Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. உறவே… இந்தியாவுக்கு எதிராக மகிந்த, கோட்டாவை கூட ஆதரிக்கும் அளவுக்கு இருக்கிறது தற்போது ஈழத்தமிழர் மத்தியில் இந்திய வெறுப்பு உறவே.
  2. அப்போ பாகிஸ்தானிகள் சிலர் லாகூர்.கொம்மில் எனக்கு பயங்கரவாதிகள் என்றாலே நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்கள்தான் என எழுதுவார்களோ என்னமோ😎.
  3. கிட்டதட்ட குணா கமல் போல… அதை சொல்ல நினைக்கையில்… வார்த்தை முட்டுது….. சதாம் உசேனின் பேச்சாளர்…கெமிக்கல் அலி, பின்னாளில் கொமிக்கல் அலி என மாறி, அமெரிக்க படைகளை நாம் வெளுக்கிறோம்….என இருபது சொச்ச வருடத்துக்கு முன் செய்த கோமாளிதனத்துக்கு பிறகு …இப்போதான் ஒரு இராணுவ பேச்சாளர் இப்படி கோமாளித்தனம் பண்ணுவதை இந்த உலகம் காண்கிறது. உலகமே இந்தியாவை பார்த்து கெக்கெட்டம் விட்டு சிரிக்கிறது. இந்தியாவை எதிர்ப்பது = பாகிஸ்தானை ஆதரிப்பது என்பது எளியதும், தவறானதுமான சமன்பாடு. பாகிஸ்தானி தலிபான், பலூச்சி போராளிகள் என அவர்களும் இதை எதிர்கொள்கிறார்கள். கஸ்மீர் போராளி குழுக்கள், சீக்கிய போராளி குழுக்கள் போன்றவற்றை பாகிஸ்தான் ஆதரிப்பதை வைத்து இந்தியா பலருக்கு இப்படி ஒரு மூளைசலவையை செய்துள்ளது.
  4. நேற்று ஒரு பாகிஸ்தான் ஆளின் விபரிப்பை வாசித்தேன். அவரது தியரிப்படி இந்தியா முதலில் அணு ஆயுதத்தை ஏற்றி செல்ல கூடிய பிரம்மோசில் அணு ஆயுதத்தை ஏற்றாமல், வழமையான வெடிபொருளை நிரப்பி அனுப்பியாதம். இதில் வருவது அணு ஆயுதமா இல்லையா என தெரியாத நிலையில் - இந்த வெருட்டுக்கு பதில் சொல்ல… இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்படும் வலையமைப்பை பாக்கிஸ்தான் ஜாம் பண்ணியதாம். இவைதான் அணு ஆயுதத்தை காவி செல்ல கூடிய இந்திய ஏவுகணைகள். இதை ஜாம் பண்ணி முடக்கி விட்டால் இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தாலும் அதை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் - ஜெய்சங்கரும், தோவால் வாசிங்டனுக்கு போனை போட்டார்களாம். பாகிஸ்தான் ஆளின் விபரிப்பு. கஞ்சா கப்ஸா கதையாகவும் இருக்கலாம். தனக்கு இந்திய இராஜதந்திரிகளிடம் தொடர்பும் இருப்பதாக அவர் முன்பே யாழில் எழுதி இருக்கிறார். ஒரு குண்டு மணி அளவு கூட இந்த தாக்குதல்தாரிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க ஆதாரம் காட்டவில்லை. சகல வெளிநாட்டு ஊடகங்களும் இதை கேட்டன. ஆனால் இந்தியா எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் தன்னிச்சையாக தாக்கியது.
  5. அந்த மனு, இந்த மனு என தண்டனை குறைக்காமல், மேல்முறையீட்டில் விடுதலை செய்யாமல் - வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்குமாறு உறுதி செய்ய வேண்டும். வெளியில் வரும் போது தொங்கி போய் இருக்க வேண்டும். தலை.
  6. பிகு பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது. அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.
