Everything posted by ஏராளன்
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம் 13 Feb, 2026 | 04:47 PM இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு", "அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்" போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினால் உரிமைக்காகப் போராடியவர்கள் சிறையில் இருப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், மீண்டும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, இத்தகைய விசேட சட்டங்கள் தேவையற்றவை எனத் தெரிவித்த அவர், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பாதிக்கும் என எச்சரித்தார். குறிப்பாக, இது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலையக மக்களின் வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மலையக மக்களின் பாரம்பரியத் தொடர்பாடல் முறையான 'பறை' அடித்து, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது கலாசார ரீதியிலான எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர். https://www.virakesari.lk/article/238588
-
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமாக சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட இடமளிக்கப்படவேண்டும் - ரவிகரன் வலியுறுத்து 13 Feb, 2026 | 04:39 PM வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது ரவிகரன் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப் பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். எனவே, இம்முறை சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது. மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு இதன்போது ரவிகரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238583
-
கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி!
கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி! 13 Feb, 2026 | 12:17 PM கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன. குறித்த உணவகத்தில் வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் எமது உணவகத்திற்கு வந்து சோதனையிட்டனர். காணொளியை வெளியிட்ட நபர் அனைவரதும் கவனத்தை பெறுவதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் இது குறித்து தெரிவிக்கையில், பம்பலப்பிட்டி உணவக சர்ச்சை குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உணவு மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய உள்ளோம். அந்த உணவகத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/238551
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஆஸ்திரேலியாவை சாய்த்த ஜிம்பாப்வே - 4 விக்கெட் எடுத்து 'ஷாக்' கொடுத்த இவர் யார்? பட மூலாதாரம்,Ishara S. KODIKARA / AFP via Getty Images படக்குறிப்பு,பிளெசிங் முசரபானி 13 பிப்ரவரி 2026, 11:04 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வேயின் இந்த வெற்றியின் நாயகன் பிளெசிங் முசரபானி ஆவார். 29 வயதான பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வேவுக்கு போட்டியை வென்றெடுக்கும் ஒரு பந்துவீச்சை நிகழ்த்தினார். நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். பிளெசிங் முசரபானி சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார், 2018 இல் டி20 போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை விளையாடிய 84 டி20 சர்வதேச போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிளெசிங் முசரபானி அதிக ரன்களை கொடுக்காத பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர், இதுவரை இந்த 84 போட்டிகளில் 7.14 என்ற எகானமி விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். பட மூலாதாரம்,Robert Cianflone/Getty Images உயரம் 6 அடி 8 அங்குலம் முசரபானி 21 வயதில் அறிமுகமானபோது, அவரது உயரம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. அவரது உயரம் 6 அடி 8 அங்குலம். முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை விட உயரமானவர். டி20 கிரிக்கெட்டைத் தவிர, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முசரபானி அற்புதமாக செயல்பட்டார். 2025 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளராக முசரபானி இருந்தார். கடந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தக் காலகட்டத்தில், ஒரு இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த செயல் திறனாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு இன்னும் ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28pqxgj37o
-
தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்!
தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்! 13 Feb, 2026 | 02:26 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்காசியாவிற்கான நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு கொள்கையானது, நாம் 'அமெரிக்காவிற்கே முதலிடம்' வழங்க வேண்டும் என்பது ஆகும். இது தெற்காசியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளதுடன் எமது பங்காளிகளுக்கும் உதவியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் எனது பணியகத்தின் பணிகளில் இதன் பலன்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பிராந்தியம் மிகவும் முக்கியமானது. அமெரிக்காவிற்கே முதலிடம்' என்பது 'அமெரிக்கா மட்டும்' என்று பொருள்படாது. எமது இலக்குகளை அடைய, சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். கடந்த வாரம், ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகக் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டினர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் நிர்வாகம் பங்களாதேஷுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 175 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேஷின் சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது. வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு, ட்ரம்ப் நிர்வாகம் மூலோபாய திறன் மேம்பாட்டிற்காக மூன்று பரந்த அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றது.அவை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலக்கு வைக்கப்பட்ட முதலீடு மற்றும் இராஜதந்திரம் ஆகும். அமெரிக்காவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி நான் இதுவரை விவாதித்தேன். ஆனால் மற்றொரு முக்கியமான ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது இந்தப் பிரச்சினைகளில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு. தெற்காசியாவின் முக்கியத்துவத்தை நாம் இருவருமே அங்கீகரிக்கிறோம். பிராந்தியத்தில் மூலோபாயத் திறனை வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பங்காளிகள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள உதவுவதன் மூலம் அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், வளமாகவும் மாற்றுவோம் என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார். https://docs.house.gov/meetings/FA/FA19/20260211/118958/HHRG-119-FA19-Wstate-KapurS-20260211.pdf https://www.virakesari.lk/article/238562
-
'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?
