Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8487
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. ம்ம்..... இந்தியாவுக்கு தூக்கம் போச்சு! போகணும்.... அலையணும்..... ஒரு அச்சுறுத்தல் விடலாம்.... நான் தமிழருக்கு உரிமை வழங்கப்போகிறேனென, ஆனால் இனிமேல் இதற்கெல்லாம் இலங்கை அஞ்சாது. இனி இலங்கையின் பின்னால் இந்தியா ஓடுவதை தவிர வேறேதும் சாதிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாதென்பதே சோகம் நிறைந்த உண்மை. காலங்கடந்த ஞானம் இந்தியாவுக்கு உதவாது.
  2. இவைகளுக்காகத்தானே தமிழர் நாம் போராடினோம். அப்போ அதை நசுக்குவதற்காக சிங்களத்தோடு தாங்கள் முன்நின்றதும் ஏன் என்பதையும் விளக்கலாமே? ஏதோ தாங்கள் சமாதானத்தை விரும்புவதுபோல் காட்டிக்கொள்வது. இவர்கள் சொல்வது உண்மையென்றால்; சிங்களம் இவ்வளவு தூரம் போயிருக்காது. போர் முடிந்து இரத்தம்தோய்ந்த கையோடு ஐ நா சென்ற சிங்களத்தை பாராட்டி அனுப்பியதும் இந்த இந்தியாவே!
  3. இது ஒன்றும் நம்மினத்துக்கு புதிதில்லையே, இவற்றை கடந்துதானே செல்கிறோம். எமது இலட்சியத்தை சிதறடிக்க எதிரி நம்மையே பாவிக்கிறான். எம்மில் இழுபடக்கூடியவர்களை லபக்கென்று இழுத்துக்கொள்ளும் சிங்களம்.
  4. இந்தியா இலங்கைக்கு உதவிகொண்டு முகிலே குத்துவதற்கு சமயம் பாத்திருக்கிறது. காரணம் இலங்கையை கைவிடுவதால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகுமென அது அஞ்சுகிறது. இலங்கை இதை தெரிந்து வைத்துக்கொண்டு நேராகவே குத்துகிறது இந்தியாவுக்கு. தெரிந்தோ தெரியாமலோ இலங்கையை நேரடியாக காட்டிக்கொடுக்க முடியாத வலைக்குள் இந்தியா மாட்டிக்கொண்டுள்ளது. ஈஸ்ரர் குண்டுவெடிப்பின்போது, தான், இந்தியாவிலும் மலேசியாவிலும் இருந்ததாக சுரேஷ் சாலே தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு எச்சரிக்கை விடுத்ததும் இந்திய புலனாய்வு, அசாத் மௌலானா இந்தியாவிலிருந்தே ஜெனீவாவுக்கு போயிருக்கிறார். அங்கிருந்தே அவர் ஜெனீவாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார், ஆகவே மனித உரிமைகள் சபையோ வேறெதுவோ தொடர்புகொண்டு அவர்களின் வழிநடத்துதல் மூலமே அவர் வெளியேறியிருக்கிறார். இவர் டெல்லியில் தரை இறங்கியிருந்திருந்தால் நிட்சயம் இந்திய புலனாய்வு மோப்பம் பிடித்திருக்கும். சிங்களவரையும் தமிழரையும் மோதவிட்டு சுயநலன் காக்க திட்டமிட்ட இந்தியா முஸ்லிம்களை பாவிக்க திட்டமிட்டிருக்கலாம். அதாவது பெரிய எடுப்பில் தடுக்க முயற்சிக்காமல் எச்சரிக்கையோடு நிறுத்தியிருக்கலாம். மோடி அரசுக்கு முஸ்லீம் இனத்தின்மீது வெறுப்புண்டு. அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பெருமெடுப்பில் நடந்ததும் மோடிக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்ததுமென நினைக்கிறேன்.
  5. முதலில் விகாரை, அடுத்து பள்ளிவாசல். காணிபிடிப்பில் முதலிடம் விகாரைக்கு அதற்கடுத்தே பங்காளிகள். இது காலங்காலமாக நடக்கும்ஒன்று. ஆனால் பங்காளிப் பிரச்சனையை வைத்திருப்பது தமிழரோடு மட்டுந்தான். தமிழர் முன்னேறக்கூடாது அவ்வளவே. பாருங்கள்! ஈஸ்ரர் குண்டுவெடிப்பில், சிங்களம் அவர்களை பாவித்து தன் திட்டத்தை நிறைவேற்றியதோடு அவர்களை தாக்கவும் செய்தது இருந்தும் அவர்களை காப்பது இந்த சோனகர். நரி, சிங்கத்துக்கு பின்னால் அலைவது, சிங்கத்தின் மேலுள்ள பாசத்தாலா என்று ஆராய்ந்தால் விளங்கும்!
