Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. பையா…தோ ரபேல் விமான் …ஹோகயா🤣 இந்தியாவின் குண்டுகள்👇
  2. ஐ ஜாலி…. அப்ப இன்னொரு அபினந்தன் டீவியில் தோன்றி தேத்தணி விளம்பரம் செய்வார் என எதிர்பார்க்கலாம்🤣.
  3. பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரின் கொட்லி, முசபரபாத் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் தாக்குதலாம். டிஸ்கி இரெண்டு கிழமையாக ஆ…ஊ…என சீன் போட்ட பிராந்திய வாலரசு….பாகிஸ்தானில் மூன்று குடிசைகை கொழுத்தி விட்டு ஏதோ பெரிய வெற்றி போல் பில்டப் கொடுக்கிறார்கள்.
  4. ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு. இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா. இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்: BBC NewsIndia says it has launched strikes on Pakistan and Pakist...A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.
  5. தம்பி நன்னி, 2 பக்கத்துக்கே சந்தோசப்பட்டனியள்… 4 பக்கம் அண்ணன் மூச்சை பிடித்து இழுத்து வந்துள்ளேன்… சந்தோசம்தானே🤣. பாதி பெருமை கந்தையா அண்ணை, நுணாவுக்கும்🤣.
  6. இருக்கலாம். இதற்கு நீலன் தெரிந்தே உடன்பட்டிருக்கலாம்… அல்லது பயன்படுவது போல் இருந்து, ஒரு தீர்வை முந்தள்ளுவோம் என நீலன் நினைத்திருக்கலாம்.. அல்லது நீலனை பயன்பட அனுமதிப்பது போல் நடித்து, சந்திரிகா, நீலன் இருவரையும் அமெரிக்கா பயன் படுத்தி இருக்கலாம்.. ஆனால் நீலனை கொன்று, சந்திரிக்கா எதிர்பார்க்காத அதீத நற்பலனை அவருக்கு புலிகள் கொடுத்தனர். தமக்கு இராணுவ தகவல், போராளி, மக்கள் உயிர் இழப்பை ஏற்படுத்தியவர்களை தவிர ஏனையோர் எவரையும் கொன்றது தப்பே. ஆனால்…மேலே குசா அண்ணைக்கு கொடுத்த பதிலை பார்க்கவும். நீங்கள் சொல்வது நியாயமானதே. அமெரிக்கா தனது நலனை ஒட்டி, இலங்கை சார்பு நிலையை ஆரம்பம் முதலே எடுத்தாலும்…. அதை மாற்றியமைக்க வேண்டிய நிலையில், மாற்ற முயல வேண்டிய நிலையில் நாம் இருந்தோம். நீலனின் கொலை, இதற்கு நேர் எதிராக - அமெரிக்காவின் எம் மீதான நிலைப்பாட்டை மேலும் இறுக செய்தது.
  7. இப்படி இருந்தார்கள் என்பது உண்மை ஆனால் இதில் புலிகள் தேவையில்லாமல் ஏனைய பிரதிநிதிகளை மழுங்கடிக்க அதிக சிரத்தை எடுத்து கொண்டார்கள். ஏக பிரதிநிதிகளாக எம்மை ஏற்கிறீர்களோ இல்லையோ, தீர்வு வேண்டும் எனில் எம்மோடு தான் பேச வேணும் என சொல்லி விட்டு சும்மா இருந்திருக்கலாம். இந்த ஏக பிரதிநிதிகள் விடயத்தில் புலிகள் அழுங்கு பிடியாக நின்றது - அவர்கள் சர்வாதிகாரிகள் என்ற இலங்கையின் பிரச்சாரத்துக்கு துணை போனது. இல்லை தீர்வு புலிகளிடம் பேசாமல் சாத்தியபட்டிருக்காது. ஆனால் ஒரு புறம் புலிகள், மறு புறம் இனவாதிகள் - இடையே ஒரு தீர்வை ஆராய, தொடக்க புள்ளியாக நீலனின் முயற்சி இருந்திருக்கலாம். அப்படிதான் அதை மேற்கு நாடுகள் பார்த்திருக்கும். புலிகள் அப்போ இருந்த நிலையில், இலங்கை எதையும் திணித்து வென்றிருக்க முடியாது.
