goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by goshan_che
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சீமானிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து பதிலளிக்க தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் சட்ட வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அதிகரித்துள்ளன. ஒரு பக்கம் சீமான் தரப்பில் இருந்தும், இன்னொரு பக்கம் சீமான் எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்தும் விஜயலட்சுமிக்கு அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மீது கடந்த 2011 இல் நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் கொடுத்தார். ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி மோசம் செய்துவிட்டு இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார் விஜயலட்சுமி. ஆனால் சில மாதங்களிலேயே அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார். இதன் பின் சீமானை பற்றி பெங்களூருவில் இருந்துகொண்டே அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு சர்ச்சை, பரபரப்பு கிளப்பிக் கொண்டே இருந்தார் விஜயலட்சுமி. இப்படியாக பத்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் மீண்டும் 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார். ‘சீமானால் நான் ஏழுமுறை கருக்கலைப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். இப்போது சீமான் தரப்பினர் என்னை மிரட்டுகிறார்கள்’ என்று புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பவித்ரா முன்னிலையில் ஆஜரான விஜயலட்சுமி, 164 ஸ்டேட்மென்ட் அதாவது வாக்குமூலமும் நீதிபதியிடம் கொடுத்தார். சீமானுக்கும் தனக்குமான உறவுக்கு ஆதாரங்களாக போட்டோக்கள், வீடியோக்கள், போன் உரையாடல்கள் ஆகியவற்றைக் கொடுத்தார் விஜயலட்சுமி. திடீரென அதன் பின் மீண்டும் புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி, ‘எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. இனிமேல் சென்னை பக்கம் வர மாட்டேன்’ என்று சொல்லி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில்தான்… தன் மேல் விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டதால், அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சென்றார் சீமான். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘விஜயலட்சுமியே வாபஸ் வாங்கினாலும் வழக்கை ரத்து செய்ய முடியாது. 3 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் சீமான். உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, ‘12 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இவ்விவகாரத்தில் செட்டில்மென்ட் முயற்சிகள் நடைபெற்றதா? நடைபெறுகிறதா?’ என்று கேட்டார். சீமான் தரப்பில் அதுகுறித்து ஆலோசித்து சொல்வதாக கூறினர். இந்நிலையில் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து, வழக்கை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மேலும் தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோர் பதிளிக்குமாறு நோட்டீஸும் அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சீமானுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ‘இப்போது இடைக் காலத் தடை கிடைத்திருக்கிறது. விரைவில் ரத்தாகும்’ என்று தெம்பாக கூறினார் சீமான். அதேநேரம் சீமானோ, ‘செட்டில்மென்ட்’ என்ற பேச்சே இல்லை என்று மறுத்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் சீமான் சார்பில் அவரது உறவினர் லூயிஸ், விஜயலட்சுமியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அக்கா என்று விஜயலட்சுமியை அழைத்து அவர் பேசிய ஆடியோ சமூக தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் உடைந்து போன குரலோடு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார் விஜயலட்சுமி. இந்த அசிங்கத்துல இனிமே போராட முடியாது. எனக்காக உச்ச நீதிமன்றத்துல குரல் கொடுக்க யாருமே இல்லையே’ என்ற விரக்தி அவரது குரலில் தெரிந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழ்நாடு போலீஸாரும், விஜயலட்சுமியும் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். போலீஸார் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர். அதாவது தங்களது முதற்கட்ட