Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46793
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  4. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5418
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/22/24 in all areas

  1. காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன‌. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம். செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன‌. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெய‌ர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்ற‌து போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.
  2. இன மானம் காத்த அரணே போற்றி! பெண் மாண்பு காத்த மாண்பாளனே போற்றி! பன்முகத்தன்மை கொண்ட பன்முகனே போற்றி! ஆரிய குடி கெடுத்த தமிழ் மகனே போற்றி போற்றி!! போற்றி போற்றி!!
  3. 8 பக்கத்துக்கு நீட்டி, நீட்டி எழுதியதில் இருந்து சறுக்கி முதல் பக்கத்துக்கு வந்துள்ளீர்கள் . நல்ல மாற்றம்.
  4. வாழ்த்துக்கள் சிறிதரன்...இருவரும் அரசியல் தெரிந்த மேதைகள் ... யார் ஊடக பேச்சாளர்? சம்பந்தன் சுமத்திரனை உள்வாங்கி தமிழ்தேசியத்தை ஆட்டம் காண வைத்தது போல.... சிறிதரன் நம்பிக்கையான உண்மையான தமிழ் தேசிய பற்று உள்ள இளைஞர்களை உள்வாங்கி தனக்கு அடுத்த கட்ட செயல் வீரர்களை உருவாக்க வேண்டும்... இன்றைய இக்கட்டான் நேரத்தில் தமிழ் தேசியத்தை நீக்க பல கோணங்களிலிருந்து செயல் படுகின்றனர். சர்வதேசமும் தமிழ் தேசிய நீக்கத்தை விரும்புகிறது .இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..இவை யாவற்றையும் சுளிச்சு வெட்டி ஒடி தமிழ் தேசியத்தை தக்க வைப்பார்களா இவர்கள்?
  5. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது. இந்தநிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
  6. காலேல 12 இடியப்பம், 11 மணிக்கு tea வடை, மத்தியானம் மலை மாதிரி சோறு, இரண்டு மணிக்கு வெயில் சூட்டுக்கு fanta சோடா. பின்னரம் மிக்ஸ்ர் கொண்டல் கடலை and Tea. இரவைக்கு beer with கொத்து ரொட்டி இப்பிடி சாப்பிட்டுகொண்டு சனம் 35 வயசுக்கு மேல் வாழுதே.. அதே பெரிய விஷயம்
  7. நீ என் கைக்கு விலங்கிடுவாய் என்றால் ஆயுளுக்கும் நான் குற்றவாளியாக தயார்....😍
  8. ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது வழமை…
  9. முதலில் ஒற்றுமையை இந்தாள் கதைக்கிறரர் , 150000 மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த கொலையாளி . இவரை அம்மான் என்று தயவு செய்து எழுத வேண்டாம் . அந்த தகுதியை இழந்து ரொம்ப நாளாகிவிட்டது .
  10. நான் ஒருபோதும் சிறீதரனை ஆதரித்தோ அல்லது சுமந்திரனை எதிர்த்தோ இந்த திரியில் எழுதவில்லை. மேலும் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரகித்துக் கொள்ளுங்கள். அது எனக்கு தேவையற்றது…. பிகு : ஒரே பெயரில் வாருங்கள்…
  11. கூத்தமைப்பானுகளுக்கு வாழ்த்து வேற ஒரு கேடு. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது தமிழ் தேசியம் என்றாலே என்னவென்று தெரியாமல் அடிமட்ட உறுப்பினர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் சுத்துமாத்தின் உழைப்பு சாதாரணமானதல்ல. கூத்தமைப்பு ஒரு இலங்கை தி.மு.க
  12. நிர்வாகத்தினர், இந்தத் திரியில் முன்வைக்கப்பட்ட கடைந்தெடுத்த இழிந்த மதவாதக் கருத்துக்களை நீக்கிமாறு கோரிக்கை வைக்கிறேன்.
