Everything posted by Paanch
-
அறிமுகம்
கல்யாணம் என்றாலே வயது தன்னை மறந்து சுந்தரமாகத் துள்ளுகிறது. என்ன செய்வது வாழ்வில் ஒருமுறைதான் அதனை அனுபவிப்பேன் என்று என் மனத்தின் தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளேனே!! யாழ்களம் பெரும் பாக்கியம் செய்துள்ளது. கல்யாண சுந்தரமே யாழுக்கு வருகிறார். வருக!வருக!! களம் தினமும் கல்யாண மகிழ்ச்சியில் இனிதாகத் துள்ளட்டும்.🙌
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. இலங்கையில் சிங்கள இனம் தமிழினத்தைச் சுற்றியுள்ளது. சுற்றுமுன் அடித்து விரட்ட சுள்ளித்தடி தேடவேண்டும், அது இன்று உலகெங்கும் பரந்திருக்கும் தமிழரிடம் இருக்கிறது. இந்தத் தமிழர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதனைத்தான் தலைவனும் உணர்ந்து பொறுப்பை அங்கு கொடுத்து உணர்த்தினார்.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
அன்றைய பரமேசுவரா கல்லூரிதான் இன்றைய பல்கலைக்கழகம். அது சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் கட்டப்பட்ட கட்டிடம். அந்தக் கட்டிடக் கல்லூரியில்தான் நானும் படித்தேன். அக்கட்டிடத்தில் ஏதோ புரியாத அதிசயம் இருப்பதுபோல் இந்த மாணவியின் சம்பவமும் என்னைச் சிந்திக்க வைக்கிறது. நான் எட்டாவது வகுப்பு படிக்கும்போது வடமாகாண ஆசிரியர் சங்கத்தால் நடாத்தப்பட்ட ஒரு பரீட்சையில் பங்குபற்றுவதற்கான மாணவர்கள் தகுதி பார்க்கப்பட்டது. அதுசமயம் அங்கு நடைபெற்ற உள்ளகப் பரீட்சையின் பெறுபேறுகளைக் கொண்டு மாணவர்கள் தெரிவுசெய்யப் பட்டனர். அப்பரீட்சையில் கணக்கும், தமிழும் பிரதான பாடங்களாக இருந்தன. அவை இரண்டும் மிகவும் கடினமாக இருந்ததால் பலமாணவர்கள் அவற்றில் சித்திபெறவில்லை. ஏனைய பாடங்கள் மிகவும் சுலபமானது. ஆகவே மாணவர் தெரிவில் கணக்கும், தமிழும் சித்தியடைந்தோரை ஆசிரியர் சங்கத்தால் நடாத்தப்படும் பரீட்சைக்கு அனுமதிப்பதாக ஆசிரியர்கள் கூடி முடிவெடுத்தனர். நானும் தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் நான் கணக்கிலும், தமிழிலும் மட்டுமே சித்திபெற்றிருந்தேன், மற்றும் அனைத்திலும் சித்திபெறாது கோட்டை விட்டிருந்தேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் இதைப் பின்னர் கவனத்தில் கொண்டு “இவன் அந்த இரண்டு பாடங்களைத் தவிர மற்ற அனைத்திலுமே சித்தி பெறவில்லை இவனை எப்படி அனுப்பலாம்?” என்று ஆட்சேபனை எழுப்பினார். அச்சமயம் எங்கள் கல்லூரி அதிபர் அந்த ஆட்சேபனையை ஏற்க மறுத்து இது உங்கள்தவறு இதனை நீங்கள் முன்பே கவனித்திருக்க வேண்டும். அறிவித்தபின்பு மாற்றக் கூடாது எனக் கூறிவிட்டார். நான் வடமாகாண ஆசிரியர் சங்கம் வைத்த பரீட்சையில் பங்குபற்றி 2ம் தரத்தில் சித்தி பெற்றேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். இந்த மாணவியும் தடைக்கு உட்படாது எதிர் காலத்தில் சிறந்த வைத்தியராக வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
கடலில் மூழ்கும் நிலையில் இலங்கையில் தமிழர்கள். (தமிழ் பேசுபவர்கள் அல்ல). சிறு துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அவர்களே! இதுவும் கடந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்நாளில் கடக்கவே முடியாத துன்பங்களும் உண்டென்பதை மறுக்கவே முடியாது. அத்தகைய ஒரு துன்பம் உங்களையும் சூழ்ந்துவிட்டதை எண்ணிக் கலங்குகிறோம். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு ஆறுதல்கூற வார்த்தைகள் இல்லை. தமிழினம் அழிவுகளைச் சந்தித்துவந்த வேளையில் யாழ்களத்தை ஆரம்பித்து எங்கள் மனதுயருக்கு ஆறுதல்தந்து ஆற்றுவதற்கு வந்த ஒருவராகவே உங்களை எங்கள் மனங்களில் பதியவைத்தோம். அந்தப்பதிவு அழியாது. என்றும் உங்களுக்கு ஆதரவு தரவே மனம் விரும்புகிறது. ஆறுதல்கூற முடியாத உங்கள் துணைவியாரின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!🙏
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
எதிர்ப்பு 1. ஆதரவு 1.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
யாழ்களத்தில் அருச்சுனாவிற்கு கள உறவுகளின் ஆதரவு அதிகமா? எதிர்ப்பு அதிகமா?? அவரால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? தீமைகள் என்ன??