விசாரணையில் சீமானுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் பதில் மனுவோடு சேர்த்து தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் மனம் உடைந்துபோயிருக்கும் விஜயலட்சுமியை தமிழ்நாட்டிலிருந்து சீமான் எதிர்ப்பாளர்கள் தொடர்புகொண்டும், நேரில் சந்தித்தும் பேசி வருகிறார்கள். ’நீங்க இப்போதுதான் தைரியமாக இருக்கணும். உச்ச நீதிமன்றம் கொடுத்த ஸ்டேவை உடைக்க தமிழ்நாடு அரசும் உறுதியாக இருக்கிறது. அடுத்த விசாரணையின்போது உங்களுக்காக திறமையான வழக்கறிஞரை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீங்க தயங்காதீங்க. இத்தனை வருஷம் போராடிட்டு, இப்ப மனம் மாறிடாதீங்க, உங்களை பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்திய சீமானுக்கு பயந்து போய் பின்வாங்கலாமா? உங்களோட கண்ணீருக்கும் கஷ்டத்துக்கும் நல்ல தீர்வு கெடைக்கும்” என விஜயலட்சுமியிடம் தைரியம் கொடுத்து பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் விஜயலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் தன் தரப்பில் வழக்கை நடத்த முன்வருவார் என்று சீமான் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஸ்டேவை உடைத்து, விசாரணையை மீண்டும் தொடர தமிழக அரசுத் தரப்பும் திறமையான வழக்கறிஞர்களை அமர்த்தவும் ஆலோசனை செய்து வருகிறது. https://minnambalam.com/political-news/seeman-case-pressure-to-vijayalakshmi/ இந்த லூயிஸ் பேசிய ஆடியோ பற்றிய செய்தியை நான் இரு நாட்கள் முன் யாழில் இணைத்தேன் தூக்கி விட்டார்கள்.
-
‘தமிழகத்தின் பகைவர்கள்...’ - அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாஜக, நாதக மீது திமுக காட்டம்
ஆமா நீங்க கூட்டத்துக்கு போவீங்க…உங்களுக்கு டெல்லி கோர்ட்டில கேஸ் பெண்டிங்கா என்ன.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நீங்கள் சொன்னதை நான் ஜோக் அடித்தேன் எண்டா நினைச்சீங்க. எனக்கு தெரிந்தது சுஷ்மிதா சென், ரீமா சென், றியா சென், மூன் மூன் சென் தான். நீங்கள் அமர்தியா ரேஞ். அதுதான் உங்களுக்கு கொஞ்சம் ஒத்தூதினேன்🤣. ஓமோம்…இந்த ரொம்ப எளிய சூத்திரம்தான். அதிமுக தீமை செய்தது - பார்தீர்களா திராவிட கட்சி தமிழரை வஞ்சிக்கும் விதத்தை. அதிமுக நன்மை செய்தது - அது பெயரில் மட்டும்தான் திராவிட கட்சி. பிகு சும்மா வீடியோவை பார்த்தே அண்ணன் மாரி பேச கற்றுகொண்டுள்ளீர்கள். நவீன துரோணரும் ஏகலைவனும்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இதை இப்படியே விடக்கூடாது. விஜி அண்ணி விலகி போனாலும்…அவர் மேல் சீமான் வழக்கு போட்டு, தான் குற்றமற்றவர், அவர் சொன்னது பொய் என நிறுவ வேண்டும் என்கிறீர்களா? பிகு அண்ணனுக்கு பட்டக்ஸ்சுக்கு கீழ பாம் வைப்பது அவர் ஆட்களேதான். நீங்கள் அருணாவை ஆதரித்தபோது, சீமானை ஆதரிப்பதும் அவர்களை வெளிகொணரும் ஒரு spy ops என்பதை இப்போ நான் நம்ப தலைப்படுகிறேன்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
https://ta.quora.com/தமிழகத்தில்-யார் தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள்,115. அதில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்,கட்டப்பட்டவை 90. சுதந்திரத்திற்கு பின், ஐந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே காங்., ஆட்சியில், 19 ஆண்டு களில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, ஓராண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், 36 அணைகள் கட்டப்பட்டுள்ளன. எம்ஜிஆர் , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமைகளில், அதிமுக செய்த 32 கால ஆட்சியில், மொத்தம் 29 அணைகள் கட்டப்பட்டுள்ளன. பிகு குவோராதான் ஆனால் கூகிளில் சும்மா தேடினாலே இந்த தகவல் எல்லாம் வரும்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நான் எங்கே ஜோக் அடித்தேன். 95% ஜோக் அடிக்கவே இல்லை.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
அப்பா…ஒரு மாரி உண்மைய உளராம பேசி முடிச்சிட்டன்🤣. சும்மா ஒரு கருத்த எழுதினா…ஏதோ அமெர்தியா சென் மாரி என்னையவே போட்டு குடையிறது🤣
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நீங்க அப்படியா நினைச்சீங்க… தம்பிக்கு எப்பவுமே விளாட்டுத்தான்… ஐயோ…ஐயா எதிர் கட்சியை பார்த்து நான் கேட்கிறேன்…. ஜேர்மனி, அமெரிக்கா, ரஸ்யாவில் கூட திராவிட மாடல் இல்லை அவை வளர்ந்வில்லையா?
