Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2958
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31993
    Posts
  4. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    9976
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/04/23 in all areas

  1. பாதுகாப்புத் தருவதாக நகைவியாபாரிகளிடமிருந்து பணம் வாங்கி ஏமாற்றிய பிரேமதாசவும், தற்காப்பில் இறங்கிய நகைக்கடை ஊழியர்களும் - தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்த இனக்கொலை ஜூலை 1983 அன்று பிற்பகலுக்குப் பின்னரே நிலைமை ஓரளவிற்குத் தணிந்தது. நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் கொள்ளையிடப்பட்டபின் எரிக்கப்பட்டிருந்தன. பல லொறிகள் எரிந்து போயிருந்தன. வீதிகளெங்கும் சாம்பல்த் துகள்கள் பறந்துகொண்டிருக்க, ஆங்காங்கே தமிழரின் எரிந்துபோன வாகனங்களிலிருந்து புகை இன்னமும் வெளிவந்துகொண்டிருந்தது. அன்றுமட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 35 ஆவது இருக்கலாம் என்று பொலீஸார் கணக்கிட்டனர். இவர்களுள் சிலர் கொள்ளையில் ஈடுபட்ட காடையர்கள், பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்கள். வன்முறைகள் பரவலாக நடந்திருந்தன. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ்களின் ஒலி நள்ளிரவு வரை கொழும்பின் வீதிகளில் பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது. சிங்களவர்களால் புனையப்பட்ட "புலிகளின் கொழும்பு வருகை" பலரின் உயிரைக் குடித்திருக்க, அந்நாளில் தேசத்தின் விதியும் மாறிப்போனது. எட்வேர்ட் குணவர்த்தன கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய உண்மையான தகவல்களை தனது புத்தகத்தில் எழுத விரும்பவில்லை. உயர் பொலீஸ் அதிகாரி என்கிற வகையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து எழுதுவதைத்தவிர அவருக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. நான் அன்று காஸல் வீதியில் அமைந்திருந்த வீட்டிலேயே தங்கியிருந்தேன். மறுநாள் காலை தெகிவளையில் எரிக்கப்பட்ட எமது வீட்டினைச் சென்று பார்த்து வரலாம் என்று எனது மகன்கள் என்னிடம் கேட்டனர். அத்துடன், அயல்வீட்டில் நாம் விட்டிவிட்டு வந்த எமது நாயைப்பற்றியும் அவர்களுக்குக் கவலை இருந்தது. நான் அவர்களைப் போக அனுமதிக்கவில்லை. எனது முடிவு அவர்களுக்கு வருத்தத்தை அளித்ததை என்னால் உணர முடிந்தது. தமது நண்பர்கள் தமது எரிந்த வீடுகளைப் பார்க்கச் செல்கிறார்கள் என்று என்னிடம் அவர்கள் கூறினார்கள். நானோ நிலைமை சீராகும்வரை பொறுத்திருக்கலாம் என்று கூறிவிட்டேன். காலை 10 மணியிருக்கும். நாம் இருந்த பம்பலப்பிட்டி, காலி வீதிப்பகுதியிலிருந்து கடுமையான இரைச்சல் எமக்குக் கேட்டது. வீதியில் வாகன நெர்சில ஏற்பட்டிருந்ததுடன், தமது வாகனங்களில் இருந்து சாரதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தார்கள். வீதியில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வாகன நெரிசல் காணப்பட்டது. அவை அனைத்துமே கொழும்பிலிருந்து வெளியேறச் செல்ல எத்தனிப்பது தெரிந்தது. பம்பலப்பிட்டியில் எம்முடன் தங்கியிருந்த எனது மருமகன் மிகுந்த பதற்றத்தோடு வீடு நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தார். "மாமா, உடனே வீட்டிற்கு ஓடுங்கள், அவர்கள் தமிழர்களைக் கொன்றுகொன்டிருக்கிறார்கள்" என்று என்னைப்பார்த்துக் கூறினார்.டிக்மன்ஸ் வீதிக்கு அருகில் தமிழ் இளைஞர் ஒருவரை சிங்களவர்கள் தாக்கிக்கொண்டிருப்பதைத் தான் கண்டதாகவும், பொலீஸ் பார்க் பகுதியில் தமிழர் ஒருவரின் உடல் வீதியில் எரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பிலும், புறநகர்ப்பகுதிகளிலும் அன்றும் தமிழர்கள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார்கள். எனது மகனின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதை நாம் அன்று காலை அறிந்துகொண்டோம். புலிகளின் வெள்ளிக்கிழமை தமிழ் மக்களின் சரித்திரத்தைப் பொறுத்தவரையில் ஒரு கரிநாளாகப் பதியப்பட்டு விட்டது. படுகொலைகள் மீளத் தொடங்கியது எப்படி? சிங்கள ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் சிங்கள மக்களின் தன்னெழுச்சியான கோபமே கொலைகளுக்குக் காரணம் என்று நிறுவுவதில் பிடிவாதமாக இருந்தது தெரிந்தது. சிங்கள கெளரவத்திற்கு தமிழரால் ஏற்படுத்தப்பட்ட இழுக்கிற்கான பதிலடியே இந்தப் படுகொலைகள் என்று அவர்கள் வாதிட்டனர். "இழிவான தமிழர்கள் எம்மைத் தாக்குவது எங்கணம்?" என்பதே அவர்களின் ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்ததாக சிங்கள கல்விமான்களும், ஆராய்ச்சியாளர்களும் நிறுவுகின்றனர். ஆனால், தமிழ் செய்தியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை புலிகளின் வருகை தொடர்பான படுகொலைகளை வேறு கோணத்தில் இருந்து பார்க்கின்றனர். பெருமளவு தமிழ் நகைக்கடைகள் அமைந்திருக்கும் செட்டியார்த் தெருமீதான திட்டமிட்ட தாக்குதல்களும் கொள்ளைகளும் பின்னர் நாடு முழுவதற்குமான தமிழர் மீதான வன்முறையாக மாறியது என்பதே அவர்களின் வாதம். அதிகாரத்தின் மமதை எனும் தனது புத்தகத்தில் ராஜன் ஹூல் , புலிகளின் வெள்ளிக்கிழமைத் தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில் தமிழரின் வர்த்தகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறுகிறார். அன்றாடப் பொருட்களின் மொத்த வியாபாரமும், நகை வியாபாரமும் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. புறக்கோட்டைப் பகுதி