Everything posted by goshan_che
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
போன தடவை அவர் ஒன்றுக்கு இரெண்டு தரமாக பதிவு செய்த பிரமாண பத்திரத்திலேயே போதிய தகவல் உள்ளது. இது ஜஸ்ட் கணக்கில் வந்தது மட்டுமே.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்தியா கூட்டணியா? வட இந்தியாவில் எல்லாரும் பிய்த்து கொண்டு போய் விட்டனரே. மோடி வெல்வது 100% கரண்டி.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதே…. மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தால்….. நா த க நம்பிக்கையான கட்சி என நினைத்தால்…. இந்த முறையில் கூட நாதவ வை ஆட்சி பீடம் ஏற்றுவார்கள். இதே முறையில்தான் முதன் முதலில், சிறு கட்சிகளாக இருந்த, திமுக, அதிமுக, சிவசேனா, தெலுங்கு தேசம், திணமூல் காங்கிரஸ் இன்னும் பல ஆட்சியை பிடித்தன. அண்மையில் கூட வை எஸ் ஆர் காங்கிரஸ் என நினைக்கிறேன். அதே போல் கேஜ்ரிவாலின் கட்சியும் இதே முறையில்தான் ஆட்சிக்கு வந்தனர். நா த கவால் 20 வருடத்தில் ஒரு உள்ளாட்ச்சி சீட்டை கூட பெற முடியவில்லை என்றால்… தவறு 20 வருடமாக மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாத நாதக அதன் மாறி மாறி கதைக்கும் பித்தலாட்ட தலைமை மீதுதான். மக்கள் மீதோ, தேர்தல் முறை மீதோ அல்ல. ஆனால் நாதகவின் business strategy யே ஆட்சியை பிடிப்பது அல்ல. வாக்கை பிரித்து, ஒருங்கிணைப்பாளரின் சொத்து மதிப்பை கூட்டுவது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அண்ணன் ஆசை பட்டதில் தப்பில்லை. கட்சி கூட்டத்தில் முன் வரிசையில் வந்திருத்து, கட்சி விசயங்களையே கட்டுபாடு செய்யும் அரை-தெலுங்கு அண்ணி - அண்ணன் விரும்பினாலும் தமிழில் படிப்பிக்க விட்டிருக்க போவதில்லை. ஆனால்….இருபது வருடமாக எங்கும் தமிழ்…எதிலும் தமிழ்…தமிழ் என எல்லாருக்கும் அண்ணன் லந்து கொடுத்ததுதான் தப்பு.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல் சுதந்திரம். இப்படி தடை செய்தால்…ஒரு போதும் பாஜக போன்ற (முன்னர் காங்கிரஸ்) ஒரு கட்சியை ஆட்சியை விட்டே அகற்ற முடியாது போகும். சுந்தந்திரத்தின் பின் அசுர பலத்தில் இருந்த காங்கிரசை, படி படியா, ஜனதா தள் என்ற பெயரில் தேர்தலுக்கு முந்திய கூட்டணி வைத்து, ஜெயபிரகாஷ் நாராயணம் முதல் வி பி சிங் வரை முயன்று தோற்று, அதன் பின் தான் வாய்பாயின் இரெண்டாவது முயற்சியில் முற்றாக பலமிழக்க முடியுமாய் இருந்தது. தேர்தலுக்கு முந்திய கூட்டணி இல்லை என்றால்…இன்றும் மத்தியில் காங்கிரஸ் ஆளும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா? அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ? நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள். சீமான் வேறு சாமானியன் வேறு. சாமிக்கு எல்லாம் தெரியும். #புரிஞ்சவன் பிஸ்தா🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நன்னி. புத்தர் சிலைகள் பொறுத்த இடங்களில் எல்லாம் முளைத்த படிதான் உள்ளன. ஊரில் ஒரு இடத்திக் காம்ப் அல்லது பொலிஸ் ஸ்டேசன் இருந்தால் அருகிலோ, வெளியிலோ சின்ன புத்தராவது இருப்பார் போல படுகிறது. கொழும்பில் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒன்று வைக்கும் ஒரு மறைமுக வேலைத்திட்டம் உள்ளதாயும். முதலில் சிங்களவர் படிக்கும் பாடசாலைகள் எல்லாவற்றிலும் வைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது எனவும் சொன்னார்கள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் அதை எல்லாம் பல இடங்களில் யாழில் எழுதி உள்ளேன். அதை வாசித்த பின்னும் நீங்கள்தான் சமயங்களில் செலக்டிவ் அம்னீசியாவில் மறந்து விடுகிறீர்கள். இதே போல் “சீமானை எதிர்ப்பவர்கள் யாழில் இலங்கை அரச அநியாயத்தை எழுதாதோர்” என ஒரு அரிய கண்டு பிடிப்பையும் நேற்று எழுதி இருந்தீர்கள். யாழில் சீமானை எதிர்க்கும் என் போன்றோர் ஆதாரபூர்வமாக இலங்கை இனவாதத்தை சாடியதையும் - செலக்டிவ் அம்னீயா தின்று விட்டது போலும். என் நிலைப்பாடு கருணாநிதி கள்ளன். சின்ன கருணாநிதியும் கள்ளன். இரெண்டும் எனக்கு ஒன்றே. இரண்டை சொல்லவும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மை. இது இந்த இனத்தின் சாபக்கேடு. புலிகளுக்கு பின்னான யாழும் ஒன்றும் சுத்தம் இல்லை. சீமான் கட்சி கூட இதை வைத்தே நடக்கிறது. கடந்த தேர்தலில் சென்னையில் நாடார் அதிகம் உள்ள தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
🤣 இதே போல் திராவிட கட்சிகள் நடத்தியதாக வெளியாகிய அத்தனை வீடியோ ஆதாரத்தையும், செய்தியையும் “போலி” என்கிறார்கள் திராவிட கொத்தடிமைகள்🤣. ஆகவே @ஈழப்பிரியன்அண்ணா முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் இதே போல் புறங்கையால் தள்ளி விடுவோமா?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அப்பாடா.. இழுபறிக்கு பிறகு கிடைத்துவிட்டது பானை சின்னம்.. வென்றது விடுதலை சிறுத்தைகள் போராட்டம் Nantha Kumar RUpdated: Saturday, March 30, 2024, 17:08 [IST] தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலை போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்தது. America கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி.. உச்சகட்ட பதட்டத்தில் செங்கடல் கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ள திருமாவளவன் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அதேபோல் விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிரந்தர சின்னம் என்பது இல்லை. மாறாக ஒவ்வொரு தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை கேட்டு பெற வேண்டும். அதன்படி கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 27 ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது பற்றி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்தது. கேட்கும் சின்னத்தை வழங்குவதற்கு போதிய அளவிலான ஓட்டு சதவீதம் இல்லை. இதனால் பானை சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்தது. இதற்கிடையே தான் இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் பதிவு செய்யப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் பானை சின்னத்தை கேட்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் சிதம்பரத்திலும், ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிட்டபோது ஒருவர் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். அதாவது திருமாவளவன் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். மாறாக ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை திருமாவளவன், ரவிக்குமார் என 2 பேரும் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-thirumavalavans-viduthalai-chiruthaigal-katchi-gets-pot-symbol-to-594857.html டிஸ்கி. இங்கே சிலர் ஒரு உள்ளாட்ட்சி உறுப்பினர் கூட இல்லாதா லெட்டர்பேட் கட்சி நாதகவை அதன் சின்னத்தை முடக்க பாஜக, திமுக எல்லா சேர்ந்து சதி என்பதாக உருட்டி கொண்டுள்ளார்கள். ஆனால் தற்போது நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகளுக்கு கூட இதுவே நிலை. ஆனால் அவர்கள் சட்ட போராட்டம் செய்து சின்னத்தை வென்றுள்ளார்கள். வெல்லுவதற்காக தேர்தலில் போட்டியிடும் கட்சி என்பதால் கடுமையாக போராடி வென்றுள்ளனர். நாதக வெறும் ஓட்டை பிரிக்க இறக்கப்பட்ட பி டீம் தானே. அண்ணனின் சட்டை பாக்கெட் நிரம்பினால் போதும். சட்டசபையாவது…ஹைகோர்ட்டாவது🤣.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்படி தரவுகளை சொன்னால் கெட்ட கோவம் வரும். பிறகு கூகிள் டிரான்சிலேட்டரும் கையுமா வந்து… வகுந்துடுவம்…வகுந்து🤣