  13. தயவு செய்து இது போன்ற சொற் பிரயோகங்களை தவிருங்கள். கடைசியில் அது தமிழ் கிறிஸ்தவர்களை தமிழ் சைவர்களில் இருந்து தூர விலகி நிற்கவே இது போன்ற பதிவுகள் உதவும். தமிழ் கிறிஸ்தவர்கள் + தமிழ் சோனாகர்கள் என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதே எங்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும். ( அப்படி ஒரு நிலைமை ஏற்பட தமிழ் கிறிஸ்தவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டினம் என்பது எனது நிலைப்பாடு ) இல்லையேல் இங்கே தமிழ் சைவர்கள் சிறுபான்மை ஆகி விடுவோம்
  14. உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன.....😂 ஒரு சிலதுகள் சினிமாப்பாட்டுக்களிலை இருந்து இடையால உருவினதுகள். 😎
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனபெல் லியாங் பதவி, வணிகச் செய்தியாளர் 16 ஜனவரி 2024, 11:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும். ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு செய்யத்துவங்கும். இது மனித பணியாளர்களுக்கான தேவையைக் குறைக்கும், ஊதியத்தை பாதிக்கும், மேல்லும் சில வேலைகளை இல்லாமலே செய்துவிடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதேசமயம் வளர்ந்துவரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு 26% வேலைகளை பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,IMF ‘ஏற்றத்தாழ்வுகள் மோசமடையக்கூடும்’ இதனால், ஏற்கனவே இருக்கும் பொதுவான ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமடையும் என்கிறார் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜார்ஜியேவா. சட்டம் இயற்றுபவர்கள் இந்த ‘கவலையளிக்கும்’ விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார். இல்லையெனில் சமூகச் சிக்கல்கள் மேலும் மோசமடையும் என்றார். “[வளர்ந்துவரும் நாடுகள்] செயற்கை நுண்ணறிவின் பலன்களை உபயோகித்துக்கொள்ளும் அளவுக்கு உட்கட்டமைப்போ திறன்மிக்க பணியாளர்களோ இல்லை. இதனால் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கக் கூடும்,” என்கிறார் ஜார்ஜியேவா. இந்த ஆய்வு முடிவுகள், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு அறிக்கை முடிவுகளை ஒத்திருக்கிறது. அந்த அறிக்கை, 30 கோடி முழுநேர வேலைகளைக் காலி செய்துவிடும் என்று கூறியிருந்தது. ஆனால், அதற்கேற்றாற்போல் புதிய வேலைகளும் உற்பத்தித்திற்ன் பெருக்கமும் இருக்கும் என்று கூறியிருந்தது. யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? பொதுவாக அதிக ஊதியம் பெறுபவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஊதியம் செயற்கை நுண்ணறிவினால் மிக அதிகமாக உயரும். ஆனால் குறைந்த ஊதியமுள்ளவர்கள் முதியவர்கள் ஆகியோரின் ஊதியம் குறையலாம் என்கிறது சர்வதேச நாணய நிதியம். “இதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும், பாதிக்கப்படக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சித்திட்டங்களையும் உலகநாடுகள் உருவாக்க வேண்டும்,” எ ந்கிறார் ஜார்ஜியா. “அப்படிச் செய்தால் செயற்கை நுண்ணறிவுக்கான மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வாழ்வாதாரங்களை பாதுகாப்பதாகவும், எற்றத்தாழ்வுகளை குறைப்பதகவும் அமையும்,” என்கிறார் ஜார்ஜியேவா. ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தைப் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அய்வு வெளிவருகிறது. இந்த மன்றத்தில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மன்றத்தில், ChatGPT போன்ற செயலிகளின் வளர்ச்சி குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செயற்கை நுண்ணறிவு பாதுகப்பு குறித்த சட்டங்கள் இயற்றியுள்ளன செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த சட்டங்கள் பல நாடுகளும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்டங்களை இயற்றி வருகின்றன. கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகின் முதல் சட்டங்களை முதற்கட்டமாக முடிவுசெய்தனர். தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவுச் சட்டங்களை முதலில் அமுல்படுத்தியது சீனா. இந்தச் சட்டங்கள் அல்காரிதம் எவ்வாறு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சொல்கிறது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் பைடன் மென்பொருள் உருவாக்குபவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாதுகாப்புத் தரவுகளை அரசாங்கத்துடன் பகிருந்துகொள்ளுமாறு ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார். அதற்கு அடுத்த மாதம், இங்கிலாந்து செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தியது. அதில் பல நாடுகளும் பாதுகாப்பான தொழில்நுட்பம் சார்ந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஒரு மனிதனைப் போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் வைக்கிறது. மனிதனைப் போலவே ஒரு விஷயத்தை கணித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கிறது. கணினியைக் கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது. அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம். அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம். வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உபயோகிக்கிறது. அத்துடன் போலி ரிவ்யூகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c25y40x2xj0o
  16. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
  17. இதென்ன பிரமாதம்??????? மேற்கத்தைய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களையும் வெளியிலை விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே.......😋 ஆனால் ஒண்டு புட்டின் சார் சொத்துக்கள் சேர்த்தது உண்மை பொய்களுக்கப்பால் வெளிநாடுகளுக்கு படையெடுத்து சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை. 😎
  18. அப்பட்டமான மனித உரிமை மீறல் ...சோசலிச ஜனநாயக குடியரசில் போதை பொருள் கடத்துவது குற்றமா?
  19. ஆஹா ....ஹா.....ஹா........அருமை அருமை.......! 🤣
  20. நேற்று சிம்பாவே அணிக்கு எதிரா விளையாடின‌ த‌மிழ‌ன் ஷ‌ருய‌ன் ச‌ன்முக‌னாத‌ன் மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடினார் பெடிய‌னுக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இன்னும் சிற‌ப்பாக‌ விளையாட‌ வாழ்த்துக்க‌ள்.............. ......
  21. இந்த வேலைகளை கற்று இருந்தால் என்றுமே பிரச்சனையில்லை: 1) விவசாயம் 2) சமையல் முறைகள் 3) தலை மயிர் வெட்டுதல் 3 வதை தான் கற்க முடியவில்லை, அது ஒரு தனி கலை👍
  22. சுமந்திரனின், எல்லா ராசதந்திரமும்... வீணாய் போய் விட்டதே. 😂
  23. இங்கும் உங்களுக்கு மதம் பிடித்துள்ளது…. கருணா நெற்றியில் பட்டை அடித்ததை பார்த்ததில்லையா நீங்கள்?
  24. இருக்கின்ற எல்லாமே உதவாது , அதில் சிறிதரனால் தமிழருக்கு ஆபத்து குறைவு. அறிவாளிகளான நீலன் வழியில் சுமந்திரன் வந்தால் . ரணிலுக்கு வேலை சுகமாகிவிடும் அவ்வளவுதான் . தேசியம் இல்லாது போய்விடும் மற்றும் , புலி எதிர்ப்பு பலமாகிவிடும்.
  25. நடக்கிறதை கதையுங்க நுணா. சிறிதரனின் வெற்றிக்கு மறுவன்புலவு சச்சியும் உழைத்தவர்.
  26. நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த இடம். இதைப் பற்றி கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டு கீழே வாசிக்க தம்பியைப் பற்றி எழுதியுள்ளீர்கள். அந்தநேரம் என்ன மனநிலையில் இருந்திருப்பீர்கள் என்பது புரிகிறது.
