Everything posted by goshan_che
-
ரப் பாடகர் வேடன்
ஆனால் வாயை வாடகைக்கு விடுபவர் மேல் மட்டும் இன்னும் கஞ்சா, புலிப்பல், NIA எதுவும் பாயவில்லை. ஏன்? ஏன்னா வாயை நாக்பூருக்கு வாடகைக்கு விட்டிருக்கு.
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
அப்போ அந்த சாரை காப்பாற்ற நீதிமன்றம் வழக்கை விரைந்து முடித்துள்ளதா?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இதுவும் அவர்களிடமும் அபரிமிதமாகவே உள்ளது ஐலண்ட். எஸ் கிளாசில், இந்தியாவில், 1998 இல் டிரைவர் வைத்து ஓடிய பால் தினகரன் செத்த பின்பு, அவரது மகன் செத்த வீடு செய்ய காசில்லை என கூறியதும் அள்ளி அள்ளி கொடுத்தார்கள். நைஜீரியாவில் எல்லாம் பெரிய எடுப்பில் நடக்கிறது. இவை ஏன், யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒரு கன்னியர் மடத்தில் கிறீஸ்தவர் அல்லாத பிள்ளை தலைமை ஹெட் பிரிவெக்ட் ஆகவில்லை என எண்ணுகிறேன். சிஸ்டர்மாரும், பாடசாலையில் அதிகம் இருக்கும் பெற்றாரும், முன்னாள் மாணவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
உனக்கென்ன ஆண்டவா நீ பேசுவ, ராஜ்ஜசபா வேற போக போறே… ஆனால் சிம்பு பட கலக்சன்ல மண்ணவாரி வுட்டியே ஆண்டவா🤣
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
கமலன் ஆள் சுழியன்🤣
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
6 மாதத்தில் தீர்ப்பு!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உங்களுக்கு ராகு கேது மாற்றம் சரியில்லை போல கிடக்கு. #புரிஞ்சவன் பிஸ்தா எடிட் பண்றதுகுள்ள பதிலும் போட்டாச்சா🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சூப்பர்…. இப்போ கொஞ்சம் மூளையால் யோசிப்போமா ? (இந்த கருத்து பாஞ் ஐயாவுக்கு அல்ல, வீடியோவை மட்டுமே மேற்கோள் காட்டுகிறேன்). இணுவில் கோவிலில் மச்சம் ஆக்குகிறார்கள். ஆகவே இந்த கோவிலில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அல்லது முழு இணுவிலிலும் இனி யாரும் சைவ சாப்பாட்டு கடை போடப்படாது என கூறினால் எப்படி இருக்கும்🤣. இதை ஒத்த மொக்குதனம்தான் வேலனும், மொக்கராசுகளும் நல்லூரில் கேட்பதும். மத அனுஸ்டானம் என்பதை அமல் செய்யும் உரிமை கோவில் எல்லைக்குள் மட்டுமே. கோவில் சுவர் அல்லது வெளிவீதிக்கு அப்பால் - அது அனைவரும் வாழும் பொதுவான நாடு. இந்த அந்நியோனயமும், சகிப்புத்தன்மையும் - யாருக்கோ கண்ணை குத்துகிறது. ஆகவேதான் வேலன், சச்சி, உமாகரன் இராசைய்யா தரவழி ஓசி சோறுகளை இறக்கி விட்டுள்ளார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மன்னிக்கவும். வெள்ளை பாவாடை கட்டி கொண்டு, இறைவனை நாடி வரும் சின்னம் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பாதிரிகளை கடைசி வரை ஒரு அமைப்பாக பாதுகாத்தவர்கள் யார் ? பல பத்து வருடங்களின் பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்னிப்புகேட்டார். பாவடை எல்லாம் ஒண்டுதான், வெள்ளையோ, காவியோ. மலேசியாவிலும். அப்போ ஒரு கண்டி மலே முஸ்லிம், கைதடியில் உங்கள் பக்கத்து வீட்டில் வந்து குடியேறினால் அவர் உங்கள் ஊரவரா? இல்லை ஆனால் ஒரே நாடுதானே. வந்தான் வரத்தான் என்றால் - ஒரு இடத்தில் பரம்பரையாக இன்றி, அண்மையில் குடி வந்தவர்கள். நாடு