  7. ஆர்மீனியா? நானும் அப்படித்தான் எழுதி இருப்பீர்கள் என நினைத்தேன். சும்மா தேடிபார்த்ததில் - மார்ச் 31 அசர்பைஜானிகளால், அவர்களின் இனவழிப்பு நாளாக கொண்டாடப்படுகிறதாம்.
  8. நான் அறிந்தவரை நெய்தல் படையணி கராச்சி துறைமுகத்தை முற்றுகைக்கு உள்ளாக்கி விட்டதாம். அடுத்த அரைமணியில் பாகிஸ்தானை உலக மேப்பில் இருந்து அழிக்கவே போகிறார்கள் என்பதை அறிந்து, பாகிஸ்தான் டிரம்பை கெஞ்சி, டிரம் அண்ணனின் காலை பிடித்து அதன் பிந்தான் போர் நிறுத்த அறிவிப்பு வந்ததாம்.
  9. என்ன நடக்கும்…. எக்ஸ்ராவா மூணு ரபேலையும் சேர்த்தே கொடுப்போம்…ஆங்🤣 ஏற்கனவே இரெண்டு முறைக்கு அப்பால் ஒருவர் பிரதமராக கூடாது என ஆர் எஸ் எஸ் மோடிக்கு சொல்லி விட்டதாம். அமித்தை அடுத்த பிரதமர் என மோடி முன் தள்ள அதையும் ஆர் எஸ் எஸ் ரசிக்கவில்லையாம். தளபதி பட வில்லன் போல இருக்கும் யோகி ஆதிநாத்தை விரைவில் பட்டாபிஷேகத்துக்கு தயாராக்கிறரதாம் கான்பூர்.
  10. என்னுடைய வண சிங்கராயர் + மன்னார் கொனெக்சன், குரொஸ் கொனெக்சந்தான் என்பது கிட்டதட்ட நிருபணமாகி விட்டது. சவாககச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயம் அடைந்த போராளிகள் சீலன், குண்டப்பா, புலேந்தி அம்மானை காப்பாற்ற மருந்து வாங்கிய வகையில் வண பிதா ஆ சிங்கராயர் யாழில் கைதாகியுள்ளார். புலிகளுக்கு உறுதுணையாக இருந்த மரு ஜெயகுலராஜா பற்றிய குறிப்பில் இருந்து 👇 (27-10-1982 )ஆம் திகதி அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சீலன், புலேந்திரன், ரகு (குண்டப்பா) ஆகிய போராளிகள் காயமடைந்தனர். முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ். குடாநாட்டில் காயமடைந்த இவர்கள் மூவரையும் காப்பாற்றுவது இலகுவான விடயமல்ல. மேலதிக சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பும்வரை தேவையான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் டாக்டர் ஜெயகுலராஜா, அவரது சகோதரர் போதகர் ஜெயதிலகராஜா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவரின் துணைவியாக விளங்கிய நிர்மலா ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர். போராளிகள் காயமடைந்ததால் அதற்குத் தேவையான மருந்துகளைப் பெற முயற்சிப்பர் எனக் கருதிய உளவுத்துறையினர் மருந்தகங்களை கண்காணித்தனர். குறிப்பிட்ட வகை மருந்துகளை கொள்வனவு செய்தவர் யார் என ஆராய்ந்தனர். அந்த வகையில் வண. பிதா சிங்கராயர் கைதானார். அதன் தொடர்ச்சியாக வண. பிதா சின்னராசாவும் மேற்குறிப்பிட்ட அனைவரும் கைதாகினர். https://www.battinatham.com/2024/06/blog-post_671.html?m=1
  11. ஜஸ்டின் அண்ணா சொன்னதை போல் வண. ஆ சிங்கராயர் மாரடப்பால் மரணமானதை செய்தியாக வெளியிட்டுள்ளது “களத்தில்”.
  12. தியாகதீபம் திலீபனின் ஈகை பற்றிய நேரடி குறிப்பில் வண. ஆ சிங்கராயர் பற்றி இப்படி வருகிறது. கிறிஸ்தவ பாதிரியாரும், பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதிகள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார். https://thodarum.com/thileepan-unnanilai-arapporaattam-6/ ஒருவேளை வண சிங்கராயர் மன்னாரில் கைதாகி, தள்ளாடியில் கொடுமைப்படுத்த பட்டபின் மட்டகளப்பு, வெலிக்கடை என மாறி இருப்பாரோ? மேலும் தேடிப் பார்க்கலாம். இந்த மன்னார் கதையை எனக்கு சொன்னவர் என் அம்மா. அவர் இப்போ உயிருடன் இல்லை.
