Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. Prosper-Haniel இல் இருந்த கடைசி நிலக்கரிச் சுரங்கம் 2018 இல் மூடப்பட்டுள்ளது.
  2. தமிழ் நாட்டு முதலாளிகள் மட்டும் அல்ல, சாதாரண தொழில்முறை மீனவர்களும் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். முதலாளிகள் படகை ஓட்டுவதில்லை. வலை வீசுவதில்லை. ஆகவே இது எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு களவு. இதை சகல கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்துகிறார்கள். கடல் முற்று முழுதாக, மத்திய அரசின் படைகளின் கட்டுப்பாட்டில். தமிழக கடலை மொட்டை அடிப்பதை, அல்லது இலங்கை கடல் எல்லைக்குள் போய் மீன் வளத்தை சுரண்டுவதை தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையிம் எடுப்பதில்லை. ஒட்டு மொத்த மீனவ சமூகத்துக்கு மாற்று தொழில் இல்லை என்பது பச்சை பொய் - ரெயில் ரெயிலாக கட்டுமான துறையில் வேலை தேடி வரும் வட மாநில இளைஞர்களே சாட்சி. இதில் மீனவர்களின், முதலாளிகளின், அத்தனை அரசியல்வாதிகளினதும் சுயநலனே பிரதான காரணி. நான் முன்வைக்கும் தீர்வு எல்லை தாண்டும் மீனர்வர்களை பிடிக்க வேண்டும். அடிக்க கூடாது. கொல்ல கூடாது. இலங்கை சட்டத்தை வலுவாக்கி, அதன் கீழ் வழக்கு போட்டு 5-10 வருடம் சிறையில் போட வேண்டும். சிறையில் கட்டாய வேலை கொடுத்து - அதற்கு வெளி உலகில் உள்ள சம்பளத்தையும் கொடுத்து, அதை மீனவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறை வைக்கும் செலவை இந்திய மத்திய அரசு ஏற்க வேண்டும். படகுகள், இலங்கையருக்கு ஏலம் விடப்படலாம். மீதி உடைக்கப்படவேண்டும். இலங்கை, இந்திய அரசுகள் மட்டும்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் அதிகாரம் உள்ள அமைப்புகள்.
  3. இதென்ன விவேக்கின் உண்டியலில் விழுவது எல்லாம் அம்மனுக்கே சொந்தம் எண்ட பகிடிமாதிரி… கோவில் கார்பார்க்கும் கோவில்தானே எண்டுறியள்🤣. சட்டப்படி கோவிலில் இந்து முறை படி நடந்தால் மட்டுமே அது திருமணம். கோவில் கார்பார்க்கில், ஆட்டோஸ்டாண்டில், தெப்பகுளத்தில், கோவிலின் பின்புறம் உள்ள பற்றைக்குள் நடப்பவை திருமணமாகாது🤣. இது விஜி அண்ணியின் ஏறுக்குமாறான கதைதான். இதை கோர்ட் விசாரிக்க வேண்டும். அதற்கு வழக்கை முடக்க கூடாது. நாங்கள் எழுதத்தான் இலாயக்கு, விளக்கம், கணக்கு-வழக்கு எல்லாம் உங்க டிப்பார்ட்மெண்ட்🤣
  4. ஓம்..சாத்தியத்துக்கு அப்பால், இன்னும் 30 வருடத்தில் இப்படியான நிலக்கீழ் எரி பொருளுக்கான தேவையும் இருக்காது.
