goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
Everything posted by goshan_che
-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சரி நெடுக கெஞ்சுவதால் ஒரு சிரிப்புக்குறி இலவசம். இதுதான் ஆக கூடிய engagement 🤣
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இந்த விமானங்கள் உண்மையில் இழக்கப்பட்டிருப்பின் ரஸ்யாவின் குரூஸ் ஏவுகணை ஏவும் வல்லமை கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்கிறனர். நான் முன்பே பலதடவை சொல்லி இருக்கிறேன் உக்ரேனின் இராணுவ நகர்வுகள் பல புலிகளை ஒத்ததாக இருப்பதாக எனக்கு படுகிறது என. இது அப்படியே கட்டுநாயக்க தாக்குதலை நினைவுக்கு கொண்டு வந்தது. BBC NewsVideo appears to show Ukraine drone attack in RussiaFootage shows attack drones homing in on their targets as they sit on the tarmac.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இதுவரை ரஸ்யாவினுள் உக்ரேன் மேற்கொண்ட தாக்குதல்களில் இருந்து வேறுபட்டதும், வீரியம் கூடியதுமான தாக்குதல் ஒன்றை உக்ரேன் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் மூலோபாய விமானங்கள் என அழைக்கப்படும் நீண்ட தூரம் பறக்க கூடிய, அதிக எடையான வெடிபொருட்களை காவக்கூடிய ரஸ்யாவின் 41 விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக/அழிக்கப்பட்டதாக உக்ரேன் கூறுகிறது. BBC NewsUkraine drone attack hits more than 40 Russian bomber pla...A major operation has been launched by Ukraine using drones to destroy Russian bomber planes, according to the Ukrainian security service.பார ஊர்திகளின் கூரையில் டிரோன்கள் பதுக்கி வைக்கப்பட்டு - தாக்குதலில் ஈடுபடுத்தபட்டனவாம். தாக்குதல் முடிவில் பார ஊர்திகள் தானியங்கியாக அழிந்தனவாம்.- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒட்டு மொத்தகளமே யாரை பார்த்து தப்பு கொட்டி சிரிக்கிறது எனபதை வாசகர் அறிவர் 🤣. நீங்கள் தமிழ் என வேறு ஏதோ ஒரு புதிய திராவிட மொழியில் எழுதுவதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். Do a bit of retrospection and have a look at your engagement rate with other contributors in this forum. No one really engages with you. You just write para after para of gibberish and people just ignore whatever you write and move on to the next comment. Justin Anna and I tried and failed to make sense of your writings and gave up. Then Raso Anna and Eppo did the same. Like I said before, you are, without a doubt, dwelling in your own little imaginary conspiracy-theory-fueled world where left is right and right is left. This detachment from reality and the way you butcher the Tamil language will ensure that you continue to do ஆளில்லாத கடையில் டீ ஆத்துறது here, with zero engagement from fellow contributors, unless you change your ways which I doubt you would. முதலில் தமிழகர்களுக்கு புரியும் வகையில் தமிழில் எழுத கற்று கொள்ளுங்கள் - கருத்து கறுமாந்திரம் எல்லாம் பிறகு எழுதலாம்🤣.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கூகிள் டிரான்சிலேட்டர் நவ் 👇 https://youtube.com/shorts/gHgpCYDUF1E?si=9eoohbiee8-ywjFD- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஸ்டார்ட் மியூசிக்🤣- தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
