Everything posted by goshan_che
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இதுதான் குற்றச்சாட்டின் சாராம்சம். ரணில் அரசை மகிந்தவின் ஆட்கள் கவிழ்க்க முயன்றாலும், கவிழாதபடி ஏந்தி பிடிக்க என கடந்த பாராளுமன்றத்தில் எதிர் கட்சி வரிசையில் இருந்த எம்பிகளுக்கு ஒரு அட்வான்ஸ் இலஞ்சம் வழங்கப்பட்டதாம். இதற்கு கடிதமோ வேறு எந்த ஆதாரபூர்வ சிபாரிசுமோ தேவை இல்லையாம். குறித்த எம்பிகள் கைகாட்டும் ஆள், வழமை போல் அனுமதியை கோர வேண்டும், அவருக்கு தடங்கல் இன்றி அனுமதி கிடைக்கும். அனுமதிக்கான இலஞ்சத்தை பார் உரிமையாளர் எம்பிக்கு செட்டில் செய்வார். எம்பி ரணிலுக்கு விசுவாசமாக இருப்பார். எங்கோ ஒரு லேப்டப்பில் ஏதோ ஒரு ஸ்பிரெட்ஷீட்டில் யார் யாருக்கு சிபாரிசு செய்தார் என்ற தகவல் இருக்கலாம். ஆனால் அது அனுர அரசின் கையில் கிட்டுமா? கிட்டினாலும் அதுதான் உண்மையான லிஸ்ட் என எப்படி நம்புவது? ஆகவே இதில் எந்த எம்பியையும் கையும் களவுமாக பிடிப்பது கஸ்டம். ஒன்றில் ரணில், அல்லது அவர் சார்பில் சிபாரிகளை டீல் செய்தவர் சொல்ல வேண்டும், அல்லது சிபாரிசு கொடுத்த எம்பிகள் சொல்ல வேண்டும். விக்கி ஒரு சிபாரிசு செய்ததை ஏற்றுகொண்டுள்ளார்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு எண்டு பாரதியார் சும்மாவா சொன்னாரு🤣.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
இது நான் நினைக்கிறேன் சுய பாஷாவினால் ஏற்பட்ட குறை என. கொழும்பு, பேரா தவிர ஏனைய பல்கலைகழக மருத்துவ, பொறியல் மாணவர்கள் கூட இப்படி பேச்சு ஆங்கிலத்தில் தடுமாறுவதை கண்டுள்ளேன். ஆனால் ஒரு சில வருடம் வெளிநாட்டில் இருந்த பின் நல்ல முன்னேற்றமாக இருக்கும். அதே போல் சுயபாசவுக்கு முந்திய தலைமுறையில் ஒரு லிகிதரிடம் இருந்த ஆங்கில திறனும், நிர்வாக இயலுமையும் இப்போ ஒரு மாவட்ட அரச அதிபரிடம் கூட இல்லை. இதில் இவர்களை பிழை சொல்ல முடியாது. கல்வி கொள்கை வகுப்பாளர் விட்ட பிழை. ஒரு காலத்தில் மலேசியா, நைஜீரியாவுக்கு ஆங்கில ஆசிரியர்களை ஏற்றுமதி செய்த நாடு. இப்போ மறுபடியும் ஆங்கிலத்துக்கு முக்கியம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
அண்ணை நீலன் தனியே எழுதவில்லை, எழுதுவதில் முதன்மையாய் இருந்தவர் பேரா ஜி எல் பீரிஸ். இதன் முதலாவது வரைபு ஒரு உன்னதமான வரைபு. ஆனால் அது வந்ததுமே பெளத்த இனவாதிகள் தாம் தூம் என குத்தித்து, அதை எதிர்த்தார்கள். அதன் பின் உப்பு சப்பில்லாத இன்னொரு வரைபு வந்தது. அதை அப்போ புலிகளின் ஹிட் லிஸ்டில் இருந்த கூட்டணி கூட ஏற்கவில்லை. பின்னர் ஜீ எல் பீரிசும் பக்கா அரசியல்வாதியாகி இனவாதம் பேச தொடங்கி விட்டார். —— சுமந்திரனின் வரைபும் ஜெயம்பதி விக்ரமரட்ன என்ற சிங்களவர், இணைந்து, ரணில், சந்திரிகா, சம்பந்தர், ஆனுர போன்றோரின் ஆசியுடந்தான் எழுதப்பட்டது. ஆக இங்கே எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் - அதிகாரம் தமிழருக்கு பகிரபடுவதே பிரச்சனையாகிறது. 13ம் திருத்தம், எழுதி, சட்டமாகி உள்ளது. அதை அமல்படுத்த வேண்டியது தன் கடமை என்ற அளவுக்கு ரணில் வாயால் வடை சுட்டார். ஆனால் யாரும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்ற தேர்தல் நேரம் @ஈழப்பிரியன் அண்ணாவுக்கு ஒரு பின்னூட்டத்தில் இதை சொன்னேன். இதுதான் ஜேவிபியின் நகர்வாக இருக்க போகிறது.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நல்லது.