  13. நன்றி. இவர் சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளானாரா. நகங்களை பிடுங்கினர் என கேள்விபட்டேன்.
  14. தகவலுக்கும் பிழையை திருத்தியமைக்கும் நன்றி. நான் கேள்விப்பட்ட அல்லது வாசித்த இரு சம்பவங்களின் நியாபக வயர்கள் குறுக்கால் ஓடிவிட்டது என நினைக்கிறேன். வெலிக்கடை சிறை உடைக்கப்படவில்லை? முடிந்தால் இந்த தகவலை சரிபார்க்கவும். கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார் என கேள்விபட்டது நல்ல நினவு இருக்கிறது. இயற்கையாக மரணம் என்பது ஆறுதலான செய்தி. நாம் இருவேறு சிங்கராயர் பற்றி கதைக்கிறோமோ? ஒருவர் தாவீது அடிகளார் - யாழ் நூலகம் எரிந்த செய்தியோடு படுக்கைக்கு போய் அப்படியே சாவடைந்த தமிழ் அறிஞர். இன்னொருவர் ஆ. சிங்கராயர்? மட்டகளப்பு சிறை உடைப்பில் தப்பி போகாமல் இருந்தவர்.
  15. இதனால்தான் முன்னரை விட மிக உயர் ரக இராணுவ தளபாட, தகவல், தொழில் நுட்ப உதவியை இப்போ சீனா பாகிஸ்தானுக்கு வழங்குகிறது. இப்படி நடக்கும் என்பதைதான் ராகுல் காந்தி 2019 கஸ்மீர் அந்தஸ்து நீக்க விவாதத்தில் பாராளுமன்றத்தில் கூறினார். 2014 வரைக்கும் இருந்த இந்தியாவின் கஸ்மீரி கொள்கையை, பாகிஸ்தான் கொள்கையை மோடி/அமித்ஷா மாற்றியதன் விளைவுதான் சீனாவின் பாகிஸ்தான் மீதான அதீத ஆர்வமும், கிட்டதட்ட இரு நாடுகளும் ஒரு கூட்டணி என்ற நிலமை உருவாகியுள்ளதும். பாகிஸ்தான் நாலு துண்டாகினால் - அதனால் பாகிஸ்தானுக்கு அடுத்து பாரிய கேந்திர இழப்பு சீனாவுக்கே ஏற்படும். எனவே இப்போ சீனாவை பொறுத்தவரை பாகிஸ்தானை காப்பாற்றுவது, சீனாவை காப்பாற்றுவதே. மோடி/அமித் ஷா/ ஆர் எஸ் எஸ் இந்தியாவின் இரு எதிரிகளை ஒருங்கிணைத்துள்ளார்கள்.
  16. பாக்கிஸ்தான் இரு நாடுகள் ஆகும் —- உண்மையில் பாகிஸ்தானை 4 நாடுகள் ஆக்குவதுதான் ஆர் எஸ் எஸ் சின் திட்டம். பலூசிஸ்தான், மேற்கு பஞ்சாப், பஹ்தோனிஸ்ட்டான், சிந்து. இதை சுப்ரமணியம் சுவாமி போன்ற ஆர் எஸ் எஸ் தளகர்த்தாக்கள் மிக வெளிப்படையாகவே பேசி வருகிறனர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இதுவல்ல இந்தியாவின் கொள்கை. எப்போதும் நாடுகளின் கொள்கை முடிவுகள் அதன் தலைமையில் உள்ள அல்லது தலைமையை கட்டுப்படுத்தும் அரசியல் சக்திகளேலேயே முடிவு செய்யப்படும். ஆர் எஸ் எஸ் கொள்கை படி கஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிஜேபி அரசு, இப்போ மெல்ல மெல்ல, பாகிஸ்தானை நாலாக உடைக்கும் வேலையை ஆரம்பித்து நடத்துகிறது. அண்மையை போரின் ஆரம்பம் கஸ்மீரின் பெஹல்கம் தாக்குதல் என நாம் பலர் தவறாக எண்ணுகிறோம்… இல்லை… இது ஆரம்பித்தது ஓரிரு மாதங்கள் முதல் பலூசிஸ்தானினில் ஒரு தொலைதூர ரயிலை பிரிவினைவாதிகள் கடத்தி, பாக் ஆமி மற்றும் பொதுமக்களை கொன்று குவித்தத்தில். இதை இயக்கியது முழுக்க முழுக்க றோ. அதற்கான பதிலடிதான் பெஹல்கம். ஆனால் பாகிஸ்தானை இந்தியா உடைக்க சீனா விடாது.
