Everything posted by goshan_che
-
அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்
அதே… உங்களுக்கு பின் பக்கத்தில் நெருப்பு வைத்த என் பயண கட்டுரை திரியில் - பிற்சேர்க்கையாக இலங்கையில் குப்பை பிரச்சனை பற்றி எழுதியுள்ளேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்படி தவக்கை கத்தி சாவது விஞ்ஞான ரீதியில் உண்மையா? @Justin அண்ணா விளக்கவும். என்ன செய்வது, சீமானியர்கள் தவக்கை, ஆமை என ஆரம்பித்தாலே சந்தேகத்துடந்தான் அணுக வேண்டியுள்ளது🤣. நிற்க யாழில் கத்தும் தவளைகளால் மட்டும் அல்ல, 20 வருடமாக கத்தியிம் மைக் தவளையாலும் ஊரை ஏமாற்ற முடியவில்லை என்பதை காண்க. இனியும் கஸ்டம்தான். தமிழ்நாட்டு மக்கள் படிப்பாளிகள், அறிவாளிகள் இல்லை, ஆனால் புத்திசாலிகள். பின்னர் ஏன் இதே போல் இடித்துரைக்கும் ஏனையோரை காழ்புணர்சியால் கத்தும் தவளைகள் என்கிறீர்கள்? நீங்கள் கண்டித்தால் நற்புணர்ச்சி, ஏனையோர் கண்டித்தால் காழ்புணர்ச்சி ?🤣
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதே. ஈழ அரசியல்வாதி என்றால் இடித்துரைப்பீர்கள். தமிழக அரசியல்வாதி என்றால் முட்டு கொடுப்பீர்களா? சீமானின் இந்த கோக்குமாக்கை, அவரின் ஆதரவாளர்கள்தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும். நம்புங்கள். நாம் தமிழர் நிறுவன உறுப்பினர் முதல்….ஐயநாதன் வரை சீமானிடம் தோழமையுடன் சுட்டி காட்டி…கட்சியில் இருந்து துரத்தப்பட்டோர் லிஸ்ட் ரொம்ப நீளம். கட்சி நிர்வாகிகைய…போடா ங்….என போனில் வசைபாடிய, பொட்டம்மான் என் ம** என சொல்லிய சீமான் உங்கள் தோழமை சுட்டலை….சும்மா சிரிப்பு காட்ட வேணாம் ஓணாண்டி. சந்திப்போம்🙏
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இவற்றை நான் முன்பு எழுதியும், வரவேற்றும் உள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இங்கே ஒரு சிலர், சீமான் காலையில் சந்தனமாக போகிறார் தெரியுமா? என்ற ரீதியில் எழுதுவதோடு மட்டும் அல்லாமல், அதை தாம் எடுத்து நெற்றியில் தீட்டி கொண்டு, நீங்களும் தீட்டுங்கள் இல்லை என்றால் நீங்கள் 200 ரூபாய் ஊபி என எழுதும் போது…. திமுக/விசிக/மதிமுக/பாமக/திக/நெடுமாறன்/ஏனையோர் என அனைவரையும் சீமானை விட மோசமாக வசைபாடும் போது… நானும் (உம் விகுதியை கவனிக்க) சீமானின் புகழை பாட வேண்டிய தேவை இல்லை. ஆனால் பர்னிச்சரை உடைக்க வேண்டிய கடமை உள்ளது (விளக்கம் மேலே).