  27. அப்படி இல்லை. பொதுவாக கூறினால் அநேகமான இரானிய மக்கள் நல்லவர்கள். இங்கு கொமேனியின் அடிப்படை மதவாதம் அவர்களை ஆட்டி படைக்கிறது. இப்போது இந்தியாவில் மதவாதம் இப்போது எப்படி கோலோச்சுகிறது என்று பாருங்கள். தமிழ நாட்டில் கோவில்கள் எல்லாம் ஒழுங்காக சுத்தமாக இருக்கின்றது. ஆனாலும் என்ன , மதவாத ஆளுநர் அண்ணாமலை போன்றோர் கோவில் கோவிலாக சென்று சுத்தம் செய்கிறோம் என்று தண்ணீர் ஊற்றி கழுவுகிறார்கள். அதாவது அங்கு குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவர்களின் நோக்கம். அதுதான் நான் அந்த மக்கள் குறித்து கவலைப்படுகின்றேன். ஆடை அவிழ்ப்பு கலாச்சாரம் என்று நீங்கள் கூறுவது என்ன ? அதை விளக்கமாக எழுதினால் நல்லது. குறைந்தது நீங்கள் பின் பற்றும் ஆடை கலச்சாரத்தையாவது ஈரானில் அறிமுக படுத்தலாம் இல்லையா? அதட்கும் நீங்கள் இணங்காவிடடாள் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மேட்கத்தயா நாடுகளை குறை கூறி கொண்டு அங்கு அவர்களின் வசதி வாய்ப்புக்களை பயன்படுத்தி சந்தோசமாகா வாழ்வது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.
  28. பைடன் அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டும் எனில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு தீர்வின் மூலமே இது சாத்தியம். மறு கரையில் நத்தனியாகு போரை விட்டால் அவர் பதவி இழக்க வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். நத்தனியாகுவின் வெற்றி அமெரிக்காவை போருக்குள் இழுத்து விட்டது. அவரின் தோல்வி கமாஸ், கிஸ்புல்லாவை ஒடுக்க முடியாமல் இருப்பது. பணய கைதிகளை மீட் க முடியாததும் ஒரு தோல்வி.
  29. இலங்கையில் சிங்களம் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தது போன்றதொரு செயல். இறப்பிலும் மனிதருக்கு அமைதி இல்லையென்றாகிவிட்டது. ☹️
  30. முகநூல் கருத்துக்களை யாழ் ஆதராமாக எடுத்துகொள்வது இல்லை . எனது கோரிக்கையும் அதுதான் .
  31. இனி சிறீதரன் இலங்கை பாராளுமன்றத்தில் நல்ல உணர்ச்சிகரமான உரைநிகழ்த்துகின்ற பேச்சுக்கள் கொண்ட யுரியுப் வீடியோக்களை கண்டுகளிக்லாம்.
  32. புலிகள் தமக்கு பின்னர் எதையாவது ஏற்பாடு செய்தார்களா என்பதற்கான பதில் அது. எனக்கு தற்போது அவர்களில் எந்த எதிர்பார்ப்பும் மக்கள் நலன் சார்ந்த உழைப்பும் இல்லை. இருக்கவும் வாய்ப்பு இல்லை. நன்றி
  33. விறுவிறுப்பான நேர்த்தியான எழுத்து நடை. ....ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!...சுவைக்கும் வகையில் அழகுற நகர்த்திச் செல்வது நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
  34. விறுவிறுப்பான நேர்த்தியான எழுத்து நடை. ஓவியம் மட்டுமன்றி எழுத்தாற்றலும் உங்களுக்கு நன்றாக வருகிறது. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எழுதுங்கள்.
  35. அதனை இந்தியாதான் தீர்மானிக்கும். யாப்பு எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை.
  36. காயும் பழமுமாய் கண்கவர் வண்ணங்களுடன் கண்சிமிட்டும் காதலி.......! 😂
  37. சீனியின் சிறப்பியல்புகளில் ஒன்று அது எதனுடன் கூட்டுச் சேர்ந்தாலும் மூலப்பொருளின் சுவையை மாற்றுவதில்லை என நினைக்கிறேன். இந்தச் சிறப்பியல்பு பிற சுவையூட்டிகளுக்கு இல்லை. . விற்பன்னர்கள் மேடைக்கு வரவும்.
