Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. என்ன அண்ணை மேடை ஏறி பேசும் அரசியல்வாதி போல்.. யுத்தம் முடிந்த பின் என்ன செய்தீர்கள்… குறை சொல்லும் வாய்கள் நிறை சொல்லுமா.. என இறங்கி விட்டீர்கள்? இங்கே ஒரு கட்டுரை நீலன் செய்த “பாதகங்கள்” குறித்து வெளியாகி உள்ளது… அதை பற்றி அலசி கொண்டிருக்கிறோம். புலிகள் போனதுடன் எல்லாமும் போச்சு. இது நம் ல்லோருக்கும் தெரிந்ததுதானே. நீங்களே கூட இந்தியா புலிகள் விடயத்தில் செய்தது அவர்கள் பார்வையில் சரிதான் என எழுதவில்லையா? ஆகவே - புலிகள் செய்த அரசியல் படுகொலைகள், குறிப்பாக இந்தியா, அமேரிக்காவை நேரடியாக சவாலுக்கு உட்படுத்திய கொலைகளை செய்தது சரிதான் என 2025 இல் கூட எழுதும் போது - அதை கேள்விக்கு உள்ளாக்குவது தப்பில்லையே. உதாரணமாக புளொட் மோகனை, ரசாக்கை, இப்படி பலரை போட்டதையா கேள்வி கேட்கிறோம்? இவர்கள் இராணுவ இலக்குகள். பதமநாபா கூட்டாளிகள் கூட இதே லிஸ்டில் சேரலாம். யாழ் மேயர் சரோஜினியை, செஞசோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை போட்டது கூட, ஈழதமிழரை தாண்டி வெளியே தாக்கம் ஏற்படுத்தாதவை. ஆனால் அமிர், ரஜீவ், நீலன், கதிர்காமர் கொலைகள் அப்படியா?
  2. இங்கே சந்திரிகா எப்படி பட்ட ஏமாற்றுகாரி, சிங்களவர் எப்படி எம்மை ஏமாற்றினர், என கட்டுரைகள் இணைத்த, கருத்து எழுதிய நுணா, புலவர் கவனத்துக்கு. இதை நான் மறுக்கவில்லை. ஒரு பள்ளி மாணவனாக சூப்பர் திட்டம் ஒன்றை நீலனும் பீரிசும் முன் வைத்து விட்டார்கள் என குதித்த பல பெருசுகளுக்கு - இதை மிக விரைவில் பெளத்த பீடம் அடித்து நூக்கும் என கூறினேன். அப்படியே நடந்தது. ஆனால் இதை எப்படி சிங்களம் எந்த ஒரு நியாயமான தீர்வையும் எமக்கு தாரது என்பதை காட்டும் உதாரணமாக அல்லவா புலிகள் பாவித்திருக்க வேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்க பங்களித்தார் என்பது மட்டுமே அவரை கொல்லும் அளவுக்கு மோசமான செயலா? குறிப்பாக அதே தீர்வை நாம் மூன்று வருடங்களின் பின் ஏற்புடையது என சொல்லிய போது. நீலன் 1995 இல் இருந்த நிலைப்பாட்டுக்கு நாம் 2003 இல் வந்தோம் எனில், அந்த நிலைப்பாட்டுக்காக, 1999 இல் நீலனை நாம் கொலை செய்தது பிழை என்பதை, 2003 இலாவது ஒத்துகொள்ள வேண்டாமா? அட்லீஸ்ட் 2025 இலாவது? பிகு நீலனின் அப்பா டட்லியோடு போனார், அம்மா இட்லி போட்டார் என்பதெல்லாம் “சேப்பில்லை, சேப்பிலை” - தீர்வு திட்ட தயாரிப்பில் ஈடுபட்டார் என்பதை தவிர நீலன் மீது சுமத்தப்படும் ஏனைய குற்றசாட்டுகள் என்ன?
