Everything posted by goshan_che
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
இல்லை நீங்கள் விஜியை பற்றி கண்ணால் காணாததை, அங்கே போனார் இங்கே போனார் என பட்டியல் இடவில்லை. ஆகவே விஜி சாபம் உங்களை தாக்காது🤣. நீங்கள் அவர் சொன்ன ஒன்றை உங்களுக்கு புரிந்த வகையில் முன் வைத்தீர்கள். உங்கள் விளக்கம் தவறானது. ஆனால் இதில் தார்மீக கேடு ஏதும் இல்லை.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
இது நமது டிசைன் என நினைக்கிறேன். எமக்கிடையான தர்கங்கள் பலதை போல இதுவும் ஆங்கிலத்தில் ஒரு சொல், பல அர்த்தத்தில் வந்து முடிகிறது. நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை. ஆனால் escort எந்த சொல்லுக்கு பல அர்த்தம் உள்ளது. அதில் ஒன்று உற்ற துணை அல்லது பாதுகாவலர். குறிப்பாக விசுவாசமான எஸ்கோர்ட் ஆக இருந்தேன் (loyal escort) எனும் போது அது பாலியல்தொழிலாளி என்ற அர்த்தத்தில் வராது. Dictionary Definitions from Oxford Languages · Learn more noun noun: escort; plural noun: escorts /ˈɛskɔːt/ a person, vehicle, or group accompanying another for protection or as a mark of rank. "a police escort" Similar: guard bodyguard protector safeguard defender custodian attendant guide chaperone retainer aide assistant personal assistant right-hand man right-hand woman lady in waiting duenna equerry squire entourage retinue suite train cortège attendant company caravan protection defence convoy minder a man who accompanies a woman to a particular social event. "Louise and her escort were given the best table" Similar: companion partner beau attendant date a person who may be hired to accompanysomeone to a social event. "an escort agency" Similar: paid companion hostess male escort gigolo geisha (girl) sing-song girl courtesan a sex worker who arranges to meet clients by appointment rather than working in a brothel or on the street. verb verb: escort; 3rd person present: escorts; past tense: escorted; past participle: escorted; gerund or present participle: escorting /ɪˈskɔːt,ɛˈskɔːt/ accompany (someone or something) somewhere as an escort. "he escorted her back to her hotel" இரெண்டு விடயம் மேலே தெளிவாக escort என்ற சொல்லின் 3 வேறுபட்ட அர்த்தங்களில் ஒன்றுதான் பாலியல் தொழிலாளி என்பதை சொல்லி உள்ளேன். ஆகவே இதை வைத்து - நீங்கள் சொன்னது போல டிக் அடிக்க முடியாது. அப்படியே ஆயினும் - இந்த விளக்கத்தை சீமான், கோர்ட்டில் சொல்ல வேண்டும். அதை கோர்ட் ஏற்பின் அவரை விடுதலை செய்யும். ஆக கோர்ட் விசாரிக்க வேண்டும்.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
நிச்சயமாக அதற்கு வழக்கு நடக்க வேண்டும். நான் ஒரு போதும் விஜி அண்ணி முழுக்க முழுக்க உண்மை சொல்வதாகவோ, அவரின் கதையில் குழப்பங்கள் இல்லை என்றோ சொன்னதில்லை. ஆனால் இவை எல்லாமும் வழக்காடு மன்றில் விசாரித்து தீர்க்கபட வேண்டியன. மீடியாவில் அல்ல. Trial by media அல்ல. Trial by a court of law தான் தேவை. என் அதிகபட்ச கோரிக்கை இதுதான்.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
ஏன்… இந்த முறை நம்பியார்….வீரப்ப்பா…ராதாரவி….ரகுவரன்….இப்படி வேறு யாரும் வில்லன் நடிகர் குடும்ப உறவுகள் பற்றி அவதூறு பரப்ப போகிறீர்களா 🤣
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
ஓணாண்டி அவர்கள் முதலில் பத்துமாதம் கரு சுமந்து சுக பிரசவம் ஒன்றை நடத்தி காட்ட்டுவார். அதன் பின் பெண்களையும் கட்டாய இராணுவத்தில் சேர்க்கலாம்.