  8. ஓம்… ஆனால் ஆங்கிலத்தில் all men are equal but some men are more equal than others என்பார்கள் - அதே போல் சில கொலைகள் எம் சரிதிரத்தின் போக்கையே மாற்றின. இல்லை - வேறு வழியில்லை இப்போதே முடிப்போம் என மேற்கில் இருந்து சொல்லபட்டதால், போனார்கள். இதுதான் உண்மை.
  9. ஐயா, இதைவிட மொழி விளங்காது செல்லபிராணிகளின் உணவை வாங்கி சமைத்து சாப்பிட்டு கஸ்டபட்ட ஜேர்மனி கதைகளும் தெரியும். கஸ்டபடவில்லை என நான் கூறவில்லை. ஆனால் இப்போ அவர்கள் அதே நிலையில் இல்லைதானே? ஏன் மற்றநாடுகளில் கள்ள மட்டை போடுறது கஸ்டமோ😂.
  10. நல்லா கேளுங்க புலவர் - உதே வயித்தெரிச்சல்தான் எனக்கும்🤣.
  11. மன்னிகவேண்டும் புலவர் என்னிடம் மாயக்கண்ணாடி ஏதும் இல்லை. செலன்ச்கி இவ்வளவு இறங்கி போன பின்னும் டிரம்ப் அவரை கைம்கழுவலாம்…. ஆனால் செலன்ஸ்கி மிகவும் இறங்கி போய், தன் சுயமரியாதையை விட்டு கொடுத்து, அமெரிக்காவை உக்ரேனுக்கு எதிராக திருப்பும் புட்டினின் வியூகம் வென்று விட கூடாது என முயல்கிறார். குறைந்த பட்சம் அடுத்த நாலு வருடம் - அமெரிக்காவும், ரஸ்யாவும் சேர்ந்து உக்ரேனை அடிக்கும் நிலை வரக்கூடாது என்பதில் மிக சிரத்த்தையா செயல்படுகிறார். இதற்கு மேலும் அவரால் டிரம்ப்பை தன் பக்கம் வைத்திருக்க முடியாது போகலாம். செலன்ஸ்கி கொடுக்க முடியாத விலைகளை ரஸ்யாவிடம் கொடுக்கும் படி டிரம்ப் வற்புறுத்தி இது முறியலாம். ஆனால் செலன்ஸ்கியின் கொள்கை பிடிவாதத்தால் அல்லது நெகிழ்வு போக்கு இன்மையால் - மேற்குலகில் எதிரிகளை சம்பாதித்தார் என யாரும் சொல்ல முடியாது. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
  12. அண்ணை. உண்மையில் இந்த “அமல் படுத்துடா தீர்வை” கோரிக்கைக்கு நான் மேலே இரு தரம் பதில் எழுதிவிட்டேன். மூன்றாவது தடவையாக: பிக்குகளும், பாராளுமன்றமும், இந்தியாவின் குறை அதிகாரப்பகிர்வும், இந்திய மத்திய அரசின் எதிர்ப்பும் இருக்கும் வரை - இலங்கையில் சிங்களவர் எமக்கு நியாயமான தீர்வை தரமாட்டார்கள். இது கனம் கந்தையா அண்ணை மட்டும் கண்டு பிடித்த விடயம் அல்ல. 99% சதவீதமான இலங்கை தமிழர் ஏற்று கொள்ளும் கள யதார்த்தம். நானே அண்மையில் என் பி பி வெற்றியில் பல யாழ் உறவுகள் குதூகலித்த போதும், இதற்கு முன் பல தடவையும் இதை எழுதியுள்ளேன். ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதால் -வட்டுகோட்டை தீர்மானத்தை தலைக்கு வைத்து படுக்கவில்லை. திம்பு கோரிக்கையை போர்த்தி படுக்கவில்லை. 