  3. ஒரே தராசில் வைக்கவில்லை. ஆனால் முன்பே இன்னொரு திரியில் எழுதி இருந்தேன்…. வெள்ளை மாளிகைக்கு செலன்ஸ்கி போகும் முன்பே எழுதினேன்… அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என. சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும். ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம். இதை செலன்ஸ்கி உணர்ந்து, மிக மோசமான தனிப்பட்ட அவமானத்யும் தாங்கி கொண்டு, நயமாக செயல்படுகிறார் என நான் நினைக்கிறேன்.
  4. நீலன் செத்து சுண்ணாம்பாகிவிட்டார். யாரும் அவருக்கு கரிசனை காட்டி எந்த பயனுமில்லை. இங்கே எழுதுபவர்கள் நோக்கமும் அது அல்ல. அரசியல் படுகொலைகளால் நாம் ஒரு இனமாக 5% நன்மை அடைந்தால். 95 சதவீதம் அடைந்தது தீமை. அதிலும் ரஜீவ், அமிர்தலிங்கம், கதிர்காமர், நீலன் இந்த கொலைகள் எமது இனத்துக்கு தந்த பிரதி கூல பின் விழைவுகள், மிக மோசமானவை. எனவே அதை பற்றிய திரியில் அதை சிலாகிக்கிறோம். கேள்விகளுக்கு பதில் சொன்னால் உண்மையை ஒத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் கூட சிலர் மெளனமாக இருக்கலாம்.
  5. தியாகம் -ஆம். கட்டமைப்பு - ஆம். பலம் - நிச்சயமாக இல்லை. போரில் வேறு ஒரு நாடு புலிகளுக்கு பலமாக பின்னுக்கு வராத வரை - அவர்களுக்கு அவர்கள் உரிமை கோரிய நிலத்தை முழுகையாக கைப்பற்றி, பாதுகாக்கும் பலம் இருக்கவில்லை என்பதே கள யதார்த்தம். மேற்கு நாடுகள் அதிகம் தலையிடாத 2000 க்கு முந்திய காலத்தில், புலிகள் இராணுவ சமநிலைக்கு அருகான ஒரு நிலையை எட்டி இருந்த போது கூட வவுனியா, மன்னார், அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் சகலதும் அரச கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதுவும் கூட தலைவர் இருக்கும் வரை மட்டும்தான். உண்மையில் இலங்கை இறுதி போரை இவ்வளவு கடன்பட்டு நடத்தி இருக்கவே தேவையில்லை. இன்னும் ஒரு 15 வருடம் இவ்வாறு கடத்தி இருந்தால் தலைவருக்கு பின் எல்லாமும் விரைவாக உடைந்து போயிருக்கும். எமது இராணுவ பலம் என்பது முழுக்க முழுக்க ஒரு மனிதனின் ஆயுட்கால உழைப்பு. ஆனால் அவர் இல்லாமல் போனதும் அந்த பலத்துக்கு என்ன நடந்திருக்கும் என்பதை 2009 பின்னான நிக்ழவுகள் காட்டுகிறன. ஆனால் அதே ஆணியைத்தான் அவர்கள் நீலனை சுட்டு மூன்று வருடங்களில் ஒஸ்லோவில் கேட்டார்கள். நீலன் தனக்கு முடிந்த வரையில் முயலட்டும், நாம் எமகு வழியில் உறுதியாக இருப்போம், முயல்வோம் - நாம் வென்றால் தமிழருக்கு பெரு வெற்றி, நீலன் வென்றால் தமிழருக்கு சிறு வெற்றி என்ற அணுகுமுறையை ஏன் எடுக்கவில்லை?