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
யோவ் சீமான் திரிக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ஐயா. நீங்கள் மேலே கொடுத்த கொட்டை எழுத்தில் உள்ள விளக்கத்தை பெறவே அந்த கேள்வியை கேட்டேன். What is a public place, is a matter of fact, not a matter of law and it’s very fact-specific. ஒரு இடம் பொது இடமா இல்லையா என்பது குறித்த சம்பவத்தின் தரவுகள் அடிப்படையானது. சட்ட விதிகள் அடிப்படையிலானது அல்ல. உண்மையில் நீங்கள் இந்த கேள்விக்கு விடை தேடப்போய் பல primary sources இல் வாசித்துள்ளீர்கள் 👏. கீழே ஒரு கட்டுரை கொடுக்கிறேன், caselaw உதாரணத்தோடு. பத்திரபடுத்தி வைக்கவும். யூகேயில் drink driving, driving without insurance, MOT. Parking போல விடயங்களில் ஏதும் பிரச்சனை வந்தால் இது உதவும். Stephen Oldham SolicitorsRoad or other public place: Where do driving laws apply?Super market car park – is it a road or other public place You have to be in a road or other public place to commit most driving offences. There are a few exceptions like keeping a vehicle with no...இங்கே பாடசாலை பொது இடமா? அநேக நாட்களில் இல்லை. ஆனால் ஒரு விளையாட்டு போட்டியன்று கதவுகளை திறந்து விட்டு, அனைவரும் வருக, ஆதரவு தருக என போஸ்டர் ஒட்டி இருந்தால் - அந்த நிகழ்வுக்கு மட்டும் அது பொது இடமாகலாம். அப்போதும் மைதானம் மட்டும்தான். கழிப்பறை அல்ல.
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
பாடசாலை, வங்கி பப்ளிக் பிளேசில்லை ஓக்கே…. அப்போ நீங்கள் முதல் கொடுத்த உதாரணத்தில் உள்ள அகதிகள் ஹோட்டல் எப்படி பப்ளிக் பிளேஸ் ஆகியது? ஒரு வங்கிக்கும் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்?
-
பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
அண்மைய அனுரகுமாரவின் சீன விஜயத்தில் அவருடன் எந்த மொழி பெயர்பாளரும் இல்லை. காதில் ஒரு புளூடூத் போல AI powered simultaneous translation device ஐ செருகிகொண்டார். சீன பிரதிநிதிகள், ஏனையோர் சீன மொழியில், இவரும் விஜித ஹேரத்தும் சிங்களத்தில், ஒரே மொழி பேசுவது போல் பேசி கொண்டார்கள். டீமூவில் ஒண்டை வாங்கிபார்த்தேன். அது ஒரு அப்பை டவுண்ட்லோட் பண்ண சொல்லியது. வேண்டாம் என விட்டு விட்டேன்
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
சட்டம் மிக அரிதாகவே black and white ஆக இருக்கும். இதுவும் அப்படி நிறைய grey areas உள்ள விடயம்தான். எது public place என்பதில், என்னத்துக்காக எடுக்கப்படுகிறது (intention) என்பதில் நிறைய தங்கி உள்ளது. அத்தோடு, upskirting போட்டோ எடுப்பது நிச்சயமாக குற்றம். இன்னொரு விடயம் வீடியோ எடுப்பதற்கு உள்ள சுதந்திரம் அதை பகிர இல்லை. அங்கே reasonable expectation of privacy யையும் கருத்தில் எடுக்க வேண்டும். இங்கேதான் பெண்பிள்ளைகளின் ஸ்போர்ட்ஸ் மீட்டில் போய் படம் எடுத்தது பிரச்சனையாகலாம். Intention அதை விட மோசமானது என நிறுவினால் - சிறுவர் பாலியல் வழக்கும் ஆகலாம். உதாரணமாக ஒரு வங்கியில் போய் 20x ஆப்டிகள் சூம் லென்சை பாவித்து ஒவ்வொருவருடைய பாங் பலன்சையும் ஸ்கீரீனில் போட்டோ எடுக்க முடியுமா? ஆகவே இடம் பொருள் ஏவல் முக்கியம். இங்கே இவர் செய்வது யூடியூப் லைக்சுக்காக video auditors என்பவர்கள் எடுக்கும் வீடியோக்கள். இப்படி போய் வீடியோ எடுத்து, சர்ச்சையாக்கி லைக்ஸ் அள்ளுவது. யூகேயில் விடுற சேட்டையை ஊரில் விட்டிருக்கிறார்…சேட்டை கிழிச்சு போட்ட்டானுவோ🤣. பிகு ஆள் லண்டன் ரிட்டேர்ன்னாம் எண்டதும் எனக்கு திக் என்றாகிவிட்டது. இப்ப எல்லாம் ஓகே யா🤣
-
கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி!
D கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி! Rajkumar RPublished: Friday, March 7, 2025, 22:12 [IST] சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். முன்னதாக எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் திரண்ட நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அவர்களே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காட்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. Also Read இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது தொடர்ந்து. ஒய்சிஎம்சிஏ மைதானத்தில் ஏராளமான நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் குவிய ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவில் ரசிகர்களும் குவிந்தனர். சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார். இஸ்லாமியர்களை போல தலையில் தொப்பி அணிந்து கைலி அணிந்து படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசித்தபடி வந்த விஜய் இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர். இன்று விஜய் ரமலான் நோன்பு இருந்ததாகவும் 6:15 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 5000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். Recommended For You இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல ராயப்பேட்டை ஒய்எம்சிஏ பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அளவில் ஐந்து நிர்வாகிகள், அதுமட்டுமல்லாது ஜமாத் நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் வருகிறார் என கேள்விப்பட்டவுடன் அப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். விழாவிற்கு வருபவர்களை கட்டுப்படுத்த காவல்துறை மட்டுமல்லாது விஜய் தரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் தயார் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் விஜய் வந்தவுடன் அவ்வளவு நேரம் அமைதி காத்த கூட்டம் விழா நடக்கும் ஒய்எம்சிஏ அரங்குக்கு தடுப்புகளை தாண்டி எகிரி குதித்து சென்றது. இதை அடுத்து அவர்களை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் புகுந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. You May Also Like எவ்வளவோ முயன்றும் அவர்களை சமாளிக்க முடியாததால் பவுன்சர்கள் திணறிப் போயினர். ஒரு கட்டத்தில் ஆளை விட்டால் போதும் என அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே விஜயை படம் பிடிக்க வந்த ஒளிப்பதிவாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சி முடிவடைந்த உடன் திறந்த பிரச்சார வேனில் விஜய் கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ராயப்பேட்டை பகுதியில் இருந்து அண்ணா சாலை வரை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையிலும், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றில் நின்று கொண்டு விஜயை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கையை அசைத்தனர். இதனாஅல் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதன் முறையாக சென்னையில் மையப்பகுதியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சிக்கு விஜய் வந்திருந்த நிலையில் மக்கள் ஆதரவு அதிகம் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் தள்ளுமுள்ளு என ஒரு சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது தவெக.
-
கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல்
அதிபர் தவறுக்கு வருந்தி அறிக்கை விட்டுள்ளாராம். இங்கே நடந்தது என்னவென்றால் - செந்தோமஸினுடனான பிக் மேட்சுக்கு முன் ஒரு சவபெட்டியை தயார் செய்து, அதன்மேல் குருசெல்லாம் வைத்து, ஒப்பாரி வைத்து தூக்கி வருவார்கள். யாரோ ஒரு அதிகபிரசங்கி அதில் இருந்த குருசை தூக்கி வைத்து ஆடி இருக்கு. பாடசாலை பையனுகள் செய்த சேட்டையை ஆண்டகை கண்டிப்பதெல்லாம் ரொம்ப ஓவர். அதுவும் தமிழ் தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் அழிக்கப்படும் போது வாய்மூடி இருந்த ஆண்டகைழ்
