Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம் கெட்ட இந்தியன் ஆமியின் அதிகாரிகள், அவர்களுக்கு விங் வேறு . இதுதான் சீமானின் தமிழ் தேசியத்தின் இலட்சணம். இவர்கள் வயதையும் தோற்றத்தையும் பாத்தாலே தெரிகிறது. இவர்கள் தற்போதும் இந்திய மத்திய அரசுக்கு வேலை செய்யும் அதிகாரிகள் என்பது.
  2. பெரிய கருணாநிதி செய்ததை சின்ன கருணாநிதி எப்போதோ செய்திருப்பார். ஆனால் நான் அறிந்தவரையில் இருவரும் துணைவி ஸ்தானத்துக்கு தயார் இல்லை. இங்கேதான் ஜட்ஜின் “விஜி அண்ணிதான் முதல் மனைவியா?” என்ற கேள்வி சட்ட முக்கியத்துவம் பெறுகிறது. விஜி அண்ணியினை மாலைமாற்றி திருமணம் செய்தது நிரூபிக்கப்பட்டு அது முதல் திருமணமாக ஏற்கப்படின், அவர்தான் மனைவி. கயல் அண்ணி துணைவி. அப்போ கயல் அண்ணியிடனான திருமணம் செல்லாது. விஜி அண்ணியை டிவோர்ஸ் பண்ணி, ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். Polygamy வழக்கை எதிர்கொள்ள வேண்டும். பின் வேண்டும் என்றால் கயல் அண்ணியை முறைப்படி முடிக்கலாம். துணைவி மகளானதானும் துணைவியாக கூடாது என்பது விஜி அண்ணியின் (நியாயமான) நீண்டகால எதிர்பார்ப்பாம். அண்ணன் இரெண்டு அண்ணிகளின் கனவுகளோடு, வாழ்க்கையோடு, உணர்வுகளோடு தன் காமத்தை மட்டுமே கருதி விளையாடி உள்ளார். உண்மையில் இரு அண்ணிகளும் பரிதாபத்துக்குரியோரே. சொந்த உறவை அவள் விடுவாளோ, கொண்ட உறவை இவள் விடுவாளோ. வாங்க வாலி சார்…என்னென்னமோ நடக்குது தமிழ்நாட்ல. நீங்க அப்செண்ட். உங்களை போல தமிழக அரசியல் விடயஞானம் உள்ள இன்னொருவர் ரசோ அண்ணை. உங்கள் வெற்றிடத்தை அவரால் நிரப்பி கொள்கிறேன்😃.
  3. சாதாரண மனிதருக்கு கூட அநேகம் இப்படி உறவுகள் இருப்பது வழமை (இருபாலாருக்கும்). ஆனால் எவர் ஆனாலும் சட்டபடி இரு திருமணம் கட்ட முடியாது. மனைவி+துணைவி(கள்) ஓக்கே (கயல் அண்ணி கூட காளிமுத்துவின் தெலுங்கு துணைவி மகள்தான்). ஆனால் மனைவி+மனைவி குற்றம்.
  4. இதில் இரெண்டு சிக்கல்கள் உள்ளது. முன்னர் இதை பற்றி யாழில் கதைத்திருந்தோம். Obtaining consent through deception. உதாரணமாக யூகேயில் - ஒருவரை நான் ஏமாற்றி அதன் மூலம் அவர் உடலுறவுக்கு இசைந்தால் - அந்த இசைவு செல்லாது. ஆகவே அந்த உறவு பாலியல் வல்லுறவாக கொள்ளப்படலாம். இந்திய சட்டம், திருமணம் செய்வேன் என ஆசை வார்த்தை காட்டி, ஒரு பெண்ணின் இசைவை பெறுவதையும் இப்படி ஒரு குற்றம் என்றே கருதுவதாகத்தான் என் தேடல் காட்டுகிறது. ஆகவே - இந்த குற்றவியல் வழக்க்குக்கு - ஆம் விஜி அண்ணியை நான் திருமணம் செய்வதாக சொல்லி உடலுறவு கொண்டேன் என சீமான் ஏற்பது - குற்றத்தை ஏற்பது ஆகி விடும். மாறாக நான் அவரை சொல்லியது போல் திருமணம் செய்தேன் (கோவிலில் மாலை மாற்று) ஆகவே ஏமாற்றவில்லை என சீமான் சொன்னால். ஒரு பென்ணை டிவோர்ஸ் பண்ணாமல் இன்னொரு பென்ணை திருமணம் செய்த polygamy வழக்கில் குற்றத்தை ஒப்பு கொண்டதாகிவிடும். ஆகவே சீமானின் நிலை ஆப்பிழுத்த குரங்கு போல. இரெண்டே தெரிவுகள்தான் உள்ளன. ஒன்று விஜி அண்ணியிடம் எந்த வாக்குறுதியும் கொடாமல், தனியே sex for fun உறவு மட்டுமே வைத்தேன் என சொல்லுவது, அதை நிறுவுவது. அதன் மூலம் இரு குற்றசாட்டில் இருந்தும் தப்புவது. அல்லது எவர் காலில் விழுந்தாவது வழக்கை குழப்பி அடிப்பது. கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம். பேச்சு சுதன்ந்திரத்தை போலவே வழக்கு போடும் சுதந்திரமும் உள்ளது. வாயை வாடகைக்கு விட்டால், வாடகைக்கு வரி கட்டத்தானே வேண்டும்🤣.
