Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அன்னிய நாடு இது ஆயினும் நீ இங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய்... எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கையாவயும் ஏளனம் செய்துமே கொன்றாய்... தாகத்தோடு புலிபோனது.. தமிழ் சந்ததியே சூடு கண்டது தியாக தீபத்துக்கு வீர வணக்கம்.
  2. சிங்களவன் சுழியன். # புரிஞ்சவன் பிஸ்தா
  3. கருணா ஒரு தீர்க்கதரிசி…. (டக்கெண்டு பாய்ந்து பிராண்ட வேண்டாம், கீழே வாசிக்கவும்) கருணா மோடங்கள் என சொல்லியது…. 2009 இல் தலைவர் வீரச்சாவை அடையவில்லை என, 2025, 2055 இலும் நம்பி கொண்டு இருக்க போகும் புலம்பெயர் தமிழர் சிலரை.
  4. யானை காதில் புகுந்த இலையான்….🤣 # பைத்தியம் புடிக்கும் திரிகளில் தரங்கெட்ட வசை மொழியில் எழுதி இன்பம் அடையும் மனிதர்களுக்கு, இலையான் பரவாயில்லை🤣.
  5. என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி Mani Singh SUpdated: Monday, September 15, 2025, 21:24 [IST] சென்னை: என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் மழை பெய்யும் jiஎன வானிலை மையம் அறிவுறுத்தியதால் அந்த பயணத்தை மாற்றி அமைத்தோம். அதற்கு அமித்ஷாவை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி விட்டது என எடப்பாடி கூறுகிறார். 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருந்தார். இந்த கெடு இன்றுடன் முடிந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவர், அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக வெளியான தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தருமபுரி மாவட்டத்தில் நான் வரும் 15 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை வைத்திருந்தோம். ஆனால் அன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. இதனால் அந்த தேதியில் சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் அதற்குள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒன்றிணைக்க, இணைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக செய்திகளை வெளியிட்டு விட்டார்கள். கைக்கூலிகளுக்கு முடிவு கட்டப்படும் அப்படி ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. சிலர் அதிமுகவை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது முடியவில்லை. அதிமுக அலுவலகத்தை உடைத்தவர்கள் இப்போது அதிமுகவில் சேர வேண்டும் என துடிக்கிறார்கள். துணை முதல்வர் பதவி கொடுத்தும் திருந்தவில்லை. அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்துக்கொண்டு சென்றார். எவர் ஒருவர் துரோகம் செய்தால் அவர் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும்.. இவ்வாறு அவர் பேசினார். அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்தவர்களை கட்சியில் சேர்க்க முடியுமா? என்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்தி செனறார் அவர்களையும் சேர்க்க முடியுமா? என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதன் மூலம் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசியிருப்பதை காட்டுவதை அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/no-one-can-intimidate-me-self-respect-matters-more-than-power-edappadi-k-palaniswami-fires-back-735891.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி எடப்பாடி அமித்ஷா இடையே லடாய் போல உள்ளது.
  6. அதெல்லாம் அந்த காலம். இப்ப அண்ணனுக்கும் திமுக வுக்கும் ஒரே எதிரி விஜை 🤣. பெட்டி வாங்கி கொண்டு தேர்தலுக்கு தேர்தல் வாயை வாடகைக்கு விடும் தன்மானத் தமிழன் 🤣
  7. ஆழ்ந்த இரங்கல். நான் வாசனாக இருந்த காலத்தில் இவர் கருத்தாளார். குறும்படங்கள் பற்றி இவர் எழுத்துகள் மூலம்தான் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