மொத்த வியாபாரத்திற்கான முக்கிய இடமாக அமைந்திருக்க செட்டியார்த் தெரு நகை வியாபாரத்திற்கான முக்கிய இடமாக இருந்துவருகிறது. திங்கட்கிழமை புறக்கோட்டையில் தமிழர்களின் மொத்த வியாப நிலையங்கள் இலக்குவைக்கப்பட்டபோதிலும், செட்டியார்த்தெரு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கான காரணத்தையும் ராஜன் ஹூல் விளக்குகிறார். "ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து, செட்டியார்த் தெருவில் இயங்கிவந்த பிரபலமான நகை வியாபாரங்களான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார், உதயா, அம்பிகா, லலிதா, நித்திய கல்யாணி உட்பட பல நகை வியாபாரங்கள் கொழும்பில் மிகுந்த செல்வாக்குள்ள முக்கிய புள்ளி ஒருவருக்கு பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து தமது வியாபாரங்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டியிருந்தனர். முக்கியமான நகை வியாபாரிகள் பிரதமர் பிரேமதாசாவுக்கு நெருக்கமாகக் காணப்பட்டதுடன், உதயா நகை மாளிகை பிரேமதாசாவின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியாகப் பண உதவி செய்துவந்ததுடன் அவரின் அரசியல்ப் பிரச்சாரத்திற்கான செலவையும் ஏற்றுக்கொண்டு வந்திருந்தது. வன்முறைகள் ஆரம்பிக்க சில மணித்துளிகளுக்கு முன்னர், பிரேமதாசாவின் வலதுகரமாக இயங்கிய நெல்சன் எனும் நபர் செட்டியார்த்தெருவில் இருக்கும் நகைக்கடைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி கடற்படையும் பொலீஸாரும் இணைந்த காவல் அணிகள் செட்டியார்த்தெருவின் இரு அந்தங்களான பிரதான வீதி மற்றும் துறைமுக வீதி ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்தன. ஜூலை 25 முதல் 28 வரையான காலப்பகுதியில் நாட்டிலிருந்த தமிழர்களின் பொறுளாதார வளங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்க, இந்த வீதியில் இருந்த சில வியாபாரங்கள் மட்டும் தப்பவைக்கப்பட்டன". ஆனால், அரசியல்வாதிகளை முழுதுமாக நம்பமுடியாது என்று எண்ணிய நகைவியாபாரிகள், தம்பங்கிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். . தமது வியாபார நிலையங்களில் பணிபுரிந்து வந்த இளைஞர்களை தமது வியாபார நிலையங்களைப் பாதுகாக்கும் கடமையில் அமர்த்தினர். தற்காப்பிற்கென்று அமிலங்கள் நிரப்பட்ட கண்ணாடி பள்ப்புக்கள் மற்றும் தமது நகைத்தொழிலில் பயன்படுத்தும் ஏனைய இரசாயணங்களைக் கொண்டு ஆயுதங்களை அவர்கள் தயாரித்து வைத்துக்கொண்டனர். வெள்ளி காலை 10 மணியளவில் செட்டியார்த்தெருவிற்குப் பாதுகாப்பாளித்துக்கொண்டிருந்த கடற்படையினரும் பொலீஸாரும் திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டனர். உடனடியாக பிரதான வீதி ஊடாகவும், துறைமுக வீதியூடாகவும் சிங்களக் காடையர்கள் செட்டியார்த்தெருவில்க் கூட ஆரம்பித்தனர். பிரேமதாசாவைத் தொடர்புகொள்ள நகைவியாபாரிகள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. வேறு வழியின்றி, தம்மைத்தாமே காத்துக்கொள்ள தீர்மானித்தனர் செட்டியார்த்தெருவின் வியாபாரிகள். பிரதான வீதியில் அமைந்திருந்த தமது கடைகளை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்த சிங்களவர்கள் மீது கடைகளின் கூரைகளின் மீது நிலையெடுத்திருந்த தமிழ் இளைஞர்கள் அசிட் போத்தல்களை விட்டெறிந்து தாக்கத் தொடங்கினர். தமிழர்கள் திருப்பித்தாக்குவார்கள் என்பதை எதிர்ப்பார்த்திருக்காத சிங்களவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு இது பழக்கமானதல்ல. கடந்த சில நாட்களாக தமிழர்கள் எவருமே தம்மைத் திருப்பித் தாக்கவில்லை எனும் உணர்வே அவர்களை தைரியமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்த உந்தியிருந்தது. "புலிகளைத் தவிர தமிழர்கள் எவரும் எம்மை எதிர்க்கமுடியுமா?" என்பதே அவர்களுக்கிருந்த ஒரே கேள்வி. ஆகவே, இங்கிருந்துதான் புலிகள் கொழும்பிற்கு வந்துவிட்டார்கள் என்கிற வதந்தி உருவெடுத்தது. உடனடியாக பொலீஸார் இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டதுடன், நகைக்கடைகளின் கூரைகள் மீது தற்காப்பிற்காகக் காத்து நின்ற நகைக்கடை ஊழியர்கள் மீது உலங்குவானூர்திகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. நகைக்கடைகளைப் பாதுகாக்க கூரை மீது காவலிருந்த பன்னிரண்டு அப்பாவித் தமிழ்த் தொழிலாளிகள் விமானப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மற்றும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பின்னர் செட்டியார்த்தெருவில் இராணுவ அணியொன்று பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டது. இந்திய தலையீட்டின் மூலம் தமிழருக்குக் கிடைத்த முதலாவது உதவியென்று இதனைக் குறிப்பிட முடியும்.
  2. 2000 ஆண்டு பழமையான இந்த விபூதி குங்கும பாத்திரத்தில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டுள்ளது இதில் தண்ணீரை ஊற்றிய உடன் அது என்னென்ன வண்ணங்கள் மாறுகின்றன அந்த அதிசயத்தை கண்டு மகிழுங்க 👍🔔
  3. தற்போது AUDJPY இல் மட்டும் வர்த்தகம் செய்வதால் கவனிக்கவில்லை(Prop trading). தங்கத்தில் பல பூகோள நிகழ்வுகள் தாக்கத்தினை செலுத்தபோகிறது.. அமெரிக்க பண்முறிகளை இங்கிலாந்து உள்ளடங்கலாக விற்க ஆரம்பித்து விட்டன. அதிகளவில் அமெரிக்க பணமுறிகளை கொண்ட ஜப்பான் நாட்டு நாணயத்தினை முதலீட்டாளர்கள் விற்பதனை நிறுத்தியுள்ளார்கள். பிட்சினால் அமெரிக்காவினது AAA இலிருந்து AA+ குறைத்குள்ளது. இது தொடர்பான வ்ரிவான கருத்தினை எதிர்வரும் வாரம் பதிவிடுகிறேன்.