  5. மிக சாதாரண விடயம். ஒரு முறை எமிரேட்சில் எனக்கு அருகில் இரெண்டு சீட்டை எடுத்து ஒருவரை பேச்சு மூச்சு இல்லாமல் வைத்திருந்தார்கள். விமானத்தில் இறந்த உடலை இப்படி ஏற்ற முடியாது என்பதால் - யாரோ ஒரு சீவன் சாவயதற்க்காக டுபாய் கூட்டி போவதை ஊகித்து கொண்டேன். Full flight - என்ன பண்ணலாம் என யோசித்து cabin upgrade க்கு நூல் விட்டேன் நடக்கவில்லை. நமக்கு அருகில் இருப்பவரின் உடல் நிலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் செத்து கொண்டிருக்கலாம், அல்லது சாகலாம். எம்மையும் கூட்டி போகவில்லை என ஆறுதல் அடைய மட்டுமே முடியும்🤣. வேறு சீட் காலியாக இருந்தால் மாறி இருக்க கேட்டிருந்தால் நிச்சயம் விமான பணியாளர் விட்டிருப்பார்கள். அவர்களாகவே கேட்டிருக்கவும் கூடும்.
  6. இதற்கு மேல் இராணுவ ரீதியாக உதவமாட்டார்கள் என நினைக்கிரேன். ஸ்டாமர் - டிரம்ப், செலன்ஸ்கி இடையே ஒற்றுமைக்கு முயல்வதாக தெரிகிறது. ஹெங்கேரி இன்னொரு பெலரூஸ் - முழுவதுமாக புட்டின் காலில் விழ சொல்லுவார்கள். துருக்கிதான் இப்போதைக்கு உள்ளதில் நல்ல தீர்வு. புட்டினுக்கும் துருக்கி எண்டால் பயம்.
  7. இன்னொரு திரியில் இன்று செலண்ஸ்கியின் வெள்ளை மாளிகை விஜயம், 1987 இல் தலைவரின் டெல்லி அசோகாஹோட்டல் விஜயம் போன்றது என எழுதினேன். தலைவரை மூடிய அறைக்குள் அதிகாரிகள் மிரட்டினர், செலன்ஸ்கியை ஓவல் ஆபீசில் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மிரட்டினர். செலன்ஸ்கி வான்ஸ் என்ன செய்ய முனைகிறார் என்பதை புரிந்து - தூண்டிலில் சிக்காமல் விட்டிருக்கலாம். வாய் இருப்பதால் கட்டாயம் கதைக்க வேண்டியதில்லை. ஆம்…இதுவரை இரு கட்சிகளும் கடைபிடித்த மாறா வெளியுறவு கொள்கையை டிரம் தூக்கி குப்பையில் போட்டு விட்டார்.
