Everything posted by goshan_che
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அப்படி எண்டால் இவர்களை கொண்டது யார்? இலங்கை அரசா? அல்லது ஜிகாத் குழுவா? அல்லது ஈபிடிபி போன்ற ஒட்டு குழுவா? கருணா, பிள்ளையான் குழுவாக இருக்க வாய்ப்பில்லை, இது நடந்த போது அவர்கள் புலிகளில் இருந்தார்கள்.
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
பிகு இங்கே நானும் எபோத வும் 1950, 80 களில் விளையாடிய இரு அப்துல்காதர்களை குழப்பி கொண்டுள்ளோம். ஆனால் 1958 பாகிஸ்தான் அணி, 1994 இங்கிலாந்து அணியை விட சிறந்தது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை. 1958 கால, காதர் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தெ ஆ தவிர ஏனைய அப்போதைய டெஸ்ட் அணிகள் சகலதையும் வென்றுளது. அங்கஸ் பிரேசர் ஓப்ப்னிங் போலராக இருந்த 1994 அணி, அடிவாங்காத இடமே இல்லை🤣.
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
நீங்கள் சொல்லும் அப்துல் காதிர் எம் சி ஜி யில் சுழட்டிய போது (அலன் போர்டர் அவுட் இப்போ ரிவியூவில் அவுட் இல்லை என்றாகி இருக்கும்). எனது நினைவு முர்றிலும் பிழை 🤣. https://youtu.be/CbOy9J8i1sk?si=94oc6hHCh1v0lJlV
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
இவரை எனக்கு நியாபகம் இருக்கிறது. முடியை பக்கவாட்டில் சீவி இருப்பார். அடிக்கடி தட்டி விட்டு கொள்வார். இடதுகை லெக்ஸ்பின் என நினைக்கிறேன்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
இன்று அமித்ஷா, தேர்தலில் வென்றால் அதிமுக + பிஜேபி கூட்டணி ஆட்சிதான் என அறிவித்துள்ளார்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
இந்தியாவில் மட்டும் 9% பேர் வீகன். அதாவது அண்ணளவாக 150 மில்லியன் மக்கள். அருமை. இந்த அடிப்படை அரசியல் அறிவு அவருக்கு இல்லாமல் இல்லை. இதேபோல் தன் சொந்த வாக்காளரில் கணிசமானோரை கொல்டி என திட்டி விட்டு வாக்கு அரசியலில் வெல்லவது கடினம் என்பதும் அவர் அறிந்ததே. ஆனால் நான் முன்பே சொன்னது போல் வெல்வது, அதிகாரத்தை பிடிப்பது எல்லாம் சீமானின் நோக்கமே அல்ல. அவர் வெறும் தரகர். விவசாயி சின்னம் அவருக்கு மிக பொருத்தமானது. தமிழ் நாடு என்னும் நிலத்தை, கிண்டி, கிளறி, பீஜேபி எனும் பயிர் வளர தோதாக்குவதே அவர் ஒரே அஜெண்டா.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
அமெரிக்கன் எப்பவும் புத்திசாலிதான் 🤣
-
பாகிஸ்தானில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
ஒரு கேள்வி கேட்கலாமா? அமிர்தலிங்கத்தை இன்றுவரை நினைவுகூர்கிறார்கள். நீலனையும். அப்போ அவர்கள் மாறா மக்கள் அபிமானம் வென்ற தலைவர்கள்? ஆகவே அவர்களை அவர்கள் பாணியில் அரசியல் செய்யவிடாமல் போட்டு தள்ளியது தவறு?
-
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
அதானே… எங்களுக்கு கடுப்பாகுமா இல்லையா?
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
இல்லை காதரின் முதல் டெஸ்ட் 1946 இல் கடைசி டெஸ்ட் 1958 இல் என்கிறது கிரிகின்போ. சோபர்ஸ் அடித்ததும் 1958 இல்தான். இதற்கு முன்னர் ஆக்ஸ்போர்ட்டுக்கும், பின்னர் இந்திய டெஸ்ட் அணிக்கும், பின் பாகிஸ்தானின் கேபடனும் என, 1958 இல் அப்துல்காதிர் ஜாம்பவானாக ஆகியேவிட்டார். 1958 இன் பின் அவர் டெஸ்ட் விளையாடவில்லை எனில், 1958 இல் அவர் ஜாம்பவானாக ஆகிவிட்டார் என்றுதான் அர்த்தம்.