  38. அது சரி இலங்கை காண்ப்பித்த. இராசதந்திரம் யாது ?? பண்டா- செல்வா டல்லி -செல்வா என்பன கிழித்து எறிந்தா?? அல்லது இலங்கை -இந்தியா ஒப்பந்தம் அமுல் செய்யாமல் விட்டதா?? சொன்ன சொல் தவறியவர்களுடன் எப்படி இராசதந்திரம். செய்யலாம் இராசதந்திரத்துக்கு முதல் தேவை நம்பிக்கை நம்பிக்கை அற்ற. இலங்கை உடன். இராசதந்திரம். கடைபிடிக்க முடியாது உலகில் 23 முஸ்லிம் நாடுகள் உண்டு ??? ஆனால் உலகில்…………… எத்தனை தமிழ்நாடுகள் உண்டு” ஒன்றுமில்லை எனவே… முஸ்லிம் போல் தமிழர்கள் இலங்கையில் நடந்து கொள்ள முடியாது காரணம் பாதுகாப்பு இல்லை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உண்டு”
  39. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  40. சொந்த மண்ணில் கேரள/ஹிந்திய நடனங்கள் முளைக்க புலத்தில் எமது பாரம்பரிய கலைகளை முன்னெடுக்கும் எம்வவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
  41. பதனீரைப் பயன்படுத்தி பனங்கட்டி வந்தது. இப்பொழுது பனஞ்சீனியும் வந்திருக்கிறது. பனஞ்சீனி இலங்கையிலும் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட்டது. பனங்கட்டியினைச் செய்யும் முறையிலிருந்து சற்று வேறுபட்டு பனஞ்சீனி செய்யும் முறை அமைகிறது. பனம்பாணியினைக் காய்ச்சும் விதத்திலும் பின் அதனை இறுகச் செய்து பதப்படுத்தும் முறையிலும் சில வேறுபாடுகள் இருப்பதுதான் முக்கியம் எனலாம். மூலம் என்பது பதனீரே ஆகும். யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் காலத்திலே பனஞ்சீனிக் கென்று ஒரு தொழிற்சாலையானது பொலிகண்டிப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்ததாம். இங்கு பனஞ்சீனி செய்வதற்கான பதனீரினை -உடுப்பிட்டி, கொற்றாவத்தை, பருத்தித்துறை, சிங்கைநகர் போன்ற இடங்களில் பெற்று குழாய் மூலமாக பொலிகண்டியில் அமைந்திருந்த பனஞ்சீனித் தொழிற்சாலைக்கு கொண்டு வந்திருப்பதாகச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. இப்படியாகப் பெறப்பட்ட பதனீரின் மூலம் பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்னும் செய்தி மிகவும் காத்திரமான செய்தியாகவே இருக்கிறதல்லவா! அந்தத் தொழிற்சாலை அங்கு இருந்திருக்கிறது என்பதற்கான எச்சங்கள் இன்றும் இருப்பதாக வடமராட்சி மக்கள் தெரிவிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கது. பிரித்தானியர் காலத்தின் தொடர்ச்சியோ தெரியவில்லை மீண்டும் பொலிகண்டியில் பனஞ்சீனித் தொழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பொலிகண்டியில் தொடங்கப்பட்ட பனஞ்சீனிச் செய்கை பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறது. அத்துடன் சண்டிலிப்பாயிலும் பனஞ் சீனி செய்யப்பட்டிருக்கிறது. பொலிகண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பனஞ்சீனிச் செய்கையினைக் கண்ணுற்றதால் ஆர்வமேற்பட்டு திருவடிநிலை, மந்துவில், கருவம்பானை ஆகிய இடங்களில் முயற்சி எடுக்கப்ப ட்டபோதும் அது பொருந்தி வராமலே ஆகிவிட்டது, முயற்சி என்பது விடாமல் நடந்தபடி