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஆனால் ஈழத் தமிழ் இனத்துக்காக பலதை இழந்த தமிழ்நாட்டு தலைவர்கள், உறவுகள், படுக்கையில் உச்சா போகும் வயதில் ஐரோப்பா ஓடி வந்த இணைய போராளிகளால் கொச்சைபடுத்தப்பட்ட போது, நன்றியுணர்ச்சி சிறிதும் இன்றி கள்ள மெளனம் காத்தீர்கள் இல்லையா அன்ணை. வரவேற்கவில்லை என நழுவ வேண்டாம். நீங்கள் கண்டிக்கவில்லை. சீமானின் ஏவல் பேய்களை அவர் எமக்கு உதவியோர் மீது ஏவி விட்டதை கண்டிக்ககாமல் கள்ள மெளனம் காத்தது ஒருவகை துரோகம்தான்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதே போல் சீமானின் எச்சிலையும் பன்னீர் தீர்த்தம் என முட்டு கொடுப்பதும், திமுகவின் எச்சிலை எடுத்து வைப்பதும் உங்கள் தொழில். உங்களை போன்றோர் இவ்வாறு நடந்து கொள்வதால் ஏதோ ஈழத்தமிழர் எல்லாரும் சீமான் ரசிகர் என்ற விம்பம் ஏற்படுகிறது. அவ்வாறு இல்லை, ஈழத்தமிழர் ஒரு சாரார்தான் சீமான் ரசிகர்கள் என காட்ட எம் போன்றோர் குரல் ஓங்கி ஒலிப்பது காலத்தின் கட்டாயம். இது பெருமை அல்ல கடமை.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் அவதூறை அள்ளி கொட்டவில்லை. எல்லாமும் தரவுகளின் அடிப்படையிலான சீமான் பற்றிய எனது கருத்து மட்டுமே. ஆனால் நான் எழுதாத 3 மாதத்தில் இங்கே என்ன நடந்த்தது? நான் தெளிவாக சொல்லி விட்டேன், @விசுகு அண்ணாவுக்காக இன்னொரு தரம் சொல்கிறேன். தமிழக அரசியலில், ஈழத்தமிழர் கட்சி சாராமையயை இரு வகையில் நிலை நிறுவலாம். 1. எந்த கட்சியையும் சாராத நிலை (புலிகளின் நிலைப்பாடு) 2. எல்லா கட்சிகளையும் விமர்சிக்கும் நிலை. பையன், முன்னர் இசை போன்றோர் யாழிலும், ஏனையோர் சமூகவலை உலகிலும், தீவிர நாதக ஆதரவு, திமுக கூட்டணி எதிர் நிலை எடுத்தபடியால் - இனிமேல் 1ம் வழியை பின்பற்ற முடியாது. ஆகவே ஈழத்தமிழர் கட்சி சாராதோர் என காட்ட என்போன்றோருக்கு இருக்கும் ஒரே வழி, ஈழ தமிழராக சீமானை விமர்சிப்பதே. ஆகவேதான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணனின் பர்னிச்சர் உடைக்கப்படுகிறது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நீங்க ஆர்விச்சி, மூலம் தாக்கினது தெரியும் ப்ரோ, ஆனால் அது ஆர் பி ஜி அளவுக்கு தாக்கமில்லை. டென்சன் ஆகாம அண்ணன் பேசிய வீடியோ வை பாருங்கோ. எவ்வளவு அழகா, தமிழில் படிப்பதை வலியிறுத்துகிறார் (அடுத்தவன் பிள்ளைக்கு).
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
அறியவில்லை. தேடிப்பார்க்கிறேன். நன்றி, ர. சோதரா🙏
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
என்னது டெபாசிட் வாங்கினீங்களா?🤣 இதெப்ப? ஒவ்வொரு தொகுதியிலும் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் காணிக்கை அல்லவா செலுத்தி உள்ளீர்கள்🤣. இரண்டு பவுண்ஸ் (2 pounds) எண்டு ஸ்டைலா சொல்லுங்க ப்ரோ🤣
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஜெய் ஜெக்கம்மா…சை..காளியம்மா… ஏதோ வெளிநாட்டில் இருந்து உருட்டுவதால் தப்பித்தீர்கள். இதுவே நீங்கள் தமிழ் நாடில் இருந்து இதை சொல்லி, பாக்கியராசன் வழி அண்ணி காதுக்கு போ இருப்பின், இப்போ உங்களை முன்னாள் தம்பி ஆக்கி இருப்பார்கள். பரவாயில்லை…குறைந்தது இன்னும் 5 வருட அவகாசம் இருக்கிறது, மாவீரன் அரசியல் வருகையை எப்படி முட்டு கொடுத்து தூக்கலாம் என இப்போதே யோசிக்க தொடங்குங்கள். இதுவரை சீமான் அடித்த அத்தனை பல்டிக்கும் வகை வகையாக முட்டு கொடுத்த உங்களுக்கு இது அதிக கஸ்டமாய் இராது. பிகு சின்ன கருணாநிதி அடுத்து என்ன பல்டி அடிப்பார் என நான் சொன்னவை அப்படியே நடப்பது போல் மாவீரனின் அரசியல் வருகையும் நடக்கும். அவருக்கு துணையாக முதலில் சுவீகார புத்திரன் இறக்கப்படுவார். # காலெண்டரில் குறித்து வைத்துக்கோ(ங்கோ).