  8. VPN பாவித்தால் வேகம் குறைவதோடு, பலசமயம் page load ஆகாது. அதை நூத்து போட்டு வந்தால் வேகம் பரவாயில்லை.
  9. இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நடு நிலைக்கு ஒரு நல்ல உதாரணம் பாபர் மசூதி 426 ஆண்டுகளாக இருந்தது 1992 இல் அதை இந்து காடையர் ராமர் கோவில் மீது கட்டப்பட்டதாக கூறி இடித்தனர். சட்டவிரோதமாக மசூதி இடித்த இடத்தில் 28 வருடம் ஒரு கொட்டாயில் ராமர் பூசை, சட்டவிரோதமாக செய்தனர். நீதி மன்ற தீர்ப்பு பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியில் உள்ளது, ராமர் கோவிலை இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மசூதியில் அடிவாரத்தில் எந்த ராமர் சின்னமோ, கோவிலோ இல்லை. மசூதி 1992 இல் இடிக்கப்பட்டது சட்ட விரோதம், பிழை. ஆனால் 🤣🤣🤣 - 28 வருடமாக சடவிரோதமாக மசூதியை இடித்து, சட்டவிரோதமாக ராமர் பூசை செய்தோர் மனம் புண்படும். எனவே 426 ஆண்டுகளாக மசூதி இருந்த இடத்தில் புதிய ராமர் கோவில் கட்ட வேண்டும். மசூதிக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், இதுதான் பிஜேபி ஆட்சியில் இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நிலை. அமித் ஷா கண்காட்டினால், சீமாந்தான் யேசு என்றே தீர்ப்பு எழுதுவார்கள்🤣.
  10. இந்த வக்கீல், சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பார்த்த மாமா வேலைக்கு நன்றாக வெள்ளை அடிக்கிறார். SKK LegalSupreme Court: False Promise to Marry Not Rape | SKK LegalThe Supreme Court rules that a false promise to marry does not constitute rape in consensual relationships, clarifying legal perspectives on consent and marital intentions in intimate partnerships.👆சுப்ரீம் கோர்டின் அண்மைய வழக்குகளில் சொல்லப்பட்டது இதுதான்👇. கூடி வாழ்தல் (live-in relationship) முறையில் கணவன் மனைவியாக நீண்டகாலம் வாழ்ந்தோர், திருமணம் செய்வதாக கூறி மோசடி மூலம் பாலியல் வன்கொடுமை என புகார் கூறின் (allegation that consent was obtained via false promise to marry) - அதை ஆட்டோமேடிக்காக ரேப் என கருத கூடாது. இதைதான், மிக நியாயமாக சீமான் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது. அதாவது என்ன நடந்தது என அறுதியும் உறுதியுமாக பொலிஸ் விசாரிக்க வேண்டும். ஆனால் பொலிஸ் விசாரணையையே அடித்து நூத்து, மைனர் குஞ்சு அபராதம் கட்டினால் போதும் என சாத்தப்பன் நாட்டாமை போல் (ரன் படம்) தீர்ப்பு கூறியது இந்தியன் மாமா மன்னிக்கவும், சுப்ரீம் கோர்ட். பிகு இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெற்றியில் மிளிரும் குங்கும பொட்டு சாட்சி சொல்கிறது இவர்கள் எந்த கட்சியின் ஆட்கள் என🤣. நீதிபதிகள் நடுநிலையை நாட்ட மட்டும் அல்ல, காட்டவும் வேண்டும் என்பதுதான் அன்று wig அணியும் முறை வர ஒரு காரணம்.