  8. நானும் இப்படி எழுதுவதால் விளக்கம்: சீமான் இனதூய்மைவாதம் பேசாவிடில் இதை நான் கதைக்கபோவதில்லை. ஆனால் அவர் தூய (இனத்தூய்மை) தமிழர் மட்டுமே ஆளவேண்டும் என்கிறார். ஆனால் அவரோ மலையாளி, அவரின் மனைவியோ தெலுங்கு+தமிழ் கலப்பின வழித்தோன்றல். இது கபடத்தனமாது. இதை சுட்டுவது இனவாதம் ஆகாது. உதாரணமாக நைஜல் பராஜ்தான் ஜேர்மன் பெண்ணமணம் முடித்து, தன் பிள்ளைகளுக்கு ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்தப்படியே, பிரெக்சிற்றினை நடத்தினார். அதை விமர்சித்தோம். அதேபோலத்தான் இதுவும். தமிழர் தலையில் மிளாகாய் அரைக்கபார்க்கிறார்.
  9. எனது சதிக்கோட்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சதி யை இழந்து, கோட்பாடு ஆகிறது🤣. It’s all part of Putin’s plan. செலன்ஸ்கி கொடுக்க முடியாததை டிரம்ப் கேட்பது, பின்னர் அமெரிக்காவுக்கு கூப்பிட்டு இப்படி சண்டை பிடிப்பது. அதை சாட்டி டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது. இப்போ அமெரிக்காவில் டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுக்க தேவையான political cover ஐ இந்த சந்திப்பு மூலம் ஏற்படுத்தி கொண்டார் டிரெம்ப். வான்ஸ் சண்டையை கிளப்பியது வேணும் எண்டேதான். டிரம்பும் வான்சும் சொல்லி வைத்து செய்தது அது (coordinated attack ).
  10. சில மணி நேரத்தில் பிளேட்டை மாத்திய சைமன். 👆👇 பேயுடன் சேர்ந்தாலும் நடக்கலாம். ரோவுடன் சேர்ந்தால் குல நாசம்.
  11. கல்யாணசுந்தரம், ரஜீவ், காளி, இன்னும் எத்தனையோ “தமிழர்கள்” நாம் தமிழரில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். சீமான் அதில் இருக்கும்வரை நாம் தமிழர் ரோவின் சப் ஆபீஸ்தான்.
  12. நான் கழுத்துக்கு கீழே இருப்பதை பறறி மட்டுமே கதைக்கிறேன். தலை எனக்கு ஒரு பொருட்டல்ல 🤣 தமிழர் நிலம் தமிழர் கையில் இருக்க வேண்டும் என கூறி கொண்டு அப்பட்டமாக ரோவின் கைக்கூலி என தெரியும் ஒரு மலையாளியால் 100% கட்டுப்படுத்தப்படும் கட்சிக்கு ஆதரவு நல்குவது… முள்ளிவாய்க்காலோடு சிந்திக்கும் ஆற்றலையும் பல காதல் தோல்வி தாடிக்கார அண்ணை மார் புதைத்து விட்டனர் என்பதையே காட்டி நிற்கிறது அதை ஆரம்பித்த சுப முத்துகுமாரை ரோவோடு சேர்ந்து போட்டு தள்ளிவிட்டு, கட்சியை ரோவிடம் அடகுவைத்தவர் சீமான்.
  13. அதான் வச்சு செஞ்சிட்டே🤣 அவிங்க சூனியத்யில மழைய வைக்க🤣 நம்பிக்கையில்லா பிரேரணை ஒரு வாக்கில் தோல்வி🤣 எவரோ சீப்ப ஒழிச்சிட்டாங்க சார்🤣
  14. தமிழ் தேசியத்தில் கொட்டை போட்ட அண்ணையளே ரோ அணிவகுப்பை பார்த்து நெக்குருகி நிக்கினம். புது பட்ஜ் தமிழ் நாட்டு தம்பியளை ஏன் நோவான்.
  15. இந்த வீடியோவில் சீமானை பாதுகாக்கும் “முன்னாள்” இராணுவவீரர்கள் என்ற போர்வையில் வெளிவந்தவர்களின் screen grab. இதை பார்த்ததும் உங்களுக்கு “றோ” மணக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு ENT specialist ஐ பார்க்க வேண்டும் 🤣.