  6. குறிப்பிட்ட இலக்கத்துக்குரிய போராளிகளை உறவினர், நண்பர் அறிந்திருக்க கூடும். அவ்வாறானவர்கள் யாரும் உயிரோடு இல்லையா அல்லது வெளிப்படுத்த அஞ்சுகின்றனரா?
  7. ஈஸ்ரர் குண்டுவெடிப்பு கொடூர விசாரணையை திசை திருப்பும் வேலை. உண்மையிலேயே சிங்களத்துக்கும் சோனகருக்குமிடையில் நூறு வீதம் பழக்க வழக்க ஒற்றுமை உண்டு.
  8. ஹாஹா..... யாருக்கு இந்த உத்தரவு? பத்து நாட்களுக்குள் கட்டுப்படுத்த முடியுமென்றால், ஏன் இவ்வளவு வருடங்களாக தொடர்கின்றன? ஒருவேளை தன் சகாக்களிடம் கொஞ்ச நாளைக்கு தமது குற்றச் செயல்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டாரோ? இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட துணை ஆயுத குழுக்களின் பெயரில் இவரின் பெயரும்உள்ளடக்கப்பட்டுள்ளதாமே? இதனாற்தானோ என்னவோ உள்நாட்டிலேயே தீர்வு என்று பிடிவாதம் பிடிக்கிறார். பலிகொடுக்கும் கடாவை, நன்றாக உணவு கொடுத்து பராமரித்து, மாலை போட்டு, தூபம் காட்டி, ஆரவாரத்தோடு அழைத்துச்சென்றே பலி இடுவது வழக்கம்!
  9. அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? மலசல கூடம் முதலில், மயானம் பிறகு! அதுதான் சச்சியர், சைவர் வழிபடுவதற்கு கட்டிடங்கள் தேவையில்லை என்று அறிக்கை விட்டு, விகாரைக்கு வழிபட போய்விட்டாரே.
  10. இதைச்செய்தவர்களும் நிம்மதியாக உறங்குகிறார்கள்தானே! முன்பெல்லாம் எமக்காக குரல் கொடுக்கும் தமிழகம் இப்போ மிகுந்த அமைதி காக்கிறது. எங்களுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது.
  11. ஏன்.... இவர்களின் சொந்தக்காணிகளுக்கு என்ன நடந்தது? எதற்காக மாற்றுக்காணிகள் வழங்க வேண்டும்? இதற்கு இவர்கள் சம்மதித்து இருக்க கூடாது. நாங்கள் அவர்களை மீள குடியமர்த்தி விட்டோம் எனும் பிரச்சாரத்தோடு, இவர்களின் சொந்தக்காணிகள் பறிபோகும் ஆபத்துமுள்ளது. எங்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்து மாற்று நடவடிக்கைக்கு இடம் கொடுத்ததாலேயே நமக்கு இழப்புகள் போராட்டங்கள் பெருகியது.
  12. ஹாஹா..... இந்தியாவை எப்படி உரசினாலும் அதுக்கு ரோசம் வராது. அப்படி ஒன்று அதுக்கு இருந்தாற்தானே வருவதற்கு? நம்பிக்கை துரோகம் என்றால் என்ன, அதன் வலி எவ்வளவு ஆழமானது, அழிவை தரக்கூடியது என இந்தியா உணர ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டாமா? ??
  13. வெளிநாடுகளில் பக்க சார்பற்ற விசாரணை, நஷ்ட ஈடு, மன்னிப்பு கோரல். இங்குதான் அது இல்லையே, நிஞாயப்படுத்தல் மட்டும்!
  14. தமிழர் பேசினால் அது, பயங்கரவாதம். சிங்களவர் பேசினால் அது, பேச்சுச் சுதந்திரம். ஒரு நாடு, இருவேறு சட்டங்கள். பேசுவது, இது ஜனநாயகம்!
  15. உஸ்..... உந்தசெய்தியை சொன்னா, நீதியமைச்சரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிக்கை வரும் என்பதால், தணிக்கை! தங்கள் தவறை மற்றவர்மேல் போட்டு தாம் தப்புவதே அவர்களின் பரவணிக்குணம் அதை மாற்ற முடியாதே.