  5. D Jeya DeviPublished: Wednesday, March 12, 2025, 12:25 [IST] அதில், சீமான் கூட நான் வாழ்த்துக்கள் படத்தில் நடித்தேன். அந்த படத்தின் மூலமா தான் சீமான் எனக்கு பழக்கமானார். ஆரம்பத்தில் இருந்த எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. எனக்கு எப்போதுமே கடவுள் முருகன் மீது, ஈடுபாடு உண்டு. இதனால் எப்போது படப்பிடிப்பு நடந்தாலும் நான் முருகரை ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்துவிட்டு வருவேன். ஆனால், சீமான் அவர்கள் என்னிடம் பேசியம் போதே உங்களை நான் கோவிலுக்கு போகவிட மாட்டேன் என்று தான் சொன்னார். முருகரை பிறகு தரிசனம் செய்து கொள்ளலாம், முதலில் படப்பிடிப்பில் இருக்கிறவர்களுடன் நன்றாக பழகி பேசுங்கள் என்று சொன்னார். அப்பொழுதே எனக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இதனால் நான் எப்போதுமே அவர் இருந்தால் நான் படப்பிடிப்பு தளத்தில் இருக்க மாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறேன். பழக்கம் ஏற்பட்டது: அந்த நேரத்தில் தான் என்னுடைய அக்கா குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. என்னுடைய அக்காவின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தி பலவிதமான பிரச்சனைகள் கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் தான், நான் சீமானின் உதவியை நாடி சென்றேன். அப்போது, அவர் எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார். என் அம்மா இலங்கை தமிழர் என்பதால் சீமானை எங்க அம்மாக்கு மிகவும் பிடித்து விட்டது இருவரும் மிகவும் அன்பாக பழகி வந்தார்கள், அந்த நேரத்தில் தான் எனக்கும் அவருக்கும் பழக்கம். Abhinay Suffer Liver Cirrhosis | ரூ.2 இட்லிக்கு தவிக்கும் அபிநய் | FilmiBeat Tamil காரில் திருமணம்: இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, சீமானை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அப்போது சிறையில் இருந்து பலமுறை என்னிடம் அவர் பேசி இருக்கிறார். அதன் பிறகு மதுரை மதுரையிலேயே அவர் தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, நானும் அவருடன் தங்கி இருந்தேன். யார் வந்தாலும் என்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார். பலருக்கும் நான் வீட்டில் இருப்பதே தெரியாது அந்த நேரத்தில் தான் சேரன் அவர்கள், இப்படி இருப்பது சரி இல்லை. திருமணம் செய்து கொண்டால் தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால் தவறாகிவிடும் என்று சொன்னார். போட்டோவை தரவில்லை: அதன் பிறகு தான் நான்,அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினேன். அவர் கிறிஸ்டின் என்பதால் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வதற்கு தயங்கினார். பிறகு கோவிலுக்குள் கூட அவர் வரவில்லை, காரில் இருந்தபடியே எனக்கும் அவருக்கும் மாலை மாற்றி திருமணம் நடந்தது அப்போது எடுத்த போட்டோக்களை கூட அவரை வைத்துக் கொண்டார் என்னிடம் அந்த போட்டோக்களை கூட அவர் தரவில்லை. அப்போதே அந்த போட்டோவை வாங்கி நான் சேரனிடம் அனுப்பி இருந்தால், இன்று சேரன் எனக்காக பேசி இருப்பார். அதை நான் செய்யாமல் விட்டுவிட்டதால், இன்று இப்படி ஏமாந்து போய் இருக்கிறேன். தேன்மொழியுடன் நிச்சயம்: இந்த நேரத்தில் தான் தேன்மொழி இடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது, அந்த தேன்மொழி யார் என்று விசாரிக்கும் போது தான் தேன்மொழிக்கும் சீமான் அவர்களுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தமான விஷயம் எனக்கு தெரிந்தது. இது குறித்து நான் சீமானிடம் கேட்ட பிறகு தான் எனக்கும் அவருக்குமே பிரிவு ஏற்பட்டது. அந்த தேன்மொழி என்ற பெண்ணும், நிறைய பணம் நகைகளை கொடுத்து ஏமாந்து இருக்கிறார். இந்த