அல்ல, இடம் அதாவது ஊர்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவர்களும் சேர்ச்சை தாண்டி தலையிட முடிந்தால், வாய்ப்பு இருப்பின் கலையிடுவார்காள்…அண்மையில் கூட சில தனிமனித சுதந்திர விடயங்களில் இலங்கையில் பிக்குகளும், மெளலவிகளும், மல்கம் ரஞ்சித்தும் ஒரே குரலாக ஒலித்ததை கண்டோம். மதம் என்பதே by definition தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத கட்டமைப்பே. ஆகவேதான் அவரவர் மதங்களின் பிற்போக்கை அவரவர் எதிர்ப்பதும், அதற்கு ஏனையோர் துணை நிற்பதும் அவசியமாகிறது. குறிப்பாக இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை ஊர் வழமை என காதில் பூவைக்க முனைந்தால் - அந்த பின்னோக்கி செல்லும் முயற்சியை, அல்லது தமிழ் சங்கி மயப்படுத்தலை, அல்லது தமிழ் தாலிபான்களின் செய்கையை எதிர்க்க வேண்டியது நாகரீகம் அடைந்து விட்ட ஒவ்வொரு தமிழனதும் கடமை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கூட்டி கழித்து எல்லாம் பார்க்கத்தேவையில்லை - நேரடியாக பார்த்தாலே உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் நடந்த மனிதகுல விரோத நடவடிக்கைகளில் பாரிய பங்கு வத்திகானுக்கும் உள்ளது. எமது ஊரில் நல்லூர் ஏன் அதன் பூர்வீக அமைவிடத்தில் அல்லாமல் புதிய இடத்தில் உள்ளது, கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்ன ஆகின. சந்திரசேகர ஈச்சரம் எங்கே? மாத்தறையில் இருந்த விஷ்ணுகோவில் எங்கே? தென்னமரிக்க சுதேச மொழி, கலாச்சாரம், இனங்கள் எங்கே? இப்படி பலதில் இதை காணலாம். இதுகூட கொஞ்சம்தான், இன்னும் சிலுவையுத்தம், ஐரோப்பாவில் பேகன் குடிகளின் அழிப்பு என பலது உள்ளது. இது உலகபோர்களில் ஜேமனிக்கு கண்டும் காணாத ஆதரவு வரை தொடர்ந்தது. ஆனால் இன்றைய உலகில் வத்திகான் காலமாற்றப்படி அடக்கியே வாசிக்கிறது. ஆனால் தாலிபான்ஸ், சங்கிகள் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்கே நிற்கிறார்கள். நிற்க, தாலிபான்ஸ், வத்திகான்ஸ் அப்படி என்பதால்….நாமும் தமிழ் தாலிபான்கள் போல் நடக்க வேண்டுமா?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நான் நல்லூரில் இருக்கும் தீவக மக்கள் அங்கே அரசியல் செய்ய கூடாது என சொல்லி இருந்தால் - நீங்கள் சொல்வது சரி. ஆனால் தமிழகத்தை பற்றி 50 வருடம் முன் குடி பெயர்ந்த வட இந்தியருக்கோ, தெலுங்கருக்கோ அதிகம் தெரியாது இருக்க வாய்புண்டா என கேட்பின் என்பதில் உண்டு என்பதே. இதை முன்பே பியூஸ் மானுஷ் விடயத்தில், பாண்டே விடயத்தில் கூறி உள்ளேன். இருவரும் அண்மையை குடியேறிகள். ஆகவே அவர்களுக்கு மண்சார்ந்த புரிதல் குறைவு என. அடிக்கடி மொழிவழி மாநில பிரிப்புக்கு முன், பின் என நான் வகுப்பதை நீங்கள் முன்னர் அவதானித்திருக்க கூடும். இதே காரணம் தான். ஆனால் இதே காரணத்தை வைத்து தமிழில் பேசி, 600 வருடமாக தமிழ் நாட்டில் வாழ்வோர் மீது நாம் பயன்படுத்த கூடாது. ஏன் என்றால் அவர்கள் வந்தான் வரத்தான் அல்ல. தமிழர்கள். இன்னும் 100 வருடத்தில் தீவகத்தோடு தொடர்பே அற்று போய், தம்மை நல்லூரான்களாக அவர்கள் உணரும் போது உங்கள் உறவினரின் சந்ததியும் வந்தான் வரத்தானாக இருக்காது. அவர்களுக்கு அப்போ நல்லூரின் வழமை அல்லது வழமை என ஏற்கபட்டவை பற்றி தெளிவு இருக்கும்.
