Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சாத்ஸ் பாவம், ஒரு மதமாற்ற திரியில் கருத்து சொல்லப்போய் அடி எண்டா அடி, இம்மை மறுமை இல்லாத அடி. உதவிக்கு யாரும் இல்லாதபடியால் நாந்தான் இறங்கி, box ஐ உடைத்து ஆளை மீட்டு கொண்டு வந்தது. அன்று முதல் சாத்ஸ் நிஜ மதவாதிகள் வந்தால் - மெல்ல நழுவி விடுவார். சில சமயம் முட்டும் கொடுத்துள்ளார். ஆனால் என்னை போல மருந்துக்கும் மதவாதம் இல்லாத யாரும் “யேசுநாதர்” எண்டு எழுதினாலே சிலுவையுத்தத்துக்கு கிளம்பிய ரிச்சர்ட் மன்னன் போல் கிளம்பி விடுவார்🤣. இளகிய இரும்பை கண்டால் கொல்லன் பவுண்டரி சிக்சர் எண்டு அடிப்பானாம் 🤣. தீர்ப்பு நாளில், உன் கண் முன்னே நடந்த எனது மதத்தின் நிந்தனையை எதிர்த்து எதுவும் நீ செய்யவில்லையே என ஆண்டவர் கேட்டால்… உங்களை யேசுநாதர் என எழுதிய கோஷானை போட்டு பிளந்தேன் ஆண்டவரே என சொல்லி தப்பிக்கும் எண்ணம் போல் உள்ளது.
  2. நானும் அப்படி எழுதவில்லை. சரி உங்களுக்கு விளங்கவில்லை எனில் நான் சொன்னதை நீட்டி எழுதுகிறேன். யேசுநாதர் நியாத்தின்படி நடப்பவர் அவரின் தந்தையாகிய ஜோசேப்பும் அப்படி பட்ட ஒரு நியாய வழி நடக்கும் மனிதர். அவரின் பெயரில் ஜோசேப் என இருந்தாலும் இவர்கள் இருவரையும் போல நியாயத்தின் வழி நடப்பவர் அல்ல விஜை. அவர் ஒரு சாமான்ய சுயநலத்தின் வழி நடக்கும் அரசியல்வாதி. ஆகவே ஜோசப், ஜேசுநாதர் போல் விஜை நடப்பார் என எதிர்பார்க்க கூடாது. இதுதான் நான் கூறியது. உங்கள் minority complex தொட்டதுக்கெல்லாம் trigger ஆனால் அதுக்கு நான் பொறுப்பல்ல🤣.
  3. இங்கே ஓணாண்டியே ஒத்து கொண்ட விடயம் தனது அதிகார வரம்புக்குள் உள்ள போது சட்ட ஆலோசனையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது (இத்தாலி வழக்கு). கைதானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கபடுகிறது கொலையானால் இழப்பீடு வழங்கபடுகிறது மேலே நான் தந்த இணைப்பின் படி இரு நாட்டு மத்திய அரசுகளும் இந்த பிராசனையை JWC பொறிமுறைமூலம் கையாள்கிறன. இங்கே ஓணாண்டி மிக அடிப்படையான பிரச்சனையை விட்டு விட்டார். தமிழக மீனவர் பிரச்சனை என்ன? அவர்களுக்கு கிடைக்கும் சட்ட ஆலோசனையா? இல்லை. நிவாரணமா ? இல்லை. இவை எல்லாம் கிளை பிரச்சினைகள். அவர்களின் பிரச்சனை இலங்கை படைகள் கைதுசெய்வது இலங்கை படைகள் துன்புறுத்துவது இதை நிறுத்துமாறு இலங்கை படைக்கு ஓடர் போடும் அதிகாரம் இலங்கை அரசுக்கு மட்டுமே உண்டு. அந்த ஓடரை போடுமாறு இலங்கை அரசை நெருக்கும் உரிமை இந்திய மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
  4. பிகு வெளிநாட்டில் தடைப்பட்டுள்ள மாநில மக்களின் சட்ட நிதியை (legal fees) கட்ட மாநில அரசு ஒத்துகொள்ளலாம். ஆனால் இலங்கையில் பிடிபடும் அனைவரும் ஹைகொமிசன் ஏற்பாடு செய்யும் சட்ட ஆலோசனையை ஏலவே பெறுகிறார்கள். அத்தோடு - இந்த விடயத்தை கையாள என ஏலவே ஹைகொமிசன்னூடாக நடக்கும் JWC பொறிமுறை உள்ளது. https://www.hcicolombo.gov.in/section/press-releases/6th-meeting-of-the-joint-working-group-on-fisheries/
  5. இது தமிழ் நாட்டின் நில எல்லைக்குள் சட்டம் ஒழுங்கை காப்பாறும் அதிகாரம். மீனவரை இலங்கை நேவி, இலங்கை கடலில் வைத்து துன்புறுத்துவது -தமிழ் நாட்டின் law and order issue அல்ல. நீங்கள் எழுதியவற்றுக்கு ஆதாரம் கேட்டுள்ளேன். அதன் பின் பார்க்கலாம் யாருக்கு தவறான புரிதல் என.
