-
Posts
14517 -
Joined
-
Last visited
-
Days Won
158
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
விஜயலட்சுமியை இயக்குவதே "திராவிட கட்சி"தான்.. "லட்சுமிகளின்" பின்னாடி அவங்கதான்.. எகிறிய சீமான் கட்சி HemavandhanaUpdated: Sunday, September 3, 2023, 6:40 [IST] திராவிட கட்சிகள்: ஊட்டியில் சீமான் பேசும்போது, நடிகை விஜயலட்சுமி என் மீது குற்றம் சாட்டியது போலவே, பிரபல கன்னட நடிகர் உட்பட பலர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.. அதற்கான வீடியோவை பாருங்கள்.. லட்சியங்களுடன் அரசியலுக்கு வந்துள்ள என்னை லட்சுமிகளை வைத்து அவதூறு பரப்புகின்றனர்... என்னுடைய வளர்ச்சியை தாங்க முடியாமல், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அரசியல் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன. இது மிகவும் கீழ்த்தரமான கேவலமான அரசியலாகும். ஒரு நாள் நான் வெடித்து சிதறினால் அரசியல் கட்சிகள் தாங்காது. விஜயலட்சுமியை நான் கல்யாணம் செய்து இருந்தால் கல்யாண போட்டோவையோ, அல்லது கோவிலில் எடுத்த போட்டோவையோ அவர் வெளியிடட்டும் என்றார். லட்சுமிகளின் பின்னணியில் சில கட்சிகள் இருப்பதாக சீமான் கூடிறய நிலையில், நடிகை விஜயலட்சுமி பின்னணியில் திராவிட கட்சிகள் இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் மகளிரணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பில், நடிகை விஜயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் தந்துள்ளனர். விஜயலட்சுமி: பிறகு செய்தியாளர்களிடம் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா சொன்னதாவது, "நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பக்கூடிய நபர். இப்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி சீமான் மீது பொய்யான புகாரை விஜயலட்சுமி பரப்பி வருகிறார். விஜயலட்சுமி பணம் பறிக்கும் நோக்கிலேயே சீமான் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். இதன் பிண்ணனியில் திராவிட கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது. 12 வருடங்கள் கழித்து பொய்யான புகாரை அளிக்கும் விஜயலட்சுமி ஒரு பெண் என்பதால் சீமான் பொறுமையாக இருக்கிறார்.. ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி பல ஆண்கள் மீது புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இதனை தொழிலாகவே அவர் செய்து வருகிறார். நடிகை விஜயலட்சுமியிடம் யார் யாரெல்லாம் பணம் கொடுத்து உள்ளனர் என்ற ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். புகார்கள்: இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் பெலிக்ஸ், "கடந்த 2011ம் ஆண்டு புகார் தந்துவிட்டு, மறுபடியும் இப்போது 2023ம் ஆண்டு அதே புகாரை அளிக்கிறார். இதையெல்லாம் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாது... ஆர்ட்டிவிசியல் இன்ட்டலிஜென்ஸ் மூலமாக சீமானும், விஜயலட்சுமியும் ஒன்றாக இருப்பது போல போட்டோவை உருவாக்கி இருக்கிறார்கள். விஜயலட்சுமியுடன் சீமான் திருமணம் செய்து கொண்டது என்பது நடக்கவே இல்லை... 