'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா? பட மூலாதாரம்,MKSTALIN/X கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 13 பிப்ரவரி 2026, 10:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மறுபுறம், பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.10,000 கொடுத்தது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துருப்புச் சீட்டாக அமைந்தது போல, தமிழக தேர்தலில் இந்த 5,000 ரூபாய் திமுகவுக்கு அமையுமா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக அரசியல் தலைவர்களின் கருத்துகள் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன? உரிமைத் தொகை ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோடிக்கும் மேலான மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 இன்று காலையில் வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத் தொகை, முன்பணமாக வழங்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை ஆகியவை சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 என ஒட்டுமொத்தமாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, "தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது," என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் இந்தத் திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இவ்வாறு முன்கூட்டியே வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் அவர்களே 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய், "புதிதாகக் கோடைக்கால சிறப்புத் தொகை என திடீரென அறிவித்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் இதை அறிவிக்கிறார்கள் என்பதை தமிழக மக்களும் மகளிரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஒரே நேரத்தில் ரூ.5000 மகளிருக்கு கிடைத்திருக்கிறது. இது அவர்களின் மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு," என்று கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி கையைவிட்டுப் போவது உறுதியானதை உணர்ந்துகொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் அனைத்தும் கலைந்துவிட்ட நிலையில், தமது நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில்தான் முதலமைச்சர் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது," என்று விமர்சித்துள்ளார். ரூ.5000 கொடுத்தது தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா? பிகார் சட்டமன்றத் தேர்தலில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான பங்கை ஆற்றியது. தமிழ்நாட்டிலும் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் ரூ.5,000 என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் சூழ்ச்சிகளைச் செய்ய வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிகார் அரசியல் களத்தையும் தேர்தல் முடிவுகளையும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகச் செயல்பட்டதையும் பார்க்கும்போது, இங்கு அவர் கூறுவது போன்ற சூழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது," என்று தெரிவித்தார். இந்த நிலையில், "அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் உத்தியாக மகளிர் உரிமைத்தொகையை முன்பணமாக வழங்கியிருப்பது தேர்தலில் திமுகவுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, இதுபோன்ற ஒரு தேர்தல் உத்தியைக் கையில் எடுக்கும் சூழலுக்கு திமுக தள்ளப்பட்டது. ஆனால், "இது வாக்குக்காக நடக்கும் அரசியல்தான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம் திமுக வாக்குகளைப் பெறுவதற்கான இந்த அரசியல் உத்தியைப் பயன்படுத்தியது." அதோடு, "இந்தத் தொகையைப் பெற்ற அனைவருமே திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறிவிட முடியாது என்றாலும், அவர்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இதன் மூலம் உண்மையாகவே பலனடையும் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தப் பயனாளிகளில் 60% பேர் வாக்களித்தாலே அது திமுகவுக்கு வெற்றிதான்" என்றும் அவர் கூறினார். இருப்பினும், "இதுபோன்ற திட்டங்களையும் தாண்டி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதே ஓர் அரசாக திமுக எப்படிச் செயல்பட்டது என்பதைத் தீர்மானிக்கிறது. அதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தும்," என்று என்கிறார் குபேந்திரன். "திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5000 என்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில், பெண்களின் வாக்குகளைக் கவர வேண்டுமென்பதில் அனைவருமே தனிக் கவனம் செலுத்துவர். அந்த வகையில், இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் கணிசமாக உதவக்கூடும்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். அதிமுக, பாஜக கூறுவது என்ன? மகளிருக்குப் பணம் கொடுத்ததில் தவறில்லை எனக் கூறும் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் பிரச்னையாக இருக்கிறது," என்கிறார். "யாரோ தடுக்கப் பார்ப்பதாக, ஒடுக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார். யார் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமல்லவா! முதலில் இதை யாரால் தடுக்க முடியும்? இது முதலமைச்சர் அரண்டு போயிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. மோசமான, தோல்வியுற்ற ஆட்சி என்பதால்தான் இதுபோன்ற அறிவிப்பை திடீரென்று வெளியிட்டுள்ளார். இது அவரது அச்சத்தையே காட்டுகிறது," என்கிறார் நாராயணன் திருப்பதி. மேலும், "5000 ரூபாய் இல்லை ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதற்காகவே அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் ஆட்சியில், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள், டாஸ்மாக் காரணமாக ஏற்படும் சீர்கேடுகள், போதைப்பொருளின் நடமாட்டம் ஆகியவற்றையெல்லாம் மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார். பிகார் தேர்தலில், ஆளும் கட்சி பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததை ஆதரித்தது குறித்து கேட்டபோது, "இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுவொரு கடன் திட்டம். ஆனால், இது இலவச திட்டம். மக்களை கவர்வதற்காக இது செயல்படுத்தப்படுகிறது. இதை அதோடு ஒப்பிட முடியாது," என்றார். பிகாரில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட10 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், "மு.க.ஸ்டாலின் தனது மற்றும் தம் மகனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்து, அந்த அச்சத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்றார். மேலும் பேசிய அவர், "இந்த அறிவிப்பு, ஸ்டாலினின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இந்தத் திட்டத்தை வழக்கு போட்டு முடக்கிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய பொய். ஏற்கெனவே இரண்டேகால் கோடி பேருக்கு கொடுப்பதாகக் கூறி ஒரு கோடி பேருக்கே கொடுத்தார்கள். ஆட்சி முடியப்போகும் நேரத்தில் மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கத் தொடங்கினார்கள். இவையனைத்துமே மகனை அரியணை ஏற்றுவதற்கான வேலைகள்.இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பாதிக்காது. கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என கூறும்போது 'கொடுக்க முடியாது' எனக் கூறினார்கள். இப்போது அதே 2000 ரூபாயை கொடுப்பதாக இவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதற்கான ஒப்புதல்தானே! அவர்களின் மீதிருந்த நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிட்டார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும்," என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூறுவது என்ன? "பிகாரில் தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு 10,000 ரூபாய் திட்டத்தை அறிவித்தார்கள், அதைக் கடுமையாக விமர்சித்தோம். இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால், இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். "பிகாரில் நடந்தது அரசியல் சூழ்ச்சி. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளும் கட்சி கபட நாடகமாடி வாக்குகளைப் பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கும், பல கோடி மகளிர் பயனடையும் திட்டம் இது," என்றார். மேலும், "திமுகவுக்கு கிடைத்த தகவலின்படி, தேர்தல் காலகட்டத்தில் நிதி சார்ந்த எவ்வித உதவித் திட்டங்களையும் தடை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று கூறிய ரவீந்திரன், "அந்த முயற்சிகளின் விளைவாக மகளிர் உரிமைத் தொகை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டால், அதன் மூலம் பயனடையும் பல கோடிப் பெண்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதாலேயே, முதலமைச்சர் இவ்வாறு அறிவித்தார்," எனவும் விளக்கினார். மேலும் பேசிய அவர், "ஒருவேளை மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் பிற கட்சிகள், அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட்டதாகப் பரப்புரை செய்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கக்கூடும். அதையும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான தொகை வழங்கப்பட்டது," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74755nz3elo
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
RESULT 21st Match, Group A (N), Chennai, February 13, 2026, ICC Men's T20 World Cup United States of America 196/6 Netherlands (15.5/20 ov, T:197) 103 U.S.A. won by 93 runs
-
2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி
2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி Feb 13, 2026 - 05:26 PM 2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார். மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்வி மனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlktzgl70003356nky16oudz
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முன்னுக்கு பதிலை பதிந்ததால் முன்னணியில் இருந்தேன்! அண்ணை, போறபோக்கில் உங்களுக்கு தோள் கொடுப்பேன் என நினைக்கிறேன்.