விஷயம் எனக்கு தெரிந்து கேட்ட போது, அது தேவை இல்லாத கதை அதை பற்றி எதுவும் கேட்காதே என்று சொல்லிவிட்டார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அப்போது, தான் சீமானின் ஆட்கள் சிலர் எனக்கு போன் செய்து இங்கே இருக்காதீர்கள், பெங்களூருக்கு சென்று விடுங்கள், அண்ணனின் வாழ்க்கை மாறப்போகுது. இனிமே, நீங்கள் இங்கே இருந்தீர்கள் என்றால் நன்றாக இருக்காது என்று மிரட்டினார்கள். அதன் பிறகு தான், நான் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் கொடுத்தேன். மாறிவிட்டார்: நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த போது கூட அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் புகார் கொடுத்தேன். ஆனால், நான் பணம் வாங்கிக் கொண்டதாக சொல்கிறார்கள். நான் எப்போதும், பணம் கேட்டது இல்லை. அப்போதிலிருந்து இப்போது வரை, அவர் ஏன் என்னை விட்டு சென்றார் என்று எனக்கு தெரியவே இல்லை. எப்போதும் கூட அவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகவே இருக்கிறது. ஆனால், அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. என் அம்மா கூட இறக்கும் நேரத்தில் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழு என்று சொன்னார்கள். ஆனால், என்னால் சீமானை என்றுமே மறக்கவே முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தோம். அன்று என்னுடன் வாழ்ந்த சீமான். எப்போதும் இல்லை, அவர் பணம், புகழ் எல்லாம் வந்துவிட்டதால், அவர் மொத்தமாக மாறி இருக்கிறார். நிர்வாண வீடியோ: அந்த புகாருக்கு பிறகாவது என்னை அவர், திருமணம் செய்து கொள்வார் என்று உறுதி அளித்ததால் நான் அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டேன். ஆனாலும், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் என்னை புறக்கணித்தார். பல இடங்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. அதாவது என் நிர்வாண வீடியோவை வெளியிட்டுவோம் என்றும் பலவிதமான மிரட்டல்கள் வந்தனர். இதனால், தான் நான் என்ன செய்வது என்ன செய்வது பயந்துவிட்டேன். அதன் பிறகு தான் துணிந்து முடிவு எடுத்து 14 வருடமாக போராடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு என் கணவர் வேண்டும் அவருடன் நான் சேர்ந்து வாழ வேண்டும், சீமானின் மனைவி நான் தான் என்று அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் போராடினேன். கண்ணீர் பேட்டி: ஆனால், இன்று அவர் என்னை ஒரு பாலியல் தொழிலாளி என்று பேசியிருக்கிறார். பாலியல் தொழிலாளியாக இருந்தால், அந்த வேலையை தான் நான் பார்த்துக் கொண்டு சென்று இருப்பேன். சீமான் தான் வேண்டும் என்று இவ்வளவு தூரம் நான் போராடிக் கொண்டு இருக்க மாட்டேன். இனிமேலும் சீமான் தான் வேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தால், அதில் அர்த்தமே இருக்காது. இந்த அளவுக்கு அவர் பேசிய பிறகும் மனதில் ஒரு வெறுப்பு தான் வந்து இருக்கிறது. தற்போது சீமான் பேசுவதெல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார். என்னையும் அவரும் பற்றி விஷயம் தெரிந்த பலரும் சீமானை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்று நடிகை அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். https://tamil.filmibeat.com/interview/actress-vijayalakshmi-interview-abou-seeman-controversy-speech-154553.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards&_gl=1*771huo*_ga*NTcyMjM1ODc2LjE3Mzc3NDE1MDE.*_ga_09Y63T23W1*MTc0MTc2NTU0OS4xOTQuMC4xNzQxNzY1NTQ5LjAuMC4w டிஸ்கி முதலில் கோவிலில் மாலை மாற்றினோம் என்றார்… இப்போ காரில்….. இதில் எது உண்மை? இரெண்டும் பொய்யா? வழக்கு நடத்தபட்டால், இதில் உள்ள உண்மை, பொய் வெளியே வரும்.
