Everything posted by goshan_che
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
VPN பாவித்தால் வேகம் குறைவதோடு, பலசமயம் page load ஆகாது. அதை நூத்து போட்டு வந்தால் வேகம் பரவாயில்லை.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நடு நிலைக்கு ஒரு நல்ல உதாரணம் பாபர் மசூதி 426 ஆண்டுகளாக இருந்தது 1992 இல் அதை இந்து காடையர் ராமர் கோவில் மீது கட்டப்பட்டதாக கூறி இடித்தனர். சட்டவிரோதமாக மசூதி இடித்த இடத்தில் 28 வருடம் ஒரு கொட்டாயில் ராமர் பூசை, சட்டவிரோதமாக செய்தனர். நீதி மன்ற தீர்ப்பு பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியில் உள்ளது, ராமர் கோவிலை இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மசூதியில் அடிவாரத்தில் எந்த ராமர் சின்னமோ, கோவிலோ இல்லை. மசூதி 1992 இல் இடிக்கப்பட்டது சட்ட விரோதம், பிழை. ஆனால் 🤣🤣🤣 - 28 வருடமாக சடவிரோதமாக மசூதியை இடித்து, சட்டவிரோதமாக ராமர் பூசை செய்தோர் மனம் புண்படும். எனவே 426 ஆண்டுகளாக மசூதி இருந்த இடத்தில் புதிய ராமர் கோவில் கட்ட வேண்டும். மசூதிக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், இதுதான் பிஜேபி ஆட்சியில் இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நிலை. அமித் ஷா கண்காட்டினால், சீமாந்தான் யேசு என்றே தீர்ப்பு எழுதுவார்கள்🤣.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இந்த வக்கீல், சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பார்த்த மாமா வேலைக்கு நன்றாக வெள்ளை அடிக்கிறார். SKK LegalSupreme Court: False Promise to Marry Not Rape | SKK LegalThe Supreme Court rules that a false promise to marry does not constitute rape in consensual relationships, clarifying legal perspectives on consent and marital intentions in intimate partnerships.👆சுப்ரீம் கோர்டின் அண்மைய வழக்குகளில் சொல்லப்பட்டது இதுதான்👇. கூடி வாழ்தல் (live-in relationship) முறையில் கணவன் மனைவியாக நீண்டகாலம் வாழ்ந்தோர், திருமணம் செய்வதாக கூறி மோசடி மூலம் பாலியல் வன்கொடுமை என புகார் கூறின் (allegation that consent was obtained via false promise to marry) - அதை ஆட்டோமேடிக்காக ரேப் என கருத கூடாது. இதைதான், மிக நியாயமாக சீமான் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது. அதாவது என்ன நடந்தது என அறுதியும் உறுதியுமாக பொலிஸ் விசாரிக்க வேண்டும். ஆனால் பொலிஸ் விசாரணையையே அடித்து நூத்து, மைனர் குஞ்சு அபராதம் கட்டினால் போதும் என சாத்தப்பன் நாட்டாமை போல் (ரன் படம்) தீர்ப்பு கூறியது இந்தியன் மாமா மன்னிக்கவும், சுப்ரீம் கோர்ட். பிகு இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெற்றியில் மிளிரும் குங்கும பொட்டு சாட்சி சொல்கிறது இவர்கள் எந்த கட்சியின் ஆட்கள் என🤣. நீதிபதிகள் நடுநிலையை நாட்ட மட்டும் அல்ல, காட்டவும் வேண்டும் என்பதுதான் அன்று wig அணியும் முறை வர ஒரு காரணம்.