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
அரசியலில் தோற்றப்பாடு முக்கியம். நீங்கள் சொல்வது போல் நாட்டின் முதன் மகனுக்கு இப்படி நிகழ்வது என்ன இருந்தாலும் அவரின் இமேஜை பாதிக்கும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அதுதான் அவர்களை தாலிபான்ஸ் என்றும் … அதே மடைமையை நாமும் பின் பற்ற வேண்டும் எனும் தமிழர்களை தமிழ் தாலிபான்ஸ் என்றும் அழைக்கிறோம். பொய்களை உருட்டியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் - அர்த்தமே இல்லாமல் சீமானை இழுத்து இரெண்டு வரியை சொல்லி விட்டு …. உண்மையின் உக்கிரம் தாங்காமல் டொட் வைத்துள்ளீர்கள். இப்போதும் சொல்கிறேன் … நல்லூருக்கு தீவக பகுதியில் இருந்து 50 வருடத்தில் வாழ வந்தவர்கள் வந்தான் வரத்தான்களே…. எப்படி நான் இலண்டனில் ஒரு வந்தான்வரத்தானோ அப்படி… ஆகவே இவர்களுக்கு நல்லூரின் நடைமுறை தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் அல்ல.
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
டீச்சர் அடிப்பாதானே🤣
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்தியா புதிய வீரர்களோடு இறங்குகிறது. கேப்டன் உட்பட அனைவருக்கும் தம்மை டீமில் நிலை நிறுத்த சாதித்து காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது இந்தியாவுக்கு பாரிய அனுகூலமாக இருக்கும். அதேபோல் இந்த வசந்த காலம் வரலாற்றில் இல்லாத வரட்சியான வசந்த காலம். இதுவும் இந்திய ஸ்பின்னர்களுக்கு வசதியாக இருக்கும். இங்கிலாந்தில் சொகைப், லீ இருவரும் இந்த அனுகூலத்தை எந்தளவு சாதமகா பயன்படுத்துவார்கள் என்பதும் சந்தேகமே. இங்கிலாந்து டங் , க்ரோலி போன்ற கவுண்டி தரத்துக்கு மேல் எழும்பி சர்வதேச தரத்தில் ஆட முடியாத இருவரை உள்வாங்கி உள்ளனர். அண்மைய சிம்பாப்வே போட்டியை கண்டு களித்தேன். பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக பந்து வீசினார். 1981 Botham Ashes, 2005 Flintoff Ashes போல இந்த தொடரில் ஸ்டோக்ஸ் தனி ஆளாக பிரகாசிப்பார் என நினைக்கிறேன். சிம்பாவ்வேயில் பென்னட் எனும் ஒரு 21 வயது பையன் விளையாடுகிறார். அருமையான மட்டை அடி. ஆனால் பவுண்சருக்கு தடுமாறுவது போல படுகிறது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பள்ளிகூடத்துக்கு சுற்று மதில் கட்டி உள்ளார்கள். நாலு கால் பிராணிகளுக்கு தாக சாந்தி குட்டைகள் கட்டி உள்ளார்கள். அவர்கள் இடம் பெயர்வதை பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதே போல் ஏனைய ஊர்கள் போலத்தான் அவர்களும் கோயில், அலங்கார வளளவு என வேலை திட்டங்களை செய்கிறார்கள். இவை எதையும் நான் சொல்லவில்லை. நான் சொன்னது நல்லூரும், தீவகமும் அயல் அல்ல. ஆகவே புதிதாக வருபவர்களுக்கு அதாவது வந்தான் வரத்தானுகளுக்கு நல்லூரின் வழமை தெரியாது இருப்பது ஆச்சரியமல்ல. குட்டி 16 அடி பாய்ந்து அப்பாவின் பெயரை நிலைநாட்ட வேண்டும். அப்படி செய்தால் கிடா விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டு… இவன் தந்தை என்நோற்றான் கொல் என்று சொல்லுவோம்🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
