Everything posted by goshan_che
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.
-
'குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்' - தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?
கார்திகா சாதி என்னவாம்? இல்லை ஏன் கேக்கிறன் எண்டா… குகேஷ் தெலுங்கன், கார்த்திகா தமிழச்சி என அரசியல் செய்ய வசதியாய் இருக்கும்… அதுக்குத்தான் 😂
-
கைகூ வடிவில்!
இனம் என்பது இசைந்தே இணைவது… தடி கொண்டு தட்டி வைக்க… கையிர் கொண்டு கட்டி வைக்க… அது பட்டியில் கட்டும் வகை அல்ல… தடி எடுத்தால்… தண்டலும் இல்லை… பொங்கலும் இல்லை… பானையும் இல்லை. -வரலாற்றின் பாடம்-
-
கைகூ வடிவில்!
சாதியச் செருக்கு… ஊர்ப்பெருமை… ஆசாரவாதம்… ஆண்-இன வாதம்… பிரதேசவாத பித்து… சுயநலனே கெத்து… என்று களவை போற்றும் கபடம்… இத்தனையும் குரோமசோமில் குடிகொண்ட இனத்தின் பழைய ஏற்பாடுகளை பஸ்பமாக்குவதால்… நன்றே…நன்றே… நையாண்டி நன்றே. -புதிய ஏற்பாடு-
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மீண்டும் ஒரு பீப்பாய் கழிவு ஆயிலுக்குள் தொபுக்கடீர் என விழுந்து விட்டார் மேற்படியார் 😂 இமோசனல் என சொன்னது நகைச்சுவையாக வசி. நீங்கள் இதன் மறுபக்கத்கை பார்கிறீர்கள் என்பதும் - இவர்கள் மோசடியாக இல்லாமல் பிழையாக நடந்து கொண்டதன் பலனே இது என சிந்திக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் நீங்கள் you are cutting them a lot of slack என நினைக்கிறேன். உலக நாடுகள் எங்கெனும் வியாபாரங்கள், பெரு வியாபாரங்கள் திவாலாவது வழமை. ஆனால் நீங்களே சொன்னது போல அதை சரியான முறையில் செய்தால் வேலையாட்கள் உட்பட vulnerable ஆக உள்ளோரை முடிந்தளவு இதன் தீய விளைவில் இருந்து காக்கலாம். எரிந்த வீட்டில் பிடுங்குவது இலாபம் என நடப்பது பின் கம்பி நீட்டுவது - சுயநலத்தின் உச்சம்.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
விகடனுக்கும், நக்கீரனுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும். சும்மா தமாஷ் பண்ணுகிறீர்கள். பிபிசிக்கும், RT க்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. அல்லது யாழுக்கும், அதிரடி/தேனி போன்றவற்றிற்கும் இருந்த வேறுபாடு என்றும் சொல்லலாம். எல்லாமுமே அஜெண்டாவுடன் இயங்கும் ஊடகம்தான். ஆனால் பட்டவர்தனமாக பிரச்சாராம் செய்யும் ஊடகங்கள் ஒரு தனி ரகம். அதில் நக்கீரன் முதல் இடம். கோவாலு ஜெ ஆளை தூக்கி உள்ளே வைத்தது முதல் எப்படி ஊடகம் நடத்துகிறார் என்பதை வாச்கர் அறிவார்கள். விஜை கோவாலு மீது வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை. ஏன் எனில் இதை ஒரு குற்றவியல் வழக்ககாக சிபிஐ விசாரிக்கிறது. அப்படி திரைப்படத்துக்காகத்தான் வீடியோ எடுக்கப்பட்டது என தன்னிடம் உள்ள ஆதாரத்தை சிபிஐ அல்லது த நா அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் கோவாலு கொடுத்தாலே போதும். விடயம் உண்மை எனில் விஜையை களி திங்க வைக்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இதில் உள்குத்து ஏதும் இல்லையே😂