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
ஓம்…ஆனால் மீதம் இருந்த ஆறு பந்தில் ஒரு ரன் எடுத்தால் கூட அவரின் பிரெட்மனோடு சமனாக நிற்கும் திட்டம் தோல்வி அடைந்திருக்கும் அல்லவா? ஆகவே நீங்கள் சொல்வதுதான் உண்மை எனில், பிரெட்மனை சமன் செய்ததுமே அவர் டிக்ளேர் பண்ணி இருக்க வேண்டும்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
குரல்தர வல்ல அதிகாரிகள் தம் கருத்தை தெரிவித்தார்கள்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
Holy cow!🤣 சாப்பிடுவோரில் Vegan முழுக்க இப்படி பட்டவர்கள்தானே?
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
சுத்து மாத்துக்கு மட்டும் அல்ல பார் சிறிக்கும்…. ஒத்த கதிரை கஜனுக்கும்… இதே நிலைதான்.
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
நீங்கள் சொல்வதுதான் காரணம் என்றால் அதை ஏன் முல்டர் சொல்லவில்லை? சொன்னால் சிம்பாவ்வே ஒரு சோப்பிளாங்கி டீம் என சொல்வது போல் ஆகிவிடும். என்னை பொறுத்தவரை கெயில் சொன்னதுதான் சரி. டெஸ்ட் கிரிகெட் என்றால் அது டெஸ்ட்கிரிகெட்தான். லாரா முதன் முதலில் 375 அடித்து உடைத்த சாதனை சேர் கரி சோர்பஸ் 365 அடித்த சாதனையை, அது அப்துல்காதர் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக சோபர்ஸ் எடுத்தது, ஆனால் லாரா அதை உடைத்தது ஒரு சதம் பெறுமதியில்லாத 1994 இங்கிலாந்து போலிங்க்குக்கு எதிராக. அதற்காக லாரா 364 இல் hit wicket லா அவுட் ஆக முடியும்🤣. விட்டு கொடாமல் விளையாடுவது என்பது விளையாட்டின் அடிப்படை. அது இல்லாவிட்டால் அது விளையாட்டே இல்லை.
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
இது மட்டும் அல்ல, இதே போல் இன்னொரு உத்திதான், மறுநாள் காலையில் ஒப்னர்களை ஒரு அரை மணி நேரம் பீல்டிங்கில் நிற்க வைத்து விட்டு, டிக்ளேர் செய்வதும். டெஸ்ட் நிபுணரனா உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை, எமது அணியின் ஸ்கோர் என்ன, என்ன ரேட்டில் அடித்துள்ளோம், மைதானத்தின், சூழலின் தட்பவெட்ப, நிலை களுக்கு அமைய வேறு, வேறு உத்திகள் கையாளப்படும். இங்கே டெயிலர் நான் சொன்ன உத்தியை கைக்கொள்ள விரும்பினார், ஆனால் அது பிழையாக பொருள் கொள்ளப்படும் என்பதால், அடுத்த நாள் காலையில் டிக்ளேர் பண்ணினார். பிரட்மனோடு சமன் ஆனதுமே டிக்லேர் பண்ணுவதுதான் அவர் நோக்கம் என்றால், 334 அடித்ததும் டிக்ளேர் பண்ணி இருப்பார். தொடர்ந்து நாள் முடியும் வரை விளையாடி இருக்க மாட்டார். உங்களுக்கான பதிலை கிறிஸ் கெயில் தருகிறார் 🤣. There may have been a school of thought that given the disparity between South Africa, the newly-crowned World Test Championship winners, and Zimbabwe, ranked 12th in the ICC's Test rankings, somewhat lessened Mulder's achievement. But Gayle was at pains to point out the 'opponent doesn't matter'. "It's the same cricket, Test cricket," Gayle said. "Sometimes you can't even get one run against a team like Zimbabwe, if you want to put it that way. Gayle blasted nearly 20,000 runs across all three formats for the West Indies "It doesn't matter the opponent, if you get 100 against any team, that's a Test century. If you get a double or triple, 400, that's Test cricket. That's the ultimate game. "Like I said, he panicked and he blundered, straight up."