  4. கொழும்பிற்கு வந்த புலிகளும், பொலீஸ் நிலையங்களுக்குள் பதுங்கியிருந்த பொலீஸாரும் வெள்ளியன்று ராவ் உலங்குவானூர்தியொன்றில் கண்டிக்குச் சென்றார். இந்திய தூதரகத்திலிருந்து விமானப்படை முகாமிற்கு அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வீதியில் அச்சத்துடன் நடமாடிய மக்களை அவர் கண்டார். உலங்குவானூர்தியிலிருந்து கொழும்புப் பகுதியில் தமிழர்கள் வீதிகளில் கொல்லப்பட்டு எரிக்கப்படுவதையும், அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதையும் அவரால் பார்க்க முடிந்தது. வெள்ளிக்கிழமை கொழும்பில் புலிகள் தாக்கப்போவதாக வந்த வதந்திகளையடுத்து காலை 9 மணியிலிருந்து மக்கள் அச்சத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். வீதிகள் வாகன நெரிசலால் ஸ்த்தம்பித்துப் போயிருக்க, வாகனச் சாரதிகள் தமது வாகனங்களின் ஹோர்ன்களை அழுத்திக்கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் அச்சமும், பதற்றமும் குடிகொண்டிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்துவிட்டார்கள் என்பதே அனைவரினதும் பேச்சாகவிருந்தது. கலவரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அமைதியாகக் கிடந்த பொலீஸாரின் வானொலி வலையமைப்பு மறுபடியும் சுறுறுப்பாக இயங்கத் தொடங்கியது. "புறக்கோட்டையிலிருந்து பொலீஸ் ரோந்து அணி கட்டுப்பாட்டு நிலையத்தினை அழைக்கிறது" "கூறுங்கள் புறக்கோட்டை ரோந்து அணி" என்று கட்டுப்பாட்டு நிலையம் (Police radio network) பதிலளித்தது. "புறக்கோட்டைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. புலிகள் எல்லாப் பகுதிகளிலும் பதுங்கியிருந்து சிங்களவரைத் தாக்க ஆயத்தமாகி வருவதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. எம்மிடம் பேசிய பொதுமகன் ஒருவர் நீல நிறத்தில் சீருடை அணிந்த பல புலிகள் வீரா விடுதியில் நிற்பதைத் தான் கண்டதாகக் கூறினார். நாங்கள் அவ்விடம் நோக்கிச் செல்கிறோம்" என்று பொலீஸ் ரோந்து அணி கூறியது. அந்த நாள் நிலவிய குழப்பத்தினையும் பதற்றத்தினையும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "சிறிது சிறிதாக வதந்தி எல்லாவிடங்களிலும் பரவத் தொடங்கியது. மக்கள் எல்லாத் திசைகளிலும் ஓடத் தொடங்கினர். "புலிகள் ,கொழும்பிற்கு வந்துவிட்டார்கள், அவர்கள்இராணுவத்தினரைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இங்கிருந்து தப்பியோடுவோம்" என்று பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக தமது கடைகளை இழுத்துச் சாத்திக்கொண்டிருந்தார்கள். பஸ்கள் , லொறிகள், கார்கள் என்று அனைத்து வாகனங்களும் புறக்கோட்டைப் பகுதியிலிருந்து முண்டியடித்து வெளியேறிக்கொண்டிருந்தன. நகரப்பகுதிக்கு வந்த இராணுவக் கவச வாகனங்கள் ஆங்காங்கே நிலையெடுத்து நிற்கத் தொடங்கின. தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் என்று தாம் கருதிய இடங்கள் மீது இராணுவத்தினர் தாம் கொண்டுவந்த ரவைகள் தீரும்வரை சுட்டுக்கொண்டிருந்தனர். தமிழர்களின் கடைகள் எல்லாமே புலிகளின் மறைவிடங்களாக ராணுவத்தால் கருதப்பட்டு அவற்றின்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. நகரப்பகுதியில் கேட்ட தானியங்கித் துப்பாக்கிகளின் ஒலி அப்பகுதியெங்கும் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்குவானூர்திகள் தமிழர்களின் வியாபார நிலையங்கள் மீது தொடர்ச்சியான துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் குண்டுவீச்சிலும் ஈடுபட்டன. ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த கட்டடங்களுக்கு அண்மையாக தாழ்வாகப் பறந்து அவை தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியெங்கும் புகைமண்டலமாகக் காணப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த குழப்பத்தினையும் அச்சத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. ராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றமான சூழ்நிலை சிங்களக் காடையர்கள் மீள் ஒருங்கிணையவும், வன்முறைகளில் ஈடுபடவும் உகந்த சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. செட்டியார்த்தெருவிலிருந்த தமிழரின் வியாபார நிலையங்கள் நோக்கி வந்த காடையர் குழுவை இராணுவம் அப்பகுதியிலிருந்து விரட்டியது. டாம் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல லொறிகளை அக்கும்பல் எரியூட்டியது. அப்பகுதியில் தமிழ் வியாபார நிலையங்களுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை புரட்டிப் போட்ட அக்கும்பல் அவற்றிற்கு தீவைத்தது. தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த "சிட்டி மிஷன்" எனும் தங்கும் விடுதியும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. அவ்விடுதியின் அருகில் சணல் நூற்ச் சாக்குகள் மற்றும் உரப்பைகளை சேமித்து வைக்கும் பாரிய சேமிப்பு நிலையத்திற்கு தீ பரவவே அது சுவாலை விட்டு எரியத் தொடங்கியது. அக்கட்டடத்திலிருந்து எழுந்த‌ கரும்புகை பல கிலோமீட்டர்கள் தூரத்திற்குத் தெரிந்தது. பீடிகளை மொத்த வியாபாரமாகச் செய்துவந்த தமிழரான சங்கரசிவம் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதுடன், அவரது காரினுள் வைத்தே எரிக்கப்பட்டார். அவரது சிங்கள வாகனச் சாரதியை அக்காடையர் குழு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. அப்பகுதியில் வியாபாரங்களில் ஈடுபட்ட பல தமிழர்கள் பொலீஸாரின் ட்ரக் வண்டிகளிலும், பஸ்வண்டிகளிலும் ஏற்றப்பட்டு அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். புறக்கோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த கிராண்ட்பாஸ் பகுதியில் தமிழர்களை சிங்களவர்கள் வாட்களால் வெட்டிக் கொல்லத் தொடங்கியிருந்தார்கள். அப்பகுதியில் இயங்கிவந்த பிரபல பலசரக்குக் கடையின் உரிமையாளரான திருப்பதி முதலாளி சிங்களவர்களால் கூட்டாக வாட்களாலும் கோடரிகளாலும் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் மோதிரங்களைத் திருடுவதற்காக