Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19139
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46797
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/30/23 in Posts

  1. இருந்தாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் அல்லாகு அக்பர் என கோசமிட்டு பொதுவுடமைகளை அழிப்பதை எற்க முடியாது. இது அந்தந்த நாட்டு மக்களையும் மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அடைக்கலம் கொடுத்தவர்களை அழிக்க நினைக்க கூடாது.
  2. காலாற நடந்து கண்ணாற தூங்கி வயிறாற சாப்பிட்டு மனசார சிரித்தால் நோய் எங்கிருந்து வரும்? 💪🏽
  3. இதெல்லாம் நம்ம அயல்நாட்டில்தான் நடக்கும்.......! 😂
  4. காலையில் மாலையில் செய்து சாப்பிட கச்சிதமான ஒரு டிஷ் (ஆ .....அமெரிக்கன் டிஷ் என்றவுடன் ஆங்கிலமும் வந்து துலைக்குது)....." வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த மாதிரி" எதோ நிறைய வேலை செய்வதுபோல் கெப்பர் காட்டும் மனிசியின் மூஞ்சியை பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை..... ஆண் சிங்கங்கள் சுலபமாய் செய்து உண்ணலாம்......விரும்பினால் அவளுக்கும் ஒரு துண்டு கொடுங்கள் திண்டு துலைக்கட்டும் .....! 😂 😂
  5. வணக்கம் வாத்தியார்.........! மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே, சகியே, சகியே என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும் நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும் மதனா, மதனா, மதனா என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா-ஆ ஆ-ஆ-ஆ சகி-யே (ஆ) ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் சா-ரிரிரி- சசச-நிநிநி-ரிரிரி ததத-தக-தகிட-ரிசாரி-ரிச என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் சா-நிசக-தா-மகரிச என் ஆடை தாங்கி கொள்ள என் கூந்தல் ஏந்தி கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா.........! --- மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் ---
  6. இவர்களே ஒரு பயங்கரவாத கூடடம். எப்படி மற்றயவர்களை (ஹமாஸ், ஐசிஸ், ஜிகாத் etc ) பயங்கரவாதிகள் என்று சொல்லுவார்கள். ஓட்டோமான் என்னும் பயங்கரவாத அரசு இவர்களின் கட்டுபாட்டில்தான் இருந்தது. மில்லியன் கணக்கான அர்மீனியர்களை கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்தவர்கள். இப்போதும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம்தான் நடக்குதென்று எர்டோகான் நினைக்கிறார். பாவம் மனுஷன்.
  7. நீங்கள் மேற்கை பற்றி அதீத எதிர்பார்ப்போடு உள்ளீர்கள். தமது இராணுவத்தின் அழிப்பை குறைக்க, இரெண்டு ஜப்பானிய நகரங்களை தவிடு பொடியாக்கியவர்கள் மேற்கு. இதை விட ஒரு யுத்த குற்றம் உலகில் இருக்க முடியுமா? இன்று வரை அதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. சர்வதேச ஒழுங்கில், நீதி, நியாயம், மனித உரிமை, ஜனநாயக விழுமியம், லொட்டு, லொசுக்கு எல்லாம் இரெண்டாம் பட்சம். இதே போலத்தான் இனங்களின் சுய நிர்ணய உரிமையும். பங்களாதேசில் சுய நிர்ணயத்தை ஆதரித்த இந்தியா, கஸ்மீரிலும், இலங்கையிலும் அதை முடக்க்கியது. அதே போலத்தான் ரஸ்யாவும். அபகாசியா, தென் ஒசெசியாவின் சுய நிர்ணயத்தை அங்கீகரிக்கும், ஆனால் எம்மை அங்கீகரிக்காது. நாடுகள் இந்த தத்துவங்களை தம் சுய நலனுக்கு ஏற்ப கையில் எடுக்கும், கைவிடும். இந்த கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஈழத்தமிழர் ஒரு அடி கூட முன் நகர முடியாது. # வல்லான் வகுப்பதே (சர்வதேச) சட்டம், நடைமுறை.