2011ல் போடப்பட்ட வழக்கு பொய்யான வழக்கு. அதனை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். யார் மீதும் புகார் கொடுக்கலாம், வழக்கும் பதிவு செய்யப்படலாம். ஆனால் நீதிமன்றம் தான் அதற்கு முறையாக தீர்ப்பு வழங்க வேண்டும்... இழப்பீடு தொகை: 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சுமி அவதூறு பரப்புகிறார். ஹரி நாடார் அவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்பதற்காக புகார் அளித்தவர்தான் இந்த விஜயலட்சுமி... விஜயலட்சுமி அளித்த பொய்யான புகாரில், காவல் ஆய்வாளர் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.. இது குறித்து நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட உள்ளோம்" என்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த சீமான், "போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் விசாரிப்பார்கள்.. அது போலீசாரின் கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்... அதுக்கெல்லாம் பயப்படும் ஆளில்லை... நான் வேறு ஊருக்கும் ஓடிப்போகவில்லை. வேறு மாநிலத்திற்கும் ஓடிப்போகவில்லை" என்றார். பயம் இருக்கட்டும்: உடனே செய்தியாளர், அதிமுக ஆடசியில் நடவடிக்கை இல்லை, ஆனால், திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொல்கிறாரே? என்றார்.. அதற்கு சீமானோ, "தாராளமா நடவடிக்கை எடுங்களேன்.. என்னதான் எடுப்பீங்க எடுங்களேன் நானும் பார்க்கறேன்.. எனக்கு பயமில்லை.. அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/vijayalakshmi-complaint-and-seeman-naam-tamizhar-party-slams-diravidian-parties-535329.html -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
இங்கே எழுதுவோருக்கு - நேரமினக்கேடுதான். ஆனால் இது அரசியல்லுக்கும் அப்பாற்பட்ட விடயம். 1. எவ்வளவு மோசமான பெண்ணாக இருந்தாலும், இந்த விடயத்தில் அவர் சொல்லுவதை நம்ப தேவையில்லை ஒரு fair hearing ஆவது கொடுக்க வேண்டும் என இங்கே பலரால் யோசிக்க முடியவில்லை. 2. ஏலவே பெயர் கெட்டு கிடக்கும் ஒரு பெண்ணை - “நாறல் மீனை பூனை அணுகுவது போல்” - ஏன் முக்தார் அணுகுகிறார்? என யாரும் கேட்கவில்லை. மாறாக முக்தாரிடம் போக மாட்டேன் என கூறி வீரலக்ஸ்மியிடம், விஜயலக்ஸ்மி சண்டையிட்டதை வைத்து அவருக்கு விசர் பட்டம் கட்ட பார்கிறார்கள். 3. விஜயலக்ஸ்மி மட்டுமில்லை, கொஞ்சம் ஓவராய் கேள்வி கேட்டால் “கோசான் மட்டும் என்ன நேர்மையா?” என முகமறியா கருத்தாளர் மீதே அவதூறு எழுப்பி வாயை மூட வைக்க முயல்கிறார்கள். நாளைக்கு கோசானுக்கும் விஜலக்சுமிக்கும் கசமுசா என யூடியூப் வீடியோ வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை🤣. 4. எப்படியாவது, விஜலக்சுமிக்கு விலைமாது, விசரி பட்டம் கட்டியாவது சீமானை காப்பாற்றி விட அந்தரிக்கிறார்கள். இதுதனியே அரசியல்வாதி ஒருவர் மீதான தனிமனித -வணக்கம் மட்டும் அல்ல. அதையும் தாண்டி -மண்டையில் ஏறிப்போன ஆணாதிக்க மனோநிலையின் வெளிப்பாடே இது. இங்கே சீமானுக்கு ஆதரவாக எழுதிய அத்தனை பேரும் - அவரின் அரசியல் எதிரியான திராவிட கொள்கையை தூக்கி பிடிக்கும் வைரமுத்துவுக்கும் ஆதரவாக எழுதினார்கள். இங்கே அரசியல் சித்தாந்தத்தை மேவி நிற்பது ஆணாதிக்க மனோநிலையே. இதை எழுதினால் இவர் பெரிய முற்போக்கு முனுசாமி என நக்கல் வேறு அடிப்பார்கள்🤣. -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