  6. D Rajkumar RPublished: Wednesday, March 12, 2025, 1:43 [IST] சென்னை: சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் அமர்ந்திருந்த சீமானின் கைய பிடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அண்ணா விட்றாதீங்க ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க" என ஊக்கம் கொடுத்தார். Also Read ஆனாலும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. காரணம் பெரியார் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பெரியாரி அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அதே நேரத்தில் அவரது கட்சி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வருவது சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு ஊக்கம் தருவது போல பேசி இருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. சென்னையில் இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சீமான் தனது காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது எதிரே வந்த அண்ணாமலை காரின் அருகே சென்றார். தொடர்ந்து காரின் கண்ணாடியை இறக்கிவிட சீமானின் கையைப் பிடித்த அண்ணாமலை," அண்ணா ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க.. விட்றாதீங்க.. ஸ்ட்ராங்கா இருங்க" என கூறிவிட்டுச் சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/annamalai-encourages-seeman-amid-political-challenges-686817.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி யாரிந்த அண்ணாமலை? ஹிந்தியை ஏற்காவிடில் கல்விக்கு நிதிதர மாட்டோம் என கூறும் கட்சியின் மாநில தலைவர்.
  7. நான் அறிந்தவரையில் ஒரு பிரபலமான மண்டபத்தை வாடகைக்கு அமர்த்தி, போதியளவு ஆட்களை கொண்டு, விதிப்படி ஒரு சிம்பொனி நிகழ்வை எவரும் நிகழ்த்தலாமாம். கீழே தொடக்கம் முதல் சிம்பொனி இசைத்தவர்கள் லிஸ்ட் உள்ளது. அதில் சுபசிங்க எனும் ஒரு சிங்களவரும் அடக்கம். https://en.m.wikipedia.org/wiki/List_of_symphony_composers
  8. பிடிபடுவதும் முழுக்க இலங்கை கடல் எல்லைக்குள் பல மைல் உள்ளே. போகாதே என்பதை தவிர வேறு எந்த ஆலோசனையும் சொல்ல முடியாது. சும்மா வாய்க்கு வந்தமாரி சட்ட ஆலோசனை கொடுக்கலாம், சர்வதேச நீதிமன்றம் போகலாம் என எழுதலாம். ஆனால் போவதென்றால் டெல்லி மூலம்தான் போக முடியும். டெல்லி போகாது - பிழை இந்தியா மீது என்பதால். இதில் தமிழக மீனவர்கள் மீது தாக்குவது, கொலை செய்வது இவை இரெண்டும்தான் இலங்கை விடும் பிழைகள். இதை செய்ய வேண்டாம் என்பது மட்டும்தான் அவர்கள் பக்கத்தில் இருந்து வரகூடிய ஒரே ஒரு நியாயமான கோரிக்கை. அதை இலங்கை அரசுக்கு - இந்திய மத்திய அரசுதான் வைக்க முடியும். தமிழக அரசு அல்ல. தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் மட்டுமே வைக்கலாம்.
  9. 🤣 எல்லோர்ரையும் எம்மை போல நினைப்பது உயர் பண்பு என்பதற்காக இப்படியா செய்வது🤣. யாழில் ஜோசேப், யேசுநாதரை தெரியாத பபாக்கள் யாரும் இருப்பதாக நான் நம்பவில்லை.
  10. அண்ணை உங்கள் கிணத்தில எனக்கு பங்கு உரிமை தருவியளே🤣 இதே போல் வடக்கு இங்கிலாந்து, தெற்கில் கேட்விக்குக்கு கீழே எல்லாம் ஷியில் காஸ் எனப்படும் எரிவாயு எக்கசக்கம். ஆனால் எடுத்தால் பெரிய இயற்க்கை அழிவுகள் வரும். பிரான்ஸ் ஓக்கே - இங்கே யூகேயில் என்ன வளம் எடுத்தாலும் தனியார் கைக்குத்தான் போகும். நோர்வேயும் பிரிதானியாவும் ஒரே நேரத்தில் வடகடலில் எண்ணையை கண்டுபிடித்தன. நோர்வேயின் வளம் அரச நிதியம் ஆகியது. அதனால் இன்று சாதராண நோர்வேஜியர்கள் பணக்காரார். பிரிதானிய வளம் BP எனும் நிறுவனத்துக்கு. அதனால் பங்குதாரார்கள் அதீத பணக்காரார்கள்.