  11. இதில் எனக்கும் உடன்பாடே. குறிப்பாக சவுக்கு சீமானை விட மோசமான அங்கிறு தட்டி. குறிப்பான அமவுண்டை கொடுத்தால் அவிச்ச மீன் துடிக்கும் என்பார். இங்கே ரிக்ரொக் ஆய்வுகளை இணைக்கும் பலருக்கு ஜஸ்டீன் அண்ணா கொடுக்கும் அறிவுரைகள் போலத்தான் யூடியூப் வீடியோக்களும். ஆனால் இயற்கை நமக்கு பகுத்தறிவை வெறும் ஒப்பனைக்கான தரவில்லை, அதை நாம் பயன்படுத்தவும் வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இங்கே, தேவாவை ஸ்டாலின் சந்திப்புக்கு சீமான் கூட்டி போன படம்… அவர் சசிகலா குடும்பத்தோடு, அதிமுகவோடு நெருக்கமாக இருந்த படங்கள் காட்டப்படுகிறன. பல முண்ணனி கட்சி நிர்வாகிகள், இடும்பாவனம் போல உண்மையிலேயே இனமான உணர்வில் திமுகவை எதிர்க்கும் தம்பிகளை எல்லாம் விட்டுவிட்டு, இவரை ஏன் சீமான் ஸ்டாலினிடம் கூட்டி போனார் என்ற கேள்வியை நாம் கேட்காவிடில் நமது பகுத்தறிவை ஷோகேசில்தான் வைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
  12. சீமா ஸ்டாலின் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் ஊழல் புரோக்கர் தேவா. நம்ம தம்பி இடும்பன் கார்த்திக் போன்றவர்களை சீமான் கழட்டி விட்டுள்ளார் போலுள்ளது.
  13. பகரவி, பவ்வி - என்ன படிப்பிதாலும், மாணவர்கள் தமக்கு பிடித்தமானதை மட்டுமே எடுப்பார்கள் - கவ்வி 🤣.
  14. விஜயகாந்த்தின் பேச்சில், அவர் நோய் வாய்ப்பட முன்னரும் கூட, இல்லாத அளவு கொள்கை விளக்கம், தெளிவு விஜையின் திருச்சி பேச்சில் இருந்தது. எம்ஜிஆர் பிரிந்த போது அவரிடம் இரு டசின் எம் எல் ஏக்கள், ஆர் எம் வீரப்பன் போன்ற சினிமாகாரர்தான் இருந்தனர். திக கூட ஆதரிக்கவில்லை. பெரியார், அண்ணா வின் பெயர். எம் ஜி ஆரின் முகம் இவைதான் அன்றைய அதிமுகவின் ஈர்ப்பு சக்திகள். கொள்கை கூடாரம் என்றால் அப்போதும் திக, திமுகதான். எம்ஜிஆர் மன்றங்களை அதிமுகவாக மாற்றியவர் ஆர் எம் வி. அவர்ரைவிட நேரடி அரசியல் அனுபவம் கூடியவர் புசி ஆனந்த். ஆகவே எம்ஜிஆரை விட கூடிய கொள்கை வெற்றிடம் உள்ளவர் விஜை என்பது சரியல்ல. மதுரை மாநாட்டு பேச்சில் இருந்த பிழைகளை விஜை இங்கே சரி செய்துள்ளார். சீமான் போன்ற வாய்-வியாபாரிகள் , திமுக அமைச்சர்கள், என பலரும் விஜைக்கு கூடும் மக்கள் திரளை, காட்டு கூட்டம், நயந்தாராவுக்கு இதை விட கூடும் என அவமரியாதை செய்கிறார்கள். இது நல்லதற்கே. கூட்டம் வோட்டாக மாறாது, மாறாது என இவர்கள் சொல்ல, சொல்ல, அந்த கூட்டம் கடுப்பாகி விஜைக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை. அதிமுகவை செங்கோட்டையன் மூலம் பாஜக விழுங்கி விட்டது என்பது தெளிவு. நாளை எடப்பாடி டெல்லி ஓடுகிறார்.இனி அமித் ஷாதான் அதிமுகவின் அறிவிக்க படாத பொது செயலாளர். ஆகவே திமுகவுக்கு எதிரான, பாஜக சாராத எதிர்கட்சியை தமிழக மக்கள் தெரிய விரும்பின் - த வெ க மட்டுமே ஒரே தெரிவு. பிரேமலதா, கார்த்தி சிதம்பரம், திருமா, அண்ணாமலை, அண்மையில் சொல்லும் விடயங்கள் தவெக ஊதி தள்ள கூடிய சக்தி இல்லை என்பதையே காட்டுகிறது. இவ்வளவு ஏன் சீமானை எல்லாம் பெயர் கூட சொல்லாமல் ஜோக்கார் போல நடத்திய ஸ்டாலினும், உதய்யும் விஜைக்கு எதிர்வினை ஆற்ற, “புதிய எதிரி” என அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பார்க்கலாம்.