சுட்டியை பகிரமுடியுமா?- பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
இது உண்மைதான். வன்னியர் சங்க காலத்து உறுப்பினர், பாமகவின் முதலாவது ஊராட்சி சேர்மன் - ஜி கே மணியை மேடையில் வைத்து, சட்டசபைக்கு நேரம் ஆனா போங்களேன், அங்க போய் என்ன பேசி கிழிக்கவா போறீங்க எண்ட ரீதியில் அவமானப்படுத்தியவர் சின்ன மாங்கா.- பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
மாங்காய் சின்னத்தை பாதியாக அரிந்து ஐயா ஒரு பாதி மாங்காய் சின்னத்திலும், சின்னைய்யா இன்னொரு பாதி மாங்காய் சின்னதிலும் போட்டியிடலாம்🤣. இப்போ நான் முன்பு சொன்ன 2 விடயம் புரிகிறதா ? வாரிசு அரசியல் லேசுபட்ட விடயம் அல்ல. பால்தாக்ரே, ராஜீவ் காந்தி. ராமதாஸ் என பல ஜாம்பவான்கள் சறுக்கிய இடம் இது. பிஜேபி கூட்டணி கட்சிகளையே உடைத்து விழுங்கும். நேற்று - சிவசேனா, அகாலிதளம், பிஜு ஜனதா தள், இன்று - பாமக. நாளை - அதிமுக.- ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
ஆசியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே அண்டை நாடுகளில் தீவிர, பயங்கர, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்பொதும் முதல் 5க்குள் வரும். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்கள், பின்னர் தாலிபான். இந்தியாவில் காலிஸ்தானிகள், கஸ்மீரிகள். இந்தியா - இலங்கை, வங்கதேசம், பாலூச்சிஸ்தான்.- ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
ஏன் தேஜஸ் என ஒரு பேரிச்சம்பழத்துக்கு போடும் விமானத்தை செய்தவை எல்லோ🤣. அண்மைய போரில் அதை மேலே எழுப்பகூடவில்லை….அந்தளவுதான் மேட் இன் இந்தியாவின் சீத்துவம். அமெரிக்காவின் F 35 வை வேற வாங்க ஆசையாம் 🤣. ரபேல் போல அதன் மானத்தைதையும் கப்பல் ஏற்றி விடுவார்கள் சப்பாத்தி ஸ்கூவாட்றன். அமரிக்கா விழித்து கொள்ள வேண்டும் 🤣. 👆தாம் விமானங்களை இழந்ததை முதன்முதலாக ஒத்துகொள்ளும் இந்தியாவின் படைக்களின் பிரதானி.- ரப் பாடகர் வேடன்
மாறாக ஊரை சொன்னீர்களாயின்…வடக்கோ தெற்கோ, எத்தனையாம் குறிச்சி, கோவிலுக்கு எந்த பக்கம் என கேள்விகள் தொடரும். நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும், ஏனக்கு கல்யாணம் பேச போறியளோ எண்டு கேட்டால் இன்னொரு லோடு அசடு வழியும். ஆனாலும் விடமாட்டார்கள்🤣. இவர்களோடு விளையாட எனவே நான் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு ஊரை சொல்லி வைப்பேன் 🤣.- ரப் பாடகர் வேடன்
இதன் அர்த்தம் உங்கள் அப்பா விவசாயியா? என்பதா அல்லது உங்கள் அப்பாவின் ஊர் என்ன என்பதா? பிகு பல யாழ்பாணத்தவர் வெளி நாடு ஒன்றில் இன்னொரு ஈழத்தமிழரை கண்டு பேசி முதல் ஐந்து கேள்விக்குள் நிச்சயம் - “யாழ்பாணத்தில் நீங்கள் எவடம்” எண்ட கேள்வி இருக்கும்🤣. ஏன் இலங்கையில் யாழ்பாணம் மட்டுமா தமிழ் ஊர் நான் மட்டகளப்பு/வன்னி/ மன்னார் என சொல்லிப்பாருங்கள்…. வழியும் அரை லோடு அசடை காண கண்கோடி வேண்டும்🤣.- “நீ கும்பிடுவது சிலையின் தலையையா? காலையா? - தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க மனோ எம்.பி. வலியுறுத்தல்
இது இந்து கோவில் இல்லையா? இங்கே வேலன் சாமி எழுந்தருள மாட்டாரா?- குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