இருந்தது. இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டில் கீரிமலையில் ஆரம்பிக்கப்பட்ட பனம் பொருள் உற்பத்தி நிலையத்தில் சாத்தியமாகியது எனலாம். இலங்கையின் விஞ்ஞான சபையினரும், இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினரும் இணைந்து எடுத்த முயற்சியினால் பனஞ்சீனி உற்பத்தி என்பது புத்து யிர்ப்பினைப் பெற்றது என்று அறியக்கூடியதாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் பனஞ்சீனித் தொழிலானது முன் நோக்கிச் செல்லத் தொடங்கிய தெனலாம். 1972 - 1973 ஆண்டுகளில் சிங்கைநகர் பனம்பொருள் உற்பத்தி நிலையத்தால் பனஞ்சீனியின் உற்பத்தியானாது நல்ல வெளிச்சத்தைக் காட்டும் நிலைக்கு வந்தது. மக்களின் ஆதரவும் பெருகியது. 1974 - 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் தொழிற்சாலைகள் எழுச்சி பெற்று பனஞ்சீனி உற்பத்தி சிறப்பான ஒரு நிலையினை அடைந்தது என்பது நோக்கத்தக்கதாகும். இந்த வகையில் சரசாலை, அச்சுவேலி, பருத்தித்துறை, சண்டிருப்பாய், மந்துவில் ஆகிய இடங்களில் பனஞ்சீனியை உற்பத்தி செய்வதற்காக பாரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன என்பதுதான் முக்கிய செய்தியாகும். சிறப்பாகச் செயற்பட்டு, நல்ல உற்பத்தியினையும் கொடுத்து, மக்களின் மனதிலும் இடம்பிடித்து நின்ற பனஞ்சீனித் தொழில் - ஆட்சியிலிருந்த அரசின் கொள்கைகளாலும், நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தச் சூழ்நிலை காரணமாகவும், தொடரமுடியாத நிலைக்கு ஆளாகிவிட்டது என்பதும் நோக்கத்தக்கது. இலங்கையில் பனஞ்சீனி உற்பத்தி என்று நோக்கும் பொழுது, இந்தியாவின் சீனித் தொழில் நிபுணரான பேராசிரியர் றாவ் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இலங்கையின் சீனித் தேவைபற்றி அவர் ஆராய்ந்தார். அதன் படி அவர் பனஞ்சீனியைச் செய்வதையே பெரிதும் விரும்பினார் என்றுதான் அறியக் கூடியதாக இருக்கிறது. "சீனியை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சிக்கலிருந்து விடுபட வேண்டுமானால், இயற்கை மூலவளங்களைப் பாவிக்க வேண்டும். பனையிலி ருந்து தரமான பனங்கட்டி, பனஞ்சீனி செய்யலாம் " என்று அவர் தன் மனக்கருத்தை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் அமையாது "யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற பனை வளத்தைக் கொண்டு, நல்லதொரு பனஞ்சீனி ஆலையை ஆரம்பிக்கலாம்" என்னும் அவரின் கூற்றும் மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் எடுக்க வேண்டும். இந்திய நிபுணர் கூறியதோடு, அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஜேர்மனியின் பொருளாதார நிபுணர்களும் யாழ்ப்பாணத்தில் "பாரிய சீனித் தொழிற்சா லையினை அமைக்கலாம்" என்று அறிவுறுத்தியமையும் மனங்கொள்ளல் வேண்டும். தமிழ்நாட்டில் பனஞ்சீனியைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் மிக்கவர்கள் பலர் மாநிலம் தோறுமே இருக்கிறார்கள். பனஞ்சீனியின் பயன்பாடும் அங்கு இருக்கிறது. சித்த வைத்தியத்தை பெரிதாக எண்ணுகின்றவர்கள் பலர் இருக்கின்ற காரணத்தால் பனஞ்சீனி பற்றிய புரிதல் அங்கு