பாவம் - அவரே நானும் ரவுடிதான் என நிறுவ படாதபாடு பட்ட மனுசன். அதுதான் விட்டு விட்டேன். -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
வழக்கு தொடர அல்லது தொடராமல் விட அவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். இங்கே நீங்கள் அனைவரும் விஜலக்ஸ்மியின் motive என்ன என்பதில்தான் தொங்கி கொண்டிருக்கிறீர்கள். ஆனல் கேள்வி - சீமானின் தனி மனித ஒழுக்கம், அவர் மீதான நம்பகம் பற்றியது. விஜயலக்ஸ்மி பற்றியதல்ல. ஏனென்றால், சீமாந்தான் அரசியல்வாதி. விஜயலாசுமி இல்லை. சீமாந்தான் பிரபாகரனின் வழி நடக்கும் வாரிசு என தன்னை தானே அறிவித்தார். விஜய லக்சுமி அல்ல. சீமாந்தான் அமைப்பை தூக்கி எறிந்து விட்டு புதியதாய் அமைக்க வந்த புரட்சியாளன் என தன்னை தானே கூறினார். விஜய லக்சுமி அல்ல. விஜை லக்சுமி - விலைமாதாகவே, பணம் பறிப்பவராகவே இருக்கட்டும் - அவர் என்னாவாய் இருந்தால் எமக்கு என்ன? அவர் பொதுவாழ்வில் இல்லை. உலக தமிமிழினத்தின் தலைவர் என தன்னை சொல்லிகொள்ளவில்லை. ஆகவே அவரினை பற்றி நாம் கரிசனை கொள்ளவில்லை. சீமான் மீதான அவரின் புகார் உண்மையா இல்லையா என்பதற்கு பதில் மட்டுமே தேவை. ஒரு விலைமாதுவை கூட பாலியல் வல்லுறவு கொள்ள கூடாது என்பதுதான் சட்டம். ஆகவே விஜலட்சுமிக்கு எத்தனை முன்னாள் காதலர்கள் உள்ளார்கள் என்பது ஒரு கருது பொருள் அல்ல. அவர் சீமானை நோக்கி சொல்லும் குற்றசாட்டு உண்மையா? பொய்யா? இதை அரசியல் தலையீடு இன்றி தீர விசாரிக்க வேண்டும். இப்படி விசாரிப்பதை எதிர்பவர்கள் யாவரும், நடந்ததாக சொல்லபடும் அநீதிக்கு துணை போவோரே. தத்தம் வாழ்வில் நேர்மை கேடாய் வாழ்ந்தோருக்கு அப்படி வந்து தொலைப்பது வாஸ்தவம்தான். இங்கே பலர் தம்மை போல எல்லாரையும் எடைபோடுவதாக தெரிகிறது. நான் பொதுவாழ்வில் இல்லை. இருப்பினும் நான் எறியும் கற்கள் எவையும் என்னை நோக்கி எறிய பட முடியாதனவே என்ற நம்பிக்கை உண்டு. பிகு காதல் மட்டும் அல்ல மண முறிவும் ஒரு குற்றம் அல்ல. அநேகர் வாழ்வில் நடப்பதுதான். ஆனால் இங்கே விஜயலக்சுமி சொல்லும் குற்றசாட்டு வெறும் உறவு முறிப்பு அல்ல. -
நீங்கள் பகிர்ந்த வீடியோவை நீங்கள் பார்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வீடியோவில் முதல்பாதி கொழும்பில் ஹரிகரன் நிகழ்சியில் நடந்ததை சொல்லி விட்டு, அடுத்த பகுதி சீமானும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து பேசியுள்ளார் என அவருக்கான மறைமுக பிரச்சாரமாக அமைகிறது. இந்த வீடியோவில் - சீமான் ஹரிகரன் நிகழ்சி பற்றி எதுவும் சொன்னதாக இல்லை. ஹரிகரன் நிகழ்சிக்கும் சீமானின் இந்தி திணிப்புக்கு எதிரான கொள்கைக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. இது வழமையான trending topic ஐ பாவித்து தமது சரக்கை விற்று விடும் மலிவான அரசியல் கட்சிகளின் பிரச்சார உத்தி. சீமானின் மீதான வழக்கு பற்றிய திரியில் (கவனிக்க தமிழக அரசியல் பற்றிய திரியில் அல்ல) அதை பற்றி கதைத்தோர் மீதே விசனப்பட்ட நீங்கள், சம்பந்தமில்லாத ஹரிகரன் திரியில் சீமான் வீடியோவை ஏன் இணைத்தீர்கள்? இதைத்தான் கேட்டேன். பிகு கருத்து பரிமாற்றலில் - ஒருவர் என்ன சொல்ல வருகிறார் - என மற்றையவர் ஊகிக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. மாறாக சொல்ல வருவதை வெட்டு ஒண்டு துண்டு இரெண்டாக சொல்லி விட வேண்டும்.