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லி புட்டீக…. அண்ணைமார், தம்பி எல்லாம் ஆசுபத்திரி போகாத குறை🤣… மந்திரத்தை மறந்துட்டீங்க போல… “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எங்கே சொல்லு… திராவிடத்தால் வீழ்ந்தோம்… சிக்குமங்கு சிக்கு மங்கு சிக்கு பப்பா… உழைத்து வாழவேண்டும், திரள்நிதியில் வாழ்ந்திடாதே… யோவ் சும்மா இருங்கையா…ஒரு அளவுக்கு மேல நானே உண்மையை உளறிடுவேனோன்னு பயமா இருக்குயா…அவ்….
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
மண்டேலாவின் முதல் தேர்தலில் கூட 95% கிடைக்கவில்லை. என்னையா கூத்து இது🤣 1967 இல் இருந்து தமிழ் நாட்டை தொடர்சியாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் கொள்கைதான் தற்போதைய தமிழ் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு காரணமாகும் என்று குறிப்பிடுவது சரி அல்ல. தமிழ் நாட்டின் வளர்சிக்கு வெள்ளைகார்கள், அதற்கு முன் களப்பிரர்கள், மூவேந்தர்கள், சங்க கால மன்னர்கள் ஆகியோர் பங்களிப்பும் முக்கியமாகும்🤣.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இது இனி நடவாத காரியம். தமிழ்நாட்டின் விடிவெள்ளி…அப்படி…இப்படி…என புகழப்படும் காமராஜர் அடித்த ஆப்பு அது.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
ஏற்கனவே தமிழ்நாடும் ஏனைய தென்னிந்திய+மஹாராட்ஸிடிரா+குஜராத் இணைந்து வழங்கும் நிதியில்தான் ஒண்டும் உதவாத ஹிந்தி பெல்ட் மாநிலங்கள் ஓடுகிறன. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இராமர் கோவிலில் மினகெடாமல், வத வத என பெத்து போட்டு விட்டு சோம்பேறிகளாய் மக்களை இருக்க விடாமல், அளவான குடும்பம், பெண்ணுக்கு கல்வி, அதிக இட ஒதுக்கீடு என முற்போக்காக நகர்வன. ஹிந்தி பெல்ட் பிள்ளை பெற்று நாட்டுக்கு சுமை ஏத்த மட்டுமே இலாயக்கு. கூட்டாட்சியில் நிதி பங்களிப்பும் ஒரு முக்கிய அம்சம். மக்கள் தொகை ஒப்பீட்டளவில் கட்டுக்குள் இருப்பதே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு அதிக நிதி அளிக்க காரணம். எனவே இதையே காரணமாக வைத்து எம்பி சீட்டை குறைப்பது அநீதியானது. உழைப்பவனுக்கு குறைய சீட், ஓசியில் பிள்ளை பெறுபவனுக்கு கூட சீட் என்பது கூட்டாட்ச்சி தத்துவத்தை மீறும் செயல். மாநிலங்களின் வகிபாகத்தை கணக்கிடும் போது தனியே சனத்தொகையை மட்டும் கருத கூடாது. எந்த மாநிலங்களால் இந்தியா முன்னோக்கி போகிறது என்பதும் முக்கியம்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
என்னப்பா இது… அண்ணை ஒருவர் தமிழ்நாட்டில் “வள்ர்கிறேனே மம்மி” கட்சி, 3வது(2வது?) பெரிய கட்சி, 2026 இல் தனித்து நின்று சரித்திரம் படைக்க போகும் கட்சி (ஆனால் பெட் கட்ட கேட்டேன், மொள்ள மாறி விட்டார்🤣) என்றாரே? அத்தாட்டி பெரிய கட்சி போய் இருக்க வேண்டும் அல்லவா?