Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. ஒரு சினிமாகாரனின் மனசு இன்னொரு சினிமாகாரனுகுத்தான் தெரியும் என்பது சரியாத்தான் இருக்கு.
  2. புஸ்ஸி (நல்லா வச்சான்யா பேரு😂) ஆனந்தை கைது செய்ய கூடுமாம். விஜை அரசியல் சரியான வழியில் செல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் 🤣. ஆனால் ஒன்று நீங்கள் சொல்வது போல் ரசிகர் ஏறிய மரம் முறிந்து விழுந்தோ, ரசிகர்கள் கலவரம் செய்தோ தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக எப் ஐ ஆர் கூட சொல்லவில்லை. காரணம் கட்டுக்கடங்காத கூட்டம். அதை வேண்டும் என்றோ அல்லது அசட்டையாகவோ பொலிஸ் கட்டுப்படுத்த தவறியது. இது சதிக்கோட்பாடு அல்ல. பிளேட்டால் கீறினார்கள் இதர கதைகள்தான் ஆதாரம் இல்லாதவை. ஆனால் ஒரு பெரும் கூட்டத்தில் ஒரு நூறு பேர் இறங்கி தள்ளுமுள்ளு பட்டாலே, கூட்டம் கல்லைகலைய போதுமானதாக இருக்கும் என்பதும் உண்மையே. திமுகவின் மாபியாதனமும் தெரியும் என்பதால் இதில் நிச்சயம் ஒரு open mind அணுகுமுறை தேவை.
  3. என்னது? வருகிறார்களா? வந்து ஆராய்ந்து, பேட்டியும் கொடுத்து விட்டு போய் இரெண்டு நாள் ஆகிறது. வாட் ப்ரோ…இட்ஸ் வெரி ராங் ப்ரோ… உங்களின் கருத்தில் இருந்த பொருளுக்கான பதிலை ரசோ அண்ணா தந்துள்ளார். நாலு பேர் சீரியசாக பேசி கொண்டிருக்கும் நடுவீட்டில் யாராவது அதை தூக்கி கொண்டு வந்து போடுவார்களா, இல்லைத்தானே😂
  4. கருணா இயக்கத்தை விட்டு விலகிய பின்னும்…. சுப முத்துகுமார் கொலைக்கு சற்று முன் சீமானுக்கு ஏற்பட்டதை போன்றதுமான… ஒரு இக்கட்டு விஜைக்கு ஏற்பட்டுள்ளது என்கிறீர்கள். வாய்ப்புகள் உள்ளது.
  5. அதான் கரூரில் ஒரு மூ.சந்தில் வைத்து வீரவாகுவை முங்கு முங்கு எண்டு மொங்கிவிட்டார்களே…இனி ஐயரிடம் டீல் போடுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வீரவாகு வந்திருக்க கூடும். வீரவாகு கொடுப்பதை கொடுக்க ஒத்து கொண்டால், ஐயர் பேக்கரியை கொடுப்பார். ஆனால் இது வெளியே கடுகளவு கசிந்தாலும் வீரவாகு மானம் அம்பேல்😂.
  6. இந்திய அரசியலை மாபியாவுடன் ஒப்பிட்டது மிகப்பொருத்தமானது. இது தனியே கூட்டம் கூடியது, தள்ளுமுள்ளு, சாவு என்பதாக எனக்கு படவில்லை. விஜையின் நிகழ்வுக்கு பின்னான நடத்தை அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தினாலும், நாமும் இந்த சதிக்கு பலியாகி அவர் மீது மட்டும் கோவத்தை காட்டி விட்டு அடங்கி விட கூடாது என நான் நினைக்கிறேன். விஜைக்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது, மாறாது என கூவினாலும், திமுக ரொம்பவே கிலி கொண்டது என்பதே உண்மை. சீமானை பெயரை கூட சொல்லாமல் சிவாஜி கிருஸ்ணமூர்தியை வைத்து லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணிய அதே திமுக அத்தனை அமைச்சர், முதல்வர், துணை முதல்வரையும் இறக்கி களமாடியது. தேர்தலுக்கு 7 மாதம் முன்பே. தமது சுயநலனுக்காக பல இலட்சம் ஈழதமிழர் கொலையை உண்ணாவிரத நாடகம் ஆடி கடந்து போன கட்சி, குடும்பம் இது, அதே சுயநலனுக்காக ஏன் இதை செய்திருக்க கூடாது.
