைக்குப் பொறுப்பாக அக்காலத்தில் பணிபுரிந்து வந்தார். ஆகவே, அவரை மனதில் இருத்தியே "கம்மியூனிசஸ்ட்டுக்களின் பொய்ப் பிரச்சாரம்" என்று தனது ராணுவம் மற்றும் பொலீஸார் மீதான விமர்சனங்களை அவர் நிராகரித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 6 ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து தமிழர்களை கைதுசெய்து, தடுத்துவைத்து, கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மேல் புரிந்து, நீதிமன்ற வழ்க்குகளின்றி கலவரையின்றி அடைத்துவைத்தல் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தடுத்துவைத்தல் ஆகிய செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சட்டியிருந்தது. அத்துடன், இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை எழுந்தமானமாகக் கைதுசெய்து , சித்திரவதைகளின்பின்னர் அவர்களைக் கொன்று வீதிகளில் எறிந்துவருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. https://www.amnesty.org/fr/wp-content/uploads/2021/06/asa370051984en.pdf "பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாகக் கைதுசெய்யப்படும் அரசியல்ச் செயற்பாட்டாளர்களை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து இலங்கையரசு தடுத்துவைத்திருக்கிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பலர் சுமார் எட்டு மாத காலம்வரை ராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் கடுமையான சித்திரவதைகளை சந்தித்து வருகின்றனர். இச்சித்திரவதைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு, இரும்புக் கம்பிகளால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு, அவர்களின் நக இடுக்குகளில் ஊசிகள் ஏற்றப்பட்டு, கண்கள் உட்பட உடலின் பல இடங்களில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தது சர்வதேச மன்னிப்புச்சபை. மேலும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ அல்லது அவர்களுக்கான வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வதையோ இலங்கையரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தே வருவதாகவும் மன்னிப்புச்சபை கூறியது. இவ்வறிக்கையின் தொடர்ச்சியாக 12 பரிந்துரைகளை மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது, 1. கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தினை அக்கைதிகளுக்கு தெரியப்படுத்துவது. 2. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது. 3. கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தல். 4. கைதிகள் மேல் நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சுதந்திரமான கட்டமைப்பொன்றினை உருவாக்குவது. 5. ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக சாட்சியங்களை தயாரித்தல் அல்லது சேகரித்தல். 6. நீதிமன்றில், நீதிபதிகளின் முன்னால் அன்றி, வேறு எவ்விடத்திலும் பொலீஸாரினால் தயாரிக்கப்படும் கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை முற்றிலுமாகத் தடை செய்வது. ஆகியவை இவற்றுள் முக்கியமானவையாகும். தனது அறிக்கைக்குப் பதிலாக இலங்கையரசாங்கம் வெளியிட்ட விமர்சனத்தை வெளியிடப்போவதாக மன்னிப்புச்சபை தெரிவித்தபோது ஜெயார் கடுமையாகக் கோபமடைந்திருந்தார். மன்னிப்புச்சபையின் அறிக்கைக்குப் பதிலளித்த அரசாங்கம், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த விடயங்களில் ஒன்பது விடயங்களை முற்றாக நிராகரித்திருந்ததுடன் சில கைதிகள் வெளித்தொடர்பின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தது. இதுகுறித்த முற்றான அறிக்கையினை அரசு ஆடி 22 ஆம் திகதி வெளியிட்டது. வி.என். நவரட்ணம் இதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது மூன்றாவது வருடாந்த மாநாட்டினை மன்னாரில் ஆடி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதாகத் தீர்மானித்திருக்க, சாவகச்சேரி தேர்தல்த் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.