87 உடன்படிக்கையை ஏற்றுகொள்கிறோம் என அறிவிக்காமல் விடவில்லை. மங்கள முனசிங்க தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் அளிக்காமல் விடவில்லை: பிரேமதாச, சந்திரிக்கா, ரணில் உடன் தனியே யுத்த தவிர்ப்பு மட்டும் அல்ல, சமாதான பேச்சுவார்த்தையும் கூட பேசாமல் விடவில்லை. ஓஸ்லோ பிரகடனத்தை ஏற்று கொள்ளாமல் விடவில்லை. இலங்கையில் பிக்குகள் தீர்வை தரமாட்டார்கள் என்பதால் இவற்றை எதையும் முயலாமல் விடவில்லை. அதே போல் இன்னொரு முயற்சிதான் நீலன் பங்களித்த தீர்வு திட்டமும். புலிகளை தவிர ஏனைய அனைத்து ஈழத்தமிழர் அமைப்புகளும் தனி நாட்டு கோரிக்கையை கைவிட தயாராகவே இருந்தார்கள். அல்லது கைவிட்டார்கள். புலிகள் கூட 87 இலும், 2002-2007 வரையான காலத்திலும் கைவிட்டார்கள், அல்லது கைவிட்டதாக போக்கு காட்டினார்கள். பாலா அண்ணை இதை கைவிட வேண்டிய காலம் வந்து விட்டது என்பதை தலைவருக்கு சொன்னார் எனவும், அதனாலேயே அவர் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் படி பணிக்கப்பட்டார் என்றும் யாழில் சில கட்டுரைகளை வாசித்தும் உள்ளோம். ஆகவே நீலன் எழுத உதவிய தீர்வு திட்டம், ஒன்றும் தமிழர் தரப்பு இதுவரை ஏற்க மறுத்த விடயம் அல்ல. அப்படி ஒரு திட்டத்தை எழுத உதவியதால் தமிழர் போராட்டத்தின் கற்பு ஒன்றும் களங்கப்படவும் இல்லை. ஒரே விடயத்தை நீலன் முன்வைத்தால் அது விடுதலை போராட்டத்துக்கு செய்யும் துரோகம். அதையே புலிகள் ஒஸ்லோவில் உடன்பட்டால் அது யதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசியல் செய்தல் என நீங்கள் வியாக்கியானப்படுத்த விழைவது, தர்க்க கேடானது. பிகு கொஞ்சம் தலைப்பில் இருந்து விலகி. தமிழர் அரசியல் அபிலாசைகளை வட்டு கோட்டை பிரகடனத்தின் முன், வட்டு கோட்டை பிரகடனத்தின் பின் என பிரியுங்கள். வ.கோ.பி.மு நாம் கோரி நின்றது - எம்மை சம இலங்கையராக நடந்துங்கள், இன ஒதுக்கலை கைவிடுங்கள், இன வன்முறையை தவிருங்கள், மொழிக்கு சம அந்தஸ்து கொடுங்கள் - இவைதான். 50:50 காலம், பின் தனி சிங்கள காலம் அனைத்திலும் இவைதான் எமது கோரிக்க்கைகள். அப்போதைய எமது கோரிக்கைகள், இந்திய மாநிலங்களை ஒத்த அதிகாரபகிர்வு என்பது கூட இல்லை, இணைந்த வடகிழக்கு மாகாண சபை கூட இல்லை. பின்னாளில் ஜே ஆர் தர முனைந்த மாவட்ட சபைக்கு நிகரான. ஒற்றையாட்சி இலங்கைக்குள் சம பிரசைகளாக நடத்துங்கள், பிராந்திய சபைகளை தாருங்கள் என்பதே பண்டா-செல்வா ஒப்பந்த அடிப்படை. வ.கோ.பி.பி தான் தனிநாடு என்ற கோரிக்கை, சுயநிர்ணயம், பாரம்பரிய வாழிடம், காணி அதிகாரம், குடியேற்றத்தை தடுத்தல், பொலீஸ் அதிகாரம் என எமது அபிலாசைகள் அடுத்த கட்டதுக்கு போனது. அதன் வழி வந்ததுதான் திம்பு கோட்பாடுகள். ஏன் நாம் முதல் கட்ட அபிலாசைகளில் இருந்து இரெண்டாம் கட்ட அபிலாசைக்கு போனோம்? முதல் கட்ட அபிலாசைகளை கூட இலங்கை எமக்கு தராது என்பதால். ஆனால் நீலன் காலத்தில் அரச கருமமொழி பிரச்சனை ஒழிந்து விட்டது. சிறி இல்லை. எமது பழைய கோரிக்கைகளையும், திம்பு கோரிக்கையாக உருவெடுத்து நிற்கும் எமது புதிய அபிலாசைகளையும் பலன்ஸ் பண்ணி, மண்டேலாவை விட அதிக சதவீத வாக்கில் வென்ற சந்திரிக்காவுக்கு சிங்களவர் மத்தியில் இருந்த நன்மதிப்பையும் பயன்படுத்தி, சிங்கள மக்களும் ஏற்கும் ஒரு தீர்வை பெறலாம் என்று நீலன் முயன்றிருக்கலாம். நீலனின் இந்த முயற்சியை பிக்குகளும், புலிகளும் அனுசரித்து நடந்து - அதை அமல்படுத்த ஒரு வெளியை உருவாக்கி இருந்தால் - இன்று ஜேவிபி உருவாக்கி விட்டதாக சொல்லும் ஒப்பீட்டளவில் இன ஒதுக்கல் அற்ற இலங்கை அன்றே உருவாகி இருக்கவும் கூடும். 