-
வணக்கம்
என்னையா நடக்குது இங்க 🤣
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
21 வயசுக்கு மேல் எவனும் கம்யூனிஸ்ட் இல்லை. 31 வயசுக்கு மேல் எவனும் நாம் தமிழர் உறுப்பினர் இல்லை என்பது சரி வரும் போல இருக்கே? ஆனால் நீங்கள் pass out ஆகி வெளியே வந்தாலும், அண்ணனுக்கு அடுத்த intake தயார். பையன் வெளியே, ராஜன் அம்மான் உள்ளே 🤣.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
நீங்களே இப்படி எழுதினா நான் லைக்சுக்கு எங்கே போவேன் பையா🤣 வைகோ… இத்தாலிய புரட்சியாளன் கரிபால்டி….பாலைவன சிங்கம் ஓமர் முக்தார் என தரவு பிசகாமல் period film ஓட்டுவார்… அண்ணன் சிம்பிளா….ஆமை ஓட்டில் Finding Nemo காட்டி மக்களை கவர்ந்து விடுவார்🤣.
-
தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்: அருட்தந்தை மா.சத்திவேல்
நிலாந்தன் போன்ற வாய்வாளர்களை, தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் புள்ளிகள் எல்லோரையும் விட அருட்தந்தைக்கு சீரிய அரசியல் பார்வை இருக்கிறது.
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
🤣
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும். 3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே. 4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார். 5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார். 6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார். 7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது. 8. 65% கொடுக்கலாம். 9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
புஞ்சி அம்மேக்களின் கண்களுக்கு சகோதரயா என்றும் அழகந்தான் போலும்🤣. ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣 ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இன்னும் உரையை பார்க்கவில்லை. வீட்டில் பனடோல் கையிருப்பில் இல்லை. இனி போய் வாங்கி வந்து 2 போட்டபிந்தான் பார்ப்பேன்🤣.
-
மாகாண சபை முறை நீக்கப்படாது: மூன்று வருடங்களின் பின்னரே புதிய அரசியலமைப்பு
ஆப்பு சொருக மாட்டோம் என நான் கூறவில்லை, வசிலீன் பூசும்வரை சொருகமாட்டோம் என்றே கூறினேன். இது சம்பந்தர் ஐயா தீபாவளிக்கு கொண்டு வந்த தீர்வை விட பெரியதாக இருக்கும் என நினைக்கிறேன். தூக்க நல்ல திடகாத்திரமான ஆட்கள் தேவைபடக்கூடும்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பார் புகழும் வள்ளலை… நான் புகழ முடியாமல்… நாவை கட்டிப்போட்டதே.. நான் செய்த சத்தியம்…..🤣 பார்…இறைவா…பார்…பார். இந்த அநீதியை பார். இது ஒரு போதும் வராது அதானே
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அவர்கள் முன்னாள் போராளிகள் முன்னால் தலைவர்கள் அல்ல. வெளிநாட்டில் கூட கொடி பிடிப்பது எதிர்மறை விழைவை தரும்போது, ஊரில் விபுமமு வை மீள உயிர்பிப்பது எல்லாம் தேவையா என்ன. என்னை கேட்டால், 1990 இற்கு பின் பிறந்தவர்கள்தான் இனி முன்னுக்கு வர வேண்டும். அவர்கள் தேசியத்தை விட்டுகொடாதவர்களாயும், இலங்கைக்குள் வாழ இஸ்டப்படுபவர்களாயும் இருக்க வேண்டும்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
கூரையை பிரித்து பதவி விலக வைக்கப்பட்டவர் இராசநாயகம் என நினைக்கிறேன். ஈழவேந்தனுக்கு பொட்டம்மான் அடித்த ஆப்பை இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது. மிக அரிதாக, பக்கம் சாரா, தரவு நேர்தியான கட்டுரை தமிழில். போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு குப்புற படுப்பதில் எல்லோருக்கும் முன்னோடி ஐயா ஈழவேந்தந்தான்🤣. இதற்கு அவர் தயாராக இல்லை என நினைக்கிறேன். ஆனால் என் கணிப்பில் அவர் ஒரு good backroom staffer ஆக இருப்பார் என்றே நினைக்கிறேன். Shop floor ற்கு வராமலே விட்டிருந்தால்… பட்டாசுகளுக்கு அவரை பற்றி பெரிய கவலை எழுந்திராது, அவரும் வாயால் கெட்டிருக்க தேவையில்லை.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