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
இல்லை….உண்மையிலேயே சீமான் விஜியோடு வெறும் உடல் இச்சையை தீர்க்கும் casual sex தான் வைத்தார் என்றால் அது rape (obtaining consent through deception - promise of marriage) குற்றசாட்டை தவிடுபொடியாக்கும். சீமான் செய்ய வேண்டியதெல்லாம் இதை கோர்ர்ட்டில் வந்து வெளிப்படையாக சொல்வதுதான். அப்படி சொன்னால் நீதிபதி ஈவேரா வோ அல்லது எபொத வோ சீமானை விடுவிக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படி சொல்ல மாட்டார்… ஏன்? ஏன் எண்டால் ஈவேரா போல் ஆமா நான் அப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என சொல்லும் கெத்து சீமானிடம் இல்லை. அத்தோடு தான் உள்ள ஊத்தை வேலை எல்லாத்தையும் செய்து போட்டு நான் பிரபாகரன் பிள்ளை, என அந்த கண்ணியவானின் பின்னால் ஒழிந்து கொள்ள முடியாது.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
என்ன பொசுக்குன்னு பெரியார் என்னுடீங்க🤣. ஈ வே ரா… அல்லது அவர் சாதி/கன்னட-தெலுங்கர் என்பதை குறிப்புணர்த்த வேண்டின்… ராமசாமி நாய்க்கர்🤣
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
அப்போ அண்ணன்-விஜி அண்ணி உறவு நான் மேலே சொன்ன இந்த வகையான உறவு. அப்படி என்றால் இதை நீதிமன்றில் சீமான் சொன்னால் வழக்கு தள்ளுபடி ஆகுமே? ஏன் டெல்லிக்கும், லாஹூருக்கும் ஓடிப்போய் வழக்கை நிறுத்த முயல்கிறார். இதை மக்கள் முன் மீடியாவில் சொல்ல சீமானுக்கு தைரியம் இருக்கா?(ஈவேரா வுக்கு இருந்தது) நான் முன்பே சொன்னேன் ஈ வே ரா ஒன்றும் முகமது நபி அல்ல, அவர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டோர் முஸ்லிம்களும் அல்ல. அவரின் கருத்துகளில் பல ஏற்பில்லாதா, சமூகம் கவனத்துக்கு எடுக்க தேவையில்லாத கருத்துகள் உள. தமிழக சமூகம் அன்னம் போல் ஈவேரா சொன்ன நல்லதை எடுத்து கொண்டு, நல்லனதல்லாததை கவனிக்காமல் விட்டு விடுகிறது. ஆனால் அண்ணன் - சகல தலைவர்களினதும் மோசமான கருத்துக்களை மட்டும் பன்னாடை போல் பில்டர் பண்ணி தனதாக்கி கொள்கிறார்🤣.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
இதே பொய்கதை குவோராவில் அலசப்பட்டபோது. https://ta.quora.com/ராசாத்தி-நடிகர் Over to you புலவர் - your credibility is on the line.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
உங்களுக்கும் தலை சுத்தி விட்டதா? மேலே நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல். ஆனால் நான் கேட்பது வெறும் வழக்கு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே. கேள்வி இதோ… இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது? மாலைமாற்றிய திருமண உறவு மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex). செந்தாமரை விடயத்தை தயவு செய்து பரப்ப முன்னம் கொஞ்சம் யோசிக்கவும். அது உருவ ஒற்றுமையை வைத்து சொல்லப்படும் பொய் கதை என்கிறார்கள். உங்கள் கருணாநிதி மீது உள்ள கோவம், அநியாயமாக செந்தாமரையின் மனைவி மீது அவதூறு பரப்புவதில் முடிய கூடாது. இல்லை என்றால் ராஜாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுங்கள். அந்த படத்தில் இருப்பது கெளசல்யா செந்தாமரையும், செந்தாமரை தம்பதிகளின் மகள் இராஜலட்சுமி என்கிறார்கள். யாழ் போன்ற ஒரு கண்ணியமான தளத்தில் செந்தாமரை போன்ற ஒரு அறியப்பட்டவரின் மனைவி, மகள் பற்றி ஆதாரம் இல்லாத அவதூறு பரப்பகூடாது. அவர் இப்போதும் இருக்கலாம், மகள் இருக்கிறார், பேரப்பிள்ளைகள் இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் இப்படி அவர்களை இழுத்து சேறடிக்க கூடாது. ஒன்றில் நம்பகமான ஆதாரத்தை தாருங்கள் அல்லது நீங்களே எழுதியை நீக்கி விடவும் இரெண்டும் இல்லை என்றால் நிர்வாகத்திடம் முறையிடுவேன். அதன் பின் அவர்கள் இஸ்டம். இது பற்றி நான் அறிந்த fact-check கீழே ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் செந்தாமரை மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற பலத் தமிழ் படங்களில் நடித்தவர். இதையும் தாண்டி அவர் மிகப்பெரிய நாடகக் கலைஞரும் ஆவார். செந்தாமரை அவர்கள் ஒரு மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறுவர். இவர் எம்.