அவரது விரல்களை அக்கும்பல் வெட்டி எடுத்திருந்தது. பேலியகொடைப் பகுதியில் அமைந்திருந்த பாற்பண்ணைப் பொருட்களை விற்கும் தமிழரின் உணவு விடுதியான அம்பாள் விடுதி முற்றாக எரிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பிற்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த பால்மாடுகள் இழுத்துச் செல்லப்பட்டு இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன. அப்பகுதியில் இயங்கிவந்த தமிழருக்குச் சொந்தமான‌ சினிமாத் திரையரங்குகளை அப்பகுதி வாழ் சிங்களவர்களுடன் காடையர்கள் சேர்ந்து எரித்தனர். காலை 11 மணியளவில் கொழும்பு நகர் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பாரிய குழப்பம் நிலவியது. புலிகள் பெரும் எண்ணிக்கையில் நகரினுள் ஊடுருவி விட்டதாக எண்ணிய பொலீஸார் தமது வீதிக் கடமைகளைக் கைவிட்டு விட்டு நேரே தமது பொலீஸ் நிலையங்களுக்கு ஓடிவிட்டனர். நகரிலிருந்து தப்பியோட எத்தனித்த வாகனங்களையும், பாதசாரிகளையும் வீதி ஒழுங்குகளுக்கு அமைய வழிநடத்த பொலீஸார் இன்றி எங்கும் பாரிய சனநெரிசலும், வாகன‌ நெரிசலும் காணப்பட்டது. வீதிகள் எங்கும் சனநெரிசலாகக் காணப்பட்டதுடன், பதற்றமும் தெரிந்தது. பெண்களும், சிறுவர் சிறுமியரும் கைகளில் தலையணைகளையும்,பைகளையும், சூட்கேஸுகளையும் எடுத்துக்கொண்டு வீதிகள் வழியே ஓடிக்கொண்டிருந்தனர். உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்த அப்பாவிகளுடன் சேர்ந்து திருடர்களும் கைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், டெக்குகள், வானொலிப் பெட்டிகள் போன்றவற்றைக் காவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். இக்குழப்பமான சூழ்நிலையும் சனநெரிசலும் தங்குதடையற்ற சூறையாடல்களையும், உடமை எரிப்புக்களையும் ஊக்குவித்திருந்தது. இதற்கு மேலதிகமாக, பொலீஸ் தலைமையகத்திலிருந்து அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தியான, "உங்களின் பொலீஸ் நிலையங்களைப் பாதுகாக்க எதிர்த்துச் சண்டையிடுங்கள்" என்கிற செய்தியும் பொலீஸாரிடையே குழப்பத்தையும், பீதியினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. "பொலீஸ் நிலையங்கள் புலிகளால் தாக்கப்பட்டுக் கைப்பற்றப்படும் நிலை காணப்படுகிறது" என்கிற பொலீஸ் செய்தியை பதற்றமடைந்திருந்த பொலீஸ் அதிகாரியொருவர் பொலீஸாரின் பிரதான செய்தி வலையமைப்பில் பரவ விடவே பொலீஸாரிடயே கடுமையான அச்சம் நிலவத் தொடங்கியது. வீதிகளில் துணிவுடன் கடமையிலிருந்த ஒரு சில பொலீஸ்காரர்களும் இச்செய்தியைக் கேள்விப்பட்டபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு தமது நிலையங்களுக்குத் திரும்பியிருந்தனர். வீதி ரோந்து அணிகளும் பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிக்கொண்டன. கொள்ளுப்பிட்டி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் நிலையத்தின் முன்னால் இருந்த அலங்காரக் கற்களினால் கட்டப்பட்ட சுவரில் தனது .303 துப்பாக்கியின் பின்புறத்தால் இடித்து ஓட்டைகளை உருவாக்கினார். அவற்றினூடாக முன்னேறி வரும் புலிகள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்குவதே அவ‌ரது திட்டம். கொழும்பிலிருந்த அனைத்துப் பொலீஸ் நிலையங்களும் தமது பிரதான நுழைவாயிலை அடைத்தன. மேலும், பொலீஸ் நிலையங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பொலீஸார் நிலையெடுத்துக் காத்திருந்தனர். தெகிவளைப் பொலீஸ் நிலையம் ஹில் வீதியின் இரு எல்லைகளையும் முற்றாகவே அடைத்துவிட்டிருந்தது. தெகிவளை சுற்றுவட்டத்திலிருந்து ஹில் வீதிக்கான நுழைவுவழி இரும்புக் கதவுகளால் அடைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பொலீஸார் வீதியில் படுத்திருந்து முன்னேறி வரும் புலிகளுக்காகக் காத்திருந்தனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சில பொலீஸ் அதிகாரிகளே துணிவாக வீதிகளில் வலம் வந்தனர். அல்பா 2 மற்றும் கொழும்பு வடக்குப் பிரிவு 2 ஆகிய அணிகளின் பொலீஸ் அதிகாரிகள் வீதிகளில் வலம்வந்து கொண்டிருந்ததுடன் பொலீஸ் ரேடியோச் செய்தி வலையமைப்பில் உச்சஸ்த்தானியில் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தனர். "அல்பா 2 பேசுகிறேன், அல்பா 2 பேசுகிறேன். நான் காஸ்வேர்க்ஸ் வீதியின் சுற்றுவட்டத்தினருகில் நிற்கிறேன். பயப்பட வேண்டும், வீதிக்கு வாருங்கள். நான் வெளியிலேயே நிற்கிறேன். இங்கே புலிகள் எவரும் இல்லை. துப்பாக்கிச் சண்டைகள் ஏதும் நடைபெறவில்லை". "கோழைகளே, பதுங்கியிருந்தது போதும், வெளியே வாருங்கள்" என்று ஆத்திரத்துடம் ரேடியோவில் பேசிக்கொண்டிருந்தார். அவரின் கட்டளையைக் கேட்டு சில பொலீஸார் வீதிகளில் எட்டிப் பார்க்கத் தொடங்கினர். சுற்றுப்புறங்களில் இருந்து கொழும்பு கோட்டைப் பகுதி மற்றும் பெட்டா நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்களில் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர்களின் உடமைகளும் சிங்களவர்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் பயணம் செய்துவந்த வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டன. ஆனால், வன்முறைகளில் ஈடுபட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை முன்னைய இரு நாட்களுடன் ஒப்பிடும்பொழுது சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. திங்கட்கிழமை நடைபெற்ற சில நிகழ்வுகளையடுத்து பெரும்பாலான வன்முறைக் கும்பல்கள் அடங்கிப்போயிருந்தன. சிங்களத்தைச் சரளமாகப் பேச முடியாத முஸ்லீம்களும், சில சிங்களவர்களும் வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டனர். புலிகள் கொழும்பிற்கு வந்திறங்கிவிட்டார்கள் என்கிற செய்தியின் தாக்கம் எப்படியிருந்ததென்றால், கொழும்பின் புறநகர்ப்பகுதிகளிலும் சிங்களவர்கள் வாட்கள், கோடரிகள், இரும்புக் குழாய்கள், மண்வெட்டிகள் போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீடுகளின் முன்னால் புலிகளை எதிர்பார்த்துக் காவலிருக்கத் தொடங்கியிருந்தார்கள்.