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இரத்தினச் சுருக்கம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அருமையான தரவு சார் கருத்து🙏. பிகு இதை அப்படியே கடந்து போய் விட்டு, வாக்கு மிசினில் ஓட்டை என்பார்கள்🤣. அட குழப்பம் பிடிச்ச மக்களா, ஏமாற்றப்படும் தேர்தல் முறையில் எப்படியும் தோற்ப்போம் என தெரிந்தும், ஏன் ஒவ்வொரு முறையும் டெபாசிட்டை பறி கொடுக்கிறீர்கள் என 10 வருடமாக கேட்கிறேன் பதில் இல்லை.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
🤣 நீங்கள் சும்மா இருந்தாலே யாழில் சீமான் பர்னிச்சர் உடைவது குறையும் என்பது என் கணிப்பு🤣. எனக்கு (ஐலண்ட், ஏனையோருக்கும் என நினைக்கிறேன்) சீமானும், திமுக வும் ஒன்றுதான். மாறி, மாறி எவர் பெர்னிச்சரை உடைத்தாலும் எனக்கு சந்தோசமே🤣. # ஆரம்பிக்கலாமா
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தாலிபான்கள், பஜ்ரங்தள், தமிழ்தாலிபான்கள், சிங்கலே…. எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள்தான். கள்ளன் ஸ்டாலின். ஆனால் அண்ணன் சீமான் மட்டும் என்னவாம்? 1. மச்சானுக்கு சீட் கொடுக்கிறார் 2. சம்பந்தமே இல்லாமல் கட்சி கூட்டங்களில் அண்ணியை முன் வரிசையில் அமர்த்துகிறார். 3. மாவீரன், சுவீகார புத்திரன் வயசுக்கு வந்ததும் வருவார்கள். கள்ள திமுக. ஆனால் அண்ணர் மட்டும் லேசா? 1. அக்யூஸ்ட் நம்பர் 2 வை சந்தித்து கூழை கும்பிடு போட்டு விட்டு, செய்தியாளரை சந்திக்க திராணி இல்லாமல் பின் கதவால் எஸ் ஆகினார். (பின் கதவு சீமான்🤣). 2. விஜி அண்ணி வழக்குக்கு பயந்து, ஸ்டாலின் பதவி ஏற்றதும் நேரில் சந்தித்து கூழை கும்பிடு போட்டு, கருணாநிதி படம் முன்னால் நின்று படம் எடுத்து, விஜி வழக்கை சாதகமாக முடித்துக்கொண்டார்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலின் தந்தை, தமிழரசு கட்சியின் நிறுவனத் தலைவர் செல்வா. இப்போ அந்த கட்சியின் தலைவர் சிறிதரன், பேச்சாளர் சும். இவர்கள் இருவரின் தவறுகளுக்காக, செல்வா, தமிழ் தேசிய கொள்கையை விமர்சிப்பது எப்படியான அபத்தமோ…அப்படி ஒன்றே இது.