  15. பீஜேபி எடுபிடி, ஊர்வன வகையறா எடப்பாடி வரலாம்… மீண்டும் வர ஆசைப்படலாம், டயர் தொழும் மிக்சர் மாமா பன்னீர் வரலாம்….மீண்டும் வர ஆசைப்படலாம், ஊழல் குடும்பத்தின் தற்போதைய சக்கரவர்த்தி ஸ்டாலின் வரலாம்…. அடுத்த யுவராஜன் உதய்ண்ணா வர ஆசைப்படலாம்…. செக்ஸ் சைக்கோ சீமான் கூட கனவு காணலாம்…. எனும் போது…… வருமானவரி துறை வீட்ட்டுக்கு போய் கிண்டியும் ஒரு உரோமத்தை கூட புடுங்க முடியாத, நடப்பில் 250 கோடி சம்பளத்தை விட்டு விட்டு வரும் விஜை முதலமைச்சர் ஆக வருவதில்லை ஒரு கேடும் இல்லை. பிகு வரலாம் என்கிறேன். வருவார் எனவில்லை.
  16. விஜை வெல்கிறாரோ இல்லையோ…. தம்பிகளை இப்படி புலம்ப விட்டதே எனக்கு போதும் 🤣. அண்ணன் இப்போ எல்லாம் திமுக வை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதுல்லை. சபரீசனிடம் பெட்டியை வாங்கி கொண்டு விஜை மீது சரமாரி தொடுக்கிறார் சின்ன கருணாநிதி. தம் பங்குங்கு தம்பிகளும் தம்மாலானதை செய்கிறார்கள்🤣. அண்ணன் வழமைபோல் கல்லாவை நிரப்பி விடுவார். தம்பிகளுக்கு வழமைபோல் தொண்டை தண்ணி நஸ்டம்🤣
  17. அதுதான் gutter language பேச (எழுத) நீங்கள் வந்தீர்களோ😂 அண்ணா, நீங்களோ, நாணோ தோற்ப்பின் - ஒதுங்குவது இல்லையே பந்தயத்தின் கோரிக்கை. ஆகவே சீமான் ஒதுங்கும் வரை கோஷா(ம்) அதிரும்🤣 மண்டியிடாத மானம் …. மானம் மண்டிதான் இடாது….ஆனால்🤣 இது ஆயிரம் காலத்து பயிர் அறுவடைக்கு தயாராகும் நேரம். அறுத்துட வேண்டியதுதான்🤣
  18. மைனர் குஞ்சு சீமான், டெல்லி உச்ச நீதிமன்றில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் செய்ய தருணம் 👇
  19. இன்னும் 7 மாசம்தான்…🤣 #பந்தயம் அதே நீதிதுறையைத்தான் டெல்லியில் பாஜக முதன்மை வக்கீலை வைத்து வளைத்து, தனது செல்வாக்கால் - பாலியல் வன்முறை, கட்டயா கருக்கலைப்பு வழக்கை, வெறும் மன்னிப்போடு முடித்து வைத்துள்ளார் சீமான். ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர். இன்றைய திமுகவின் அதிகார மையங்களில் ஒருவர், திரைமறைவு நகர்வுகளில் முதன்மை வகிபாகம் உள்ளவர். 👆சீமான் கேட்ட தொகையை கொடுக்க இயலாத அதிமுக, ஆனால் அதே தொகையை கொடுத்து ஆளை வாங்கி போட்ட திமுக. #வாடகை வாய்
  20. உங்களுக்கு நினைவிருக்கும், சபரீசன் இலண்டனில் ஊழல் செய்யதார் என்பதாக நாதமுனி ஒரு ஆதாரமற்ற கட்டுகதையை (சுஜ ஆக்கம்🤣) எழுதி அதை நிர்வாகம் தூக்கியது. அதே சபரீசனைத்தான் ஏதோ தகாத உறவு காதலியை போய் பார்ப்பதுபோல் ஒழிச்சு போய் சந்தித்துள்ளார் அண்ணன் சீமான். இதை ஜூவி கிழித்து தொங்க போட்டபின், ஒரு காலத்தில் சீமானை அண்ணா, தம்பி