Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நிச்சயமாக. இலங்கையில் ஒருவர் திடிரெனெ பிரபலாமாகி - இந்தியாவில் அவருக்கு பல வாய்புகள் மேடைகள் எல்லாம் கொடுக்பப்பட்டன. திடிரென நரி ஏன் அம்மணமாக ஓடுகிறது என கிண்டினால்…. அவர் உமாகரன இராசையாவின் தம்பியாம். அண்ணம் கவிதை சொல்கிறேன் என வந்து, பின் காவி உடை போட்டு தான் நாக்பூர் எனபதை வெளிகாட்டினார். தம்பி இசையோடு வருகிறார் என நினைத்து கொண்டேன். ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.
  2. நாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்…. தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்…. இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்…. காலம் விசித்திரமானது. இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும். எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது. நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள். மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார். அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣. கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர். 12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣. பிகு முன்பே எழுதியதுதான். தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின், திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும். இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம். இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள். அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை. இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம். என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்) X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்). இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.
  3. ஆங்கிலத்தில் வெள்ளை யானை என்பார்கள். ஒரு விடயத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருக்கும் போது இப்படி சொல்வார்கள். மத்தள விமானநிலையம் சீனா கட்டிய வெள்ளையானை. இது இந்தியா கட்டிய வெள்ளையானை. மேனாடுகளில் p3 model அல்லது public private partnership PPP என்பார்கள். அரச அமைப்பும், தனியாரும் பரஸ்பர நன்மை அடையும் வகையில் ஒரு விடயத்தை நிர்வகிப்பது. மாநகரசபை இதை ஒரு கலியாணமண்டபமாக/கச்சேரி சபாவாக/ இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு எவரேனும் தனியார் நிறுவனத்துடன் போகலாம். அப்படியும் மாநகரசபையால் பராமரிக்க முடியாதளவு எண்டால் அதை பல்கலைகழகத்துக்கு கொடுக்கலாமே.
  4. நல்லவேளையாக வேடனின் தாயார் என்ன ஊர் என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை 🤣
  5. மண்டபத்தில் வேறு கூட்டங்களும் நடைபெறுகிறதா…அல்லது முகாமையாளர் மட்டும் கூடி கூடி கதைப்பது மட்டும்தானா?
  6. 2020 இல் இருந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே இந்த ரயில்கள் ஓடி உள்ளன. பஸ் முதலாளிகளிடம் காசு வாங்கி கொண்டு இப்படி தொட்டு தொட்டு நிப்பாட்ட்ய்கிறார்கள். மீதி ரயில் தடங்கள் எதிலும் இப்படி இல்லை. அனுர ஆட்சியிலும் தொடர்கிறது.
  7. ஓம் உதய்நிதிதான் அந்த சார் என்றும் ஒரு சந்தேகம் ஓடுகிறது. அதே போல் சும்மா பொலிசை மிரட்ட போனில் “சார்” என யாரிடமோ பேசுவது போல் குற்றவாளி பாவனை செய்ததாக மாநில அரசின் கீழ் உள்ள பொலிஸ், மத்திய அரசின் கீழ் உள்ள நீதி துறை எல்லாரும் சாதிக்கிறார்கள். யார் அந்த சார்? மாநில, மத்திய அரசுகள் சேர்ந்து அமுக்க நினைப்பதால் அவர் ஆளுனராக இருக்கவே வாய்புள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனல் உதய் ஆகவும் இருக்கலாம். காதலன் படத்தில் வரும் கார்கர்லால் சத்யணாராயணா எனும் வில்லன் கரெக்டர் - சென்னா ரெட்டியை அவமானபடுத்த ஜெ சொல்லு உருவாக்கப்பட்டதாம்.
  8. அண்ணாவின் மிக சிறப்பான மாநில சுயாட்சி தத்துவம் பற்றிய ஆங்கில பேச்சுகள் ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் போதே நிகழ்தப்பட்டன. ப. சி, மற்றும் முரசொலி மாறன் போன்றோரும் ராஜ்யசாபா எம்பிகளாக இருந்துகொண்டேன் அரசியலில் முக்கிய வகிபாகத்தை வகித்தனர். அன்புமணி ஒன்றிய சுகாதாரதுறை அமைசாராக பல எதிர்புகளை தாண்டி சீர்திருத்தங்களை அமல் செய்தபோதும் ராஜசபா எம்பிதான் என நினைக்கிறேன். ஆனால் அநேகர் இதை ஒரு கவுரவபதவிபோலவே நடத்துகிறனர்.
