Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இப்போ பங்களாதேசில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலமையில் அமைந்ததுள்ள இடைக்கால அரசும் இப்படி பட்ட ஒரு technocratic அரசாங்கம் என சொல்லலாம். இதோடு தொடர்புடைய ஒரு விடயம். பிரித்தானிய அரச சேவையில் இதை - purdah என்பார்கள். நமக்கு நன்கு தெரிந்த “மூடியநிலை” என்ற அர்த்தம் தரும் “பர்தா” என்ற அரேபிய சொல்லில் இருந்து வருகிறது. தேர்தல் அறிவித்த நாள்- அடுத்த அரசு பதவி ஏற்கும் நாள் வரையான காலம் - பேர்டா காலம். இந்த காலத்தில் ஆளும் கட்சியோ, அதிகாரிகளோ எந்த புது திட்ட அறிவிப்பையும் வெளியிடக்கூடாது. புது நல திட்டங்களை தொடங்க கூடாது. ஏதாவது புதிதாக செய்ய போவதாயின் அதை தமது தேர்தல் அறிக்கையில்தான் ஆளும் கட்சி சொல்ல வேண்டும். இதே நடைமுறை இந்தியாவிலும் உண்டு. தேர்தல் அறிவிக்க முன் மாநில, மத்திய அரசுகள் அவசர அவசரமாக நல திட்டங்களை அறிவிப்பதும், எதிர் கட்சிகள் புலம்புவதும் எப்போதும் நடக்கும். இதுவும் கூட திட்டங்கள் பற்றிய முடிவுகளை எடுப்பது அரசியல்வாதிகளே/கட்சிகளே என ஐயம் திரிபற காட்டி நிற்கிறது.
  2. தான் வாழ்ந்த மண்ணின் முன்னேற்றத்துக்காக போராடி 93 வயதில் இறந்த கிழவனால், இறந்து 52 வருடங்கள் ஆன பின்பும் வெற்றிகளை குவிக்க முடிகிறது. தமது மண்ணில் வரலாற்று மண் மீட்பு யுத்தம் நடக்கும் போது வெளிநாடு ஓடி வந்து பிள்ளைகளை டாக்டர் ஆக்கியோர், அவர்கள் பூட்ட பிள்ளைகளால் கூட நினைவு கூரப்படமாட்டார்கள் 🤣. # சூரியனை பார்த்து பூனை உறுமியது போல உங்களைத்தான், சம்பவம் நடக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைத்தான், ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்🤣
  3. அதிமுக + பாஜக கூட்டணிக்குள் வருகிறார் சீமான்? நாம் தமிழர் வருகையால் யாருக்கு சாதகம்? பாதகம்? Shyamsundar IUpdated: Wednesday, April 16, 2025, 12:42 [IST] சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். 2. பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள். அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். இதனால் இவர்கள் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்வது சரியாக இருக்காது. அதற்கு வாய்ப்பும் இல்லை. இதனால் 8 சதவிகிதம் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்லாது . 3. அதே சமயம் நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுக இரண்டையும் எதிர்த்தாலும் கூட.. அதிமுக மீது ஒரு சாப்ட் கார்னர் உள்ளது. இதனால் என்டிஏ கூட்டணி இது ஒருவகையில் சாதகம்தான். 4. இதனால் பயன் அடைய போகும் முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் சீமானை மாற்று என்று நினைத்தவர்கள் விஜய் பக்கம் செல்வார்கள். பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள் . அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். அதே சீமான் கூட்டணி வைக்க போனால்.. மக்கள் விஜய் பக்கம் போகும் வாய்ப்புகள் உள்ளன. 5. திமுகவை கண்டிப்பாக இந்த கூட்டணி பாதிக்கும். 6. ஏனென்றால் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் அதிமுக - திமுக வெற்றி இடையிலான வாக்கு வேறுபாடு நாம் தமிழர், பாஜக வாக்குகள்தான். இந்த வாக்குகள் எல்லாம் ஒன்றாக அதிமுக - பாஜக - நாம் தமிழர் கூட்டணிக்கு சென்றால்.. அது திமுகவிற்கு சிக்கல். 