Everything posted by goshan_che
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஓம்…மறுக்கவில்லை. ஆனால் அந்த பொறி பற்றி எரிந்திராவிட்டால், அதாவது வீடு வாங்கிய தனிநபர்கள், மற்றும் சிறு வியாபாரங்கள் மாதாந்த கொடுப்பனவை கொடுப்பதில் சிக்கலில் மாட்டி இராவிட்டால் காடு பற்றி எரிந்திராது. நீங்கள் சொல்லும் 90 சதவீதம் களவை வழமை போலவே செய்து கொண்டிருப்பார்கள். இந்த 10% dominos இன் அடிக்கட்டை போல. கீழ் கட்டையை இழுக்க ஒட்டு மொத்த கட்டுமானமும் ஆட்டம் கண்டு விட்டது. கட்டுப்பாடுகள்: இவை 1992 க்கு முன்னிருந்தன. அடுத்து வந்த அரசுகள் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தின. இதை bonfire of financial regulations என பெருமையாக வேறு பீத்துவார்கள் வலதுசாரிகள். 2008 இன் பின் இறுக்கினார்கள். இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தளர்கிறது. அடுத்த 2008 வரை இது தொடரும்.
-
உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்!
அப்ப சேர, சோழ, பாண்டிய, பிராபாகர சாதனைகளை எல்லாம் நீங்களும் ஏனையோரும் நேரில் பார்த்தா எழுதுகிறார்கள். இந்த நாகரீகங்களில் இந்த வழக்கம் இருந்தது என்பது செய்தி அல்ல ஐயா, வரலாற்று தரவு.
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
நிச்சயமாக £80 கொடுக்கவில்லை. ஒரு espresso கோப்பை அளவு அதிலும் அரைவாசி. நிச்சயம் £20 க்கு கீழேதான். 2017 இல்.
-
இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
பிரேமதாசாவுக்கு பின் வந்த ஜனாதிபதிகள் எல்லாரும் ஏதோ ஒரு சமயத்தில் 1983 பெரும் பிழை என ஏற்று கொண்டனர். எனவே தொடர்ந்து கறுப்பு ஜூலை என தமிழர் பிச்சைகாரன் புண்ணை நோண்டக்கூடாது. இப்படி செய்வது நஸ்ட ஈடு கிடைக்கும் என அங்கலாய்க்கும் புலம்பெயர் தமிழர் சிலரே. கள்ள கூட்டம் 😂. பிகு சில வார்த்தைகளை மாற்றி போட்டுள்ளேன்.
-
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்?
என்று உள்ளூராட்சி சபை தீர்மான அடிப்படையில் மாவீரர்களுக்கு வீதி பெயரும், சிலையும் வைக்க முடிகிறதோ அப்போ சிலைகளை வைக்கலாம். அதுவரைக்கும் சங்கிலியன், குங்கிலியன், ஆறுமுகம், ஞானபிரகாசம் எல்லாரும் வெயிட் பண்ணலாம் தப்பே இல்லை. பிகு கிழக்கில் இப்படி அல்ல. அங்கே சிலை வைப்பது = ஆட்புலம் வரையறுத்தல்.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