  8. ஓ நல்லவிடயம். @மோகன் மிகவும் நன்றி. நாம் இருக்கும் நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பது போல யாழுக்கும் விசுவாசமாக இருப்போம்.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005 பிரேமினியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கூறுபோட்டுக் கொன்றுதள்ளிய கறுனா குழு வெலிக்கந்தைப் பகுதியில் 24 ஆம் திகயிலும் சில நாட்களுக்குப் பின்னரும் கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட 10 தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உடபட மூவர் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதி ஏழு பேரினதும் கதிபற்றி தெரியாமலேயே இருந்துவந்தது. ஆனால், இக்கடத்தல் சம்பவத்தின் பின்னர் கருணா குழுவில் இயங்கிய ஒருவர் வழங்கிய தகவல்களின்படி அந்த ஊழியர்களுக்கு நடந்த கொடூரம் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையினரால் இயக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட பிள்ளையான் என்றழைக்கப்பட்ட ஒருவனே இக்கடத்தல்களின் பின்னால் இருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் அரச படைகளின் கொலைக்குழுவாக இயங்கும் இவன் தலைமையிலான கூலிப்படையே இக்கடத்தல் கொடூரத்தில் ஈடுபட்டது. மட்டக்களப்பு வீரகேசரி நிருபர் நடேசன், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகளுடன் நேரடியான தொடர்பினை பிள்ளையான் கொண்டிருக்கிறான். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பிற்கும் இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இடையிலான முக்கிய இணைப்பாக இவனே இருக்கிறான். அத்துடன் கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பமாக பல மில்லியன் ரூபாய்கள் அறவிடப்பட்ட நிகழ்வுகளிலும் இவனே தலைமைதாங்கிச் செயற்பட்டிருக்கிறான். தீவுச்சேனை எனும் கிராமம், பொலொன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. இப்பகுதியினை ஒட்டிய காட்டுப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு பல முகாம்களை அமைத்து வந்தது. இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து குறித்த தினத்தன்று முக்கிய செய்தியொன்று தொலைபேசி மூலம் வந்தது. அம்முகாமின் பொறுப்பாளனாக இருந்த சிந்துஜன் எனும் துணைராணுவக்குழு உறுப்பினன் தலைமையிலான கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து வந்த கட்டளையினையடுத்து சிந்துஜன் எனப்படும் பிரதீபன் தலைமையில் கடத்தல்க் குழு உருவாக்கப்பட்டது, இக்குழுவில் ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன் ஆகிய கொலைகாரர்களும் இருந்தனர். கடத்தப்பட்டவர்களின் மூன்று பெண்களை இக்கொலைக் குழுவின் புலநாய்வுக்குப் பொறுப்பான சீதா எனப்படு பிரதீப்பும் இன்னும் இருவரும் சேர்ந்து விசாரித்துவிட்டு விடுதலை செய்தார்கள். இந்த சீதாவே பிள்ளையானின் உதவியுடன் நத்தார் தினத்தன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தை ஆலயத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. தெல்லிப்பழையைச் சேர்ந்த கணேசலிங்கம், கிளிநொச்சியைச் சேர்ந்த தங்கராசா ஆகிய இரு ஊழியர்களை விசாரித்த சிந்துஜன் அவர்களை தலையில் சுட்டுக் கொன்றான். விடுவிக்கப்பட்ட நடேஸ்வரியும், சிவமதியும் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுக்கவேண்டிய தேவை இருந்தது. தமது கைதுபற்றி விடயம் தெரிவிக்க பொலீஸ் நிலையம் சென்ற இவர்களை பொலீஸ் வேண்டுமென்றே அலைக்கழித்துக்கொண்டிருந்தது. பின்னர் இவர்கள் கொழும்பிற்குச் சென்று மனித உரிமைகள் அமைப்பிடம் தமது முறையீட்டைப் பதிவுசெய்தார்கள். மறுநாள் இதே கொலைக் கும்பல் இன்னும் 15 கழக உறுப்பினர்களைக் கடத்திச் சென்று, விசாரணையின் பின்னர் 10 பேரை விடுதலை செய்தது. இக்கொலைக் குழுவால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்ட ஊழியர்களின் விபரங்கள், அருனேஸ்வரராஜா சதீஸ்வரன் கைலாயப்பிள்ளை ரவீந்திரன் சண்முகனாதன் சுஜேந்திரன் தம்பிராஜா வசந்தராஜன் பிரேமினி தனுஷ்கோடி நான்கு ஆண் ஊழியர்களை கடுமையாகச் சித்திரவதை செய்து விசாரித்த சிந்துஜன் எனும் கொலைகாரன் அவர்களைக் கொண்டே