  5. நாட்டு மக்களுக்கான தனது உரையில் தமிழர்களை அந்நியர்களாக விளித்த ஜெயவர்த்தன‌ வியாழன் இரவு ஜெயவர்த்தன நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் உரையாற்றினார். அவரது பேச்சினை தொலைக்காட்சியில் நான் பார்த்தேன். மிகவும் நிதானமாகப் பேசினார். இனவாதம் கக்கும் பிக்குவான எல்லே குணவன்ச தேரவின் ஆலோசனைப்படி மிகவும் அவதானமாகப் பேசினார். 4 நிமிடங்களும் 50 செக்கன்களும் நீடித்த அவரது உரையின் சாராம்சம் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நியாயப்ப்டுத்தியும், சிங்கள மக்களை சமாதானப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. தனது பேச்சின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதலுக்கான அடிப்படைக்காரணம் 13 இராணுவ வீரர்கள் புலிகளின் பதுங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டமைதான் என்று கூறினார். "பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு சிங்கள மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்..." என்று வெகு சாதாரணமாக அவரால் கூற முடிந்தது. பின்னர் சிங்கள மக்களுக்கு அவர் வழங்கிய செய்தியில் அவர்களின் கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் நிறைவேற்ற தான் உடனே ஆவண செய்வேன் என்று கூறினார். "சிங்கள மக்களின் தேசிய ரீதியிலான அழுகுரல்களுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கும் வேளை இப்போது வந்திருக்கிறது.." என்று அவர் கூறினார். பின்னர், தான் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார். முதலாவதாக அரசியலமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவருவதன் மூலம் பிரிவினைவாதம் பேசுவதைத் தடைசெய்யப்போவதாகக் கூறினார். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள் சட்டமாக்கப்பட்டதும், பிரிவினைவாதம் பேசுவோர் தண்டிக்கப்படுவர் என்று அவர் கூறினார். அவர்கள் பொது நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதையோ இச்சட்டம் தடுக்கும் என்று கூறியதுடன் அவர்களது சோத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார். "எந்தவொரு நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருந்தோ இலங்கையினுள் தனியான நாடொன்றினை உருவாக்க உதவுவதை, உந்துவதை, அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதை, பண உதவிசெய்வதை முற்றாகத் தடைசெய்வேன்" என்று அவர் கூறினார். தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் சிங்கள மக்கள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்களின் பாதுகாப்பினையும் நலன்களையும் உறுதிசெய்ய தனது அரசாங்கம் சகல விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தார். ஆனால், திட்டமட்ட ரீதியில் கொல்லப்பட்டும், சொத்துக்களை இழந்தும் நிர்க்கதியாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு சொல்லைத் தன்னும் அவர் உதிர்க்க விரும்பவில்லை. தமிழர்களை அச்சுருத்தும் தொனியிலும், அவர்கள் மீதான தாக்குதல்களை நியாயப்ப்டுத்தும் விதத்திலும்,சிங்களவர்களுக்கான நலன்களை உறுதிப்படுத்தும் முடிவிலும், தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களைப்பற்றி ஒரு வார்த்தைதன்னும் இரங்காது அவர் பேசியதை எனது வீட்டிலிருந்த 22 தமிழர்களும் முழுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். எரிந்துகொண்டிருந்த தனது வீட்டிலிருந்து சிங்களவர்களால் அடித்து விரட்டப்பட்டு எனது வீட்டில் அடைக்கலம் தேடியிருந்த நண்பர் ஒருவர் ஜெயாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ,"ஜெயார் இப்போது சிங்களவர்களின் ஜனாதிபதியாக மாறிவிட்டான்" என்று மிகுந்த சினத்துடன் கூறினார். ஜெயாரின் நாட்டுமக்களுக்கான உரை தமிழர்களை வெறுப்படையவும் அதேவேளை ஆத்திரப்படவும் வைத்தது. சிங்களவர்களின் கைகளில் அவர்கள் பட்ட துன்பத்தினை விடவும் ஜெயாரின் பேச்சு அவர்களை விசனப்பட வைத்தது. தமிழர்களைப் பார்த்து நீங்கள் இலங்கையின் மக்கள் அல்ல என்பதை இவ்வுரையின் ஊடாக ஜெயார் தெளிவுபடுத்தியிருந்தார். தமிழ் இளைஞர்கள் தாம் மிகவும் கேவலமான முறையில் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். இயல்பாகவே அவர்களுக்குள் ஆத்திரம் பற்றிக்கொண்டது. ஆகவே, இதற்காக நிச்சயம் பழிவாங்கியே தீர்வேண்டும் என்று அவர்கள் எண்ணத் தொடங்கினார்கள். மன்னாரைச் சேர்ந்த இளைஞன் இவ்வாறு கூறினார், "ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு ஒரு பாடத்தினைப் படிப்பிக்க முயல்கிறார் போலத் தெரிகிறது, நாம் அவருக்கு ஒரு பாடத்தைப் புகட்டுவோம்". பின்னாட்களில், அவர் தமிழ்ப் போராளி அமைப்பொன்றில் தன்னையும் இணைத்துக்கொண்டு இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்காகச் சென்றதாக நான் கேள்விப்பட்டேன். தெற்கில் வாழ்ந்துவந்த பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் இவ்வாறே உணர்ந்தார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்டார்கள். அக்காலத்தில் தமிழ் இளைஞர்களிடையே நிலவிய மநோநிலையினை நான் பிறிதொரு அத்தியாயத்தில் பதிவிடுகிறேன்.
