Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19134
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38770
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20018
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/24/23 in all areas

  1. மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும். எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும். இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன. மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று. 2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை. நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. 'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன். 'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை. ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன. அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார். நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு. தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை. அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம். பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன். உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது. மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும். வாழ்த்துக்களும் வணக்கமும். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c5
  2. எனக்கும் யார் குறி போடுகிறார்கள் என்று அறிந்து பயனில்லை. அதை விட, இந்த மாற்றம் இல்லாமலே யார் கருத்திற்கு யார் விருப்பக் குறி போட்டிருப்பர் என்று ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சரியாக ஊகித்திருக்கிறேனா என்று பரிசோதிக்க, சில திரிகளை தற்போது சுற்றிப் பார்த்த போது, என் ஊகிப்பு கிட்டத் தட்ட 100 வீதம் துல்லியமாக இருக்கிறது😂!
  3. கவி அருணாசலம் என்னும் “மூனா”வைப் பற்றி… ஆதவன் எழுதிய கட்டுரையை 2015’ம் ஆண்டு கிருபன், “வேரும் விழுதும்” பகுதியில் இணைத்த போதும்…. எவரும் கருத்து எழுதப் படாமலே அந்தத் தலைப்பு பின்னோக்கி போய் விட்டது பெரும் சோகம். “மூனா” என்பவர் தான்… கவி அருணாச்சலம் என்று பலருக்கும் தெரிந்திராத காரணத்தால் அந்தத் தலைப்பில் எவரும் கருத்து எழுதவில்லை என நினைக்கின்றேன். கவி அருணாசலத்தை நேரில் சந்தித்தவன் என்ற வகையில்… ஆதவன் கூறிய அத்தனையும் உண்மை. நிறைகுடம் தழும்பாது என்ற மாதிரி… பல விடயங்களில் அவருக்கு ஆற்றல் இருந்தும் தனது கருத்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாகி விடுவார். ஒரு கலைஞனை… அதுகும் யாழ். களத்தில் தொடர்ந்து கருத்தோவியங்கள் வரையும் நமது உறவை… பாராட்டி ஊக்கப் படுத்துவது நமது கடமை. இந்தப் பதிவை மீட்டு எடுத்துத் தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.
  4. அலன் தம்பதிகளை விடுவிக்க நேரடியாக செயலில் இறங்கிய இந்திரா வெள்ளியன்று அதுலத் முதலி கொழும்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டிற்கு நானும் சென்றிருந்தேன். அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தன்னால் நீண்ட மெளனத்தைத் தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை என்று கூறினார் அவர். தொடர்ந்து பேசிய அவர், இக்கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இரு அவதானிப்பு நிலையங்களைத் தாம் நிறுவியிருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்கன்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மக்களை வடக்கிற்குச் செல்லவேண்டாம் என்று அறிவுருத்தினார். "இந்த நாடுகளில் வாழுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த நாட்டில் பயங்கரவாதாம் செயற்பட பணம் வழங்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார். "தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளைக் கடத்துவதற்கு பயங்கரவாதிகளுக்கு அவர்களே பணம் கொடுத்து உதவுகிறார்கள்" என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கை இக்கடத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார். "இக்கடத்தைல்ச் சம்பவம் இரு