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
ஆமா…ஆமா… கர்நாடக சங்கீதம், தமிழ் நாடு கிரிகெட் எல்லாம் அவாளின் பரம்பரை சொத்து. அதில் நான் பிராமின், அல்லது பெரியாரை புகழும் பிராமினை மரியாதை செய்தால் கோவம் வருமா இல்லையா? பிகு இத்தனை வருடத்துக்கு பிறகே இத்தனை கொழும்புன்னா, இராஜாஜி முதல்வர், பண்டிட் ஜி பிரதமர் என அவாள் கோலோச்சிய அந்த காலத்தில், பெரியார் போராடிய போது எவ்வளவு கொழுப்பு இருந்திருக்கும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அவர்கள் (பையனை தவிர) ரொம்ப தெளிவானவர்கள். இரெண்டுக்குமான தெளிவு அவர்களுக்கு நல்லாகவே இருக்கிறது. இது விடயம் புரியாதவர்களை பேய்க்காட்ட என வேண்டும் என்றே ஏற்படுத்தப்படும் செயற்கையான குழப்பம். நேட்டோ ஒற்றுமையையும், பைடனின் மகனின் உக்ரேன் ஊழல் விடயத்தையும் சம்பந்தமில்லாமல் எப்படி டிரம்ப் கலந்து கட்டுகிறாரோ, அப்படி. தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் = கருணாநிதி குடும்ப கொள்ளை = பெரியார் கொள்கை. என ஒரு மிக தப்பான ஆனால் எளிய சமன்பாட்டை பொய்கள் மூலம், மூலம் திரும்ப திரும்ப சொன்னால் - அதிகம் ஆராயாத மக்கள் நம்பி விடுவார்கள் என நினைக்கிறார்கள். Another leaf out of Trump’s playbook. இந்த திரியில் அண்ணனின் ஆங்கில மோகத்துக்கு ஒரு அளவுக்கு மேல் முட்டு கொடுக்க முடியாது எல்லா பக்கத்தாலும் கேட்டை போட்டதும், இந்த செயற்கை குழப்பத்துக்கு விளக்கம் கேட்டு திரியை சீமானின் பிக்காலித்தனத்தில் இருந்து திசை திருப்ப முயல்கிறனர்🤣. பிகு இவர்கள் அனைவருமே டிரம்ப் ஆதவாளர் அல்லது அனுதாப பார்வையாவது உள்ளோர் என்பதும் நோக்குக்குரியது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
🤣 வெகுமானத்துக்கு வாக்கை விற்றால்… வைப்பீர்கள் உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை அடமானம்!
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பிற்சேர்க்கை II குப்பை கூழம். ஒப்பீட்டளவில் தெற்காசியாவில் சுத்தமான நாடு என் இலங்கையை சொல்லலாம் என்பதை நம்மில் பலர் ஏற்போம் என நினைக்கிறேன். ஆனால் இந்த நிலை விரைந்து கெட்டு வருகிறது. கிராமப்புறங்கள், சிறு நகர்கள் முன்னர் போல இருந்தாலும். நகரங்களில் இது ஒரு பாரிய பிரச்சனையாக மாறி வருகிறது. யாழில் நகரத்தில் ஒரு குப்பை தொட்டியை தேடி அரை கிலோ மீட்டர் நடந்தாலும் கிடைப்பதில்லை. அதே போல் நடைபாதைகளும் சரியாக இல்லை. என்னதான் வீட்டில் கொசு வலையில் படுத்தாலும், ஏசி பஸ்சில் போனாலும், யாழில் அதிகாலையில் இறங்கி ஆட்டோவுக்கு காத்திருக்கும் அந்த பத்து நிமிடத்தில் - நுளம்புகள் உடலை மொத்தமாகவும், சில்லறையாகவும் துவம்சம் செய்து விடுகிறன. இவை அருகில் நீர்தேங்கி நிற்கும் வடிகாலில் இருந்து வருவது கண்கூடு. அதே போல் இன்னும் சில இடங்களில் ஊறணிகள், கேணிகளும் பாசி படர்ந்து, குப்பை சேர்ந்து இளம்பச்சை நிறத்தில் நாற்றம் எடுக்கும் நிலையில் உள்ளதை கண்டேன். புகையிலைக்கு தடை என செய்தியில் இரு வருடம் முன் வாசித்த நினைவு. ஆனால் யாழில் புகையிலை பயிர்செய்கை முன்னை போலவே தொடர்கிறது. கேட்டபோது, அறகலவுக்கு பின் தடை பெயரளவில் மட்டுமே