100% சரியான கருத்து. அதாவது மத நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை. ஆகவே அது அந்த நம்பிக்கைக்குரியவர்களை மட்டும்தான், அதன் எல்லைக்குள் மட்டும்தான் கட்டுப்படுத்த வேண்டும். எனவே எந்த மதத்தின் வணக்க தலத்தின் எல்லைக்கு அப்பால் நடப்பவை எதிலும் எந்த மதமும் தலையிட கூடாது. கேம் ஓவர்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது. மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣. உண்மையிலேயே கிடுக்கு பிடி கேள்வி. இரெண்டு பேரும் எங்களுக்கு விருந்து வையுங்கோ, சாப்பிட்டு பார்த்து ஆர் பெரிய கிடா வெட்டி எண்டு நாங்கள் சொல்லுறம்🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தீவகமும் நல்லூரும் அயற்கிராமங்கள் இல்லை 🤣. அப்படி எண்டால் தீவக மக்கள் நல்லூருக்கு ஏன் குடி பெயர்கிறார்கள். யாராவது தான் வாழும் கிராமத்தை விட்டு பக்கத்து கிராமத்துக்கு இடம் பெயர்வார்களா? மறுபடியும் பச்சை பொய். இப்படி நான் எழுதவில்லை. ஆதாரம் காட்டவும் அல்லது மன்னிப்பு கேட்கவும். மீண்டும் பச்சை பொய்! நான் இங்கே இவர்கள் இருவரும் 600 வருடத்துக்கு முன் வந்தவர் என எங்கும் எழுதவில்லை. நீங்கள் எதிர்க்கும் தெலுங்கு வம்சாவழியினர் பல விஜய நகர அரசோடு வந்தவர்கள். அதைதான் சொல்லி உள்ளேன். இவர்கள் இருவரும் எப்போ வந்தார்கள் என எனக்கு தெரியாது. பொய்யே உன் மறுபெயர்தான் விசுகு அண்ணா வா?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஆதாரத்துடன், சமய நூல்களின் பின் புலத்துடன் விளக்க முடியுமா? நக்கல் இல்லை. உண்மையான கேள்வி.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உண்மையில் இவர்கள் சொல்வதை பார்த்தால் சாமிகளுக்குள்ளும் சாதி, வர்க்க வேறுபாடு உள்ளது என நினைக்கிறேன். இலண்டன் ஹைகேட் முருகன் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் வேற்றினதவரின் மாமிச சாப்பாடு கடை இருக்கலாம். ஆனால் நல்லூர் முருகனின் இருந்து 300 மீட்டர் தாண்டியும் மாமிச சாப்பாட்டு கடை இருக்க கூடாது. ஆனால் உலகெங்கும் முருகன் ஒருவர்தானே? அல்லது High class முருகன், low class முருகன் என இரு வேறு தெய்வங்கள் உளரா?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பிகு எனக்கு எந்த ஊர்ரை இட்டும் எந்த கெத்தும் இல்லை. சாதி/மாவட்ட கெத்தை போல ஒன்றுதான் இந்த ஊர் கெத்தும். யாழில் அந்த ஊரான், இந்த ஊரான் என அல்லது ஏதோ ஒருவகையில் தம் ஊரை இணைத்து பெயர் வைப்போரை பார்க்க சிரிப்பாகவே இருக்கும். விசுகு அண்ணா என்னை அவமானபடுத்துவதாக நினைத்து சொல்லிய வார்த்தைப்படி… நான் வந்தான் வரத்தான்களின் ராஜாவாக்கும்🤣. அதனால்தான் இன்றுவரை என் சொந்த ஊர், மாவட்டம் பற்றி எதுவும் சொல்வதில்லை. யாழ் உறுப்பினருக்கும் எனக்கும் இடையான ஒரே பந்தம் நான் ஈழத்தமிழன் என்பது மட்டுமே. அதுவும் கெத்தாக அல்ல. ஒரு அடையாளமாக.