ஜஸ்டீன், ரசோ அண்ணாக்களிடம் ஒரு கேள்வி (ஏனைய அமெரிக்க வாழிகளும் பதில் சொல்லலாம்). இது அவ்வளவு பெரிய வெற்றிதானா? ஜூலியானி போல பல ரிப்பளிக்கன் மேயர்கள் இருந்தது உண்மை எனிலும் 2016க்கு பின், டிரம்ப் வெறுப்பின் தாயகமாக திகழ்வது நியூயார்க் அல்லவா? பதவி இழந்த பின் நியூயோர்க் திரும்பாமல் புளோரிடாவிற்கு போகும் அளவுக்கு டிரம்பிற்கு நியூயோர்க்கில் எதிர்ப்பு எனும் போது - இது வெறுமனே liberal east coast நகரம் ஒன்றில் அதுவும் வெள்ளை அல்லாத குடியேறிகள் நிறைந்த நகரம் ஒன்றில் ஜனநாயக கட்சி அடைந்த வெற்றி எனவே கருதமுடியும் என நான் நினைக்கிறேன். 2010-2024 கன்சவேடிவ் ஆட்சியில் இரண்டு வருடம் தவிர மீதி காலம் எல்லாம் சதிக் கான் தான் இலண்டன் மேயர் ஆனால் தேசிய மட்டத்தில் இது ஒரு பாதிப்பையும் தரவில்லை. மாறாக பிரெக்சிற் உட்பட அதி வலதுசாரி கொள்கைகளே வெற்றி பெற்றன. அதேபோல் நான் எப்போதும் நம்புவது, ஒபாமா வந்திராவிட்டால், டிரம்ப் வந்திருக்க மாட்டார் என. மக்கெய்ன் 2 தரமும் வென்றிருந்தால், அடுத்த தேர்தலில் டிரம்ப் போல ஒருவருக்கு 2016 இல் பிரைமறிகளில் கிடைத்த எதிர்பாராத ஆதரவு கிடைத்திருப்பது கஸ்டம். இதே போல் ஒரு நிலையை மம்தானி வெற்றியை வைத்து டிரம்ப் உருவாக்குவார் என்பது என் எண்ணம். மம்தானிக்கும் வாய் கொஞ்சம் ஓவர்தான். குறிப்பாக தனது மதத்தை தூக்கி பிடிக்கும் பாங்கு. In god we trust எல்லாம் சரிதான், ஆனால் அது யேசுவுக்கு மட்டுமே😂. மம்தானியை வைத்து டிரம்ப் சமய ரீதியில் ஆட்டம் ஒன்று ஆடி (நியூயோர்க்குக்கு தேசிய படையை கூட அனுப்பி) - தனது 3ம் தவணையை அடைந்து விடக்கூடும் என நீங்கள் நினைக்கவில்லையா? பிகு நாடளாவிய அமெரிக்க மக்கள் போக்கு இனி வரும் midterm elections இல்தான் ஓரளவு புலப்படும் என நினைக்கிறேன்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த திரியின் ஆரம்பத்தில் யூகேயில் தரமற்ற மருத்துவ சாதனங்களை அரசுக்கு வழங்கி அதில் கொள்ளை இலாபம் பார்த்த சீமாட்டி ஒருவர் அவரின் கணவன் பற்றி எழுதினேன். இவர்களை 148 மில்லியனை அரசுக்கு மீள கொடுக்கும் படி கோர்ட் சொன்ன நாளுக்கு முதல் நாள் இவர்கள் கம்பெனியை திவலாக்கி விட்டனர். 600,000 ஐ தவிர கம்பெனியின் மீதம் எல்லாம் இவர்கள், பிள்ளைகள் பெயரில் டிரஸ்டில். அந்த 600,000 கூட அரசுக்கு கிடைக்காது, ஏனெனில் Isle of Man இல் பதிவு செய்த இவர்களின் இன்னொரு கம்பெனி, திவாலான கம்பெனிக்கு கடன் கொடுத்திருப்பதால் - அரசுக்கு முன் அந்த கடனே அடைக்கப்படும். அதாவது 6000,000 ம் கூட இவர்களின் இன்னொரு கம்பெனிக்கு போய் விடும். மேலதிகமாக 39 மில்லியன் வரி வேறு கட்டவில்லை. மொத்தமாக 148+39=187 மில்லியனை ஆட்டையை போட்டுள்ளனர். இன்னொரு 6 மேல்நிலை பள்ளிகூடம் கட்டும் காசு. #பட்டபகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது. சஞ்சீவ் ஆரணிக்கும் இந்த தம்பதிக்கும் அதிக வேறுபாடில்லை. BBC NewsMone-linked firm PPE Medpro owes £39m in taxAdministrator's report shows firm owes £39m to HMRC on top of £148m owed to Department of Health
-
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்?