-
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
இதில் 3ம் வீடியோ பழைய விடியோ என நினைக்கிறேன். 1,2 ம் வீடியோ - இதில் குழப்பம் ஏதும் இல்லை - உதவி செய்வதாக கூறிய வீரலக்சுமியும், கணவரும் விஜைய லட்சுமியை பேட்டிக்கு பின்பும் முக்தாரிடம் “உதவி” க்கு போகும் படி வற்புறுத்தி உள்ளார்கள் (வீடியோ, ஆடியோ பதிவு காட்டுகிறது). நான் ஏன் முக்தாரிடம் போக வேண்டும் என விஜலக்சுமி கேட்பது மிக நியாயமான கேள்வி. ஒரு பெண் இப்படியான நிலையில் இருப்பது அறிந்தால் தவிச்ச முயல் அடிக்க ஆயிரம் ஆண்கள் தயாராக இருப்பார்கள். அதற்கு சில பெண்களும் உடந்தையாக இருப்பார்கள். பாலியல் தொல்லை என புகார் கொடுக்க போன பெண்ணை, பொலிஸ் இன்ஸ்பெக்டரே பாலியல் வல்லுறவு செய்யும் நாடு இந்தியா - முக்தார் வேண்டாம் வேண்டாம் என கூறிய பின்னும் “உதவி” செய்தே தீருவேன் என ஒற்றை காலில் நிற்பதும், அதை வீரலக்குமி ஆதரிப்பதும் சந்தேகத்குகிடமானதே. -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
வைரமுத்து போல நம்ம சீமானும் ஒரு டீல் போடும் வரைதான் இந்த அலட்டல். சீமான் ஒரு டீலுக்கு போனதும் வழக்கை கைவிடுவார்கள் - திமுக. மீண்டும் விஜி அண்ணி பெங்களூர் போய் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டியதுதான். ஸ்டாலினின் - செந்தில பாலாஜியை அமித்ஷா அடித்தார். நேரடியாக ஸ்டாலின, உதைனா வை அல்ல. அதே போல் அமித்ஷாவின் சீமானை ஸ்டாலின் ஓட விடுகிறார். அண்ணாமலை, சேகரை விட்டு விட்டு. ——————-/————/——/-/-///// என்னது கைதா? நான் மிரட்டலுக்கு பயப்படுற ஆளா? ஊட்டிக்கு தனிப்படை விரைந்த நிலையில் கோவை சென்ற சிமான்! Vignesh SelvarajUpdated: Sunday, September 3, 2023, 0:49 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, தம்மிடம் இருந்து நகைகளையும், பல லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னை கைவிட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி நீண்டகால குற்றம்சாட்டி வருகிறார். 2011ஆம் ஆண்டில் போலீசிலும் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இப்புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண் வன்கொடுமை, பாலியல் வல்லுறவு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை ராமாபுரம் காவல்நிலையத்தில் துணை ஆணையர் உமையாள் சுமார் 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் விலாவாரியாக விசாரணை நடத்தினார். நேற்றும் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுமார் 2.30 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி, போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தை மீண்டும் வழங்கினார். இதை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார். சீமான் தன்னிடம் நெருங்கிப் பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விஜயலட்சுமி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை உதகைக்கு விரைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, ஊட்டியில் இருந்து காரில் கோவை சென்றடைந்தார் சீமான், கோவையில் செய்தியாளர்கள் அவரிடம், கைது செய்ய சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் வருவதாக தகவல் வருகிறதே எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "என்னை கைது செய்ய வேண்டும் என்றால் உதகையில் உள்ள காவல்துறையினரே கைது செய்திருக்கலாம். வழக்கு சென்னையில் இருப்பதால் சென்னையில் வைத்து கைது செய்திருக்கலாம். நாளை மறுநாள் சென்னைக்குத்தான் போகிறேன். அங்கு வைத்து கூட சம்மன் கொடுத்திருக்கலாம். கைது செய்வதாக எந்த தகவலும் இல்லை. சம்மனும் வரவில்லை. என்னைப் பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுவது போல தெரிகிறதா? சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/special-force-police-have-rushed-to-ooty-to-interrogate-seeman-on-vijayalakshmis-complaint-535323.html?story=3 -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