  17. அண்ணை போர் முடிஞ்சிட்டு. உள்ளூர் விமான நிலையங்களும் பழைய நிலைக்கு வந்து விட்டன. இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஒட்டு மொத்த போர் நிகழ வாய்ப்பில்லை. இப்படி சின்ன சின்ன சண்டைகள்தான் நடக்கும். கார்கில் போரில் இந்தியா அறுதியும் உறுதியுமாக வென்றது. அது நிலப்போர். குறித்த ஒரு இடத்தில் மட்டும் நிகழ்ந்தது. பதான்கோட் தாக்குதலில் இந்தியா தாக்கி, பாகிஸ்தான் ஒரு விமானியை சுட்டு போர் கிட்டதட்ட சமநிலையில் முடிந்தது. இப்போ இந்த ஆகாய போரில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா திட்டவட்டமாக, அறுதியும் உறுதியுமாக பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது. இனியும் போர்கள் வரும். ஆனால் பாகிஸ்தான் முழுமையாக தோற்காது. அப்படி தோற்கும் நிலை வரின் அணு ஆயுதத்தை பாவித்து, இந்தியாவின் 2/3 பங்கை தம்மோடு கூட்டிப்போகும்.
  18. அது நக்கீரன் அட்டைப்படம். ஆனால் அதுவும் கோபால் மோர்பிங் செய்து போட்ட போலிப்படமே. உண்மையை தெரிய வைப்பதற்காக தான் பொய்யை கையில் எடுத்ததாக பின்னாளில் கோபால் கூறி இருந்தார்.
  19. இன்னொரு அவுரங்கசீப் சீண்டல் - நேற்றைய பத்திரிகை சந்திப்பில்: நான் நேற்று விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்…. PAF 6, IAF 0 😂😂😂😂 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரபேல், ஒரு மிக் ஒரு SU 300 உட்பட ஆறு விமானங்கள் இழப்பு. டிரோன்கள் எண்ணிக்கை தெரியவில்லை. நீங்கள் சொன்ன அளவில் படை வீரர் இழப்பு. இவைதான் உறுதிபடுத்த கூடியன. பெண் விமானிகளை பிடிக்கவில்லை என பாகிஸ்தான் இராணுவத் தளபதி நேற்றே சொல்லி உள்ளார். இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் போகவில்லை. ஆகவே எஜெக்ட் பண்ணி வீழ்ந்த விமானிகள் எல்லாம் இந்தியாவுக்குள்தான் வீழ்ந்துள்ளனர். விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பியுள்ளனர் என இந்திய வான்படை தளபதி நேற்று கூறினார். ஆனால் யுத்தம் இந்தியாவுக்கு முற்று முழுதான தோல்வி என்பது வெள்ளிடைமலை. இதுதான் நடந்திருக்கும். 2 கிழமையா அடிக்கப்போறோம், அடிக்கப்போறோம் என இந்தியா கூவிய பின், நன்கு அறியப்பட்ட முகாம்களில் இருக்க தீவிரவாதிகள் என்ன அடி முட்டாள்களா? அத்தோடு - ஏதாவது பெரிய தலை அவுட் ஆகி இருப்பின் - சாவு ஊர்வலம் பெரிதாக நடந்திருக்கும்.