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உங்கள் மனநிலை புரிகிறது. ஜஸ்டின் அண்ணா அடிக்கடி சொல்லும் post truth world இன் கஸ்டங்களில் இதுவும் ஒன்று. சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை புரிதல் இது ஒரு explosive mix. இப்படி இருப்பவர்கள் அமெரிக்காவையே ஒரு குழப்பு குழப்பி, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். யாழ் எம்மாத்திரம். “எதை நம்புவது என்றே தெரியவில்லை” என்ற மனநிலைக்கு வாசகரை கொண்டு வருவதே இவர்களின் வெற்றியின் முதல் படி. இது கிட்டதட்ட தத்துவவியலில் வரும் fallacy களில் ஒன்றான false equivalency போன்றது. தரவுகளையும், இவர்கள் சொல்லும் கற்பனைகளையும் சமன் என வாசகரை குழப்பி விட்டால்…. அடுத்து அதே வாசகரை தமது கற்பனைகளை நம்ப வைப்பது இலகுவாகிவிடும். Anti vaxers எனப்படும் வக்சீன் எதிர்பாளர் தொட்டு, சீமான், டிரம்ப் என இந்த கஞ்சா கப்ஸா கதையாளர்களின் லிஸ்ட் மிக நீண்டது. யாழும் விதிவிலக்கல்ல.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எனக்கென்னமோ…அவர்களை விட நீங்கள் இதில் இமோசனலாக இருப்பது போல் படுகிறது😂. நீங்கள் சொல்லும் ஆள் மனமுடைந்து போயிருக்கலாம். அவர் ஒரு நல்ல சீவன் என நினைக்கிறேன். அநேகமாக அவர் தன் தொழிலாளரை முடிந்தளவு நடுத்தெருவில் விடாது தடுக்க முனைந்திருப்பார் என ஊகிக்கிறேன். திரும்பி வந்து கடனை அடைத்தால் சந்தோசமே. முதலில் நடுத்தெருவில் நிற்கும் தொழிலாளர் சம்பளபாக்கியை அடைக்கட்டும். இருவரும் தலைமறைவு என்பது தரவு. அவர்களை வியாபாரத்தை பொறுப்பேற்று கொண்டோராலே தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் யாழில் டெலிகிராபின் தலையங்கத்தை பார்த்து கருத்து எழுதுபவர்களின் எழுத்தை நம்பினால் யாரும் காப்பாற்ற முடியாது. என்னை பொறுத்தவரை எப்போ இவர்கள் இருக்கும் வரை இருந்து டிவிடெண்டை சுருட்டி கொண்டு, தெரிந்தே வேலையாட்களை நட்டாற்றில் விட்டு சென்றனரோ அன்றே இவர்கள் குற்றவாளிகள்தான். சட்டம் கூட இரெண்டாம் பட்சமே.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நீங்கள் 2000 ஆண்டில் ஒரு பெற்றோல் செட்டுடன் ஆரம்பித்து, பின்னர் ஒரு கோலிங்கார்ட்ட நிறுவனத்தை நடத்தி, அதை தகுந்த சமயத்தில் விற்று வெளியேறி, சில நூறு பெற்றோல் நிலையங்களை நாடெங்கும் உள்ள, இப்போதும் இலாபகரமாக இயங்கும் வலையமைப்பை உருவாக்கிய, இரெண்டு Kent University அக்கவுண்டன்சி கிரஜுவேற்சை, ஏதோ கம்பெனி நடத்துவது எப்படி என தெரியாத பச்சைபுள்ளைகள் என்பது போல எழுதுகிறீர்கள். நீங்கள் மேலே சொன்ன விளக்கங்கள் எல்லாம் உங்களை, என்னை இட இந்த தம்பதிக்கு தெரியும். கம்பனி லாவின் தலைசிறந்த வக்கீல்கள் ஆலோசனையும் கிடைத்திருக்கும். ஆனாலும் இப்படி நடந்து கொண்டு, தலைமறைவாகி உள்ளார்கள் எண்டால் …கடைசி சில வருடங்களிலாவது இவர்கள் நோக்கம் வேறாக இருந்துள்ளது என்பதே என் கருத்து.