Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. ஆகவே சீமானுக்கு எதிரான பாலியல்~ புகாரே தவிர அங்கு மழை இல்லை. ஈரம் இல்லைப்போல் தெரிகிறது. உண்மை என்ன??? அது சீமானுக்கும் அந்த நடிகைக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை, இருந்தால் சாட்சி ஏதாவது வந்திருக்கும். சீமான் என்றாலே ஒருவருக்கு வாந்தி வருகிறது, அதை ஏந்த ஒருவர் இருப்பதையும் பின்னூட்டங்களில் காணமுடிகிறது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அது சீமானுக்குப் பொருந்தும்போல் தெரிகிறது.
  2. இது தவறான பதிவு. “முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து அரசாங்கம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற தொடர்பில் அரசாங்கம் அவதானம்”. இப்படித் தலைப்பில் பதிவு வருவதுதான் இலங்கைக்கு பொருந்தும்.🤣
  3. கார் தயாரிப்பு இடதுகையா? வலதுகையா? அதனை எங்கு தயாரித்தாலும் எப்படித் தயாரித்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் காரோட்டி எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்பது இந்தியாவில் மிக மிக முக்கியம்.🤪
  4. மவுனமாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கு ஆதரவும் கொடுத்தார்களே! மவுனமாக இருக்க மனச்சாட்சி விடுமா?
  5. ட்ரம்ப் அவர்களுக்கு முப்பத்திரண்டும் விழ்ந்து முடிந்ததும் அவருக்கு “நோ பல்” பரிசு வழங்கி அவரையும், பாகிஸ்தான் தலைவர் அவர்களையும் மகிழ்விக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.🥱
  6. மற்றவர்களுக்குப் பலன் சொல்லும் பல்லி கூழ்ப்பானைக்குள் வீழ்வதுபோல் என்று சொல்வார்கள். இன்றைய அறிவியல் உலகு என்று சொல்லப்படும் உலகில் அது மனிதர்ளுக்கும் பொருந்தும் போல் தெரிகிறது.
  7. புரட்சி செய்வதற்கும் போராட்டங்கள் நடத்துவதிலும் தேர்ச்சி பெற்ற அதிக மக்களைக் கொண்ட நாடு பிரான்ஸ் நாடு.🤪
  8. தரமான பேரூந்து வண்டிகளை மட்டுமல்ல தரமான வண்டி ஓட்டிகளையும் தெரிவு செய்ய வேண்டும். தற்போது விமான ஓட்டிகளை பரிசோதனையின் பின்பு விமானப் பறப்புக்கு அனுமதிப்பது போல பேரூந்து வண்டி ஓட்டிகளையும் பரிசோதனையின் பின்புதான் ஓட்டவிட வேண்டும்.
  9. விஜை, சீமான் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இப்போது எந்த ஒரு தமிழ் இனத்தவனும் தலைமைக்கு வர முற்பட்டால் ஏழரை, அஷ்டம, அஷ்டமாத்து எல்லாம் ஒண்டா வந்து அவர்கள் தலையில் கும்மி அடிப்பதை தவிர்க முடியாது. அப்படி ஒரு செய்வினையோ, சூனியமோ அங்கு செய்யப்பட்டுள்ளதுபோல் எண்ணத் தோன்றுகிறது.🧐
  10. கரூரில் நடந்த அவலமான நிகழ்வுக்கும், மரணங்களுக்கும் யார் பொறுப்பு??? நடிகர் விஜை, தமிழக அரசு, கூட்டம் கூடிய மக்கள். இந்த அனைவருமே பொறுப்பானவர்கள். குற்றம் இந்த அனைவரிலும் உண்டு.
  11. வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாய் இருப்பது நடுவர்தான். இந்த வீடியோவைப் பார்த்தால் புரியும். பந்து வீசும்போது துடுப்பாட்டத்தில் கை மடங்கக்கூடாது, மடக்கி வீசினால் அது தவறு. நடுவர் அந்தத் தவறைக் கண்டு அதற்கான சைகையைக் காட்டி அதனை “நோபோல்” ஆக அறிவிக்க வேண்டும். ஆனால் நடுவர் அந்தத் தவறைக் கவனிக்காது வீராங்கனையின் அழகில் கண்மயங்கி விட்டதுபோல் வீடியோ படம் காட்டுகிறது.🤪
  12. வி.ஜி.பி. கோவிந்தசாமி: கோல்டன் ஏரி மின்சாரம் என்ற பெயரில் பிலிம் ஸ்டுடியோவை உருவாக்கியவர், மற்றும் கோடீஸ்வரர் ஆனார். ராஜாதி ராஜா: கோடீஸ்வரர் ஆனார். சினிமா தொழில் நுட்பத்தில் கோடீஸ்வரர்கள்: ஆர்.ஆர். ரம்யா: பிரபல சினிமா இசையமைப்பாளர், தற்போதைய கோடீஸ்வரர். கலாநிதி மாறன் (Kalanithi Maran): சன் குழுமத்தின் தலைவர், வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், மேலும் கோடீஸ்வரர் ஆனார். சினிமாத் துறை, பணம் சம்பாதிக்க மற்றும் கோடீஸ்வரர் ஆக பல வாய்ப்புகளைத் தருகிறது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோர் அடங்குவர்.
