Everything posted by Paanch
-
அதென்ன குதிரை திறன்? ஏன்... கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?
குதிரைவலு, குதிரைத்திறன், குதிரைவிசை இவைஎல்லாம் சிறு வயதிலிருந்தே அனைவருக்கும் மனதில் பதிந்தது. மாற்றுவது கடினம். மாற்றினாலும் என்னதான் நியாயமான வாதங்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள மனம் உடன்படாது. இந்துசமயம் எங்கள் சமயமல்ல என்ற உண்மையான மறுக்கமுடியாத வாதங்கள் இன்று இருக்கிறது ஆயினும் அதனை மாற்றுவதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்ற முயன்றால் அது எங்கள் மனதையே வருத்தும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதுபோல், மனதில் படிந்த குதிரையும் மாறாது. சிறுவயதில் எங்களுக்கு ஏற்படும் எண்ணங்களுக்கான தகுந்த தீர்வை தரமுடியாது பெரியோர்களும் சிரமப்பட்டதை சிரமப்படுவதை நாங்களும் பெரியோராகியதும் கண்டு உணரமுடிகிறது. சிறுவயதில் ஆண் பெண் வித்தியாசமின்றி அவர்களுக்குள் தோன்றும் எண்ணங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்லமுடியாது முழிப்பதும், அன்றுதொட்டு இன்றுவரை பெரியவர்கள், படித்தவர்கள், மேதைகள் என்று உள்ளவர்களும் விழிபிதுங்கி நிற்பதையும், அதனை சமாளிக்க அவர்கள் சிறுவர்களை அதட்டி ஒடுக்குவதையும் வேறொரவர் சொல்லியல்ல, நாங்களே எங்கள் கண்களாலேயே காணுகின்றோம். “அனா” என்று சொல்லித் தந்துவிட்டு “அ” என்றுமட்டும் எழுத சரி என்கிறீர்களே? அந்த “னா” எங்கே போயிற்று? என்ற என் பேர்த்தியின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. இங்கு பேர்லின் நகரிலுள்ள ஒரு தமிழ் கல்விக்கழகத்தின் பாடசாலையில் “யானைய்” என்று பாடம் சொல்லித் தந்து எழுதும்படி ஆசிரியை ஒருவர் பாடம் சொல்ல, சிறுவர்கள் “யானை” என்று எழுத, அது பிழை என்று ஒரு ஆசிரியையே பிழை போட்டாராம், “ய்” யன்னா சேர்த்து “யானைய்” என்று எழுதவேண்டுமாம். அரை குறையாகப் படித்தாலும் அ,ஆ தெரிந்து ஆசிரியராக வந்தவர்கள் இங்கு சிலர் உள்ளனர். பொது இடங்களில் பிள்ளைகள் “ரீச்சர்”என்று அவர்களைக் கூப்பிடும்போது அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இதனை உங்களில் பலரும் கண்டு பார்த்திருக்கலாம்.
-
இனிய தீபாவளி
ஒரு உயிர் உடம்பெடுக்கிறது. உடம்பு அடுத்த உயிர் எடுத்த உடம்பைக் கொன்று திண்று கொண்டாடுகிறது.
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
நீங்கள் அத்தனை அழகான ஆண் ஆழகனா? பொடிகாட்ஸ்சும் மயங்க??