  16. கீழே போகும் போது கட்டாயம் கூட்டிப்போவேன்🤣
  17. இந்திய இராணுவ பட்டறை🤣 குடுமி வெளியில் தெரிந்து விட்டது…எப்படியாவது மறைக்க படாதபாடு படுகிறார்கள்🤣. சீமானுக்கு ஆதரவாக இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரிகள் (முன்னால் என்ற போர்வையில்) களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோவில் பேசுபவர், கூட நிற்பவர் அத்தனை பேரின் தலை வெட்டை பாருங்கள். அத்தனை பேரிலும் “அதிகாரிகள்” தோறணை அப்படியே தெரிகிறது. ரஜனி, கமல், வைக்கோ, திருமா, இராமதாஸ், அஜித், விஜை இப்படி சீமானை விட பலமடங்கு ஆபத்து உள்ளவர்கள் தமிழ் நாட்டில் பொது இடங்களில் கூட ஆயுத பாதுகாப்பில் வருவதில்லை. இவர் ஓசூரில் இருக்க, நீலங்கரையில் ஏன் துப்பாக்கிதாரி? குஞ்சு மாவீரனை பாதுகாக்கவா? அப்பட்டமாக இந்திய இராணுவ, புலனாய்வு அமைப்புகள் சீமானை சூழ நிற்பதை கண்டும், புலம் பெயர் தம்பிகள் திருந்த போவதில்லை. தமிழ் தேசியவாதிக்கு, Indian Rapist Army யோடு என்ன வேலை?
  18. மழை என் பதவி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டது 🤣🤣🤣. அன்பு மணியை மேற்கோள் காட்டும் போதே நினைச்சேன் அசிங்கபடும்படி ஆகும் என்று🤣🤣🤣 இந்தா ஆயிடுச்சே🤣
  19. இங்கே சீமான் வீட்டில் துப்பாக்கியோடு இருந்தவர் இராணுவ வீரர்/ ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது. அதற்கு நான் தேடி அறிந்த பதில்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் அவர் VVIP காவலாளி, தொழில் முறையான armed marshal என்பது போல் ஒரு புது விளக்கம் 48 மணி நேரத்துக்கு பின் சீமான் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இது வீட்டில் துப்பாக்கியுடன் இருந்தது மத்திய அரசின் ஆள் என்பதை மறைக்க எல்லோரும் சேர்ந்து ஆடும் நாடகம் என்பது என் கருத்து. விளக்கம் கீழே. Self Defence - Individuals who could be prone to being attacked for reasons including being wealthy, being under threat, etc. சுயபாதுகாப்பு. இப்படி என்றால் சீமாந்தான் துவக்கை வைத்திருக்கும் லைசன்ஸ் எடுக்க வேண்டும். அத்தோடு அவர் ஓசூரில் இருக்க துவக்கு ஏன் சென்னையில் இருந்தது. General Security - which includes the provision of security for Banks, Institutions, etc. This can also cover the gunmen and protection squad of VVIPs and politicians. இதுவும் பொருந்தாது. சீமான் VVIP அல்ல. இது நாட்டின் மிக மிக முக்கிய புள்ளிகள். மிக முக்கிய புள்ளிகள் யார் என்பதை ஏ ஐ இப்படி சொல்கிறது. In India, individuals considered VIPs (Very Important Persons) typically include high-ranking politicians like the President, Prime Minister, Chief Ministers, Governors, Union Ministers, Supreme Court and High Court judges, senior government officials, prominent business leaders, influential religious leaders, renowned artists and actors, and senior military officers; essentially, people holding significant positions of power and influence within the country. நன்றி: ஜெமினி 👆இது வெறும் VIP தான். VVIP இதைவிட மேலே. Crop Protection - Those who have agricultural or similar lands which need protection from Non-Scheduled pests and vermin, like boars, etc. நீலாங்கரை ஆடம்பர பங்களாவில் பயிர்செய்கை நடக்கவில்லை என நினைக்கிறேன். Sports Shooting - Those under sports ஒshooting discipline who need guns for sports purposes. சீமானின் பங்களா ஆடம்பரமானதுதான், ஆனால் துப்பாக்கி சுடும் விளையாட்டு போட்டி நடத்தும் அளவுக்கு ஆடம்பரம் இல்லை. Returning NRI - Any Indian who is returning to India and has owned a gun in his foreign residence for over 2 years, can apply for an Indian license and bring back the gun they owned abroad. சீமான் வாழும் திரள்நிதி கணிசமானது புலம்பெயர் தனிழருடைதுதான். ஆனால் சீமான் நான் ரெசிடெண்ட் இந்தியர் அல்ல. Foreign National Status - Any foreign National is allowed to own and bear arms for a maximum period of 6 months during their stay in Tamil Nadu, given valid reasons. சீமான் வெளிநாட்டவர் அல்ல மேலே உள்ள விதிக்கோவையின் பிரகாரம் (நேரம் மினெகெட்டுதேடியமைக்கு நன்றி ஏராளன்): சீமான் அல்லது அவரின் கையாள் எந்தவகையிலும் சட்டபடி கைத்துப்பாக்கி வைத்திருக்க சட்டத்தில் இடம் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. அப்போ யார் அந்த துப்பாக்கிதாரி? R A W A W
  20. ஒரு போர்குற்றவாளி தளபதியின் மகள். பாடல்கள் இலங்கை ஆமியை போற்றுவன. யாழிலும் ஒரு லங்காஅபிமானி இவவை பிரபல்யபடுத்த முனைந்தவர். அவர்தான் நேசனோ தெரியாது🤣
  21. தெலுங்கு பெண் என்பதால் வீரம் இல்லாமல் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுவே மறத்தமிழச்சி விஜி அண்ணி என்றால் தெரிந்திருக்கும்.