  13. ஆமாம் நீங்கள் சொன்னால் அது சரிதான். ஆனால் அண்ணனுக்காக தீக்குளிக்கமட்டும் தமிழ்நாட்டில் தமிழன் இருப்பதை வரவேற்று நாங்கள் சுவிற்சலாந்துவரை சென்று கூடி அங்கு தீக்குளித்தவர்களுக்கு அஞ்சலி செய்வதை வரவேற்போம்.
  14. பணம் சம்பாதிப்பதற்கு அரசியலை விடவும் சினிமா சிறப்பான இடம். அரசியலில் சம்பாதிக்க பல சுத்துமாத்துகள் ஏமாற்றுவேலைகள் செய்யவேண்டும். சினிமா அப்படியல்ல கோடி கோடியாக அனைவரும் பார்த்திருக்க சம்பாதிக்கலாம். அத்தகைய சினிமாவை விட்டுவந்த சீமான் பணம் சம்பாதிக்க வந்தார் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவர்மீது மக்களைக் காழ்ப்புணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இன்று அரசியல் செய்வோரிடம் வேறு காரணங்கள் இருக்கவேண்டும். அதனை அறிந்து தெரிவிப்பதே சாலச்சிறந்தது.🤔
  15. தாழ்த்தப்பட்ட சாதி என்று அந்தச் சாதியின் பெண்ணைத் துகிலுரிந்து ரசித்தார்கள். அவர்கள் குடியிருப்புகளைக் கொளுத்தி அட்டகாசம் செய்தார்கள். பாலகர்கள், வயதிபர்கள் என்று பாராமல் இலங்கையில் அரசே இலச்சக்கணக்கில் தமிழரைக் கொலை செய்தது. இதன்போதெல்லாம் ஊடகங்கள், மக்கள் பதிவுகள், கள உறவுகளிடம் இருந்து கூட பெருமளவான ஆட்சேபனைகள் வந்ததில்லை. ஆனால் ஒரு தமிழ் நடிகன், தமிழினம் வெற்றிகொள்ள ஒரு கட்சியைத் தொடங்கியதும் அதற்கு மக்கள் ஆதரவு பெருகுவதையம் பொறுக்கமுடியாத தமிழ்தோல் போர்த்தி தமிழர்களை ஆட்சி செய்யும் வேற்றினத் தலைவர்களின் எடுபிடித் துறைகளின் கூற்றுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அளவற்ற பதிவுகளும், ஊட்டங்களும் இடுவது ஏற்புடையதல்ல. மக்களைப் பாதுகாக்கத் திறன் அற்ற இன்றைய அரசின் ஆட்சியாளர்களே இந்த அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். நன்னெறிகளைப் படித்த தமிழராகிய நாங்களும் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ம-பொ-சி மாமியார்கள் என்று இல்லாது வாழ்ந்து வாழ்க்கையை இனிதாக்கி வாழ வேண்டும்.🙏
  16. சீமான் விருப்பம்போல் நடக்கிறதா! பகற்கனவு!!. சீமான் விருப்பம்போல் நடைபெற்றிருந்தால் இப்போது தமிழ்நாடு தனிநாடாக மிளிர்ந்திருக்கும். உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசும் பிறந்திருக்கும். திராவிடம் என்று தமிழினத்தின் காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து கடிபடாமல் மீண்டிருக்கும். இலங்கையிலும் அதற்கு ஒரு வாரிசு உருவாகியிருக்கும்.😌
  17. மனிதர்கள் உருவாகியிராதிருந்தால் உலகம் உருப்படியாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.🤔
  18. எங்கள் வீட்டிற்கு இனிமேல் சிறீத்தம்பி வந்தால் நாங்கள் அனைவரும் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் அவருடன் பேசுவோம் என்று இன்றுமுதல் உறுதி எடுத்துக்கொண்டுள்ளோம்.😷
  19. 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மக்கள் தொகை சுமார் 23.23 மில்லியன்ஆகும் என்று Worldometer போன்ற ஆதாரங்கள் மதிப்பிடுகின்றன, மேலும் இது 2024-ல் இருந்ததை விட சற்றே அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் இதை 23.2 மில்லியனாக குறிப்பிடுகிறது. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். 🐒
  20. புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள்!! மட்டக்களப்பு விருந்தோம்பலுக்குப் பெயர்போனது. அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் அங்கு மக்கள் வருந்தாமல் ஆட்சிபுரிவார் என நம்புவோம்.🙏
  21. அதிகாரம்காட்டி பயம்காட்டி வற்புறுத்திக் கேட்டுப் பெற்றுவதுதான் லஞ்சம் ஊழலுக்குள் அடங்கும். தவறில்லாத நன்மைபெற்று அதற்கான பிரதி உபகாரத்தை மனமகிழ்ந்து செய்வதை லஞ்ச ஊழல் என்று அடக்குவது தவறு. அடக்கினால் அது மனிதத்தைப் புண்படுத்தும் செயலாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.