என ஆரத்தழுவிய சவுக்கு சங்கர் அங்கே என்ன நடந்தது என மிக விபரமாக இந்த வீடியோவில் சொல்கிறார் (சுட்டி கீழே). சீமானுக்கும், தூசண துரைமுருகனுக்கும் விஜையை பிராண்டும் கொந்திராத்தை, ஸ்டாலின் வழங்கி உள்ளாராம் (மு க முத்து இறந்த நேரம் அவரின் குடும்பத்தை பார்க்காமல், ஸ்டாலினை சீமான் பார்த்த போது இந்த டீல் ஓக்கே ஆனாதாம்). இந்த டீலின் படியேதான் சபரீசன் சீமானுக்கு பணத்தை பட்டுவாடா செய்தாராம். இந்த பேட்டியில் சவுக்கு சீமான், அவரின் கட்சி நடத்தும் உண்மை நோக்கம், ரஜீவ் காந்தி என பலதை போட்டு உடைக்கிறார். இவை எல்லாம் சவுக்கு சீமானோடு கூடி குலாவவிய காலத்துக்கு முன்பே, யாழில் தெட்ட தெளிவாக எழுதபட்ட விடயங்கள். சீமானை நம்பி மோசம் போன யாழ்கள, புலம்பெயர் தம்பிகளை நினைக்கதான் ஒரே அழுகையா வருது 🤣. ஒருசிலர் தோசை கடை என, தேத்தண்ணி கடை என எஸ் ஆகிவிட்டார்கள். ஆனால் சில பாவப்பட்ட உயிர்கள், கடைசிவரை தொண்ட தண்ணி வத்த கத்தி கொண்டு இருந்தவயள்.
  21. சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் விஜயலட்சுமி வழக்கு இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது. கைது செய்ய தடை இல்லை அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர். தவறாக பேச கூடாது எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-should-apologize-to-vijayalakshms-orders-sc-735115.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இனி வழக்கு வாபஸ்/தள்ளுபடி ஆனால் - சீமான், விஜி அண்ணியிடம் மன்னிப்பு கேட்டார் என்பதே அதன் பொருள். அப்படி கேட்காவிடில் தா நா அரசு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்பின் - விஜி அண்ணி இதுவரை சொன்னது உண்மை என்றாகிறது. சீமான் மட்டும் அல்ல, விஜி அண்ணியை கேவலமாக எழுதிய யாழ் கள ஆண் சிங்கங்களும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்க வேண்டியோரே. ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால் மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.
  22. உலகத்தில் மக்கள் எப்போதாவது போரை விரும்பி இருப்பார்களா 🤣. போரை விரும்பாதபடியால்தான் வசியால் அவுசுக்கும், கு சா அண்ணையால் ஜேர்மனிக்கும் ஓடிப்போக முடிந்தது. இதே போலத்தான் நானும். இப்படித்தான் பல ஈழத்தமிழர்களும் போரை விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் - சிங்களவன் வெல்ல முடியாத எதிரி, எனவே ஈழ விடுதலை போராட்டமே தவறு என்றல்லா ஆகி விடும் 🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.