முக்காத இடங்களிலும் வைக்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இதுவெல்லாம் சரிதான். ஆனால் 2008 சரிவின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான். வீடுகளை வாங்கியோர் வட்டி வீதம் கொஞ்சம் கூடினால் கூட மாதாந்த தொகையை கட்ட முடியாத நிலையில் இருந்தமையால், வீடுகளை கைவிட்டனர். அல்லாமல் இவர்கள் தொடர்ந்தும் மாதாந்த கொடுபனவை கட்டி கொண்டு வந்திருந்தால், நீங்கள் சொன்ன அத்தனை காரணங்கள் (இதோடு Libor rate களவையும் சேர்க்கலாம்) இருந்தாலும் 2008 சரிவு வந்திராது. ஏன் இந்த பயனாளர்களால் மாதாந்த கொடுப்பனவு கட்ட முடியாமல் போனது? அடிப்படையில் பயனாளரும், வங்கி ஊழியரும் (கொமிசனுக்காக) சேர்ந்து செய்த மோசடி + அதீத ரிஸ்க் எடுத்தல் +பேராசை. ஆயிரம் டொலர் கட்டவே ததிங்கினதோம் போடும் ஒருவரின் தலையில், கள்ள டொக்குமெண்ட் அடிப்படையில், அல்லது போதிய அளவு stress test பண்ணாமல் - அல்லது, நம்பவே முடியாத பண வரத்தை நம்புவதாக கூறி, 2000 டொலர் கட்டவேண்டிய மொகேஜை கட்டி விட்டார்கள். வீடு negative equity க்கு போவது, அல்லது வட்டி வீதம் ஏறல் போன்ற சின்ன தளம்பலே இவர்களை - மாதாந்த கொடுப்பனவை கட்ட இயலாமல் ஆக்க போதுமாய் இருந்தது - கணிசமனா ஆட்கள் இப்படி செய்ய, அது snowball effect ஆகி, காப்புறுதி நிறுவனங்களின் இயலுமையை மீறி போய் விட, அதன் தொடர்சியாக வங்கிகள் இன்னும் பலது வீழ்ச்சியை சந்தித்தன. அது அப்படியே ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் காவு வாங்கி விடும் என்பதால் அரசுகள் தலையிட்டன (too big to fail). யூகேயில் அரசு தலையிட்டு சில வங்கிகளை (அதன் liabilities ஐ) தானே எடுத்து கொண்டது. இதற்கு காரணமான பல வங்கியாளர்கள் சிறை போனார்கள். நாங்கள் too big to fail எனவே எப்படியும் அரசு காப்பாற்றும் என்ற அடிப்படையில், அதீத பேராசையில், விதிகளை மீறி, அதீத ரிஸ்க் எடுப்பது. இதுவும் களவுதான். இலாபம் வந்தால் இவர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு. Profit is privatized, risk is socialized. சஞ்சீவ் ஆரணி செய்ததும் இப்படி ஒன்றே.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
பிகு இங்கே பெரு நிறுவனங்களுக்கு end of accounting year + 9 மாதம் வரைக்கும் வரி கட்ட தவணை உள்ளது என நினைக்கிறேன். ஆனால் இவர்களை போல too big to fail, அதாவது திவாலாகினால் அரசு தலையிடும் என்ற நிலை உள்ள வியாபாரங்கள், சில சமயம், வரியை இப்படி இழுத்தடித்து, முடிவில் நாமம் போடுவதும் வழமை என நினைக்கிறேன். அதே போல் இந்த 250 மில்லியனை எச் எம் ஆர் சி க்கான கடன் என்பதுதான் தமிழிலும் technically correct என நினைக்கிறேன். உண்டியலில் விழும் அனைத்தும் அம்மனுக்கே சொந்தம் என்பது போல், கட்டும் திகதியில் இருந்து, அந்த வரித்தொகை, HMRCக்கே சொந்தம். இதனால்தான் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டி அறவிடுவார்கள். ஒருவருக்கு நாம் கொடுக்க வேண்டிய காசுக்கு அவர் வட்டி அறவிட்டால் - அது கடந்தானே?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஆம் 250 மில்லியன் வரி கட்டாமல் விட்டதைத்தான் சொல்கிறேன். ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதியதால் வந்த பிரச்சனை, the company is in debt to the HMRC to the tune of 250 millions என்பதை அப்படியே தமிழில் எழுதிவிட்டேன்.