7. அதாவது குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் திமுக வென்ற தொகுதிகளை திமுக இழக்கும் அபாயம் உள்ளது. 8. பொதுவாக திமுக - அதிமுக இடையிலான வெற்றி வேறுபாடு 2-3 சதவிகிதம்தான். இப்போது நாம் தமிழர் இந்த கூட்டணிக்கு வந்தால் அதில் பெரிய பாதிப்பு ஏற்படும். திமுகவிற்கு சிக்கலாக மாறும். பாஜக பிளான் அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். அதாவது கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் அமித் ஷா கையில் உள்ளதாம். இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா கூறி உள்ளதாக தெரிகிறது. https://tamil.oneindia.com/news/chennai/who-will-affect-more-due-to-the-naam-tamilar-seeman-alliance-with-bjp-and-aiadmk-696197.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  4. இதில் அவருக்கு ஒரு உண்மையான புரிதல் தடுமாற்றமும் இருப்பதாக எனக்கு படுகிறது. ஆங்கிலத்தில் policymakers என்ற ஒரு சொல்லை பாவிப்பார்கள். ஆங்கிலத்திலேயே இது ஒரு தவறான சொற்பதம் - misnomer. கொள்கையை முந்தள்ளி, முடிவெடுக்கும் அரசியல்வாதி, அவரின் கட்சிசார் ஆலோசகர், ஆலோசனை வழங்கும், நடைமுறைபடுத்தும் நிர்வாக சேவை அதிகாரிகள், இன்னும் 3rd party stakeholders அனைவரையும் குறிக்கும் ஒரு பொதுபதமாக இந்த policymakers என்ற பதம் பயன்படுகிறது. இப்போ எல்லாம் இந்த பதத்தை தவிர்த்து - policy-actors என்ற பொருத்தமான பதத்தை பாவிக்க ஆரம்பித்துள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள இந்த misnomer ஐ அப்படியே தமிழில் காவி - கொள்கைவகுப்பாளர் என பிழையாக விளங்கி கொண்டுள்ளார். மாக்கிரெட் தட்சர் சொன்ன ஒரு மிக முக்கிய வாசகம்: Advisors advise but ministers decide. அதிகாரிகள் ஆலோசனை சொல்வார்கள், ஆனால் முடிவை மந்திரிகள்தான் எடுப்பார்கள் என்பதே இதன் அர்த்தம். பொதுவாக ஒரு கட்சியின் கொள்கை முடிவு அது அதிகாரிகளிடம் அதிகம் தொடர்பில் இல்லாத எதிர் கட்சியாக இருக்கும் போதே எடுக்கப்பட்டு விடும். இவை தேர்தல் அறிக்கையிலும் இருக்கும். அந்த கொள்கைகளை ஆட்சிக்கு வந்த பின் அமல் படுத்துவதில் அதிகாரிகள் பங்கெடுப்பார்கள். இந்தியா உட்பட உலகெங்கும் இதுதான் நடைமுறை.
  5. என்னதான் நீட்டி முழக்கினாலும்… சோபா…. சகதி… சகதி தான்🤣🤣🤣
  6. ஓணாண்டியை யாராவது டாக் பண்ணி விடவும். அவரின் சங்கத்துக்கு ஒரு கேஸ் வந்துள்ளது 🤣
  7. சுத்த பைத்தியக்காரத்தனமான கதை இது. அணிசேராமை என்பது நேரு உருவாக்கிய கொள்கை. திறந்த பொருளாதாரம் என்பது ராவும், மன்மோகனும் சேர்ந்து உருவாக்கியது. கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - மோடியும் அமித்ஷாவும். பாகிஸ்தானை கையாளும் விதம் - மோடி வந்த பின், முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி மாறுபாடாக உள்ளது. ஆனால் இரெண்டு ஆட்சியிலும் அதிகாரிகள் ஒரே ஆட்கள்தான். இந்தியா தன் அண்டை நாடுகள் மீதான போக்கை 1990 களின் மத்தியில் குஜ்ரால் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மாற்றியது. அதன் பெயரே Gujral doctrine. நிலமை இதுதான். ஒரு ஜனநாயக நாட்டில், அதிகாரிகள்தான் எல்லாம் என்றால் ஆட்சியில் அரசியல்வாதிகள் எதுக்கு.