இதை பகிர்ந்த கனவான் இப்ப நாகரீகத்துக்கு அவசியம் இல்லை என்ற நிலைக்கு இறங்கி விட்டாரா🤣? இந்த திரியில் இந்த அசிங்கத்தை முன்னரே இன்னொரு நாகரீக கனவான் பகிந்தாயிற்று என்பதாவது உறைக்கவில்லையா? சரி அதை விடுவோம்….நீங்கள் விஜி அண்ணி பற்றி சொல்வது உண்மை என்றே வைப்போம். இப்படி பட்ட ஒரு பெண்ணிடம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு, தாம்பத்தியம், living together வைத்ததன் மூலம் கருணாநிதி போல், ஜெயா போல் தனிமனித ஒழுக்கம் கிலோ என்ன விலை என்று கேட்பவர் சீமான் என்பதையும், ஒத்து கொள்வீர்களா? -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
அருமை…. பொதுவா வாழ்க்கைல மூதேவிகளால் ஒரு மனிதன் அவதிப்படுவண்டு. இவர் வாழ்க்கைல அதுவே உல்டாவாகி லட்சுமிகளால் அவஸ்தைப்படுறார்🤣. -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
ம்ம்ம்… கசடர்கள் நிறைந்தது தமிழக அரசியல். -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
ஊட்டிக்கு விரைந்த தனிப்படை போலீசார்.. நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமான் கைதாக வாய்ப்பு? பரபரப்பு! Vignesh SelvarajPublished: Saturday, September 2, 2023, 21:36 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, தம்மிடம் இருந்து நகைகளையும், பல லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னை கைவிட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி நீண்டகால குற்றம்சாட்டி வருகிறார். 2011ஆம் ஆண்டில் போலீசிலும் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இப்புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண் வன்கொடுமை, பாலியல் வல்லுறவு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை ராமாபுரம் காவல்நிலையத்தில் துணை ஆணையர் உமையாள் சுமார் 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் விலாவாரியாக விசாரணை நடத்தினார். நேற்றும் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுமார் 2.30 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி, போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தை மீண்டும் வழங்கினார். இதை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார். சீமான் தன்னிடம் நெருங்கிப் பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விஜயலட்சுமி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை உதகைக்கு விரைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. https://tamil.oneindia.com/news/chennai/special-force-police-have-rushed-to-ooty-to-interrogate-seeman-on-vijayalakshmis-complaint-535323.html டிஸ்கி பார்ப்போம் என்ன நடக்குது எண்டு. இந்த வழக்கை சீமானை “வழிக்கு கொண்டுவரும்” வழியாக பாவிக்காமல் - சுயாதீன விசாரணைக்கு திருட்டு திமுக இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே. -
இதற்கு முன்னர் சிங்கை ஜனாதிபதியாக தேவன் நாயர் என்ற மலையாளியும் (யாழ்பாண தமிழராயும் இருக்கலாம்🤣), எஸ் நாதன் என்ற இந்திய வம்சாவளி தமிழரும் இருந்துள்ளனர். இது மிக சொற்பமான நிறைவேற்று அதிகாரங்களையுட, அலங்கார பதவி என்பது குறிப்பிடத்தக்கது. தர்மனுக்கு வாழ்துக்கள்.