  20. பாகிஸ்தானின் விமானப்படைத் தளபதி அவுரங்கசீப் (என்னே பெயர் பொருத்தம்!) கிட்டதட்ட ஒரு இண்டெர்நெட் லெஜண்ட் ஆகி விட்டார். இன்று அவரிடம் ரபேல் பற்றி கேட்டதும்… அவர் சொன்ன பதில்…. எம்மிடம் இருப்பதற்கு நிகரான, மிக வினை திறனான போர் விமானம் ரபேல்… சரியாக பாவிக்கத்தெரிந்தால் 🤣. இந்த போரில் வெற்றி பாக்கிஸ்தானிடம் என்பதே வெளிப்படையாக தெரியும் உண்மை. ஜெய்சங்கரும், அஜித் டோவலும் வாசிங்டனை தொடர்பு கொண்டு, இப்படியே யுத்தம் மேலே மேலே படி ஏறிக்கொண்டே போனால்…அணு யுத்தம் வர வாய்ப்புண்டு என சொன்ன பின்பே டிரம் தலையிட்டதாக சொல்கிறார்கள். இது உண்மையாயின் இந்தியாதான் யுத்த நிறுத்தத்தை கோரி உள்ளது. தானே தொடங்கி, தானே நிறுத்த கோரும் அவமானகரமான நிலை. பல காலமாக இந்தியா காஸ்மீர் விடயத்தில் யாரையும் தலையிட விடுவதில்லை. ஆனால் மோடி விட்டுள்ளார். அது மட்டும் அல்ல மோடி சொல்ல முன்பே போர் நிறுத்தம் என அமெரிக்கா சொல்லி விட்டது. இந்தியாவுக்கு சரியான இராணுவ, இராஜதந்திர மூக்குடைவை, பின்னடைவை தந்துள்ளது இந்த ஆப்பரேசன் சிந்தூர். உலக அரங்கில் கூட ஒரு நாடும் துணைக்கு வரவில்லை. இதற்கு பெரும் பங்கு - ஆர் எஸ் எஸ் சித்தாந்த வழியில் மோடியின் பிஜேபி அரசியல் தலைமை, ஜெய்சங்கர் எடுத்த வெளிநாட்டு கொள்கை முடிவுகள்தான். 2019 இல் அப்போதே ராகுல் காந்தி எதிர்வுகூறியது இப்போ சரியாகி உள்ளது. காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஆர் எஸ் எஸ் சின் நீண்ட நாள் அரசியல் கனவு. அதை பிஜேபி நடத்தி காட்டியது. இது சீனாவிற்கு ஏற்புடையது அல்ல (காஸ்மீரை சீனாவும் உரிமை கோருகிறது). அதே போல் மேற்குடன், இஸ்ரேலுடன் முன்பை விட அதி நெருக்கம் காட்டி கிட்டதட்ட அணி சேரா கொள்கையை கையேவிட்டார் மோடி. கஸ்மீரில் தன்னிச்சையா நடந்தது, ரபேல், இஸ்ரேல் டிரோன் உட்பட மேற்கோடு இராணுவ அரசியல் ரீதியில் நெருங்கியது - இந்த அரசியல் நகர்வுகளை மோடி அரசு எடுத்தமை… முன்பை விட பாகிஸ்தான்+சீன உறவை பலப்படுத்தி விட்டது. கார்கில் யுத்த நேரம் இந்தளவுக்கு சீனா பாக்கிஸ்தானுக்காக இறங்கவில்லை. இப்போ இறங்க மோடி அரசின் தப்பான நகர்வுகளே காரணம். மோடி அரசு காஸ்மீருக்கு உள்ள அரசியல் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நேரம் - இது எப்படி பட்ச விளைவை தரும் என ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரை. பப்பு என நாமெல்லாம் கிண்டல் செய்தாலும்…இப்படிதான் இப்போ நடந்துள்ளது.
  21. வெறும் சுட்டியாக கொடுத்துள்ளேன். தெரிகிறதா? https://x.com/clashreport/status/1921603692567867785

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.