  8. இப்போ மலையாளி சின்ன கருணாநிதி, ஈழத்தில் என் சொந்தங்களை கொன்றார்கள் என கூலிக்கு மாரடிப்பதில்லையா? அதையேதான் அப்போ பெரிய கருணாநிதி செய்துள்ளார்😎
  9. எனக்கு நீங்கள் வெல்வதோ தோற்பதோ இலக்கல்ல. கருணாநிதி தெலுங்கன் என்பது அவர் “சின்னமேளம்” என்ற வசைசொல்லால் அறியப்படும் இசைவேளார் சாதி என்பதால். அதே போல் “கிறிஸ்தவ நாடார்” சீமானும் மலையாளி என சாதிய உட்பிரிவை கொண்டுதான் வகைபடுத்தபடுகிறார். இங்கே இவர்கள் இனத்தூய்மை பற்றி சிறுநீரக மாதிரி மூலம் நிறுவிய ஆதாரம் உங்களிடமும் இல்லை, என்னிடமும் இல்லை. ஆனால் நான் தமிழராய் உணர்வோர் எல்லோரும் தமிழரே என ஏற்பதால் - கருணாநிதி, சீமானின் சாதியை ஆராயாமல் இருவரையும் தமிழராக ஏற்கிறேன். இதில் ஒருவரை ஏற்கமுடியாது என நீங்கள் சொன்னால், மற்றவரையும் ஏற்க முடியாது என்கிறேன். அவ்வளவுதான்.
  10. தமிழக தமிழர் நலனில் வழு - இன்றளவும் சங்பரிவார் கூட்டம் தமிழ் நாட்டை அண்டாமல் இருக்க ஒரே காரணம் திக, திமுக, அதிமுக தான். சீமான் நிச்சயம் திராவிடத்தை, தமிழ் தேசியத்தால் பிரதியீடு செய்ய போவதில்லை. மாறாக இரெண்டில் ஒரு கட்சியாக இருக்கும் அதிமுகவை அழித்து, அதை பாஜகவால் பிரதியீடு செய்வதே, அதாவது பாஜகவுக்கு வழி சமைத்து கொடுப்பதே சீமானின் அரசியலின் ஆக கூடிய பெறுபேறாக இருக்கும். சீமான் உண்மையில் திமுக அணி வாக்கை பிரிப்பதில்லை. அவர் பிரிப்பது திமுக-எதிர் வாக்கை. அதாவது அதிமுக வாக்கை. சீமான் இப்படி செய்ய, செய்ய அதிமுக மீதான பாஜக ஆளுமை அதிகரிக்கும். இப்போ அதிகுகவை மிரட்டி கூட்டணி வைக்கும் அளவுக்கு வந்து விட்ட பாஜக, 2026 இன் பின் - ஒட்டுமொத்த அதிமுகவையே விழுங்கி விடும். இதை சீமான் இலகுவாக்குகிறார். ஆக தமிழக தமிழர் நலனை பார்த்தாலும் சீமான் ஒரு கெட்ட விசமே. பிகு இதில் எங்கேயும் சீமான் ரோவின் கையாள் என்ற நோக்கில் நான் எழுதவில்லை. உங்கள் கருத்தியலின் அடிப்படையில் மட்டுமே எழுதியுள்ளேன். அந்த நோக்கையும் கருத்தில் எடுத்தால் சீமான் தமிழ் கூறு நல்லுலகிற்கே விசம் என்பது புரியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தம் தாய் மொழி தெலுங்கு, தாம் வீட்டில் தெலுங்குதான் பேசுவோம் என கூறிய ஆதாரத்தை நீங்கள் வெளியிட்டு 10 செக்கனுக்குள் நான் சீமான் மலையாளி என்ற ஆதரத்தை வெளியிடுவேன். முதலையை பிடித்து கொண்டு தொங்க கூடாது.