1995 க்கு பின் இழக்கப்பட்ட அத்தனையையும் இழக்காது தவிர்த்திருக்கலாம். இது இப்படித்தான் நடந்திருக்கும் என நான் சொல்லவில்லை. பொருளாதார சிதைவுக்கு பின் சிங்கள கூட்டு மனோநிலை மாறியது போல் 1995 இல் நிலமை இருக்கவில்லை. ஆனால் - மாறும், மாற்றலாம், வெளிநாட்டு அளுத்தத்தை தகுந்த முறையில் பயன்படுத்தலாம் என நினைத்து ஒரு மனிதன் ஒரு திட்டத்தை தயாரிக்க உதவுவது அப்படி ஒண்டும் பாரிய குற்றம் இல்லை.
  13. செம்பா வந்தியத்தேவனின் வீரமிகு குதிரையின் பெயரும் கூட. வேகமாக புள்ளி பட்டியலிலும் ஏறும்🤣
  14. என்ன அண்ணை..என்ன நடந்தது? நீங்களும் செம்பாவும் பதறுவதை பார்த்தா நான் முதல்வரே ஆகிவிட்டேனோ என நானே ஒரு கணம் ஜெர்க் ஆகிவிட்டேன். ஆனாலும் 16 டு 15 போறதுக்கெல்லாம் இந்த ரியாக்ஸன் ஓவர் சொல்லி போட்டன்🤣.
  15. அமிருக்கும் நீலனுக்கும் இடையான உங்கள் வித்தியாசப்படுத்தலை நான் ஏற்கிறேன். அமிர் போல் பொய் வாக்குறுதிகளை தந்து, உசுப்பேத்தி, இளைஞர்களை போருக்கு அனுப்பி விட்டு பின் அவர்களையே எதிர்த்து நீலன் அரசியல் செய்யவில்லை. அதே போல் அமிர் இந்திய படைகளின் அராஜகத்தை காபாந்து பண்ணியது போல், அல்லது புலிகளை கடுமையாக உலக அரங்கில் சாடியது போல் நீலன் செய்யவில்லை என்பதே என் நினைவு. ஆகவே நீலன் ஒரு பதவி மோகம் கொண்ட அரசியல்வாதி என நான் ஆமோதித்தது பிழைதான். ஆனால் அவர் 1996-99 தமிழ் மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் பலதை கண்டிக்காமல் - அதை செய்தவர்களோடு தனிப்பட்டும், அரசியலிலும் நட்பு பாராட்டினார். குறிப்பாக, கிரிசாந்தி, செம்மணி படுகொலைகள், என அப்போ அரங்கேறிய பலதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதியே என நான் கருதுகிறேன். புலிகள் அளவுக்கு அல்லது அதை விட மேலாக எமக்கான ஒரு கெளரவமான தீர்வை நீலன் விரும்பினாரா? என்றால் உண்மையில் என் பதில் எனக்கு தெரியாது என்பதே. இந்த விடயத்தில் நான் ஆம் என அறுதியிட்டு கூற கூடியது புலிகளை மட்டுமே. நீலன் ஒரு அமைதியான backroom operator போலவே எனக்கு அப்போ தென்பட்டார். கொல்லும் போது அவரின் திட்டங்கள் கூட நமுத்து போய் அதை சீண்டுவாரில்லாத நிலை வந்து விட்டது. அப்படி இருக்க ஏன் கொன்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை. இதற்கான ஒரு பதில் இருந்தாலும் - அதை இங்கே கொலையை நியாயப்படுத்தி எழுதும் எவரும் தெரிந்திருப்பார்கள் என நான் நம்பவில்லை.