  6. ஒரு முக்கியமான கேள்வி? யாரும் பதில் சொல்ல விழையலாம். ஜூலை 99 இல் நீலனை கொல்கிறார்கள். டிசம்பர் 2000 தில் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள். இது ஏப்ரல் 2001 இல் முறிந்தாலும் - விரைவிலேயே 2002 தொடக்கதில் சமாதான உடன்படிக்கை எழுதி விடுகிறார்கள். இடையே 2001 தேர்தலுக்கு முதலே கரிகாலன் மூலம் புலிகளின் மறைமுக ஆசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க சிவராமுக்கு கிடைக்கிறது. இதன் பின் கூட்டமைப்பு உருவாகி 2001 தேர்தலுக்கு பின் புலிகள் அதை தம் அரசியல் முகமாகவும் பயன் படுத்தி, அதற்காக செல்வம், சுரேஸ் என மிக மோசமான தமிழர்/புலி விரோதிகளை கூட மன்னித்து ஏற்று கொண்டனர். இவை எல்லாம் நீலன் கொல்லப்பட்டு இரு வருடத்துள் நிகழ்ந்து விட்டன. நீலனை விட்டு வைத்திருந்தால் - அவர் பின்னாளில் புலிகளுக்கு சார்பான ஒரு எம்பியாக கூட ஆகி இருக்கலாம். அதேபோல் சங்கரி முறுகிகொண்டு நிண்டபோது கூட அவரை கொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் கதிர்காமருக்கு அடுத்து பாரிய பின்னடைவை புலிகளுக்கு ஏற்படுத்தியவர் சங்கரி. அவர் மீது ஒரு கல்லை கூட எறியவில்லை. நீலனுக்கு அமெரிகாவில் உள்ள நட்பு வட்டம் பற்றி தெரிந்து கொண்டே, தற்கொலை போராளியை பாவித்து கொல்லும் அளவுக்கு அவர் விளைவித்த, அல்லது விளைவிக்க போகும் ஆபத்து என்ன என புலிகள் கருதினார்கள்? ஏன் இதை செய்தார்கள்?
  7. சுருக்கமாக, ரணிலிடம் புலிகள் “நம்பி” சமாதானபேச்சுவார்த்தையை (சந்திரிக்கா முப்படை தளபதியாக இருக்கும் போதே) ஆரம்பித்தது சரி என்றால், அதே சந்திரிக்கா - 1995 இல் சமாதான புறாவாக நம்பப்பட்ட சமயத்தில் அவருடன் சேர்ந்து ஏதோ ஒரு வழியில் தமிழருக்கு ஒரு கெளரவமான தீர்வை பெற்று விடலாம் என நீலன் முயன்றிருப்பின் - அது தவறாக, மரண தண்டனைக்குரிய குற்றமாக இருக்க முடியாது. ஒரே வித்தியாசம் புலிகளுக்கு நோர்வே உத்தரவாதம் இருந்தது (அல்லது அவ்வாறு இருப்பதாக புலிகள் நம்பினர்). ஆனால் இதே போல் ஒரு உத்தரவாதம் நீலனுக்கு உலகின் அப்போதைய ஒரே சுப்பர் பவரிடம் இருந்தும் கிடைத்திருக்கலாம். நீலனை சுப்பர் பவர் ஏமாற்றி விடும் எனவே அதை தடுக்க அவரை கொன்றோம் என்பது உங்கள் வாதம் எனில். புலிகளை நோர்வேயும் ஏமாற்றியது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
  8. நீலன் கொல்லப்பட்ட சமயம், புலிகள், ஜெயசிக்குறு எதிர்சமர், ஓயாத அலைகள் இரெண்டு, முல்லைதீவு, கிளிநொச்சி தலைமையக கைப்பற்றல்லல் என அவர்களின் மிக பலமான புள்ளிக்கு அருகில் இருந்தார்கள். ஜூலை 99 இல் நீலன் கொல்லப்பட, நவம்பர் 99 இல் ஆனயிறவை மீட்டு, முகமாலை வரை எல்லையை நகர்த்திய ஓயாத அலைகள் மூன்று ஆரம்பித்தது. ஆகவே நீலன் கொல்லப்பட்ட போது கூட புலிகள் மிக பலமான நிலையிலேயே இருந்தனர். பொருளாதார தடை - ரணிலுடன் பேச தொடங்கும் முன்பும் அதே பொருளாதார தடை இருந்தது. இராணுவமும், பாதுகாப்பு அமைச்சும் அப்போதும் சந்திரிகாவிடமே இருந்தது என நினைக்கிறேன்.