-
உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்!
😂 ஆராய்சியாளார் நல்ல கதாசிரியர் போல உள்ளது😂. ஆதாம் ஏவாளின் பிள்ளைகளில் (உண்மை எனில்) ஆரம்பித்து, எகிப்திய, கிழக்காசிய, பாரசீக, தென்னமரிக்க என பண்டைய நாகரிகங்கள் பலதில் சகோதர மணம் ஒரு காலத்தில் ஏற்றுகொள்ளபட்ட ஒரு முறையாகவே இருந்தது.
- மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
பாலித்தீவில் இந்த புனுகுபூனையின் பின்பக்க காப்பியை குடித்து பார்த்தேன். சும்மா…லுலுலுலா 😂
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
மாடு தேடும் கதை யாழில் யாரோ அறிமுகபடுத்தி வாசித்தேன். ஜஸ்டின் அண்ணாவாகவும் இருக்கலாம். யாழின் சமூக சுரண்டலையும் காட்டி இருப்பார். யானை - யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் வன்னியில் போய் படிபிக்காமல், மாணவர்களை தொழிலாளர் போல் சுரண்டுவதை சுட்டும் கதையா? இப்படி ஒரு செ.ஆ கதை பல வருடம் முன்பு வாசித்தேன். குவேனி - யாழில் நான் எழுதி பாதியில் நிற்கும் கவிதை தொடர் ஒன்றின் இன்ஷ்பிரேசன்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
விக்ரமாதித்தனும் வேதாளமும்😂
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
நான் நினைக்கிறேன் - இது அவர்கள் சுயமாகவே, கேள்விகள் கேட்கும் போது இப்படி பதிகிறார்கள் என. அரசு அப்படி ஒன்றாக கருதவில்லை. வட, கிழக்கு, மேற்கு மாகாணத்தில்தான் இப்படி நடக்க்க வாய்புண்டு. மலையக மக்கள் என்ற அடையாளத்தால் கிடைக்கும் ஒதுக்கலில் இருந்து வருங்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய கூடும். இதற்கு யாழ்பாண சாதி அமைப்பின் வரலாற்றில் ஒரு உதாரணமும் உண்டு. பல்வேறு இடைநிலையில் வைக்கப்பட்ட சாதிகள், தம்மை தாமே அடையாள மாற்றத்துக்குட்படுத்தி, வெள்ளாளர் என்ற குடையின் கீழ் வந்ததாயும், இதனால்தான் வெள்ளாளருக்குள் கூட ஏற்ற தாழ்வு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். மலையகத்தில் இந்த போக்கு இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருக்கும்வரை அவர்களுக்கான உரிமை, சலுகைகளை இது பாதிக்கவும் வாய்ப்பில்லை.