  9. பிகு மனவருத்தம் ஆனால் இதை பெருசுபடுத்தபோவதில்லை என வைகோ கூறியுள்ளாராம்.
  10. திமுக மகனுக்கு எம்பி சீட் கொடுத்து வென்றும் விட்டார். கட்சியில் பழைய பெரும்புள்ளிகள் எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள், அல்லது போய்விட்டார்கள். இருக்கும் ஒரே ஆள் மல்லை சத்யா - அவருடன் துரை பகிரங்கமாக மோதி வைகோ இருவரையும் சமாதானம் செய்தார். 82 வயதாகிறது - பழைய கம்பீரம் அடியோடு போய்விட்டது. அடிக்கடி கோபம் வருகிறது. வார்த்தை தவறுகிறது. ஓய்வு கட்டாயம். வைகோவுக்கு பின் கட்சியை துரை மீண்டும் திமுகவில் சேர்க்கலாம். லெட்டர்பாட் செலவாவது மிஞ்சும். இப்போதே செய்யாலம் - ஆனால் வைகோ பிரிந்த நேரம் உயிர்நீர்த்தோர் நினைவு அதை தடுக்கும். வைகோ இறந்தபின் அப்படி ஒரு நெருடலும் இராது. திமுக திட்டமிட்டு காயடித்த ஒரு அருமையான ஆளுமை வைகோ. அவரின் அரசியல் தகிடுதத்தங்களும் வீழ்ச்சிக்கு துணை போயின. அரசியலில் தரவுகளை விரல் நுனியில் வைத்து கொண்டு, அரங்கத்தை கட்டிபோடும் பேச்சாற்றல் கொண்டிருப்பது மட்டும் தலைவனாக வெல்ல போதுமானதாக இராது, துண்டு சீட்டை வைத்து பேசும் ஆட்களிடம் கூட தோற்று போக வேண்டி வரும் என்பதன் வாழும் உதாரணம் வைகோ. அமெரிக்காவில் அல் கோரை the President we never had என்பார்கள். அதேபோல் தமிழ் நாட்டில் வைகோ the CM they never had. ஈழத்தமிழரின் நன்றி வைகோவுக்கு எப்போதும் உண்டு.
  11. புகார் கொடுத்தவர் சு.சா. திமுக ஆட்சியில் இருக்கும் போது வழக்கு போடப்பட்டு, பின் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அரசியல்தலையீட்டை தவிர்க்க, திமுக போட்ட மனுவின் அடிப்படையில் பங்களூருக்கு மாற்றப்பட்டது வழக்கின் நீதி விசாரணை (trial). ஆனால் நான் சொல்ல வந்தது அது அல்ல. நீதி விசாரணை ஜெ வை குற்றம் தீத்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெவை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை, தண்டனையை உறுதி செய்தது. நான் சொல்வது, எப்படி நாக்பூர் ஆசியினால் சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் போய் தப்பிக்க முடிந்ததோ, அப்படி ஜெயாலும் முடிந்திருக்கும், நாக்பூரின் மிரட்டலுக்கு அடி பணிந்திருந்தால்.
  12. ஜெயாலிதா கட்சி வைத்திருந்தவர்தானே தம்பி? லேடியா, மோடியா எண்டு கேட்டிருக்காவிட்டால் பார்பன அக்ரகாராத்து பெண்ணை பார்பாஹன அக்ரகஹாராவுக்கு அனுப்பி இருப்பார்களா?
  13. பிகு அந்த சார் ஆளுனர் ரவி என்றும்… அவரை காப்பாற்ற திமுக, பிஜேபி, நீதிதுறை கூட்டு நாடகம் ஆடுவதாகவும் கூட சொல்லப்படுகிறது. ஆளுனரின் வேந்தர் நியமன பறிப்பு, ரவியின் அண்மைய மெளனம் யோசிக்க வைக்கிறது.