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இதில் எனக்கும் உடன்பாடே. குறிப்பாக சவுக்கு சீமானை விட மோசமான அங்கிறு தட்டி. குறிப்பான அமவுண்டை கொடுத்தால் அவிச்ச மீன் துடிக்கும் என்பார். இங்கே ரிக்ரொக் ஆய்வுகளை இணைக்கும் பலருக்கு ஜஸ்டீன் அண்ணா கொடுக்கும் அறிவுரைகள் போலத்தான் யூடியூப் வீடியோக்களும். ஆனால் இயற்கை நமக்கு பகுத்தறிவை வெறும் ஒப்பனைக்கான தரவில்லை, அதை நாம் பயன்படுத்தவும் வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இங்கே, தேவாவை ஸ்டாலின் சந்திப்புக்கு சீமான் கூட்டி போன படம்… அவர் சசிகலா குடும்பத்தோடு, அதிமுகவோடு நெருக்கமாக இருந்த படங்கள் காட்டப்படுகிறன. பல முண்ணனி கட்சி நிர்வாகிகள், இடும்பாவனம் போல உண்மையிலேயே இனமான உணர்வில் திமுகவை எதிர்க்கும் தம்பிகளை எல்லாம் விட்டுவிட்டு, இவரை ஏன் சீமான் ஸ்டாலினிடம் கூட்டி போனார் என்ற கேள்வியை நாம் கேட்காவிடில் நமது பகுத்தறிவை ஷோகேசில்தான் வைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
சீமா ஸ்டாலின் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் ஊழல் புரோக்கர் தேவா. நம்ம தம்பி இடும்பன் கார்த்திக் போன்றவர்களை சீமான் கழட்டி விட்டுள்ளார் போலுள்ளது.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
பகரவி, பவ்வி - என்ன படிப்பிதாலும், மாணவர்கள் தமக்கு பிடித்தமானதை மட்டுமே எடுப்பார்கள் - கவ்வி 🤣.
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
விஜயகாந்த்தின் பேச்சில், அவர் நோய் வாய்ப்பட முன்னரும் கூட, இல்லாத அளவு கொள்கை விளக்கம், தெளிவு விஜையின் திருச்சி பேச்சில் இருந்தது. எம்ஜிஆர் பிரிந்த போது அவரிடம் இரு டசின் எம் எல் ஏக்கள், ஆர் எம் வீரப்பன் போன்ற சினிமாகாரர்தான் இருந்தனர். திக கூட ஆதரிக்கவில்லை. பெரியார், அண்ணா வின் பெயர். எம் ஜி ஆரின் முகம் இவைதான் அன்றைய அதிமுகவின் ஈர்ப்பு சக்திகள். கொள்கை கூடாரம் என்றால் அப்போதும் திக, திமுகதான். எம்ஜிஆர் மன்றங்களை அதிமுகவாக மாற்றியவர் ஆர் எம் வி. அவர்ரைவிட நேரடி அரசியல் அனுபவம் கூடியவர் புசி ஆனந்த். ஆகவே எம்ஜிஆரை விட கூடிய கொள்கை வெற்றிடம் உள்ளவர் விஜை என்பது சரியல்ல. மதுரை மாநாட்டு பேச்சில் இருந்த பிழைகளை விஜை இங்கே சரி செய்துள்ளார். சீமான் போன்ற வாய்-வியாபாரிகள் , திமுக அமைச்சர்கள், என பலரும் விஜைக்கு கூடும் மக்கள் திரளை, காட்டு கூட்டம், நயந்தாராவுக்கு இதை விட கூடும் என அவமரியாதை செய்கிறார்கள். இது நல்லதற்கே. கூட்டம் வோட்டாக மாறாது, மாறாது என இவர்கள் சொல்ல, சொல்ல, அந்த கூட்டம் கடுப்பாகி விஜைக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை. அதிமுகவை செங்கோட்டையன் மூலம் பாஜக விழுங்கி விட்டது என்பது தெளிவு. நாளை எடப்பாடி டெல்லி ஓடுகிறார்.இனி அமித் ஷாதான் அதிமுகவின் அறிவிக்க படாத பொது செயலாளர். ஆகவே திமுகவுக்கு எதிரான, பாஜக சாராத எதிர்கட்சியை தமிழக மக்கள் தெரிய விரும்பின் - த வெ க மட்டுமே ஒரே தெரிவு. பிரேமலதா, கார்த்தி சிதம்பரம், திருமா, அண்ணாமலை, அண்மையில் சொல்லும் விடயங்கள் தவெக ஊதி தள்ள கூடிய சக்தி இல்லை என்பதையே காட்டுகிறது. இவ்வளவு ஏன் சீமானை எல்லாம் பெயர் கூட சொல்லாமல் ஜோக்கார் போல நடத்திய ஸ்டாலினும், உதய்யும் விஜைக்கு எதிர்வினை ஆற்ற, “புதிய எதிரி” என அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பார்க்கலாம்.