என். நவரட்ணம் தான் பதவி விலகுவதாக ஆடி 21 ஆம் திகதி அறிவித்தார். தனது விலகலுக்கான காரணத்தை அறிக்கை வடிவில் வெளியிட்ட நவரட்ணம், கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததுடன் 1977 ஆம் ஆண்டு தன்னைத் தெரிவுசெய்து ஆறு ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வாக்காளர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அவரின் அறிக்கை முன்னணியின் ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான அவமானத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெயாருக்கும் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபபையின் தலைவர் எஸ்.நடராஜா தனது பதவி விலகல் அறிவிப்பினை ஆடி 15 இல் வெளியிட்டது ஜெயாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. தனது பதவி விலகல் குறித்து யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடராஜா, மாவட்ட அபிவிருத்திச் சபைக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட அதிகாரங்கள் எவற்றினையும் அரசு தரமறுத்து வருவதாகவும், சபை இயங்குவதற்கான நிதியினை தடுத்துவைத்திருப்பதாகவும் கூறியதோடு, இச்சபைகளை அரசு உருவாக்கியதன் உண்மையான நோக்கம் தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கேயன்றி வேறு எதற்கும் அல்ல என்று கூறியதோடு, வெற்றுக்கோது என்றும் இச்சபையினை அவர் விளித்திருந்தார். "பொடியள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லை. சபையினை இயக்குவதற்காக நான் முன்வைத்த நிதிக் கோரல்களை நிதியமைச்சு தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது" என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் இப்பத்திரிக்கையாளர் மாநாட்டில் இரு விடயங்கள் குறித்து நடராஜா பேசியிருந்தார். முதலாவது, காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு பை சீமேந்திற்கும் தலா ஒரு ரூபாய் வீதம் வரியினை அறவிடுதல். இரண்டாவது, காங்கேசந்துறைக்கும் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பற்சேவையினை ஆரம்பிப்பது. இவ்விரு கோரிக்கைகளையும் உடனடியாக நிராகரித்த அரசு, மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு வரிவிதிக்கும் அதிகாரம் இல்லையென்று முதலாவது கோரிக்கையினை உதாசீனம் செய்ததுடன், நாட்டில் நிலவும் பாதுகாப்புக் காரணங்களால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பற்சேவையினை ஆரம்பிக்க முடியாது என்றும் கூறியிருந்தது. ஆடி 17 ஆம் திகதி வெளிவந்த பத்திரிக்கைகள் அனைத்திற்கும் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய சர்வகட்சி மாநாட்டினை அரசு கூட்டவிருப்பதான செய்தியினை ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்தது. அச்செய்தியில் பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான வழிகள் பற்றி இந்த மாநாடு ஆராயும் என்றும் கூறியது. சுதந்திரக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும் இச்செய்தி கூறியது. தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்காது பயங்கரவாதத்தினை முறியடிக்க நடத்தப்படும் இந்த மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பங்கேற்காது என்று அமிர்தலிங்கம் கூறினார். உடனடியாக இதற்குப் பதிலளித்த ஜெயார், இம்மாநாட்டில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயலாம் என்று மாநாட்டின் நோக்கத்தில் சிறிய மாற்றத்தினைச் செய்தார்.
  2. ஆண்டு: 1991 திகதி: மே 4, 1991 அடிபாட்டுக் காலம்: இரவு நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இது பருத்தித்துறைக் கடற்பரப்பில் தரிபெற்று தமிழக-தமிழீழ வழங்கல்களைக் குழப்பிக்கொண்டிருந்த தாய்க்கப்பல் மீது கடற்புறாக்களும் கடற்கரும்புலிகளுமாக மேற்கொண்ட வலிதாக்குதல் ஆகும். குறித்த நாள் இரவு தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான சண்டைப்படகுகள் மற்றக் கடற்கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி அபிதா வரை கடற்கரும்புலிகளை அழைத்து சென்று விட அபிதா மீது கடற்கரும்புலிகள் மோதியிடித்தனர். மொத்த நடவடிக்கையினை அப்போதைய கடற்புறாப் பொறுப்பாளரான கட்டளையாளர் சங்கர் எ தாத்தாவின் துணையுடன் கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரரும் கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரனும் வழிநடாத்தினார்கள் (இவர்களின் விதப்பான