  9. உங்கள் கற்பனையில் உருவாகும் கஞ்சா கப்ஸா கதைகளுக்கு பெயர் சொந்தமாக சிந்திப்பதல்ல 🤣. நீங்கள் கற்பனையாக ஒன்றை உங்கள் மனதில் தோன்றும் hallucination இல் கண்டு கொண்டு, நிஜ ஆதாரங்களை எதிர்த்து உங்கள் கற்பனைதான் உண்மை என வாதிடுபவர் என்பதை யாழ் களம் அறியும். (முன்னர் இரு ஐடிகளில் இதையே செய்து, திரும்ப உள்ளே வரமுடியாதளவு மொக்கேனப்பட்ட பின் இப்போ இது உங்கள் 3வது ஐடி). நான் அப்படி அல்ல சொல்வதை ஆதாரம் சகிதம் நிறுவுபவன். அது இணையமோ இல்லை புத்தகங்களின் பதிவேற்றலோ - நான் கொடுக்கும் ஆதாரம் நம்பகமான இடத்தில் இருந்து வரும். உங்களை போல் ஒரு இம்மியளவு ஆதாரம் கூட கொடாமல் “நம்பினால் நம்புங்கள்” என எழுதுபவர் எல்லாம் ஆதாரத்தை கண்டதும் - இது இணைய ஆதாரம் என்று ஓடுவதை தவிர வேறு வழியில்லாதவர்கள். எந்த அதிகாரியும் அல்ல, சாதிவாரி கணெக்கெடுப்பு என்ற கொள்கை முடிவு (மாற்றம்), ஆர் எஸ் எஸ் எனும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத அமைப்பில் உள்ள அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்டு, அதன் தேர்தல் அரசியல் முகமான பிஜேபியால் அரச கொள்கையாக வரித்து கொள்ளபட்டுள்ளது. இங்கே முழுக்க முழுக்க கொள்கை முடிவை எடுத்தவர்கள் அரசியல்வாதிகள். இதில் எந்த அதிகாரிக்கும் சம்பந்தமில்லை. இதில் நீங்கள் பொல்லை கொடுத்து அடிவாங்கியதுதான் மிச்சம்.
  10. கஞ்சா கப்ஸா கதைகளை நீட்டி, முழக்கி எழுதினாலும் அவை கஞ்சா கப்ஸா கதைகள்தான்…🤣. இந்த திரியிலேயே, கருத்து கள ஏனைய உறவுகளே தூத்துகுடி கொத்தனாரை இனம் கண்டு கொண்டுளார்கள். இதில் எப்படி நீட்டி முழக்கினாலும் ஒரு பலனுமில்லை.
  11. அடியும் புரியாத நுனியும் புரியாத அலட்டல். ஆ எஸ் எஸ் மோகன்பாகவத் தலைமை எடுத்த கொள்கை முடிவு இது. சாதிவாரியாக இந்துக்களை ஜன சங்கின் கீழ் ஒருங்கிணைத்து, முஸ்லிம், கிறிஸ்தவர்க்கு எதிராக கட்டமைக்கும் அவர்களின் கொள்கையின் அடுத்த பரிணாம படி நிலை இது. இதை யோகி ஆதிநாத் எதிர்த்தார் ஆனால் ஏனைய பல பிஜேபி மாநில அரசியல்வாதிகள், ஆதரித்ததால் ஆர் எஸ் எஸ் இந்த முடிவுக்கு வந்து, பிஜேபி கொள்கையை மாற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் எடுத்த கொள்கை முடிவு. ஆதாரம் கீழே 'சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ்' - கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு?! ஆர்.எஸ்.எஸ் சொல்லியது என்ன? இந்த சூழலில்தான் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துக்கள்தான் தற்போதைய ஹாட் டாபிக். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்றது. அதில் பேசிய தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், "சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும்.சில சமயங்களில், அரசாங்கத்துக்கு எண்கள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் அவர்களின் வளர்ச்சிக்குச் சிறப்புக் கவனம் செலுத்த முடியும். அதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், பிரச்னை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஆனால் அது, அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். அது ஓர் அரசியல் கருவியாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது" என்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் கருத்தைக் கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம், "ராகுல் காந்தி பேசுவதாலேயே சாதிவாரி கணக்கெடுப்பு அரசியலாகிவிடாது. அப்போது பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது என்ன அரசியல்?. பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகமான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். உயர் சாதியினரின் வாக்குகள் உங்களுக்குக் கிடைக்காது. ஓ.