-
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
அப்படி நான் எங்கும் எழுதவில்லை. படுக்க மாட்டார் என்றே எழுதினேன். ஆனால் லண்டன் ஆட்டுகறி சொந்த உழைப்பில் வாங்கியது🤣 -
ஹரிகரன் வீடியோ பதிவில் நசூக்காக, சம்பந்தமே இல்லாத நாம்தமிழர் பிரசார வீடியோவை புகுத்தும் நீங்கள்தான்… இன்னொரு திரியில் நாம் எல்லாரும் தமிழக அரசியலை சீமானை தாண்டி பார்க்கவில்லை என விசனப்பட்டிடீர்கள்🤣. அது மட்டும் அல்ல, இது முழுச் சனமும் பாடியதாக தெரியவில்லை. ஒரு பெண் அவரை சூழ உள்ளவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் போனில் எடுப்பதால் - அதுவே சத்தமாக கேட்கிறது.
-
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் சொன்னால் ஏற்பீர்களா🤣. சீமானுக்கு சாப்பிட்ட சாப்பாடு ஒத்து கொள்ளவில்லையாம். #அண்ணனுக்கு வெந்தயம் பார்சல் -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
இதோ தட்ஸ்தமிழ் செய்தி விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை! பல்லடத்தில் சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு- ஹாஸ்பிடலில் அனுமதி By Mathivanan Maran Published: Thursday, August 31, 2023, 21:45 [IST] சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்திருந்தார். அதில் 2008-ம் ஆண்டு சீமானுக்கும் தமக்கும் மதுரையில் திருமணம் நடந்த்து தொடங்கி சீமான் ஏமாற்றியது எப்படி என்பது வரை விரிவாக விவரித்திருந்தார் விஜயலட்சுமி. சீமான் மீது ஏற்கனவே விஜயலட்சுமி போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடியே சீமான் மீது பல்வேறு புகார்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி. இந்நிலையில்தான் திடீரென சென்னை வந்த விஜயலட்சுமி, போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு விஜயலட்சுமி வரவழைக்கப்பட்டார். அவரிடம் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார். இதனிடையே கோவை பல்லடம் அருகே போராட்டம் ஒன்றில் பங்கேற்பதாக சீமான் அறிவித்திருந்தார். அப்போராட்டத்துக்கு செல்வதற்கு முன்பாக சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சீமான் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்ற போது அதே இடத்தில் சீமான் அப்படியே மயங்கி சரிந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/amphtml/news/chennai/naam-tamilar-leader-seeman-hospitalised-near-coimbatore-534735.html பிகு ஆதாரம் இல்லாமல் அடிச்சு விட நான் நான், நானா மூனா இல்லை🤣. சான்…கோஷான்🤣 வட்டா -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
🤣 ஐ லைக் இட் யா ஒரு படத்தில் லிவிங்ஸ்டனிடம் காசு வாங்கி கொண்டு “அடுத்த ஜனாதிபதி வாழ்க” என கூவுவார் ஒருவர். அவரை போல சீமானுக்கு வாய்த்தவர்தான் இந்த ஏகலைவன். ”கொய்யா, கொடுத்த காசுக்கு மேலால கூவுறாண்டா”🤣. உங்களுக்கு நெஞ்சு வலியில் எது உண்மை, எது போலி என்ற குழப்பம் வந்து விட்டதா ? நான் இணைந்த செய்தி, இந்து நாளிதழ் குழுமத்தின் Hindutamil காமதேனு இதழில் இருந்து வந்த செய்தி. Thatstamil உம் பிரசுரித்து இருந்தது. -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
உங்களை தவிர -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
’நாம் தமிழர்’ சீமான் மருத்துவமனையில் திடீர் அனுமதி! Published:1st Sep, 2023 at 8:47 AM சினிமாUpdated:1st Sep, 2023 at 8:47 AM சென்னையில் நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்தார். அதில் 2008-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடந்தது என்றும், ஆனால் பிறகு சீமான் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் புகார் குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் அண்மையில் விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது புகார் கொடுத்தார். புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட விஜயலட்சுமியிடம், கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார். நேற்று மாலை தொடங்கி இரவு வரை விசாரணை நீடித்தது. இதனிடையே கோவை மாவட்டம் பல்லடம் அருகே அறிவித்திருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சீமானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் பல்லடத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, மயங்கி சரிந்து விழுந்த சீமான், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://kamadenu.hindutamil.in/amp/story/cinema/naam-tamilar-party-chief-coordinator-seeman-admitted-to-hospital-due-to-sudden-illness டிஸ்கி சீமான் விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துக்கள். திருட்டு திராவிட அரசியல்வாதிகள் போல வழக்கு, ரெய்டு எண்டதும் ஆஸ்பத்திரியில் போய் படுக்கும் ஆள் சீமான் இல்லை என நினைக்கிறேன். -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
