Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. எங்க ஊரில் குழந்தைகளுக்கு பம்பஸ் வாங்கிக் கட்டுவது குறைவு, எல்லாம் அங்குள்ள சூட்டுக்கு அவிஞ்சு சிவந்து போய்விடும், துண்டுதான் அதிகமாக கட்டுவார்கள். பழைய வேட்டி, சாரத்தை கிழித்துக் கட்டி அலம்பி அலம்பி காயவைத்துக் கட்டுவார்கள். செலவும் இருக்காது. பணம்படைத்தவர்கள் பகட்டுக்கு வாங்கிக் கட்டிவிட சூட்டில் எல்லாம் சிவந்து குழந்தை கத்திக் கதறும்.🫨
  2. குழந்தை எப்டிப் பிறந்தாலும் சீனநாட்டில் சிறீ லங்காவைப் போன்று குழந்தையை வயல் வெளியில் போடமாட்டார்கள் என்று நம்பலாம்.🥰
  3. கலவரம் என்ற போர்வையில் இலங்கை அரசுகளால் வகை தொகையின்றித் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட வருடங்கள். 1958 கலவரம் முதன்மைக் கட்டுரை: இலங்கை இனக் கலவரம், 1958 58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது.[6] 1977 கலவரம் முதன்மைக் கட்டுரை: இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இக்கலவரம் நடத்தப்பட்டது.[2][7] 1983 கலவரம் முதன்மைக் கட்டுரை: கறுப்பு ஜூலை Tamil youth who attacked by the Sinhalese mobs, stripped naked on Colombo, 23 July 1983 கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது.[3] 2000 கலவரங்கள்பிந்துனுவெவை கலவரம் முதன்மைக் கட்டுரை: பிந்துனுவேவா படுகொலைகள் பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிரமாத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர்.[4] தலவாக்கலை-கொட்டகலை-அட்டன்-கினிகத்தனை பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.[5][6][7][8][9][10][11] 2001 மாவனல்லை கலவரம் 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும்.[12][13] 2006 கலவரங்கள்திருகோணமலை
  4. மாலைதீவைப் பிடிக்க புளட் படையை அனுப்பிப் பின்னால் அந்தத் தீவைப் பாதுகாக்க இந்தியப் படையை அனுப்பினார் இந்திரா காந்தி என்ற செய்தி அன்று. ஜனாதிபதியுடன் நாமலும் என்ற செய்தி இன்று. தீவுக்கு என்னாகுமோ? ஏதாகுமோ??🫣
  5. இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔
  6. மோட்டுப் பெண் “நான் காதலனையே கல்யாணம் செய்யப் போகிறேன்” என்று அடம்பிடித்து இருந்தால் நகைகள் சீதனமாகவே வந்து சேர்ந்திருக்கவும் வாய்ப்பு வந்திருக்கலாம் அல்லவா??.
  7. துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். யாழ்களமும் முன்பு அதிகமாக இன்பம் சேர்த்து விட்டதோ? அதனால்தான் வினை வந்ததோ??.🤔
  8. உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி யஸ்ரின் அவர்களே!🙏 1980ல் நான் பிறந்த மண்ணை விட்டுப் பறந்துவிட்டேன். எனக்கு குடியகல அனுமதி தந்தவர்கள் அம்மாளுக்குத் தர மறுத்துவிட்டார்கள் அதனால் தப்பிவிட்டேன் என எண்ணுகிறேன்.🤔
  9. மனிதமும் மிருகமும் கலந்ததுதான் மனித இனம். எந்தக்கடவுளாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களில் உறைந்திருக்கும் மிருக குணங்களை அழித்து மனித மனத்தோடு ஆனந்தமாக, அமைதியாக வாழவைப்பது. அழிக்கத்தான் வேண்டும் என்றால் தவறாக உணரப்படும் வழிபாட்டு முறைகளை அழிக்கலாம். “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” என்பது அனேகமாக தமிழர்களின் கடவுள் வழிபாட்டில் தலையாக உள்ளதைக் காட்டுகிறது.🙏
  10. தமிழ் நாட்டில் தமிழில் உறுதிமொழி எடுப்பதை உலக அதிசயங்களில் ஒன்றாக இணைத்துக்கொள்ள சிபாரிசு செய்கிறேன்.🙌
  11. இன்றுமுதல் சிறையில் வைக்கப்படுவோரை நிர்வாணமாகவே வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரைஞான் கொடியும் அறுத்தெறியப்படும். இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையைக் கூட்டி விரைவில் பெறப்படும்.
  12. விமான நிலையங்களில் அந்தக் காந்தப்புல பரிசோதனை வளைவூடாக நான் செல்வதில்லை. வைத்தியர் தந்த எச்சரிக்கை அட்டை ஒன்று என்னிடம் எப்போதும் இருக்கும். அதனைக் காண்பித்தவுடன் என்னைத் தனியாக ஒருவர் அழைத்துத் தடவி பரிசோதிப்பார். ஒருதடவை அழகான இளமங்கை ஒருவர் என்னை அழைத்துத்து உச்சம் தலைமுதல் உள்ளம் கால்வரை தடவி பரிசோதித்த சம்பவமும் உண்டு.🤗
  13. உங்கள் அனுபவம் எனக்கில்லை என்றாலும் அம்மாள் வருத்தம் மனிதர்களுக்குத்தான் வரும் என்பதை அறிந்துள்ளேன்.