  6. சட்ட ஆலோசனை தமிழ் நாட்டில் அல்லது இந்திய மண்ணில் இருந்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது என நினைக்கிறேன். வழக்கும் நடந்தது இந்தியாவில் பின் இத்தாலிக்கி மாறியது என நினைவு. இதை மாநில அரசு நிதியில் அணுகலாம் என்பது வெளிப்படை. இங்கே சட்ட ஆலோசனை தேவை இலங்கையில் கைதாகி உள்ள மீனவர்க்கு. அதை தா நா அரசு செய்ய முடியாது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு சட்ட ஆலோசனை எண்டால் அதற்கு முன் இந்திய மண்ணில் கொலையாளிகள் மீது வழக்கு நடக்க வேண்டும். அதற்கு கொலையாளிகளை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும். கொலையாளிகள் இருப்பது இலங்கையில். ஆகவே சும்மா சட்ட ஆலோசனை எண்டு சொல்லிவிட்டு போய் விடலாம். ஆனால் யாருக்கு கொடுப்பது? கொடுக்கும் தேவையே இல்லாத போது? இதற்கு கொஞ்சம் ஆதாரத்தை தர முடியுமா? யூடீயூப் வீட்யோக்கள் வேண்டாம். நிவாரணத்துக்கு அல்ல. அதை இப்போதும் கொல்லப்பட்டால் வழங்கிறார்கள் என நினைக்கொறேன். இலங்கையில் தமிழக அரசு வக்கீல் மீனவருக்க்காக ஆஜராகிய ஆதாரம் கேட்கிறேன். இதற்கும் ஆதாரம் பிளீஸ்
  7. அதுசரி, நகை இருந்து அடவு வைப்பவனுக்கு ஆதரவாக பேசும் இதே வாய்தானே, மகளிர் உதவி தொகை பெறும் பெண்களை “ஆயிரம் ரூபாய்க்கு பொறந்தவர்கள்” என சொன்னதை வேடிக்கை பார்த்தது. பரம ஏழைகளான, ஒரு மஞ்சாடி தங்கம் இல்லாத குடும்பங்களுக்கு திருமணதிட்டம், லேட்டாப் என கொடுத்த நலதிட்டங்களை தடுத்து நிறுத்துமாறு கூச்சல் இட்டது. ஏழை பங்காளந்தான் —- நம்பிட்டோம்🤣.
  8. இந்த பிராபோடாத பெண்ணியவாதிகளும், உங்களை போன்ற ஆண்கள் சங்கம் ஆட்களும் என்னை பொறுத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் உலகில் பெரும்பான்மை மக்கள் “சமத்துவம்” என்பதை அதன் இயற்கையான அர்த்ததிலேயே விளங்கி கொள்கிறார்கள். அது நான் மேலே கொடுத்த விளக்கங்கள். வரலாறு - அதை அதன்பாட்டில் விடுவோம். அது எப்படி திரும்புக்கிறது என நானோ, நீங்களோ பார்க்கப்போவதில்லை.