ஜி.ஆர், கலைஞர் என அனைவருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். இப்படி இருக்க இவரின் மனைவிதான் ராசாத்தி அம்மாள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம். உண்மை என்ன? பரப்பப்படும் புகைப்படத்தில் நடிகர் செந்தாமரையும் அவருடன் ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தைக் காணப்படுகிறார்கள். அப்பெண்மணி ராசாத்தி அம்மாள் என்றும் அக்குழந்தை கனிமொழி என்றும் அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையை அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் பரிசோதித்தோம். இதன்பின் இதனுள் இருக்கும் உண்மையை எங்களால் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. உண்மையில், வைரலாகும் படத்தில் செந்தாமரை அவர்களுடன் இருப்பவர் ராசாத்தி அம்மாளே கிடையாது. அப்பெண்மணியின் பெயர் கௌசல்யா செந்தாமரை ஆகும். இவர் ஒரு நடிகை ஆவார். உடன் இருக்கும் குழந்தை இவர்களின் மகள் ராஜலட்சுமி ஆவார். கௌசல்யா செந்தாமரை அவர்களின் படம். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “பூவே பூச்சுடவா” உட்பட பலத் தொடர்களில் நடித்து வருகிறார். பூவே பூச்சூடவாத் தொடரில் யுவராணியுடன் கௌசல்யா செந்தாமரை அவர்கள். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி, கௌசல்யா செந்தாமரைதான் என்பதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக, வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் புகைப்படத்தையும் கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படம். ஒப்பீடுப் படம். கௌசல்யா செந்தாமரை அவர்கள் ஆனந்த விகடனுக்கு நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் இவரின் குடும்பப் படத்தையும் பகிர்ந்துள்ளார். ஆனந்த விகடன் கட்டுரைக் குறித்த டிவீட். இந்தப் புகைப்படத்தை வைத்தே விஷமிகள் இவ்வாறு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளனர் என்று நம் ஆய்வில் தெளிவாக உணர முடிகிறது. Conclusion நம் விரிவான ஆய்வுக்குப்பின் ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவி என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதும் வைரலானப் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவியும் நடிகையுமான கௌசல்யா செந்தாமரை அவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. Result: False Our Sources Onenov.in: https://www.onenov.in/kousalya-senthamarai-actress/ Andrukandamugam: https://antrukandamugam.wordpress.com/2019/01/03/kousalya-senthamarai/ Ananda Vikadan Twitter Profile: https://twitter.com/vikatan/status/987659938901217280 https://newschecker.in/ta/fact-check-ta/it-is-a-rumour-that-rasathi-ammal-is-the-wife-of-senthamarai
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
இதில் கருத்து எதுவும் இல்லை. தானாக உருவகித்து கொண்ட ஒரு விடயத்தை, ஆதாரம் கொண்டு நிறுவ முடியாத ஒருவர்… தக்க சான்றுகளுடன், ஆதாரபூர்வமாக அதன் எதிர் நிலை நிறுவபட்ட பின்னும்… நான் பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால் என எழுதிய வரிகள் இவை. இதில் பதில் கூறத்தக்கதாக எதுவும் இல்லை. ஆனால் இந்த தர்க்கதின் புள்ளி எது எனப்பார்போமாயின் அது கீழே உள்ளதே.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
சீமானை திமுக இதை வைத்து அடிப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் திமுக அடிக்கிறது என்பதால் சீமான் குற்றவாளி இல்லை என சொல்ல முடியாது. விஜி அண்ணி ஏன் சீமான்-கயல் அண்ணி திருமணத்தின் போது வெளிவரவில்லை என்பது நியாயமானதும் வழக்குக்கு சேர்புடையதுமான கேள்விதான். ஆனால் இது விஜி சாட்சி கூண்டில் ஏறும் போது கேட்கவேண்டியது. அதே போல் விஜி அண்ணி ஒரு serial sexual blackmailer (பலருக்கும் இதை செய்துள்ளார்) என்பதும் வழக்கில் அவரிடம் விசாரிக்கபட வேண்டியதே. ஆனால் இதுவும் விஜி சாட்சி கூண்டில் ஏறும் போது கேட்கவேண்டியது. ஆனால் இவை எல்லாம் இரெண்டாம் வகை கேள்விகள். மிக அடிப்படையான கேள்வி நான் மேலே கேட்டது. அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. சரி பார்க்கலாம்… சீமானுக்கு வக்காலத்து வாங்கும் வேறு எவராவது தலை சுத்தாமல் பதில் சொல்கிறார்களா என்று.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