புதைகுழிகளை வெட்டுவித்தான். அவர்கள் தமக்கான குழிகளை வெட்டி முடிந்தவுடன் முழங்காலில் இருக்கவைக்கப்பட்டு அழுத மன்றாடிய நிலையிலேயே அவர்களை தலையில் சுட்டுக்கொன்று குழிக்குள் வீழ்த்தி மூடினார்கள். மீதியாக இருந்த பிரேமினிக்கு நடந்த கதியோ மிகவும் கோரமானது. தமிழ்ப்பெண்கள் மீது சிங்களப் பேரினவாத ராணுவ மிருகங்கள் நிகழ்த்தும் கொடூரத்திற்குச் சற்றும் குறையாத வகையில் கருணா குழு மிருகங்கள் நடந்துகொண்டன. முதலில் சிந்துஜன் எனும் மிருகத்தினாலும், பின்னர் அங்கிருந்த அனைத்து துணை ராணுவக்குழு மிருகங்களாலும் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பிரேமினியின் அரை உயிருடன் துடித்துக்கொண்ட உடலை அந்த மிருகங்கள் வாள்களால் கீலங்களாக வெட்டி அக்காட்டுப் பகுதியில் தூக்கியெறிந்தன. **********" https://www.tamilnet.com/img/publish/2007/03/TRO_release.pdf
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2005 இரு அரசியல்த்துறைப் போராளிகளைக் கொன்ற கருணா துணைராணுவக்குழு - அக்கரைப்பற்றில் சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லீம் கிராமமான பள்ளிக்குடியிருப்பு எனப்படும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியல்த்துறையில் பணியாற்றிவந்த இருபோராளிகளை கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றது. சுரேஷ் மற்றும் வெள்ளை ஆகிய போராளிகள் உணவுப்பொருட்களை வாங்குவதற்காக இப்பகுதிக்கு வந்தபோது அவர்களைக் கடத்திச் சென்ற துணைராணுவக்குழு பின்னர் சுட்டுக்கொன்று, வீதியில் எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. பள்ளிக்குடியிருப்பு அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில், அக்கரைப்பற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, கார்த்திகை 2005 ராணுவத்துக்கும் கருணா துணைராணுவக் குழுவுக்குமான தொடர்பினை வெளிப்படுத்திய சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் 16 வயதிற்குக் குறைந்த இரு உறுப்பினர்களான சுரேஷ் கந்தசாமி, பாபு செல்வம் மற்றும் சண்முகம் சர்வராஜா ஆகிய கருணா குழு உறுப்பினர்கள் தமது காவல்நிலையினைக் கைவிட்டு விட்டு புலிகளிடம் வந்து சரணடைந்திருக்கிறார்கள். கடந்த திங்களன்று சோலையகம் கட்டிடத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த இவர்கள் பெருமளவு பணம் தமக்கு வழங்கப்பட்டும் என்கிற உறுதியின்படியே தாம் கருணா குழுவில் இணைந்துகொண்டதாகத் தெரிவித்தனர். இலங்கை ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பின்கீழ் தாம் செய்ற்படவேண்டியிருந்ததாகக் கூறும் இவர்கள், புலிகள் மீது தாக்குதல் நடத்த தம்மை நிர்ப்பந்தித்தபோதே, தமது நிலகளை விட்டு வெளியேறி சரணடைந்ததாகக் கூறினர். சுரேஷ் மற்றும் செல்வம் ஆகியோர் கருணா குழுவினரால் கராபொல எனும் கிராமத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பலவந்தமாக இணைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். காக்காச்சிவெட்டையில் அமைந்திருக்கும் இலங்கை ராணுவத்தின் முகாமில் பங்கர் ஒன்றிற்குள் தான் 6 நாட்கள்வரை கருணாவின் சகாவான ஜிம் கெலித் தாத்தாவினால் அடைத்துவைக்கப்பட்டதாக சுரேஷ் கூறினார். மாதச் சம்பளப் பணமாக 6000 ரூபாய்களை தர கருணா குழு தன்னிடம் உறுதியளித்ததாக அவர் மேலும் கூறினார். முகாமில் ராணுவமே தமக்குப் பயிற்சியளித்ததாகவும், புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் சிலவற்றில் தான் ஈடுபட்டதாகவும் கூறிய அவர், மண்டூர் பாலத்தின்மீது ஒருவரைக் கொல்வதற்காக தனக்கு பிஸ்ட்டல் வழங்கப்பட்டதாகவும், தான் அதனை எடுத்துக்கொண்டு புலிகளிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார். செல்வம் தன்னைப்பற்றிக் கூறுகையில், வாகனச் சாரதியான தன்னைக் கடத்திய கருணாகுழு தீவுச்சேனையில் அமைந்திருந்த துணை ராணுவ குழுவினர் முகாமிற்கு கொண்டுசென்றதாக கூறினார். அங்கிருந்த துணைராணுவக் குழுவினர் ஓட்டமாவடியில் உள்ள பல வியாபார நிலையங்களில் களவுகளில் ஈடுபட்டதாகவும் கூறினார். 