Everything posted by Paanch
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சத்தீவு: இந்திரா காந்தி தாரை வார்த்த போது கருணாநிதி என்ன செய்தார்? இன்று வரை பிரச்னை ஏன்? இராமநாதபுரம் அரசருக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதை அடுத்து இத்தீவு பற்றிய உரிமை தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் பகுதியாக உரிமை நிலைநாட்டிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்க வழியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்திய அரசு உச்சநீதி மனறத்தில் கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து தரவில்லை என உறுதிமொழி வழங்கியுள்ளது.[1] தற்போதைய முதல்வர் செ. செயலலிதா அவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு "தாரைவார்த்தது" சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அறமன்றம் இந்திய ஒன்றிய அரசிற்கு தாக்கீது அனுப்பியது. தற்போது திமுக தலைவர் கருணாநிதி டெசோ அமைப்பின் தீர்மானப்படி கச்சத்தீவை இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் படி விட்டுக் கொடுத்ததை ரத்து செய்து இந்தியா திரும்ப்ப் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அறமன்றம் மத்திய, மாநில அரசு, மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.[2] இதனையடுத்து முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். அதில் "தனது ஆட்சிக் காலத்தில் தடுத்து நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.[3] சட்டமன்றத்தில் தீர்மானம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு வருவாய்த்துறையையும் சேர்க்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூன் 13, 2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[4] தன் மீது விமர்சனக்கணைகளை வீசத்தான் இந்த தீர்மானம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.[5] மேற்கண்ட தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்து "வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி" என்று சட்டமன்றத்தில் பேசினார்.[6] இன்னொரு தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதாவால் மே 3, 2013 அன்று கச்சத்தீவை மீட்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.[7] அத்தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சைதீவின் கண்ணீர்.😢 இந்தியாவில் கிடைக்காத இலங்கைப் பொருட்களையும், இலங்கையில் கிடைக்காத இந்தியப் பொருட்களையும், தீர்வின்றிப் பாதுகாப்பாக பண்டமாற்று செய்யப் பேருதவி புரிந்து வந்தேனே. மீனைக்காட்டி, கச்சையை உருவி என் மானத்தை வாங்குகிறார்களே பாவிகள்.😭
- எனக்கு பிடித்த சில வரிகள்.
-
எனக்கு பிடித்த சில வரிகள்.
பலாப்பழம்போல் பல பதிவுகளை கள உறவுகள் பதிந்து வருகிறார்கள். பழத்தை அப்படியே எடுத்துக் கடிக்காமல், அதனைப் பிளந்து தடலைப்பிரித்து உள்ளே தும்பு, பால், நரம்பு நீக்கி, விதை நீக்கிவரும் சுளைகளை எடுத்து சுவைக்கும்போது வரும் இன்பம் சொல்ல வார்த்தை இல்லை. அதுபோன்று உறவுகளின் பதிவுகளில் உள்ள வரிகளைக் களைந்தெடுத்துப் பதிந்து மகிழ்வித்த நிலாமதி அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!!🙌😁
-
முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன்
சிறீலங்காவில் இராணுவம் இருந்த, இருக்கும் முகாம்களில் நிறுவப்பட்ட விகாரைகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல சேகுவேரா காலத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட சிங்களரின் புதைகுழிகளும் வெளிப்படலாம்.
-
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
அவுஸ்திரேலியாவில் குடியேறி அவுஸ்திரேலியர் என்று இன்று இருப்பவர்கள் அனேகமாக ஐரோப்பியர்களே. வரலாற்றுச் செய்திகள் அப்படித்தான் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியர்கள் எங்கே????????
-
ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு
குற்றவாளிகளைக் காட்டிக்கொடுப்பது குற்றமென்று, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு கையெழுத்து வாங்கி, குற்றங்களில் ஈடுபடாத தனது இனத்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் ஆக்குகிறார் சரத் வீரசேகர. 🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தன் அவர்களுக்கும், இன்றுவரை வாழ்த்தத் தவறிய உறவுகள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌💐
-
ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி சகோதரிகளான சிறுமிகள் பலி
முன்பு இடி மின்னல் மழை என்றால் மரங்களின்கீழேயும் பதுங்குவோம். இப்போ ….??😳 அந்தக் பிஞ்சுகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல இயலாத அனுதாபங்கள்!!.
-
கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை!
பிரதமர் மோடி: சீச்சீ அந்தத் தீவு புளிக்கும். 😝
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மேதகு பிரபாகரன் அவர்களின் ஆட்சியின்போது தமிழீழத்தில் அவர் காற்றாலையை நிறுவியதான செய்திஒன்று வந்து வாசித்ததான நினைவு வருகிறது.😇 அது இன்று இல்லை. அரசபடை அதனை அழித்துவிட்டதா??