வீரப் பையா, நான் விவாதிக்க வரவில்லை. ஆனால் ஒன்றை சொல்லுகிறேன் உன்னிப்பாக கவனிக்கவும். உங்களுக்கு மட்டும் இல்லை, இங்கே கருத்தெழுதும் “இந்த பொம்பளைங்களே ரொம்ப மோசம் எசமான் சங்க உறுப்பினர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். நீங்கள் மேலே தந்த விஜி அண்ணியின் பாலியல் timeline உண்மை என்றாலும் கூட அவர் 2007, 2009, 2019,2021 இல் யாருடன் எப்படி இருந்தார் என்பது அல்ல இங்கே கேள்வி. இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது? மாலைமாற்றிய திருமண உறவு மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex). இதில் தம்மிடையே இருந்த உறவு 1 +2 என்கிறார் விஜி அண்ணி. சீமான் தன் நிலைப்பாட்டை சொன்னால் - அதன் பின் மேலும் இரெண்டு கேள்விகள், அதற்குரிய சாட்சியங்களை பார்த்து, வழக்கை முடிக்கலாம். சீமான் மட்டும் அல்ல, சீமானுக்கா யாழில் வக்காலத்து வாங்கும் எவரும் மேலே உள்ள நாலில், எது சீமானின் உறவு என்ற கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதை தவிர மிச்சம் எல்லாம் செட் ஆகும்🤣. ஷர்மிளா செய்யத் கிழக்கிலங்கையில் இஸ்லாமியவாதிகளுடன் முரண்பட்டுவிட்டு அமெரிக்கா போனவரா? பிகு ஷோபா சகதி அருமையான வார்த்தை-வியாபாரி. ஒரு நாவலை (கொரில்லா?) சும்மா வாசிக்க தொடங்கி இரவிரவாக வாசித்து விட்டு வேலைக்கு சிவந்த கண்களுடன் போயுள்ளேன். ஆனால் கண்முன் நடந்த உண்மைகளை தன் வயிற்று பொழைப்புக்காக பொய்யாக திரிக்கும் எவர் மீதும், இவர் மீதும் அபிமானம் இல்லை. உண்மை இல்லாதவர்களின் எழுத்துகளும் பொய்களே. தாயைதின்னி - கவர்ந்திழுக்கும் தலைப்பு.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
எப்பவும் சொல்லுவதுதான். அண்ணனுக்கு பட்டக்ஸ்சுக்கு கீழே பாம் வைப்பது அவரின் தம்பிகளேதான்.
-
தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார்
எனக்கு @ போட முடியவில்லை. யாராவது ஓணாண்டியை @ போட்டு விடுங்கள். அவருக்கு ஒரு வழக்கு வந்துள்ளது. பொயிண்ட்ஸ் தேவைபட்டால் நெடுக்கை அணுகவும்🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
6 இன் பெயரை சொல்லுங்கோ எனக்கு சரிவரும் மாதிரி ஏதும் இருக்குதா என பாப்பம். 3rd time lucky என இந்தியா ரசிகர்கள் ஆர்பரிக்க போகிறார்கள்🤣 போன தடவை World Test Championship final இந்தியா தோற்பதை 5ம் நாள் டிக்கெட் எடுத்து போய் கண்குளிரப்பார்தேன்.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
வழமையாக பொலிசார் victim protection அடிப்படையில் இப்படியான பெரும் புள்ளிகளுக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பர். ஆனால் இங்கே விஜி அண்ணியை பெங்களூரில் தனியே சீமானின் ஆட்களின் அளுத்தத்து நடுவே விட்டு வைத்துள்ளார்கள். இது மெத்தனம் அல்ல. வேண்டும் என்றே என நினைக்கிறேன். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை விஜி அண்ணியின் welfare ஒரு பொருட்டே அல்ல, விடயம் செய்தியாகி பரபரப்பு கூட வேண்டும். அதே போல் sub judice என்ற ஒரு விடயம் உள்ளது. ஒரு வழக்கு நீதிமன்று போனபின் அதை இட்டு பொதுவெளியில் அதிக தகவல்களை பகிர முடியாது. குறிப்பாக கிரிமினல் வழக்குகளில். அதே போல் right to a fair trial (நீதியான விசாரணைக்கான உரிமைl உரிமையின் கீழ், இப்படி ஒரு வழக்கை பற்றி சம்பந்தபட்டவர்களே பொதுவெளியில் கதைப்பதும், அவர்களுக்கு அருகானோர், மீடியாக்கள் வீடியோக்கள் வெளி இடுவதும் ஏற்புடையதல்ல. ஆனால் இதை இருபகுதிம் மிக சாதாரணமாக மீறுகிறார்கள். இங்கிலாந்தில் இப்படி செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் போய் முடியும்.
-
ராணுவ ரகசியம்
ஆதாரம் தேவையில்லை. நீங்கள் சொல்லுவது makes perfect sense. நன்றி 🙏.