விடயங்களை இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சென்றிருக்கிறது. முதலாவது, அமெரிக்கா இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தழிக்க இலங்கைக்கு உதவ வேண்டும் என்பது. இரண்டாவது, இலங்கையில் செயாற்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாடே அடைக்கலம் கொடுத்து வருகிறது என்பது" என்று அவர் மேலும் தெரிவித்தார். இக்கருத்துக்கள் இந்தியாவை அவமானப்பட வைத்தன. அமெரிக்க உதவி ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கான உத்தியோக பூர்வப் பயணத்தை வைகாசி 12 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் இரு அமெரிக்கர்களின் உயிர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகியிருந்தன. ஆகவே, இந்திரா காந்தி தனிப்பட்ட ரீதியில் இவ்விடயம் தொடர்பாகச் செயற்பட எண்ணினார். உடனேயே தொலைபேசியூடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்ட இந்திரா "அலன் தம்பதிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு ஈ.பி.ஆர்.எல்.எப் இனரைப் பார்க்கச் சொல்லுங்க‌ள்" என்று பணித்தார். எம்.ஜி.ஆரு உம் உடனடியாகவே இந்தச் செய்தியை பத்மநாபாவிடம் தெரிவித்தார். கே.பத்மநாபா றோ செயலில் இறங்கியது. அமெரிக்க தம்பதிகள் விடுவிக்கப்படவில்லையென்றால் ஈ.பி.ஆர்.எல். எப் இன் தலைவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்று அவர்களை மிரட்டியது. சனிக்கிழமை அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் மீதான றோவின் அழுத்தம் மேலும் அதிகரித்தது. அகில இந்திய வானொலிச் சேவையின் சென்னை நிலையத்திலிருந்து "மனிதாபிமான ரீதியில் அலன் தம்பதிகளை விடுவியுங்கள்" என்கிற இந்திரா காந்தியின் கோரிக்கை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறையென்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அன்று மாலை இந்திய உளவுத்துறையினரிடமிருந்து பத்மநாபாவுக்கு வந்த கையொப்பம் இடப்படாத கடிதத்தில், "அலன் தம்பதிகளை விடுவியுங்கள், உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் நான் செய்து தருகிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடத்தல்ச் சம்பவம் நடைபெற்று பல வருடங்களுக்குப் பின்னர் என்னுடன் பேசிய டக்கிளஸ் தேவானந்தாவும், ரமேஷும், இந்திரா காந்தியிடமிருந்து வந்த கடிதத்தின் பின்னரே அலன் தம்பதிகளை விடுவிப்பதற்கான முடிவினைத் தாம் எடுத்ததாகக் கூறினர். இந்திரா காந்தியைப் பலதடவைகள் சந்தித்திருந்த பத்மநாபா அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். சனிக்கிழமை பின்னிரவு வேளையில் அலன் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அங்கு வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் அலன் தம்பதிகளை 13 ஆம் திகதி கொழும்பிற்கு அழைத்துவந்ததுடன், மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அமெரிக்கத் தகவல் தினைக்களக் கேட்போர் கூடத்தில் பல பத்திரிக்கையாளர் சமூகமளித்திருக்க அந்தக் கூட்டம் நடைபெற்றது. செய்திகளைச் சேகரிப்பதற்காக நானும் அங்கு சென்றிருந்தேன். மிகச் சரளமாகப் பேசிய ஸ்டான்லி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் தயக்கமின்றி, வெளிப்படையாகப் பதிலளித்தார். பிக்கப் வாகனத்தின் பின்னிருக்கையில் முகத்தைத் தரையில் அழுத்தியபடி தம்மைப் படுக்கவைத்து அரைமணிநேரம் ஓட்டிச் சென்றதாக அவர் கூறினார். ஆனால், சிறிது நேரத்தின்பின்னர் தாம் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிவந்துகொண்டிருப்பது தமக்குப் புலப்பட்டதாகவும், நீண்டதூரம் தம்மைக் கடத்திச் செல்வது போன்ற பிரமையினை ஏற்படுத்தவே அவ்வாறு அவர்கள் நடப்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் கூறினார். "உண்மையயைகச் சொல்லப்போனால், நாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு மிக அருகிலிருந்த வீடொன்றிலேயே நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். தம்மை மிகவும் கண்ணியமாக அவர்கள் நடத்தினார்கள் என்று மேரி கூறினார். "நாம் ஒருபோதும் துன்புறுத்தபடவில்லை" என்று அவர் மேலும் கூறினார். தமிழ்ப் பிரிவினைவாதிகள் கொடூரமானவர்கள் என்பதனைக் காட்ட அவர்களிடமிருந்து