  7. எந்த உண்மை? கரூரில் என்ன நடந்தது என்ற உண்மையா? அந்த எல்லோரில் நான் இல்லை. நீங்கள் இருந்தால்… அந்த உண்மைதான் என்ன?
  8. நான் கொஞ்சம் வேறு விதமாக யோசிக்கிறேன். சீமான் - நாள் 1 முதலே அவரது வலது கரமான தூஷண துரை இந்த ரூட்டைத்தான் பிடித்தார். அவர் வாங்கிய துட்டு விசுவாசமாக பேசிவிட்டார். சீமான் - முதலில் விஜையை தலைய தடவி அதன் மூலம் குறித்த சதவீத வாக்குகளை அபேஸ் பண்ண முடியுமா என பார்த்தார். ஆனால் விஜை அவரை விட பெரிய இடத்தோடு சம்பந்தம் பேச, டியூனை மாற்றுகிறார் அல்லது வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக இரு - இல்லை என்றால் விஜைக்கு கரூர், உனக்கு மேட்டூர் அல்லது புதூர் எதையோ ஒன்றை செட்டப் செய்வோம் என மிரட்டி இருக்க கூடும். எடப்பாடி - அவர் விஜையை சேர்க்க மாட்டார் என நினைக்கிறேன். இதுவரை விஜை மீது பிழை இல்லை என அவர் சொல்லவில்லை. அவரின் ஒரே டார்கெட் அரசை குற்றம் சொல்வதே. முடிந்தவரை விஜையை வைத்து திமுகவை அட்டாக் செய்து விட்டு, தேமுதிக, பாஜக, பாமக கூட்டணியில், அத்தனை திமுக அதிருப்தி வாக்குகளையும் தம் பக்கம் ஈர்ப்பதே அவர் நோக்கம் என நினைக்கிறேன். நயினாரின் பேச்சும் இப்படி அல்லது இதை விட நடுநிலையாகவே இருந்தது. இடையில் அமித் ஷா வேறு வகையில் முடிவு எடுத்தால் சில நேரம் விஜை உள்ளே வரக்கூடும். இதில் அதி பரிதாபங்கள் ஓபிஎஸ், தினகரந்தான். செங்கோட்டையந்தான். முதலில் அண்ணாமலை பேச்சை கேட்டு மோசம் போனார்கள். விஜையின் பஸ்சிலாவது ஜன்னலோரமாக சீட்டு பிடிக்கலாம் என நினைத்தால் - பஸ் குடைசாய்ந்து கிடக்கிறது😂.
  9. இதில் ஒரு அரசாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தவறியமையும் உள்ளடங்க வேண்டுமா இல்லையா அறிஞர்களே? சந்துரு திமுக சார்பானவர் என்றே அறியபடுகிறார் என நம்புகிறேன். அடுத்த கலைமாமணி, தமிழ் நாடு அரசு விருதுகள் வரும்போது ஏனையோர் சாயமும் வெளிக்கும். இவர்கள் முன்வைத்த விஜை மீதான விமர்சனத்தை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரே அடியாக மொத்த பழியையும் விஜை மீது போடுவதும். ஏதோ தாமே விசாரணை அதிகாரிகள் போல் சதியே நடக்கவில்லை என சாதிப்பதும், இவர்கள் யார் சொல்லி அறிக்கை விடுகிறார்கள் என சந்தேகிக்க வைக்கிறது. சதி இல்லவே இல்லை என ஆகட்டும். இதில் யார் ஒருவர் அரசின் கூட்டு பொறுப்பை (joint liability), ஆளும் கட்சியாக திமுவின் அலட்சியத்தை (criminal negligence) பேசாமல் விடுகிறார்களோ அவர்கள் நோக்கம் சந்தேகத்துக்குரியதாகிறது. இந்த அறிக்கையில் ஒரு வரி கூட அரசை கண்டித்து இல்லை. பிகு விஜை இந்த அழிவுக்கு பின்னர் நடந்து கொள்ளும் முறையால் - மக்கள் அவரை அகற்றியே ஆவர்கள் என நான் எண்ணுகிறேன்.