  16. கரைகள் ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை🤣. அவர்கள் ஆய்வுக்கு ஓய்வு விட்டா…அவர்கள் வீட்டில் அடுப்படியில் பூனை படுத்து வாய்வு விடும் நிலமை ஆகிவிடும். ஆகவே அவித்து கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போ தமிழா, தமிழா பாண்டியன், டாக்டர் காந்தராஜ் என சமையல்காரர்களும் எண்ணிக்கையில் கூடி விட்டார்கள்.
  17. சூனியம் வைக்கும் போது கால் மண்ணில் படவேணும் இல்லை எண்டால் சூனியம் ரிட்டர்ன் ஆகி விடும் என்கிறார் முஸ்லீம் மலையாள மாந்திரீகர் மஞ்சுமெல் பாய் . உ.சா வின் ஆலோசனைப்படி ரெபேல், மிக், மிராஜ் எல்லாத்துக்கும் விங்கில் தேசிக்காய், காஞ்ச மிளகாய் கட்டி தொங்க விடப்பட்டுளதாக ஆய்வாளர் மணி கண்ணை உருட்டி, உருட்டி சொல்லிகிறார். ஆனால்… “வாங்கடா பாகிஸ்தானுக்குள்ள… தேசிக்காய்க்கு எஸ்டிராவா நாமமும் பூசி அனுப்புறோம்” என கொக்கரிக்கிறாராம் பாகிஸ்தான் தளபதி சாவல் ஹமீது.
  18. ஆனால் அதை மீள மீள நாம் உலகிற்கு நியாபக படுத்தி, நடை முறையில் உதாரணங்கள் மூலம் காட்டி கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் - இவர்களுக்கும் வேறு வழியில்லை என அரசுகள் இல்லாவிடினும், ஏனைய நாடுகளில் உள்ள பொது நோக்கர்களாவது சிந்திப்பார்கள். இல்லாமல் தீர்வை எழுத உதவினார் என்பதால் நாம் ஒரு தமிழரையே போட்டோம்- பழி முழுக்க எம்மீது. எல்லோரும் பிக்குகளை மறந்தே போனார்கள். இது மிகவும் உண்மை. அமிருக்கும் நீலனுக்கும் இது அவர்களின் பதவி, அதிகாரம் சம்பந்தபட்ட விடயம். ஆனால் புலிகளுக்கு இது ஒரு இறுதி இலக்கு சம்பந்தபட்ட விடயம். புலிகள் இந்த இனத்தின் நீடித்த சுதந்திர வாழ்வின் மீது சொந்த பிள்ளைகள் மீது பெற்றார் கொள்வது போல கரிசனை கொண்டிருந்தார்கள். அமிர், நீலனுக்கு இது வெறும் பதவி அரசியலுக்கான பாதை. ஆனால்…. அவர்களை அரசியலின் மூலம்தான் டீல் பண்ணி இருக்க வேண்டும் கை வைதால் ஆபத்து என்பதை உணர்ந்திருக்கவும் வேண்டும்
  19. உடான்ஸ் சாமியாரிடம் வாட்சாப்பில் கேட்டதில் - யாக குண்டத்தில் அமித்ஷா குடும்ப தலைபிள்ளையை இறக்கி அளப்பெரும் சோதியில் கலக்கவிட்டால் - பாகிஸ்தான் பலநூறாக சிதறும், சர்வதேச கிரிகெட்டும் தப்பிக்கும் என்கிறார்🤣.
  20. ஆர் எஸ் எஸ் திராவிடர் கழகம் போல் ஒரு அரசியல் இயக்கம்தான். அது ஒன்றும் அதிகாரிகள் சம்மேளனம் அல்ல. பரவாயில்லை அதிகாரிகள்தான் முடிவு எடுப்பார்கள் என்பதில் இருந்து ஆர் எஸ் எஸ் சும் என உம் விகுதிக்கு முன்னேறி விட்டீர்கள் 🤣. இன்னும் கொஞ்ச காலம்👆 இதை நீங்கள் தொடர்ந்து அப்பியாசம் செய்தால் உங்கள் hallucination இல் இருந்து விடுபட்டு… யாழ்கள உறவுகளின் நக்கல், நைதாண்டிக்கு ஆளாகாமல், மொக்கேனப்படமால் நல்ல கருத்தாக எழுத முடியும். நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை.