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இங்கு வியாபாரத்தின் feasibility ஐ பொறுத்து 95% வரை கொடுப்பார்கள். அதேபோல் சில தமிழ் “ஏற்பாட்டாளர்கள்” மூலம் வங்கி அதிகாரிகளை அணுகினால், 80 ரூபா பெறுமதியான வியாபாரத்தை 110 ரூபாய் பெறுமதி என மிகை மதிப்பீடு செய்து, உங்களுக்கு 90 ரூபாய் வங்கி கடனாக வாங்கி தருவார்கள். இதில் நீங்கள் ஏற்பாட்டாளருக்கு ஒரு % வெட்ட வேணும். இது சிறு வியாபாரங்களுக்கு. பல தொழில் வாய்புக்களை இழக்கும் அபாயம் உள்ள பெரிய தொழில்களை 1£ க்கு கூட விற்றுள்ளார்கள், அதேபோல் அரசே வங்கி கடன்களை உத்தரவாதம் செய்வதும் உண்டு, அண்மையில் ஜகுவார் லேன்றோவருக்கு இப்படி சலுகை கொடுத்தார்கள். அதேபோல் வியாபாரத்தை 100% ஏனையோரின் முதலீடு+வங்கி கடனில் வாங்குவது இங்கே சாதாரணம். ஆகவே இப்படித்தான் நடந்தது என தெரியாமல் அந்த பெரியதொகையின் 20% ஆரணி, சஞ்சீவ் சொந்த காசில் போட்டார்கள் என்பது வெறும் ஊகம் என்பதே நான் சொல்வது.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
நக்கீரன் கோவாலு சொன்னா அது உண்மை என்றாகி விடுமா? பார்ப்போம்… அந்த இடத்தில் திரைப்பட டிஜிட்டல் கமராவாவது இருந்ததா? ஜனநாயகன் என்ன ஐபோனிலா சூட் பண்ணுகிறார்கள்? தலைவர் இறந்தார் என்ற செய்தியை தலைவரே படிப்பது போல 1989 லேயே போட்டோஷாப் வரமுன்பே போட்டோஷாப் செய்த பிதாமகன் கோவாலு. அத்தோடு நக்கீரன் ஜெ காலத்தின் பின் என்ன அஜெண்டாவோடு எழுதுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. சிபிஐ விசாரிக்கிறது, தனிநபர் கமிசன் உள்ளது. உண்மை என்றால் வெளி வரும்தானே. உண்மை வரட்டும்னு காத்திருப்போம்😂
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
பிஸ்கோத்து ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து தலைவர் படத்தை போட்டால் நனைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து மாவீரர் வீரத்தை மெச்சினால் உடைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து அழகான கவிதை எனும் தேநீரில் அமிழ்ந்து போவான் தமிழ்நாட்டில் இப்போ பிஸ்கோத்து யாவாரிகள் பெரும் கோடீஸ்வரர்கள். ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து.
-
தவெக உட்கட்சி மோதல்
ஒருபக்கம்தானே சொல்லி இருக்கிறியள் அண்ணா? இன்னொரு பக்கத்தால் திமுக ஆரை வைத்து விஜையை ஒரு பிடி பிடிக்கிறது என்று சொல்ல வேண்டாமா😂
-
கைகூ வடிவில்!
நானும் போராட வருகிறேன் எனவந்தவனை… நாய் போல நடுத்தெருவில் கொன்றதை… நல்லது என நயப்போரைக்கூட… நையப்புடைக்க முடியாத கோழை நான்… நான் ஆதாலால் தேர்ந்தெடுத்த ஆயுதம்… நையாண்டி. -என் குரல்-
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
யாழில் வைரமுத்துக்கு பலத்த ஆதரவு கோஸ்டிகள் உண்டு. அதில் அநேகர் சீமானின் தம்பிகள். சின்மயி சர்ச்சை நேரம் என்னையும் இன்னும் சிலரையும் போட்டு பிறாண்டி விட்டார்கள். இப்ப பழசெல்லாம் மறந்து போச்சோ😂
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உண்மைதான் ஆனானப்பட்ட ஜெப்ரி இப்ஸ்டீனையே சிறையில் வைத்து போட்டு தள்ளவில்லையா? ஆகவே இதில் வேறும் பலர் இருக்கலாம், (இல்லாதும் இருக்கலாம்), ஆனால் அப்படியே இருந்தாலும் அது சஞ்சீவ்+ஆரணி குற்றமற்றவர்கள் என்பதை காட்டாது. இவர்களின் கூட்டு களவாணிகள் தப்பி விட்டார்கள் என்பதை மட்டுமே காட்டும்.