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இது பொதுவான கேள்வி அந்த துப்பாக்கிதாரி கேஸ் என்னவாயிற்று? ஒருவர் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்தால் - அதை காட்டி பொலிசாரோடு முரண்பட்டிருந்தால் - ஏன் வழக்கு போடவில்லை? இது மிக கடுமையான குற்றம். மாறாக… அவர் அனுமதியோடு துப்பாக்கி வைத்திருப்பின், அதை மீள ஒப்படைத்து…அதை அராஜக திமுக ஆதரவு பொலிசின் தோல்வி என நாதக கொண்டாடி இருக்க வேண்டும். இரெண்டும் இல்லை… கேசை அமுக்கி விட்டார்களா? திமுக, சீமான், பாஜக எல்லோரும் இந்திய ஒருமைப்பாடு, தமிழ் தேசியத்தை சிதைப்பது என வரும் போது ஒரே அணிதான்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இப்படி ஒரு சதி கட்சிக்கு எதிராக நடப்பது தெரிந்தும் ஏன் மெளனம் காக்கிறார்? உடனடியாக அப்படி ஒரு விங் எமது கட்சியில் இல்லை - இது பொய் என அல்லவா அறிவிக்க வேண்டும். அப்படி ஒரு விங் இல்லை என்பதை நான் ஏற்கிரேன். ஆனால் அந்த வீடியோவை வெளியிட்டோர் நாதக, சீமானை சுற்றி உள்ளோர்தான். துப்பாக்கிதாரி பிடிபட்டதும், அவர் யார் என்ற உண்மையை மறைக்க இட்டு கட்டபட்ட கதை இந்த ex-Indian Army Wing. இதை நாம்தான் பேசுவோம் - திமுக உட்பட எந்த இந்திய கட்சியும் பேசாது -காரணம் இது இந்திய ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயம். பிகு இந்த வீடியோவை வெளியிட்டவர்களும், பரப்பியவர்களும் நாதகவினரே.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
சீமான் மத்திய அரசு செய்வதை எல்லாம் எதிர்பதாக வாயால் வடை சுடுவார்…. ஆனால் செயல் என்று வந்தால் பாஜக அதன் கூட்டணி கட்சிகளோடுதான் அவர் நிற்பார். உரக்க கத்தும் - கள்ள மெளனி அவர். மேலே புறக்கணித்த கட்சிகள் எல்லாம் பாஜக சார்பு நிலை எடுப்பன, அதுதான் குரூப்பில டூப்பு என்றேன். இது தமிழக நலன் சார்ந்த விடயம், பாஜக கூட்டணியில் ராஜ்யசபா சீட் எடுத்த பாமக, திமுகவை மிக கடுமையாக சாடும் அதிமுக, தவெக கூட இதில் பங்கெடுத்துள்ளன. நாதக கூட பங்கெடுத்து தம் கருத்தை சொல்லி விட்டு, திமுக நாடகம் அடுகிறது என்ற கருத்தையும் சொல்லி விட்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இன்று, மத்திய பிஜேபி அரசால் தமிழ்நாட்டின் மக்களவை பிரதிநிதிதுவம் குறைக்கபடக்கூடாது என திமுக, அதிமுக, பாமக, விசிக என எதிரும் புதுருமான சகல கட்சிகளும் ஒரே அணியில் திரண்ட சமயம்👇. யார் ஆப்செண்ட் என மட்டும் கேட்க்ககூடாது 🤣. அப்படி கேட்டால் நீங்கள் வான்கோழி🤣 முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபுல் சப்போர்ட்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த தலைவர்கள்! Vignesh SelvarajUpdated: Wednesday, March 5, 2025, 14:27 [IST] மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தது. இப்படிச் செய்தால், மாநிலத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது எனவும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மாநில உரிமையை காக்க அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். பாஜக, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகள் பங்கேற்கவில்லை. Indian Stock Market | Trump போட்ட சொடக்கு! ரத்தக்களரியாகும் Indian Stock Market தலைவர்கள் கருத்து இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய முக்கிய கருத்துகள் பின்வருமாறு: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்திற்கு அ.தி.மு.