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
என்னுடைய புரிதல் இன்மை பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி🤣. உங்கள் புரிதலை பார்க்க நீங்கள் டெஸ்ட் பிளேயர் போல உள்ளது, நான் அப்படி இல்லை, சாதாரண கிளப் பிளேயர்தான். ஆனால் டெஸ்ட் பார்ப்பதால் கேள்வி ஞானம் கொஞ்சம் உண்டு. நான் இங்கே மூக்கு சாத்திரம் பார்த்து வாய்க்கு வந்த படி எழுதவில்லை. டெய்லரே கூறியுள்ளார். 2ம் நாள் முடிவில், தான் 3ம் நாள் காலையில் மேலும் அரை மணிநேரம் விளையாடி விட்டு, டிக்லேர் பண்ணவே யோசித்தேன். விளையாட்டை வெல்ல அதுவே மிக சிறந்த முடிவாக இருந்திருக்கும் என. ஆனால் அப்படி செய்தால் - அது பிரட்மனை முந்த என்றே பொருள் கொள்ளப்படும் என்பதால், 2ம் நாள் இரவு நன்றாக யோசித்து டிக்லேர் செய்யும் முடிவை எடுத்தேன் என. ஆகவே 👇 இது பற்றி டெய்லர் கூறியது https://www.cricket.com.au/news/3311645/on-this-day-taylor-equals-bradman-with-334 அவரின் கூற்றுப்படி: “I think ideally I would have batted on for 20 minutes just to put their openers out in the field for 20 more minutes before we declared”. "But I thought if I did that I would then end up on 340 not out or something like that and I think people would have assumed that I'd batted on just for my own glory. "I didn't want to send that message either so the more I thought about it, I came to the decision that the best thing I can do is declare (and) end up on the same score as Sir Donald, which I'm more than delighted with.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
உணர்ச்சி பேச்சை கேட்டு ஆடு மாடுகள் பொங்கி எழுந்தால்….🤣
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
முஸ்டர் பதட்டப்பட்டு பிழையான முடிவு எடுத்தார் என்கிறார் கெயில்… talkSPORT'He panicked' - Chris Gayle gives ruthless response to Wi...Cricket icon Chris Gayle insisted Wiian Mulder ‘panicked and blundered’ by not attempting to surpass Brian Lara’s Test record. South African skipper Mulder made the bold decision …
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
அப்போ நீங்கள் எழுதியது டெயிலர் உங்கள் காதுக்குள் மட்டும் சொன்னதா 🤣. மார்க் டெய்லர் என்ன நினைத்தார் எனபதை அவர் சொல்லித்தான் அறிய முடியும். பிரெட்மனோடு சமனாக இரெண்டாம் நாள் ஆட்டம் முடிய ஒரு ஒவர் இருக்கும் போதே வந்து விட்டார். டிக்லேர் செய்வதாயின் அவர் அப்போதே செய்திருக்கலாம். அன்று ஒரு ஓவர் விளையாடி அடுத்த நாள் காலை வரை காத்திருக்க வேழ்ண்டியதில்லை. இரெண்டாம் நாள் ஆட்ட முடிவில், 3ம் நாள் அரை மணி நேரம் ஆடுவது, போதிய ஸ்கோர் எடுத்த பின் ஆனால் 375 ஐ அடிக்காமல் விலகுவது என்பதே அவர் எண்ணம். காரணம் 375 வரை ஆடினால் மேட்ச்சை வெல்ல முடியாமல் போகும். இடையில் அவர் அவுட் ஆகவும் கூடும். ஆனால் அப்படி செய்தால் பிரெட்மனை முந்த என தான் 30 நிமிடம் மேலதிகமாக ஆடியதாக கருதப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை. அன்றிரவு அவுஸில் உள்ள சகோதரியிடம் கூட பேசி உள்ளார். அதன் பிந்தான் அந்த முடிவுக்கு வந்தார். ஆகவே பிரெட்மனோடு சமன் என்பது ஒரு பக்கவிளைவே. ஒரு போனல். டிக்லேர் பண்ண உண்மையான காரணம் மேட்ச்சை வெல்லும் வாய்ப்பு. ஆனால் நீங்கள் சொன்னது போல் முல்டருக்கு போதிய நேரம் இருந்தது. இவரின் செய்கைக்கு முழு காரணம் அதிக பிரசங்கிதனமே. அவர் அபிமானத்தால் செய்திருக்கலாம். ஆனால் இனி காலம் முழுவதும், லாராவின் 400 ஐ கதைக்கும் போது முல்டர் விட்டு கொடுத்ததைத்தான் அனைவரும் நினைவுகொள்வார்கள். இது உண்மையில் லாராவுக்கு அபகீர்த்தி, சிறுமைப்படுத்தும் செயல். இவர் அடுத்த பந்திலேயே அவுட் ஆகி இருக்கலாம். அப்படி இருக்க விட்டு கொடுத்தேன் என்பதே பிழை. ஆகவே ஒன்றில் விரும்பியமட்டும் ஆடி இருக்க வேண்டும் அல்லது, மேட்ச்சை வெல்ல டிக்ளேர் பண்ணினேன் என்பதோடு நிறுத்தி இருக்க வேண்டும். தேவையில்லாமல் லாரவை