  22. சீமான் வளர்வார். தமிழ் தேசியம் தேயும். இதில் ஒரு கெடுபிடியும் வராது. துப்பாக்கிதாரி தம் ஆள் என மத்திய புலனாய்வு அறிவித்தவுடன் - மாநில பொலிஸ் விலகி நடக்க தொடங்கிவிட்டது. அதுதான் non bailable offences எனப்படும் கடுமையான வழக்குகள் பாயவில்லை. வழமையாக ஒரு பேட்டரி இரெண்டு வயர் துண்டுடன் பிடி பட்டாலே தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும், வழக்கு போடும். ஆனால் இது சீமான் ரோவின் கைக்கூலி என்பதற்கு இன்னுமொரு வலுவான சந்தர்ப்பசாட்சியம். கயல் அண்ணி சாப்பிடுவதே திரள்நிதியில்தான். ஆதாரம்: கடந்த தேர்தலில் சீமான் மற்றும் கயல் அண்ணியின் சொத்து விபரம். அவர்களே சமர்பித்தது. மூன்று வருடத்தில் கிட்டதட்ட ஒரு மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான வீடு எங்கே இருந்து வந்தது.
  23. தமிழ்நாட்டில் ஒருவருடன் கதைத்த மட்டில்: பொதுவாக சாதாரண இராணுவ சிப்பாய்கள் ஓய்வு பெற்றால் துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதி கிடையவே கிடையாதாம். குறைந்ததது கேப்டன் தரம் அதுவும் தக்க காரணங்கள் காட்டிய பின்பே அனுமதி கிடைக்குமாம். அப்படி கிடைக்கும் துப்பாக்கி அனுமதி கூட கைதுப்பாக்கிக்கு கிடைப்பது அரிதாம். அதே போல் அனுமதி குறித்த பயன்பாட்டுக்கு என வரையறுக்கப்படுமாம் (வனவிலங்கு, விலங்கு-களை எடுத்தல்). அந்த பயன்பாடு, இடம் தவிர வேறு இடத்தில் பயன் படுத்த முடியாதாம். தனி மனித பாதுகாப்புக்கு ஒரு போதும் இவ்வாறு வழங்கப்படும் துப்பாக்கிகள் பாவிக்க படாதாம். அவை உத்யோக பூர்வமாக, மாநில அல்லது மத்திய அரசு ஆயுத படைகளால் வழங்கப்படுமாம் (விஜைக்கு வழங்கியது போல்). இந்த அடிப்படையில் இது ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்ற போர்வையில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சீமானுக்கு/ அவரின் குடும்பத்துக்கு வழங்கி வந்த ஆயுத பாதுகாப்பு என்கிறார். இதனால்தான் மாநில அரசு இப்போ இதில் கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறதாம். உண்மையில் இதற்கு பிணையில் வரமுடியாத வழக்கே பதிவு செய்திருக்க வேண்டுமாம். ஆனால் மத்திய அரசு பிரசெரால் சாதாரண பிரிவில் வழக்கு போடப்பட்டதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.