க முழு ஆதரவு அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2% என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதியின் சராசரி மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது. - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக கூடியிருக்கிறோம். கலந்துகொண்டுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள். ஜனநாயகம், கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவது இதையெல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தமிழ்நாடு தொகுதி வரையறைக்கு எதிராக இல்லை; தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிப்படையாமல் மறுவரையறையை நேர்மையாக, வெளிப்படையாகச் செய்ய வேண்டும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொகுதி மறுசீரமைப்பில் தலித் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக்கூடாது. ஏற்கனவே சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சீரமைப்பு நடந்துள்ளது. Also Read - விசிக தலைவர் திருமாவளவன். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதல்வர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது, அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும். - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் "தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். இது தேவையற்றது. தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர வேண்டும்." - தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் "தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தை கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது" - தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் நடத்த வேண்டும். ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் - தமிமுன் அன்சாரி "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு மக்களை அடக்க நினைத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும். - தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன் "தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக தலைமையிலான அரசு குரல் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்." - கொங்கு இளைஞர் கட்சி தலைவர் உ.தனியரசு "நிதானமும் தெளிவும் கொண்ட முதலமைச்சர் அவர்களால் மட்டும்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். எனவே நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எங்கள் ஆதரவு உண்டு." - ஸ்ரீதர் வாண்டையார் https://tamil.oneindia.com/news/chennai/all-party-meeting-led-by-cm-stalin-insists-on-retaining-tamil-nadu-s-parliamentary-representation-685157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards 👆குரூப்பில…டூப்பு🤣
-
ராணுவ ரகசியம்
தகவல்களுக்கு நன்றி. மிக சிறந்த வழி ஒரு ஆட்டோவை பிடித்து போவதுதான் 🤣. எனது பயண கட்டுரையில் எழுதி உள்ளேன் 500 மீட்டருக்கு கூட ஆட்டோ பிடித்து அவமானப்பட்டுள்ளேன். எந்த அவமானமும் ஓக்கே, ரேபீஸ் தொற்றோடு ஒப்பிடுகையில். #வீரம் அறவே கூடாது. ஒரு கேள்வி கரடியை கண்டால் எழும்பி நிற்க வேண்டும், நம் கைகளை உயர்த்தி நம்மை பெரிதாக காட்ட வேணும் என எங்கோ வாசித்தேன். அதேபோல் நேற்று ஒரு வனக்காவலர் புலி நிற்கும் மனிதனை தாக்குவது குறைவு, உட்கார்ந்த நிலையில்தான் தாக்கும் என்ற ஒர் வீடியோவும் பார்த்தேன். இதே “பெருபிக்கும் டெக்னிக்” நாயோடு வேலை செய்யாதா? இல்லை எனில் ஏன்?