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
நான் கணக்கில ரொம்பவே வீக்- ஆனாலும். இலங்கை தமிழர் தொகை எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் போக்கை என்னால் கூட காண முடிகிறது. 30 வருட போரில் இளையோரை அதிகம் காவு கொடுத்ததன் பின் விழைவு, இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது இலங்கை தமிழர் பிறப்பு வீதத்தில் தெரியத்தான் செய்யும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக இது 15 வருடத்துள் மீள நேர்மறை வளர்சிக்கு வந்துள்ளது நல்ல செய்தியே. ஆனால் இது மட்டுமே நல்ல செய்தியாக எனக்கு படுகிறது. எமது மக்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் குறிப்பாக, யாழ், மட்டகளப்புக்கு அப்பால் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் வீழ்சியை அல்லது மந்த நிலையை காட்டுவது கவலையான விடயம். யாரையும் ஒரு மாவட்டத்தில் இரு என கட்டாயம் செய்ய முடியாது. வாய்புக்கள் தேடி கொழும்பு இதர பகுதிகளுக்கு போவது இயல்பே. ஆனால் 1980 ற்கு முந்திய காலம் போல் இப்படி போவபர்கள், ஊருக்கு வருவதையோ, வாக்களிப்பு பதிவை ஊரில் வைத்திருப்பதையோ இப்போ செய்வதில்லை. கொழும்பு போனால் சில வருடங்களில் அங்கே ஐக்கியமாகி விடுகிறார்கள். யாழ் மாவட்டத்தில் கூட நகருக்கு 10 கிமிக்குள் இருக்கவே பலர் விரும்புகிறனர். மட்டகளப்பிலும் எழுவான்கரையில்தான் அநேகர். தரவுகளை பார்த்தால் - சனத்தொகை அடர்த்தி குறைந்த முதல் எட்டு மாவட்டமும் எமதுதான். ஒரு ஒற்றையாட்ட்சி நாட்டில் - குறைந்தளவு மக்கள், இப்படி அதிகளவு மண்ணை ஒரு அளவுக்கு மேல் பிடித்து வைக்க முடியாது. ஏனைய மாவட்டங்களில் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது, கவனம் எமது மாவட்டங்கள் மீதே திரும்பும். இது மேலும் எமது மாவட்டங்களில் எமது எம் வீதத்தை குறைக்கும். எமது தனித்துவத்தின் அடிப்படையே எமது மண்ணில் நாம் அறுதி பெரும்பான்யாக இருப்பதுதான். ஆகவே ஒட்டு மொத்தமாக சதவீதம் கூடி விட்டது என்ற நற்செய்தியை விட எமது பாரம்பரிய வாழிடத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாரதூரமான விடயம். இதை சரிக்கட்டும் அளவுக்கு வாய்புகளை ஏற்படுத்த முடியாவிடினும், மூன்று பிள்ளைகள் பெற்று, 8 மாவட்டங்களில் ஒன்றில் வாழ்வோருக்கு மாதாந்த தொகை போல ஏதும் கொடுத்தால் ஒரு சிறிய மாற்றம் வரலாம். ஆனால் நான் உட்பட சிறிய குடும்பமே நன்று என்ற மனநிலை தமிழ் சிங்கள மக்கள் இடையே ஊறிவிட்டது. இதை உதவி தொகைகள் பெரிதாக மாற்ற சாத்தியமில்லை. முஸ்லிம்களை பிழை சொல்ல முடியாது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு இதை செய்வதில்லை. எண்ணிக்கையே பலம், இறைவன் கொடுக்கும் அருள் பிள்ளைகள் என அவர்கள் இயல்பாக நம்புவதால், எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கிறது. அப்போ சிங்களவர், தமிழர் எண்ணிக்கையை கூட்ட என்ன செய்ய வேண்டும்? முதலில் தத்தம் மாவட்டங்களுக்கு பதிவு அளவிலாவது மீள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இது சாத்தியமே. அடுத்து, தனித்துவத்தை பேண நாம் எம் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கூட்டு மனோநிலை உருவாக வேண்டும். அப்படி உருவாகி பிறக்கும் பிள்ளைகளை தெருவில் விடாமல், பராமரிக்க சமூக அமைப்புகள் இருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள் போல, பிறப்புவீதத்தை ஊக்குவிக்கும் பிரச்சார அமைபுகளும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் முயன்றுமே - ஸ்கெண்டிநேவிய நாடுகளின் இது போன்ற திட்டங்கள் தோல்விதான். ஆகவே இதற்கு silver bullet முடிவு ஏதும் இல்லை.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
இந்த பக்கத்துக்கு வந்து வந்து போனாலும், நீங்கள் எழுதிய இந்த பதிவு இப்பதான் கண்ணில் பட்டது😂.