  10. இவர்களில் பலரை திமுக சார்பு கலை, இலக்கிய மேடைகளில் சர்வசாதாரணமாக அண்மைய வருடங்களில் காண கிடைத்தது என்பதை கொஞ்சம் நினைவூட்ட விரும்புகிறேன். அதுவும் இந்து ராம் இப்போதெல்லாம் ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவர் போல் பேசுகிறார்😂. மெத்த படித்த கனவான்களே, அப்படியாயின் அந்த முன்னோட்டத்தை கண்டும், அழிவை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பேணும் தன் பொறுப்பில் தவறியுள்ளது என்பதுதானே பொருள்? இந்த தவறுக்காக ஸ்டாலின் பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்😂. அப்பட்டமான பொய். விஜைக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுக்கவில்லை. வேலுசாமிபுரத்தில் நடந்தது பொதுக்கூட்டம்.
  11. செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், உதயநிதி இன்னும் இருக்கும் திமுக பேச்சாளர்கள் எல்லாரும்…இதை பார்த்து, பேச கற்றுகொள்ள வேண்டும்😂. பிகு கரூர் அவலம் பற்றி நான் முதன் முதலில் திரி திறந்த போது, டிஸ்கியாக ஒரு எதிர்வுகூறலை போட்டேன். ஐந்து நாளில் அது உண்மையாகி உள்ளது 😂.
  12. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் இந்த விடயத்தில் ஒன் இந்தியா (தட்ஸ்தமிழ்) கொஞ்சம் அல்ல ரொம்பவே திமுக சார்பு நிலை எடுக்கிறது (வழமையாக தேர்தல் நெருங்கும் போது திமுக சார்ப்பாக மாறுவார்கள் -கவனித்துள்ளேன்). ஆகவே இப்படித்தான் நடந்ததா என தெரியவில்லை. விகடன் எழுதினால் தெரியும். ஆதவ் டெல்லி போயுள்ளாராமே?
  13. சினிமாவில் சீமான் எத்தனை தசாப்தங்கள் இருந்தார்? தம்பி, பாஞ்சாலங்குறிச்சி தவிர அவர் இயக்கி சுமாராகவேனும் ஓடிய படங்கள் யாவை? அரசியலுக்கு வரும் முன் சீமான் சொந்தமாக கார் வைத்திருந்தாரா? நீலாங்கரையில் 6 கோடி பங்களா? மலைநாட்டில் பல ஏக்கரா காணி? சினிமாவில் சிங்கிள் டீ க்கு சிங்கி அடித்தபடி, திராவிட, கம்யூனிச மேடைகளில் ஏறி வாயை வாடகைக்கு விட்டு வாழ்க்கைபாட்டை ஓட்டியவருக்கு, முள்ளிவாய்க்கால் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. மட்டகளப்பில் தங்க-சுனாமி என்பார்கள். அத்தனை அழிவிலும் கூட தப்பிய பலர் வெளிநாட்டு உதவிகளை பகிர்கிறோம் என அளவுக்கு அதிகம் சொத்து குவித்தார்கள். சீமானுக்கு தங்க முள்ளிவாய்க்கால்.