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நல்லவேளை தேர்தலில் நிண்டதே வெற்றிதான் என சொல்லவில்லை🤣. தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சீட் அளவை வைத்துத்தான். இல்லாவிடில் காந்தி, பெரியார், கிங், தலைவர் போல தேர்தலுக்கு அப்பால் பட்ட இயக்கம் நடத்த வேண்டும். ஆனால் இருபது வருடம் முன்னால் வெறும் தோல்வி பட இயக்குனர், இன்று அவருக்கும் மனைவிக்கும் பல கோடி சொத்து. இருபது வருடத்தில் சீமானுக்கு இது மிக பெரிய வெற்றிதான். இப்படி பேச்சாற்றலை நம்பி அமிர்தலிங்கம் பின்னால் போன நீங்கள் ஊர் நாசமாக ஜேர்மனிக்கு ஓடி தப்பி விட்டீர்கள். தலைவர்களை சரியாக தேர்ந்த தமிழ்நாட்டு மக்கள், திக்கு வாய் தலைவர்களை வைத்துக்கொண்டே, இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் இரெண்டாவதாக எழும்பி நிற்கிறார்கள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தலைவர் பிரபாகரனின் ஆளுயர படத்துக்கு முன்னால், மாவீரர் தின பதாகைக்கு முன்னால் வைத்து ஒரு 9ம் வகுப்பு பெண்ணை நாம் தமிழர் நிர்வாகி வல்லுறவு செய்து, அதை அவரே கமரா வைத்து வீடியோவும் எடுத்த கிளிப் உள்ளது. அதையும் பகிரமுடியாமல்தான் இருக்கிறது. சீமானை திமுக ஏன் எதிர்கிறார்கள்? அவர்களை சீமான் விமர்சிப்பதால். அதே போல் பாஜக ஏன் பட்டும் படாமலும் எதிர்க்கிறது? தமது பி டீம் என்பதால்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நீங்கள் ஊருக்கே போகாமல் நான் பண முதலைகளை சந்தித்து விட்டு வந்து எழுதுவதாக நீங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது. நான் அத்தனை தரப்பட்ட மக்களுடனும் பழகிய அனுபவத்யே எழுதுகிறேன். ஏழ்மையும், வர்க்க வேறுபாடும் இலங்கைக்கு புதிதல்ல. நான் தெளிவாக எழுதியுள்ளேன்…2019 இல் 20 ரூபா இருந்த இடத்தை இப்போ 100 ரூபா நிரப்பி உள்ளது என. உண்மையில் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாச சம்பளம் எடுப்போர், ஓய்வூதியகாரார், வங்கியில் வட்டி எடுத்கு வாழ்வோர் போன்றோர்தான். மீன் பிடிப்பவரை பொறுத்தவரை, பெற்றோல் விலை கூடியுள்ளது ஆம், ஆனால் அதகேற்ப மீனின் விலையும் கூடி உள்ளது. தோட்டம் செய்பவருக்கும் இதேதான். கூலி வேலைக்கான கூலி கூட இதே அளவால் கூடித்தான் இருக்கிறது. யாழின் காங்கேசன் துறை முதல்- கொக்குவில் வரை ரயில் பாதை அருகே உள்ள தோட்டங்கள் எல்லாம் நல்ல பயிர்செய்யகையாகியே உள்ளது. ஆனால் இலண்டனில் இருப்பது போல் ஏழைகளுக்கான food bank எனப்படும் மக்களால் மக்களுக்கு நடத்தபடும் இலவச உணவு முகாம்கள் அங்கே இல்லை. ஜனசக்தியோ, உணவு முத்திரையோ மக்கள் எப்படியோ சமாளிக்கிறார்கள். அதே போல் சோமாலியாவில் இருந்தது போல் என்பும் தோலுமாக மக்கள் இல்லை. 2019 க்கு முன்பு இருந்தததை விட போஷாக்கின்மை கூடி இருப்பதாக நம்பதகு தகவல்கள் சொல்கிறன. ஆனால் பட்டினிச்சாவு நிலை இல்லை. இதை கண்டு வந்து சொல்ல கொஞ்சம் சமூக அக்கறையும், இரெண்டு கண்ணும் போதும். இரெண்டு மாதம் மூட்டை தூக்கி விட்டு அல்லது கரைவலை இழுத்து விட்டு அல்லது தோட்டம் கொத்தி விட்டுத்தான் இதை உணர மில்முடியும் என்பதல்ல. நீங்கள் அங்கேயே வாழும் @பாலபத்ர ஓணாண்டி சொல்வதை மறுதலிக்கிறீர்களே? நான் சொன்னதை இலங்கையில் இப்போ வாழும் யாழ்கள உறவுகள் யாரேனும் மறுதலிக்கிறார்களா?