  9. நிச்சயமாக இல்லை. மாநில அரசு ஸ்டாலின் வீட்டு பணத்தில் நடக்கவில்லை. ஒவ்வொரு நியமனமும் பொதுபணத்கில்தான் நடக்கும். அந்த நியமனங்கள் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்ன்வர வேண்டும். ஒரு சஎவதேச பிணக்கில் சட்ட வல்லுரனை அதுவும் சர்வசேத சட்ட வல்லுரனை நியமிக்க மாநில அரசால் முடியாது. மேலே சொன்ன அதே கருத்தை, வசனங்களின் ஓடரை மாற்றி போட்டு எழுதி உள்ளீர்கள். மீனவருக்கு பிடிபடும் வரை சட்ட ஆலோச்னை தேவையில்லை. பிடிபட்டபின் அதை கொடுப்பது ஹைகொமிசன். அறவே இல்லை. ஒரு சர்வதேச பிணக்கில் ஒரு மாநில அரசுக்கு எந்த சட்ட வகிபாகமும் கிடையாது. மீனவர்கள் தமிழ் நாட்டு மண்ணில் இருக்கும் போது மட்டும் அவர்கள் நலன் மாநில அரசின் கடமை.
  10. இதன் முடிந்த முடிவு - நீங்களே எழுதியது போல் வழக்கு போடும் தகமை மத்திய அரசிடமே உள்ளது (state party). ஆகவே தமிழ்நாடு அரசு மத்திய அரசை அதன் முன் உள்ள வழிமுறைகளை பாவித்து இதை நிறுத்த சொல்வதில் சட்ட வழியும் அடங்கும். ஆனால் இந்த சட்ட வழிமுறை எதுவும் தேவையில்லை. ஜெய்சங்கர், ஹேரத்தை கூப்பிட்டு ஒரு காட்டு காட்டினாலே கொலைகள் நின்றுவிடும். ஆனால் செய்யமாட்டார்கள். மீனர்களுக்கா? இலங்கையில் பிடிபட்ட பின் வழங்க முடியாது அது இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரம். அப்போ கடலுக்கு போக முன்னம், பிடிபட முதல் ஆலோசனை வழங்கலாம்? என்ன ஆலோசனை? இலங்கை எல்லைகுள் போகாதீர் எனும் ஆலோசனை. இது சட்ட ஆலோச்னை அல்லை. அறிவுறுத்தல். இது தமிழ்நாடு மீன்வள துறை அதிகாரிகள் ரூட்டினாக செய்வதுதான். சட்ட ஆலோசனை வழக்கில் ஒரு party யாக இருக்கும் தகமை உள்ளோர்ருக்குத்தான். இங்கே மீனவர்களுக்கு அந்த தகமை இல்லை.
  11. சும்மா எழுதிதள்ளலாம்… ஆனால் கோரிக்கை வைப்பதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஒண்டு செய்யலாம் - போராட்டங்களை தூண்டி விட்டு, தாமே நடத்தி, கலவரம் பண்ணலாம். தமிழ் நாடு இன்னொரு கஸ்மீராகும். இங்கே பலர் விரும்புவதும் அதைத்தானே🤣. நாங்கள் அழிஞ்சுவிச்டோம், அவங்கள் எப்படி ஜாலியா இருக்க முடியும்🤣.
  12. இந்திய அரசியல் சட்டம் என்ற அடிமை சாசனத்தில் கடிதம் மட்டும்தான் எழுத முடியும். Back to ஈ வே ரா - ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது. நீங்கள் கதைப்பது அமெரிக்கன் அரசை பற்றி அல்ல. தமிழ்நாட்டு அரசு. மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பம் £100 அண்ணளவாக பெறுகிறது. ஏனைய மகளீர் உதவி தொகை போன்றவற்றோடு ஒப்பிடுகையில் இது அதிகபடியனது. இல்லை முடியாது. எந்த இந்தியாவுக்கு அப்பாலனான சட்ட நடவைக்கையையும் மத்திய அரசினூடுதான் மாநில அரசு முன்னெடுக்கலாம். எந்த சர்வதேச சட்டமன்றுக்கு மீனவர் போகலாம்? சொன்னால் தொடர்ந்து பதில் இடுகிறேன்.
  13. பூரணமாக அல்ல, அறவே வெற்றி பெறவில்லை. ஏன் என்றால் டெல்லிக்கு தெரியும் பிழை தமிழக மீனவர் மீது என்பது. கொலை செய்யவேண்டாம் என ஒரு மிரட்டல் டெல்லி ஒழுங்காக விட்டால், கொழும்பு கேட்கும். ஆனால் அதை கூட செய்ய மாட்டார்கள். மீண்டும் வெறும் வார்த்தைகளின் கோர்வை மட்டுமே. என்ன செய்யலாம் என்ற பரிந்துரை இல்லை.