-
தவெக உட்கட்சி மோதல்
இப்படி பிஸ்கோத்து நபர்கள் கருத்தை பகிர்ந்து எனது நேரத்தை வீணாக்கவேண்டாம்😂. சபரீசனிடம் பெட்டி வாங்கவில்லை என்றால் சீமான் விகடன் மீது மானநஸ்ட வழக்கு போடட்டும். போடமாட்டார். விகடன் கோர்ட்டில் ஆதாரத்தை கொடுதால் …திமுக, சீமான் இருவர் பெயரும் நாறிவிடும். சீமான் வழக்கு போடும் மட்டும் விகடன் செய்தி உண்மை என்றே கருதப்படும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஊடகங்களை தாமே தரவாக கொடுத்து விட்டு - அதில் கூட நான் சொல்லியவைதான் மீள உறுதிபடுத்தபடுகிறது என நிறுவியதும் - ஊடகங்கள் தம் பார்வையையும் சேர்த்தே எழுதுகிறன என்பதை என்னவென்பது😂 இந்த விடயத்தில் யாராலும் மறுக்க முடியாத தரவுகள் பின்வருமாறு: சஞ்சீவும் மனைவியும் தலைமறைவு சஞ்சீவ் மீது insolvency service விசாரணை ஆரம்பித்து உள்ளது நிறுவனத்தை பொறுப்பேற்று கொண்ட administrators இவர் மீது deceit, misrepresentation (ஏமாற்றுதல், வேணும் எண்டே தவறான தகவல் வழங்கல்) ஆகியவற்றுக்காக வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் தொடர்சியாக கோர்ட்டு 150 மில்லியன் சொத்தை முடக்கி உள்ளது. கருத்தாளர் தம் மனம் போன போக்கில், இன்னும் பலர் இதற்கு பின்னால் இருக்கலாம், இன்னும் இது போன்ற கதைகளை தம் மனதில் உருவாகும் சிந்தனை அடிப்படையில் பகிரலாம். ஆனால் அவை தரவுகள் அல்ல. மேலே உள்ளவை மட்டுமே தரவுகள். அவை மட்டுமே இந்த திரியில் பகிரப்பட்டன. பிகு சஞ்சீவ் ஏன் வெளியே வந்தார். 50,000 க்கு மேலான எந்த சொத்தையும் விற்க முடியாது என்ற கோர்ட் ஓடர் smoked him out. கட்டாயம் ஏதோ ஒரு நல்ல silk ஐ சட்டத்தரணியாக அமர்த்துவார் சஞ்சீவ். ஆனால் அடிப்பை தரவுகளை குழப்பி அடித்து அநீதியை நிலைநாட்ச இது இந்தியா அல்ல. பார்க்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இன்னொரு மிக முக்கியமான விடயம். தற்போது மேலே சொன்ன வழக்குக்கு மேலதிகமாக, இவர்கள் இருவரின் நடத்தையையும் Insolvency Service உம் விசாரிக்கிறது. இதில் குற்றம் காணப்பட்டால் disqualification from directorship போன்ற பல தண்டனைகள் இருவருக்கும் கிடைக்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஏலவே நட்டத்தில் ஓடும் கம்பெனியை வாங்கி இலாபகரமாக மாற்ற முயன்று இருக்கலாம். அப்போது நல்லெண்ணத்தில்தான் இறங்கி இருக்கலாம். 169 மில்லியனின் 20% ஐ இவர்கள் போட்டார்கள் என்பது சாதாரண வியாபார கடன் போல கருதி சொல்கிறீர்கள், நான் அறிந்தவரை சில பெரும் வியாபார கடன்கள் 110% வங்கி கொடுப்பதும் உண்டு. ஆகவே இதில் இவர்கள் தங்கள் சொந்த பணத்தை முதலிட்டார்கள் என்பது வெறும் ஊகமே. அப்படி எந்த ஆதாரமும் நான் காணவில்லை. அப்படியே ஆகினும் - போட்டகாசில் கொஞ்சத்தையாவது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் deceit, misrepresentation செய்திருக்கலாம் அல்லவா? 5. நீங்கள் சொல்வதுபடி பார்த்தாலும் கூட பேராசையால் அகல கால் வைத்து, ஆப்பை செருகி கொண்டு, பின் அதில் இருந்து தப்ப, தப்பு மேல் தப்பு செய்துள்ளார்கள் என்றல்லவா ஆகிறது?