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
ஈழப்பிரியரே! கவலை வேண்டாம், உங்கள் நாட்டுத் தலைவரிடமே நீங்கள் கற்றுத் தேறலாம். திருடிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி அறிக்கையும் விடலாம்.🤪
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
சாத்தான் அவர்களே! இப்படியெல்லாம் தலைவர்களை விமர்ச்சிக்கக் கூடாது!!. அதுவும் கருனாநிதியோடு ஒப்பிடக்கூடாது. பாவம் விமல்.😩 கருனாநிதிக்கு தலைமாட்டில் ஒன்று, கால்மாட்டில் ஒன்று.🥰
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அனேகமாக இறப்புவரும் இறுதிநேரத்தில் மனிதர்கள் தாங்கள் புரிந்த தவறுகளை வெளியிட்டு, தங்கள் மனதிற்கென்றாலும் அமைதியைத் தேடுவதை அறிந்துள்ளோம். சோனியா தேடினாரா.? அவருக்கு மனம் என்று ஒன்று உள்ளதா.??🤔
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
“அப்பன் குதிருக்குள் இல்லை” அத்தியடிக் குத்தியனும் குற்றவாளி இல்லை.🧐
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்பிடித்து பார்க்கக்கூடாது.- பழமொழி.🤣 தானம் கொடுத்த கெலின் விசிறியைச் சுற்றிப் பார்க்கக்கூடாது.- புதுமொழி.😁
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
வீர வணக்கங்கள்.!!🙏🙏
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
https://www.facebook.com/reel/1567565054
-
சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு
மாற்றம் ஒன்றே மாறாதது. அமெரிக்காவின் ஏற்றம் இறங்கத் தொடங்கியுள்ளது. 🤔
-
தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
மகிந்தரின் திட்டப்படி, சம்பந்தர்மூலம் திருவளர் சுமந்திரன் அவர்களை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டுவந்ததே கட்சியைக் காலிபண்ணுவதற்கு என்ற ஐயம் உள்ளது. இது ஐயமில்லை உண்மையே என்பதுபோல், சுமந்திரனும் தான் உள்ளேவந்த காரியத்தைக் கனகட்சிதமாக நிறைவேற்றி வருவது கண்கூடு. என் கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் தமிழரசுக் கட்சி
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஐயையோ டக்ளஸ் தேவானந்தா கைதா?? இவருக்காக தீக்குளிக்கப் போவது யார்???🧐
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
ஏற்கெனவே அல்ல, இன்றும் தமிழர்கள் புத்தரைக் கடவுளாகவே வணங்குகிறார்கள், வழிபடுகிறார்கள். சாதி, சமயம், மதம் கடந்து எங்கு ஒரு கடவுளுக்குரிய கோவிலைக் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நேரும்போதும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாகவேனும் தமிழர்கள் வணங்கிச் செல்வதைக் காணலாம். தமிழ் இனத்தவரைத் தவிர வேறு எந்த இனத்தவரிடையும் இந்தப் பண்பைக் காண்பது அரிது.
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
தையிட்டியில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகள் எங்குமே விகாரைகள் வரப்போவது உறுதி. “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடல் இலங்கைத் தமிழருக்காகவே பாடப்பட்டதுபோல் உள்ளது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
குடும்பத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு, தராதரம் பார்ப்பவர்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். இதற்குள்தான் நானும் பிறந்து வளர்ந்தேன். குறியேறிகளுக்கு தேனீர் கொடுக்கவும் சிரட்டையை நாடுதே என்மனம்.🧐
-
இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
நம்பிட்டோம்.🥴
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அவர்கள் என்றும் இளமையாக இருந்து யாழுக்கு நிழல்தர வேண்டுகிறேன்.🙏
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣
-
வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!
சிங்கப்பூரே போற்றும் தமிழர்களின் நிர்வாகத்தில் சிறப்புற்று விளங்கிய இலங்கையை, சிங்களவர் நிர்வாகத்தைக் கொண்டுவந்து எப்படிச் சிதைவடையச் செய்தோம் என்ற வரலாறும் இருக்கிறதே, அதுவும் கற்பிக்கப்படுகிறதா??.🤔
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
கடல்நீரில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக் கண்டாலும் அதனைப்பற்றி தன் உயிர் காப்பாற்றவே முயல்வான். துரும்புபற்றி ஆராயமாட்டான். சொல்லவெண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களும் அப்படித்தான். கோத்தபாயாவே அனுரா வடிவில் வந்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.