-
மாத்தளன் மருத்துவமனை விடுபட்டது குறித்து மருத்துவர் வரதராசா!
நிறைகுடம் தளம்பாது.
-
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
செஞ்சிக்கோட்டையே போய்விட்டது. எஞ்சியிருப்பதையாவது காப்பாற்றுவோம்.
-
பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை. சுட்ட மண்போலும்.🤔
-
கொத்துக் குண்டு பொதுமக்கள் மீது வீசப்பட்டது; ஒரு செய்தியாளரின் நேரடிச் சாட்சி!
என்னதான் சாட்சிகள், ஆதாரங்கள், சான்றுகள் என்று இருந்தாலும், ஒரு மனித இனத்திற்கு பூமியில் அரசுசெய்ய ஒரு சிறு நிலம்கூட சொந்தமாக இல்லாதுவிட்டால் அதன்நிலை அந்தோ பரிதாபம்தான். எந்த உதவியும் எவரிடமிருந்தும் கிடைக்காது.😲
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இப்போ கோவில்களில் எல்லாம் திருவிழா. கொடிஏறும் காலம். பனைஏற ஆட்கள் இல்லையாம், பாவம் சாமியார்.😢
-
ராஜீவ்காந்தியின் முதுகில் குத்துதல்....
நான் அறிந்த செய்திகள்வரையில் அவரை முதுகில் குத்தியது அவர் மனைவி, சுப்பிரமணிய சுவாமி இவர்களின் பரிவாரங்கள். ஈழத்தமிழர் மேல் தமிழ்நாட்டுத் தமிர்களுக்கு ஏற்பட்ட அனுதாபத்தைக் குறைக்கவும், பிரபாகரன் படையின் எழுச்சியை அழிக்கவும் அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. நடந்தவற்றை அரசியல் வழியின்றி, நீதியின் வழிநின்று விசாரித்தால் உண்மைகள் வெளிவரலாம். இங்கு நீதிதேவதையும் முதுகில் குத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
-
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!
பழசை மறக்காமல் அதனுடைய சுதியிலை பறக்கிற சுவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!🤤 நான் எட்டு வருடங்கள் ஓட்டமாவடியில் வாழ்ந்தனான். பெருநாட்களில் அங்கு உம்மாக்கள் கஞ்சா ரொட்டி தந்து எங்களை மகிழ்விப்பார்கள் அதன் ருசியே, ஆகா….. தனி. அவர்களுடைய பெருநாட்களில் கஞ்சா பற்றிய முறைப்பாடுகளைப் பெரும்பாலும் அங்கு காவல்துறை ஏற்றுப் பதிவு செய்வதில்லை.🤩
-
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!
கேரள கஞ்சாவுக்கு விடுதலை விடுதலை.💃🕺
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாமி குமாரசாமிக்கு பக்தன் பாஞ் வழங்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌🤩
-
சிரிக்க மட்டும் வாங்க
- ஊருக்கு... "கொலிடே" போறேன்.
சாரத்துக்கும் சாராயத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? சாராயம் சாரத்தையும் அவிழ்த்துவிடும் பிரியரே, பின்பு பொத்திக்கொண்டுதான் ஓடவேண்டும். அனுபவம் இருந்தால் எழுதலாம் வாசிக்க மறுப்பில்லை.- கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
சுமந்திரனை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்ததை ஏன் மறந்தீர்கள் தம்பி.?- காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
அந்தப் பெண் அதுவும் 25வயது இளம்பெண் எந்தப் பாதிப்புச் செய்திகளும் இன்றி முகமில் ஒப்படைக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது.😍 அவர் தன் காதலனை மணந்து இன்புற்று வாழ வாழ்த்துக்கள்!!🙌- புறா
வணக்கம் சுவி அவர்களே! நாங்கள் பாவிக்கும் எங்கள் “தமிழதாய் நாட்காட்டி” யில் நேற்றைய நாளில் புறாக்களைப் பற்றிய செய்தி ஒன்று பார்த்தேன். அது என்னைக் கவர்ந்ததால் புறாக்கள்பற்றிய தரவுகளத் தேடி அறிந்து யாழ்கள உறவுகளும் அறியத்தர விளைந்தேன். அது கைகூடவில்லை என்ற தரவை களம் எனக்கு அறியத்தந்தது, அதனால் கவலை கொண்டிருந்தேன். ஆனாலும் களம் என் பதிவை எப்படியோ ஏற்றுப் பதிந்துவிட்டது கண்டு ஆச்சரியமாக உள்ளது.🤔 உங்கள் பாராட்டுக்கும் நன்றி!🤩 - ஊருக்கு... "கொலிடே" போறேன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.