  14. ஆனால் வாயை வாடகைக்கு விடுபவர் மேல் மட்டும் இன்னும் கஞ்சா, புலிப்பல், NIA எதுவும் பாயவில்லை. ஏன்? ஏன்னா வாயை நாக்பூருக்கு வாடகைக்கு விட்டிருக்கு.
  15. இதுவும் அவர்களிடமும் அபரிமிதமாகவே உள்ளது ஐலண்ட். எஸ் கிளாசில், இந்தியாவில், 1998 இல் டிரைவர் வைத்து ஓடிய பால் தினகரன் செத்த பின்பு, அவரது மகன் செத்த வீடு செய்ய காசில்லை என கூறியதும் அள்ளி அள்ளி கொடுத்தார்கள். நைஜீரியாவில் எல்லாம் பெரிய எடுப்பில் நடக்கிறது. இவை ஏன், யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒரு கன்னியர் மடத்தில் கிறீஸ்தவர் அல்லாத பிள்ளை தலைமை ஹெட் பிரிவெக்ட் ஆகவில்லை என எண்ணுகிறேன். சிஸ்டர்மாரும், பாடசாலையில் அதிகம் இருக்கும் பெற்றாரும், முன்னாள் மாணவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.
  16. உனக்கென்ன ஆண்டவா நீ பேசுவ, ராஜ்ஜசபா வேற போக போறே… ஆனால் சிம்பு பட கலக்சன்ல மண்ணவாரி வுட்டியே ஆண்டவா🤣
  17. உங்களுக்கு ராகு கேது மாற்றம் சரியில்லை போல கிடக்கு. #புரிஞ்சவன் பிஸ்தா எடிட் பண்றதுகுள்ள பதிலும் போட்டாச்சா🤣
  18. சூப்பர்…. இப்போ கொஞ்சம் மூளையால் யோசிப்போமா ? (இந்த கருத்து பாஞ் ஐயாவுக்கு அல்ல, வீடியோவை மட்டுமே மேற்கோள் காட்டுகிறேன்). இணுவில் கோவிலில் மச்சம் ஆக்குகிறார்கள். ஆகவே இந்த கோவிலில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அல்லது முழு இணுவிலிலும் இனி யாரும் சைவ சாப்பாட்டு கடை போடப்படாது என கூறினால் எப்படி இருக்கும்🤣. இதை ஒத்த மொக்குதனம்தான் வேலனும், மொக்கராசுகளும் நல்லூரில் கேட்பதும். மத அனுஸ்டானம் என்பதை அமல் செய்யும் உரிமை கோவில் எல்லைக்குள் மட்டுமே. கோவில் சுவர் அல்லது வெளிவீதிக்கு அப்பால் - அது அனைவரும் வாழும் பொதுவான நாடு. இந்த அந்நியோனயமும், சகிப்புத்தன்மையும் - யாருக்கோ கண்ணை குத்துகிறது. ஆகவேதான் வேலன், சச்சி, உமாகரன் இராசைய்யா தரவழி ஓசி சோறுகளை இறக்கி விட்டுள்ளார்கள்.
  19. மன்னிக்கவும். வெள்ளை பாவாடை கட்டி கொண்டு, இறைவனை நாடி வரும் சின்னம் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பாதிரிகளை கடைசி வரை ஒரு அமைப்பாக பாதுகாத்தவர்கள் யார் ? பல பத்து வருடங்களின் பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்னிப்புகேட்டார். பாவடை எல்லாம் ஒண்டுதான், வெள்ளையோ, காவியோ. மலேசியாவிலும். அப்போ ஒரு கண்டி மலே முஸ்லிம், கைதடியில் உங்கள் பக்கத்து வீட்டில் வந்து குடியேறினால் அவர் உங்கள் ஊரவரா? இல்லை ஆனால் ஒரே நாடுதானே. வந்தான் வரத்தான் என்றால் - ஒரு இடத்தில் பரம்பரையாக இன்றி, அண்மையில் குடி வந்தவர்கள். நாடு அல்ல, இடம் அதாவது ஊர்.