  11. இது ஒரு நல்ல மூலோபாய சிந்தனைதான். ஆனால் இதில் இரு வழுக்கள் உள்ளன. ஈழத்தமிழர் நலனின் வழு - சீமானின் 2009 க்கு பின்னான நடவடிக்கைகளின் பின் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் மீதான வெறுப்பு உள்ளவர்கள், ஈழத்தமிழர் பிரச்சனை உருபாக்குபவர்கள், என்ற எண்ணம் உள்ளவர்கள் மிக அதிகமாக உருவாகி உள்ளனர். சீமான் களத்தில் இறங்கும் வரை காங்கிரஸ், பிஜேபி ஆட்கள் தவிர மிகுதி அனைவரும் ஈழ ஆதரவாளர்களாகவே இருந்தனர். செயலில் எதுவும் இல்லாவிடிலும் - மனதளவிலாவது ஆதரவு இருந்தது. இப்போ இது வெகுவாக குறைந்துள்ளது. அகதி நா*, இன்னும் பல வசை மொழிகள், தலைவரை உருவக்கேலி, என தமிழ் நாடு 2009க்கு முன் கண்டறியாத பல விடயங்கள் அரங்கேறுகிறன. இவை மட்டும் அல்ல, முஸ்லிம் வெளியேற்றம், கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர் படை சேர்ப்பு, அரந்தலாவை, இன்னும் பலதை வெளியே எடுத்து - புலிகள் பயங்கரவாதிகளே எனவும் எடுத்து சொல்லப்படுகிறது. சீமான் மூலம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட ஈழ-எதிர் மனநிலையின் விளைவு இது. அதேபோல் இதை ஈழத்தின் ஆதரவாக சீமான் 8% ஐ திரட்டினார் என்றால் அதில் முக்கால்வாசி நெய்தல் படை அமைப்போம் என நம்பும் அடி முட்டாள் கூட்டமாகவே இருக்கிறது. முடிவில் சீமான் ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டில் பலமான எதிரிகளையும், பலவீனமாக ஆதரவாளர்களையும் உருவாக்கி விட்டுள்ளார் என்பதும், இதில் நீண்ட கால நோக்கில் ஈழத்தமிழருக்கு நல்லதை விட தீமையே அதிகம் என்பதும் கண்கூடு.
  12. உங்களது மிக தவறான புரிதல் - விளக்கம் கீழே. ஏன் என்றால் நரசிம்மராவ் என்ற அரசியல்வாதியும், மன்மோகன் சிங் என்ற அரசியல்வாதியும் 1991 க்கு பின், பிரதம, நிதி அமைச்சர்களாக திறந்த பொருளாதார கொள்கையை இந்திய ஒன்றியத்யில் அமல் படுத்தினர். பாரிய பொருளாதார கொள்கை, macro economic policy ஒட்டு மொத்த இந்திய நாட்டுக்கு உரியதே. அதனுள்தான் மாநில அரசுகள் பொருளாதார கொள்கையை அமைக்க முடியும். ஆனால் ஒன்றிய, மாநில பொருளாதார கொள்கையை அமைப்பது பிரதமர், முதலமைச்சர் எனும் அரசியல்வாதிகள்தான், அதிகாரிகள் அல்ல. என்ன பிரச்சனையால் வந்தாலும், கொண்டு வந்தது நரசிம்மராவ், மன்மோகன் சிங்தான். Architects of modern, free market India என இவர்கள்தான் வர்ணிக்கப்படுகிறார்கள். எந்த அதிகாரியும் அல்ல. உங்களுக்கு நான் என்ன எழுதபோகிறேன் என்பது புரிந்து ஒரு சடையல்🤣
  13. 'கொபசெ' சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து! Mathivanan MaranUpdated: Tuesday, April 15, 2025, 18:14 [IST] நாம் தமிழர் கட்சியை தொடங்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். அண்மையில் கொத்து கொத்தாக, நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறி பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் தற்போது சீமானுக்கு பக்க பலமாக இருப்பவர்களில் முக்கியமான