ஏதாவதொரு செய்தியை எடுத்துவிடலாம் என்கிற நோக்கில் கொழும்பு ஊடகங்கள் துருவித் துருவி கேள்விகளைத் தொடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நாம் பயங்கரவாதிகள் இல்லையென்று தம்மிடம் அவர்கள் தெரிவித்ததாக மேரி கூறினார். "நாங்கள் விடுதலைப் போராளிகள், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள் என்று மேலும் அவர் தெரிவித்தார். "நாங்கள் பயங்கரவாதிகளாக இருந்திருந்தால் உங்களை கொன்றிருப்போம், மரியாதையாக நடத்தவேண்டிய தேவை எமக்கு இருந்திருக்காது" என்றும் அவர்கள் கூறியதாக அவர் தொடர்ந்தார். அலன் தம்பதிகளின் கடத்தல்ச் சம்பவம் இறுதியில் சுபமாக முடிந்தது. சில நாட்களின் பின்னர் அவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பியிருந்தார்கள். ஆனால், இந்தக் கடத்தல்ச் சம்பவம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கசப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தது. அதுலத் முதலியும் பிரேமதாசவும் இதுகுறித்து இந்தியாவைத் தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தனர். மேலும் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்களைக் கொடுத்து இலங்கையைத் துண்டாட இந்தியா உதவிவருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். பிரேமதாசாவோ ஒருபடி மேலே சென்று பஞ்சாப்பில் பிரிவினை கோரிப் போராடும் சீக்கியர்களை அடக்கி ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் பிரிவினை கோரிப் போராடும் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு உதவிவருவது நயவஞ்சகம் என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. மேலும், சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கும் இந்தியா தமிழ்ப் பிரிவினைவாதிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைப்பது நகைப்பிற்கிடமானது என்று அவர் தெரிவித்தார். பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாச, "அவர்கள் கொலைகாரர்கள், கடத்தல்க்காரர்கள், திருடர்கள் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்" என்று கூறினார். இப்பேச்சு இந்தியாவை ஆத்திரங்கொள்ள வைத்திருந்தது. "இலங்கையின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்கிவரும் நட்புநாடான இந்தியா மீது இலங்கையின் அரசியற்பிரமுகர்கள் மிகவும் அபாண்டமான முறையில் பழிசுமத்துவது அதிர்ச்சியையும் வேதனையினையும் அளிக்கிறது" என்று இந்தியா பிரேமதாசாவின் பேச்சுக் குறித்து கருத்துத் தெரிவித்தது.
  5. இப்போது கண்ணீர் விட்டு அழுது என்ன பயன். உங்களிடம் கையளிக்கப்படட காசாவை நீங்கள் சரியாக நிர்வகிக்கவில்லை. பயங்கரவாத ஹமாஸிடம் பறிகொடுத்து அதை ஒரு பயங்கரவாத குகையாக மாற்றிவிடடீர்கள். அப்போதே உங்களுக்கு முடியாவிடடாள் இஸ்ரவேலின் உதவியுடனாவது நீங்கள் அதனை தடை செய்திருக்கலாம். இப்போது எல்லாம் கை மீறி போனவுடன் அங்கு போய் அழுது பயங்கரவாதிங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை விடுவிக்கும்வரைக்கும் இப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்க முடியாது. ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு பொறுப்பு கூற வேண்டும்.
  6. இனித்தான் உக்கிரம் பெறும் என நான் நினைக்கிறேன். இந்தியா, ரஸ்யா போன்ற இனவழி தேசிய இனங்களின் முதுகில் கட்டப்பட்டுள்ள சாம்ராஜ்யங்களும் உடையும் காலம் வரும். அப்போ இன்னும் பல நாடுகள் உருவாகும்.
  7. ஓ நல்லவிடயம். @மோகன் மிகவும் நன்றி. நாம் இருக்கும் நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பது போல யாழுக்கும் விசுவாசமாக இருப்போம்.
  8. நீக்கியாச்சு எல்லாருடைய‌ த‌டையும் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா மோக‌ன் அண்ணாவின் முக‌த்துக்கா யாழில் இணைந்து இருக்க‌ விரும்புகிறேன்😍🙏..........
  9. மூனாவை அடையாளங்க் காட்டியமைக்கு மிக்க நன்றி. அன்னாரின் சேவை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்... எம்மவர்களில் கருத்தோவியங்கள் வரைபவர்கள் அருகிவிட்டனர்... இவர் போன்ற ஒருசிலரே இன்னமும் அப்பணியைச் செவ்வன செய்துகொண்டு உள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.