Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தனியரசு. நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 1:23 [IST] தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்... மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார். விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது. சீமான் தவறானவர் என்றாலும் அவர் சொல்லும் கொள்கை சரியானது. அதை கேட்க கூடும் கூட்டமும் அப்படியே. ஆனால் விஜையை பார்க்க வருவோர் அனைத்து தரப்பினரும். ஒரு திருவிழா போல நடந்தது. ஆகவே அதே நடத்தையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் வெளியான இடங்களை விஜை அடம் பிடித்து கேட்டிருக்கலாம். சில நாட்கள் முன்பு சவுக்கோ அல்லது இன்னொரு யூடியுபரோ - இது ஆபத்தில் முடியலாம் அதை திமுக விரும்பும் என சொன்னார்கள். அப்படியே நடந்துள்ளது. இதை விஜை உணர்ந்து தவிர்திருக்க வேண்டும்.
  2. சீமானின் முதலாவது அறிக்கை - அரசியல் தவிர்த்து வெளிவந்துள்ளது. உண்மையில் சீமானின் ஆதாரவாளர்களை விட சீமான் நாகரீகமாக அறிக்கை விட்டுள்ளார். கரூரில் மக்களின் மரண ஓலம் நெச்சை பிளக்கிறது! நாதகவினர் ரத்த தானம் செய்யுங்கள்!” - சீமான் அறிக்கை Halley KarthikPublished: Sunday, September 28, 2025, 1:40 [IST] இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன். உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்! தொடர்பு எண்: +917667412345" என்று தெரிவித்திருக்கிறார்.
  3. எது ஒழுக்கம்? தலைவரின் ஆளுரய படத்தின் முன் வைத்து, ஒரு சிறுமியை நாதக நிர்வாகி வன்கொடுமை செய்த வீடியோ உலவுகிறதே அதன் பி. அவருடன் சீமான் போட்டோவும் எடுத்தாரே அந்த ஒழுக்கமா? அல்லது அடிக்கடி செய்யிகளில் அடிபடும் நா தக வினரின் “ஒழுக்கமா”? இங்கே ஒழுக்க கேட்டால் யாரும் சாகவில்லை. கூட்ட நெரிசல். ஆகவே சீமானை இது உயர்தியது என்பது - இதிலாவது நாதகவுக்கு ஒரு ஆதாயம் கிடைக்காதா என்ற அங்கலாய்பே.
  4. அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், "விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது! ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 👆 அதிமுக ராஜசபா எம்பி இன்பதுரை. பாஜக கூட்டணியில் இருந்து ஆதரவு சமிக்ஞை? இதை வைத்து விஜைய வழிக்கு கொண்டுவர பாஜக/அமித் ஷா முயல கூடும். இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்துத்தான், முத்துகுமாரை கொலை செய்துவிட்டு, றோ சீமானை கட்டுப்பாட்டில் எடுத்தது.
  5. அது மக்கள் அல்ல, திருச்சி விமான நிலையதில் இருந்த பத்திரிகையாளர்கள். ஆரம்பம் முதலே பற்றிகையாளர் கேள்விக்கு விஜை பதில் சொல்வதில்லை. இன்று நிலமை வேறு என உணர்ந்து பதில் சொல்லி இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு நடிகன் - இவ்வளவுதான் என்ற பேச்சு எழும் என தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே மக்கள் கொலையை செய்து விட்டு அழுபவனை நம்புவார்கள். கொலையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவனை இரக்கம் அற்றவன் என திட்டுவார்கள். ஆனால் இதை கூட விளங்கி கொள்ளவில்லை எனில் - விஜை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதே உண்மை. இப்படி ஒரு கூட்டம் சீமானுக்கு கனவிலும் கூடாது. ஆயிரம் பேரை ஒரு சந்தில வைத்து பேசுவதற்கும் ஒரு இலட்சம் பேரை அதே சந்தில் வைத்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.
  6. மேலே சொல்லி உள்ளேன் மாசி மக நீராடலுக்கு ஜெ போனபோது நடந்தது. ஜெ அளவுக்கு விஜைக்கு துணிவு அல்லது மன தைரியம் இல்லை என்றே படுகிறது. மனதைரியம் இல்லை எண்டால் அரசியல் சரிவராது.
  7. விஜை பனையூரில் போய் முடங்கி கிடப்பது மிக பிழை. ஆனால் மேலே புலவர் எழுதி இருப்பது வரிக்கு, வரி திமுக ஐடி விங் தயாரித்து கொடுத்து பல கணக்குகளில் இருந்து பகிரப்படும் “கருத்து” க்களை ஒத்து இருக்கிறது.
  8. யாழிலும் மனித சோகத்தில் அரசியல் செய்யும் நிலைய வித்துவான்கள் இருக்கிறார்கள்.