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஒரு சின்ன டெஸ்ட் வைத்து பாருங்கள். இங்கே அதன் ரிசல்டை பதிய வேண்டிய அவசியம் இல்லை. ஊர் அபிமானம் உள்ள ஒரு காரைநகர் ஆளிடம் போய், “யாழ்பாணத்தில் உங்கள் ஊர் காரைதீவுதானே?” என கேட்டுப்பாருங்கள். அவர் கொடுக்கும் எதிர்வினை - உண்மை எது என்பதை உணர்த்தும். பாதி ஜோக், பாதி சீரியசாக ஒரு கேள்வி… உங்களில் ஓடும் சுண்டுகுளி ஜீன் சொத்தையானது என நீங்களே unconscious bias இல் இருப்பது போல் தெரியவில்லையா?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது என நான் எழுதவில்லை. இப்படியாக புதிதாக வதவர்கள் “வரலாறை, வழமையை சரிவர அறிந்து கொள்ளாமல் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை” என்றே எழுதினேன். உண்மையில் நல்லூரின் வழமை அறியாமல் “எனது சகோதரம், உறவினர் வீட்டில் மச்சம் இல்லை” எனவே அதுதான் நல்லூரில் வழமை என நீங்கள் எழுதியதே நான் அப்படி எழுத காரணமாகியது. நீங்கள் நல்லூருக்கு அயலான், உங்கள் உறவினர் வந்தான் வரத்தான். அவரின் வீட்டில் நடப்பதே நல்லூரின் வழமை என அவர் உங்களுக்கு சொல்லி இருப்பார் (நீங்களாக இட்டு கட்டவில்லைதானே). ஆக, இதுதான் ஒரு வந்தான் வரத்தான் நல்லூரின் வழமையை அறியாமல் இருப்பதற்கான சான்று. அவர் புதியவர் என்பதால் அவருக்கு வழமை தெரியாமல் இருப்பது ஆச்சரியமில்லை என்றே நான் எழுதினேன். உண்மையில் உங்களுக்கும் சகபாடிகளுக்கும் என்னதான் பிரச்சனை🤣. தீவக மக்கள் என எழுதினால்…ஐயோ தீவான் என எழுதுகிறார் என பொய்யாக victim card ஐ பிளே பண்ணுகிறீர்கள். இல்லை என்பதை மேற்கோளோடு நிறுவினாலும்…இல்லை “நீ என்ன எழுதினாலும், நாங்கள் அதை தீவார் என்றே வாசிப்போம், விளங்குவோம்” என எழுதுகிறீர்கள். அதே போல் வந்தான் வரத்தானுக்கு ஊர் வழமை தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை என எழுதினால், வந்தான் வரத்தானால் ஊர் வழமையை தெரிந்து கொள்ளவே முடியாது என எழுதினேன் என இல்லாத இன்னொன்றை சொல்லி மாய்மாலம் போடுகிறீர்கள். சில கறுப்பினத்தவர், முஸ்லிம்கள் - பொலிஸ் காரை நிப்பாட்டின உடனேயே “ஐயோ என்னை இன, மத அடிப்படையில் வஞ்சிக்கிறார்கள்” என race card ஐ பாவிப்பது போல இருக்கிறது இந்த செய்கைகள். பிகு இத்தனைக்கும் உங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத தமிழ்நாட்டில் 600 வருடம் முன் வந்தவன் தமிழனே இல்லை, ஆளக்கூடாது என நடக்கும் வெறுப்பரசியலின் தற்போது யாழ் கால நம்பர் 1 cheer leader நீங்கள் 🤣.