  11. ச்சா…இதுவெல்லா அமரக்காதல்🤣. அட அப்ப நீங்கள் ஈஸ்மெட்ன் கலரா? நான் வயசு இன்னும் குறைய எண்டு நினைச்சன்.
  12. இந்த திருட்டு யூடியூப் காரருக்கு அறிவே இல்லை…. இதுல இடைக்கிடையே, மானே தேனே, பொன்மானே போல… தலைவர், மாவீரர், தமிழண்டா போன்ற வீராவேசங்களை தூவி விட்டு இருந்தால்.. இப்ப ஏசுற புலன்பெயர் சனம் எல்லாம் மரண முட்டு கொடுத்திருக்கும் 🤣
  13. சாத்ஸ் பாவம், ஒரு மதமாற்ற திரியில் கருத்து சொல்லப்போய் அடி எண்டா அடி, இம்மை மறுமை இல்லாத அடி. உதவிக்கு யாரும் இல்லாதபடியால் நாந்தான் இறங்கி, box ஐ உடைத்து ஆளை மீட்டு கொண்டு வந்தது. அன்று முதல் சாத்ஸ் நிஜ மதவாதிகள் வந்தால் - மெல்ல நழுவி விடுவார். சில சமயம் முட்டும் கொடுத்துள்ளார். ஆனால் என்னை போல மருந்துக்கும் மதவாதம் இல்லாத யாரும் “யேசுநாதர்” எண்டு எழுதினாலே சிலுவையுத்தத்துக்கு கிளம்பிய ரிச்சர்ட் மன்னன் போல் கிளம்பி விடுவார்🤣. இளகிய இரும்பை கண்டால் கொல்லன் பவுண்டரி சிக்சர் எண்டு அடிப்பானாம் 🤣. தீர்ப்பு நாளில், உன் கண் முன்னே நடந்த எனது மதத்தின் நிந்தனையை எதிர்த்து எதுவும் நீ செய்யவில்லையே என ஆண்டவர் கேட்டால்… உங்களை யேசுநாதர் என எழுதிய கோஷானை போட்டு பிளந்தேன் ஆண்டவரே என சொல்லி தப்பிக்கும் எண்ணம் போல் உள்ளது.
  14. நானும் அப்படி எழுதவில்லை. சரி உங்களுக்கு விளங்கவில்லை எனில் நான் சொன்னதை நீட்டி எழுதுகிறேன். யேசுநாதர் நியாத்தின்படி நடப்பவர் அவரின் தந்தையாகிய ஜோசேப்பும் அப்படி பட்ட ஒரு நியாய வழி நடக்கும் மனிதர். அவரின் பெயரில் ஜோசேப் என இருந்தாலும் இவர்கள் இருவரையும் போல நியாயத்தின் வழி நடப்பவர் அல்ல விஜை. அவர் ஒரு சாமான்ய சுயநலத்தின் வழி நடக்கும் அரசியல்வாதி. ஆகவே ஜோசப், ஜேசுநாதர் போல் விஜை நடப்பார் என எதிர்பார்க்க கூடாது. இதுதான் நான் கூறியது. உங்கள் minority complex தொட்டதுக்கெல்லாம் trigger ஆனால் அதுக்கு நான் பொறுப்பல்ல🤣.