பணி அறியில்லை). இந்நடவடிக்கைக்கு அப்போதைய வடமராட்சிப் பொறுப்பாளரும் பின்னாளைய கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளருமான பிரிகேடியர் சூசை, கட்டளையாளர் லெப். கேணல் கடாபி, கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் எ முகுந்தன் ஆகியோர் தங்களது முழுப் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர். போதியளவு வெடிமருந்து இல்லாத காலமென்பதாலும் எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டுமென்ற பட்டறிவு இல்லாததாலும் கப்பல் மூழ்கடிக்கப்படவில்லை. சேதப்பட்ட (மீளப் பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 (பின்னாளில் கடற்படையில் இருந்து ஆணையிழக்கப்பட்டது) கடற்கலப் பெயர்: அபிதா கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் கடற்கலப் படிமம்: படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை | மூழ்கடிக்கப்பட முன்னர் எடுத்த படிமம் படிமப்புரவு: SLN சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9 பேர் காயப்பட்டோர்: 8 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் சிதம்பரம், கப்டன் ஜெயந்தன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள்: எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை படிமம்: படிமப்புரவு: தவிபு வேறு கடற்கரும்புலிகள் ஓட்டும் இவர்கள் பாவித்ததையொத்த இடியனின் தோற்றம் : படிமப்புரவு: தவிபு ஆதாரம்: ஈழநாதம்: 05/05/1991 | கட்டுரை: 'அபிதா மீதா கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு' திகதி: சூலை 24, 1991 அடிபாட்டுக் காலம்: இரவு நிகழ்வு இடம்: நெடுந்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புறாக்களுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் கடலில் நடந்த மோதல் இதுவாகும். இம்மோதலில் மூழ்கடிக்கப்பட்ட படையப் படகிலிருந்த கொல்லப்பட்ட ஆறு கடற்படையினரில், ஒருவரின் சடலம் 24 ஆம் திகதி காலை புங்குடுதீவில் கரையொதுங்கியது. இன்னும் மூன்று சடலங்கள் 25ம் திகதி நண்பகலில் புங்குடுதீவு மருத்துவமனைக்கு அண்மையில் கரையொதுங்கின. அவற்றில் ஒன்று நிர்வாணமாகவும் ஏனைய மூன்றும் படைப்பொறிகளுடன் (Military insignia) சீருடையிலும் காணப்பட்டன. மேலும் மூன்று சடலங்கள் புங்குடுதீவு கிழக்குக் கடற்பரப்பில் தமிழ் மீனவரின் வலைகளில் சிக்கிப் பின்னர் அவர்களால் தட்டிவிடப்பட்டன. அந்த இரு சடலங்களும் பின்னர் மண்டைதீவை நோக்கி மிதந்து சென்றன. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படையப் படகு (விதப்பான கல வகை அறியில்லை ) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 6 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: ஈழநாதம்: 26/07/1991 | உதயன்: 26/07/1991 திகதி: செப்டெம்பர் 22, 1991 அடிபாட்டுக் காலம்: வைகறை நிகழ்வு இடம்: காரைநகர்க் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இதுவே கடற்புலிகளின் முதலாவது கடல்சார் தாக்குதல் ஆகும். நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி செல்லும் கடற்படைப் படகு கடற்புலிகளால் குறிவைக்கப்பட்டது. இதற்காக பிருந்தன் மாஸ்ரரால் இயக்கப்பட்ட கதுவீ (RADAR) மூலம் கிடைக்கப்பெற்ற வேவுத்தகவல்களின் அடிப்படையில் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி ஒரு தாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கான கடல் கண்ணிவெடிகளை மேஜர் மூர்த்தி மாஸ்ரர் உள்ளூர் தொழினுட்பத்தில் உருவாக்கியிருந்தார்; 'கொலின்ஸ் கடல் கண்ணிவெடி'. இக்கடல் கண்ணிவெடிகளைக் குறித்த கடற்பரப்பில் முதல்நாள் இரவில் கடற்புலிகளின் அப்போதைய கடற்தாக்குதல் கட்டளையாளர் லெப்.