-
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்!
இவரும் என் பி பி - கட்சி இல்லை என நினைக்கிறேன்😂 குற்ற செயலில் ஈடுபடுபவரின் மைத்துனர், பக்கத்து வீட்டுகாரார், ஒரே பஸ்சில் கூடப்பயணித்தவர் என இந்த லிஸ்ட் நீளும் போல உள்ளதே😂. தாம் நிரந்தரமாக ஆட்சி செய்ய, பாதாள உலகம், கட்டுப்பாடற்ற பேரினவாதம் இரெண்டும் ஆபத்து என உணர்ந்த ஜேவிபி, அதனோடு நூலிழை சம்பந்தம் உள்ளோரை கூட கொஞ்சம் கொஞ்சமாக போட்டு தள்ள ஆரம்பித்துள்ளது. தமது சொல்லை கேட்கவில்லை என்பதால் 87 இல் விதானைமார், சப்போஸ்மாஸ்டர், போஸ்ட்மன் ஈறாக போட்டுத்தள்ளிய அமைப்புத்தான் ஜேவிபி.
-
யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!
ஓம். ஆனால் அனுர வெள்ளை கொடி விவகாரத்தை சொல்லுற வகையில் இவரை தட்டவே மாட்டார். மீளவும் இனவாதம் மூலம் இவர்கள் தம்மை வெல்லாமல் தடுக்க மட்டுமே. மட்டுப்பட்ட தட்டல்.
-
செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?
யார் இந்த நிரஞ்சன்? “நாமல் ராஜபக்ச முறையில்” சட்டத்தரணி ஆகி இருப்பார் போலுள்ளது. 1995 வரை சந்தையில் இருந்த காலணி, 1999, 2000 வரை பாவிக்கப்பட்டிருக்கலாமே? 1995 க்கு முன்னானது என நிறுவ முயல்வதன் மூலம், ரிவிரெசவின் பின் செம்மணி பகுதி படையினர் கட்டுப்பாட்டுக்குள் வரமுதல் புதைத்தவை என நிறுவ முயல்கிறார். ஆனால் இவை மண்டையன் குழுவின் புதைகுழியாகவும் இருக்கலாம். 87 இல் இந்தியன் ஆமியிம் உதுக்குள்ள நிண்டதெல்லோ.
-
யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!
கிரிமினல் வழக்குகள் என்ற போர்வையில் என் பி பி யின் அரசியல் எதிரிகள் துரத்தபடுவதன் இன்னொரு ஆதாரம் ?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மேலே மாட்டை பற்றி கேட்க, மாட்டை கொண்டு வந்து மரத்தில் கட்டி விட்டு, மரத்தை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே? போதவில்லையா😂. எமக்கு எப்படி நாமாம்? இது எந்த வகையில் கட்டப்படாமல் தேங்கிய வரி என்பது தெரியவில்லை (மேலே இப்படித்தான் தேங்கி இருக்கலாம் என ஒரு ஊகம் கொடுக்கப்பட்டுள்ளது). ஆனால் முதல் பக்கத்தில் பதிந்த செய்திகளின் அடிப்படையில், திவாலாகுக் போது 240 மில்லியன் வரை HMRC க்கு இந்த நிறுவனம் கடனை கட்டாமல் விட்டு விட்டு திவாலாகியுள்ளது. 250 மில்லியன்க்கு 6-8 secondary schools ஐ கட்டலாம் என்கிறது ஜெமினி. இது ஒவ்வொரு யூகே வரியிறுப்பாளருக்கும் நாமம்தானே?
-
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு
சவத்தில் இருந்து கழண்ட உண்ணிக்கு பேச்சப்பாரேன்🤣