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
பங்களாதேஷ் தேர்தலை இரத்து செய்ய வேண்டும் - ஷேக் ஹசீனா Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 10:21 AM முகமது யூனுஸ் நடத்திய மோசடியான பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் தேர்தல் வியாழக்கிழமை (12) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர்கள் இல்லாத, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான தேர்தலை இரத்து செய்ய வேண்டும். முகமது யூனுஸ் பதவி விலகுவதுடன், பொய்யான வழக்குகளை திரும்ப பெற்று, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவாமி லீக் கட்சியின் செயல்பாட்டுக்கான தடையை நீக்குவதுடன், நடுநிலையான அரசின் மேற்பார்வையின் கீழ், நேர்மையான, சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொதுத்தேர்தல் மூலம் மக்களின் ஓட்டுரிமையை உறுதி செய்ய வேண்டும். முகமது யூனுஸ் நடத்திய மோசடி நடவடிக்கையை புறக்கணித்த தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோதமாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட முகமது யூனுஸ் நடத்திய தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. மக்களின் வாக்குரிமை, ஜனநாயக மாண்புகள் மற்றும் அரசியலமைப்பின் ஆன்மாவை தேர்தல் ஆணைக்குழு மதிக்கவில்லை. அவாமி லீக் மற்றும் வாக்காளர்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/238538
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடைக்கு வைச்ச 3 முட்டை இன்று பொரிக்கவில்லை, அது கூழ்முட்டையாப் போச்சே!😂
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது ஸிம்பாப்வே 13 Feb, 2026 | 04:47 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்த ஸிம்பாப்வே 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது. இதன் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸிம்பாப்வே வெற்றியீட்டியுள்ளது. 2007இல் நடைபெற்ற முதலாவது அத்தியாத்தில் அவுஸ்திரேலியாவை ஸிம்பாப்வே 5 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது. இப்போது 19 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவை மீண்டும் சந்தித்த ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது. இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் ஸிம்பாப்வே பிரகாசித்து அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இக் குழுவில் இலங்கை 4 புள்ளிகளுடன் 3.050 என்ற மிகச் சிறந்த நிகர ஓட்டவேகத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே, 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. ஸிம்பாப்வே சார்பாக துடுப்பெடுத்தாடிய நான்கு வீரர்களும் தமது இன்னிங்ஸ்களை நன்கு திட்டமிட்டு விளையாடிமை ஏனைய அணிகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. ஸிம்பாப்வேயின் மொத்த எண்ணிக்கையில் 86 ஓட்டங்களே பவுண்டறிகளில் வந்தன. மற்றைய 83 ஓட்டங்கள் ஒற்றைகள், இரட்டைகளாக கிடைத்தன. ப்றயன் பெனெட், தடிவன்ஷே மாருமணி ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தடிவன்ஷே மாருமணி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து ப்றயன் பெனெட், ரெயான் பியூரி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது மாக்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய பந்தை ரெயான் பியூரி ஓங்கி அடித்தபோது அந்தப் பந்து ஸ்டொய்னிஸில் கையைப் பதம்பார்த்து காயப்படுத்தியது. ஸ்டொய்னிஸ் உடனடியாக சிகிச்சைக்காக களத்தை விட்டு வெளியேறியதும் அவரது ஓவரைப் பூர்த்தி செய்ய அழைக்கப்பட்ட கெமரன் க்றீன் முதல் பந்திலேயே ரெயான் ப்யூரியை ஆட்டம் இழக்கச் செய்தார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ப்றயன் பெனெட் 56 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத மூன்றாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். கெமரன் க்றீன் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலிய அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், டிம் டேவிட் ஆகியோர் இடம்பெற்றபோதிலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போனது. அவுஸ்திரேலிய இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொட்டனர். அவர்களில் தனித்து போராடிய மெட் ரென்ஷோ 44 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். க்லென் மெக்ஸ்வெல் சிரமத்திற்கு மத்தியில் 32 ஓட்டங்களையும் பதில் அணித் தலைவர் ட்ரவிஸ் ஹெட் 17 ஓட்டங்களையும் பெற்றனர். காயத்துக்குள்ளான மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றார். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238587
-
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு Feb 13, 2026 - 12:41 PM 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தவணையின் முன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன. பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlkjtjlt0002356nmgy024rp
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
22 பேருக்கு முட்டைக் கோப்பியும் நிலாமதி அக்காவிற்கு 2 புள்ளியும் கிடைக்கப் போகிறதா?! Live 19th Match, Group B, Colombo (RPS), February 13, 2026, ICC Men's T20 World Cup Zimbabwe 169/2 Australia (8/20 ov, T:170) 51/4 Australia need 119 runs in 72 balls. Current RR: 6.37 • Required RR: 9.91 • Last 5 ov (RR): 27/2 (5.40) Win Probability AUS 25.46% ZIM 74.54%
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ குழு புள்ளிகள் நிலையில் முதலிடம் Published By: Vishnu 12 Feb, 2026 | 11:28 PM (நெவில் அன்தனி) டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நமிபியாவை 93 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் 4 புள்ளிககளைப் பெற்றுள்ள இந்தியா, ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியா சார்பாக துடுப்பாட்ட வரிசையில் முதல் 6 வீரர்களில் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ்வைத் தவிர மற்றைய ஐவரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட 25 ஓட்டங்களில் 22 ஓட்டங்களை சஞ்சு செம்சன் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் இஷான் கிஷான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்தார். இஷான் கிஷான் 2ஆவது விக்கெட்டில் திலக் வர்மாவுடன் 31 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். திலக் வர்மா 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் சூரியகுமார் யாதவ் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 205 ஓட்டங்களாக உயர்த்தினர். ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 23 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால், அவர்கள் இருவர் உட்பட ஐவர் 5 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். பந்துவீச்சில் அணித் தலைவர் ஜேர்ஹாட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் சர்வதேச அனுபவமற்ற அவர்களால் அவற்றை கணிசமான எண்ணிக்கைகளாக மாற்றமுடியாமல் போனது. லூரென் ஸ்டீன்கேம்ப் (29), ஜனர் ஃப்ரைலின்க் (22), ஜான் நிக்கோல் லொஃப்டி - ஈட்டன் (13), ஜேர்ஹாட் இரேஸ்மஸ் (18), ஸேன் க்றீன் (11) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஹார்திக் பாண்டியா https://www.virakesari.lk/article/238521
-
வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்!
வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்! Published By: Digital Desk 1 13 Feb, 2026 | 10:14 AM மட்டக்களப்பு - வாழைச்சேனை நகரில், இன்று வியாழக்கிழமை (13) காலை இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் எனவும், உணவு விற்பனை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மற்றையவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/238536
-
எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்!
எகிப்து மன்னர்களின் கல்லறைகளில் தமிழ் பெயர்கள்: யார் அந்த சிகை கொற்றன்? பட மூலாதாரம்,Ingo கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எகிப்தில் உள்ள 'மன்னர்களின் பள்ளத்தாக்கு' பகுதியில் இருக்கும் கல்லறைகளில் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் - பிராமியில் எழுதப்பட்டவை என்கிறார்கள் ஆய்வார்கள். இந்தக் கல்லறைகளில் தமிழில் எழுதியது யார்? எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் இருக்கும் கல்லறைகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு கல்லறைகளில் இந்த 30 எழுத்துப் பொறிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் பிராமி எழுத்துகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சென்னையில் நடந்துவரும் தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இங்கோ ஸ்டராச்சும் தூர கிழக்கு ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தைச் (French Institute of Far Eastern Studies) சேர்ந்த பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் "மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்திய எழுத்துப் பொறிப்புகள்" (From the Valley of the Kings to India: Indian Inscriptions in Egypt) என்ற தலைப்பில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டனர். இங்கோ ஸ்ட்ராச், 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றார். அதற்குப் பிறகு அவருடன் பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் இணைந்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள ஆறு கல்லறைகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 30 எழுத்துப் பொறிப்புகளைக் கண்டறிந்தனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஜூல் பெய்லி என்ற ஆய்வாளர் இங்குள்ள கல்லறைகள் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் உள்ள எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார். இருந்தபோதும் இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகளை அவரால் இனம்காண முடியவில்லை என்பதால், அவை இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகள் என்றே அறியப்படாமலேயே இத்தனை ஆண்டுகளாக இருந்தன. தற்போது இந்தக் கல்லறைகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் எழுத்துகள், மூன்று இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த எழுத்துகளை எழுதியவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி, மேற்குப் பகுதி, தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தப் பிரதேசங்களில் இதுபோல இந்தியாவைச் சார்ந்த எழுத்துகள் கிடைப்பது முதல் முறையல்ல என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சகுத்தரா (Socotra) தீவுகளில் உள்ள ஹாக் குகைகள், செங்கடல் பிரதேசத்தில் உள்ள துறைமுகமான பெரெனிகே (Berenike) ஆகிய இடங்களில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் இதற்கு முன்பு கிடைத்துள்ளன. படக்குறிப்பு,ஆய்வை மேற்கொண்ட இங்கோ ஸ்டராச் மற்றும் சார்லட் ஸ்மித் மன்னர்களின் பள்ளத்தாக்குகளில் உள்ள கல்லறைகளில் தமிழ் எகிப்தின் தற்போதைய லக்ஸர் நகருக்கு அருகில், நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதி. பழங்கால எகிப்தின் புதிய ராஜாங்கத்தைச் (New kingdom - கி.மு. 16ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை) சேர்ந்த பாரோக்கள், அவர்களுடைய பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்ட 65 கல்லறைகள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன. ரோமானியர்களின் காலத்தில் பலர் இந்த இடத்தை பார்த்துச் சென்றிருக்கின்றனர். அப்படி இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் அந்தக் கல்லறைகளின் சுவர்களில் தங்களது பெயர்களை எழுதிச் சென்றிருக்கின்றனர். ஜூல் பெய்லி, இந்தக் கல்லறைகளை 1888-89 காலகட்டத்திலும் 1913–14 காலகட்டத்திலும் ஆய்வுசெய்து, அங்கிருந்த 2,000 கிறுக்கல்கள் அல்லது எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டார். ஆனால், அவரால் இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை. அவற்றை அவர் Exotic, Asianic என்ற வார்த்தைகளில் குறிப்பிட்டாரே தவிர, அவை என்ன சொல்கின்றன என்பதை ஜூலை பெய்லியால் புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போது நடந்த ஆய்வில், 1, 2, 6, 8, 9, 14 என்ற இலக்கமிடப்பட்ட ஆறு கல்லறைகளில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ், பிராகிருதம், காந்தாரி (பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இருந்த