  6. எந்த பரா துருப்புக்களை இறக்கி சிங்கள ஆட்சியாளர்களை வழிக்கு கொண்டுவர இந்தியா முயற்சித்ததோ அதே பரா துருப்புக்களை இறக்கி தமிழர்களுடன் மோதவிட்ட ஜே.ஆர் எனப்படும் மனிதன் தமிழர்களை பொறுத்தவரை கொடூரன் குள்ளநரியாக இருந்தாலும் சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஐயத்திற்கு இடமின்றி அவர்களுக்கு அவன் ஒரு ராஜ(தந்திர)குமாரன் தான் . என்னதான் எம் போராட்டவலு முற்று முழுதாக அழிந்து போனாலும், ஜே.ஆர் தலைமையில் தமிழர்களை ஒரு வழி பண்ண புறப்பட்ட ஜே.ஆர் உட்பட்ட ஏறக்குறைய அத்தனை அமைச்சர்களும் தம் வாழ்நாளில் சிங்களதேசமும் அவர்களின் ஏவல் படை தரப்பும் அடிவாங்கி அழிந்தத்தை தம் கண்முன்னால் பார்த்துவிட்டே இயற்கையாகவும் தாம் செய்த வினைகளை தாமே அறுத்து செயற்கையாகவும் அழிந்து போனார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள்மேல் காடைதனத்தை கட்டவிழ்த்து ருத்ர தாண்டவமாடியவர்கள் அவர்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசித்து சிரித்து கேலி செய்தவர்கள் , பின்னாட்களில் அவர்களின் பல ஆயிரம் படையினர் கொல்லப்பட்டு காயப்பட்டு அவர்களை காவியபடி கொழும்பு நகர வீதிகளில் அம்புலன்சுகள் அலறியபடி செல்லும்போது இறைச்சி போகுது என்று தமது படையினரை தாமே கிண்டல் செய்தார்கள். எம் போராட்ட சக்தி முற்றாக அழிந்து போனதுதான் இருந்தாலும் கேட்க எவனும் இல்லையென்று தூக்கி போட்டு பந்தாடியவர்களை திருப்பி மிதி மிதியென்று மிதித்து மரண பயம் என்றால் என்னவென்று அவர்களுக்கும் காண்பித்துவிட்டே மறைந்தார்கள். அதில் ஒரு சிறு நிம்மதி
  7. ஜெயவர்த்தனவுக்கு இந்திரா காந்தியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு 1983 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இலங்கையில் தமிழர்கள் மீது அட்டூழியங்கள் இழைக்கப்பட்டதாக செய்தி பரவியதும் தமிழகம் கொதிப்படைந்தது. சென்னை, மதுரை மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தெருக்களில் இறங்கி ஜெயவர்த்தன அரசைக் கண்டித்தும், இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர். இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது. முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு. கருணாநிதி ஆகியோர் கொழும்பு அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ராமச்சந்திரனின் அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபத்தால் தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது மில்லியன் தமிழ் இதயங்கள் இரத்தம் சிந்துகின்றன என்று கூறியிருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதியின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளும் தமிழர் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை ஆத்திரத்துடன் எதிர்கொண்டன. தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் ராஜ் நரேன் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார். கலவரம் குறித்து ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வேதனை தெரிவித்திருந்தார். கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, உயர்மட்ட அளவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு புது தில்லியைக் கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ராமச்சந்திரனும், கருணாநிதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை அவையில் எழுப்புமாறு தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினர். பிற்பகலில் அவை கூடியதும் உறுப்பினர்கள் இதையே முதல் விஷயமாக செய்தனர். லோக்சபாவில், உறுப்பினர்கள் ஜெயவர்த்தனே அரசாங்கம் செயலற்றதாகவும், கலவரக்காரர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். கடும் நடவடிக்கை எடுத்து கொலைகளை தடுக்க வேண்டும் என இந்திரா காந்தியிடம் எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கையுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டிக்குமாறு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி புதுடெல்லியை கேட்டுக் கொண்டார். கொழும்பில் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களின்போது இந்திய தொழில்கள் மற்றும் இந்திய வங்கிகள் எரிக்கப்பட்டதாக அவர் கூறினார். இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்க ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என திமுக எம்பி வி கோபாலசாமி (வைகோ) கேட்டுக் கொண்டார். இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று அவர் முன்மொழிந்தார், மேலும் இலங்கையின் உயர்ஸ்த்தானிகரை "இரத்த வெறி பிடித்த அரசாங்கத்தின் முகவர்" என்று அழைத்த அவர், அவரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். எம் கல்யாணசுந்தரம் பேசும்போது, “தமிழர்கள் மீதான தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதல்” என்றார். இந்தியா தமிழ் இளைஞர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்க வேண்டும் என்றும், அவர்கள் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்குச் செல்வதற்கான வசதிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ‍- நரசிம்ம ராவ் ராஜ்யசபாவில், இலங்கையின் நிலைமையை அரசாங்கம் ஒரு கட்சி விஷயமாக கருதவில்லை என்று ராவ் கூறினார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது, இத்தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாக அறிந்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கைக்கு நெருங்கிய அண்டை நாடான நமது சொந்த நாட்டிற்கு விரும்பத்தாகாத‌ விளைவுகளை இத்தாக்குதல்கள் ஏற்படுத்தக் கூடும் என்பதனால், நிலைமைகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது" என்றும் கூறினார். இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிவி நரசிம்மராவ் பேசினார். லோக்சபாவில், இந்திய தூதரகத்தைச் சேர்ந்த சிலரும் தாக்கப்பட்டதாகக் கூறினார். "அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை," என்று அவர் கூறினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி எரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை சரிபார்க்க முயற்சிப்பதாக அவர் கூறினார். இந்திராவால் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட அமைச்சரவைச் செயலாளர் அலெக்ஸான்டர், அங்கிருந்து பாராளுமன்றத்தில் நடப்பவற்றை அவர் தொடர்ச்சியாக இந்திராவுக்குத் தெரிவித்து வந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளை அடக்கும் வகையில் செயற்பட இந்திரா எண்ணினார். ஆகவே, தில்லியில் அப்பொழுது தங்கியிருந்த இலங்கைத் தூதர் சத்வாலை உடனடியாகக் கொழும்பு திரும்பப் பணித்தார். சென்னைக்கு தான் செய்யவிருந்த பயணத்தை இரத்துச் செய்த இந்திரா, உயர் மட்ட் அமைச்சரவை