  14. என்ன பிரக்கடித்து விட்டதா? தண்ணியை குடித்து விட்டு மீண்டும் கூறுங்கள்😂
  15. சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம் HemavandhanaUpdated: Wednesday, October 1, 2025, 12:03 [IST] திருவண்ணாமலை: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், வேலியே பயிரை மேய்வதும், வடமாநிலங்களை போலவே நம்முடைய தமிழ்நாட்டிலும் இத்தகைய பயங்கரங்கள் நடப்பதும், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. நேற்று விடிகாலை திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 3 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி வேன் ஒன்று, வாழைத்தார்களை ஏற்றி வந்துள்ளது.. திருவண்ணாமலை கான்ஸ்டபிள்கள் இந்த மினிவேனை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் நிறுத்திய கான்ஸ்டபிள்கள் இருவரும், அதில் சோதனை மேற்கொண்டனர். அதில் 20 மற்றும் 45 வயதில் 2 பெண்கள் இருந்ததை கண்டு அவர்கள் யார் என்று விசாரித்திருக்கிறார்கள்.. அப்போது இருவரும் ஆந்திரா சித்தூரை சேர்ந்த மகளும், சித்தியும் (தந்தையின் இரண்டாவது மனைவி) என்பதும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, தன்னுடைய உறவினர் மினிவேனில் வந்துள்ளதும் தெரியவந்தது. ஆனாலும், 2 பெண்களையும் விசாரணை என்ற பெயரில் நைசாக பேசி, ஒதுக்குப்புறமிருந்த தோப்பு பகுதிக்கு கான்ஸ்டபிள்கள் இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே சித்தி கண்முன்னேயே 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.. இதில் அந்த பெண் அங்கேயே மயங்கிவிழ, சித்தி அலறி கூச்சலிட, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலியே பயிரை மேய்ந்தது இதையடுத்து, மருத்துவமனையில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளனர்.. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சித்தி கண்முன்னேயே இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சித்தி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். பாஜக, அதிமுக கடும் கண்டனம் அதேபோல, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "ஆளும் திமுக ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம். திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே காமுகர்களாக உருமாறி வருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?" என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார். திமுக அரசுக்கு கண்டனம் அதேபோல முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திருவண்ணாமலை சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "போலீசாரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/thiruvannamalai/tiruvannamalai-two-policemen-arrested-for-lorry-girl-incident-and-edappadi-palanisamy-annamalai-na-739789.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி தமிழக பொலிசார் எவ்வளவு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். இதை கண்டிக்கும் தலைவர்கள் அரசியல்விளையாட்டு விளையாடுகிறார்கள்.
  16. என்னதான் நீங்கள் பழைய உறுப்பினர் எண்டாலும்…யாழ்களத்தில் நேற்று இணைந்து கொண்ட ஒருவர் உங்கள் Saturn எண்டு சொன்னால், என்போன்றோருக்கு கோவம் வரும்தானே அண்ணை?
  17. 1. டிரோனில் பார்த்து நடு நடுங்கும் கூட்டத்துக்கு 500 பொலிஸ்காரரை மட்டும் போட்டது ஏன் கூட்டம் அதிகமானது என தெரிந்தால் - நேரடியாக விஜை, அல்லது ஆனந்த், ஆதவ் எவரையாவது அழைத்து கரூருக்கு வர வேண்டாம் என பொலிச் கேட்டதா? மீறிவந்தால் மக்கள் நலனை காட்டி ஒரு நீதிபதி வீட்டுக்கு போய் தடைஉத்தரவு கூட வாங்கி இருக்கலாம். இங்கே மேற்க்கை உதாரணம் காட்டும் பலருக்கு, மேற்கில் பொலிசார் செய்யும் dynamic risk assessment பற்றி தெரிந்திருக்கும். ஒரு கூட்டம் கூடுகிறது என்றால் அனுமதி அளித்தவுடன் பொலிசாரின் கடமை முடிவதில்லை. அந்த கூட்டத்தை நடக்கும் போதும் அவதானித்து, தக்க நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை. இன்று செந்தில் பாலாஜியே சொல்கிறார். விஜை பேச தொடங்கி 3 நிமிடத்தில் அவர் மீது செருப்பு வீசியதாக. யார் வீசி இருப்பார்கள்? நிச்சயமாக திமுக அனுப்பிய ஆட்களை தவிர வேறுயாருக்கும் இந்த தேவையில்லை. இப்படி எடப்பாடிக்கு, அன்புமணிக்கு நடப்பதை தமிழக உளவுதுறை விடுமா? 500 பொலிஸ்காரரர் இருந்தார்களே, சிலரை விஜை பேசும்போது வேனுக்கு அருகில் கூட தடிகளுடன் காண முடிகிறது. எத்தனை பொலிசார் தள்ளுமுள்ளில் இறந்தார்கள்? யாராவது காயமாவது பட்டார்களா? இதில் சதி இருக்கலாம் இல்லாதிருக்கலாம். ஆனால் கணிசமான தவறு தமிழ் நாடு அரசின் பொலிஸ்மீது என்பது மறுக்கவியலாத உண்மை. RCB கூட்ட நெரிசலுக்கு யாரும் RCB கொலைகாரர்கள் என சொல்லவில்லை. RCB யும் பங்களூரு பொலிசும் கடமை தவறினர் என்றே சொன்னார்கள். எடப்பாடி, அன்புமணி, பிரேமலதா இதில் அரசியல் செய்வது உண்மை. ஸ்டெரலைட் நேரம் மாண்பு மிகு முதல்வர் ஸ்டாலின் பொம்மை விளையாடி கொண்டு இருக்கவில்லைதானே? ஆனால் அரசியலையும் தாண்டி தவறில் கணிசமான பங்கு தமிழக அரசுக்கு என்பது அடிப்படை உண்மை. இன்னொரு விடயம் - ஸ்டெரலைட் முதல் - அஜித்குமார் கொலை வரை, தமிழக பொலிஸ் தமது அரசியல் எஜமானர்களுக்காக எந்த நிலைக்கும் போக கூடியவர்கள் என்பது ஏலவே நிறுவப்பட்ட ஒன்று. விஜைக்கு முட்டை அடிக்கும் அந்தரிப்பில் நாம் இதை மறக்க கூடாது.