சி பிரிவில் கைவைத்து விடுவார்கள் என்பதால் தானே எதிர்க்கிறீர்கள். சமூக நோக்கத்தோடுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. நீங்கள் எதற்காக அமைதியாக இருக்கிறீர்கள். நீதிமன்றத்தில் புள்ளிவிவரங்கள் தானே கேட்கிறார்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கூட இதனால்தான் பிரச்னை ஏற்பட்டது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி கணக்கெடுப்பு நடத்தும்போது ஓபிசியின் விவரங்களையும் சேகரிக்க வேண்டியது தானே?. பீகாரில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கூட சாதிவாரி கணக்கெடுப்பு சரியானது இல்லை என்று கூறி நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசும். முதலில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிய இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். தேர்தலுக்கு ஏற்ப அவர்களின் கொள்கைகள் மாறும். ஓட்டுவாங்க வேண்டும் என்பதற்காக மாற்றி, மாற்றிப் பேசுவார்கள். ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தி, அதன்பிறகு சமஸ்கிருதம், இந்தியாவை டெல்லியிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது. ஓட்டு வாங்குவதில் சிக்கல் இருப்பது தெரிந்தால் ஆதரவு தெரிவிப்பது போலத் தெரிவிப்பார்கள். வாக்குகள் கிடைத்த பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். 370-ஐ நீக்குவோம் என்று சொல்லியா மெகபூபாவுடன் கூட்டணி வைத்தார்கள். இதுபோல் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆகவே அதிகாரத்தைப் பிடிக்க எப்படியான நெளிவு, சுழிவும் செய்துகொள்வார்கள். அவர்களுடைய கொள்கை இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. எனவே ஆர்எஸ்எஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனச் சொல்வதெல்லாம் போகிற போக்கில் சொல்லும் விஷயம். அவர்களது பேச்சுகள் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. சந்தேகத்துக்குரியது தான்" என்றார். 👆 https://www.vikatan.com/amp/story/government-and-politics/rss-insists-on-caste-wise-census-what-modi-government-will-do
  12. இதை முன்பே எழுத நினைத்தேன். ஆனால் பல வயது போன உறுப்பினர்களின் மன புண்படும் என நினைத்து தவிர்த்தேன். இப்போ நீங்களாகவே கேட்பதால் எழுதுகிறேன். அமெரிக்காவில் டிரம்பின் தேர்வின் பின், கோமாளி செலன்ஸ்கி எப்படி எல்லாம் வளைந்து கொடுத்து, நிலை மாறி, மாறி, முதுகு வளைந்து, அவமானப்பட்டு, தன் நாட்டின், தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் நலனை முடிந்தளவு உறுதி செய்ய முனைகிறார் என்பதை கடந்த 6 மாதத்தில் கண்டிருப்பீர்கள். நலிந்த தரப்பொன்றின் தலைமக்கு இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்பு இது. உலகின் முடிவு எப்படியும் அமையலாம், அது அவரவர் சுயநலம் சார்ந்து அமையும், ஆனால் அவர்களின் சுயநலத்தை எம் நலனோடு இணைக்க, கொஞ்சம் கெட்டிக்காரத்தனமும், நிறைய humility யும் தேவைப்படும். இவை இல்லாவிடில், எமக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இல்லை எனில் - முறிக்கப்படுவோம். பட்டோம். பூமரங் கேள்விபட்டிருப்பீர்கள் அண்ணை. நீலன் மீது வைத்த குறி ஒரு பூமரங்.