ஒரு பேச்சு வழக்கு), சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இந்த மொழிகளில் எழுத மூன்று விதமான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காந்தாரி மொழியை எழுத கரோஷ்டி என்ற எழுத்து வடிவமும் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் எழுத பிராமி எழுத்துகளும் தமிழை எழுத தமிழ் - பிராமியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைகளில் கிடைத்த பெரும்பாலான எழுத்துப் பொறிப்புகள் தமிழைச் சார்ந்ததாகவே இருந்தன. பட மூலாதாரம்,Timothee Sassolas படக்குறிப்பு,தமிழ் எழுத்து பொறிப்புகள் உள்ள உயரத்தில் வேறு யாரும் எழுதவில்லை முதலாம் எண் கல்லறையில்தான் இருப்பதிலேயே அதிக இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த 16 எழுத்துப் பொறிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழில் இருந்தன. அதேபோல, காந்தாரியில் எழுதப்பட்ட ஒரே எழுத்துப் பொறிப்பும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இந்த மொழியில் எழுதியிருப்பவர் தன்னை க்ஷத்திரியனாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைத்த எழுத்துகளிலேயே மிக நீண்ட வரியும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. க்ஷஹரத மன்னனின் தூதுவன் இங்கு வந்ததாக அந்த வரி குறிப்பிடுகிறது. இந்த க்ஷஹரத மன்னர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியை கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்தவர்கள் என்பதால், இந்திய எழுத்துகளின் காலத்தைக் கணிக்க இது உதவுகிறது. இங்குள்ள பல கல்லறைகளில் கிடைக்கும் தமிழ் எழுத்துப் பொறிப்புகளில் Cikai Korran (சிகை கொற்றன்) என்ற வார்த்தை காணப்படுகிறது. இந்தப் பெயர் எட்டுக் கல்லறைகளில் காணப்படுகிறது. முதலாவது கல்லறையில் 'சிகைக் கொற்றன் வந்தான், பார்த்தான்' என மூன்று முறை எழுதப்பட்டிருக்கிறது. கல்லறையின் வாசலில் எதிரெதிராக இரண்டு இடங்களில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அடுத்ததாக, இரண்டாவது கல்லறையில் மொத்தம் ஐந்து எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இவை யாவும் தமிழில் எழுதப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றன. ஆனால், அந்த எழுத்துகள் சொல்ல வருவது என்ன என்பதில் தெளிவில்லை. இந்தக் கல்லறையிலும் 'சிகைக் கொற்றன்' தனது பெயரை எழுதி வைத்திருக்கிறார். ஆறாவது கல்லறையில் இரண்டு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் சுவற்றில், உயரத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இதிலும் ஒன்று 'சிகைக் கொற்றன்' எழுதியது. இந்தக் கல்லறையில் கிரேக்க எழுத்துகள் உள்ளே எழுதப்பட்டிருந்தாலும், அந்த உயரத்தில் வேறு யாரும் எழுத்துப் பொறிப்புகளைச் செய்யவில்லை. பட மூலாதாரம்,JULES BAILLET படக்குறிப்பு,ஜூல் பெய்லி 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்த போதும் அவரால் இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை எட்டாவது கல்லறையில் ஆறு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் நான்கு தமிழிலும் இரண்டு மத்திய இந்தோ - ஆரிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலும் முதலாவது கல்லறையில் எழுதியதைப் போலவே எதிரெதிராக இரண்டு இடங்களில் தனது பெயரை அவர் எழுதியிருக்கிறான் 'சிகை கொற்றன்'. ஒன்பதாவது கல்லறையைப் பொறுத்தவரை, இங்குதான் பெரிய அளவில் கிரேக்க எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. இந்த கல்லறையின் வாயிலில் தமிழில் எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. 14வது கல்லறையில் ஒரே ஒரு மொழியில்தான் எழுத்துப் பொறிப்புதான் கிடைத்துள்ளது. அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் சிகைக் கொற்றன் தான். அதுவும் வாசலில் மட்டுமே எழுதப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் இந்தக் கல்லறைக்கு பெரிய அளவில் யாரும் வந்திருக்க மாட்டார்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,JULES BAILLET படக்குறிப்பு,பள்ளத்தாக்குப் பகுதிக்கு தான் வந்துபோனதை எல்லோருக்கும் சொல்ல விரும்பியவனாக சிகைக் கொற்றன் இருந்திருக்கிறான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் கல்லறைகளில் தமிழில் எழுதிவைத்த சிகைக் கொற்றன் யார்? சிகைக் கொற்றன் என்ற பெயர் 1, 2, 6, 8, 14 ஆகிய கல்லறைகளில் கிடைத்திருக்கிறது. தான் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு தான் வந்துபோனதை எல்லோருக்கும் சொல்ல விரும்பியவனாக சிகைக் கொற்றன் இருந்திருக்கிறான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 14வது குகையில் ஒரு விசித்திரமான வரி இருக்கிறது. அதாவது, "சிகை கொற்றன் வரும்போது/வந்ததால்/வந்துவிட்டதால் பார்த்துவிட்டான்." என்கிறது அந்த வரி. சிகைக் கொற்றன் என்ற வார்த்தைகளில், சிகை என்பது சமஸ்கிருத வார்த்தை. இது கிரீடத்தையோ, குடுமியையோ குறிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கொற்றன் என்பது தமிழ்ப் பெயர். கொற்றவை, கொற்றவன், கொற்றம் ஆகியவற்றோடு தொடர்புடைய வார்த்தை. புறநானூற்றுப் பாடல் ஒன்றிலும் கொற்ற