  9. விஜை ரொம்பவும் இமோசனலானவர் என நான் நினைப்பதை இந்த அறிக்கை கொஞ்சம் உறுதி செய்வது போல் உள்ளது. இத்தனை உயிர்கள் தன் கூட்டத்தில் பலி, அதுவும் தன்னை நேசித்தவர்கள், தன்னை காண என மணிக்கணக்கில் காத்து நின்ற குழந்தைகள் என்பதை கடந்து போவது, மீண்டு வருவது மிக கடினமானது. ஒத்தாசைக்கு ஒரு கூட்டணி கட்சி கூட இல்லை. சந்தர்ப்பம் காத்திருந்து நிலைய வித்துவான்கள் ரஜனி, கமல் நன்றாக வாசிக்கிறார்கள். விஜை ஒன்றில் நேரில் வந்து இதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று விலகி விடல் வேண்டும். 30+ உயிர் என்பது இலகுவாக கடந்து போக முடியாத விடயம்.
  10. பிகு நாளை முதல்வர் கரூர் போகிறாராம். ஆனால் ஒரு ஆள் கூட நெரிசல் படாமல் பொலிஸ் பார்த்துகொள்ளும். விஜையின் மக்கள் ஆதரவு என்ற ஆயுதத்தை விஜை மீதே நாகாஸ்திரமாக திருப்பி விட்டுள்ளது திமுக. ஒன்றில் பெட்டி கொடுத்து வாங்குவார்கள், அல்லது இப்படி கட்டம் கட்டுவார்கள். இவர்களுக்கு தண்ணி காட்டிய இருவர் என்றால் அது எம் ஜி ஆரும், ஜெயும்தான். அவர்களை போல் விஜை, விஜயகாந்த் இல்லை. நான் முன்பு கேள்விபட்ட கதை ஒன்று - விஜை அவரின் தங்கை இறப்பின் பின், ஒரு சிறுவனாக, மிகவும் மனநிலை தளம்பி இருந்தாராம். சில விடயங்களில் இப்போதும் மன அளுத்தம் வருமாம். விஜை தார்மீக பொறுபேற்று - அரசியலுக்கு முழுக்க போட்டாலும் போடக்கூடும் என எண்ணுகிறேன்.
  11. உங்களின் மனநிலையில்தான் பலர் இருப்பார்கள். பல காலத்துக்கு பின், திமுக வை ஓரம்கட்டி, அதேவேளை ஓரளவு திராவிட, தமிழ்தேசிய அரசியலை முந்தள்ள கூடிய ஒரு புதிய சக்தி, ஆரம்பமாக முதலே அணைந்து விட்டது போலவே படுகிறது. வேஸ்ட்டு பெலோ பொருத்தமான வார்த்தைதான்.
  12. மாசி மகத்தில் ஜெ போனபோது அவரின் பாதுகாப்பால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்தனர். அந்த ஜெவை கூட மக்கள் மன்னித்தனர். இது விஜை வேண்டும் என்று செய்த ஒன்றல்ல - இதில் இருந்தும் மீளலாம். ஆனால் விரைவு நடவடிக்கை முக்கியம். இப்போதே கூட்டத்தில் இருந்த ஆட்கள் என திமுக சொம்பு ஊடகங்கள் narrative set பண்ணுகிறார்கள். நாளைக்கு அண்ணன் சீமான் இறங்கி அடிப்பார். விஜை பனையூரில் பதுங்கினால் - வழித்து எடுத்து விடுவார்கள். இதில் விஜை தெளிவாக செயல்படின் அவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என கருதலாம்.
  13. தொடர்ந்தும் கூடும் சனத்தை பார்த்த பிறகும் - ஊர் மத்தியில் தரும் இடத்தை ஏற்று கொண்டதன் மூலம் - விஜை தனக்கு தானே ஆப்பு வைத்துள்ளார். இது அவரினதும், அவரை சூழ உள்ளோரதும் அரசியல் முதிர்ச்சி அற்ற நிலையையே காட்டுகிறது. இதில் ஏதேனும் சதி இருக்கலாம் இல்லை என்றாலும்….போன 2 சனிக்கிழமை கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும் பொலிஸ் 100 அடி வீதியை கொடுத்தது - இதை எதிர்பார்த்தே செய்தார்கள் என்றே நினைக்க வைக்கிறது. விஜை தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் அரசியல் ஒவ்வொரு அடியாக அழிவை நோக்கி போகிறது. விரைவாக வெளியே வந்து, பேட்டி கொடுத்து ஆவன செய்ய வேண்டும். முதலாவது மன்னிப்பு. இரெண்டாவது நட்டைஈடு, உறவினருடன் ஆறுதல். மூன்றாவது - இதில் சதி இருப்பதாக சந்தேகிக்கின் சிபிஐ விசாரணை நேரா அமிதாஷாவிடம் கோர வேண்டும். பிகு திமுக, அதிமுக, பாஜக வை தாண்டி ஒரு மாற்று சக்தி வரமுயன்றால் இப்படித்தான் அடக்குவார்கள். சும்மா மேசையில் வாய் கிழிய கத்திவிட்டு, பெட்டி வாங்கும் அரசியல்வாதிகளை விட்டுவிடுவார்கள். ஆனால் விஜை திமுகவின் அடித்தளத்தை அசைக்க முயன்றார். அதற்குத்தான் இந்த எதிர்வினை. ஆனால் திமுகவை எதிர்பதாக சொல்லும் பலர் - விஜையை போட்டு துவைப்பதிலேயே இப்போ ஆர்வம் காட்டுவார்கள், யாழ் களத்திலும் இதை காணலாம்😂.