  14. ஏன் சொல்ல முடியாது. கடலில் ஒரு துரும்பை நகர்த்தும் அதிகாரம் கூட இல்லாத மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. ஓணாண்டி சொல்லிற்றார் என்பதால் மாநில அரசுக்கு இந்திய அரசியலமைப்பை மீறி அதிகாரத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள் என்ன மோடி வீட்டுக்கு கல் எறிவோம் என்ற மிரட்டலா? Concurrent list இல் உள்ள கல்வி ஒதுக்கீட்டை கூட தரமாட்டோம் என்கிறார்கள். எமது வரியைதானே கேட்கிறோம் என சொன்னால் - வரி தாறதை நிப்பாட்டினால் ஜனாதிபதி ஆட்சி என மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டை விட பலமடங்கு அதிகாரம்மிக்க கஸ்மீரை எப்படி காயடித்தார்கள். இதுதான் இந்திய அரசியலமைப்பின் கட்டுப்பாடு. மீறினால் அடிதான். யாராயினும். எப்படி அணுகுவது? கொஞ்சம் விளக்கமாக ஒரு செயல்முறையை பரிந்துரைக்கவும். இதை ஏன் சீமானோ வேறு ஒரு தலைவரோ செய்ய கூடாது?
  15. என்ன கைய பிடிச்சு இழுத்தியா டைப், விதண்டாவாதம். இதே திரியில் நீங்கள் மேலே எழுதியதை இப்போ மறுதலித்து எழுதுகிறீர்கள்🤣. அத்தோடு உதாரணங்களை அப்படியே literal ஆக பிரயோகிக்கிறீர்கள். எல்லாமுமே இயற்கையின் அடிப்படையில்தான் தீர்க்கப்படுகிறன. ஆணுக்கு ஆண் சமம் எனவே என்னை இங்கிலாந்து கிரிகெட் டீமில் விளையாட விடுங்கள் என்பது சமத்துவம் அல்ல. எனது அளவு திறமை உள்ள ஒரு வெள்ளைகாரர் விளையாடும் போது நானும் விளையாட கூடியதாக இருக்க வேண்டும். அதுதான் சமத்துவம். மிக முக்கியமான குறிப்பு ஐரோபிய மனித உரிமை சாசனம் - போலந்திலும் சட்டம். இது பாலின சமத்துவத்தை மீறாமையை உறுதி செய்கிறது. நீங்கள் சொல்வதுதான் சமத்துவம் என்றால் - டுஸ்க் சொன்னது சட்ட மீறல். ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லை.
  16. அதுதான் சொன்னேன்… நீங்கள் சமத்துவம் என நம்பி கொண்டு, எதிர்ப்பது “பிரா போடாதமைதான் பெண்ணியம்” என கதைக்கும் கூட்டத்தின் interpretation ஐ. ஆனால் சமத்துவம் என்பது அது அல்ல. ஆணுக்கு பெண் சமம் எனவே ஆண்கள் எல்லாரும் பிள்ளை பெறுங்கள் என்பது எப்படி பட்ட மொக்கு கதையோ அதே போலத்தான், எடுத்த எடுப்பில் பெண்களையும் முன்னரங்கு அனுப்புங்கள் என்பது. இந்த மொக்குகதை அல்ல சமத்துவம். உடலியல், உளவியல் அடிப்படையில் உள்ள வேறுபாட்டை புறந்தள்ளுவது அல்ல சமத்துவம். இல்லை ஆம்பிளை பிள்ளை பெற வேண்டும் என வலியுறுத்துவதுதான் சமத்துவம் என நீங்கள் நம்பினால் - அது உங்கள் புரிதல் பிழை.
  17. குடும்பங்களுக்கு இப்போ நாளுக்கு 250 தமிழக அரசு கொடுக்கிறது. இதை 300 ஆக மாற்றியுள்ளதாக திமுக அதிகாரபூர்வ கணக்கு சொல்கிறது. https://www.facebook.com/share/16VSFkvsyg/?mibextid=wwXIfr வழக்கறிஞர் - இது diplomatic services வழங்குவது. மத்திய அரசு லிஸ்ட். இருவரின் பெயரும் ஜோசப் என்பதால். உங்களுக்கு ஏன் எரியுது?