  21. இப்போ ஒன்றுக்கும் வாய்ப்பில்லை. ஆனால் நீலன் மூலம் ஒரு திட்ட வரைபை இலங்கையை செய்ய வைத்து - அந்த வரைபை விட மேலதிகமாக எமக்கு வேண்டும் என்றோ அல்லது நீலன் சொன்ன முதல் வரைபுதான் எமக்கு வேண்டும் என்றோ கேட்டிருக்கலாம். அப்போ எம்மீது யாரும் பேச்சுவார்த்தையை குழப்பும், வன்முறையை நாடும், அரசியல்வாதிகளை கொல்லும் பயங்கரவாதிகள் என சொன்னால் அது எடுபடுவது குறைவாக இருந்திருக்கும். அப்ப ஒரு தீர்வே இல்லாத ஒரு வெறும் எழுத்துக்குத்தான் அமெரிக்காவின் உயர் பீடத்தில் நண்பர்களை கொண்ட ஒருவரை போட்டுத்தள்ளி - வாங்கி கட்டி கொண்டோமா?
  22. தமது இராணுவ தகவல்களை எதிரிக்கு வழங்கும் ஒற்றர்களுக்கு, துணை, ஒட்டு படைகளுக்கு மரண தண்டனை வழங்குவதும்…. ஒரு குறித்த பிரச்சனைக்கு தம்மை விட வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கும், ஆயுதம் தரிக்காத, நன்குஅறியப்பட்ட அரசியல் தலைவர்களை கொல்லுவதும் ஒன்றல்ல. தமிழ் ஈழம் வேண்டும் என்பது எப்படி ஒரு நிலைப்பாடோ…அதே போல் தமிழ் ஈழத்துக்கு மாற்றாக பிரியாத இலங்கையுள் ஒரு தீர்வை பெற நாம் தயார் என்பதும் இன்னொரு நிலைப்பாடே. இதில் ஒரு பகுதியை இன்னொரு பகுதி போட்டுதள்ளியது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது. ஒரு தீர்வு திட்டத்தை தயாரிக்க உதவியது எப்படி விடுதலை போருக்கு எதிரான செயலாகும்? இதற்கான பதில் மேலே சொல்லப்பட்டுள்து. எதிரியோடு அடிபட சிலர் வேண்டும். எதிரியோடு நட்பாக இருந்து (முஸ்லிம் அமைச்சர்கள் போல்) காரியம் சாதிக்க சிலர் வேண்டும். இதில் நீலன் இரெண்டாம் வகை.
  23. இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை? நேரடியாக அன்றி நீலன் போன்றோர் மூலம் ஏற்படுத்த முனைந்த ஏற்பாட்டை புலிகள் நீலனை போட்டு தள்ளி சிதறடித்ததால் - மேற்கு நாடுகள் தாமே நேரடியாக இறங்கி, புலிகளை மிரட்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். நீலனை போட்டிருக்காவிட்டால் - இப்படியான இக்கட்டு புலிகளுக்கு வராமலே போயிருக்கலாம் அல்லவா? யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன் என்பார்கள். அதைபோலத்தான் இந்த லிஸ்டில் இருப்போரும் - இவர்கள் இருந்தால் நசல், ஆனால் போட்டுத்தள்ளினால் அதைவிட பெரிய நசல்.
  24. இதுவே நோக்கம் எனில் - அதை அவர்களை போட்டு தள்ளி நாம் வென்று விடலாம் என நினைப்பது அறிவார்ந்த செயலா? நீலன் இப்படிதான் கபட எண்ணத்தில் செயல்படுகிறார் என சந்தேகித்தால் அவரை அவர் பாணியில் அல்லவா டீல் செய்திருக்க வேண்டும். அவரை போட்டு தள்ளியதால் புலிகள் மேலும் பலம் பெற்றார்களா? அல்லது பலம் பெறுவதுக்கான தடைகள் விலகியதா? இல்லை - மேலும் பலவீனப்பட்டே போனார்கள். இதை நாமும் பயன்படுத்தி - இலங்கை அரசு அமைத்த குழுவே பிரேரித்த முதலாவது நகலை ஏற்க நாம் தயார் ஆனால் அதை கூட பேரினவாதிகள் தரவில்லை என நீலனை கொல்லாமல் பிரச்சாரம் செய்திருக்க முடியாதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.