  20. அவர்களும் சேர்ச்சை தாண்டி தலையிட முடிந்தால், வாய்ப்பு இருப்பின் கலையிடுவார்காள்…அண்மையில் கூட சில தனிமனித சுதந்திர விடயங்களில் இலங்கையில் பிக்குகளும், மெளலவிகளும், மல்கம் ரஞ்சித்தும் ஒரே குரலாக ஒலித்ததை கண்டோம். மதம் என்பதே by definition தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத கட்டமைப்பே. ஆகவேதான் அவரவர் மதங்களின் பிற்போக்கை அவரவர் எதிர்ப்பதும், அதற்கு ஏனையோர் துணை நிற்பதும் அவசியமாகிறது. குறிப்பாக இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை ஊர் வழமை என காதில் பூவைக்க முனைந்தால் - அந்த பின்னோக்கி செல்லும் முயற்சியை, அல்லது தமிழ் சங்கி மயப்படுத்தலை, அல்லது தமிழ் தாலிபான்களின் செய்கையை எதிர்க்க வேண்டியது நாகரீகம் அடைந்து விட்ட ஒவ்வொரு தமிழனதும் கடமை.
  21. கூட்டி கழித்து எல்லாம் பார்க்கத்தேவையில்லை - நேரடியாக பார்த்தாலே உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் நடந்த மனிதகுல விரோத நடவடிக்கைகளில் பாரிய பங்கு வத்திகானுக்கும் உள்ளது. எமது ஊரில் நல்லூர் ஏன் அதன் பூர்வீக அமைவிடத்தில் அல்லாமல் புதிய இடத்தில் உள்ளது, கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்ன ஆகின. சந்திரசேகர ஈச்சரம் எங்கே? மாத்தறையில் இருந்த விஷ்ணுகோவில் எங்கே? தென்னமரிக்க சுதேச மொழி, கலாச்சாரம், இனங்கள் எங்கே? இப்படி பலதில் இதை காணலாம். இதுகூட கொஞ்சம்தான், இன்னும் சிலுவையுத்தம், ஐரோப்பாவில் பேகன் குடிகளின் அழிப்பு என பலது உள்ளது. இது உலகபோர்களில் ஜேமனிக்கு கண்டும் காணாத ஆதரவு வரை தொடர்ந்தது. ஆனால் இன்றைய உலகில் வத்திகான் காலமாற்றப்படி அடக்கியே வாசிக்கிறது. ஆனால் தாலிபான்ஸ், சங்கிகள் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்கே நிற்கிறார்கள். நிற்க, தாலிபான்ஸ், வத்திகான்ஸ் அப்படி என்பதால்….நாமும் தமிழ் தாலிபான்கள் போல் நடக்க வேண்டுமா?
  22. நான் நல்லூரில் இருக்கும் தீவக மக்கள் அங்கே அரசியல் செய்ய கூடாது என சொல்லி இருந்தால் - நீங்கள் சொல்வது சரி. ஆனால் தமிழகத்தை பற்றி 50 வருடம் முன் குடி பெயர்ந்த வட இந்தியருக்கோ, தெலுங்கருக்கோ அதிகம் தெரியாது இருக்க வாய்புண்டா என கேட்பின் என்பதில் உண்டு என்பதே. இதை முன்பே பியூஸ் மானுஷ் விடயத்தில், பாண்டே விடயத்தில் கூறி உள்ளேன். இருவரும் அண்மையை குடியேறிகள். ஆகவே அவர்களுக்கு மண்சார்ந்த புரிதல் குறைவு என. அடிக்கடி மொழிவழி மாநில பிரிப்புக்கு முன், பின் என நான் வகுப்பதை நீங்கள் முன்னர் அவதானித்திருக்க கூடும். இதே காரணம் தான். ஆனால் இதே காரணத்தை வைத்து தமிழில் பேசி, 600 வருடமாக தமிழ் நாட்டில் வாழ்வோர் மீது நாம் பயன்படுத்த கூடாது. ஏன் என்றால் அவர்கள் வந்தான் வரத்தான் அல்ல. தமிழர்கள். இன்னும் 100 வருடத்தில் தீவகத்தோடு தொடர்பே அற்று போய், தம்மை நல்லூரான்களாக அவர்கள் உணரும் போது உங்கள் உறவினரின் சந்ததியும் வந்தான் வரத்தானாக இருக்காது. அவர்களுக்கு அப்போ நல்லூரின் வழமை அல்லது வழமை என ஏற்கபட்டவை பற்றி தெளிவு இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.