இருக்கிறது. “நேச்சுரல் ஃபுட்ஸ் அண்ட் ஹெர்ப்ஸ்” என்னும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடங்கி இருக்கிறார். திருச்செங்கோட்டையைச் சேர்ந்த இவர் கணணித்துறையில் பட்டம் பெற்ற ஒரு பொறியியலாளராவார். இவரின் தாத்தா பனங்கட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இவரின் அப்பாவே ஒரு துணைக் கலெக்டராவார். தாத்தாவின் உணர்வு பேரனான சரவணனுக்குள் ஏற்பட்ட காராணத்தால் படித்த படிப்பினை ஒரு பக்கம் வைத்து விட்டு பனையின் பக்கம் வந்துவிடார். இவரும் மனைவியுமாக இணைந்து பனங்கட்டி, பனஞ்சீனி செய்வதில் ஈடுபட்டு நிற்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது. இவர்களின் விடா முயற்சியினால் பலரும் பயன் அடைகிறார்கள். பனஞ்சீனியும் விற்பனைக்கு உகந்த விதத்தில் உற்பத்தி செய்ய்யப்பட்டும் வருகிறது. தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், இயங்குகின்றன. இந்தச் சங்கங்கள் வாயிலாக பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பனங்கட்டியைப் போலவே பனஞ்சீனியையும் பானங்களுக்கும், இனிப்பான பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம். பனஞ்சீனியில் செய்யப்படுகின்ற அத்தனையும் நல்ல சுவையினைத் தருவதோடு உடலின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாகவும் இருக்கும் என்பதுதான் முக்கியமாகும். பதனீரின் அவதாரங்களில் பனங்கற்கண்டு அதாவது கல்லாக் காரமும் ஒரு நிலை எனலாம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பனங்கல்லாக்காரம் நிச்சயம் இருக்கும். அதற்குக் காரணம் அதன் பயன்மிக்க மருத்துவக் குணமேயாகும். ஆயுள் வேதம், சித்த மருத்துவம் இரண்டுமே பனங்கற்கண்டை விதந்தே கூறுகின்றன. ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாக இவை தெரிவிக்கின்றன. தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டவுடன் யாவரும் நாடுவது பனங்கற்கண்டையேயாகும். சங்கீதம் பாடுகிறவர்கள் பனங்கற் கண்டை மிகவும் பத்திரமாகவே வைத்திருப்பார்கள். குரலில் கரகரப்பு வந்ததும் வாயில் போட்டு உமிழ்வார்கள், அடைப்பும் போய் குரலும் தெளிவாகிவிடும். இருமலுக்கு மிகவும் உகந்ததாக கல்லாக்கரம் விளங்குகிறது. கண்ணில் வெப்பம் காரணமாக சிவப்பாக மாறும் நிலை ஏற்படும் பொழுது கல்லாக்கரத்தை நீரில் கரைத்து கண்ணில் விட்டு விட்டால் அந்த நிலை மாறியே விடுகிறதாம் என்றும் கூறுவார்கள். கல்லாக்காரத்தில் மிளகினைக் கலந்து பயன்படுத்தி வந்தால், எமக்கு வருகின்ற இருமல், சலக்கடுப்பு, தொண்டையில் வரும் கரகரப்பு, உள்நாக்கு வளருதல் ஆகியன சுகமாகும் என்று அறியக்கூடியதாக இருக்கிற து. நோய்களைக் குணமாகும் . உடலைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு பனங்கற்கண்டு உதவி நிற்கிறது. இதனால் சின்னமுத்து வந்தால் பனங்கற்கண்டையே கையிலெடுத்தார்கள் என்பதும் நோக்கத் தக்தக்கது. தமிழ்நாட்டிலே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாக்களிலும், சுபமுகூர்த்த