புலிகள் பலமாக இருக்கும் போது அவர்களையும்… பிள்ளையான் பலமாக இருக்கும் போது அவரையும்…. அனுர பலமாகும் போது அவரையும்…. ஆதரிக்கும்… நேக்கு தெரிந்து இருந்தால் எந்த நாட்டிலும், அக்கினியை என்ன அணுகுண்டையே பெயரில் ஏத்தி கொண்டு பிதுங்காமால் வாழலாம்🤣. பகிடிதான் ரென்சன் வேண்டாம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சரி…நம்புவது உங்கள் இஸ்டம். ஆனால்….. எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை. என்பதும்… எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றினாலும் இப்போ நல்லவர்களாக மாறிவிட்டனர் என நான் நம்புகிறேன் என்பதும் ஒன்றல்ல. இதை சுட்டுவது மிகமுக்கியம். ஏன் எண்டால் 2009 க்கு பிந்திய தலைமுறை இப்படியான கதைகளை உண்மை என நம்புகிறது.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஓம் நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன். தேடிப்பார்க்க வேண்டும். வடிவாக நியாபகம் இல்லை, ஆனால் தீர்வு திட்டம் வரையும் போது தான் இனத்தின் பிரதிநிதி அல்ல என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார் என நியாபகம். இதனால்தான் பதவியை இராஜினாமா செய்தாரோ? ஓம்…சுமந்திரன் இதோடு நின்று அந்த வேலையை மட்டும் செய்திருக்கலாம் என்பதையே நான் சொல்கிறேன். தேவையில்லாமல் வாக்கு அரசியலில் இறங்காமல். ஆனால் பின்கதவு விமர்சனத்துக்கு தொடர்ந்தும் ஆளாகி இருப்பார்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
எப்போதும் இருந்ததில்லை. புலிகள் மட்டுமே அதற்கு தடையாக இருந்தனர் எனில்: புலிகள் அழிந்த பின் அப்படி ஒரு தீர்வை சிங்களவர் தட்டில் வைத்து சம்பந்தன் போன்ற ஏக்கிய இலங்கை தலைவரிடம் கொடுத்திருப்பார்கள். இன்று அதை அனுரா தரலாம். With or without tigers, பேரினவாதம் ஒரு போதும் ஒரு தலைமுடியளவு அதிகாரத்தை கூட உங்களுக்கு தராது. இதுதான் யதார்த்தம். போராடுவதே ஒரே வழி. எந்த வகையான போராட்டம் என்பதே கேள்வி.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே ஐலண்ட் 🤣. புலிகள் காணாது என்றும்… பிக்குகள் ரொம்பவே ஒவர் எண்டும்… அந்த திட்டத்தை பப்படம் ஆக்கி இருப்பார்கள். சாகும் தறுவாயில் நீலன் இந்த கசப்பான உண்மையை ஏற்கும் மனநிலைக்கு வந்து இருந்தார் என அறிகிறேன்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நான் 👆இதை பற்றி எதையும் கதைக்கவில்லையே? எம்மீதான போருக்குக்கும் இன்றைய ஜேவிபிக்கும் சம்பந்தமில்லை என ஒரு உலக மகா உருட்டை தட்டி விட்டீர்கள், அதுதான் சில ஆதரங்களை தூக்கி போட்டேன்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அந்த ஜேவிபியின் பொது செயலாலர் யார் ? மேலே நான் தந்த கட்டுரையில் உள்ள லால்காந்த அப்போ ஜேவிபியில் என்ன பதவியில் இருந்தார்? அப்போ அனுர என்ன பதவியில் இருந்தார்? அவர்களை இயக்கியது ரோ…
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நானும் எல்லாத்தையும் மறக்க தயார்…ஆனால் 13 ஐயாவது முழுமையாக அமல்படுத்த வேண்டும். செய்வார்களா? மேலே உங்களுக்கு ஐ ஆர் ஏ, சின்பெயின் உதாரணம் தந்தது இதை விளக்கவே. புலிகளின் முடிவின் பின் புதிய ஒரு புலிகள் சம்பந்தபடா சிவில் அமைப்பை ஸ்தாபித்து இருக்கலாம். ஒரு காலத்தில் புலிக்கொடி பிடித்தார்கள் என்பதல்லாம் பெரிய விடயமல்ல.