என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. புகளூரில் கிடைத்த சேர நாட்டுக் கல்வெட்டுகளிலும் இந்தப் பெயர் காணக் கிடைப்பதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. "இந்தப் பகுதிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், சிகை கொற்றன் என்பது ஒரு வர்த்தகனின் பெயராக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. அவர் ஒரு வீரராக இருந்திருக்கலாம். அல்லது வர்த்தகர்களுடன் பாதுகாப்பிற்காக வந்தவர்களாக இருக்கலாம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பேராசிரியர் சார்லட் ஸ்மித். வேறு மொழிகளில் கிடைத்த 'க்ஷத்ரியர்' என்ற வார்த்தை, 'க்ஷஹரத அரசின் தூதர்' என ஒருவர் தன்னைப் பற்றி குறிப்பிட்டுக்கொண்டிருப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது, அந்தச் சூழலோடு சிகை கொற்றனும் ஒரு படை வீரனாக இருந்திருக்கலாம் என்ற கருத்தே பொருந்திப் போகிறது என்கிறார் சார்லட். கிரேக்க மொழியில் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருப்பவர்களும், 'வந்தேன், பார்த்தேன்' என்ற வகையில் எழுதியுருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள். சிகை கொற்றனும் அதேபோல, 'வர, கண்ட' என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, இந்தக் கல்லறைகளில் இருந்த மற்ற கிறுக்கல்களை, குறிப்பாக கிரேக்கக் கிறுக்கல்களை சிகை கொற்றன் கண்டிப்பாக பார்த்திருக்கவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏற்கனவே உள்ள கிரேக்க எழுத்துப் பொறிப்புகளுக்கு மேலே இருக்கும்வகையில் சிகை கொற்றன் தமிழ் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருக்கிறார். இந்தக் கல்லறைகளில் சிகை கொற்றனின் எழுத்துகள் இருக்கும் இடத்தைப் பார்க்கும்போது, அவர் ஏற்கனவே இருந்த கிரேக்க எழுத்துகளை படித்திருக்க வேண்டும் அல்லது யாராவது அவருக்கு அதன் பொருளைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிகை கொற்றன் தவிர, வேறு சில பெயர்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. ஒன்றாம் கல்லறையில் கோபன் என்பவர் தனது பெயரை, சிகை கொற்றனைப் போலவே எழுதியிருக்கிறார். அதாவது 'கோபன் வரத கண்டன்' என எழுதியிருக்கிறார். சேலம் அம்மன் கோவில்பட்டி கல்வெட்டிலும் இதே பெயர் வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 8வது எண் கல்லறையில் 'சாத்தன்' என்பவரது பெயர் வருகிறது. 9வது கல்லறையில் 'கீரன்' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கீரன் என்ற பெயர் புகளூர் கல்வெட்டிலும் ஓமனில் கிடைத்த ஒரு பானை ஓட்டிலும்கூட காணக்கிடைத்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த எழுத்துகள் அடையாளம் காணப்பட்டது, ரோமானியர்களின் காலத்தில் நிலவிய இந்திய-எகிப்தியத் தொடர்புகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் எந்தெந்தப் பகுதிகள் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன என்பது குறித்த சிறு வெளிச்சத்தையும் பாய்ச்சியிருக்கின்றன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz0gr47ezd7o
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட சாதனை; நேபாளத்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை சுவைத்தது இத்தாலி Published By: Vishnu 12 Feb, 2026 | 10:29 PM (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் மொஸ்கா சகோதரர்களின் சாதனைமிக்க பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட உதவியுடன் இத்தாலி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. அறிமுக அணியாக இந்த வருடம் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் இத்தாலி தனது இரண்டாவது போட்டியில் முதலாவது வெற்றியை சுவைத்தது. அப் போட்டியில் அன்தனி, ஜஸ்டின் சகோதரர்களின் அபார துடுப்பாட்டங்களும் இலங்கை வம்சாவளி வீரர் கிரிஷான் ஜோர்ஜ் ப்ரியன்த பெர்னான்டோ கலுகமகேயின் துல்லியமான பந்துவீச்சும் இத்தாலியின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இன்றைய போட்டியில் நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது. மொஸ்கா சகோதரர்களான ஜஸ்டின் - அன்தனி ஆகிய இருவரும் பகிர்ந்த இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சகோதர்கள் இருவர் பகிர்ந்த முதலாவது சத இணைப்பாட்டமாகும். அத்துடன் சகோதரர்கள் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாகும். பாகிஸ்தானின் அக்மால் சகோதரர்களான உமர் - கம்ரன் ஆகியோர் 2014இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 93 ஓட்டங்களே இதற்கு முன்னர் சகோதரர்கள் இருவர் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரிப் ஷெய்க் (27), அணித் தலைவர் ரோஹித் பௌடெல் (23), ஆசிப் ஷெய்க் (20), கரன் கேசி (18), திப்பேந்த்ரா சிய் அய்ரி (17) ஆகிய ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் கிரிஷான் கலுகமகே 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் மனென்டி 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238520
-
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!
குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு Feb 13, 2026 - 10:06 AM குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமைப் போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன. குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlkeaq990007356nwkdhkb7f
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 09:39 AM பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அந்தக் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னர், நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். சுமார் 175 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட, முஸ்லிம் பெரும்பான்மை நாட்டான பங்களாதேஷில், பல மாதங்களாக ஹசீனா ஆட்சிக்கு எதிரான கடும் அமைதியின்மை நிலவி வந்தது. இதனால் அன்றாட வாழ்க்கை மட்டுமன்றி, உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளரான ஆடைத் துறை உள்ளிட்ட முக்கிய தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் தீர்மானம் மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. மேலும், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தலைமையிலான அண்மைய போராட்டங்களுக்கு பின்னர் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தலும் இதுவாகும். தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பங்களாதேஷ் தேசியக் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அந்தக் கணிப்புகளை நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்களின்படி, அந்தக் கூட்டணி 300 உறுப்பினர்களைக் கொண்ட ஜாதியா சங்சத் (தேசிய சபை)யில் 209 இடங்களை வென்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை உறுதியாகியதும், கட்சி தலைமையகம் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் நலன் மற்றும் அமைதிக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/238534
-
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Feb 13, 2026 - 08:56 AM இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb
-
திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி ; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு
திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு 13 Feb, 2026 | 09:33 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்திய மயமாக்கலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்திலுள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல், அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இரு அரசாங்கங்களின் ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனங்களுக்கு கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கவும், இந்திய பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது. சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்முடே கனிம மணல் (இல்மனைட்,ரூட்டைல், சிர்கான், மோனாசைட்), உயர் தர சிலிக்கா, ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த வளங்கள் தொழில்நுட்பத் தொழில்களுக்கு அவசியமானவை. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையில் இந்திய மயமாக்கலுக்கு எதிராகப் போராடிய ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்த நடவடிக்கை துரோகமானது, மக்கள் ஒன்றுபட்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும். காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியமயமாக்கும் முடிவுகள் மற்றும் மருந்து சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்ப ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற இந்தியா தொடர்பான பிற திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/238529
-
உங்கள் கைப்பேசி தொலைந்தால் கட்டாயம் பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள்
உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள் Feb 12, 2026 - 10:12 PM கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கையடக்க தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ச்சியாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு காணாமல் போன அல்லது திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளின் ஊடாக சிலர் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய வாய்ப்புள்ளதால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அது தொடர்பான முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது, https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmljoqb6t000g356nmnsslyak/documents/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+2026.02.12.pdf https://adaderanatamil.lk/news/cmljoqb6t000g356nmnsslyak
-
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர்
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர் 13 Feb, 2026 | 09:25 AM (இராஜதுரை ஹஷான்) எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெலியத்த றுஹூணு விஜயபா தேசிய பாடசாலைக்கு வியாழக்கிழமை (13) விஜயம் செய்த பிரதமர், முதலாம் தரத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளோம்.தரம் ஒன்றுக்கான கல்வி மறுசீரமைப்பு தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நடவடிக்கைகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இலவச கல்வி தற்போதைய தொழிற்றுறைக்கு பொறுத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும். தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட குறைகள் தற்போது திருத்தப்படுகிறது. எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் எதிர்க்கட்சியினரின் தக்க பதிலாக அமையும். விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் அதனையாவது சிறந்த முறையில் செய்யட்டும் என்றார். https://www.virakesari.lk/article/238528