உபகுழு, அரசியல் நடவடிக்கைகள் குழு ஆகியவற்றை அன்று மாலை கூட்டி இலங்கையில் உருவாகியிருக்கும் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். பின்னர், இலங்கையில் இடம்பெற்றுவரும் இனவன்முறைகளைக் கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்டார் இந்திரா. மிக அண்மையில் அமைந்திருக்கும் நாடான இலங்கையில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து இந்தியா கவலைப்படாது இருக்கமுடியாது என்று அவர் கூறியிருந்தார். அரசியல் விவகாரக் குழு மாலையில் கூடி இரண்டு தெரிவுகளை பரிசீலித்தது. முதலாவது ஒரு அரசியல் தெரிவு - நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஜயவர்தனவிற்கு அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது இராணுவ நடவடிக்கை. இந்திரா முதலாவது தெரிவையே விரும்பினார். அதன்படி, முதலாவதாக இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவுடன் தொலைபேசியில் பேசுவது என்றும் , நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவதாக, ராவின் வருகைக்கு ஜெயவர்த்தனே சம்மதிக்க மறுத்தால், இராணுவ நடவடிக்கையினை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. உடனடியாக இலங்கை மீது படையெடுப்பதற்கான அவசரத் திட்டத்தைத் தயாரிக்குமாறு இந்திராவால் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறப்பட்டது. அந்த பணி செகுந்தராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளைக்குப் படைப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது. தில்லியில் தங்கியிருந்த அனைத்து மூத்த அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் உசார்ப்படுத்தப்பட்டதுடன், பராட்ரூப்பர்களை இறக்கி விமான நிலையங்களை கைப்பற்றி, செயலிழக்கப் பண்ணுவதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. இதன்மூலம் ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவரலாம் என்று இந்திரா நம்பினார். இந்திரா காந்தி மாலை 4 மணியளவில் ஜெயவர்த்தனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். புதன்கிழமை (ஜூலை 27). அந்த தொலைபேசி உரையாடலின் விபரங்கள் மறுநாள் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டது. உரையாடலின் உள்ளடக்கம் பின்வருமாறு: இந்திரா காந்தி: இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருவதாக எனக்கு இங்கு வந்துள்ள செய்திகள் குறித்து நான் வருந்துகிறேன், கவலையடைகிறேன். இப்போது நடைபெற்று வரும் மக்களவையில் இதுகுறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன‌ . ஜயவர்தன: நானும் அதே அக்கறையுடன் இருக்கிறேன். கலவரத்தையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். இந்திரா காந்தி: அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம் நான் உதவ விரும்புகிறேன். ஜெயவர்தன: இந்த வகையான சலுகைக்கு மிக்க நன்றி. தேவைப்பட்டால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இந்திரா காந்தி: எனது வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ நரசிம்மராவ் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால், நீங்கள் அவருடன் கலந்துரையாட முடியுமா? ஜயவர்தன: உங்கள் வெளிவிவகார அமைச்சரை நான் வரவேற்கிறேன். ஜனாதிபதி ஜயவர்தன உடனடியாக சில அமைச்சர்களை, ஹமீட், அதுலத் முதலி, திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் இன்னும் சிலரை – அழைத்து இந்திராவுடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து அவர்களுக்கு அறிவித்தார். அதுலத்முதலியும் திஸாநாயக்கவும் ராவை உபசரிப்பதை எதிர்த்தனர். இது எதிர்காலத்தில் இந்தியா தலையிட இடமளிக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். ஹமீட் அவர்களை எச்சரித்தார். ராவை ஜெயார் வரவேற்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அந்த நிலைப்பாட்டிற்கு அவர் இரண்டு காரணங்களைக் கூறினார். முதலாவதாக, ராவை வரவேற்க ஜெயார் ஒத்துக்கொண்டார். இரண்டாவது, அப்படி ராவை ஜெயார் வரவேற்க மறுக்கும் பட்சத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டினை எடுக்கும் என்று ஹமீட் எச்சரித்தார். அன்று மாலை கூடுதல் செயலாளர் சங்கர் பாஜ்பாயுடன் விமானப்படை விமானத்தில் ராவ் கொழும்பு சென்றார். ஹமீட் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். அன்று மாலையே லோக்சபாவில் ராவின் கொழும்புக்கான பணியை இந்திரா காந்தி அறிவித்தார். ராவின் இலங்கை வருகையை அகில இந்திய வானொலி புதன்கிழமை இரவு செய்தித் தொகுப்பில் அறிவித்தது. இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த ராவ் மற்றும் பாஜ்பாய், ஜெயவர்த்தனவை வார்ட் பிளேஸில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் காலை உணவின் போது சந்தித்தனர். 1983 ஜூலை 31 வார இறுதியில் சிங்க‌ ரத்ணதுங்க‌ தனது கட்டுரையில் விவாதங்கள் பற்றிய சில தகவல்களைத் தந்தார். ரத்ணதுங்க‌ ஜெயவர்த்தனாவுடன் நெருக்கமாக இருந்ததால் இலங்கை அதிபருக்கு ஆதரவாக தகவல்களைச் சேகரித்திருந்தார். ஆனால், அவரது தகவல்கள் சரியானவைதான் என்று என்னுடன் அந்நாட்களில் தொடர்பில் இருந்த தூதர் சத்வால் உறுதிப்படுத்தினார். ஹமீதும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக அவர் கூறினார். ஜெயவர்த்தனா, ராவை அரவணைப்புடன் வரவேற்று, இந்தியா மற்றும் அதன் தலைவர்கள் மீதான அவரது அபிமானத்தையும் நெருக்கத்தையும் பற்றி அவரிடம் கூறி உரையாடலைத் தொடங்கினார். "இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் போற்றிய பல இலங்கையர்களில் நானும் ஒருவன்" என்று ஜெயவர்த்தனே கூறியதுடன், இந்தியர்களை விட தமிழ் மக்களின் உணர்வுகளை அவர் புரிந்துகொண்டதாக ராவிடம் பதிய முயன்றார். மேலும்,கலவரம் ஆரம்பித்ததற்கான காரணம் என்று அரசால் கூறப்பட்டதை ராவிடம் விளக்கிய ஜெயார், அதற்கான முழுக் காரணத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும், புலிகள் மீதும் சுமத்தினார். மேலும், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தேவையற்ற விதத்தில் தலையிடுவதாக இலங்கை உணர்வதாகவும் ராவிடம் ஜெயார் தெரிவித்தார். ராவ் ஜெயவர்த்தனாவை குறுக்கிட்டு, "இல்லை, இல்லை- அப்படி எதுவும் இல்லை" என்று மறுத்தார். இந்த கலவரம், அனைத்து இந்தியர்களினதும், குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டதாக ஜெயவர்த்தனாவிடம் ராவ் மிக உறுதியாக கூறினார். இலங்கையில் ஸ்திரமற்ற நிலை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைத்தார். இலங்கையில் உள்ள இந்தியர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் மீதான இந்தியாவின் உண்மையான கரிசணையினையும் அவர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், இந்தியர்களுக்குச் சொந்தமான 17 தொழிற்சாலைகளும் எரிக்கப்பட்டதாக ராவ் மேலும் ஜெயாரிடம் முறையிட்டார். ஜெயவர்த்தனே