சீமான் மீதான புகார்: நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் சென்னை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கோயம்பேடு துணை கமிஷனர் உமையாளருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் முன்பு விஜயலட்சுமி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடிகை விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ராமாபுரம் காவல் நிலையத்தில் வியலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன் விஜயலட்சுமி ஆஜராகியுள்ளார். https://www.dailythanthi.com/amp/News/State/complaint-against-seaman-vijayalakshmi-appears-in-court-1043125 Seeman vs Vijayalakshmi: நடிகை விஜய லட்சுமியின் புகார்..'அதுக்கு பயப்படுகிற ஆள் இல்லை நான்' - சீமான் ஆவேசம்! Karthikeyan S Sep 01, 2023, 04:02 PM IST திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி காவல்துறையில் அளித்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,"யார் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை எனில், விளக்கம் சொல்லத் தேவையில்லை. கருத்துப் பெட்டகத்தின் சாவி நல்ல கேள்விதான். ஒரு நல்ல பதிலின் தாயே, நல்ல கேள்விதான் என்று கூறுவார்கள். எனவே, பத்திரிகையாளர்கள் நல்ல கேள்வியைத்தான் கேட்க வேண்டும். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை நம்பியிருந்தால், இத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை எப்படி பின்தொடர்வார்கள்? அவதூறுக்கு அஞ்சுபவன் அற்ப வெற்றியைக் கூட தொட முடியாது. அது ஏன் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், இதுகுறித்து பேசப்படுகிறது. ஏன் பேசப்படுகிறது? 11 ஆண்டுகளாகவா ஒரே குற்றச்சாட்டு. நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு பெண் ஏமாற்றிவிட்டு, அவருடைய கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை ஏன் ஊடகத்தில் இருப்பவர்கள் ரசிக்கிறீர்கள். எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஒரு கனவு இருக்கிறது. அதையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். இதேபோன்ற குற்றச்சாட்டு எனக்கு முன்னாடி 5 பேர் மீது இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில் உள்ளது. எனவே,இனிமேல் இந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள். அவசியமான கேள்விகளை கேளுங்கள், அவசியமற்ற கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள். நான் உதிர்க்கும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. வருங்கால தலைமுறைகளை வழிநடத்தும் ஒரு தத்துவமாக, பொன்மொழியாக, புரட்சிகர பாதையாக இருக்க வேண்டும். நீங்கள் இதுபோல் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் அதையே செய்து கொண்டிருக்கிறார். திருப்பூரில் நேற்று கூடிய கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகள் கூட வரும். யார் புகார் அளித்தாலும் காவல்துறை விசாரணை நடத்தும் அது அவர்களது கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால், அதன்பிறகு நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறுகிறேன். அதுக்கு பயப்படுகிற ஆள் இல்லையே நான்" என்றார். https://tamil.hindustantimes.com/amp/tamilnadu/seeman-reply-of-actress-vijayalakshmis-police-complaint-131693564156718.html டிஸ்கி திருட்டு தி.மு.க அரசியல் ஆதாயத்துக்குக்காக இந்த முறையும் இந்த வழக்கை போலீஸ் விசாரிக்க தடை போடாமல் - பொலிசுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து வழக்கை விசாரிக்க விட வேண்டும். அண்ணம் சீமானும் அதைத்தான் சொல்கிறார். -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
goshan_che replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