இழுத்து அவமானப்படுத்தாமல். இதை நிச்சயம் லாரா ரசித்திருக்க மாட்டார்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்! Vignesh SelvarajUpdated: Thursday, July 10, 2025, 18:28 [IST] நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதனால், கால்நடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. கால்நடைகள் வனப் பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த மாநாட்டு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் மேற்கொண்டுள்ளார். இயற்கை விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்சார்பு பொருளாதாரம், கள் இறக்கும் உரிமை உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் சீமான். அண்மையில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார் சீமான். இந்நிலையில், முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு இன்று நடத்தப்படுகிறது. மதுரை விராதனூர் பகுதியில் நடு முள் காட்டுப் பகுதி அருகே, நாட்டு வகை கிடை மாடுகள் மற்றும் ஆடுகளை திடலில் நிறுத்தி, அதற்கு முன்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு பிரத்யேக பட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் மாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்னிலையில், மேடையில் நின்று பேச இருக்கிறார் சீமான். ஆடு, மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இன்றைய தினம் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சீமான் பேசுவது எல்.இ.டி திரைகளிலும் ஒளிபரப்ப்பட உள்ளது. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தப்படுவது கவனம் பெற்றுள்ளது. https://tamil.oneindia.com/news/madurai/ntk-chief-seeman-holds-conference-near-madurai-amid-thousands-of-cows-and-goats-719413.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி புலம்பெயர் மாடுகள் ஒண்டும் போகேல்லையா🤣
-
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
லாராவின் சாதனயை நான் குறைத்து மதிக்கவில்லை. ஆனால் விளையாட்டு “போட்டி” என்பதன் அடிப்படையே விட்டு கொடாமல் விளையாடுவதுதான். ஆகவே சாதனையை நான் வேண்டும் என்றே தகர்காமல் விட்டேன் என சொல்லுவது அதிகபிரசங்கிதனமானதும், லாராவை அவமதிப்பதுமாகும். பேட்டிங் அவரேஜ் பார்க்கும் போது அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஓட்டத்துக்கு முழு மதிப்பு, சிம்பாம்பேவுக்கு எதிரான ஓட்டத்துக்கு அரை மதிப்பு என இல்லைத்தானே? அப்படி என்றால் முல்டர் ஏன் சிம்பாப்வேக்கு எதிராக களம் இறங்கினார்? அதே போல் அடுத்த 20 சொச்ச ஓட்டத்துக்குள் இவர் அவுட்டும் ஆகி இருக்கலாம் - ஆகவே நான் விட்டு கொடுத்தேன் என்பது எந்த வகையில் பார்த்தாலும் சுத்த அதிகபிரசங்கிதனமே. மார்க் டைலர் 1998 இல் பாகிஸ்தானில் வைத்து 334 இல் டிக்லேர் பண்ணியது இப்படி அல்ல. அவர் இரெண்டாம் நாள் ஆட்டம் முடியும் போது பிரேட்மனை சமன் செய்து இருந்தார். அப்போ அவர் மனதில் டிக்ளேர் செய்யும் எண்ணமில்லை. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்திருந்தால் கூட பிரேட்மனை முந்தி இருப்பார். ஆனால் அன்றிரவு 2 மணி வரை தூங்கவில்லை எனவும், ஆட்டத்தை வெல்ல, இன்னும் ஒரு அரை மணி நேரம் துடுப்பாட தான் விரும்பியதாயும், ஆனால் அப்படிதான் செய்தால் ( அரை மணியில் அப்போதைய உலக சாதனையான 375 ஐ எட்ட வாய்ப்பில்லை), பிரேட்மனை வெல்ல என தான் இப்படி விளையாடியதாக சொல்லப்படும், எனவே அணி வெல்ல வேண்டும் என்பதால், மறுநாள் காலையில் டிக்ளேர் செய்ததாயும் டெய்லர் கூறியுள்ளார். அத்தோடு பிரேட்மனை சமன் செய்தது தனக்கு பெருமையே எனவும் கூறினார். ஆகவே இரெண்டும் ஒன்றல்ல.
-
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
அவர்கள் CAA சட்டத்தை கொண்டு வரவில்லை. அப்போ வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் ஒரே விதி. இப்போ அப்படி அல்லவே?
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
திருஞானசம்பந்தர் கி பி 6ம் நூற்றாண்டு.