எமக்கு புலிகள் எப்படியோ… அப்படித்தான் சிங்களவருக்கு ஆமி… வடமாகாண முதலமைச்சர் மாவீரர் நினைவு நிகழ்வில் “மாவீரர்” என்ற பதத்தை தவிர்த்து “போராளிகள்” என அழைத்தால் எம் எதிர் வினை எப்படி இருக்கும். எனக்கு வந்தா தக்காளி சோஸ், உனக்கு வந்தா இரத்தம் என்பதே இரு பகுதியினரதும் நிலைப்பாடு. உண்மையில் அனுர செய்தது ஏமாற்று வேலை. ஆமியை ரணவிரு என அழைக்க வேண்டாம் என எந்த தமிழரும் கேட்டோமா? சிங்கள இன மேலாண்மையை பேண, உங்களது என நீங்கள் கோரும் நிலத்தினை உடையாது பேண உயிரை கொடுத்த அவர்கள் உங்களுக்கு எப்போதும் மேன்மக்களே. நாம் கேட்பது எமது அரசியல் உரிமையை. அதை தராமால் பேய்காட்ட இப்படி ஒரு கலக நாடகத்தை அனுரா நடத்துகிறார்.- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது கூவாத சேவல் போட்ட முட்டையாய் இருக்கும்😂. மூளையால் யோசிக்க தவறுபவருக்கு மீண்டும் ஒரு தரம். கோவிலில் இருந்து எத்தனை தூரத்தினுள் மச்சம் விற்கலாம் என நிர்ணயிக்க வேண்டும் என நான் ஒரு போதும் எழுதவில்லை. கோவில் வளாகம் என கொள்ளப்படும் வெளிவீதி வரைக்குமே கோவில் நியமங்கள் செல்லும். செல்ல வேண்டும். அதற்கு அப்பால் அல்ல என்பதே என் நிலைப்பாடு. அதற்கு அப்பால் அது பொது வெளி. நல்லூரானாக இருந்தாலும், எந்த அப்பாடக்கராக இருந்தாலும். இல்லை நல்லூருக்கு தனி வழக்கம் வேண்டும் என வாதாடுவது, உண்மைக்கும், இதுகாறும் இருந்த நடைமுறைக்கு புறம்பானது, ஏனைய எமது கோவில்களை நாமே தரம் தாழ்த்துவது போன்றது, புனித பூமி என சங்கிகள், பெளத்த பிக்குகள் ஆடும் மிலேச்ச ஆட்டம் போன்றது.- பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்! Yogeshwaran MoorthiUpdated: Thursday, May 29, 2025, 12:40 [IST] 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி செளமியா அன்புமணி மட்டும் கடுமையான சவால் அளித்து, கடைசியில் தோல்வியை அடைந்தார். ராமதாஸ் பேட்டி இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியே எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தகப்பனிடம் தோற்பது மானக்கேடு அல்ல. அதிமுக கூட்டணி அன்புமணி கூசாமல் பொய் பேசுவார்.. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமியுடன் பேசுமாறும் அறிவுறுத்தினேன். அதன்பின் அவரும் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார். கதறிய அன்புமணி ஆனால் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், குறைந்தது 3 தொகுதிகளில் வென்றிருப்போம். அவர்களும் 6 முதல் 7 தொகுதிகளில் வென்றிருப்பார்கள். அதிமுக - பாமக இயல்பான கூட்டணி. ஆனால் எனது ஒரு காலினை அன்புமணி பிடித்து கொண்டார். தற்கொலை மிரட்டல் இன்னொரு காலினை அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி பிடித்து கொண்டு கதறினார். எதற்கு அழுதார்கள் என்றால், பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், அன்புமணி வாயில் இருந்து, இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும். பாரத் மாதா கி ஜே பாஜக கூட்டணிக்காக ஏற்பாடுகளை செளமியா செய்துவிட்டார். அண்ணாமலையுடன் அவர்களே பேசிவிட்டார்கள். அடுத்த நாள் காலையிலேயே பாரத் மாதா கி ஜே என்று ஒரு கோஷம் கேட்கிறது. காலையிலேயே அண்ணாமலையும் வந்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே இது நடந்தது. இப்படிதான் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்தார். https://tamil.oneindia.com/news/villupuram/pmk-founder-ramadoss-alleges-anbumani-s-suicide-threat-to-push-for-bjp-alliance-708047.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel பிகு அரசவை புலவர் பாலபத்ர ஓணாண்டி க்கு யாராவது @ போட்டு விடுங்கப்பா. பெரிய மாங்கா- சின்ன மாங்கா மோதலுக்கு பிஜேபி காரணம் அல்ல, அது குடும்ப உட்பூசல், நான் “பிஜேபி-நோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறேன்” என சொன்னவர்.- சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்