சீமான்..8 மணி நேரம் துருவி துருவி விசாரித்த டிசி உமையாள்.. போட்டுடைத்த விஜயலட்சுமி.. என்ன நடந்தது? By Shyamsundar I Updated: Friday, September 1, 2023, 9:19 [IST] நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார். கடந்த முறையே இது போல அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது சீமான் தரப்பில் விஜயலட்சுமியிடம் சமரசம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சேர்ந்து வாழ்வதாக இவர்கள் சமரசம் பேசிக்கொண்டதாக் கூறப்படுகிறது. இந்த தகவலை விஜயலட்சுமி நேற்று கொடுத்த புகாரிலேயே குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இந்த முறை அந்த சமரசத்திற்கு வழி இல்லை என்கிறார்கள். ஏனென்றால் விளக்கமான புகார் விஜயலட்சுமி மூலம் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுவிட்டதால் சமரசம் செய்ய சான்ஸ் இல்லை என்கிறார்கள். என்ன சொன்னார்?: சமீபத்தில் விஜயலட்சுமி தனது பேட்டியில் இந்த சமாதானம் விவகாரம் குறித்து விளக்கமாக பேசினார். அதில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம். ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவரை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம். அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார். மகனாய் இருப்பேன் என்ற சீமான்: விஜயலட்சுமி தனது புகாரில், சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன், உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார். என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள 3ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது. மன அழுத்தம்: அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார். எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார். என் தாயாரிடம்மும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுவிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன். என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம். 7 முறை கரு: சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன். என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டாயபடுத்தியும் நிற்பந்தபடுத்தியும் கருச்சிதைவு மாத்திரைகள் எனக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எனக்கு கருச்சிதைவு செய்தார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி உள்ளார். போலீசார் விசாரணை: இந்த நிலையில்தான் நேற்று இரவு நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக அவர்கள் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். சீமான் மீதான புகார் குறித்து 8 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. துணை ஆணையர் உமையாள் விசாரணை அவரிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார். முக்கியமாக டார்ச்சர் செய்தது, கரு கலைத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று விசாரணைக்கு இடையில் பரர்பாப்பு ஏற்பட்டது. இந்த விசாரணை காரணமாக எங்கே சீமான் கைது செய்யப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. https://tamil.oneindia.com/amphtml/news/chennai/what-did-actress-vijayalakshmi-says-about-naam-tamilar-seeman-in-the-long-police-investigation-534781.html பொறுப்பு துறப்பு மேலே செய்தியில் உள்ளதை வாசித்து விட்டு, சீமான் மீது சேறு பூசுறார், சீமேந்து பூசுறார் என ஆணாதிக்க சிங்கங்கள் கிளம்ப முன்னம்- 1. செய்தி தட்ஸ்தமிழ் உடையது 2. புகார் சொன்னவர் விஜை அண்ணி 3. புகாரின் பாத்திரவாளி சீமான் அண்ணன் நான் வெறுமனே வெட்டி ஒட்டுபவன். -
இதுதான் சிங்களவனின் வட்டத்தை பெருப்பிக்கும் அணுகுமுறை (ஆனால் மதம் சம்பந்தபடுவாதல் முஸ்லீம்களை வட்டத்துள் இழுக்க முடியாது). நமது நேர் எதிரானது.
-
இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் !
goshan_che replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அந்த மக்களை வைவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் தமிழ் சிங்கள பகுதிகளில் இருக்கும் வேறுபாட்டை - நிச்சயம் மேற்கின் தூதர்களுக்கு எடுத்து சொல்லலாம். அடிப்படை வசதிகள், பாதுகாப்பு இல்லாமல் இருக்கப்போகிறீர்களா அல்லது இராணுவ மயத்தின் கீழ் இருக்க போகிறீர்களா என இரெண்டு போலி தெரிவுகளுக்குள் (false dichotomy) இந்த மக்களை வைத்துள்ளது இலங்கை.