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
பீஜேபி எடுபிடி, ஊர்வன வகையறா எடப்பாடி வரலாம்… மீண்டும் வர ஆசைப்படலாம், டயர் தொழும் மிக்சர் மாமா பன்னீர் வரலாம்….மீண்டும் வர ஆசைப்படலாம், ஊழல் குடும்பத்தின் தற்போதைய சக்கரவர்த்தி ஸ்டாலின் வரலாம்…. அடுத்த யுவராஜன் உதய்ண்ணா வர ஆசைப்படலாம்…. செக்ஸ் சைக்கோ சீமான் கூட கனவு காணலாம்…. எனும் போது…… வருமானவரி துறை வீட்ட்டுக்கு போய் கிண்டியும் ஒரு உரோமத்தை கூட புடுங்க முடியாத, நடப்பில் 250 கோடி சம்பளத்தை விட்டு விட்டு வரும் விஜை முதலமைச்சர் ஆக வருவதில்லை ஒரு கேடும் இல்லை. பிகு வரலாம் என்கிறேன். வருவார் எனவில்லை.
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
விஜை வெல்கிறாரோ இல்லையோ…. தம்பிகளை இப்படி புலம்ப விட்டதே எனக்கு போதும் 🤣. அண்ணன் இப்போ எல்லாம் திமுக வை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதுல்லை. சபரீசனிடம் பெட்டியை வாங்கி கொண்டு விஜை மீது சரமாரி தொடுக்கிறார் சின்ன கருணாநிதி. தம் பங்குங்கு தம்பிகளும் தம்மாலானதை செய்கிறார்கள்🤣. அண்ணன் வழமைபோல் கல்லாவை நிரப்பி விடுவார். தம்பிகளுக்கு வழமைபோல் தொண்டை தண்ணி நஸ்டம்🤣
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
அதுதான் gutter language பேச (எழுத) நீங்கள் வந்தீர்களோ😂 அண்ணா, நீங்களோ, நாணோ தோற்ப்பின் - ஒதுங்குவது இல்லையே பந்தயத்தின் கோரிக்கை. ஆகவே சீமான் ஒதுங்கும் வரை கோஷா(ம்) அதிரும்🤣 மண்டியிடாத மானம் …. மானம் மண்டிதான் இடாது….ஆனால்🤣 இது ஆயிரம் காலத்து பயிர் அறுவடைக்கு தயாராகும் நேரம். அறுத்துட வேண்டியதுதான்🤣
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
மைனர் குஞ்சு சீமான், டெல்லி உச்ச நீதிமன்றில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் செய்ய தருணம் 👇
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இன்னும் 7 மாசம்தான்…🤣 #பந்தயம் அதே நீதிதுறையைத்தான் டெல்லியில் பாஜக முதன்மை வக்கீலை வைத்து வளைத்து, தனது செல்வாக்கால் - பாலியல் வன்முறை, கட்டயா கருக்கலைப்பு வழக்கை, வெறும் மன்னிப்போடு முடித்து வைத்துள்ளார் சீமான். ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர். இன்றைய திமுகவின் அதிகார மையங்களில் ஒருவர், திரைமறைவு நகர்வுகளில் முதன்மை வகிபாகம் உள்ளவர். 👆சீமான் கேட்ட தொகையை கொடுக்க இயலாத அதிமுக, ஆனால் அதே தொகையை கொடுத்து ஆளை வாங்கி போட்ட திமுக. #வாடகை வாய்
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
நிழலியின் ஊகம் நிஜமான தருணம்
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