  18. கரூர் கேஸ்.. விஜய்க்குத்தான் பெரிய பின்னடைவு.. நீதிபதி கேட்ட வலுவான கேள்விகள்.. தடுமாறும் தவெக Shyamsundar IUpdated: Tuesday, September 30, 2025, 15:06 [IST] கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் இன்று வாதம் வைத்தனர். ஏற்கனவே கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெகவிற்கு பின்னடைவு இந்த வழக்கில் இன்று தவெகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. வழக்கில் இன்று வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். தவெக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், எங்களுக்கு தான் அதிக வருத்தம், விஜய் அதனால் தான் வரவில்லை. எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள், அந்த வருத்தத்தால் தான் விஜய் வரவில்லை. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான். சாலை நடுவே உள்ள சென்டர்மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பரப்புரை சுலபமாக இருந்திருக்கும். Also Read அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்ட விரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வந்தது. சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று கணித்தோம் . சனிக் கிழமை சம்பள நாள். அதனால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள். கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்.. மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான், என கணித்தோம் என்று தவெக தரப்பு மழுப்பலான வாதத்தை கோர்ட்டில் வைத்து உள்ளது. போலீஸ் வைத்த வாதம் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது. அதில், கால தாமதமாக வந்தது மட்டும் இன்றி, விஜய் வாகனம் ராங் ரூட்டில் வந்தது. பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசும்போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதும் கூட்ட நெரிசலுக்கு காரணம். Recommended For You சொன்ன நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சொன்னபடி 3 மணிக்கே வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம். இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார் அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே?, என்று குற்றச்சாட்டுகளை வைத்தது. நீதிபதிகள் கண்டிப்பு இதில் நீதிபதிகள் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்ததோடு, அவர்களுக்கு கடுமையான கேள்விகளையும் எழுப்பியது. அதில், கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை. உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10,000 என்று கணித்ததே தவறு. அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே? இபிஎஸ்-க்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். தமிழக அரசிடம் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் எப்படி சொன்னார். எதை வைத்து 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று சொன்னீர்கள்? விஜய்க்கு இது தெரியுமா? அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா தெரியாதா? சொல்லுங்க? மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை. நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்? என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார். https://tamil.oneindia.com/news/chennai/what-really-happened-in-the-vijay-tamilaga-vetri-kazhagam-case-at-karur-court-739575.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel மிக காத்திரமான, நியாயமான கேள்விகளை தவெக விடம் கேட்டுள்ளார் நீதிபதி. காவல்துறையிடம்?
  19. இந்த திரியில் எத்தனையோ மானுட நேயர்கள் வந்து கருத்து சொல்லி போயுள்ளார்கள்… ஆனால் இந்த பதிவில் நீங்கள் தமிழ் நாட்டு காவல் துறையின் பொறுப்பு பற்றி எழுப்பிய எந்த கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்ல முயற்சிக்க கூட இல்லை. ஏன்? ஏனென்றால் அப்படி பதில் சொன்னால் இந்த இழப்புகளுக்கு தவெக வும் தமிழக அரசும் கூட்டு பொறுப்பு என்பதை ஒத்துகொள்ள வேண்டி வரும். அப்படி ஒத்துகொண்டால், (ஏதோ ஒரு அல்லது பல காரணங்களுக்காக ) இந்த விடயத்தில் விஜையை ஒரு பக்க சார்பாக போட்டு வெளுக்கமுடியாது போய் விடும். (எமக்கும் விஜயகாந்த் நினைவில் உள்ளார்😂).