நபர் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். பொதுமேடைப் பேச்சுகளால் வழக்குகள் தொடரப்பட்டு சிறைக்கு சென்றவர் சாட்டை துரைமுருகன். திரைப்பட நடிகை மற்றும் சீமான் தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தியவராகவும் கூறப்பட்டவர் சாட்டை துரைமுருகன். இந்த நிலையில் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக இன்று சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், துரைமுருகன் நடத்தும் சாட்டை யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதில் வருகிற கருத்துகள்-செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது என சீமான் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா? நயினார் நாகேந்திரன்? மோதல் என்ன? இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் நயினார் நாகேந்திரன், இஸ்லாமியருக்கு எதிரான சங்கி எல்லாம் இல்லை என்பது உள்ளிட்ட கருத்துகளை சாட்டை துரைமுருகன் பேசியிருந்தார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, பாஜகவின் பி டீம் என விமர்சிக்கப்படும் நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பொதுவெளியில் பகிரங்கமாக பாராட்டி நற்சான்று கொடுத்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்தே சாட்டை துரைமுருகன் தொடர்பாக சீமான் அறிக்கை வெளியிட்டார் என்கின்றனர். மேலும், பல்வேறு பலாத்கார வழக்குகளில் தேடப்படுகிற பாலியல் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவிடம் சாட்டை துரைமுருகன் பேட்டி எடுத்து ஒளிபரப்ப இருந்ததும் சீமானின் அறிக்கைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-issues-sudden-statement-against-duraimurugan-unrest-continues-within-naam-tamilar-katchi-011-695989.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இது சீமானும் தூஷண துரைமுருகனும் இணைந்து ஆடும் நாடகம். முன்பும் இப்படி பிரிவு நாடகம் ஆடியுள்ளனர். சுப முத்துகுமார் கொலை முதல் பலதில் சீமானின் குடுமி தூஷண துரைமுருகன் கையில். அவரை பகைத்தால் சீமான் களி தின்ன வேண்டி வரும். நேரடியாக சீமான் பாஜக ஆதரவு நிலை எடுத்தால் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்பதால், சீமான் சொல்லி, துரைமுருகன் பாஜக நிலை எடுக்கப்போகிறார். சீமானை தூஷண துரையின் பிஜேபி ஆதரவு நிலையில் இருந்து தள்ளி வைக்கும் கள்ள ஏற்பாடே இது. இதில் சாதி வெறி பிடித்த தூஷண துரைமுருகனும், நையினார் நாகேந்திரனும் ஒரே சாதி என்பது கொசுறு தகவல்.
  14. நீங்கள் மேலே சொன்னவை எதையும் இனவாதம் என யாரும் எப்போதும் சொல்வதில்லை. 500, 600 வருடங்களாக தமிழ் நாட்டில் வாழும் மக்களை. தமிழில் கல்வி கற்று, தமிழராக தம்மை உணர்பவர்களை சாதியின் அடிப்படையில் தமிழர் இல்லை என்பதுதான் இனத்தூய்மைவாதம். அப்படி இனத்தூய்மைவாதம் பார்த்தேதான் ஆக வேண்டும் என்றால், அப்படி ஒரு கருத்தியலை முன்வைக்கும் மலையாளி சைமன் செபஸ்டியனில் இருந்து ஆரம்பிப்பதே முறை.