என்கிறனர். யாழின் சதுப்பு நிலம் என கூறத்தக்க புங்கங்குளம் - நாவற்குழி பகுதியில் சட்ட விரோத குப்பை கொட்டும் போக்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறனர். பொம்மைவெளியின் யாழ் நகரை அண்டிய பகுதி, கோம்பையன் மணல் சுடுகாட்டுக்கு எதிரே உள்ள பகுதிகள், கிட்டதட்ட 90% அளவில் நிரப்பி கட்டி, மேட்டு நிலம் போல காட்சி அளிக்கிறது. கட்டிடங்களும் எழும்பியுள்ளன. இவை சட்டவிரோத கட்டுமானம் என்றே ஆட்கள் சொல்கிறார்கள். மாரி காலத்தில் வெள்ள காடாக இருக்கும் flood plain இது. சென்னையை போல வருடம் ஒரு தரம் வெள்ள அனர்த்தம் வரும் நகராக யாழை மாற்றி வருகிறார்களோ என எண்ணத்தோன்றியது. கொழும்பில் கோட்டா காலத்தை போல அன்றி நகரின் அழகுறுத்தல், தூய்மை குன்றியே உள்ளது. வெள்ளவத்தை, தெகிவளை கால்வாய்கள் உட்பட சகல கால்வாய்களும் கடக்கும் போது நாற்றம் எடுக்கிறன. சரிந்து விழுந்து பலரை காவு கொண்ட, கொலன்னாவ குப்பை மலை, கைவிடப்பட்டுள்ளது. அதன் மேல் செடிகளும், மரங்களும் வளர்ந்து, முழுவதும் பசுமையாகி ஏதோ காட்டு மலை போல தோன்றுகிறது. கொழும்பை விட்டு வெளியேறும் மூன்று ரயில் தடங்களிலும் கணிசமான அளவு தூரம் நகரமயமாதல், குப்பை கொட்டலை அவதானிக்க முடிகிறது. உலகின் மிக ரம்மியமான ரயில் பயணங்களில் ஒன்று என நான் கருதும் கொழும்பு-காலி ரயில் தடத்தில், தெஹிவள-களுத்தற வரை அழகிய கரையோரம் எங்கும் குப்பையை கொட்டி, பற்றவும் வைத்து, நாசமாக்கி உள்ளார்கள். பிரதான வீதிகளை பொறுத்த மட்டில், வடக்கில் நன்றாக உள்ளது, ஆனால் வடக்கை போல அன்றி கிழக்கிலும், தெற்கிலும் வீதிகள் காப்பெட் ஆகி 15 வருடம் ஆக போகிறது. இந்த வீதிகள் பராமரிப்பின்றி உடைய தொடங்கி விட்டன. 2019 இல் அருமையாக இருந்த வீதிகள் சில இப்போ குன்றும் குழியுமாக உள்ளன. இவற்றை பராமரிக்க அரசிடம் பணம் இல்லை என்பது கண்கூடு. நிலமை இப்படியே தொடர்ந்தால் 90களில் இருந்த நிலைக்கு வீதி கட்டமைப்பு விரைவில் வந்து விடும். யாழ்பாண 1ம் வகுப்பு ஏசி ரயில் இருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உடைந்தே உள்ளன. இந்திய தரம் பல்லிளிக்கிறது. உண்மையில் இரெண்டாம் வகுப்பு வசதியால இருக்கிறது. புதிதாக எத்தனையோ பெட்டிகள் போனவருடம் வந்ததாக சொன்னாலும், நான் காணவில்லை. கொழும்பு புறநகர் ரயில் இன்னும் 1990இல் பிரேமதாசா தருவித்த அதே பெட்டிகளுடந்தான் ஓடுகிறது. யாழ் வவுனியா 1ம் வகுப்பு 1000, இரெண்டாம் வகுப்பு 650, முன்றாம் வகுப்பு 400 என நினைவு. அரச பஸ், ரயில்களின் நாட்டின் காசில்லாததன்மை தெளிவாக தெரிகிறது. சுனாமிக்கு பின்னான கடற்கரையோர கட்டுமானத்தடை இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை அந்தளவுக்கு சட்டபூர்வ/விரோத கட்டுமானங்கள், குடியிருபுகள் எழும்பியுள்ளன.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