  20. பொதுவாக உடல், உள பிரச்சனைகளை வைத்து நாம் ஒருவரை ஒரு தொழில் அல்லது சேவையில் இருந்து ஒதுங்க சொல்லமாட்டோம். ஆனால் இதற்கு அரசியல் விதிவிலக்கு. நாளைக்கே ஒரு பெருவெள்ளம் அல்லது சுனாமி வந்து சில நூறு உயிர்கள் போனதும், முதல்வர் போய் வீட்டுக்குள் பூட்டி கொண்டால் அது சரிவராது.
  21. ஓம் அந்த பேட்டியையும் பார்த்தேன். பிந்திய செய்தி ஆதவ் இரவோடிரவாக கைதாகலாமாம். மிக சரியான கருத்து. வாழ்க்கையில் எம்மால் என்ன இயலும் என்பதை விட, என்ன இயலாது என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம். தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு மட்டும் அல்ல நாட்டுக்கே சேதம்.
  22. PTSD எப்போ, எப்படி கிளம்பும் என கணிக்க முடியாத ஒரு விடயம். நீறுபூத்த நெருப்பாக இருந்து பல பத்தாண்டுகளின் பின் கூட ஒரு trigger இல் வெடிக்கும். இது 100% எனது ஊகம் மட்டுமே.
  23. இது என்னுடைய வாழ்க்கை அனுபவம் சார்ந்த ஊகம் மட்டுமே. Shell shock பாதிப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஆளை வீடியோவில் பார்க்க trauma வில் இருந்து மீளவில்லை என்பது போலவே உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி நம்மை நேசித்த மூன்றாம் நபர்கள் நம் கண்முன்னே இறப்பது என்பது ஜீரணிக்க கடினமான விடயம். கூட்டத்திலேயே இந்த திகிலை காண முடிந்தது. நானும் மனிதனே, மனதளவில் நொருங்கியுள்ளேன் என்ற வார்த்தைகள் சொல்லாமல் சொல்லும் செய்தி இது என நினைக்கிறேன். இதை உடைத்து சொல்ல முடியாது. பைத்தியம் என கதையை முடித்து விடுவார்கள். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பதால் இது நடிப்பாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கூகிள் ஜெமினியில் இருந்து Overview நடிகர் விஜய்யின் தங்கை வித்யா, லுகேமியா (leukemia) எனும் நோயால் உயிரிழந்தார். விஜய்க்கு தன் தங்கை மீது மிகுந்த அன்பு இருந்ததாகவும், அவருடைய இழப்புதான் விஜய்யை மிகவும் அமைதியாக்கியது என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். தங்கை இழப்பின் பின்னணி: விஜய்க்கு தனது தங்கை வித்யா மீது மிகுந்த அன்பு இருந்தது. வித்யாவுக்கு மூன்று வயது இருக்கும்போது லுகேமியா நோய் தாக்கியது. இந்த நோயின் காரணமாக, அவர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் இழந்தனர். தந்தையின் கருத்து: விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். வித்யா தான் விஜய்யின் உலகம் என்றும், அதன் இழப்பு அவனை அமைதியாக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
  24. இல்லை. ஆனால்… நாங்கள் சொன்ன விதிகளின் படி நடந்து கொண்டோம். என சொல்லி உள்ளார். இதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். நீங்கள் இடத்தை கொடுத்தீர்கள், நீங்கள் விதிகள் போட்டீர்கள் அதன்படி நாம் நடந்தோம். இடம் பொருத்தமில்லை என்பதால் தள்ளுமுள்ளு எனில் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எனவே நான் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை. இதுதான் நிலைப்பாடு என நினைக்கிறேன். அத்தோடு உண்மை விரைவில் வெளியே வரும் என்றால்… தப்பு தவெக மீது இல்லை என்பதுதானே அர்த்தம் (விஜை பார்வையில்). இல்லை. கரூரில் கலவரம் வரும் எனில். திருச்சியில் ஒரு ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்றிருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.