  18. ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதம் எல்லாம் லீவு லெட்டரா அல்லது லவ் லெட்டரா? கடிதம் மூலம் தலையிடுங்கள் என கேளாமலே மத்திய அரசு தலையிடலாம் ஏன் என்றால் இந்திய சட்டப்படி நிலம் மட்டுமே மாநிலத்தின் ஆளுகை, Indian territorial waters எனப்படும் கடல்பகுதி முழுக்க முழுக்க மத்திய அரசின் கீழ், இதை navy, coast guard, customs போன்ற மத்திய அரசு ஏஜென்சிகள்தான் பராமரிக்கும். அப்படி இருந்தும், தமிழகமுதல்வர் (எந்த கட்சியாயினும்) கடிதம் மூலம் கேட்டும் மத்திய அரசு தலையிடுவது இல்லை. இதை திமுக, அதிமுக அரசுகள் தவறாமல் செய்தே வந்தனன்வருகிறன. இதுக்கு மேல் என்ன மோடி வீட்டு கூரையில் ஏறி நின்றா கத்த முடியும்.
  19. பையா… நான் கிருஸ்ணாவுக்கு ஆதரவு இல்லை. நான் எழுதியது நான் எப்போ கருத்து எழுதினாலும் அது யார் மேலாவது எனக்கு உள்ள பொறாமையால் எழுதிய கருத்து என எழுதும் ஓணாண்டிக்கான பதில்.
  20. அங்க குளறுபடியே இல்லை. தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள் 🤣
  21. இந்த யூடீயூப்பர் மேல் ஓணாண்டிக்கு அழுக்காறு …. தான் வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உழைத்து இப்போ ஊரில் வாழும் வாழ்வை, சின்ன பெடியன் எங்கேயும் போகாமல் வீடியோ போட்டு சுளுவாக சம்பாதிச்சு வாழ்கிறான் என்ற காழ்புணர்ச்சி… கவலை வேண்டாம்…நீங்கள் இப்படி அல்ல என்பது தெரியும். ஆனால் இந்த காழ்புணர்ச்சி கத்தியை யாரும் சுத்தலாம் என்பது புரிந்திருக்கும். இனிமேலாவது அழுக்காறு, வழுக்கையாறு, காழ்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என சக கருத்தாளருக்கு வர்ணம் தீட்டாமல் - கருத்தை கருத்தால் எதிர்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
  22. இல்லை அண்ணை. இது தனியே இயலுமை சம்பந்தபட்ட விடயம் மட்டும் இல்லை. ஏன் எந்த சமூகமும் (புலிகளும்) எடுத்த எடுப்பில் பெண்களை போருக்கு அனுப்புவதில்லை என்பதற்க்கான காரணங்களை மேலே சொல்லி உள்ளேன். உலகில் பெரும்பாலான ஆண்களிடம் நீ போருக்கு போகிறாயா, உன் மனைவி மகள் போகட்டுமா? என கேட்டால் அநேகரின் பதில் என்னவாக இருக்கும்? அந்த பதிலின் அடிப்படைதான் அரசுகள் முதலில் ஆண்களை கூப்பிடுவது. ஆனால் தேவை வரும் போது இருபாலாரும் அழைக்கப்படுவர். புலிகளும், இஸ்ரேலும் உதாரணங்கள். நீங்கள் சொன்ன மிகுதியில் முழு உடன்பாடே. யானை மரத்தை முறிக்கும். குரங்கு மரம்தாவும். குரங்கால் மரத்தை முறிக்க முடியாது. ஆனால் யானையால் மரம்தாவ முடியாது. ஆகவே சமமின்மை உள்ளது. ஆனால் ஒரு குழுவில் இல்லாதது, மற்ற குழுவில் இருக்கும். அதே போல் சில குரங்குகளுக்கு மரத்தை முறிக்க வேண்டும் என்றால் அதை பொதுமையை காட்டி தடுக்க கூடாது. இதுதான் சமத்துவம்.