-
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
என்ன காவடி சுருதி மாறுது 😂. இராமநாதன், செல்வா வுக்கே தீத்தினவனுக சிங்கள இனவாதிகள்… உங்களை இப்படி தனியா புலம்பவிடுவார்கள் என்பது அப்பவே தெரியும். ஆனால் இவ்வளவு கெதியா நடக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஆனால் இது கட்டாயம் கிரிமினல் குற்றசாட்டில் முடியும் என நான் கூறவில்லை. சிவில் வழக்கை விட கிரிமினல் வழக்கை நிறுவுவது கஸ்டம். இதை அமெரிக்காவின் ஓஜே சிம்சன் விடயத்திலும் பார்த்தோம். ஆனால் சஞ்சீவ் deceit, misrepresentation பண்ணி உள்ளார் என ஏலவே administrators சிவில் வழக்கு போட்டுள்ளார்கள். Deceit = ஏமாற்றுதல் Misrepresentation = பொய்யான தகவல் வழங்கல் (உதாரணம் 15,000 சம்பளம் எடுத்து கொண்டு, மோர்ட்கேஜ் எடுக்கவென, பொய் pay slip 65,000 ena கொடுத்து வங்கிக்கு பிழையான தகவல் வழங்குவது, 2008 வரை இது நடந்தது, இப்போ கஸ்டம்). Deceit, misrepresentation இரெண்டையிம் எங்கள் ஊர் தமிழில் களவு எண்டுதான் சொல்வார்கள். இங்கே எழுதும் சிலரின் ஊரில் இவையிரண்டுக்கும் பெயர் தர்மகாரியம் ஆக்கும் 😂.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
டெலிகிராப் paywall க்கு பின்னால் இருக்கும் கட்டுரையின் தலைப்பையும் படத்தையும் மட்டும் பார்த்து கருத்து எழுதாமல், முடிந்தால் முழு கட்டுரையையும் இணக்கவும். இந்த கட்டுரையில் சஞ்சீவ் கூறியதாக Winston Soosaipillai, who ran Lindsey oil refinery owner Prax, said he cannot provide details of the company’s £1.5bn debt pile, nor does he know how much money the company still has after its collapse earlier this year. கம்பெனியில் இப்போ இருக்கும் பணம் எவ்வளவு என்பது தனக்கு தெரியாதாம். அதே போல் 1.5 பில்லியன் கடன் பற்றிய தகவல் எதுவும் தெரியாதாம் 😂. கம்பெனியின் CFO வை சாட்டி உள்ளாராம். இவரே சேர்மன், டைரக்டர், மனைவியும் இவரும் ஓனர் ஆனால் இப்படி சொல்கிறார் என எழுதியுள்ளது டெலிகிராப். அத்தோடு இவர் கொடுத்த சத்திய வாக்குமூலத்தை, “so called” statement of truth என விபரித்துள்ள டெலிகிராப் - இவர் மீது அட்மினிஸ்டெர்ஸ் - தவறான தகவல்களை வழங்கியது, ஏமாற்றியது ஆகியவற்றுக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் கூறுகிறது. The administrators of Prax have since issued a lawsuit against Mr Soosaipillai – in which they have accused him of deceit and misrepresentation. இது நான் இதுவரை எழுதியவற்றை மேலும் உறுதி செய்கிறது. இந்த டெலிகிராப் கட்டுரை புதியதும் அல்ல. இதன் நகலை யாஹூ 28/09/25 அன்று வெளியிட்டுள்ளது. நான் இந்த திரியை ஆரம்பித்தது 13/10/25. முன்னர் ஒருமுறை UK vetting பற்றி அரைகுறை புரிதலோடு எழுதியது போலவே இப்போ Serious Fraud Office பற்றியும். Intelligence gathering stage இல் இருக்கும் போது அவர்கள் மூச்சு கூட விடமாட்டார்கள்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23] 1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23] பிகு ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம். போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?