  13. அப்படியாயின் எந்த சிங்கள அரசியல் தலைவரிடமும் எந்த வித பேச்சுவார்த்தைக்கும், யாரும் போயிருக்க கூடாது. எமக்கு ஒரு பிரச்சனை இருந்தால்தான், தீர்வு தேவைப்படும். பிரச்சனையை என்பதை எமக்கு தருபவர்கள் உடன் பேசித்தான் தீர்வை எட்ட முடியும். இல்லை என்றால் பலம் மூலம் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை எமக்கு இருக்க வேண்டும். இந்த முறைக்கு தீர்வு திட்டம் தேவையில்லை. பலம் மட்டும் போதும். நீலன் பலம் மூலம் அன்றி, பேச்சின் மூலம் ஒரு தீர்வை அடைய முயலின் - அவர் தீர்வு திட்டத்தை எமக்கு பிரச்சனை தரும் சந்திரிக்காவிடம்தான் கொடுக்க வேண்டும். இதைத்தான் புலிகளும் பின்னாளில் செய்தனர். ரணில் மட்டும் திறமா? ஆனால் அவரிடம் புலிகள் சமாதான ஒப்பந்தமே செய்தனர்.
  14. அடேய் கொள்ளை அடிக்கிறது நீங்களடா🤣. மீன் கொள்ளையர்கள் மீது கரந்தடி தாக்குதல் நடத்திய இலங்கை கடல்காப்பு போராளிகளுக்கு வாழ்த்து.
  15. கார்னி எப்போ எந்த வயதில், என்ன முறையில் பிரித்தானிய பிரஜா உரிமை எடுத்தார் என்பதை மேலே நான் தந்த ஆதாரம் சந்தேகத்துக்கு அப்பால் நிறுவுகிறது. இதனான் நீங்கள் இந்த திரியில் எழுதியவை எல்லாம் கஞ்சா கப்ஸா கதைகள் என்பதும் சந்தேகத்துக்கு அப்பால் நிருபணமாகியுள்ளது. மீதமாக நீங்கள் எழுதியவை எல்லாம்… சும்மா…லுலுலுலா…
  16. யாரும் இந்த கேள்வியை நீலனிடம் கேட்டதாகவோ அவர் பதில் சொன்னதாகவோ நான் அறியவில்லை. ஆனால் இரெண்டு விடயங்கள் சாத்தியம். 1994/95 இல் சந்திரிகா ஒரு நேர்மையான தீர்வை தர முயல்வார் என சகல வகையான தமிழ் மக்களும் நம்பினார்கள். சந்திரிகா அனுப்பிய பாலபட்டபெந்தி தலைமையிலான சமாதான குழுவுக்கு யாழில் ஹெலிகொப்டர் இறங்கிய பல்கலைகழக வளாகத்திலேயே மக்கள் கூடி ஆரவார வரவேற்பு கொடுத்தனர். புலிகளின் ஆளுகைக்கு வெளியே இருந்த தமிழர்களும் ஏகோபித்து சந்திரிகாவை வாக்கு போட்டு ஆதரித்தனர். இப்படி பலர் தனிப்பட்டும் நம்பினர். பிபிசி சிங்கள சேவை சந்தேசியவின் பணிப்பாளர் வசந்தராஜ இலங்கை திரும்பி ரூபவாகினியை பொறுப்பேற்றார். ஆனால் சில காலம் போக, வெறுத்து போய் இலண்டன் திரும்பி தமிழ் கார்டியனில் எழுத தொடங்கினார். இப்படி ஒரு நம்பிக்கை. அல்லது அமெரிக்கா மூலம் சந்திரிக்காவை பணிய வைக்கலாம் என நீலம் நம்பி இருக்கலாம். சாகும் போது நீலனும், சந்திரிகா இனவாதிகள் குறிப்பாக ரத்வத்தை, பீடாபதிகள், கொட்டகதேனிய போன்றோரின் பேச்சுக்கு ஆடுவதால் நீலன் வெறுப்படைந்து இருந்தார் என்போரும் உளர். முழுக்க முழுக்க பொய்யான நாடகம் ஒன்றை சந்திரிகாவுடன் சேர்ந்து ஆடி இருக்கலாம். அப்படி இருப்பினும் கூட, அரசியல் கொலைகள் சரியா பிழையா என்பதற்கு அப்பால், நீலன் யாரின் ஆள் என தெரிந்தே அவரில் கைவைத்தது அறிவார்ந்த செயலா?