6000 ருப்பாய்கள் சம்பளத்திற்கு தான் அமர்த்தப்பட்டதாகக் கூறும் செல்வம், குறைந்தது 7 தமிழ் இளைஞர்களைக் கடத்திவந்த கருணா குழு தீவுச்சேனை முகாமில் சுட்டுக் கொன்றதைத் தான் கண்ணுற்றதாகக் கூறினார். கட்டாரிலிருந்து வந்து துணைராணுவக்குழுவில் இணைந்துகொண்ட சண்முகம் சர்வராஜா கூறுகையில் கருணா குழுவின் மார்க்கனின் அறிவுரையின்படியே தான் துணைராணுவக்குழுவில் வந்து இணைந்ததாகக் கூறினார். கொக்கட்டிச்சோலையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் மேலும் கூறுகையில், தீவுச்சேனையில் சுமார் 65 துணைராணுவக்குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தான்கூட மாதச் சம்பளத்திற்கே அவர்களுடன் சேர்ந்ததாகவும் கூறினார். சுமார் ஒருமாதகால பயிற்சியின்பின்னர் ராணுவத்தின் பவள் கவசவாகனமொன்றில் ஏற்றப்பட்ட சர்வராஜா வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தளமான சேனைபுறத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அம்முகாமின் தளபதி கப்டன் முனசிங்கவுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டதாகவும் கூறினார். அவரின் கூற்றுப்படி தமக்குத் தேவையான உணவுமுதல், அறிவுருத்தல்கள், கட்டளைகள் வரை அனைத்துமே இந்த முகாம் அதிகாரியினாலேயே வழங்கப்பட்டு வந்ததாக அவர் மேலும் கூறினார்.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, பங்குனி 2005 ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான தீவுச்சேனையில் இயங்கும் கருணா துணை ராணுவக்குழு முகாம் - சண்டே லீடர் பொலொன்னறுவை மாவட்டத்திலிருக்கும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தீவுச்சேனைப் பகுதியில் கருணா குழுவின் முகாம் இயங்கிவருவதை கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் வாரப் பத்திரிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. வாழைச்சேனை - ஹபரணை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செவனப்பிட்டிய எனும் சிங்களக் குடியேற்றக் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள இப்பகுதிக்கு இப்பத்திரிக்கையின் நிருபர்கள் அண்மையில் விஜயம் செய்திருந்தனர். இப்பகுதியில் இரு சிறுவர்களை அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் சிலநாட்களுக்கு முன்னதாக சுட்டுக் கொன்றிருந்தனர். தமது பிள்ளைகள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த இக்கிராம மக்கள் தமது இறந்த பிள்ளைகளின் உடல்களை பிரதான வீதிக்கு முன்பாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன், இந்த துணை ராணுவக் குழு முகாம் இப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். அக்கிராமவாசிகளின் கருத்துப்படி இந்த துணைராணுவக் குழுவின் முகாமிலிருந்து வந்த கருணா குழு ஆயுததாரி லக்ஷ்மண் என்பவரே இப்படுகொலைகளைப் புரிந்ததாகக் கூறினர். இதேவேளை, இச்சிறார்கள் கொல்லப்பட்டபொழுது, புலிகளே இவர்களைக் கொன்றதாகக் கூறியிருந்த பாதுகாப்பு அமைச்சு, உண்மையான குற்றவாளிகள் ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா துணைராணுவக் குழுவினர்தான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையிலும், இதுபற்றிக் கருத்துக் கூறவில்லை. தீவிச்சேனைப் பகுதி கடுமையான ராணுவ பிரசன்னத்தை எப்போதும் கொண்டிருப்பதுடன் ராணுவத்தின் பாரிய படைமுகாம்களும் சிறு முகாம்களும் இப்பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன என்பதோடு, முத்துகலையில் அமைந்திருக்கும் ராணுவ முகாமிலிருந்து இக்கிராமம் வெறும் 2 அல்லது 3 கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அமைதிருக்கிறது. இப்பத்திரிக்கை இம்முகாம் பற்றி மேலு கூறுகையில், கருணா குழுவின் "மங்களன்" என்பவர் தலைமையிலேயே இம்முகாம் இயங்கிவருவதாகக் கூறியிருப்பதுடன், இம்முகாமின் முன்னரங்கில், வீதியினை மறித்து காவலில் ஈடுபடும் இரு துணை ராணுவக்குழு உறுப்பினர்களின் படங்களையும் இணைத்திருக்கின்றது. தம்முடன் துணை ராணுவக்குழுவினர் என்று எவருமேயில்லை என்று சந்திரிக்கா தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், இப்பத்திரிக்கை இம்முகாம்பற்றிய செய்திகளை வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.