சாமர்த்தியமாக புது டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே விரிசல் ஒன்றினை ஏற்படுத்த முனைந்தார். இந்திரா காந்தி தமிழகத்தை அமைதிப்படுத்தவே முயல்கிறாரே அன்றி, இலங்கைத் தமிழர் குறித்து புதுதில்லி உண்மையிலேயே அக்கறை காட்டவில்லை என்று ஜெயார் ராவிடம் கூறினார். ஆனால், ஜெயாரின் தந்திரத்தைப் புரிந்துகொள்ளாத வாஜ்பாய், அப்பாவியாக ஜெயாரிடம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையான இலங்கைக்கு எப்படி உதவலாம் என்று கேட்டபோது, அதற்கு உடனடியாகவே பதிலளித்த ஜெயார், "அவர்கள் அங்கே தடுத்து வைத்திருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்களை இங்கே அனுப்புவதன் மூலம் இலங்கைக்கு உதவலாம்" என்று நறுக்கென்று பதிலளித்தார். பின்னர் சிறு இடைவெளிவிட்டு, "நாங்கள் அவர்களை எமது நீதிமன்றங்களில் விசாரிக்கிறோம்" என்று கூறினார். “திருமதி காந்திக்கு ஒரு சிறப்புச் செய்தியாக நான் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியுடன் கூட்டத்தை நிறைவு செய்ய விரும்பினார் ராவ். சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பேசிய ஜெயார், "அப்படியானால்....." என்று கூறத் தொடங்குமுன்னமே, "சொல்லுங்கள்" என்று ராவ் அவசரப்பட்டார். "எனது நட்பினை அவ்ரிடம் தெரிவித்து விடுவீர்களா?" என்று பவ்வியமாகக் கேட்டர் ஜெயார். அதிலிருந்த சூட்சுமத்தை உணர்ந்துகொண்ட ராவ், அதை அப்படியே இந்திராவிடம் தெரிவித்தார். பிரதமர் பிரேமதாசவும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விஷமச் செய்தியொன்றை வழங்கினார். பிரேமதாசாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு ராவ் கேட்டிருந்தார். . அவர் ராவை 20 நிமிடங்கள் அதிதிகள் அறையில் காத்திருக்க வைத்தார். பின்னர் அவர் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிட முயற்சிப்பதற்காக, கிட்டத்தட்ட திட்டும் வகையில் பேசினார். "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்வினையை சமாளிப்பது இந்திரா காந்தியின் வேலை" என்று அவர் ராவிடம் கூறினார். "அது அவருடைய‌ பிரச்சினை, எங்களுடையது அல்ல" என்று பிரேமதாச ராவிடம் கூறினார். கலவரத்தை இலங்கையின் உள்விவகாரமாக இந்தியா பார்க்கவில்லை என்றும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக பார்க்கிறது என்றும் இந்திய அமைச்சர் பிரேமதாசாவிடம் உறுதியாக கூறினார். அன்றைய பிரேமதாசாவின் நடத்தை அவர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஜே.என்.தீட்சித் தனது அசைன்மென்ட் கொழும்பு என்ற புத்தகத்தில் பின்னாட்களில் எழுதியிருந்தார். அகதிகள் முகாம்களுக்குச் செல்லுமாறு ராவ் விடுத்த கோரிக்கை வெளியுறவு அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்து ஜெயவர்தனவிடம் ஆலோசனை நடத்தியதாக ஹமீட் என்னிடம் கூறினார். ராவை அகதிகள் முகாமுக்குச் செல்ல அனுமதிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என்று கூறி அதை நிராகரிக்குமாறு ஜெயார் ஹமீதிடம் கூறியிருந்தார். ஹமீட் கண்ணியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அகதிகள் முகாம்களை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அகதிகள் பதற்றத்தில் இருப்பதாகவும் கோரிக்கை விடுத்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் அவர் தெரிவித்தார். "சில நாட்களில் விஷயங்கள் தணிந்துவிடும்," என்று அவர் தனது இந்தியப் பிரதிநிதியிடம் கூறினார். மலையகத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டது. கண்டிக்குச் சென்று அங்குள்ள பிரதி இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்க மட்டுமே அவர் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
  8. 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தனது தொழிற்சங்கமான "லங்கா ஜாதிக எஸ்டேட் தொழிலாளர்கள்" செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அந்நாள் மகாவலி அபிவிருத்தியமைச்சர் காமிணி திசாநாயக்க கூறியதைப் படியுங்கள், "உங்களைக் கொன்றது யார்? ‍ சிங்களவர்கள், உங்களைக் காப்பாற்றியது யார்? சிங்களவர்கள் உங்களைத் தாக்கியவர்களே உங்களைக் காத்தார்கள் அவர்கள் இந்தியாவிலிருந்து ஒரு ராணுவத்தைக் கொண்டுவரப்போகிறார்களாம், இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கு 14 மணித்தியாலங்கள் எடுக்கும் ஆனால், 14 நிமிடங்களில் இந்த நாட்டில் உள்ளை அனைத்துத் தமிழர்களின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்கு நாம் காணிக்கையாக்குவோம் ஒருவர் இந்தியத் தமிழரா, யாழ்ப்பாணத் தமிழரா, மட்டக்களப்புத் தமிழரா, மலையகத் தமிழரா அல்லது இந்துத் தமிழரா, கத்தோலிக்கத் தமிழரா என்று அவர்கள் நெற்றியில் எழுதப்படவில்லை, அவர்கள் எல்லோரும் தமிழர்களே" ‍ - இவன் கொல்லப்பட்டதற்காக எவராவது வருத்தப்படுகிறீர்களா?
  9. The Tamil prisoners who were massacred in Welikade in July 1983 were : 25th July 1983 1. Kuttimani Yogachandran 2. N. Thangathurai 3. Nadesathasan 4. Jegan 5. Alias Sivarasa 6. Sivan Anpalagan 7. A. Balasubramaniam 8. Surash Kumar 9. Arunthavarajah 10. Thanapalasingham 11. Arafat 30. Anpalagan Sunduran 12. P. Mahendran 31. Ramalingam Balachandran 13. K. Thillainathan 32. K. Thavarajasingham 1420. S. Subramaniam 21. Mylvaganam Sinnaiah 22. G. Mylvaganam 23. Ch. Sivanantharajah 24. T. Kandiah 25. S. Sathiyaseelan 26. Kathiravelpillai 27. Easvaranathan 28. K. Nagarajah 29. Gunapalan Ganeshalingam . S. Kularajasekaram 33. K. Krishnakumar 15. K. Uthaya Kumar 34. R. Yoganathan 16. S. Sivakumar 35. A. Uthayakumar 17. A. Rajan 36. G. Amirthalingam 18. S. Balachandran 37. V. Chandrakumar 19. Yogachandran Killi 38. Sittampalam Chandrakulam 39. Navaratnam Sivapatham (Master) 27th July 1983 1. Muthukumar Srikumar 10. Gnanamuthu Naveratnasingham 2. Philip Amirthanayagam 11. Kandiah Rajendran (Robert) 3. Kulasingam Kumar 12. Dr. Somasunderam Rajasunderam 4. Selachami Kumar 13. Somasunderam Manoranjan 5. Kandasamy Sarveswaran 14. Arumugam Seyan (Appu) 6. A. Marianpillai 15. Thamotharampillai Jegemogenandan 7. Sivapathan Neethirajah 16. Sinnathambi Sivasubramaniam 8. Devanayagam Paskaran 17. Sellay Rajeratnam 9. Ponnaiya Thurairajah 18. Kumarasamy Ganeshalingam 19. Ponnampalam Devakumar
  10. Karthi Tamilan 7 h · #மொழி படத்துல பிரித்விராஜ் ஜோதிகாவை ஏன் துரத்தி துரத்தி லவ் பண்றாருன்னா.... #ஜோதிகாவுக்கு பேச்சு வராது... #பேசாத பொண்டாட்டின்னா சும்மாவா.........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.