உங்களுக்கு நினைவிருக்கும், சபரீசன் இலண்டனில் ஊழல் செய்யதார் என்பதாக நாதமுனி ஒரு ஆதாரமற்ற கட்டுகதையை (சுஜ ஆக்கம்🤣) எழுதி அதை நிர்வாகம் தூக்கியது. அதே சபரீசனைத்தான் ஏதோ தகாத உறவு காதலியை போய் பார்ப்பதுபோல் ஒழிச்சு போய் சந்தித்துள்ளார் அண்ணன் சீமான். இதை ஜூவி கிழித்து தொங்க போட்டபின், ஒரு காலத்தில் சீமானை அண்ணா, தம்பி என ஆரத்தழுவிய சவுக்கு சங்கர் அங்கே என்ன நடந்தது என மிக விபரமாக இந்த வீடியோவில் சொல்கிறார் (சுட்டி கீழே). சீமானுக்கும், தூசண துரைமுருகனுக்கும் விஜையை பிராண்டும் கொந்திராத்தை, ஸ்டாலின் வழங்கி உள்ளாராம் (மு க முத்து இறந்த நேரம் அவரின் குடும்பத்தை பார்க்காமல், ஸ்டாலினை சீமான் பார்த்த போது இந்த டீல் ஓக்கே ஆனாதாம்). இந்த டீலின் படியேதான் சபரீசன் சீமானுக்கு பணத்தை பட்டுவாடா செய்தாராம். இந்த பேட்டியில் சவுக்கு சீமான், அவரின் கட்சி நடத்தும் உண்மை நோக்கம், ரஜீவ் காந்தி என பலதை போட்டு உடைக்கிறார். இவை எல்லாம் சவுக்கு சீமானோடு கூடி குலாவவிய காலத்துக்கு முன்பே, யாழில் தெட்ட தெளிவாக எழுதபட்ட விடயங்கள். சீமானை நம்பி மோசம் போன யாழ்கள, புலம்பெயர் தம்பிகளை நினைக்கதான் ஒரே அழுகையா வருது 🤣. ஒருசிலர் தோசை கடை என, தேத்தண்ணி கடை என எஸ் ஆகிவிட்டார்கள். ஆனால் சில பாவப்பட்ட உயிர்கள், கடைசிவரை தொண்ட தண்ணி வத்த கத்தி கொண்டு இருந்தவயள்.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் விஜயலட்சுமி வழக்கு இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது. கைது செய்ய தடை இல்லை அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர். தவறாக பேச கூடாது எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-should-apologize-to-vijayalakshms-orders-sc-735115.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இனி வழக்கு வாபஸ்/தள்ளுபடி ஆனால் - சீமான், விஜி அண்ணியிடம் மன்னிப்பு கேட்டார் என்பதே அதன் பொருள். அப்படி கேட்காவிடில் தா நா அரசு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்பின் - விஜி அண்ணி இதுவரை சொன்னது உண்மை என்றாகிறது. சீமான் மட்டும் அல்ல, விஜி அண்ணியை கேவலமாக எழுதிய யாழ் கள ஆண் சிங்கங்களும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்க வேண்டியோரே. ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால் மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
சம்பந்தன் மட்டும் அல்ல. எனக்கும் உங்களுக்கும் கருத்து எழுத கூட இதுதான் பயன்படுகிறது🤣
-
போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது
உலகத்தில் மக்கள் எப்போதாவது போரை விரும்பி இருப்பார்களா 🤣. போரை விரும்பாதபடியால்தான் வசியால் அவுசுக்கும், கு சா அண்ணையால் ஜேர்மனிக்கும் ஓடிப்போக முடிந்தது. இதே போலத்தான் நானும். இப்படித்தான் பல ஈழத்தமிழர்களும் போரை விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் - சிங்களவன் வெல்ல முடியாத எதிரி, எனவே ஈழ விடுதலை போராட்டமே தவறு என்றல்லா ஆகி விடும் 🤣.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அடி வாங்கி மாசக்கணக்கான பின்னும்…கைப்புள்ள போல நாங்கள் அடித்தோம் என புலம்புவதில் இருந்தே தெரிகிறது வெற்றி பாக்கிஸ்தான் பக்கமே என்பது 🤣