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
ஹிட்லர் போல் இழப்பதற்கு எதுவும் இல்லை சும்முக்கு இப்போ . அது அல்லது இது. எதுவும் ஓக்கே. சிறிக்கு அதுவும் போய் இதுவும் போககூடும். காலம் விசித்திரமானது. அரசியல் அதை விட விசித்திரமானது. நேற்று வெற்றி போல தெரிந்தது இன்று தோல்வியாகும். நேற்று தோல்வி போல் தெரிந்தது இன்று வெற்றியாகும்.
-
Fight Star Championship போட்டியில் வெற்றியீட்டிய ஈழத்தமிழர்.
வாழ்த்துக்கள். என்ன விளையாட்டாம்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் சொன்ன ஆண்டை யும் பின் குறிப்பையும் கவனித்தீர்களா? (Wink, wink).
-
ராணுவ ரகசியம்
எங்கள் பகுதிக்கு சுழற்சியில் வந்துள்ளார்கள். அப்போ நான் ஸ்கொலர்சிப் காலம். மெட்டிராஸ் ரெஜிமெண்ட் இருக்கும் நாட்களில் எப்போதும்…கோவில்…பட்டம் விடும் இடம்…கிரிகெட் விளையாடும் இடத்தில் என் வயது பையன்களுடன் பேச்சு கொடுத்தபடி இருப்பார்கள். அவர்கள் கேள்விகள் அநேகம் - புலனாய்வு தகவல் திரட்டல் என்பது பின்னாளில் உறைத்த விடயம். அதே போல் இன்னொரு விடயம் - பெண்கள் பாலியல் வன்கொடுமை வெளியே தெரிந்த அளவுக்கு கூட ஆண் சிறார்கள் மீது இவர்கள் செய்தது வெளி வரவில்லை. கொழும்பிலும், இந்தியாவிலும், இலண்டனிலும் சில கதைகளை கேட்டபோது - நான் தெய்வாதீனமாக தப்பி கொண்டேன் என்பதும், படித்தவராக இருந்தும் என் பெற்றார் எவ்வளவு அப்பிராணிகளா இருந்துள்ளனர் என்பதும் உறைத்தது. இராணுவம், இராணுவம்தான். ஆனால் அதிலும் கேடு கெட்டது இந்திய இராணுவம்.
-
ராணுவ ரகசியம்
நீங்கள் யாழில் நிலைப்பீர்கள் என்ற நம்பிக்கை துளிர்கிறது. அந்த மணம் (வாசமா கடவுளே) வருவது - சப்பாத்தியில் சப்பாத்து பொலிஷில் உடுப்பு தோய்க்கும் சவர்காரத்தில் குளிக்கும் சவர்காரத்தில் கடலை என்ணையில் பாமாயிலில் தலைக்கு வைக்கும் எண்ணையில்… என பல ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன🤣. அவர்கள் ஓடும் வாகனத்தின் புகையில் கூட இது இருப்பதையும், அவதானித்துள்ளேன். ஆனால் ஒரு தரம் சென்னை-பம்பாய் ரயில் பயணத்தில் ஒரு கூட்டம் இந்திய ஆமிகாரருடன் பயணித்தேன். மணம் இல்லை. இலங்கையில் தம் பிரசன்னத்தை அறிய, இரவு வேளைகளில், இதர இடங்களில், ஏதோ ஒரு மணத்தை கலந்தார்களோ? நாய்கள் உச்சா போவது போல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அரையிறுதிக்கு போகும் 4 அணிகளையும் சரியாக கணித்தும். ஓடர் மாறியதால் எனக்கு அரையிறுதியில் எந்த புள்ளிகளும் இல்லை. ஆனால் யாரும் 1,2 அணிகளை சரியான ஓடரில் கணித்தால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். இதைதான் விதி விளையாடியது என்பார்கள் போலும் 🤣. எப்போதும் தமிழன் இப்போது வெல்லலாம்….ஆனால் 2026 இல் புலவர்தான் ஆட்சி அமைப்பார். பிகு T20 WC 2026 🤣
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
உண்மை.