  17. அடுத்த யாழ் அகவைக்கு இதை வைத்து ஒரு கதை எழுத போகிறேன். நான் மறந்தாலும் நீங்கள் நினைவூட்டுங்கள்.
  18. பாவம் மாவை… அந்த தேசிய பட்டியல் சீட்டை கெஞ்சி அழுதும் குடுக்காமா விட்டுட்டாங்கள். ஏக்கத்தோட செத்திருப்பார் போல… கூட்டத்தில சிறிதரனுக்கு அங்கால இருக்கிற வெறும் கதிரையில வந்து குந்தி இருக்கிறார். கந்தையா அண்ணையிட்ட யோகசங்கரியும் கூட்டத்துக்கு போனவரோ எண்டு கேட்க வேணும்.
  19. மிக்க மகிழ்ச்சி. எனது நீண்டநாள் கோரிக்கையான, கனவான Ealam-Tamil Origin Elected Representatives Forum ETOERF உருவாக வேண்டும் .
  20. அண்மை வரை அவுசில் வலதுசாரிகள்தான் முன்லையில் நின்றனர். ஜஸ்டீன் அண்ணாவின் “தம்பு”வின் புண்ணியத்தில் - இடதுசாரி தொழிற்கட்சி அமோக வெற்றி. தம்பு வாழ்க😂
  21. இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கு பல மில்லியன் வாரிசில்லா சொத்து கிடைத்துள்ளது, வங்கி கணக்கு விபரம் அனுப்புங்கள் என்று நைஜீரியாவில் இருந்து வரும் இமெயில் போல் உகண்டாவில் இருந்து வந்தால் உடனே டிலீட் பண்ண கூடாது. உண்மையாகவும் இருக்கலாம்😂.
  22. நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார். அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா? நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர். நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர். இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது. இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும். இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.
  23. புலிகள் மண்மீட்பு நிதி என குடும்பத்துக்கு ஒரு பவுண் வாங்கினார்கள். ஆனால் இப்படி ஆபரணங்களாக அவர்கள் சேர்க்கவில்லை. கொள்ளை அடிக்கவும் இல்லை. பணத்தை தங்க கையிருப்பாக (நாட்டின்/ அமைப்பின் திறைசேரி) சேமித்தால் கூட, உருக்கி தங்க கட்டியாக அல்லவா வைத்திருப்பார்கள். இதென்ன மார்ர்வாடி கடை போல் இருக்கிறது ? தமிழீழ வைப்பகத்தில் மக்கள் வைத்திருந்த நகைகளின் ஒரு தொகுதியை கணக்கு காட்டிவிட்டு, தங்க கட்டிகளாக புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகை தங்கத்தை ஆட்டையை போட்டு விட்டார்கள்.
  24. விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொன்னதில் பலதில் உடன்பட்டாலும்: இப்போதெல்லாம் இந்த “பல்லினதுவம் ஒரு வரம்” என்பதற்கு ஒரு எல்லை இருப்பதாக நான் கருதுகிறேன். ஓர் அளவுக்கு மேலானாதும், மிக விரைவானதுமான பல்லினகலப்பு, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகி விடும் நிலையை உருவாக்கி விடுகிறதோ? ஜப்பான் - இனத்தூய்மை பேணினாலும் - 2ம் உலகயுத்தம் முன், பின் என இருவேறு பட்ட காலங்களில், இரு வேறு முறைகளில் ஐடியாக்களின் தாயகமாக இருந்து முன்னேறினார்கள். ஆகவே அவர்களின் அண்மைய 30 வருட தேக்கத்தை இதனோடு முடிச்சு போட முடியுமா? கொரியாவும் இப்படி ஒரு நாடுதான். அப்படியா? இது எனக்கு புது செய்தி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.