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
நிழலி எப்போது கைதாவார்.????????🤔
-
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
ஒரே பாடத்திட்டம் என்றால் அதன் அடிப்படை என்ன? அரசை நம்ப முடியுமா?? பாடத்திட்டம் இப்படி வந்தால்??? பல இனங்கள் இருந்த போதும் பாடம் ஒன்றுதான் பாடம் ஒன்றுதான் பல மொழிகள் இருந்த போதும் ஒரு மொழிதான் சிங்களம் ஒரு மொழிதான் சிங்களம் வழிபடவும் வரம் தரவும் ஒரு தெய்வம் புத்தர் தான் ஒரு தெய்வம் புத்தர் தான்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
எழுத்துகளை சிறைவைப்பதால் கருத்து சோர்ந்து சுருங்கிவிடாது.🤩
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
உண்மை சுடும் என்றும் சொல்வார்கள். சூடுபட்டு கொதிப்போரையும் களத்தில் காணலாம். “பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்துக் கொல்ல நேருமே”.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
முசுலீம்கள் இன்று உலகம் முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைமுறை வாழும் நாட்டின் பூகோள நிலைக்கு ஏற்றதா என்று சிறிதும் சிந்திப்பதில்லை. தங்கள் மதத்தின் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். அந்தவழியில் அவர்கள் தங்கத்தையோ, தங்க நகைகளையோ நிறைய வைத்திருந்தார்கள் என்பது சந்தேகமே. இந்நிலையில் புலிகள் அவர்களின்ன தங்கத்தைப் பறித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது சிந்திக்க வேண்டியதொன்று. உம்மு சலமா (ர) அவர்கள் கூறுகிறார்கள் : எனது கழுத்தில் தங்கத்தால் ஆன கழுத்து மாலைகளை நான் அணிந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் அறைக்குள்) வந்தார்கள். என்னை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். நான் (அவர்களிடம்) என் அலங்காரத்தை நீங்கள் பார்க்கமாட்டீர்களா? என்று வினவினேன். அதற்கு அவர்கள் உனது அலங்காத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருத்தி வெள்ளியால் ஆபரணத்தை செய்து பிறகு அதனுடன் குங்குமச் சாயத்தை சேர்த்துக்கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது? என்று கூறியதாக இதன் அறிவிப்பாளர்கள் கருதினார்கள். அஹ்மத் (25460)
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
நான் அறிந்தவரையில் ஈழ விடுதலைப் போராளிகளை அழிக்க அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. யாழில் இருந்த முசுலீம்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களோடு, இலங்கை அரசு வழங்கிய பெருவளவான ஆயுதங்களையும் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததை போராளிகளோடு இணைந்திருந்த சில முசுலீம்களே போராளிகளுக்கு அறியத்தந்ததாக அறிந்தேன். இந்த விடையத்தை அனைவரும் அறியும் நிலை ஏற்பட்டால் அங்குள்ள அப்பாவி முசுலீம்களோடு அந்த இனமே தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டிருக்கும். அதனைத் தவிர்க்கவே தலைவர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப் பணித்தார். உண்மை தெரிந்தவர்களே என்னைப் பொய்யனாக்கி தங்களுக்கு சார்பாக எழுதுவார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரசித்த.... புகைப்படங்கள். பக்கம் 167ஐ தாண்டி விட்டது அனேக பக்கங்களில் படங்களில்லை, புகையுமில்லை, வெள்ளை வானமும் ஒரு கேள்விக் குறியுமே தெரிகிறது. யாழில் படங்கள், வீடியோக்களை இணத்துவிடும் மந்திரங்கள் தெரிந்த மந்திரவாதிகள் அந்த மந்திரங்களை உறவுகளுக்கு ஊட்டி மகிழ்ச்சியில் திளைக்க விடலாமே. பக்கத்து இலைக்கு பாயாசம்வேண்டுமாம். குரல் ஒன்று கேக்கறது.🧘♂️
-
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
“போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து”. உங்கள் மனம் பொன்போன்றது. வாழ்த்துக்கள்!!😁🙌
-
கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக எந்தவித சந்தேகமுமின்றி EPDP எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீதே குற்றம்சாட்டப்பட்டது. இராணுவத்துடன் இணைந்து துணை இராணுவமாக செயற்பட்ட, அப்போது சந்திரிக்காவின் ஆட்சியில் பங்காளியாகவும் புனர்வாழ்வு அமைச்சராவும் இருந்த டக்ளஸ் தேவானந்தாவே EPDP இற்குத் தலைவராக இருந்தார். சனத் பாலசூரியா.