  15. இங்கே ஓணாண்டியே ஒத்து கொண்ட விடயம் தனது அதிகார வரம்புக்குள் உள்ள போது சட்ட ஆலோசனையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது (இத்தாலி வழக்கு). கைதானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கபடுகிறது கொலையானால் இழப்பீடு வழங்கபடுகிறது மேலே நான் தந்த இணைப்பின் படி இரு நாட்டு மத்திய அரசுகளும் இந்த பிராசனையை JWC பொறிமுறைமூலம் கையாள்கிறன. இங்கே ஓணாண்டி மிக அடிப்படையான பிரச்சனையை விட்டு விட்டார். தமிழக மீனவர் பிரச்சனை என்ன? அவர்களுக்கு கிடைக்கும் சட்ட ஆலோசனையா? இல்லை. நிவாரணமா ? இல்லை. இவை எல்லாம் கிளை பிரச்சினைகள். அவர்களின் பிரச்சனை இலங்கை படைகள் கைதுசெய்வது இலங்கை படைகள் துன்புறுத்துவது இதை நிறுத்துமாறு இலங்கை படைக்கு ஓடர் போடும் அதிகாரம் இலங்கை அரசுக்கு மட்டுமே உண்டு. அந்த ஓடரை போடுமாறு இலங்கை அரசை நெருக்கும் உரிமை இந்திய மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
  16. பிகு வெளிநாட்டில் தடைப்பட்டுள்ள மாநில மக்களின் சட்ட நிதியை (legal fees) கட்ட மாநில அரசு ஒத்துகொள்ளலாம். ஆனால் இலங்கையில் பிடிபடும் அனைவரும் ஹைகொமிசன் ஏற்பாடு செய்யும் சட்ட ஆலோசனையை ஏலவே பெறுகிறார்கள். அத்தோடு - இந்த விடயத்தை கையாள என ஏலவே ஹைகொமிசன்னூடாக நடக்கும் JWC பொறிமுறை உள்ளது. https://www.hcicolombo.gov.in/section/press-releases/6th-meeting-of-the-joint-working-group-on-fisheries/
  17. இது தமிழ் நாட்டின் நில எல்லைக்குள் சட்டம் ஒழுங்கை காப்பாறும் அதிகாரம். மீனவரை இலங்கை நேவி, இலங்கை கடலில் வைத்து துன்புறுத்துவது -தமிழ் நாட்டின் law and order issue அல்ல. நீங்கள் எழுதியவற்றுக்கு ஆதாரம் கேட்டுள்ளேன். அதன் பின் பார்க்கலாம் யாருக்கு தவறான புரிதல் என.
  18. சட்ட ஆலோசனை தமிழ் நாட்டில் அல்லது இந்திய மண்ணில் இருந்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது என நினைக்கிறேன். வழக்கும் நடந்தது இந்தியாவில் பின் இத்தாலிக்கி மாறியது என நினைவு. இதை மாநில அரசு நிதியில் அணுகலாம் என்பது வெளிப்படை. இங்கே சட்ட ஆலோசனை தேவை இலங்கையில் கைதாகி உள்ள மீனவர்க்கு. அதை தா நா அரசு செய்ய முடியாது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு சட்ட ஆலோசனை எண்டால் அதற்கு முன் இந்திய மண்ணில் கொலையாளிகள் மீது வழக்கு நடக்க வேண்டும். அதற்கு கொலையாளிகளை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும். கொலையாளிகள் இருப்பது இலங்கையில். ஆகவே சும்மா சட்ட ஆலோசனை எண்டு சொல்லிவிட்டு போய் விடலாம். ஆனால் யாருக்கு கொடுப்பது? கொடுக்கும் தேவையே இல்லாத போது? இதற்கு கொஞ்சம் ஆதாரத்தை தர முடியுமா? யூடீயூப் வீட்யோக்கள் வேண்டாம். நிவாரணத்துக்கு அல்ல. அதை இப்போதும் கொல்லப்பட்டால் வழங்கிறார்கள் என நினைக்கொறேன். இலங்கையில் தமிழக அரசு வக்கீல் மீனவருக்க்காக ஆஜராகிய ஆதாரம் கேட்கிறேன். இதற்கும் ஆதாரம் பிளீஸ்
  19. அதுசரி, நகை இருந்து அடவு வைப்பவனுக்கு ஆதரவாக பேசும் இதே வாய்தானே, மகளிர் உதவி தொகை பெறும் பெண்களை “ஆயிரம் ரூபாய்க்கு பொறந்தவர்கள்” என சொன்னதை வேடிக்கை பார்த்தது. பரம ஏழைகளான, ஒரு மஞ்சாடி தங்கம் இல்லாத குடும்பங்களுக்கு திருமணதிட்டம், லேட்டாப் என கொடுத்த நலதிட்டங்களை தடுத்து நிறுத்துமாறு கூச்சல் இட்டது. ஏழை பங்காளந்தான் —- நம்பிட்டோம்🤣.