கேணல் சாள்ஸ் தலைமையில் கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரன், மேஜர் வசந்தன் உள்ளிட்டவர்கள் படகுகள் மூலம் எடுத்துச் சென்று பிருந்தன் மாஸ்ரரின் கதுவீயின் கண்காணிப்பில் வைத்தனர். கடற்புலிகள் கண்ணிவெடியை விதைத்து விட்டுத் திரும்ப அடுத்த நாள் வைகறையில் கடற்படையின் இலக்குவைக்கப்பட்ட படகு சிக்கி மூழ்கியது. உடைந்த படகையும் அதிலிருந்த போர்த் தளவாடங்களையும் மீட்க லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான கடற்புலிகள் சென்றனர். அவர்கள் லெப். கேணல் கங்கையமரன் மற்றும் ஏனைய நீரடி நீச்சல் போராளிகளின் துணையுடன் மீட்டுக் கரைக்குக் கொணர்ந்தனர். படகு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த மொத்த நடவடிக்கையில் மூர்த்தி மாஸ்ரருக்கு உதவியாக கப்டன் மைக்கலும் பிருந்தன் மாஸ்ராருக்கு உதவியாக மேஜர் தீபன் உள்ளிட்ட கடற்புலிப் போராளிகளின் பங்கு மிகவும் அளப்பரியது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சீ கார்ட் கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 6 பேர் (வல்வளைக்கப்பட்ட வட தமிழீழத்திற்கான சிறிலங்கா கடற்படைக் கட்டளையாளர் கப்டன் ரிச்சார்ட் அமரவீர பின்னர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்) காயப்பட்டோர்: 1 வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 24/09/1991 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு | கட்டுரை: 'நீரடி நீச்சல் பிரிவின் தொடக்கக் கால வரலாறுகள்' திகதி: ஒக்டோபர் 1, 1991 அடிபாட்டுக் காலம்: சாமம் நிகழ்வு இடம்: தீவகக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நயினாதீவு கடற்படை முகாமிலிருந்து ஊர்காவற்துறை கடற்படைத் தளத்திற்குச் சென்றுகொண்டிருந்த 2 படகுகள் வழிமறிக்கப்பட்டு கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை வலிதாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலிற்கு லெப். கேணல் கங்கையமரனின் துணையோடு கடற்புலிகளின் துணைக்கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் வேவு பார்த்தார். பின்னர் தாக்குதலிற்கான வியூகத்தை லெப். கேணல் சாள்ஸே அணியமாக்கி தானே கடற்சமரை வழிநடாத்தினார். இச்சண்டையில் தான் முதற் தடவையாக கடற்புலிகளால் ஒரு சிங்களப் படகு கலைத்து விரட்டப்பட்டது. இத்தாக்குதலிற்கு 50 கலிபர் மற்றும் பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்கள் பொருத்தப்பட்ட கட்டைப்படகுகளே (Dinghy/மீனவர் படகுகள்) பயன்படுத்தப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட படகையும் கைப்பற்றப்பட்ட இலகு இயந்திரச் சுடுகலனையும் மக்கள் பார்வைக்காக வைத்தார், கடற்புலிகளின் அப்போதைய துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கூகர் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 6 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 3/10/1991 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு திகதி: திசம்பர் 29, 1991 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 2:30 மணி நிகழ்வு இடம்: யாழ். குடாநாட்டுக் களப்பு நிகழ்வு விரிப்பு: யாழ். களப்பில் நாகதேவன்துறையிலிருந்து ஆனையிறவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிங்களக் கடற்படையினரின் 5 'வோட்டர் ஜெட்' படகுகள் வழிமறிக்கப்பட்டு கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதல். மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9 பேர் காயப்பட்டோர்: இல்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 30 & 31/12/1991, 05/02/1992 ******
  3. ஆண்டு: 1990 திகதி: சூன் 15, 1990 அடிபாட்டுக் காலம்: காலை வேளை நிகழ்வு இடம்: தலைமன்னார் பழையபாலம் இறங்குதுறை நிகழ்வு விரிப்பு: தலைமன்னார் கோட்டை காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் பழையபாலம் இறங்குதுறை பரப்பில் அமைந்திருந்த கடற்படை முகாம் மீது காலை வேளையில் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். சமரின் முடிவில் கடற்படை முகாம் விடுதலைப்புலிகள் வசமானது. அப்போது அங்கே தரித்து நின்ற படகொன்று புலிகளால் தாக்கப்பட்டு அதிலிருந்த படைக்கலன்களும் படைய ஏந்தனங்களும் கைப்பற்றப்பட்டதுடன் படகும் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன் ஒட்டு மொத்த தலைமன்னாரும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: வீரவேங்கை புலொமின் ஆதாரம்: உதயன்: 16/06/1990 | ஈழநாதம்: 16/6/1990 திகதி: சூன் 16, 1990 அடிபாட்டுக் காலம்: பகல் வேளை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாம் நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாமில் தரித்து நின்று கரையோரப் பரப்புகள் மீது சுட்டுக்கொண்டிருந்த கப்பல் மீது தவிபு இனர் மேற்கொண்ட உந்துகணைத் (rocket/unguided missile) தாக்குதல்களில் அக்கப்பலின் இயந்திர அறை, கணினி கட்டுப்பாட்டறை, மற்றும் கதுவீ (RADAR) என்பன உடைத்தெறியப்பட்டது. இத்தாக்குதலில் அதிலிருந்த கடற்படையினரில் 20 பேர் கொல்லப்பட்டனர் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் நாயகம் சிறில் ரணதுங்கா 23/06/1990 அன்று தெரிவித்தார். புலிகள் தரப்பில் தாக்குதலின் போது இழப்பேதுமில்லை. ஆனால் நடந்த எதிர்பாராத வெடிநேர்ச்சி ஒன்றில் 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: அறியில்லை கல வகை: (படைத்துறை) கப்பல் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 20 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் விவேகன், கப்டன் அன்சார், 2ம் லெப்டினன்ட் ஸ்ராலின், வீரவேங்கை கரன், வீரவேங்கை தவா, வீரவேங்கை சிறி ஆதாரம்: ஈழநாதம்: 17&24 /6/1990, உதயன்: 17/06/1990 திகதி: சூலை 7, 1990 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம் நிகழ்வு விரிப்பு: யாழ் குடாநாட்டிலுள்ள சிறிலங்காப் படையினருக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் போர்த்தளவாடங்களையும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காங்கேசன் துறைமுகத்திற்கு அருகில் நின்றிருந்த சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தினர். இதில் கப்பல் சேதமடைந்தது. சேத விரிப்பு தெரியவில்லை. இத்தாக்குதலால் வழங்கல் முயற்சி தோல்வியடைந்து கப்பல் பின்வாங்கியது. இத பின்னர் அவ்விடத்திற்கு வந்த கடற்படைப்ப் படகு ஒன்று கடலில் நின்றபடி கரையோரப் பரப்புகள் மீது சுடுகலன் கொண்டு தாக்குதல் நடாத்தியது. ஆயினும், அப்பரப்பு மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டமையால் எவ்வித உயிர்ச்சேதம்மும் ஏற்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கப்பல் கல வகை: சுடுகலப் படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை ஆதாரம்: ஈழநாதம்: 9/7/1990 திகதி: சூலை 10, 1990 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:15 நிகழ்வு இடம்: வல்வெட்டித்துறைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இது வல்வெட்டித்துறையில் தரிபெற்று தமிழக-தமிழீழ வழங்கல்களைக் குழப்பிக்கொண்டிருந்த தாய்க்கப்பல் மீது கடற்புறாக்களும் கடற்கரும்புலிகளுமாக மேற்கொண்ட வலிதாக்குதல் ஆகும். தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் எ முகுந்தனின் கட்டளையின் கீழ் அவர் உட்பட லெப் கேணல் அருச்சுனா மற்றும் கப்டன் தினேஸ் ஆகியோரை படகுக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட 3 படகுகள் எடித்தாராவிற்குப் பாதுகாப்பாக நின்ற கடற்கலங்கள் மீது தாக்குதலைத் தொடுத்து அவற்றைத் திசைதிருப்பக் கடற்கரும்புலிகள் எடித்தாரா மீது மோதியிடித்தனர். இத்தாக்குதலை தேசியத் தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறைக் கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்திக் கட்டளைகளை வழங்க கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் மற்றும் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் எ புலேந்திரன் ஆகியோர் தேசியத் தலைவரின் அருகிலிருந்து அக்கட்டளைகளுக்குச் செயல்வடிவம் தந்தனர். இந்நடவடிக்கைக்கான மேலதிக வேலைத் திட்டங்களை தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி தலைமையிலான அணி செவ்வனவே செய்து தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. போதியளவு வெடிமருந்து இல்லாத காலமென்பதாலும் எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டுமென்ற பட்டறிவு இல்லாததாலும் கப்பல் மூழ்கடிக்கப்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எடித்தாரா கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் படிமம்: படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உயிராயுதம்-1 | உதயன்: 12/07/1990 | கட்டுரை: எடித்தாரா மீதான முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு | கரும்புலி காவியம் பாகம் - 1 திகதி: செப்டெம்பர் 13, 1990 நிகழ்வு இடம்: யாழ் களப்பு (Jaffna lagoon) நிகழ்வு விரிப்பு: சிறிலங்காப் படைத்துறையானது தவிபுவின் யாழ் கோட்டை முற்றுகையை முறியடித்து யாழ் நகரையே கைப்பற்றும் திட்டத்தோடு 13/09/1990 அன்று 'போட் (Fort) நடவடிக்கை' என்ற பாரிய படைய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இது முப்படைகளையும் ஒருங்கிணைத்து மண்டைதீவைக் கைப்பற்றி அங்கு நிலைபெறும் படையினரைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தரையிறக்க முயற்சியாகும். இதற்காக கஜபாகு கப்பல், 28 சுடுகலப் படகுகள் (வகுப்புப் பெயர் அறியில்லை), 4 சிறிய படகுகள், 20 சேணேவிகள், நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் இரண்டு அவ்ரோ வானூர்திகள், இரண்டு "சீனச் சகடை" என்ற தமிழ்ப் பட்டப்பெயரைக் கொண்ட வை- 8, வை - 12 வானூர்திகள், ஆகக்குறைந்தது ஒரு சியாமா செட்டி உட்பட எட்டு வானூர்திகள் ஆகியன உடன் கஜபாப் படையணி மற்றும் சிங்கப் படையணிகளின் வீரர்களைக் கொண்ட 4000 தரைப்படையினர் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் குறித்த சமயத்தில் மண்டைதீவிலிருந்து கடற்படைப் படகுகள் மூலம் யாழ் கோட்டையை அண்மித்த வேளை கோட்டை வலுவெதிர்ப்பில் ஈடுபட்டிருந்த தவிபுக்கும் கடற்படையினருக்குமிடையே கடற்சமர் வெடித்தது. இந்தக் கடற்சமரில் கடற்படையினரின் படையெடுப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட போதிலும் சில படையினர் காயக்காரர்களோடு கோட்டைக்குள் சேணேவிகளையும் கொண்டு உள்நுழைந்தனர். இச்சமரில் கடற்படைப் படகுகள் சில மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு அறிவித்திருந்த போதிலும் சிங்களத் தரப்போ தம் தரப்பில் 6 படையப் படகுகள் சேதமடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் கரையிலும் கடலினுள்ளும் கிடந்தன. ஏனைய படையினர் மண்டைதீவுக்குப் பின்வாங்கினர். இதன் போது தரைப்படையினருக்கு உதவியாக வந்த வான்படையின் சியாமா செட்டி குண்டுவீச்சு வானூர்தி விடுதலைப்புலிகளால் கடலினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே சமயம் அற்றை நாளில் வான்படையினரின் அவ்ரோ வானூர்தி 10 "பொஸ்பரஸ்" குண்டுகளை யாழ்நகரில் மாலை 5 மணி முதல் 6 மணிவரை வீசியது. கடற்படைக்கு உதவியாக வந்த கஜபாகு கலம் மூலம் நான்கு சிறிய படகுகளில் படையினர் சிறுத்தீவு ஆத்துவாயை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரம் நீர் ஆழமின்மையால் கரைதட்டிக்கொண்டன. இவர்களை எதிர்கொண்ட தவிபு-க்கும் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தத்தில் சில படையினர் கொல்லப்பட்டிருக்கலாமென்று புலிகள் தெரிவித்தனர். இப்படகுகளைப் பாதுகாக்க மூன்று குண்டுதாரிகள் தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டன. அத்தோடு அப்படகுகளில் இரண்டை கடற்படையினர் மிகுந்த இடர்களுக்கும் நடுவணில் கட்டியிழுத்துச் சென்றனர். இரண்டை மாலை நான்கு மணியளவில் கடற்படையினர் வந்து கொண்டு சென்றனர். இச்சமரின் போது கோட்டைப் பரப்பிலிருந்து சிறிதளவு ஆயுதங்களும் படையத் தளபாடங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதே நேரம் யாழ் கோட்டை வாசலில் நடந்த சமரில் “சலாமன்” என்ற கவசப் பாரவூர்தி தகர்க்கப்பட்டதோடு கோட்டையின் பக்கவாடு, பண்ணைப் பரப்பில், மற்றொரு கவசவூர்தி கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது. இதில் படையினர் பலர் கொல்லப்பட்டனர். படிமங்கள்: கோட்டை வாயிலில் அழிக்கப்பட்ட சலாமன் கவசவூர்தி | படிமப்புரவு: தவிபு வழியாக உதயன் தரையிறங்க வந்த படையினர் விட்டுச் சென்ற கண்ணிவெடி கண்டுபிடிக்கும் ஏந்தனம் (equipment) | படிமப்புரவு: தவிபு வழியாய் உதயன் தோல்வியில் முடிந்த கோட்டை முற்றுகை முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் சிதறிக்கிடப்பதைக் காண்க | படிமப்புரவு: ஈழநாதம் 17/9/1990 சேதப்பட்ட கடற்கலங்கள்: 6 கடற்கலப் வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகுகள் (விதப்பான கடற்கலவகை அறியில்லை) சிறிலங்காக் முப்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 