-
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
நான் ஏழு என்றுதான் அறிந்தேன். மிச்சம் இரண்டும் ஆருக்கு????🤣
-
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
ஈழப்பிரியரே! டாக்குத்தரின் தெளிவுரைப்படி இனிமேல் வாழைப்பழத்தைக் கடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.🏃 பெயர் சூட்டும்போது அறிவுபூர்வமாகவே நம் முன்னோர்கள் பெயரையும் சூட்டி உள்ளார்கள். இன்றைய அறிவுலகில் நாங்கள் வாழ்ந்தாலும் எம் முன்னோரின் அறிவுரைகளை ஆராய்ந்து அதன்படி நடக்கத் தவறிவிட்டோம். வாழைப்பழம்- தொடக்கமே வாழ்வைக் குறிக்கிறது.😌 பேரீச்சம்பழம்- தொடக்கமே பேயைக் குறிக்கிறது.🫣
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
ஒருவருக்கு ஆதரவு பெருகி வரும்போது அதனால் கலக்கம், பொறாமை கொண்டு எதிர்ப்பவர்களும் இருப்பது மனித இனத்தில் இயல்பானது. இதற்குப் பல உதாரணங்கள் உலகத்தில் இருப்பதை அனைவரும் அறிவார்கள். விஜைக்கு ஆயிரழ் ஆயிரமாக மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் காணும் போது அதனால் கலக்கம், பொறாமை கொள்பவர்கள் அந்த ஆதரவை அழிப்பதற்கு தகுந்த காரணங்களைத் தேடாமல் வேடிக்கை பார்ப்பார்களா?? கிடைத்ததோ மிகவும் பலமான காரணம். விடுவார்களா.???
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
பனையால் விழுந்தது விஜைதான் அதிலென்ன சந்தேகம். 41 உயிர்கள்மேல் யார் பழி கூறினார்கள்? அனேக யாழ்கள உறவுகள் அவர்களின் இறப்புக்கு அனுதாபமும் இரங்கலும் தெரிவித்து, இறந்தோரின் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தேற்ற முயன்றதுதான் நிகழ்வு.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
“வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால்பட்டால் குற்றம்”. நாடகம் நடக்கட்டும். யாழ்கள ஆரம்பத்தை நோக்கினால் புரியும், அனேகமாக அநீதியான அழிவுகளைக்கண்டு மனம் நொந்தோரை ஆறுதல்படுத்தும் பதிவுகளையே உறவுகள் பதிந்தார்கள். இன்றைய நிலையில் பாரிய மாற்றங்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் உள்ளது.😢
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
விஜையும் ஒரு காரணம்.
-
மனதின் நலன், மனிதகுலத்தின் நம்பிக்கை! : இன்று உலக மனநல தினம்
https://youtu.be/sKA3eueyBj8?si=GzDPzhlyPuQduciY
-
சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.
இன்று அமெரிக்கர்கள் என்று வாழும் அமெரிக்க மக்கள் தாங்கள் செய்தபாவத்திற்கு, மண்ணையள்ளி தங்கள் தலையிலேயே போட்டுள்ளார்கள். விதி வலியது.🫣
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
வீரமறவர்களை பெற்றெடுத்த தந்தை. வணங்கி வழியனுப்புவோம்.🙏
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
“சங்கு சுட்டாலும் வெண்மைதரும்” சுடச் சுட சீமானும் வெண்மையாவதுபோல் தெரிகிறது.🤩 நன்றாகப் பெரும் போறனையில் போட்டு சுடுங்கள். நற்றுணையாவது நமச்சிவாயவே.🙏- திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.😢- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
மீசையை வழித்துவிட்டு மண் ஒட்டவில்லை என்று முறுக்கெடுக்கும் மன்னர்கள்.🤗 - நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.