  16. புதைகுழியில் தோட்டாக்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆகவே இராணுவத்தை குற்றம் சாட்ட முடியாது என்று நழுவிய இராணுவ அதிகாரி ஒருவர், இது மனித எச்சங்கள்தானா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் இராணுவ ஊடகப்பேச்சாளர். இப்போ துப்பாக்கி தோட்டாக்கள் வெளிவந்திருக்கின்றன, இது விலங்கின் எச்சமல்ல விடுதலை கேட்டு போராடிய போராளிகளின் உடல்கள் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவத்தின் மனித உரிமை மீறல் என பொறுப்பெடுக்குமா இராணுவம்? இதிலிருந்து விளங்குவது என்ன? நீதிமன்றம், புத்திஜீவிகள், நீர்ப்பாசன திணைக்களம் என்பன சேர்ந்து அகழ்வுப்பணியை மேற்கொள்கின்றன, உறவுகள் இது தங்களது உறவுகளாக இருக்குமோ என அங்கலாய்க்கின்றன, இவர்களது பேச்சு இவர்களின் பொறுப்பற்ற தன்மையை விளக்குவதோடு கேள்விகளை எழுப்புகின்றன. மனித புதைகுழிக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா சம்பந்தப்பட்டவர்கள்? அல்லது அவை விலங்குகளின் புதைகுழிகள் என நிறுவப்பார்க்கிறார்களா இவர்கள்? எப்படி இத்தனை விலங்குகளின் எச்சங்கள் ஒரே புதை குழியில் வந்திருக்கும்? ஏன் அந்தபுதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்? கிரிஷாந்தி புதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை புதைத்து சாதித்த அனுபவம் அவர்களை இப்படி எதிர்பார்க்கவும் சாதிக்கவும் வைக்கிறது. இவர்களின் வாயே இவர்களை காட்டிக்கொடுக்கவும் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்கிறது. "மூடர் தம்வாயாலேயே மாட்டுவர்."
  17. ஓ ....! இந்தியாவில் தனக்கேற்ற ஆட்சியை ஏற்படுத்த முனைகிறாரா? எதற்கும் மோடிக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து வைப்போம், ரணில் செய்தாலும் செய்வார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என இந்தியாவிலிருந்து வெளிவந்திருக்கு. இந்தச்செய்தி ஐ. நாவுக்கு போகாமல் தடுத்து நிறுத்த நினைத்து கதை விட்டிருப்பாரோ?
  18. சில நாட்களுக்கு முன்பு, ஒரு இராணுவ அதிகாரியிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, துப்பாக்கி ரவைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார். துப்பாக்கி ரவைகள் இல்லையாயின் அது இராணுவம் செய்யவில்லை என்று அர்த்தமா? அப்படியெனில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் எப்படி யாரால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும்? பெரிய குழிதோண்டும் வாகனங்களை பயன்படுத்தி கொலை செய்யப்பட்ட போராளிகள் பொதுமக்களின் உடல்களை இராணுவம் புதைத்ததாகவும், பெரும் நெருப்புச் சுவாலை எழுந்ததாகவும் இறுதி யுத்தத்தில் வன்னியில் இருந்து வந்த மக்கள் அறிவித்தனர். அப்போ, யாரும் அதை கணக்கிலெடுக்கவில்லை. இது மட்டுமல்ல இன்னும் நிறைய துயரங்கள் மண்ணிலே புதையுண்டு வெளிவர துடித்துக்கொண்டிருக்கின்றன.
  19. மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, அதில விளக்குமாத்தையும் கொண்டோடிச்சாம்! அந்த சிறு இடைவெளியையும் வீணாக்காமல் பக்கத்து நாட்டைப்பற்றிய வம்பு. மெல்ல கதையை ஆரம்பித்து கடன் கேட்க நினைத்திருப்பாரோ என்னவோ? மம்தா பானர்ஜி அதை தனக்கு சாதகமாக்கி விட்டார்! எந்த நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் மூளை, தமது அரசியல் பற்றியே தம்மை சுற்றியே சிந்திக்கும்.
  20. அது ஏன் இந்தப்பெண் அவர் நாட்டில் இருக்கும்போது முறையிடவில்லை? அவருக்கு பயந்து இருந்தாரா அல்லது இந்தப்பெண்ணுக்கு பயந்து அவர் அரசியல் தஞ்சம் கோரினர் என்று நிறுவுவதற்காகவா? ஒரு தவறிலிருந்து தப்ப பல தவறுகளை செய்தாலும் சிக்கல் பெருகுமே ஒழிய விலகாது, இன்னும் இவர்களுக்கு எதிரான சான்று பலமாகும். நாட்டின் நீதி பரிபாலன சபையின் நம்பகத்தன்மைமேல் கேள்விகள் எழும். அசாத் மௌலானா சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
  21. வெகு விரைவில் அது நிறைவேறும்! இவர்களையும் அறியாமல் அதற்க்குள் இழுத்துச்செல்லப்படும், சிங்கள மக்கள் அதை கேட்பார்கள். எங்களுக்காகவல்ல தங்களுக்காக கோரும்போது அது இங்கு நோக்கி நகர்த்தும் ஆதாரத்துக்காக.
  22. அறிக்கை, ஆராய்வு, கலந்துரையாடல், தரவு தீர்மானம் எடுப்பு, எஜமானரிடம் கையளிப்பு. செயல் ...... பூச்சியம். அவர்கள் ஐ. நாவை ஏமாற்றுவது, இவர் மக்களை ஏமாற்றுவது.
  23. போர்க்குற்றம் புரிந்தவர்கள், ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலுக்கு எதிராக விசாரணை நடத்தினீர்களா? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதை சொல்லுங்கள் முதலில்.....!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.