விக்ரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் கொடுத்த பச்ச மட்டை அடியால்…அண்ணன் கொள்கை மாற்ற முடிவுக்கு வந்திருக்கலாம் அல்லவா? (முப்பது நாளில் முரட்டு முட்டு கொடுபது எப்படி - ஸ்பெசல் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம் - உடனே அணுகவும்🤣). இதை பற்றி பக்கம் பக்கமாக முன்னர் எழுதியாகி விட்டது அண்ணை. ஒவ்வொரு வழக்கிலும் முழு சட்டத்தையும் அலசி ஆராய்வதில்லை. Precedent (முந்தைய முடிவு?) என முன்னர் பல வழக்குகளில் சொல்லபட்டதை ஆதாரமாக காட்டுவார்கள். அதே போல் உங்களையும் முன்னைய யாழ் திரிகளின் மேற்கோள்களுக்கு கைகாட்டி (signpost) அமைகிறேன்🙏.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இடித்துரைப்புக்கு நன்றி. ஆனால் சீமானின் பக்தர்களும், டிரம்பின் MAGA பக்தர்களும் ஒரே டிசைன். அண்ணனை போலவே நாக்கை புரட்டி, புரட்டி முட்டு கொடுப்பார்கள். உதாரணமாக தமிழ் தமிழ் என கூவிய கருணாநிதியின் மகள் கனி மொழி சரளமாக ஆங்கிலம் மட்டும் அல்ல, தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு மொழியாளுமை உள்ளவர் - ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அவர் ஆங்கிலம் பேசுவதை கண்டிப்பார்கள். அதையே சீமான் செய்தால் தப்பென்ன? பள்ளி கூடம் சரியில்லை என நொண்டி சாட்டு சொல்வார்கள். ஆனால் ஸ்டாலினும், அழகிரியும் ஐ கம் யூ கோ இங்கிலிபிசுதான் என்பதையும், தமிழிழே திக்கி திணறி கதைக்கும் இவ்விரு வரும் ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராத் என்பதையும் மறந்து விடுவார்கள். இதாவது பறவாயில்லை, ஒரு. படி மேலே போய் ஸ்டாலினும், உதயநிதியும் தெலுங்கில் எழுதி தமிழில் படிக்கிறார்கள் என்ற பொய்யை கூட திண்ணையில் சொல்லி விட்டு, ஆதாரம் கேட்டதும் அது சும்மா ஜோக் என நழுவினார்கள். ஆனால் அதை ஒரு உறவு உண்மை என நம்பி பின் தெளிவானார். இப்படியாக சிலர் இங்கே செய்வது பச்சை பொய்யும், புரட்டுகளும் நிறைந்த நாதக பிரச்சாரம். பொய்யும், பிரட்டும், வரலாற்றை பொய்யாக மீள எழுதுவதும், சதி கோட்பாடுகளை முந்தள்ளுவதும்தான் நாதக/சீமானின் அடிப்படை அரசியல் யுக்தியே. அண்ணணை அப்படியே பிரதி செய்க்கிறார்கள் அவரின் யாழ்கள தம்பிகள். இந்த பொய் வரலாற்றை எழுதுவதில் ஒரு அங்கம்தான் - கெளத்தூர் மணி, வேல்முருகன், நெடுமாறன், வைகோ இன்னும் பலரின் பங்களிப்பை மறைப்பது, சிறுமை செய்வது. இதை காலத்துக்கு காலம் யாழில் பலர் கண்டிக்கவே செய்கிறார்கள். இருந்தாலும் அடுத்த திரியில் தெரிந்தே அதே பொய்யை எழுதுவார்கள். உண்மையை உரைக்கும் உங்கள் முயசிக்கு நன்றி. புலித்தோல் போர்த்திய நரி. #தொண்டை தண்ணி வத்த பேசும், கள்ள மெளனி.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
திமுக காரன் கசமுசா வீடியோ அசல் நாதக காரன்கசமுசா வீடியோ போலி என்பதும் தம்பிகள் இங்கே பலவருடமாக ஓட்டும் முட்டுப் படம்தான். ஆனால் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை. பராவாயில்லை, முட்டுக்கான தேவை அதிகரிக்க, அதிகரிக்க, முரட்டுத்தனமாக முட்டு கொடுப்பதும் அதிகரிக்க்கத்தானே வேண்டும்🤣.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
போன தடவை அவர் ஒன்றுக்கு இரெண்டு தரமாக பதிவு செய்த பிரமாண பத்திரத்திலேயே போதிய தகவல் உள்ளது. இது ஜஸ்ட் கணக்கில் வந்தது மட்டுமே.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்தியா கூட்டணியா? வட இந்தியாவில் எல்லாரும் பிய்த்து கொண்டு போய் விட்டனரே. மோடி வெல்வது 100% கரண்டி.