  20. இந்த பிராபோடாத பெண்ணியவாதிகளும், உங்களை போன்ற ஆண்கள் சங்கம் ஆட்களும் என்னை பொறுத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் உலகில் பெரும்பான்மை மக்கள் “சமத்துவம்” என்பதை அதன் இயற்கையான அர்த்ததிலேயே விளங்கி கொள்கிறார்கள். அது நான் மேலே கொடுத்த விளக்கங்கள். வரலாறு - அதை அதன்பாட்டில் விடுவோம். அது எப்படி திரும்புக்கிறது என நானோ, நீங்களோ பார்க்கப்போவதில்லை.
  21. நிச்சயமாக இல்லை. மாநில அரசு ஸ்டாலின் வீட்டு பணத்தில் நடக்கவில்லை. ஒவ்வொரு நியமனமும் பொதுபணத்கில்தான் நடக்கும். அந்த நியமனங்கள் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்ன்வர வேண்டும். ஒரு சஎவதேச பிணக்கில் சட்ட வல்லுரனை அதுவும் சர்வசேத சட்ட வல்லுரனை நியமிக்க மாநில அரசால் முடியாது. மேலே சொன்ன அதே கருத்தை, வசனங்களின் ஓடரை மாற்றி போட்டு எழுதி உள்ளீர்கள். மீனவருக்கு பிடிபடும் வரை சட்ட ஆலோச்னை தேவையில்லை. பிடிபட்டபின் அதை கொடுப்பது ஹைகொமிசன். அறவே இல்லை. ஒரு சர்வதேச பிணக்கில் ஒரு மாநில அரசுக்கு எந்த சட்ட வகிபாகமும் கிடையாது. மீனவர்கள் தமிழ் நாட்டு மண்ணில் இருக்கும் போது மட்டும் அவர்கள் நலன் மாநில அரசின் கடமை.
  22. இதன் முடிந்த முடிவு - நீங்களே எழுதியது போல் வழக்கு போடும் தகமை மத்திய அரசிடமே உள்ளது (state party). ஆகவே தமிழ்நாடு அரசு மத்திய அரசை அதன் முன் உள்ள வழிமுறைகளை பாவித்து இதை நிறுத்த சொல்வதில் சட்ட வழியும் அடங்கும். ஆனால் இந்த சட்ட வழிமுறை எதுவும் தேவையில்லை. ஜெய்சங்கர், ஹேரத்தை கூப்பிட்டு ஒரு காட்டு காட்டினாலே கொலைகள் நின்றுவிடும். ஆனால் செய்யமாட்டார்கள். மீனர்களுக்கா? இலங்கையில் பிடிபட்ட பின் வழங்க முடியாது அது இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரம். அப்போ கடலுக்கு போக முன்னம், பிடிபட முதல் ஆலோசனை வழங்கலாம்? என்ன ஆலோசனை? இலங்கை எல்லைகுள் போகாதீர் எனும் ஆலோசனை. இது சட்ட ஆலோச்னை அல்லை. அறிவுறுத்தல். இது தமிழ்நாடு மீன்வள துறை அதிகாரிகள் ரூட்டினாக செய்வதுதான். சட்ட ஆலோசனை வழக்கில் ஒரு party யாக இருக்கும் தகமை உள்ளோர்ருக்குத்தான். இங்கே மீனவர்களுக்கு அந்த தகமை இல்லை.
  23. சும்மா எழுதிதள்ளலாம்… ஆனால் கோரிக்கை வைப்பதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஒண்டு செய்யலாம் - போராட்டங்களை தூண்டி விட்டு, தாமே நடத்தி, கலவரம் பண்ணலாம். தமிழ் நாடு இன்னொரு கஸ்மீராகும். இங்கே பலர் விரும்புவதும் அதைத்தானே🤣. நாங்கள் அழிஞ்சுவிச்டோம், அவங்கள் எப்படி ஜாலியா இருக்க முடியும்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.