வாழ்த்துக்கள் அஸ்வின். சுவிஸ் உலகின் முன்ணணி கால்பந்தாட்ட நாடு, அங்கே சோபிப்பது சாதாரண விடயமல்ல. விரைவில் தேசிய அணிக்கு விளையாட வாழ்த்துக்கள்.- 'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
மன்னிகவும் proto என்பதை மேலே Porto என தட்டச்சி விட்டேன்🤣. Auto correct போத்துகீசன் போல கிடக்கு🤣- ரப் பாடகர் வேடன்
கோஷான் சொல்றான்; மீம் பாய்ஸ் செய்றான்🤣- தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
https://ta.m.wikipedia.org/wiki/திசமகாராமை_தமிழ்_பிராமிச்_சாசனம் https://www.tamilguardian.com/content/tamil-brahmi-inscription-found-tissamaharama https://en.m.wikipedia.org/wiki/Tissamaharama_inscription_No._53- ரப் பாடகர் வேடன்
நிச்சயமாக. இலங்கையில் ஒருவர் திடிரெனெ பிரபலாமாகி - இந்தியாவில் அவருக்கு பல வாய்புகள் மேடைகள் எல்லாம் கொடுக்பப்பட்டன. திடிரென நரி ஏன் அம்மணமாக ஓடுகிறது என கிண்டினால்…. அவர் உமாகரன இராசையாவின் தம்பியாம். அண்ணம் கவிதை சொல்கிறேன் என வந்து, பின் காவி உடை போட்டு தான் நாக்பூர் எனபதை வெளிகாட்டினார். தம்பி இசையோடு வருகிறார் என நினைத்து கொண்டேன். ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.- 'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
நாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்…. தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்…. இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்…. காலம் விசித்திரமானது. இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும். எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது. நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள். மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார். அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣. கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர். 12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣. பிகு முன்பே எழுதியதுதான். தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின், திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும். இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம். இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள். அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை. இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம். என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்) X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்). இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.- இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம்
ஆங்கிலத்தில் வெள்ளை யானை என்பார்கள். ஒரு விடயத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருக்கும் போது இப்படி சொல்வார்கள். மத்தள விமானநிலையம் சீனா கட்டிய வெள்ளையானை. இது இந்தியா கட்டிய வெள்ளையானை. மேனாடுகளில் p3 model அல்லது public private partnership PPP என்பார்கள். அரச அமைப்பும், தனியாரும் பரஸ்பர நன்மை அடையும் வகையில் ஒரு விடயத்தை நிர்வகிப்பது. மாநகரசபை இதை ஒரு கலியாணமண்டபமாக/கச்சேரி சபாவாக/ இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு எவரேனும் தனியார் நிறுவனத்துடன் போகலாம். அப்படியும் மாநகரசபையால் பராமரிக்க முடியாதளவு எண்டால் அதை பல்கலைகழகத்துக்கு கொடுக்கலாமே. - ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.