  14. அதை மக்கள் முடிவு செய்வார்கள். நான் அப்படி நம்பவில்லை. விஜை தனித்து நின்றால் ஒரு சீட் 10-15% வாக்கு என்பதே என் தற்போதைய கணிப்பு. A week is a long time in politics என்பார்கள். 7 மாதத்தில் என்னவும் நடக்கலாம். கரூர் மரணங்களை விஜை எப்படி எதிர் கொள்கிறார் என்பது அவரின் அரசியலுக்கு வாழ்வா, சாவா கேள்வி. ஆனால் 2026 இல் அதிபர் ஆட்சி அமைப்பது உறுதி😂.
  15. கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்! Halley KarthikUpdated: Saturday, September 27, 2025, 20:52 [IST] கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 10 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 29 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து கரூருக்கு அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் விரைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். டிஸ்கி செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா? இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள். என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.
  16. புலிகள்-டெலோ போல… தவெக-திமுக. புலிகள்-பொதுபலசேனா போல… தவெக-பாஜக ஆண்டு 10 தமிழ் இலக்கணத்தில் போல, அன்ன, வின் அர்த்தம் பற்றி படிக்கவில்லையா?
  17. An example serves as a specific instance to illustrate a general concept or principle, while a comparison involves examining two or more things to identify their similarities and differences. ஒரு பொதுவான கருத்து அல்லது கொள்கையை விளக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஒரு குறிப்பிட்ட நிகழ்வாக செயல்படுகிறது, அதே நேரத்தில் ஒரு ஒப்பீடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காண ஆராய்வதை உள்ளடக்கியது. ஜேர்மனி, யூகே என இரந்து வாழ்வதில் மட்டும் காலத்தை கழிக்காமல், விடயங்களை அறிவதிலும் கொஞ்ச காலத்தை செலவழித்கிருப்பின், திராவிட கோமாளிகளிடம் விளக்கம் கேட்டு பெறும் நிலை வந்திராது.
  18. இந்த செய்திக்கான Numbeo தளத்தின் ஆதாரம் எங்கே என கேட்டால்…நீங்கள் நம்பிக்கை இல்லாதவர் ஆவார். நாங்கள் சொல்கிறோம்…நம்பியோ சொன்னது…நம்புங்கோ😂
  19. லைக்கியதன் மூலம் தியாகதீபம் திலீபன் பற்றிய கவிதையை நினைவு மீட்டிய ரதனுக்கு நன்றி. வீர வணக்கம்.
  20. யாழிலும் எண்ணுகிறார்களாமா? மாவட்டத்தை சொன்னேன்😂 பிகு நான் கடைசியாக எடுத்த ஆயுதம் - வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது😂.
  21. இது ஒரு கோணம். ஆனால் இது உண்மை எனில் அந்த குடும்பத்தின் சுவடே இல்லாமல் அழித்திருப்பார் கே என் நேரு. சட்டத்துக்கு எல்லாம் காத்திருக்க மாட்டார். நேருவுக்கு கூட யார் செய்தது என்பது இன்றுவரை தெரியாது என்பதே உண்மை. இன்னொரு கோணம் - ஜெ கூட்டம் நடத்த விடாமல் தடுத்து, வாயில் வைக்கபட்ட உறுப்பை பற்றி ஜெயிடம் சவால்விட்டார் என்பது. சந்திப்போம்.
  22. இவ்வளவு நேரமும் நீங்கள் தலைப்பை விளங்காமல் வாதாடி உள்ளீர்கள் தோழர். இந்த திரியியிலோ வேறு எந்த திரியிலோ நான் எந்த தலைவரையும் ஒழுக்க சீலர் என வாதிடவில்லை. என் வாதம்…. ஒன்றே ஒன்றுதான் … இரு குடும்பபெண்கள்…. தாமாகவே பொதுவெளியில் முன் வந்து அப்படி எதுவும் நடக்கவில்லை + நான் கருணாநிதி மனைவி இல்லை என சொன்ன பின்னர் - அதை மீள மீள பரப்புவது - அந்த பெண்களின் மானத்தை அடகு வைத்து அரசியல் ஆதாயம் தேடும் செயல்…. என்பது மட்டுமே.
  23. அட போங்க தோழர். ராமஜெயத்தை கொல்ல சொன்னதே ஜெ என்கிறார்கள் சிலர். எம் ஜி ஆர், கருணாநிதி இடையே (இப்போ ஸ்டாலின்+சீமான் போல) மறைமுக உறவு இருந்திருக்க வாய்புள்ளது. ஜெ யிடம் வாய்ப்பே இல்லை. அவர் மனதார கருணாநிதி, குடும்பம், கட்சியை வெறுத்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.