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
அவர் அப்படி இல்லை என நான் கூறவில்லையே. ஆனால் சீமான் முகவர் என்பது தெரியும். முகவர்களின் அஜெண்டாவுக்குள் வீழ்ந்து இந்தியாவின் பெரும் அரசியல் கட்சிகளை நாம் பகைக்க கூடாது என்பதே என் கருத்து. ஒரு காங்கிரஸ் அரசியல்வாதியிடம் நீங்கள் இதை எதிர்பார்க்க முடியாது. அவர் இந்திய இராணுவ கொடுமையை எதிர்க்கவில்லை என்பதால் - அவரின் செம்மணி ஆதரவு குரலை நாம் உதாசீனம் செய்ய வேண்டுமா? இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக (சுயநலத்துக்காக கூட) எமக்கு ஆதரவு தரும் குரல்களை கூட, “தானம் கிடைத்த மாட்டை, பல்லை பிடித்து பார்க்கும்” ஈழத்தமிழரின் புத்தியால்தான் -2009 இல் எல்லாரும் சேர்ந்து எம்மை வெளுத்தார்கள், கேட்க நாதியற்று கிடந்தோம்.
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
நன்றி சசிகாந்த் செந்தில். சீமான் போன்ற ரோ ஏஜெண்டுகளின் பேச்சை கேட்டு இவரை ஒத்த காங்கிரஸ், திமுக ஆட்களுக்கு எதிராக புலம்பெயர் மொக்கசாமிகள் மிக அவதூறாக- எழுதியபின்னும் கூட இப்படி இவர் குரல் கொடுப்பது ஒரு ஆச்சரியமான சந்தோசம்தான்.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
தலைவர் இருந்திருந்தால் இப்ப அவருக்கு 71 வயதாகி இருக்கும். இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுள் 73. அவரோ சுகர் வருத்தகாரன். கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை என்பார்கள். 2009 இல் தப்பி இருந்தால் கூட அவர் இப்போ இயற்கை மரணம் எய்தி இருப்பார். இன்னும் இதை வைத்து வண்டி ஓட்டாமல் - நடக்கிற காரியத்தை பார்க்கலாம்.
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
இல்லை. த வெ க வருகைக்கு பின், நா த க அதிகம் செய்தியில் இல்லை. கள்ளு இறக்கல், மாட்டுக்கு மாநாடு எண்டு ஏதோ சர்கஸ் மாரி போய்விட்டது நாதக - அதனால் அதிகம் பார்ப்பதில்லை. இதை போன மாதம் அமரிக்காவின் prohibition ஏன் பிழைத்தது என விளக்கி உங்களுக்கு ஒரு பதில் போட்டிருந்தேனே? அதுதான் நடக்கும்.
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
கள்ளடிக்கிறத நியாப்படுத்த என்ன என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ல வேண்டி கிடக்கு🤣
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
நீங்கள் இருவரும் இப்போதுதான் முதன் முதலால காதலிக்க ஆரம்பிக்கிறீர்கள் என நான் கண்டுபிடித்துவிட்டேன்🤣. காதலித்துப் பார் காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்! கவிஞர் : வைரமுத்து
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
தம்மை தாமே “இரும்பு மனிதர்” என நினைத்து கொள்வோர்தான் எம் ஆர் ஐ களுக்கு பயப்படவேண்டும் ஐயா. ஏனையோருக்கு அவை நோய் அறிகுறிகளை கண்டு பிடித்து, நிவாரணம் தேட உதவும் கருகிவிகள்.