  15. தமிழ் நாட்டில் தமிழர் தமிழர் அல்லாதோர் என 300,500 வருடங்கள் முன்பு வந்தோரை பிரித்து பார்க்கும் கலககாரார் யார் என பார்த்தால்… ஒன்றில் மலையாளிகளாக இருப்பார்கள் (சீமான்).… அல்லது தமது போராட்த்தை கூட நடத்தாமல் வெளிநாடு ஓடி வந்து விட்டு, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை, தாம் 64 இயக்கமாக பிரிந்து தம் நாட்டை நாசப்படுத்தியது போல் நாசப்படுத்த எண்ணும், புலம்பெயர் ஈழ தமிழராக இருப்பார்கள். சீமான் தமிழர்… நிம்மி தமிழர் என்றால்… ஸடாலினும் தமிழர். ஸடாலின் தெலுங்கர் என்றால்.. சீமான் மலையாளி… நிம்மி…மங்கோலியா🤣
  16. உண்மையிலேயே ஸ்டாலினின் தாய்மொழி அதாவது அவர் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் தெலுங்கு வம்சாவழி என்பது உண்மை ஆனால் அவர் தெலுங்கில் சரளமாக உரையாடுவார் என்பதும், வீட்டில் தெலுங்கு பேசுவார் என்பது இதுவரை நிறுவபடாத விடயங்கள். பேரு பெத்த பேரு ஆனா தாகத்துக்கு நீரு லேது என ஒரு கூட்டத்தில் அவர் அது ஒரு தெலுங்கு பழமொழி என சொல்லியே பேசினார். அதை வைத்து மட்டும் அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என வாதிட முடியாது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும் நான் வீட்டில் தமிழ் பேசினாலும், இப்போ ஆங்கிலேயந்தான். ஆனால் இனவழி ஆங்கிலேயன் அல்ல ethnic-English. ஸ்டாலின் இதன் உல்டா. அவர் இனவழி தெலுங்கன் ஆனால் வாழ்வியலில் தமிழன்.
  17. இணைப்புக்கு நன்றி. கருணாநிதி முள்ளிவாய்க்கால் இறுதி போரை முடிவுக்கு கொண்டுவர “போராடியது” போலத்தான் கச்சதீவு விட்டு கொடுப்பில் நடந்து கொண்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு என நினைக்கிறேன். ஆனால் உண்மையில் இது ஒரு உப்புசப்பில்லாத விடயம்.
  18. 🤣 நான் தலையங்கத்தை பார்த்து விட்டு…இந்த பயங்கரமான ஜேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு ஐந்து பேரை ஊருக்கு அனுப்பி சிங்களவனுக்கு ஒரு காட்டு காட்டலாம் எண்டு நினைச்சேன் வா🤣
  19. இதையேதான்…. கருணாநிதி நீல தமிழன் என சொல்லும் 200 ரூபாய் ஊபிசும் சொல்கிறார்கள். நன்றி. வணக்கம்.
  20. 🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார். ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣 ஆதாரம் இருக்கா?
  21. சின்னம் பறி போனது சீமானின் சோம்பேறித்தனத்தால். சீமான் தன் பாலியல் வழக்கில் காட்டும் சுறுசுறுப்பை சின்னத்துக்கு அப்ளிகேசன் போடுவதில் காட்டவில்லை. சீமானுக்கு முன்பே திமுக ஆட்களை வைத்து அப்பிளை பண்ணி சின்னத்தை முடக்கியது. திருமா வழக்கு போட்டு போராடி வென்றார் - சீமான் தன் மீதான வழக்குஎன்றால் டெல்லி வரை பிஜேபி காலை பிடித்தாதவது வென்றிருப்பார். எப்படியோ டெபாசிட் காலி, அது எந்த சின்னத்தில் கேட்டு காலியானால் என்ன, என எண்ணி விட்டு விட்டார். கருணாநிதி சொந்த ஊரில் போய் கேட்டால் அவரையும் தமிழர் எண்டுதான் சொல்லுவினம். கருணாநிதி தமிழ்நாட்டில் பிறந்த தெலுங்கு வம்சாவழி, ஜெ ஶ்ரீரங்கத்தில் பிறந்த கன்னட பிராமின், எம் ஜி ஆர், கண்டியில் பிறந்த மலையாளி, சீமான் தமிழ்நாட்டில் பிறந்த மலையாளி. அவரின் மனைவி பாதி தெலுங்கு. இனத்தூய்மை பார்த்தால் இவர்கள் எவரும் தமிழர் இல்லை. 👆ஆதாரம் இல்லாதா அவதூறு இது🤣
  22. 🤣 சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதிக்குரிய வீடியோ🤣.
  23. கருத்து எழுதாமலே கூட கருத்து பஞ்சம் வரலாம்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.