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நான் இங்கே தயாரிப்பவை பற்றி எழுதவில்லையே மீரா. நான் கதைத்தது ஒரு 70 வயதான பெண் குடும்ப தலைவியிடம். 14 நாள், மிகவும் நன்றாக உலர்த்தினால் 1 மாதம் கெடாமல் செய்து தருகின்றார். தன்னிடம் வெளிநாட்டுக்கு அனுப்ப என வியாபாரிகள் பக்கெட் பண்ணி ஆனால் லேபல் ஒட்டாமல் பக்கெட் 2500 க்கு வாங்குவதாக சொன்னார். நானும் அதே விலையில் வாங்கினேன். இவைதான் இங்கே வேறு லேபல் ஒட்டி 3.50 க்கு விற்கிறது என நான் நினைக்கிறேன். வியாபாரிகள் எப்போதுதான் கொள்ளை இலாபம் அடித்ததை ஏற்று கொண்டுளார்கள்? யுத்த காலத்கில் பனடோலில் கொள்ளை இலாபம் பார்த்த ஆட்கள் அல்லவா நம் வியாபாரிகள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இது இருக்கிறது….ஆனால் targeted ஆக இருக்கிறது. இது மிகவும் தந்திரமாகவும், சிங்களத்தை பொறுத்த வரை வினைத்திறனாகவுக் கையாளப்படுகிறது. முன்னர் போல் பொத்தாம் பொதுவாக அன்றி. பாடசாலை மாணவர் முதல் முன்னாள் போராளிகள் வரை புலி ஆதரவு ஆட்கள் என இனம் கண்டு மிரட்டப்படுகிறனர். அலைக்கழிக்கப்படுகிறனர். ஒரு அளவுக்கு மேல் உயிரச்சமும் உண்டு. இதனால் - ஏனையோர் நான் புள்ளி 4 இல் சொன்னது போல் ஏனக்கேன் வம்பு என விலகி நடக்க, இயற்கையாகவே உணர்வு காயடிக்கப்படுகிறது. இப்போ உங்களையே எடுங்கள். நாளைக்கு இருபாலையில் போய் ஒரு மாசம் நிற்கிறீர்கள். ஒருவர் வந்து காணாமல் போனோர் போராட்டத்துக்கு அழைக்கிறார். அவர் ஏலவே புலனாய்வால் நோட்டட். நீங்கள் போவீர்களா? நீங்களே போனாலும் அருகில் உள்ள அங்கே வசிப்போர் என்ன சொல்வார்கள்? உங்களால் எமக்கும் தொல்லை என உங்கள் சகவாசத்தை வெட்டி விடுவார்கள் இல்லையா? இவ்வாறாக உண்மையில் இன விடிவை பற்றி யோசிப்பவர்களை, எமது மக்களே விட்டொதுங்கும் நிலையை மிக தந்திரமாக இலங்கை அமைத்துள்ளது. இப்படி ஒரு நிலையை 1995 க்கு பின்பே யாழிலும், 1990 க்கு பின்பே மட்டகளப்பு நகரிலும் உருவாக்கி விட்டனர். ஆனால் அப்போ இன்னொரு பிந்தளத்தில் புலிகள் இருந்த படியால்- இது முழு வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் தோல்விக்கு பின், இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்து அரசியல் பிண்ணனியில், இளையோர், புதிய சுவாரசியங்கள் அதிகமாக இந்த அணுகுமுறை இலங்கைக்கு கைமேல் பலன் கொடுக்கிறது. நான் நினைக்கிறேன் மிஞ்சி மிஞ்சி போனால் 5000 பேர் யாழில் புலனாய்வால் கண்காணிக்கப்படக்கூடும். மிகுதியை நம் மக்களே பார்த்து கொள்கிறார்கள். இன்னொரு தகவல்: 2009 க்கு பின் நான் இலங்கை அணிக்கு கிரிகெட்டில் சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் நான் யாழில் பேசிய 30 வயதுக்கு கீழ் பட்ட அனைவரும் (10 பேர் வரையில்) - இலங்கை அணியை, சி எஸ் கே யை ஆதரிக்கிறனர். நன்றி வசி, நீங்களும், மீராவும், சசியும் நான் சொன்னதை பிழையாக விளங்கி கொண்டுள்ளீர்கள். இலங்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உள்ளது என நான் சொல்லவில்லை. எல்லாம் இருக்கிறது…விலை பல மடங்காகி உள்ள்து என்றே சொல்கிறேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
வாசன், தினகரன் தாமரையில். கமலுக்கு கேட்காதபடியால் ஒதுக்கவே இல்லை என நினைகிறேன். தரவுகளை சரிபார்க்கவும். அப்படி பக்கசார்பாக நடந்திருந்தால் தை ஏன் உச்ச நீதிமன்றில் நாதக சொல்லவில்லை? அங்கேயும் தான் தோற்பதை ஏற்க முடியாத அதே bad loser குணம் உடைய அமெரிக்கன் சீமான் டிரம்ப் அவர் ஆட்கள்கள் இப்படி அலட்டுகிறார்கள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதை விட மேம்பட்டு உள்ளது.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம். 2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன். ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை. ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.