  23. இது யாரோ தலையில் பெயிண்ட் டப்பாவை கவிழ்த, பிரா போடாமைதான் பெண்ணியம் என சொல்லும் ஆளிடம் கற்று கொண்ட, சமத்துவம் பற்றிய மிக தவறான புரிதலும் அதன் பால் ஏற்பட்ட விமர்சனமும். சமத்துவம் என்பது அனைவரையும் ஒரே விதமாக நடத்த வேண்டும் என்பதால், கொக்கு தேனீர் கொடுக்கும் நீண்ட குவளையில், நாய்க்கும் தேனீர் கொடுப்பதல்ல. சிம்பிள் கணிதம். 10 பெண்களும் ஒரு ஆணும் இருந்தால் அத்தனை பெண்களும் கர்பவதி ஆகலாம். 10 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தால் ஒரு பெண்மட்டுமே கர்பவதி ஆகலாம். இது ஒவ்வொரு இனமும்/நாடும் தன் இருப்பை பேண செய்வது. இது பாலின சமத்துவத்தை விட பெரிய, இருப்பு சம்பந்தபட்ட விடயம். மூச்சுவிடாமல் எழுதிய இத்தனைக்கும் பதில் மேலே உள்ள இலகு கணிதம்.
  24. உங்களுக்கு சுதந்திர பறவைகள் வரலாறு அது எப்படி பெண்புலிகளாக மாறியது என்பது மறந்து விட்டதா? 1987 இல் காட்டுக்குள் போன பின் தான் புலிகள் இயக்கம் முதன்முதலாக ஆள்பற்றாகுறை அனுபவித்தது. அதன் போதே பெண்களை போருக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை அவர்கள் தளர்த்தி கொண்டார்கள். Necessity is the mother of all inventionச். தேவையே சகல மாற்றங்களினதும்/கண்டுபிடிப்புகளினதும் தாய். போலந்திலும் இந்த தேவை உணரப்படும் போது இந்த நிலமை மாறும். *பெண்களை சண்டைக்கு முதலில் அனுப்பியது ஈபி. காரைநகர் முகாம் மீதான தோல்விதாக்குதல். அதில் ஒரு பெண் போராளி சாவு என நினைக்கிறேன். அப்போ அந்த முடிவை புலிகள் விமர்சித்தார்கள் (கேணல் கிட்டு). உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை. சமத்துவம் - தனிநபராக தேரும் உரிமை. Societal division of labour சமூகத்தின் வேலை பங்கு பிரிப்பு - நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்து கலாச்சாரம் வேறுபடும். இந்த பொதுமைக்குள், அதற்கு எதிராக போகும் தனி நபர்களை போகவிடுவதே சமத்துவம்.
  25. கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣. ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்🤣. மேலே சீமான் மேலே சொல்லியது சடையல் அல்ல. நான் சீமான் பிஜேபி ஏ டீம் என சொல்லவில்லையே? அவர் பி டீம். அவர் அடிப்பதுமாரி அடிப்பார், பிஜேபி அழுவதுமாரி அழும். சீமானை பார்த்து அழுக்காறு நான் அடைய தேவையில்லை. ஏன்? நான் சொந்த உழைப்பில் சாப்பிடுகிறேன். சீமானை போல (சினிமா) எனது துறையில் தோல்வி அடைந்து விட்டு இன்னொரு துறைக்கு நான் பாயவில்லை. திருமணம் ஒன்றுதான் எந்த பெண்ணும் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்ல இடமில்லாமல் வாழ்கிறேன். என்னை ஒத்த தோற்றமுடைய 15 வயது பையனை மனைவியின் வளப்பு மகன் என நான் திடீரென அறிமுகம் செய்யவில்லை. போன தேர்தலில் இல்லாத 8 கோடி நீலாங்கரை பங்களா என்னிடம் இல்லை. எனது உற்ற தோழன் இறந்தபின் அவன் சாவுகட்டை இடிப்பித்து, அவன் யாரென்றே தெரியாது என பொய் கூறும் வஞ்சகன் நான் இல்லை. இன்னும் பல காரணங்கள் உளன. தேவைபட்டால் கேட்கவும். என்னை கேவலப்படுத்துவது யாழில் எழுதுவதோடு கூடவே வரும் occupational hazard அதை நான் கிஞ்சித்தும் கனம் பண்ணுவதில்லை. ஆனால் இப்படிபட்ட கேவலமான மனிதனோடு எனக்கு அழுக்காறு என கேவலப்படுத்துவது ஓவர் 🤣. அண்டைக்கு 100 லைக்ஸ் யூடியூபரோடு அழுக்காறு எண்டீர்கள். இப்போ இது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.