வேளைகளிலும் வந்திருக்கும் உறவினர்களுக்கும் பனங்கற் கண்டைக் கொடுத்தும் மகிழுகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும். பனங்கற்கண்டானது யாழ்ப்பாணத்தில் முன்னர் உற்பத்தியாகி இருந்தபொழுதும், பனம் பொருள்களை நவீன முறையில் உற்பத்தி செய்யும் வகையில் கீரிமலையில் தொடங்கப்பட்ட உற்பத்தி நிலையத்தில் தான் பின்னர் செய்யப்பட்டது என்று அறிகின்றோம். எனினும் பனங்கற்கண்டு உற்பத்தியானது சீராக இருக்கவில்லை என்பதைத்தான் கருத்திருத்த வேண்டி இருக்கிறது. இலங்கைக்கு பனங் கற்கண்டின் தேவை மிகவும் வேண்டியே காணப்பட்டது. குறிப்பாக இலங்கையின் ஆயுள்வேதக் கூட்டுத்தாபனம் விரும்பியே நின்றது. இதனால் அதன் தேவையினைப் பூர்த்தி செய்ய இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பனங்கற்கண்டு போதாதிருந்தததால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அவசியம் ஏற்படலாயிற்று. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் உடன்குடி, கொட்டங்காடு, சிறுநாடார் குடியிருப்பு, சாத்தான்குளம், அடைக்கலநாதபுரமும் இந்தியாவின் வங்காளமும் பனங்கற்கண்டு உற்பத்தியில் முன்னணி வகித்திருந்தன என்பதும் நோக்கத்தக்கது. யாழ்பாணத்தில் பனைவள மிருந்தும் பனங்கற்கண்டை, இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் மனமிருத்தல் வேண்டும். பனங்கற்கண்டு மருத்துவப் பயன்பாடு மிக்கதாக அமைந்திருப்பதால் அதன் உற்பத்தியிலும் கவனம் செல்லுத்துவதில் அக்கறை கொள்ளுவது அவசியமேயாகும். பதனீரின் நிறைவாகக் கழிவுப் பாகு அமைகிறது. பெயர் என்னவோ கழிவுப் பாகு என்று இருந்தாலும் அதுவும் பயனையே அளித்து நிற்கிறது என்பதுதான் முக்கியமாகும். இந்தக் கழிவுப்பாகில் ஊட்டச் சத்து இருக்கிறதாம். பதனீரில் காணப்படுகின்ற சத்து கழிவுப்பாகில் வந்து சேருகிறதாம். இதனுடை கறுப்பு நிறத்தால் இது மக்களால் ஒதுக்கப்படுகிறது. இப்பாகில் கந்தகம் கலந்து காணப்படுகின்ற காரணத்தால் அதனைப் பயன்படுத்தாமல் மக்கள் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இதனை உரிய முறையில் சுத்தீகரித்து எடுத்தால் சுவை மிக்கதான பாகினைப் பெறக்கூடியதாகவே இருக்கும். இப்படியான பாகினை பானங்களுக்கும், இனிப்புப் பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். மருத்துவத்துக்கும் கழிவுப்பாகு உதவி நிற்கிறது என்பதும் முக்கியமாகும். புகையிலை பதப்படுத்தலிலும் கழிவுப்பாகினைப் பயனாக்குகின்றனர். பால் கறக்கும் மாடுகளுக்குக் கொடுக்கப்படும், புண்ணாக்கு, புல்லு, தவிட்டுடன் கழிவுப்பாகினைக் கலந்து கொடுத்தால் பால் நன்றாகவே சுரக்குமாம். மற்றைய கால்நடைகளுக்கும் கொடுக்கும் பொழுது அவையும் சிறப்பாக உழைக்குமாம் என்பதும் நோக்கத்தக்கது. இவற்றை விடக் கட்டிடப் பயன்பாடு, எரிபொருள், வினாகிரி உற்பத்தி என்ற வகையிலும் கழிவுப்பாகு பயனாகி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும் http://www.tamilmurasuaustralia.com/2022/06/blog-post_95.html
  42. பெண்மைக்கு மரியாதை தந்த காளை .......என்னா ஒரு அறிவு......! 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.