  14. பொக்கிழிப்பான், சின்னமுத்து போன்ற வருத்தங்களை அம்மாள் வருத்தம் என்று சொல்வார்கள். அதற்கு மருத்துவரிடம் போவதில்லை, சீவல் தொழிலாளியிடம் சொல்லிப் பனம் கள்ளு வாங்கித் தருவார்கள். வீட்டுக்குப் பயந்து அருந்த முடியாதிருந்த கள் அருந்தும் ஆசையும் நிறைவேறும். அருந்தியபின் வந்த வருத்தமும் மாறிவிடும்.🤩
  15. இப்போது யாழ்களத்திலும் நுளையப் பயமாக இருக்கிறது. அங்கும் ஒன்றுரண்டு எம் ஆர் ஐ இயந்திரங்கள் இருப்பதுபோல் தெரிகிறது.🫨
  16. ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை என்று மனிதர்கள் உண்ணும் ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்துக்குமே உயிருண்டு. அத்துடன் மாமிசம் மட்டுமல்ல நாங்கள் உண்ணும் தாவரங்கள் அனைத்துக்குமே உயிருண்டு என்பதை இன்றல்ல அன்றே மனிதர்கள் அறிந்துள்ளனர். அதிலும் சைவசமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் ஒரு சிலர் மாமிசம் உண்டாலும். உயிர்கொலை மகா பாவம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவேதான் வருடத்தில் ஒருமுறையாவது, மிகக் கசப்பான. உண்ணவே வயிற்றைக் குமட்டும் காத்தோட்டிக்காயை பொரித்து உண்டு அதன் கசப்பால் துன்பத்தை அனுபவித்து, உயிர்களைக் கொல்லும் பாவத்திலிருந்து சற்று விடுபடுவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது. ஆகவேதான் அந்த நம்பிக்கையை வருடத்தில் ஒருமுறை வரும் ஆடி அமாவாசையன்று கடைப்பிடித்துப் பாவத்தைப் போக்கிக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
  17. இந்த யோசனை உண்மையில் செயற்பட வேண்டுமானல் இனிப் பிறக்கப்போகும் சிங்களப் பிள்ளைகள் காடையர்களாக இல்லாது மனிதர்களாகப் பிறக்கவேண்டும். இருக்கும் சிங்களக் காடையர்கள் மனிதர்களாக மாறவேண்டும். அதுவரை யோசனை விழலுக்கு இறைத்த நீ்ர்தான். இது தவறான இடுகை. உலகில் மிகவும் சாதுவான உயிரினங்கள்கூட ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்புவதற்கு வீறுகொண்டு எழவேசெய்யும். இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளும், அந்த இனத்தின் புத்த பிக்குகளும், இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளே இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலைத் தமிழர்கள் மேற்கொள்ள வைத்தது.
  18. எங்களுக்கு இங்கு ஒரு இந்தியத் தமிழ் குடும்பம் அறிமுகமாகிப் பழகிவருகிறோம். இளம்குடும்பம், நேற்று அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது இட்லி அவித்துக் கொண்டுவந்தார்கள் நான் 3இட்லி சாப்பிட்டேன். இது பொ்யாகவோ, கேலிக்காகவோ எழுதவில்லை. சத்தியமாக உண்மை.
  19. ரமேஷ் என்பவருக்கு தற்போது 30 வயது என்று தெரிகிறது. இன்னமும் பால்குடி மறக்கவில்லையா.??🤔
  20. பிரபாகரன் படைகள் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் என்று நசூக்காக ஒரு விடயம் இதற்குள் செருகப்பட்டுள்ளது. இனி நாடகங்கள் பெரிதாக மேடைபோட்டு நடாத்தப்படும்.
  21. பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌
  22. நான் ஆணாகப் பிறந்திருப்பதினால் ஆண்களுக்கு வக்காலத்து வாங்க வந்ததாக எண்ணவேண்டாம். இயற்கையின் படைப்பில், அதிகமாக உயிரினங்கள் அனைத்திலும், ஆணைப் பலம்கொண்ட பாதுகாக்கும் இனமாகவும், பெண்ணை மென்மையான பாதுகாக்கப்படும் இனமாகவும் படைத்திருப்பதின் நோக்கம் என்ன?? என் சிறு வயதில் நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், (Jungle cat) அதில் முதலை ஒன்றைக்கண்ட பெண்புலி, தன் குட்டிக்கு அதனால் ஆபத்துவருமோ என்று பயந்து ஏதோ ஒரு சமிக்கை கொடுத்து ஆண்புலியை வரவழைத்தது, ஆண்புலிவந்து அந்த முதலையோடு சண்டையிட்டு அதனைக் கடித்துக் குதறிக் கொன்றது. பயம் நீங்கிய பெண்புலி ஆண்புலியைக் கட்டித் தழுவி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. இயக்குனர் சில காலம் காட்டுக்குள் ஒழிந்திருந்ததாலேயே இந்தக் காட்சியைப் படம் பண்ண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.