26 பேர் வான்படை: ஒரு வானோடி தரைப்படை: நான்கு அதிகாரிகள் மற்றும் 19 தரைப்படையினர் கடற்படை: 2 கடற்கலவர் (Seamen) காயப்பட்டோர்: 106 பேர் வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 13 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் ஆனந்தபாபு, கப்டன் அஞ்சனா, லெப். நெப்போலியன், வீரவேங்கை ரெஜினோல்ட், வீரவேங்கை சுரேன், வீரவேங்கை குணேஸ், வீரவேங்கை நிவாஸ், வீரவேங்கை றொபின், வீரவேங்கை தமிழ்ச்செல்வன், வீரவேங்கை குருபரன், வீரவேங்கை நிக்கலஸ், வீரவேங்கை விஜயன், வீரவேங்கை சந்திரபாபு ஆதாரம்: உதயன்: 14,15 & 16/09/1990 | ஈழநாதம்: 14 & 16/09/1990 | கட்டுரை: 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 192' திகதி: செப்டெம்பர் 16, 1990 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: படகில் பயணம் செய்த படையினர் மீது கடற்புறாக்கள் கடலில் வைத்தே தாக்குதல் நடத்திப் படகைச் சேதப்படுத்தினர். சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 17/09/1990 திகதி: ஒக்டோபர் 14, 1990 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியளவில் நிகழ்வு இடம்: தலைமன்னார் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: பொதுமக்களின் மீன்பிடிப்படகு ஒன்றைத் தாக்குவதற்காக சிங்களக் கடற்படையினர் அதைத் துரத்திச் சென்ற போது கடற்புறாக்கள் வழிமறித்து வலிதாக்குதல் செய்தனர். சிங்களப் படகு சேதமடைந்தது. சிறிதளவு படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன. சேதமடைந்த படகிற்கு என்ன நடந்தது என்பது பற்றிப் புலிகள் தெரிவிக்கவில்லை. சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சிறு படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 16/10/1990 திகதி: ஒக்டோபர் 25, 1990 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:30 மணியளவில் நிகழ்வு இடம்: செம்பியன்பற்றுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: புலிகளின் கடல் கண்ணிவெடியில் சிக்கிப் படகு வலுத்த சேதமடைந்தது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை ஆதாரம்: உதயன்: 27/10/1990 திகதி: நவம்பர் 7, 1990 அடிபாட்டுக் காலம்: காலை 8:30 மணியளவில் நிகழ்வு இடம்: முள்ளிக்குளம் (புத்தளம்) கடற்பரப்பு. இன்னும் விதப்பாகவெனில் குதிரைமலையைச் சுற்றியுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் இரண்டு படகில் படையினர் வந்த போது தரையிலிருந்து 500 யார் தொலைவில் வைத்து பின்னால் வந்த இரண்டாவது படகு மீது உந்துகணை செலுத்தி (ஆர்பிஜி) மூலம் உந்துகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தப் படகு நகராமல் நிற்க முன்னால் வந்த படகு அதைக் கட்டியிழுத்துச் செல்ல முற்பட்டது. அப்போது அப்படகு மீது புலிகள் சுடுகலச் சூடு நடத்தினர். பின்னர் படையினர் மேலும் மூன்று படகுகளில் வந்து சேதமடைந்த படகைக் கட்டியிழுத்துச் சென்றனர். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை ஆதாரம்: உதயன்:09/11/1990 ******
  4. ஆண்டு: 1986 திகதி: பெப்ரவரி 7, 1986 அடிபாட்டுக் காலம்: காலை 10:00 மணியளவில் நிகழ்வு இடம்: கடற்கோட்டைக்கும் காரைநகர் கடற்படை முகாமிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் காரைநகர் கடற்படை முகாமிற்குச் சொந்தமான கடற்கலம் ஒன்று விடுதலைப்புலிகளால் அக்கடற்பரப்பில் விதைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடியில் சிக்கிச் சேதமடைந்தது. இக்கடற்கலத்தை ஏனைய கடற்கலங்கள் மற்றும் உலங்குவானூர்தியின் துணையுடன் மிகுந்த சிரமங்களுக்கு நடுவணிலும் சிறிலங்காக் கடற்படை மீட்டதாக புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அன்றைய உதயன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் சிறிலங்காக் கடற்படைக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் தொடர்பில் தகவல் இல்லையென்று விடுதலைப்புலிகள் மாதயேடு செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தடவையாக நவீன முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல் இது" என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக உதயன் செய்தியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எவ்வகையான தாக்குதலிலும் சேதமடைந்த முதலாவது கடற்கலம் இதுவே என்பது வரலாற்றுத் தகவல் ஆகும். சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 09/02/1986 | விடுதலைப்புலிகள்: குரல் 9, ஏப்ரல், 1986 திகதி: மார்ச் 3, 1986 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: நைனாதீவு கப்பல்துறைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நைனாதீவு கப்பல்துறைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் விதைக்கப்பட்டிருந்த கடற்கண்ணிவெடியை தொலை கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைத்ததில் இக்கடற்கலம் சிதறடிக்கப்பட்டது. இத்தாக்குதலை கடற்புலிகள் செய்தனர். இதுவே சிங்களக் கடற்படையின் கடற்கலமொன்று சிதறடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும். இத்தாக்குதலின் பின்னர் சிங்களக் கடற்படையினர் தீவுப்பற்றில் பல கொடூரங்களை செய்ய முயற்சித்த போதும், அது விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: மொடல் 118 கல வகை: அறியில்லை சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: ஒரு லெப்டினன்ட் உட்பட 14 பேர் காயப்பட்டோர்: யாருமில்லை வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: விடுதலைப்புலிகள்: குரல் 9, ஏப்ரல், 1986 திகதி: மே 19, 1986 அடிபாட்டுக் காலம்: பிற்பகல் நிகழ்வு இடம்: வல்வெட்டித்துறை கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இத்தாக்குதல் தொடர்பில் 20ம் திகதி புலிகள் 'உதயன்' நாளேட்டிற்கு அளித்த ஊடக வெளியீட்டில், குறித்த கடற்பரப்பிற்கு சிறிலங்கா கடற்படையின் கடற்படை 'போர்க்கப்பல்' ஒன்று வந்தது. அதிலிருந்து கரைக்கு வந்த சிறிய சுற்றுக்காவல் படகு ஒன்று தமது 'உந்துகணைத்' தாக்குதலில் தீப்பற்றி எரிந்து நிர்மூலமானதாம். சுடுகலப் படகு ஒன்று தகர்க்கப்பட்டதாம். மற்றொரு சுற்றுக்காவல் படகு பாரிய தாக்குதலிற்குள்ளானதை அடுத்து அனைத்துக் கப்பல்களும் பின்வாங்கினவாம். ஆனால், 'விடுதலைப்புலிகள்' என்ற புலிகளின் அலுவல்சார் மாதயிதழின் சூலை 1986 பதிப்பில் இத்தாக்குதலின் போது மூன்று பீரங்கிப் படகுகளும் ஒரு 'போர்க்கப்பல்' உம் சேதமடைந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தகவல்கள் இவ்வாறு ஒன்றிற்கு ஒன்று முரணாக இருப்பதால் நான் இறுதியாக புலிகளின் அலுவல்சார் மாதயிதழில் வெளியான தகவலை அறுதியான தகவலாக எடுத்துக்கொள்கிறேன். சேதப்பட்ட கடற்கலங்கள்: 4 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகுகள் - 3 கல வகை: போர்க்கப்பல் - 1 சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 20/05/1986 | விடுதலைப்புலிகள்: சூலை, 1986 ******
  5. இப்பாலத்தின் கீழ் அரண்களை அமைத்திருந்த உக்ரேனிய வீரர்களை அகற்ற ரஸ்ஸியா 5 நாட்களாக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று ரஸ்ஸியப் படையினர் இப்பகுதியிலிருந்து திடீரென்று விலகியபோதே இப்பகுதி நோக்கி ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடத்தப்படப்போவது உறுதியாகிவிட்டது. அதற்கு முன்னதாகவே உக்ரேன் தனது வீரர்களை அங்கிருந்து அகற்றிவிட்டதாக உரக்ரேன் ராணுவம் கூறுகிறது. பாலம் தகர்க்கப்பட்டது உண்மை, ஆனால் உக்ரேனின் இழப்பு பற்றி ரஸ்ஸியா கூறுவதை நம்ப முடியாது. போரில் முதலில் பலியாவது உண்மை. குறிப்பாக ஆக்கிரமிப்புப் போர் ஒன்றினை தர்மத்தைற்கு முரணாக நடத்தும் ரஸ்ஸிய மேலிடத்திற்கு பொய்ப் பிரச்சாரம் என்பது மிக அவசியமானது. உக்ரேனின் மீதான ஆக்கிரமிப்புப் போருக்கெதிரான ரஸ்ஸிய மக்களின் அதிருப்தியைப் பொய்களால்அழித்துவிட மேலிடம் விளைகிறது. நீங்கள் வரும்வரை ரஸ்ஸிய ஆக்கிரமிப்புப் போர் பற்றிய கலந்துரையாடல்கள் (யார் கலந்துரையாடுகிறார், எல்லாமே நான் சரி, நீ பிழை என்கிற வாதம் மட்டும் தான்) மந்தமாகமாகவே நடந்துவந்தன. மறுபடி சூடு பிடித்துக்கொண்டது. இதற்குள் என்னை வேறு இழுத்துவிட்டீர்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாகி விடப்போகிறேனோ என்கிற நியாயமான கவலை எனக்கு!☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.